New member
- Joined
- Nov 16, 2024
- Messages
- 14
- Thread Author
- #1
தடக் தடக் சத்தம் மெதுவாய் குறைந்து கீச் என்ற இரைச்சலோடு நின்றது அந்த நீளமான தொடர்வண்டி அதிலிருந்து இறங்கி நெட்டி முறித்து உடலை வில் போன்று வளைத்து சோம்பல் முறித்தான் ஈஸ்வரன்....
" சப்பா ஒருவழியா ஊரு வந்து சேர்ந்துட்டோம் இப்போ இவ எங்க இருக்களோ தெரியலயே



அலைபேசியில் அழைப்பு மணியை கேட்கவும் அதுவரை நிதானமாய் இருந்த அவளது முகத்தில் இப்போது பரபரப்பு தொற்றி இருந்தது உள்ளுக்குள் இதுவரை அவள் அறிந்திடாத ஒரு உணர்வு,
" ஹேய் பாரு என்ன டி ஆச்சு உனக்கு ஏன் இவ்ளோ பதட்டம் இந்த போன் வர தான இவ்ளோ நேரம் காத்து கிடந்த..., இப்போ அந்த அழைப்பு தான வந்து இருக்கு அப்புறம் ஏன் அட்டன் பண்ணாம முழிச்சிட்டு இருக்க, "
" ஆமா தான் டி ஆனாலும் ஏனோ இப்போ பதறுதே, இனம் புரியாத ஒரு உணர்வா இருக்கு இத எப்படி வார்த்தையில சொல்ல எனக்கு தெரியல டி "
" அட ச்சீ ரொம்ப பண்ணாத போன் எடுத்து பேசு டி இப்போவே இரண்டு முறை அழைப்பு வந்துட்டு அப்புறம் அவன் உன்ன பாக்காம ஊர் திரும்பிர போறான் "
" ஊருக்கா?? "
" ம்ம் ஆமா நீ இப்படி போன் எடுக்காம இருந்தா அவன் அத தான செய்வான் "
இவ்வாறாக அவளும் அவளது மனசாட்சியும் மாறி மாறி பேசிக்கொள்ள மூன்றாவது முறையாக ஈஸ்வரனின் அழைப்பு பார்வதியின் மொபைல் திரையில் விழுந்தது ....
இப்போது சற்று மனதை தரப் படுத்திக் கொண்டு அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தாள்,
சற்று திணறலோடு,
" ஈ... ஈஸா..... "
" பாரு "
" ம்ம்ம்ம் "
" ஹேய் எங்க டி இருக்க ட்ரெயின் வந்துட்டு டி நானும் ஸ்டேஷன்ல வந்து இறங்கிட்டேன். "
ஈஸ்வரனின் பேச்சில் ஒரு துள்ளல் இருந்தது தன்னவளை காண போகின்ற ஆனந்தத்தின் வெளிப்பாடாய் வந்த துள்ளல் அது
ஈசனும் பார்வதியும் ஒரு ஆன்லைன் நண்பர்கள்.
உலக வழக்கம் போல் முதலில் நண்பர்களாக அறிமுகமானவர்கள் நாளடைவில் தங்களுக்குள்ளாக இருந்த காதலை உணர்ந்து, நீ இன்றி நான் இல்லை என்பதை போல் அலைபேசியின் துணையோடு ஒரு கனவு வாழ்க்கை வாழ்ந்து விட்டு, நிதர்சன நிஜ வாழ்க்கையில் இணைவதற்காக, அதற்கு அஸ்திவாரம் இடும் வண்ணம் தங்களது முதல் சந்திப்பை இன்று வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்து பார்வதியின் ஊருக்கு ஈஸ்வரன் வந்து விட்டான்....
இருவருக்கும் இடையிலான காதல் வருடத்தைக் கடந்து விட்டது என்றாலும் இன்று தான் அவர்களது முதல் சந்திப்பு.
வருடம் கடந்து இருந்தும் அவனை காண வேண்டும் என்ற ஆவல் குருதியோடு கலந்து இருந்தும் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவனின் அருகில் செல்ல விடாமல் தடுத்து கொண்டிருந்தது....
இதற்கான காரணம்


தயக்கமா???
வெட்கமா???
நிதர்சனத்தை நினைத்து பயமா???
விடை அறியவில்லை...
இத்தனை உணர்வு இருந்தும் அவனை காணும் ஆவல் சற்றும் அவளிடம் குறையவில்லை....
" ஹேய் பாரு கழுதை "
சிந்தை கலைந்து நிதர்சனத்திற்கு வந்தவள்,
" ஈஸா இப்போ எங்க இருக்க "
" ம்ம்ம் என் மாமனார் ஊர்ல டி "
" டேய் அங்க எதுக்கு டா போன?? "
" உங்க அப்பன் மவள பாக்க டி "
" யாருடா அது?? உனக்கு தெரிஞ்சவங்களா?? "
" ஆமா டி நா கட்டிக்க போற பொண்ணு


" அட பாவி டேய் என்ன பாக்க வரேன் என்ன தான் கட்டிக்க போறேன்னு சொல்லிட்டு இப்போ அவ யாருடா அந்த சக்களத்தி "
தலையில் தட்டி கொண்ட ஈஸ்வரன்,
" டேய் அவ தான் ரொம்ப அறிவுன்னு தெரியும்ல அப்படி தெரிஞ்சும் ஏன் டா இப்படி பண்ணுற " என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு,
" யேய் லூசு பய பொண்டாட்டி "
" என்ன டா அதான் சக்களத்தி எவளையோ பாக்க போறியே அவளையே போய் அப்படி கொஞ்சிக்கோ என்ன ஏன் டா அப்படி கூப்டுற "
" பின்ன உன்ன கூப்பிடாம "
" என்ன ஏன் டா கூப்டுற அந்த சக்களத்தியவே போய் கூப்டு "
" அடியே "
" என்ன "
" நீதான் டி அந்த சக்களத்தி "
" நானா


" ஆமா டி கோழி குண்டு கண்ணு "
" நீ வேற யாரையோ சொன்ன?? "
" என்ன சொன்னேன் டி?? "
" கொப்பன் மவளன்னு "
" உங்க அப்பனுக்கு மக யாரு டி "
" நான் தான்


" அப்போ நீ என்ன தான் சொன்னியா டா ஈஸா "
" பின்ன வேற யாரை டி சொல்ல முடியும்


" நீ எனக்கு புரியுற மாதிரி சொல்லணும் டா "
" தப்பு தான் டி "
" சரி விடு எங்க டா இருக்க?? "
" அடியே "
" என்ன டா? "
" உன் ஊர் ரயில்வே ஸ்டேஷன்ல தான் டி இருக்கேன் "
" அச்சோ வந்துட்டியா ஈஸா இத முன்னாடியே சொல்ல மாட்டியா டா உனக்கு கூறே இல்ல டா "
" யாருக்கு எனக்கா சரி தான் டி "
" டேய் எங்க இருக்க சொல்லு டா வரேன் "
" டிக்கெட் கவுண்டர் கிட்ட நிக்கேன் டி வா "
" அங்கையா நானும் அங்க தான டா நிக்கேன் "
என்று சொல்லிக்கொண்டே ஒருவர் மாற்றி ஒருவர் தேட,
அப்போது அவனின் கண்ணில் பட்டாள் அவள்,
அவனது உயரத்தை ஒத்து இருந்த உயரம், மாநிறம், அவள் ஆசைப்பட்டு கேட்டதால் அவளுக்காக தான் அனுப்பி வைத்த தனது கருப்பு நிற சட்டையை அணிந்து கொண்டு ஒப்பனை ஏதும் இல்லாமல் அவளின் அவனுக்கு பிடித்தது போல இயல்பாய் வந்திருந்த தன்னவளை பார்த்து அப்படியே பிரம்மித்து நின்றான் ஈஸ்வரன்.
அவளும் இப்போது அவனை பார்த்து இருந்தாள்,
கார்மேக நிறம், விரைத்த உடல், அவனது பேச்சுக்கும், குணத்துக்கும், குறும்புக்கும், குழந்தை தனத்துக்கும் கொஞ்சமும் பொருந்தி போகாத முகம், ஆனாலும் அதில் தெரிந்த கம்பீரம் அதற்கு வலு சேர்க்கும் அவனது கண்கள் என்று அதிலும் வசீகரம் கலந்தே இருந்தது.... அவனை பார்த்து மீண்டும் தன் இயல்பு தொலைத்து நின்ற இடத்திலேயே உறைந்து போனாள் பார்வதி....
தாவணிக்கு ஜோடி போடும் பாவடையோடு தாவணியை மட்டும் கழட்டிவிட்டு தான் அணிந்த அதே சட்டையை தன்னைக் காண அவள் அணிந்து வந்திருந்த அழகை பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ஈசன்.... அந்த ரசனையோடு அவளை இப்போது நெருங்கியும் இருந்தான்... அவனது நெருக்கம் பாவம் அவளுக்குத்தான் இதய துடிப்பை எக்குத்தப்பாய் மாற்றி இருந்தது...
அருகில் வந்தவன் அவளது கரம் பற்ற நினைத்து தனது கையை அவரிடம் நெருங்கிக் கொண்டு செல்ல ஏதோ ஒரு உள் உணர்வில் அவள் தனது கையை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டாள் ஒருவேளை வெட்கம் கூட காரணமாக இருக்கலாம்



" போலாமா டி "
" ம்ம்ம் போலாம் " அவளிடம் அணிச்சையாகவே குரல் வந்தது...
" சரி வா போவோம்
" எங்க போவ"
" அடியே இது உங்க ஊருடி நீதான் என்னைய கூட்டிட்டு போகணும் எங்க போவன்னு என்கிட்ட கேட்டா எனக்கு என்னடி தெரியும்?? "
" என்னது நானா?? "
" பின்ன உங்க அய்யாவா? "
அவனைப் பார்த்து என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தவள் நிற்க்க,
அவனோ ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்திருந்தான்...
" என்ன எங்க போறதுன்னு தெரியாதுன்னு சொல்லிட்டு இப்ப அவனே வெளிய வந்துட்டான் என்று நினைத்துக் கொண்டவன் அவன் பின்னால் ஓட,
" வெளியே வந்தாச்சு இதுக்கு அடுத்து எங்க போறதுன்னு தெரியலையே



" சரி காத்து வாக்குல கால் போன போக்குல போவோம் என்ற தனக்குத்தானே சொல்லிவிட்டு அந்த கடை தெருவில் நடக்க ஆரம்பிக்க,
அவனின் பின்னால் ஓடி வந்த பார்வதி,
" என்ன ஈஸா நீ பாட்டுக்கு நடக்க ஆரம்பிச்சுட்ட
" பின்ன வேற என்னடி செய்ய உன்னைய கூப்பிட்டு போக சொன்னா நீ முழிச்சுக்கிட்டு நிக்கிற நமக்கு கிடைச்சதே இந்த ஒரு நாள் தான் இந்த ஒரு நாளு உன்னோட அப்படியே கால் போன போக்குல காத்து வாக்குல உன் கைய புடிச்சுகிட்டு அப்படியே நடந்து போகணும் என்று கண்கள் மூடி சொன்ன தன் காதலனை ரசித்து பார்த்தாள் பார்வதி....
அவன் மீண்டும் பேசினான்....,
" யோசிச்சு பாரு டி,
நீயும் நானும் இந்த ரோடு முழுக்க ஆள் இருக்காங்க ஆனா அவங்க யாரையும் கண்டுக்காம கைகள் கோர்த்து (அவளது கை இப்போது அவன் வசத்தில்,) கொளுத்தும் சூரியனை மதிக்காம அங்க இங்கன்னு இருக்குற கடைகள் முழுக்க பார்த்துட்டே நடந்து போறோம் டி, மாமா கொஞ்சம் வேகமா நடக்கேன் டி உனக்கு நடக்க முடியல டி ஆனாலும் ஈடு கொடுத்து என்கூடவே வர, இடையில இருந்த ஐஸ்கிரீம் கடையை பார்த்து நீ என்ன இழுத்து நிறுத்தி வாங்கி குடுடான்னு கேட்க நானும் வாங்கி கொடுத்துட்டு நாம 2பேரும் ரோடுன்னு கூட பாக்காம அத சாப்டுட்டே நடக்கோம் டி அது உருகி ஓடுது ஆனா அத பத்தின கவலை எதுவும் நமக்கு இல்ல, இப்போ ஐஸ் காலி ஆகிட்டு டி ஆனா கை முழுக்க வடிஞ்சு இருக்கு அத உன்னோட பாவாடையில குனிஞ்சு துடைச்சுட்டு,
அப்படியே நடந்து பஜார் தாண்டிட்டோம் டி அவன் சொன்னது போலவே அவர்கள் கடந்து தான் இருந்தார்கள்....
அதை கடந்த சிறிது தொலைவில் ஒரு கிராமத்து ரோடு தெரிய அதில் திரும்பி இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்,
இதுவரை இருந்த மக்கள் கூட்டமா வாகன இரைச்சலோ எதுவும் அங்கு இல்லை மாறாக சுற்றிலும் இயற்கை எழிலோடு காட்சி கொடுத்தது அந்த கிராமத்து சாலை....
இப்போது தன்னவள் தோள் மீது தன் கைகளை போட்டு தன்னோடு அணைத்து கொண்டு அந்த சாலையில் நடக்க ஆரம்பித்தான்... சிறிது தூரத்தில் நீண்டு உயர்ந்து வளர்ந்து இருந்த ஆலமரம் ஒன்று அவன் பார்வையில் பட அதை நோக்கி அவன் கால்கள் நடக்க அவனோடு அவளும் நடந்தாள்,
ஆலமரத்தின் அடியில் நின்று அங்க இருந்த கிளி குருவி காகம் என்று ஒவ்வொன்றாக இருவரும் சேர்ந்து ரசித்தார்கள் திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை,
" பாரு பாரு "
" ம்ம்ம் என்ன ஈசா "
" உம்மா கொடுப்போமா டி என்று அவன் கேட்க திடுக்கிட்டு போனாள் அவள்,
" ஹே பாரு இங்கதான் யாருமே இல்லையே டி ரோட்ல நாலா பக்கமும் பார்த்துட்டேன் மதிய நேரம் வேற அதனால யாரும் வரவும் மாட்டாங்க அதனால தைரியமா ஒரே ஒரு முறை ஒண்ணே ஒன்னு மட்டும் டி " என்று அவன் கெஞ்சலாய் கொஞ்சிட,
" டேய் மாமா ஊர் முழுக்க சுத்தி கூப்டுட்டு வந்துட்டு எப்படி டா கரெக்ட்டா எங்க ஊர் வரவும் நிப்பாட்டி உம்மா கேட்குற "
" என்னது உங்க ஊரா "
" ஆமா டா "
" அப்போ கண்டிப்பா கிஸ் பண்ணியே ஆகணும் டி



" என்னது



" ஆமா டி "
" போடா இவனே "
" ஹேய் பாரு மாமா சொல்லுறத கேளு டி "
" மாட்டேன் போடா "
" அடியே என்று அவளது கரம் பற்றி தன்னோடு இழுத்து அணைத்தான் ஈசன் அவனோடு ஒட்டி கொண்டு அவனது பிடியில் நின்றாள் பார்வதி,
இருவரது மூச்சுக்காற்றும் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொள்ள கண்கள் நான்கும் சங்கமித்துக் கொண்டது அவனது பார்வையில் தன்னை தொலைத்தவள் கண்களை ஓட அவரது இதழ்களை நெருங்கி தன் இதழை அதன் மீது பொருத்தமாக பொருத்திக் கொண்டான்........
சுற்றம் மறந்து சூழல் மறந்து தன்னையும் மறந்து இருவரும் ஒன்றி போயினர்





அவர்களது இந்த நெருக்கத்திற்கு சிறிது கொடுத்து அந்த பக்கம் ஒரு பைக் ஹார்ன் சத்தம் கேட்டு சுயத்திற்கு வந்து சிறிது இடைவெளி விட்டு நின்றனர் இருவரும்......
" டேய் சேட்டை புடிச்ச பயலே ஏன் டா இப்படி பண்ணுன "
" காரணமா தான் டி



" என்ன காரணம் டா "
" மை டியர் காதலி இது உங்க ஊரு நாம அடிக்கடி இங்க வருவோம் போவோம் நிறைய நிகழ்வு நடக்கும் சில நிகழ்வு நமக்கு நினைவுல இருக்கும் சில நிகழ்வு நமக்கு மறந்து போகும் ஆனா நாம வாழும் வரைக்கும் நம்மளோட இந்த முதல் சந்திப்பும், முதல் முத்தமும், இந்த இடமும் மறந்து போகாது டி




அவள் வெட்கத்தில் சிவந்து அவன் கூறிய விஷயங்களை தனது நினைவுகளில் பசுமையாய் விதைத்துக் கொண்டாள்



சுபம்.........
அன்புடன்....
மாரிமதி


