• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Nov 16, 2024
Messages
15
" நானும் அஞ்சலியும் ஒருத்தர ஒருத்தர் கனவுல பார்த்து தான் டா லவ் பண்ணுனோம் " என்று வீரா சொல்ல

அவனை புரியாமல் பார்த்த மோகன்,

" என்ன டா சொல்லுற கனவுலையா? "

" ம்ம்ம் ஆமா "

" அதெப்படி "

" இத சொன்னா புரியாது டா, ஏமாத்துற மாதிரியும், பைத்தியகார தனமாவும் தான் தெரியும் "

" அத தான டா செய்யுற அப்புறம் அப்படி தான டா தெரியும் " ஏளன சிரிப்பு கூடவே ஏமாற்றம் நிறைந்த முக பாவனையோடு மோகனின் வார்த்தைகள் வந்து விழுந்தது.

" இதுக்காக தான் டா அவ சொல்லல "

" என்ன சொல்லல? "

" இந்த கனவு காதலை பத்தி "

" அப்படியா..... "

மோகன் ஏளனம் செய்கிறான் தான் சொல்லும் எதையும் அவன் நம்பவில்லை என்பதை வீரா உணர்ந்தான். ஆனாலும் வேறு வழியின்றி அமைதியாக நிற்க்க,

" சரி அவளால தான் சொல்ல முடியல, நீயே சொல்லு டா கனவுல பார்த்து எப்படி லவ் பண்ண முடியும்? "

"..............."

" சொல்லு பா கனவு காதலா.... சொல்ல மாட்டியா? அப்போ நீ சொல்லு டி கனவு காதலி "

ஏளனனும் கோபமும் ஒருசேர மீண்டும் பேச்சில் வெளிப்பட,

வீரா அஞ்சலி இருவரும் மௌனமாக நின்றனர், அவர்கள் இருவருக்குமே இதை எப்படி சொல்லுவது என்பது தெரியவில்லை...

இறைவனை வேண்டினார்களா இல்லை திட்டினார்களா என்பது அவர்கள் இருவரும் அறிந்த ரகசியம்...

அஞ்சலியிடம் அழுகை மட்டுமே,

" என்ன டா பேசாம இருக்க ஏதோ பொய் சொல்ல நினைச்சு மாறா மாத்தி சொல்லி இப்போ மாட்டிட்டோம்ன்னு யோசிக்கியா? "

"............................"

" என்ன பொய் சொல்லணும் எப்படி சொல்லணும்ன்னு சரியா பிரிப்பர் பண்ணாம வந்துட்டியோ? "

"............................"

" அப்படி என்ன டா என் மேல உனக்கு கோபம்?
என்னை இந்த இடத்தில கொண்டு வந்து நிறுத்தி அசிங்கபடுத்த ஏன் டா நினைச்ச?
உனக்கு இவளை தான் புடிச்சு இருக்குன்னா நேர வந்து அவ வீட்ல பேசியிருக்கலாமே டா, இல்லனா எனக்கு கல்யாணத்துக்கு மாப்ள பார்த்துட்டாங்க எதாவது செய்யுங்கன்னு இவ உன்கிட்ட சொல்லிருப்பாளே அப்போ கூட நீ விசாரிச்சு இருப்பியே டா அவன் யாரு என்னன்னு அப்போவே உனக்கு தெரிஞ்சு இருக்குமே டா அது நான் தான்னு, அப்படி இருந்தும் கூட நம்ம நண்பன் ஆச்சேன்னு உனக்கு நினைப்பு வரலையா? "

"..............................."

" சொல்லு டா நினைப்பு வரலையா? ஆஆஆஆ........ " என்று கோபத்தை கட்டுப்படுத்த முடியாத ஆத்திரதோடு அருகில் வைக்கப்பட்டு இருந்த அந்த ஏர் கூலரை எட்டி உதைத்தான் மோகன்.
அதுவரைக்கும் அமைதி காத்த வீரா கொஞ்சம் சத்தமாவே இறைஞ்சினான்,

" போதும் டா சாமி கொஞ்சம் நிறுத்துறியா. நீ பேசுற மாதிரி எல்லாம் எதுவுமே கிடையாது இன்பேக்ட் இது எதுவுமே எங்களுக்கு தெரியாது.
நாங்க ரெண்டு பேரும் இதுவரைக்கும் நேர்ல பார்த்ததும் இல்ல பேசுனதும் இல்ல.
சொல்ல போனா நாங்க ரெண்டு பேரும் நிஜமா இல்லையான்னு கூட எங்களுக்கு தெரியாது, ஒரு கனவு வரும் அந்த கனவுல அவ வருவா, அவளை பார்த்து பேசி அவ கூடவே ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன். அதே மாதிரி தான் அவளுக்கும் நடந்து இருக்கும்னு நினைக்கிறன், அதனால தான் என்னை பார்த்ததும் என்னை போலவே அவளும் சுற்றம் சூழல் எல்லாம் மறந்துட்டா. ஒரு பொண்ணு தன்னோட குடும்பத்துக்காக, உறவு கெட்டு போயிர கூடாதுன்னு பயத்துல, அம்மா அப்பா மானம் மரியாதை போயிர கூடாதுன்னு இப்படி எத்தனையோ காரணத்தை தானக்குள்ள ஒளி வச்சிட்டு தான் காதலையும் அழிச்சிட்டு வாழுறாங்க, அப்படி இருக்குற பெண் எல்லாத்தையும் மறந்து இப்படி செஞ்சா அவளோட காதல் எந்த அளவுக்கு உண்மையா இருக்கும்ன்னு கொஞ்சம் யோசி...... "

மண்டபத்தில் இருந்த மொத்த கூட்டமும் மௌனத்தின் பிடியில் சிக்கியது.

சிறிது இடைவெளி விட்டு,

" உன்ன ஏமாத்தணும் அசிங்க படுத்தனும்ன்னு நா ஏன் டா நினைக்க போறேன், ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோ டா அவ இங்க இருப்பா அவளை இங்க பாப்போம் அவளை இப்படி ஒரு சூழல்ல பாப்போம்ன்னு சத்தியமா எனக்கு தெரியாது ஒருவேளை " தொண்டை கவ்வி குரல் அடைத்தது, தொண்டையை சிருமி கொண்டு,

" ஒருவேளை அவள இப்படி இந்த சூழல்ல பாப்பேன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு நான் வந்திருக்க மாட்டேன், என் நினைவுகளை எனக்குள்ளேயே புதைச்சுட்டு அந்த நினைவுகளோட நான் வாழப்பழகின மாதிரி அப்படியே இருந்து இருப்பேன், அவளும் என்னை நிஜமா நிழலான்னு தெரியாமலே, கனவில் வந்த என்னை கணவனா வந்த நீதான்னு நினைச்சு காலம் கடத்தி இருப்பா.... "

சில நொடி மௌனம், மீண்டும் வீராவின் குரல் அமைதியாக,

" நிஜமா எங்களை நம்பு டா.
உன்ன அசிங்கபடுத்தனும்ன்னு எல்லாம் எங்களுக்கு எண்ணம் கிடையாது. ஒருவேளை உண்மையிலேயே அவளை நான் பார்த்து பேசி லவ் பண்ணி இருந்தா இன்னைக்கு உன்னைய இந்த இடத்து வரைக்கும் நான் வர விட்டுருப்பேனா? அந்த அளவுக்கு தைரியம் இல்லாத ஆளாடா நானு...
எண்ணிக்கு அவளுக்கு என்னை பிடிச்சதோ அன்னைக்கே அவ அப்பா அம்மா கிட்ட பேசி காதலுக்கு ஒரு வழி பண்ணிருக்க மாட்டேனா? "

வீராவின் கேள்வியில் இருந்த நியாயம் மோகனை யோசிக்க வைத்தது ஆனாலும் அவனுக்கு நேர்ந்த அவமானத்தின் விளைவாய், அவன் கனவு என்று சொன்னதில் முழுமையான நம்பிக்கை இல்லாமல் போனதாலும் அதை பற்றி அவன் சிறிதும் யோசிக்க தயாராக இல்லை,

வீராவின் மீது வீசிய அக்னி பார்வை இன்னும் மாறவில்லை ஆற்றாமையில் அவன் மனம் துடித்துக் கொண்டிருந்தது அவனை அருகில் சென்று அமைதி படுத்த ராஜாவும் யோசித்தான்.

அதற்கு மேலும் அங்கிருந்து பேசி வீணாக தனது கோபத்தை அதிகப்படுத்திக் கொள்ள விரும்பாமல் அங்கிருந்து வெளியே கிளம்பினான் மோகன்.

அவனைத் தடுத்து நிறுத்தி அவனது பெற்றோரும் அஞ்சலியின் பெற்றோரும் கல்யாணத்தை திரும்பவும் நடத்துவதற்கு பேசிப் பார்த்தார்கள் ஆனால் அவர்கள் எவருக்கும் அவன் பிடி கொடுக்கவில்லை,
அவர்கள் மீதும் அக்கினி பார்வையை செலுத்தி விட்டு அந்த இடத்தை விட்டு விறு விறு விறுவென நடந்தான்.

மங்களமாக ஆரம்பித்த அன்றைய தினம் ஆரம்பித்த சில மணி நேரத்திற்குள்ளாகவே அந்த மங்களத்தை இழந்து போனது...

அஞ்சலியை அவரது குடும்பத்தார் அனைவரும் ஒரு புழுவை போல பார்த்தனர், அஞ்சலி எதுவும் பேசாமல் அமைதியாக தலையை கவிழ்ந்து கண்ணீரை சிந்தி கொண்டிருந்தாள்,
அவளை எரிக்கும் பார்வையோடு நெருங்கினார் கிருஷ்ணன்.
ஆத்திரத்தில் கையை ஓங்க குறுக்காக வந்து நின்றான் வீரா....


மனம் கொடுத்த மன்னவன் வருவான்...
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top