Active member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 20
- Thread Author
- #1
அத்தியாயம்-5
மகதி மற்றும் வர்மனை இணைத்து கைபேசி வாயிலாகப் பார்த்த பொய் செய்தியைக் கேட்டு வர்மனின் முகம் கோவத்தில் கொந்தளித்தது.
"என்னடா மாயா இது... இந்த டிவி காரங்களுக்கு வேற வேலையா இல்லையா? ஒண்ணுக்கு ரெண்டா இப்படியா அடுத்தவுங்க வாழ்க்கையை படம் பிடித்துப் பணம் பார்ப்பானுங்க" என்ற ராஜனின் புலம்பளை தாண்டி வர்மனின் பார்வை மகதி மேல் பதிந்தது.
இந்தச் செய்தியைப் பார்த்துக் கண்கள் கலங்கி நின்று இருந்த மகதிக்கு எப்படி தைரியம் சொல்வது என்று புரியாமல் வரதன் குழம்பி போனவனின் கோவம் மொத்தமும் எக்ஸ் மீடியா மீது திரும்பியது.
"அப்பா... நீங்க அருணை பார்த்துக்கொங்க. இன்னைக்கு அந்த மீடியாக்காரனை நான் சும்மா விடுறதா இல்லை" என்ற வர்மன் மருத்துவமனையிலிருந்து வெளியேற முயன்றவனை தடுத்து நிறுத்தினான் மாயன்.
"கையை விடு மாயா... அவனுங்கள இன்னைக்கு நான் என்ன பண்ணுறேன்னு மட்டும் நீ பாரு" என்ற வர்மனின் கையை மீண்டும் அழுத்தமாகப் பிடித்த மாயன், "பேசுற வாய்க்கு எல்லாம் பதில் சொல்ல ஆரம்பிச்சா போற வரவுங்க எல்லோருக்கும் நம்ம பதில் சொல்லிக்கிட்டே இருக்கனும் வர்மா"என்ற மாயனின் வார்த்தையைக் கேட்ட வர்மன் தன் கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் கைகளை மடக்கி தன்னை தானே அமைதிப்படுத்தி கொண்டான்.
"மாயா... சம்மந்தமே இல்லாம மகதியை பற்றி நியூஸ் வந்து இருக்கு டா" என்ற வர்மனின் கவலையான குரலைக் கேட்டுக் கண்கள் கலங்கினாள் மகதி.
"அருணுக்கு ரத்தம் கொடுக்க வந்த பெண்ணைப் பற்றி இப்படி தப்பா நியூஸ் வந்துச்சுனா நாளைக்கு உன் தங்கச்சி வாழ்கைக்கு தானே மாயா பிரச்சனை" என்று வர்மன் மகதி நிலையிலிருந்து யோசித்து வருத்தத்துடன் சொன்னான்.
"அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். இப்போதைக்கு நமக்கு அருண் நல்லப்படியா திரும்பி வந்தா போதும்"
என்ற மாயன் தன் தங்கை மகதியை எப்படி சமாதானம் செய்வது என்ற குழப்பத்தில் அவள் முகத்தைப் பார்க்க, அவளோ தன் நிலையை எண்ணி மேலும் அழுதப்படியே நின்று இருந்தாள்.
"அம்மாடி அழாதமா. என் பேரனைக் காப்பாற்ற வந்த உனக்கு இப்படியொரு பிரச்சனை வரும்னு நான் நினைச்சே பார்க்கல"என்ற ராஜனின் மனதில் மகதியின் புகைப்படம் வர்மனுடன் சேர்ந்து வெளியானதை மகதியின் தந்தை மகாலிங்கம் பார்த்தால் தன்னை என்ன நினைப்பாரோ என்ற அச்சமும் அவர் மனதில் இருக்க தான் செய்தது.
மகதி யாரை இத்தனை காலமாகக் காதலித்தாளோ அவனுக்கு அவள்
நினைவே இல்லை என்ற உண்மையை நினைத்து அழுவதா.
இல்லை யாரை இனி நினைக்கவே கூடாது என்று எண்ணினாளோ அவனுடனே சேர்த்து வைத்துச் சில ஊடகங்களில் வெளியாகும் மகதி வர்மனை பற்றிய பொய் செய்திகளை எண்ணி கோவப்படுவதா என்று தெரியாமல் அந்த இடத்தில் மகதியும் சூழ்நிலை கைதியாக மாறி இருந்தாள்.
ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை கூட மறந்து தன் குடும்ப வாழ்க்கையை பற்றி விமர்சனம் செய்யும் ஆட்களை இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என்ற பட்சத்தில் வர்மன் தன் கோவத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நின்று இருந்தவனை மாயன் சமாதானம்
செய்துக் கொண்டு இருந்தான்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடந்தும் அனைவரின் முகத்திலும் இறுக்கம் தளராமல் இருக்க, சிறுவன் அருண் இருக்கும் சிகிச்சை அறைக்குள் இருந்து தலைத்தெரிக்க வெளியே ஓடி வந்தார் செவிலியர்.
"டாக்டர் அந்தப் பையன் மயக்கம் தெளிந்து எழுந்தவன் பயங்கரமா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுறான் டாக்டர். ப்ளீஸ் சீக்கிரமா வாங்க டாக்டர்" என்றவரைத் தொடர்ந்து மருத்துவர் வேகமாகச் சிறுவன் அருண் இருக்கும் சிகிச்சை அறைக்குள் நுழைந்தவரை பார்த்து அனைவரும் பதற்றம் அடைந்தார்கள்.
மருத்துவரின் பதற்றத்தை பார்த்து அருணுக்கு என்னானது என்று புரியாமல் வெளியே வர்மனும் ராஜனும் தவித்துப் போனார்கள்.
காலையில் புதிதாய் பூத்த மலரைப் போல அழகாய் இருந்த சிறுவனுக்கு இன்றைய நாள் முடிவதற்குள் இப்படியொரு நிலைமையா என்ற கவலைக்கு முன்னே மகதியின் காதல் வலி அவளுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.
"வர்மா... அருணுக்கு என்னாச்சு? ஏன் டாக்டர் இன்னும் வெளியே வரல?" என்ற ராஜனின் கேள்விகளுக்கு வர்மன் பதில் சொல்லும் முன்னே சிறுவனின் சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவரை அனைவரும் பதற்றதுடனும் பயத்துடனும் பார்த்து இருந்தார்கள்.
"டாக்டர் என் பையன் எப்படி இருக்கான்? அவன் கண் விழிச்சிட்டானா? அவனை நாங்க பார்க்கலாமா?" என்ற வர்மனின் கேள்விக்கு டாக்டர் ஒரு நொடி அமைதியை கடைபிடித்தார்.
"டாக்டர் என் பேரனுக்கு என்னாச்சு
டாக்டர்? "என்ற ராஜன் பொறுமை இழந்தவராகக் கேட்டதும், "சாரி சார்" என்ற மருத்துவரின் பதிலில் அனைவரின் இதயத்திலும் ரத்தம் உறைந்து போனது.
"உங்க பையனுக்குத் தலையில பலமா அடிப்பததால கண்ணுக்குப் போற நரம்பு டேமேஜ் ஆகிருச்சு, அதனால அருணுக்கு இப்போதைக்கு கண்ணு தெரியாது" என்ற மருத்துவரின் வார்த்தையைக்கேட்டு வர்மன் அதே இடத்தில் உயிருள்ள பிணமாக நின்று இருந்தான்.
"ஐயோ வர்மா...நம்ம அருணுக்கு இனி கண்ணு தெரியாதா?"என்று அலறிய ராஜன் அதே இடத்தில் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்தார்.
"மாமா..." என்று பதறிய மகதி மாயன் உதவியோடு ராஜனை கைத்தாங்கலாக
தூக்கி இருக்கையில் அமர வைத்தவளுக்கு சிறுவன் அருணின் நிலையை எண்ணி வேதனையாக இருந்தது.
"டாக்டர் என்ன சொல்லுறீங்க? அப்போ அருணுக்கு இனி கண்ணு தெரியாதா?" என்ற மாயனின் விழிகளும் ஈரமாக,
"சார்....சின்ன சுர்ஜரி பண்ணா மீண்டும் பார்வை வர வாய்ப்பு இருக்கு, ஆனா குழந்தை இருக்குற கண்டிஷன்க்கு உடனே ஆபரேஷன் பண்ண முடியாது. எப்படியும் குறைந்த பட்சம் மூணு மாசமாவது நம்ம வெயிட் பண்ணி தான் ஆகணும்" என்ற மருத்துவரின் அடுத்தடுத்து வார்த்தையைக் கேட்டு ராஜனும் வர்மனும் உலகில் உள்ள எல்லா தெய்வங்களும் தங்களை கைவிட்டதாக எண்ணினார்கள்.
"சார்... உங்க பையனுக்கு மயக்கம் தெளிந்து அவனால யாரையும் பார்க்க முடியலைன்னு அவன் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுறான். ப்ளீஸ்!குழந்தைக்குச் சூழ்நிலையைப் புரிய வையுங்க. இந்த மாதிரி நேரத்துல உங்க பையன் அதிகமா அழுதாலோ இல்லை உணர்ச்சி வசப்பட்டுக் கதினாலோ ஆபரேஷன் பண்ண இடத்துல தையல் பிரிய வாய்ப்பு இருக்கு" என்ற மருத்தவரின் அறிவுரை அணைத்தும் வர்மனின் காதில் விழுந்தாலும் அவனின் மூளை செயல் இழந்ததை போல உணர்ந்தான்.
மாயனில் தொடங்கி மகதி வரை
அருணின் நிலையை எண்ணி கவலைக்கொண்டார்கள்.
"சார் உங்க பையன் அழுதுகிட்டே இருக்கான். எங்கனால அவனைச் சமாதானமே பண்ண முடியல" என்று அருணின் சிகிச்சை அறையிலிருந்து வேகமாக ஓடி வந்தார் செவிலியர்.
"சார்... நான் சொன்னது நினைவு இருக்கட்டும். உங்க பிள்ளையைச் சமாதானம் செய்து அவனைப் பத்திரமா பார்த்துக்கொங்க" என்ற மருத்துவருடனே வர்மன் மாயன் ராஜன் மகதி என்று அனைவரும் சிகிச்சை அறைக்குள் நுழைந்தவர்களை அருணின் பள்ளியின் நிர்வாகி அம்பிகாவும் பின் தொடர்ந்தார்.
சிகிச்சை அறையில் உள்ள கட்டிலில் கண்களிலும் தலையிலும் கட்டு கட்டப்பட்ட நிலையில் சிறுவன் அருண் அழுதபடி "எனக்குக் கண்ணு தெரியல,என் எனக்குக் கண்ணு தெரியல" என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தவனை பார்த்து வர்மனுக்கும் ராஜனுக்கும் தன் உடலில் உள்ள உயிர் அந்த கணமே பிரிந்ததைப் போல நின்று இருந்தார்கள்.
"வர்மா... இந்த மாதிரி நேரத்துல தான் நீ தைரியமா இருக்கணும்" என்று கண்களில் கண்ணீருடன் தன் நண்பனுக்கு ஆறுதல் சொன்னான் மாயன்.
"எப்படிடா என்னால தைரியமா இருக்க முடியும்! அருண் பிறந்ததிலிருந்து எவ்வளவு கஷ்டப்பட்டான்னு என் கூடவே இருக்கிற உனக்குத் தெரியும் தானே! அந்தக் குழந்தை ரம்யாவுக்கு பிறந்த ஒரே ஒரு பாவத்தைத் தவிர வேற என்ன பாவத்தடா பண்ணான்" என்று கதறி அழும் வர்மனின் வார்த்தையைக் கேட்டு ரம்யா தான் வர்மனின் மனைவியா என்று
எண்ணினாள் மகதி.
"வர்மா...நான் சொல்றதை கேளுடா! நீயே இப்படி உடைந்து போனால் உன் அப்பாவுக்கு யாரு ஆறுதல் சொல்றது. குழந்தை டா அருண். அவனுக்கு நீ தான் தைரியம் சொல்லணும். இப்ப என்ன? பார்வை திரும்பக் கிடைக்கும்ன்னு தானே டாக்டர் சொல்லி இருக்காரு. கடந்த சில வருஷமா நீ பார்க்காத பிரச்சனையா. நம்ம எல்லாத்தையும் பொறுமையா சரி செய்யலாம். நீ முதல்ல போயி அருண் கிட்ட பேசு.அங்க பாரு அவன் எப்படி அழறான்னு! போ வர்மா" என்று அந்த இடத்தில் நண்பனுக்கு நண்பனாகவும்,தாய்க்கு தாயாகவும் மாறி மாயன் வர்மனுக்கு தைரியத்துடன் சேர்த்த ஆறுதலையும் தெரிவித்தான்.
பார்வையிழந்து தலையில் பெரிய கட்டுடன் படுக்கையில் அமர்ந்திருந்த குழந்தையின் அருகே ரணமான இதயத்துடன் நெருங்கிய வர்மன், "அருண்..." என்று அழைத்த மறுநொடி, "அப்பா....அப்பா நீங்க எங்க இருக்கீங்க? எனக்குக் கண்ணு தெரியல. நீங்க யாருமே எனக்குத் தெரியல" என்று கதறி அழுதான் அருண்.
"எனக்கு ஏன் அப்பா கண்ணு தெரியாம போச்சு" என்று கதறி அழுத சிறுவனை அணைத்துக் கொண்ட வர்மன் அருணை விட அதிகமாகக் கதறி அழுதவனின் தாய்மை உணர்வைக் கண்டு மகதியின் கண்களும் ஈரமானது.
மகதி மற்றும் வர்மனை இணைத்து கைபேசி வாயிலாகப் பார்த்த பொய் செய்தியைக் கேட்டு வர்மனின் முகம் கோவத்தில் கொந்தளித்தது.
"என்னடா மாயா இது... இந்த டிவி காரங்களுக்கு வேற வேலையா இல்லையா? ஒண்ணுக்கு ரெண்டா இப்படியா அடுத்தவுங்க வாழ்க்கையை படம் பிடித்துப் பணம் பார்ப்பானுங்க" என்ற ராஜனின் புலம்பளை தாண்டி வர்மனின் பார்வை மகதி மேல் பதிந்தது.
இந்தச் செய்தியைப் பார்த்துக் கண்கள் கலங்கி நின்று இருந்த மகதிக்கு எப்படி தைரியம் சொல்வது என்று புரியாமல் வரதன் குழம்பி போனவனின் கோவம் மொத்தமும் எக்ஸ் மீடியா மீது திரும்பியது.
"அப்பா... நீங்க அருணை பார்த்துக்கொங்க. இன்னைக்கு அந்த மீடியாக்காரனை நான் சும்மா விடுறதா இல்லை" என்ற வர்மன் மருத்துவமனையிலிருந்து வெளியேற முயன்றவனை தடுத்து நிறுத்தினான் மாயன்.
"கையை விடு மாயா... அவனுங்கள இன்னைக்கு நான் என்ன பண்ணுறேன்னு மட்டும் நீ பாரு" என்ற வர்மனின் கையை மீண்டும் அழுத்தமாகப் பிடித்த மாயன், "பேசுற வாய்க்கு எல்லாம் பதில் சொல்ல ஆரம்பிச்சா போற வரவுங்க எல்லோருக்கும் நம்ம பதில் சொல்லிக்கிட்டே இருக்கனும் வர்மா"என்ற மாயனின் வார்த்தையைக் கேட்ட வர்மன் தன் கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் கைகளை மடக்கி தன்னை தானே அமைதிப்படுத்தி கொண்டான்.
"மாயா... சம்மந்தமே இல்லாம மகதியை பற்றி நியூஸ் வந்து இருக்கு டா" என்ற வர்மனின் கவலையான குரலைக் கேட்டுக் கண்கள் கலங்கினாள் மகதி.
"அருணுக்கு ரத்தம் கொடுக்க வந்த பெண்ணைப் பற்றி இப்படி தப்பா நியூஸ் வந்துச்சுனா நாளைக்கு உன் தங்கச்சி வாழ்கைக்கு தானே மாயா பிரச்சனை" என்று வர்மன் மகதி நிலையிலிருந்து யோசித்து வருத்தத்துடன் சொன்னான்.
"அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். இப்போதைக்கு நமக்கு அருண் நல்லப்படியா திரும்பி வந்தா போதும்"
என்ற மாயன் தன் தங்கை மகதியை எப்படி சமாதானம் செய்வது என்ற குழப்பத்தில் அவள் முகத்தைப் பார்க்க, அவளோ தன் நிலையை எண்ணி மேலும் அழுதப்படியே நின்று இருந்தாள்.
"அம்மாடி அழாதமா. என் பேரனைக் காப்பாற்ற வந்த உனக்கு இப்படியொரு பிரச்சனை வரும்னு நான் நினைச்சே பார்க்கல"என்ற ராஜனின் மனதில் மகதியின் புகைப்படம் வர்மனுடன் சேர்ந்து வெளியானதை மகதியின் தந்தை மகாலிங்கம் பார்த்தால் தன்னை என்ன நினைப்பாரோ என்ற அச்சமும் அவர் மனதில் இருக்க தான் செய்தது.
மகதி யாரை இத்தனை காலமாகக் காதலித்தாளோ அவனுக்கு அவள்
நினைவே இல்லை என்ற உண்மையை நினைத்து அழுவதா.
இல்லை யாரை இனி நினைக்கவே கூடாது என்று எண்ணினாளோ அவனுடனே சேர்த்து வைத்துச் சில ஊடகங்களில் வெளியாகும் மகதி வர்மனை பற்றிய பொய் செய்திகளை எண்ணி கோவப்படுவதா என்று தெரியாமல் அந்த இடத்தில் மகதியும் சூழ்நிலை கைதியாக மாறி இருந்தாள்.
ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை கூட மறந்து தன் குடும்ப வாழ்க்கையை பற்றி விமர்சனம் செய்யும் ஆட்களை இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என்ற பட்சத்தில் வர்மன் தன் கோவத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நின்று இருந்தவனை மாயன் சமாதானம்
செய்துக் கொண்டு இருந்தான்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடந்தும் அனைவரின் முகத்திலும் இறுக்கம் தளராமல் இருக்க, சிறுவன் அருண் இருக்கும் சிகிச்சை அறைக்குள் இருந்து தலைத்தெரிக்க வெளியே ஓடி வந்தார் செவிலியர்.
"டாக்டர் அந்தப் பையன் மயக்கம் தெளிந்து எழுந்தவன் பயங்கரமா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுறான் டாக்டர். ப்ளீஸ் சீக்கிரமா வாங்க டாக்டர்" என்றவரைத் தொடர்ந்து மருத்துவர் வேகமாகச் சிறுவன் அருண் இருக்கும் சிகிச்சை அறைக்குள் நுழைந்தவரை பார்த்து அனைவரும் பதற்றம் அடைந்தார்கள்.
மருத்துவரின் பதற்றத்தை பார்த்து அருணுக்கு என்னானது என்று புரியாமல் வெளியே வர்மனும் ராஜனும் தவித்துப் போனார்கள்.
காலையில் புதிதாய் பூத்த மலரைப் போல அழகாய் இருந்த சிறுவனுக்கு இன்றைய நாள் முடிவதற்குள் இப்படியொரு நிலைமையா என்ற கவலைக்கு முன்னே மகதியின் காதல் வலி அவளுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.
"வர்மா... அருணுக்கு என்னாச்சு? ஏன் டாக்டர் இன்னும் வெளியே வரல?" என்ற ராஜனின் கேள்விகளுக்கு வர்மன் பதில் சொல்லும் முன்னே சிறுவனின் சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவரை அனைவரும் பதற்றதுடனும் பயத்துடனும் பார்த்து இருந்தார்கள்.
"டாக்டர் என் பையன் எப்படி இருக்கான்? அவன் கண் விழிச்சிட்டானா? அவனை நாங்க பார்க்கலாமா?" என்ற வர்மனின் கேள்விக்கு டாக்டர் ஒரு நொடி அமைதியை கடைபிடித்தார்.
"டாக்டர் என் பேரனுக்கு என்னாச்சு
டாக்டர்? "என்ற ராஜன் பொறுமை இழந்தவராகக் கேட்டதும், "சாரி சார்" என்ற மருத்துவரின் பதிலில் அனைவரின் இதயத்திலும் ரத்தம் உறைந்து போனது.
"உங்க பையனுக்குத் தலையில பலமா அடிப்பததால கண்ணுக்குப் போற நரம்பு டேமேஜ் ஆகிருச்சு, அதனால அருணுக்கு இப்போதைக்கு கண்ணு தெரியாது" என்ற மருத்துவரின் வார்த்தையைக்கேட்டு வர்மன் அதே இடத்தில் உயிருள்ள பிணமாக நின்று இருந்தான்.
"ஐயோ வர்மா...நம்ம அருணுக்கு இனி கண்ணு தெரியாதா?"என்று அலறிய ராஜன் அதே இடத்தில் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்தார்.
"மாமா..." என்று பதறிய மகதி மாயன் உதவியோடு ராஜனை கைத்தாங்கலாக
தூக்கி இருக்கையில் அமர வைத்தவளுக்கு சிறுவன் அருணின் நிலையை எண்ணி வேதனையாக இருந்தது.
"டாக்டர் என்ன சொல்லுறீங்க? அப்போ அருணுக்கு இனி கண்ணு தெரியாதா?" என்ற மாயனின் விழிகளும் ஈரமாக,
"சார்....சின்ன சுர்ஜரி பண்ணா மீண்டும் பார்வை வர வாய்ப்பு இருக்கு, ஆனா குழந்தை இருக்குற கண்டிஷன்க்கு உடனே ஆபரேஷன் பண்ண முடியாது. எப்படியும் குறைந்த பட்சம் மூணு மாசமாவது நம்ம வெயிட் பண்ணி தான் ஆகணும்" என்ற மருத்துவரின் அடுத்தடுத்து வார்த்தையைக் கேட்டு ராஜனும் வர்மனும் உலகில் உள்ள எல்லா தெய்வங்களும் தங்களை கைவிட்டதாக எண்ணினார்கள்.
"சார்... உங்க பையனுக்கு மயக்கம் தெளிந்து அவனால யாரையும் பார்க்க முடியலைன்னு அவன் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுறான். ப்ளீஸ்!குழந்தைக்குச் சூழ்நிலையைப் புரிய வையுங்க. இந்த மாதிரி நேரத்துல உங்க பையன் அதிகமா அழுதாலோ இல்லை உணர்ச்சி வசப்பட்டுக் கதினாலோ ஆபரேஷன் பண்ண இடத்துல தையல் பிரிய வாய்ப்பு இருக்கு" என்ற மருத்தவரின் அறிவுரை அணைத்தும் வர்மனின் காதில் விழுந்தாலும் அவனின் மூளை செயல் இழந்ததை போல உணர்ந்தான்.
மாயனில் தொடங்கி மகதி வரை
அருணின் நிலையை எண்ணி கவலைக்கொண்டார்கள்.
"சார் உங்க பையன் அழுதுகிட்டே இருக்கான். எங்கனால அவனைச் சமாதானமே பண்ண முடியல" என்று அருணின் சிகிச்சை அறையிலிருந்து வேகமாக ஓடி வந்தார் செவிலியர்.
"சார்... நான் சொன்னது நினைவு இருக்கட்டும். உங்க பிள்ளையைச் சமாதானம் செய்து அவனைப் பத்திரமா பார்த்துக்கொங்க" என்ற மருத்துவருடனே வர்மன் மாயன் ராஜன் மகதி என்று அனைவரும் சிகிச்சை அறைக்குள் நுழைந்தவர்களை அருணின் பள்ளியின் நிர்வாகி அம்பிகாவும் பின் தொடர்ந்தார்.
சிகிச்சை அறையில் உள்ள கட்டிலில் கண்களிலும் தலையிலும் கட்டு கட்டப்பட்ட நிலையில் சிறுவன் அருண் அழுதபடி "எனக்குக் கண்ணு தெரியல,என் எனக்குக் கண்ணு தெரியல" என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தவனை பார்த்து வர்மனுக்கும் ராஜனுக்கும் தன் உடலில் உள்ள உயிர் அந்த கணமே பிரிந்ததைப் போல நின்று இருந்தார்கள்.
"வர்மா... இந்த மாதிரி நேரத்துல தான் நீ தைரியமா இருக்கணும்" என்று கண்களில் கண்ணீருடன் தன் நண்பனுக்கு ஆறுதல் சொன்னான் மாயன்.
"எப்படிடா என்னால தைரியமா இருக்க முடியும்! அருண் பிறந்ததிலிருந்து எவ்வளவு கஷ்டப்பட்டான்னு என் கூடவே இருக்கிற உனக்குத் தெரியும் தானே! அந்தக் குழந்தை ரம்யாவுக்கு பிறந்த ஒரே ஒரு பாவத்தைத் தவிர வேற என்ன பாவத்தடா பண்ணான்" என்று கதறி அழும் வர்மனின் வார்த்தையைக் கேட்டு ரம்யா தான் வர்மனின் மனைவியா என்று
எண்ணினாள் மகதி.
"வர்மா...நான் சொல்றதை கேளுடா! நீயே இப்படி உடைந்து போனால் உன் அப்பாவுக்கு யாரு ஆறுதல் சொல்றது. குழந்தை டா அருண். அவனுக்கு நீ தான் தைரியம் சொல்லணும். இப்ப என்ன? பார்வை திரும்பக் கிடைக்கும்ன்னு தானே டாக்டர் சொல்லி இருக்காரு. கடந்த சில வருஷமா நீ பார்க்காத பிரச்சனையா. நம்ம எல்லாத்தையும் பொறுமையா சரி செய்யலாம். நீ முதல்ல போயி அருண் கிட்ட பேசு.அங்க பாரு அவன் எப்படி அழறான்னு! போ வர்மா" என்று அந்த இடத்தில் நண்பனுக்கு நண்பனாகவும்,தாய்க்கு தாயாகவும் மாறி மாயன் வர்மனுக்கு தைரியத்துடன் சேர்த்த ஆறுதலையும் தெரிவித்தான்.
பார்வையிழந்து தலையில் பெரிய கட்டுடன் படுக்கையில் அமர்ந்திருந்த குழந்தையின் அருகே ரணமான இதயத்துடன் நெருங்கிய வர்மன், "அருண்..." என்று அழைத்த மறுநொடி, "அப்பா....அப்பா நீங்க எங்க இருக்கீங்க? எனக்குக் கண்ணு தெரியல. நீங்க யாருமே எனக்குத் தெரியல" என்று கதறி அழுதான் அருண்.
"எனக்கு ஏன் அப்பா கண்ணு தெரியாம போச்சு" என்று கதறி அழுத சிறுவனை அணைத்துக் கொண்ட வர்மன் அருணை விட அதிகமாகக் கதறி அழுதவனின் தாய்மை உணர்வைக் கண்டு மகதியின் கண்களும் ஈரமானது.