• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
20
அத்தியாயம்-5

மகதி மற்றும் வர்மனை இணைத்து கைபேசி வாயிலாகப் பார்த்த பொய் செய்தியைக் கேட்டு வர்மனின் முகம் கோவத்தில் கொந்தளித்தது.

"என்னடா மாயா இது... இந்த டிவி காரங்களுக்கு வேற வேலையா இல்லையா? ஒண்ணுக்கு ரெண்டா இப்படியா அடுத்தவுங்க வாழ்க்கையை படம் பிடித்துப் பணம் பார்ப்பானுங்க" என்ற ராஜனின் புலம்பளை தாண்டி வர்மனின் பார்வை மகதி மேல் பதிந்தது.

இந்தச் செய்தியைப் பார்த்துக் கண்கள் கலங்கி நின்று இருந்த மகதிக்கு எப்படி தைரியம் சொல்வது என்று புரியாமல் வரதன் குழம்பி போனவனின் கோவம் மொத்தமும் எக்ஸ் மீடியா மீது திரும்பியது.

"அப்பா... நீங்க அருணை பார்த்துக்கொங்க. இன்னைக்கு அந்த மீடியாக்காரனை நான் சும்மா விடுறதா இல்லை" என்ற வர்மன் மருத்துவமனையிலிருந்து வெளியேற முயன்றவனை தடுத்து நிறுத்தினான் மாயன்.

"கையை விடு மாயா... அவனுங்கள இன்னைக்கு நான் என்ன பண்ணுறேன்னு மட்டும் நீ பாரு" என்ற வர்மனின் கையை மீண்டும் அழுத்தமாகப் பிடித்த மாயன், "பேசுற வாய்க்கு எல்லாம் பதில் சொல்ல ஆரம்பிச்சா போற வரவுங்க எல்லோருக்கும் நம்ம பதில் சொல்லிக்கிட்டே இருக்கனும் வர்மா"என்ற மாயனின் வார்த்தையைக் கேட்ட வர்மன் தன் கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன் கைகளை மடக்கி தன்னை தானே அமைதிப்படுத்தி கொண்டான்.

"மாயா... சம்மந்தமே இல்லாம மகதியை பற்றி நியூஸ் வந்து இருக்கு டா" என்ற வர்மனின் கவலையான குரலைக் கேட்டுக் கண்கள் கலங்கினாள் மகதி.

"அருணுக்கு ரத்தம் கொடுக்க வந்த பெண்ணைப் பற்றி இப்படி தப்பா நியூஸ் வந்துச்சுனா நாளைக்கு உன் தங்கச்சி வாழ்கைக்கு தானே மாயா பிரச்சனை" என்று வர்மன் மகதி நிலையிலிருந்து யோசித்து வருத்தத்துடன் சொன்னான்.

"அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். இப்போதைக்கு நமக்கு அருண் நல்லப்படியா திரும்பி வந்தா போதும்"
என்ற மாயன் தன் தங்கை மகதியை எப்படி சமாதானம் செய்வது என்ற குழப்பத்தில் அவள் முகத்தைப் பார்க்க, அவளோ தன் நிலையை எண்ணி மேலும் அழுதப்படியே நின்று இருந்தாள்.

"அம்மாடி அழாதமா. என் பேரனைக் காப்பாற்ற வந்த உனக்கு இப்படியொரு பிரச்சனை வரும்னு நான் நினைச்சே பார்க்கல"என்ற ராஜனின் மனதில் மகதியின் புகைப்படம் வர்மனுடன் சேர்ந்து வெளியானதை மகதியின் தந்தை மகாலிங்கம் பார்த்தால் தன்னை என்ன நினைப்பாரோ என்ற அச்சமும் அவர் மனதில் இருக்க தான் செய்தது.

மகதி யாரை இத்தனை காலமாகக் காதலித்தாளோ அவனுக்கு அவள்
நினைவே இல்லை என்ற உண்மையை நினைத்து அழுவதா.
இல்லை யாரை இனி நினைக்கவே கூடாது என்று எண்ணினாளோ அவனுடனே சேர்த்து வைத்துச் சில ஊடகங்களில் வெளியாகும் மகதி வர்மனை பற்றிய பொய் செய்திகளை எண்ணி கோவப்படுவதா என்று தெரியாமல் அந்த இடத்தில் மகதியும் சூழ்நிலை கைதியாக மாறி இருந்தாள்.

ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை கூட மறந்து தன் குடும்ப வாழ்க்கையை பற்றி விமர்சனம் செய்யும் ஆட்களை இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது என்ற பட்சத்தில் வர்மன் தன் கோவத்தை கட்டுப்படுத்திக்கொண்டு நின்று இருந்தவனை மாயன் சமாதானம்
செய்துக் கொண்டு இருந்தான்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கடந்தும் அனைவரின் முகத்திலும் இறுக்கம் தளராமல் இருக்க, சிறுவன் அருண் இருக்கும் சிகிச்சை அறைக்குள் இருந்து தலைத்தெரிக்க வெளியே ஓடி வந்தார் செவிலியர்.

"டாக்டர் அந்தப் பையன் மயக்கம் தெளிந்து எழுந்தவன் பயங்கரமா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுறான் டாக்டர். ப்ளீஸ் சீக்கிரமா வாங்க டாக்டர்" என்றவரைத் தொடர்ந்து மருத்துவர் வேகமாகச் சிறுவன் அருண் இருக்கும் சிகிச்சை அறைக்குள் நுழைந்தவரை பார்த்து அனைவரும் பதற்றம் அடைந்தார்கள்.

மருத்துவரின் பதற்றத்தை பார்த்து அருணுக்கு என்னானது என்று புரியாமல் வெளியே வர்மனும் ராஜனும் தவித்துப் போனார்கள்.

காலையில் புதிதாய் பூத்த மலரைப் போல அழகாய் இருந்த சிறுவனுக்கு இன்றைய நாள் முடிவதற்குள் இப்படியொரு நிலைமையா என்ற கவலைக்கு முன்னே மகதியின் காதல் வலி அவளுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.

"வர்மா... அருணுக்கு என்னாச்சு? ஏன் டாக்டர் இன்னும் வெளியே வரல?" என்ற ராஜனின் கேள்விகளுக்கு வர்மன் பதில் சொல்லும் முன்னே சிறுவனின் சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவரை அனைவரும் பதற்றதுடனும் பயத்துடனும் பார்த்து இருந்தார்கள்.

"டாக்டர் என் பையன் எப்படி இருக்கான்? அவன் கண் விழிச்சிட்டானா? அவனை நாங்க பார்க்கலாமா?" என்ற வர்மனின் கேள்விக்கு டாக்டர் ஒரு நொடி அமைதியை கடைபிடித்தார்.

"டாக்டர் என் பேரனுக்கு என்னாச்சு
டாக்டர்? "என்ற ராஜன் பொறுமை இழந்தவராகக் கேட்டதும், "சாரி சார்" என்ற மருத்துவரின் பதிலில் அனைவரின் இதயத்திலும் ரத்தம் உறைந்து போனது.

"உங்க பையனுக்குத் தலையில பலமா அடிப்பததால கண்ணுக்குப் போற நரம்பு டேமேஜ் ஆகிருச்சு, அதனால அருணுக்கு இப்போதைக்கு கண்ணு தெரியாது" என்ற மருத்துவரின் வார்த்தையைக்கேட்டு வர்மன் அதே இடத்தில் உயிருள்ள பிணமாக நின்று இருந்தான்.

"ஐயோ வர்மா...நம்ம அருணுக்கு இனி கண்ணு தெரியாதா?"என்று அலறிய ராஜன் அதே இடத்தில் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்தார்.

"மாமா..." என்று பதறிய மகதி மாயன் உதவியோடு ராஜனை கைத்தாங்கலாக
தூக்கி இருக்கையில் அமர வைத்தவளுக்கு சிறுவன் அருணின் நிலையை எண்ணி வேதனையாக இருந்தது.

"டாக்டர் என்ன சொல்லுறீங்க? அப்போ அருணுக்கு இனி கண்ணு தெரியாதா?" என்ற மாயனின் விழிகளும் ஈரமாக,
"சார்....சின்ன சுர்ஜரி பண்ணா மீண்டும் பார்வை வர வாய்ப்பு இருக்கு, ஆனா குழந்தை இருக்குற கண்டிஷன்க்கு உடனே ஆபரேஷன் பண்ண முடியாது. எப்படியும் குறைந்த பட்சம் மூணு மாசமாவது நம்ம வெயிட் பண்ணி தான் ஆகணும்" என்ற மருத்துவரின் அடுத்தடுத்து வார்த்தையைக் கேட்டு ராஜனும் வர்மனும் உலகில் உள்ள எல்லா தெய்வங்களும் தங்களை கைவிட்டதாக எண்ணினார்கள்.

"சார்... உங்க பையனுக்கு மயக்கம் தெளிந்து அவனால யாரையும் பார்க்க முடியலைன்னு அவன் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுறான். ப்ளீஸ்!குழந்தைக்குச் சூழ்நிலையைப் புரிய வையுங்க. இந்த மாதிரி நேரத்துல உங்க பையன் அதிகமா அழுதாலோ இல்லை உணர்ச்சி வசப்பட்டுக் கதினாலோ ஆபரேஷன் பண்ண இடத்துல தையல் பிரிய வாய்ப்பு இருக்கு" என்ற மருத்தவரின் அறிவுரை அணைத்தும் வர்மனின் காதில் விழுந்தாலும் அவனின் மூளை செயல் இழந்ததை போல உணர்ந்தான்.

மாயனில் தொடங்கி மகதி வரை
அருணின் நிலையை எண்ணி கவலைக்கொண்டார்கள்.

"சார் உங்க பையன் அழுதுகிட்டே இருக்கான். எங்கனால அவனைச் சமாதானமே பண்ண முடியல" என்று அருணின் சிகிச்சை அறையிலிருந்து வேகமாக ஓடி வந்தார் செவிலியர்.

"சார்... நான் சொன்னது நினைவு இருக்கட்டும். உங்க பிள்ளையைச் சமாதானம் செய்து அவனைப் பத்திரமா பார்த்துக்கொங்க" என்ற மருத்துவருடனே வர்மன் மாயன் ராஜன் மகதி என்று அனைவரும் சிகிச்சை அறைக்குள் நுழைந்தவர்களை அருணின் பள்ளியின் நிர்வாகி அம்பிகாவும் பின் தொடர்ந்தார்.

சிகிச்சை அறையில் உள்ள கட்டிலில் கண்களிலும் தலையிலும் கட்டு கட்டப்பட்ட நிலையில் சிறுவன் அருண் அழுதபடி "எனக்குக் கண்ணு தெரியல,என் எனக்குக் கண்ணு தெரியல" என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தவனை பார்த்து வர்மனுக்கும் ராஜனுக்கும் தன் உடலில் உள்ள உயிர் அந்த கணமே பிரிந்ததைப் போல நின்று இருந்தார்கள்.

"வர்மா... இந்த மாதிரி நேரத்துல தான் நீ தைரியமா இருக்கணும்" என்று கண்களில் கண்ணீருடன் தன் நண்பனுக்கு ஆறுதல் சொன்னான் மாயன்.

"எப்படிடா என்னால தைரியமா இருக்க முடியும்! அருண் பிறந்ததிலிருந்து எவ்வளவு கஷ்டப்பட்டான்னு என் கூடவே இருக்கிற உனக்குத் தெரியும் தானே! அந்தக் குழந்தை ரம்யாவுக்கு பிறந்த ஒரே ஒரு பாவத்தைத் தவிர வேற என்ன பாவத்தடா பண்ணான்" என்று கதறி அழும் வர்மனின் வார்த்தையைக் கேட்டு ரம்யா தான் வர்மனின் மனைவியா என்று
எண்ணினாள் மகதி.

"வர்மா...நான் சொல்றதை கேளுடா! நீயே இப்படி உடைந்து போனால் உன் அப்பாவுக்கு யாரு ஆறுதல் சொல்றது. குழந்தை டா அருண். அவனுக்கு நீ தான் தைரியம் சொல்லணும். இப்ப என்ன? பார்வை திரும்பக் கிடைக்கும்ன்னு தானே டாக்டர் சொல்லி இருக்காரு. கடந்த சில வருஷமா நீ பார்க்காத பிரச்சனையா. நம்ம எல்லாத்தையும் பொறுமையா சரி செய்யலாம். நீ முதல்ல போயி அருண் கிட்ட பேசு.அங்க பாரு அவன் எப்படி அழறான்னு! போ வர்மா" என்று அந்த இடத்தில் நண்பனுக்கு நண்பனாகவும்,தாய்க்கு தாயாகவும் மாறி மாயன் வர்மனுக்கு தைரியத்துடன் சேர்த்த ஆறுதலையும் தெரிவித்தான்.

பார்வையிழந்து தலையில் பெரிய கட்டுடன் படுக்கையில் அமர்ந்திருந்த குழந்தையின் அருகே ரணமான இதயத்துடன் நெருங்கிய வர்மன், "அருண்..." என்று அழைத்த மறுநொடி, "அப்பா....அப்பா நீங்க எங்க இருக்கீங்க? எனக்குக் கண்ணு தெரியல. நீங்க யாருமே எனக்குத் தெரியல" என்று கதறி அழுதான் அருண்.

"எனக்கு ஏன் அப்பா கண்ணு தெரியாம போச்சு" என்று கதறி அழுத சிறுவனை அணைத்துக் கொண்ட வர்மன் அருணை விட அதிகமாகக் கதறி அழுதவனின் தாய்மை உணர்வைக் கண்டு மகதியின் கண்களும் ஈரமானது
.
 
Joined
Feb 6, 2025
Messages
20
"அருண்... என் செல்லமே..." என்ற வர்மன் அவனை ஆறுதலாகக் கட்டி அணைக்க,
"அப்பா...எனக்கேன் அப்பா கண்ணு தெரியல? அப்போ இனிமே நான் உங்களைப் பார்க்க முடியாதா?
அப்போ நான் என் அம்மாவையும் இனி பார்க்கவே முடியாதா?" என்ற குழந்தையின் ஏக்கத்தை அறிந்திருந்த வர்மனுக்கு அந்த நிலையிலும் அருணுக்கு தாய் பாசம் கிடைக்கவில்லை என்ற குமுறல்
அவன் மனதிலும் இருக்கத்தான்
செய்தது.

"இங்க பாரு அருண்... நீ கீழ விழுந்ததுல உன் தலையில அடிபட்டு இருக்கு. அதனால தான் உனக்கு ஆபரேஷன் பண்ணிக் கட்டுக் கட்டி இருக்காங்க. இன்னும் ரெண்டே மாசத்துல உனக்குப் பார்வை திரும்பக் கிடைச்சிடும். ஆனா நீ இப்படி கத்தி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணா உனக்குத் தான் பிரச்சனை. அப்பா சொன்னா கேட்ப்ப தானே! அழாதடா தங்கம்" என்ற வர்மன் குழந்தைக்கு ஆறுதல் சொன்னவனின் வார்த்தைகள் எதுவுமே அருணின் காதில் விழாமல் போனது.

"இல்ல! இனிமே எனக்குக் கண்ணு தெரியாது. நான் என் அம்மாவைப் பார்க்கவே முடியாது. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்ற மாதிரி எனக்கு அம்மான்னு ஒருத்தவுங்க இல்லவே இல்ல. நான் அம்மா இல்லாத புள்ள தான். நீங்க என்னைக் குப்பை தொட்டில இருந்துதான் தூக்கி வளர்க்கிறீங்க. என்னை மறுபடியும் நீங்கக் குப்பைத்தொட்டியிலேயே போட்டுருங்க" என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி, தன் மனதில் உள்ள தாய் ஏக்கத்தை வெளிப்படுத்தும் அருணை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அனைவருமே குழம்பித்தான் இருந்தார்கள்.

"என் செல்லமே அருண்... தாத்தா உன் பக்கத்துல தான் இருக்கேன். அழாதடா தங்கம். நானும் அப்பாவும் இருக்கோம். உன்னை நாங்க பத்திரமாகப் பார்த்துப்போம். சீக்கிரமா உனக்கு ஆபரேஷன் முடிந்து மறுபடியும் உனக்குப் பார்வை கிடைக்கும். என் செல்லம் அழாதடா" என்று ராஜனும் தன் பேரனை அன்பாகக் கட்டி அணைத்தார்.

"வேண்டாம்... நீங்க யாருமே எனக்கு வேண்டாம். எனக்கு அம்மா தான் வேணும். நான் இனி என் அம்மாவ பாக்கவே முடியாது"என்று மேலும் கதறி அழுதான் குழந்தை அருண்.

குழந்தையின் தவிப்பையும் வர்மனின் அழுகையையும் கண்டு மகதியும் உள்ளுக்குள் கலங்கி தான் போனாள்.

அருணின் அழுகையை பார்த்த மருத்துவர், "என்ன நீங்க? நான் தான் சொன்னேனே குழந்தையை எமோஷனல் ஆகாமல் பார்த்துக்கோங்கன்னு. குழந்தை தலையில இருக்குற தையல் பிரிஞ்சதுனா அப்புறம் ரொம்ப கஷ்டமா ஆகிடும்" என்று கோவபட்டார்.

"அருண்...உன் மாயன் மாமா சொன்னால் நீ கேப்ப தானே. இப்போ நீ அமைதியா அழாம இருந்தினா நான் உன்னோட அம்மாவ இங்கேயே அழைச்சுக்கிட்டு வருவேன்" என்று மாயன் சொல்ல,

"என்ன சொல்றீங்க? என்ன என் அம்மாவை இங்க அழைச்சிட்டு வரீங்களா?" என்ற அருணின் கண்களில் கட்டு போடப் பட்டு இருந்தாலும், அவன் தாய் மீது கொண்ட ஏக்கத்தை அவன் உடல் மொழியால் அங்குள்ள அனைவரும் அறிந்து கொண்டார்கள்.

"ஆமா அருண்... கண்டிப்பா நான் உன் அம்மாவை இங்க அழைச்சிட்டு வரேன். ஆனா அதுக்கு முன்னாடி மாமா சொல்றத நீ கேக்கணும்" என்று மாயன் சொல்ல,

"மாமா... நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். எனக்கு என் அம்மாவை மட்டும் அழைச்சிட்டு வாங்க" என்று மழலை குரலில் அருண் அமைதியாகப் பேசினான்.

"சூப்பர் சார்... குழந்தையை இதே மனநிலையில வச்சிக்கோங்க. அப்போ தான் குழந்தை சீக்கிரமா குணமாகுவான்" என்ற மருத்துவர் சிகிச்சை அறையிலிருந்து வெளியேறினார்.

அருணுக்கு மொட்டை அடித்துத்,தலையில் அறுவை சிகிச்சை செய்து இருக்க, அன்றைய தினம் இரவுவரை அன்னம் தண்ணி இல்லாமல் அனைவருமே அருணின் அருகிலேயே இருந்தார்கள்.

"சார்... இத்தனை பேர் இங்க இருக்கக் கூடாது. நைட்டுக்குள்ள பையனுக்குத் தனி ரூம் கொடுப்பாங்க. அங்க யாராவது ரெண்டு பேர் பையன் கூடத் தங்கிக்கலாம். இப்போ நீங்க எல்லாம் வெளிய போங்க" என்று செவிலியர் சொன்னதும், "அப்பா என்னை விட்டு எங்கேயும் போகாதீங்க" என்ற சிறுவன் வர்மனின் கழுத்தை கட்டிக்கொண்டு அழத் தொடங்கினான்.

"அருண்... உன் கையில ட்ரிப்ஸ் போயிக்கிட்டு இருக்கு. இப்போ நீ அமைதியா டாக்டர் சொல்ற மாதிரி நடந்துக்கோ. அப்போ தான் நானும் உன் அப்பாவும் போய் உன் அம்மாவை இங்க அழைச்சிட்டு வருவோம்" என்ற மாயன் குழந்தையைச் சமாதானம் செய்வதற்காகப் பொய்க்கு மேல் பொய்யாக அடுக்கிக்கொண்டே போனான்.

"மாமா... என்னைப் பார்க்க அம்மா வருவாங்கானா கண்டிப்பா நான் அமைதியா இருக்கேன்"என்ற சிறுவனின் தலையை அன்பாக வருடிக்கொடுத்தான் வர்மன்.

"நீ அமைதியா இருந்தால் மட்டும் போதாது அருண்! நீ சமத்தா கொஞ்ச நேரம் தூங்கணும். அப்போ தான் நாங்க போய் உன் அம்மாவை இங்க அழைச்சிட்டு வருவோம்" என்று மாயன் சொன்னதும்,

"சரி சரி நான் தூங்குறேன். ஆனா நான் தூங்கி எழுந்ததும் என்னை அம்மாகிட்ட அழைச்சிட்டு போங்க" என்ற சிறுவன் அப்படியே படுத்து உறங்குவதை போலப் பாசாங்கு செய்தான்.

"வர்மா...அருண் தூங்கட்டும். நீ வா நம்ம வெளியே இருப்போம்" என்று மாயன் சொன்னதும், சிகிச்சை அறையிலிருந்து நேரே இவர்கள் மருதுவரை பார்க்க சென்றார்கள்.

"டாக்டர் என் பையனுக்கு எப்ப பார்வை கிடைக்கும்" என்ற வர்மனின் பதற்றத்தை பார்த்து மருத்துவர் அருணின் மருத்துவ அறிக்கையை காண்பித்தார்.

“அருணுக்குக் கண்களில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அவன் தவறி விழுந்ததால, மூளையின் பார்வை பகுதி,அதாவது விசுவல் கோர்டெக்ஸ் பாதிக்கப்பட்டிருக்கு. இதை மருத்துவத்துல கோர்ட்டிகல் விசுவல் இம்பர்மென்ட் (CVI) அப்படின்னு சொல்வாங்க.”என்றார் மருத்துவர்.

“திரும்ப பார்வை கிடைக்க எவ்வளவு நாள் ஆகும் டாக்டர்?” என்ற வர்மனின் கண்கள் கண்ணீரால் ஈரமானது.

“சராசரியா மூன்று மாதங்களாகும். அந்த மூன்று மாதமும் அருணுக்கு நேரம் தவறாமல் ட்ராப்ஸ், மருந்துன்னு சரியா கொடுக்கணும். அதே மாதிரி பிசியோதெரபி, விசுவல் தெரபி எல்லாம் செய்யணும். இதெல்லாம் சரியாக பண்ணாலே அருணுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும்" என்ற மருத்துவரின் வார்த்தையை நம்புவதை தவிர இவர்களுக்கும் வேறு வழியில்லாமல் போனது.

"சார்... ஆனா உங்க பையன் இமோஷனல் ஆகாம பார்த்துக்கொங்க. அது தான் ரொம்ப முக்கியம்" என்று முக்கிய குறிப்பாக மருத்துவர் சொன்னதும், "நான் பார்த்துக்குறேன் டாக்டர்" என்று மாயன் நம்பிக்கையாக சொன்னவன் மருத்துவரின் அறையிலிருந்து அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

நேரம் இரவு ஒன்பது மணியைக் கடந்து இருந்தது.
அருணின் பள்ளி நிர்வாகி அம்பிகாவை பார்த்து, "மேடம்... நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க" என்று சொன்னான் வர்மன்.

"சாரி சார்...அருணோட இந்த நிலைமைக்கு எங்க கவனக்குறைவும் காரணம் தான். ஆனாலும் அருண் கொஞ்ச நாளாகவே அவன் அம்மாவைப் பற்றிய எண்ணத்திலேயே இருக்குறான். உங்க மனைவிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியாது.
உங்களுக்கு வேணும்னா உங்க மனைவி வேண்டாத ஆளாக இருக்கலாம். ஆனா பாவம் அருண், அவனுக்கு அவன் அம்மா வேணும்னு ஆசைப்படுறான். ப்ளீஸ் அவனுக்காக அவன் அம்மாவை அவனுக்குத் திருப்பிக் கொடுத்துடுங்க" என்ற அம்பிகா மருத்துவ மனையிலிருந்து வெளியேறினார்.

"மாயா... நீ அப்பாவை வீட்டுல விட்டுட்டு மகதியை உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போ" என்ற வர்மன் சோர்வாக இருக்கையில் அமர்ந்ததும், "வர்மா... நான் இங்கேயே இருக்கேன். வீட்டுக்குப் போய்த் தனியா நான் என்ன பண்ண போறேன்" என்று கேட்டார் ராஜன்.

"சார்...வர்மா சொன்னது போல நீங்க வீட்டுக்குப் போய் மாத்திரை போட்டு ரெஸ்ட் எடுங்க. நான் உங்களையும் மகதியையும் வீட்டுல விட்டுட்டு வர்மனுக்கு சாப்பாடு எடுத்திகிட்டு மறுபடியும் ஹாஸ்பிடல்க்கு வரேன்" என்று மாயன் சொல்ல,
"வர்மா... பிள்ளையைப் பார்த்துக்கோ. நான் காலையில வந்துடுறேன்" என்ற ராஜன் மாயனுடம் தன் வீட்டுக்குக் கிளம்பினார்.

"மகதி...போகலாமா?" என்று மாயன் அழைக்க, தன் அண்ணனுடன் நடந்து சென்ற மகதி போன வேகத்தில் மீண்டும் திரும்பியவள் நேராக வர்மனின் முன்னே வந்து நின்றவளை கேள்வியாகப் பார்த்த வர்மன், "என்ன மகதி?" என்று
கேட்டான்.

"என்னைத் தான் ஏமாத்திட்டு வேற பொண்ணை கல்யாணம் பண்ணி ஒரு பிள்ளையைப் பெத்துகிட்டீங்க! ஆனா இப்போ அந்தப் பொண்ணோடவும் சேர்ந்து வாழாமல், உங்க மகனுக்கு அவன் அம்மா பாசமே கிடைக்காத படி தாயையும் பிள்ளையையும் பிரித்து வைத்து இப்படி எல்லாரையும் வேதனைப் படுத்துறீங்களே!அப்படி உங்களுக்கு என்னதான் பிரச்சனை வர்மா?" என்ற மகதியின் கேள்விக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் வர்மன் குழப்பத்துடன் மகதியை பார்த்தான்.
 
New member
Joined
May 2, 2025
Messages
11
அருண் பாவம், சீக்கிரம் அவனுக்கு மஹதி தாயாக மாறனும். கதை சூப்பரா இருக்குது. ஆனா சீக்கிரமா அப்டேட் பண்ணுங்க ஏன் லேட் ஆகுது sisy
 

sam

New member
Joined
May 5, 2025
Messages
11
என்னப்பா இது பட்டுனு முடிச்சிட்டீங்க. கதை நகர்வு அருமை.👌👌👌
 
New member
Joined
Feb 8, 2025
Messages
16
Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe Superbe
 
New member
Joined
Feb 8, 2025
Messages
13
சீக்கிரமா பிள்ளைக்கு அம்மாவை அழைத்து வாங்க பாவம் சின்ன பிள்ளை
 
New member
Joined
Mar 12, 2025
Messages
9
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top