• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Feb 16, 2025
Messages
10
உன் விழியோடு நானாகிறேன் -1


அழகான நாட்கள் உங்களை தேடி வருவதில்லை நீங்கள் தான் அவற்றை நோக்கி நகர வேண்டும் என்ற அழகிய வார்த்தைகளோடு அன்றைக்கான வானொலி நிகழ்ச்சியில் நேரலையை கேட்டுக் கொண்டே தன் அன்றாட வேலைகளை முடித்து அலுவலகத்துச் செல்வதற்காக வாசலில் வந்தவளை ஒருநொடி கைப்பேசியின் அழைப்பு நிறுத்தியது.

கைப்பேசியை எடுத்து தொடுதிரையில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் முகத்தில் தோன்றிய சிறு புன்னகை உதட்டோரமாய் முற்றுப் பெறவும் அழைப்பினை எடுத்தவள் “ஹலோ சிந்தியா எப்படி இருக்கே?”

மறுமுனையில் சிரித்தப்படி “ம்ம்… நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்கே?”

“நல்லா இருக்கேன்”

“முக்கியமான விஷயம் கேட்கனும் நான் கேட்கிற இந்த உதவிக்கு முடியாதுன்னு சொல்லக் கூடாது”

அவளோ சிரித்துக் கொண்டே “முதல்ல என்னன்னு சொல்லு அப்புறம் முடியுமா? முடியாதான்னு பார்க்கலாம்” என்றாள் அசட்டையாக…

சிந்தியா “கல்யாணப் பொண்ணோட விருப்பம் நிறைவேறாதா?” என்று கேள்வியாக கேட்கவும் அவள் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒருசேர “என்னச் சொல்றே சிந்தியா? உண்மையாகவே உனக்கு கல்யாணமா?” ஆனந்தமாய் கேட்டாள்.

அவளோ வெட்கமாக “இன்னும் பத்து நாளுல கல்யாணம் நீ தான் மணப்பெண் தோழியா இருந்து என்கூட இருந்து என்னை என்னவரோடு சேர்ந்து வைக்கனும்” என்ற போது பெருமூச்சை ஒன்றை விட்டாள் சிந்தியா.

அதைக் கேட்டதும் உற்சாகம் முழுமையும் வற்றிப் போனவளாக இவளோ “சிந்தியா உனக்கு கல்யாணம்னு சொன்ன பாரு அப்போவே எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால்…” என்று இழுக்கவும்,

சிந்தியா “இந்த ஆனா ஆவன்னா என்ற பேச்செல்லாம் தேவையில்லை” என்றாள் கண்டிப்பாய்.

இவளோ “சிந்தியா உன் கல்யாணத்துக்கு வந்து ரெண்டுநாள் நான் இருந்துட்டு போகிறேன் ஆனால் கல்யாணப் பெண்ணோட தோழியாக வருவதற்கு எனக்கு தகுதியில்லை” என்றாள் கவலையோடு…

தன் தோழி சொன்னதைக் கேட்டு கோபமடைந்த சிந்தியா “ஆதிரா என் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு உன்னை விட அதிகமாக எனக்காக யாருமே நினைக்கலை அந்த இடத்துல எப்பவும் நீ தான் இருக்கே இப்போ இந்த கல்யாணம் பண்ற தைரியமே நீ கொடுத்தது தான் எல்லாம் இழந்து நின்றபோது நீ மட்டும் தான் எனக்கு துணையா இருந்தே ஆதிரா அதனால உன்னைத் தவிர வேற யாரும் எனக்கு மணப்பெண் தோழியாக இருக்க முடியாது அதனால சாக்குபோக்கு சொல்றதை விட்டுட்டு ஒழுங்கா கல்யாணத்துக்கு வர்ற வழியைப் பாரு நீ வந்த பிறகு தான் எல்லாம் செலக்ட் பண்ணனும் நினைவிருக்கட்டும் ஒழுங்கா இன்னும் ஒருவாரத்துல கேரளா வந்து சேருல வழியைப் பாரு” என்று முடித்தாள் சிந்தியா.

அவள் பேசியதை விட கடைசியாக சொன்ன இடத்தைக் கேட்டு அதிர்ச்சியான ஆதிரா “ஹேய் என்ன கேரளாவுலயா கல்யாணம்?”

“ஆமாம் என் புருஷன் பேமிலி அங்கேத் தான் இருக்காங்க அதனால எல்லாம் மலையாளி முறையில் தான் டிக்கெட் புக் பண்ணிட்டேன் வந்து சேரும் வழியைப் பாரு முக்கியமான விஷயம் உன்னை மணப்பெண் தோழியாக வரச் சொல்லி இருக்கேன் நினைவிருக்கட்டும் ஏனோ தானோன்னு வந்துடாதே!” என்றாள்.

ஆதிரை கோபமாக “என்னால வர முடியாது”

சிந்தியா சிரித்துக் கொண்டே “என்ன கோவிச்சுகிட்டியா?”

அவளோ “ஆமாம்” என்றதும் சிந்தியா “நல்லா கோவிச்சுக்கோ அப்போத் தான் ஒழுங்கா வருவே இன்னும் ஒருவாரம் தான் ஆபிஸ்ல சொல்லி லீவுக்கு சொல்லிடு” என்றாள்.

ஆதிரை “நான் சொல்றநை எதையும் கேட்கக் கூடாதுன்னு முடிவு செய்து இருக்கியா சிந்தியா?”

“ஆமாம் இந்த முறை மட்டும் அம்மாக்கு மற்ற ப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் வாட்ஸ்அப்ல மேரேஜ் இன்வடேஷன் அனுப்பி விடுறேன் எல்லோரையும் அழைச்சிட்டு வந்திடு மறக்காமல் வியன்காவை கூடிட்டு வா” என்றாள்.

“வியன்கா,அப்பா,அம்மா எல்லோரும் ஊருக்கு போயிருக்காங்க சித்தி பொண்ணுக்கு கல்யாணம் அதோட திருவிழாவும் இருக்கு நான் வர மாட்டேன்னு சொல்லிட்டேன் எல்லோரும் ஒரு இருபது நாள் அங்கேத் தான் இருப்பாங்க அம்மாவைப் பத்தித் தான் தெரியுமே ஊருக்கு போனா சட்டுன்னு வர மாட்டாங்க” என்றாள்.

சிந்தியா “ம்ம்… புரியுது அப்போ எந்த தொந்தரவும் இல்லாமல் கிளம்பி வர்ற வழியைப் பாரு வீட்ல காரணம் சொல்றதுக்கு உனக்கு சொல்லித் தரனும்னு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்” என்றாள் சிரித்துக் கொண்டே.

ஆதிரை “ஹேய் நானும் எதுவும் சொல்ல வேண்டாம்னு அமைதியா இருக்கேன் என்ன எப்போ பார்த்தாலும் நான் தான் உன்னை வழி கெடுக்கிற மாதிரி பேசுறே நேர்ல வந்து உன் புருஷன்கிட்ட நீ காலேஜ்ல பண்ண கலாட்டாவை எல்லாம் சொல்லி உன்னை மாட்ட வைக்கல்ல அப்புறம் இருக்கு என்கிட்ட வந்து மீ பாவம் விட்டுடுன்னு கெஞ்சப் போறே”என்றாள் சிரித்துக் கொண்டே.

சிந்தியா “ஷ்ப்பா… வரேன்னு ஒரு வார்த்தை உன் வாயில வர வைக்கிறதுக்குள்ளே என்னாலாம் பேச வேண்டி இருக்கு சீக்கிரமா வா ஆதிரா உன்னை ஞான் மிஸ் செய்யு சந்திச்சு எத்தனை வருஷமாச்சு” என்ற போது அவளின் கவலையை அறிந்துக் கொண்டாலும் “உன் புருஷர் மலையாளின்னு அடிக்கடி நினைவுப்படுத்து” என்று பேசி முடித்திருந்தனர்.

முகம் முழுக்க புன்னகையோடு அலுவலகத்திற்கு தன் இருசக்கர வாகனத்திற்கு சென்றாள் ஆதிரா.தன் பள்ளி முதல் கல்லூரித் தோழியான சிந்தியாவுடன் பேசியதில் ஏதோ இந்த நிஜ உலகத்தை விட்டு தங்களுக்கான உலகில் சஞ்சரித்ததில் பேரானந்தம்.

முக்கியமான சில நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை பார்க்கும் கணக்காளர் பதவியில் உதவி மேலாளராக பணிபுரிகிறாள் ஆதிரை.அவளுடைய கண்காணிப்பில் கீழ் சில முக்கிய நிறுவனங்களும் நாலைந்து கணக்கீட்டார்களும் இருக்கிறார்கள்.

என்றைக்கும் இல்லாமல் இன்று சிரித்த முகத்தோடு வரும் தங்களின் உதவி மேலாளரைப் பார்க்க எல்லோருக்கும் ஆச்சரியம் தான்.எப்போதும் கண்டிப்பும் கோபமும் ஆளைத் துளைக்கும் பார்வையோடு இருப்பவளை சாந்தமாக பார்ப்பது அரிது.

அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் இதைப் பற்றி தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.அதை எல்லாம் கவனிக்காது தன் வேலையில் கவனமாக இருந்தாள் ஆதிரா.

இதற்கிடையில் சிந்தியா தன் கல்யாண பத்திரிக்கையை கைப்பேசியில் அனுப்பி வைத்திருந்தாள். அதைப் பார்த்தவளுக்கு இன்னும் ஆனந்தமாக இருந்தது.தன் ஆருயிர் தோழி புன்னகை முகமாக காண்பதற்கு அழகு தேவதையாக மிளிர்ந்தவளை இன்னும் ஒருமுறை விழிகளில் நிரப்பிக் கொண்டாள் ஆதிரா.

இதற்கு மேலும் தாமதிக்காமல் தன் மேலாளரிடம் சென்று தனக்கு அடுத்த வாரத்திலிருந்து பத்து நாட்கள் விடுமுறை வேண்டுமென்று கேட்கச் சென்றாள்.அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் சரியென்று ஒத்துக் கொண்டார்.அவ்வளவாக விடுமுறை ஆதிரை எடுத்துக் கொள்ளாததால் அவளுக்கு விடுமுறைக் கொடுக்க ஒத்துக் கொண்டார்.

வேலை முடியும் தருவாயினில் ஆதிரையின் அம்மா கைப்பேசியில் அழைத்தார்.அழைப்பை எடுத்தவள் “ஹலோ அம்மா”

“சிந்தியாவுக்கு கல்யாணமாமே போன் போட்டு பேசுனா”

“ம்ம்… எனக்கு முதலிலேயே சொல்லிட்டா”

“அப்படியா! ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆதிரை இப்போதாவது அவளுடைய வாழ்க்கையை அவள் வாழட்டும் என்ற கடவுளிடம் பிராத்தனை அதிகமாக இருக்கு நீ போறத் தானே” என்றதும் அவளிடம் பதிலில்லை.
 
New member
Joined
Feb 16, 2025
Messages
10
அவரே பேச்சை தொடர்ந்தார் “ஆதிரை நீ கல்யாணத்துக்கு போய்ட்டு வா”

“அம்மா வியன்காவை நான் என் கூட அழைச்சிட்டு போகட்டுமா?”

உடனே “வேண்டாம் ஆதிரை நீ தனியா போய்ட்டு வா உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் தனிமை இப்போ வேணும்னு நினைக்கிறேன் உனக்கான நேரத்தை நீ எடுத்துக்கோம்மா எப்பவும் ஓடிட்டே இருக்கே சில நாட்கள் நிம்மதியா நல்லா தூங்கி பரபரப்பு இல்லாமல் வேலை பிரஷர் பற்றியும் கவலைப்படாமல் போய்ட்டு வா அப்பாவும் அதான் சொன்னாங்க வியன்காவும் சரின்னு சொல்லிட்டா கடைக்கு போய் புதுசா உனக்கு பிடிச்ச மாதிரி நல்ல டிரெஸ்ஸா புதுசா எடுத்துட்டு போய் கல்யாணத்துல போட்டு எங்களுக்காக போட்டோ எடுத்து அனுப்பு சரியா” என்றார்.

எல்லாவற்றையும் கேட்டு ஆதிராவால் நம்ப முடியவில்லை.இன்றைக்கான நாளே என்னவோ அவளுக்கானதாக போல் இருந்தது.சில வருடங்களுக்கு பிறகு அவளுக்கான நாட்களை கழித்துக் கொள்ள கிடைத்திருக்கிறது.இன்னும் கொஞ்சம் மனதில் ஆர்வமும் ஆனந்தமும் தொற்றிக் கொண்டது.

வேலையை முடித்து கட்டிலில் வந்து சரிந்தவளுக்கு அன்றைய இரவுக்கான வானொலியில் நேரலை நிகழ்ச்சியில் எப்பவும் கேட்கும் குரலின் இனிமையை கேட்பதற்காக ஆவலோடு படுத்திருந்தாள்.வாரத்தின் ஐந்து நாட்கள் சில நேரங்களில் இரண்டு நாட்கள் மட்டும் இருக்கும்.அவள் கேட்கும் அந்தக் கணீர் குரலின் சொந்தக்காரனை இதுவரை அவள் பார்த்தது இல்லை.ஆனால் அவனின் குரலை கேட்கப் பிடிக்கும்.

அவன் சென்று வந்த இடங்களைப் பற்றிச் சொல்லி அதோடு ஒரு நிகழ்வையும் பேசும் ஏதோ நேரில் போய் பார்த்த உணர்வு.இடையினில் அந்தக் காலம் முதல் இப்போதைய பாடலும் என்று எல்லாம் கலந்தே இருக்கும்.முடிக்கும் போது உங்களின் ருத்ரா என்பதோடு நிகழ்ச்சி நிறைவு பெறும்.என்னத் தான் ஆயிரம் நிகழ்ச்சிகள் இன்றைய இணையங்களில் சுற்றித் திரிந்தாலும் வேலைகள் ஒருபுறம் செய்துக் கொண்டே இந்த வானொலியில் கேட்பது ஆதிராவிற்கு பிடித்த ஒன்று.

விடுமுறைக்கு சொல்லி விட்டதால் அவளுக்கு உடையும் சிந்தியாவிற்கு பரிசுப் பொருளும் வாங்க வேண்டும் என்று கடைத் தெருவிற்குச் சென்றாள்.எப்பவும் எடுக்கும் புடவையை எடுக்காமல் இம்முறை கொஞ்சம் மாற்றமாக அழகான நீண்ட மேக்ஸி உடையை நாலைந்து எடுத்துக் கொண்டாள்.வியன்கா அடிக்கடி இந்த உடையை எடுக்குமாறு சொல்லுவாள்.ஆனால் இவளுக்குத் தான் வேண்டாம் என்று விட்டு விடுவாள்.இம்முறை நினைவாக எடுத்து உடுத்தி வியன்காவிடம் காட்ட வேண்டும் என்ற நினைவோடு எடுத்தாள்.

எப்போதும் உடுத்தும் புடவைகளுக்கு சிலநாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தாலும் திருமணத்திற்கு அன்று அழகான பட்டுப்புடவையும் இருந்ததை வைத்துக் கொண்டாள்.

சிந்தியாவிற்கு அழகான கம்மல் ஒன்று தங்கத்தில் எடுத்துக் கொண்டாள்.சிந்தியாவிற்கு காதில் தோடு அணிவது என்றால் அவ்வளவு விருப்பம் அதனால் நினைவாக எடுத்துக் கொண்டாள்.

சிந்தியாவிடம் மறுநாள் கைப்பேசியில் பேசினாள் ஆதிரை.“ஹலோ ஆதி”

“ம்ம்… சொல்லு”

“லீவு கேட்டாச்சா?”

“ம்ம்… ஓகே சொல்லிட்டாங்க”

சிரித்துக் கொண்டே “பரவாயில்லை பதில் ஒழுங்கா சொல்லலையே என்னக் கோபம்?”

“என்னப் பத்தி மட்டும் எல்லாம் கேட்கிறே? உன்னவரை பற்றி மட்டும் வாயே திறக்க மாட்டேங்கிறே?” சிறுகோபமாகக் கேட்டாள் ஆதிரா.

அப்போதும் சிந்தியாவிடம் இருந்து சிரிப்புத் தான் பதிலாக வந்தது.அந்த பதிலைக் கேட்டவளோ “உன்னோட சிரிப்பே எனக்கு நிறைவான பதிலைத் தருது சிந்தியா உன்னை இப்படி பார்க்கனும் தான் நான் ரொம்ப ஆசைப்பட்டேன் நேரில் வந்து உன்னோட அவரைப் பார்த்துக்கிறேன் அதுக்கு முன்னாடி எங்கே சந்திச்சேனாவது சொல்லு”

“ம்ம்… கண்டிப்பா சொல்றேன்”

“குடும்பத்தோட சுற்றிப் பார்க்க போகலாம்னு கேரளாவில் மூணாறு போய் இருந்தோம் அங்கேத் தான் முதல்ல சந்தித்தோம்” என்றதும்

உடனே ஆதிரா “ஊர் சுற்றிப் பார்க்க போகச் சொன்னா ஆளைப் பிடிச்சு இருக்கே இது சரியில்லை” என்றாள் சிரித்துக் கொண்டே…

“ப்ச் அப்போ ஒரு நார்மலான சந்திப்பு தான் மதன் தன்னோட தம்பியை தமிழ்நாட்டில் உள்ள காலேஜ்ல சேர்க்கனும்னு சொன்னாங்க அப்போத் தான் அப்பா காலேஜ்ல ப்ரோபோசரா இருக்கிறதுனால நிறைய ஐடியா கொடுக்கவும் அப்பாகிட்ட போன் நம்பர் வாங்கி பேச ஆரம்பிச்சு அப்புறம் அப்பா வேலை செய்ற காலேஜ்ல சேர்த்து அப்படியே பழகி இதோ இப்போ கல்யாணத்துல வந்து முடிஞ்சிடுச்சு” என்றாள் சிரித்துக் கொண்டே…

ஆதிரா “அண்ணனுக்கு பொண்ணு கிடைச்சிடுச்சு ஆனால் தம்பியோட படிப்பு என்னாச்சு?”

சிந்தியா புன்னகையோடு “தம்பி படிப்பு முடிஞ்சு இப்போ மேற்படிப்புக்காக பெங்களூர்ல இருக்காங்க” என்றாள்.

“அப்போச் சரிதான்” என்ற போது சிந்தியா “ஆதிரா ஏற்கனவே நடந்த தப்பு இன்னொரு முறை நடக்கக் கூடாதுன்னு அப்பா ரொம்ப கவனமாகத் தான் இம்முறை யோசிச்சுத் தான் இந்தக் கல்யாணமே நடக்குது ஆதிரா அம்மா முகத்துல இப்போத் தான் சிரிப்பே வருது.என்னோட முதல் வாழ்க்கை நரகமா போனதுனால அப்பாவும் அம்மாவும் ரொம்பவே உடைஞ்சுட்டாங்க உனக்குத் தெரியாதது இல்லை மதனுக்கும் என்னுடைய முன்னாள் வாழ்க்கையைப் பற்றி தெரியும் அதை முழுக்கத் தெரிந்த பிறகு தான் இந்தக் கல்யாணமே நடக்குது”

ஆதிரா “நான் இந்தக் கேள்வி கேட்கிறேன்னு என்னை எதுவும் நினைக்க மாட்டேல்ல”

“ம்ம்… தெரியும் அவருக்கு இது முதல் திருமணம் தானேன்னு இல்லை அவருக்கும் இது ரெண்டாவது திருமணம் தான்” என்றாள்.

ஆதிரா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.சிந்தியா “ஏன் அமைதியாகிட்டே?”

“என்னச் சொல்றதுன்னு தெரியலை சிந்தியா எனக்கு கவலையா இருக்கு” என்றாள் ஆதிரா.

சிந்தியா சிரித்துக் கொண்டே “அவரோட முதல் வாழ்க்கை நல்லா இல்லைன்னு தானே அதை முடிச்சிட்டாங்க திரும்பவும் அதே போல இன்னொரு வாழ்க்கையில் எப்படி நம்ப முடியும்னு? நீ நினைக்காதே ஆதிரா ரெண்டுபக்கமும் ரெண்டு விதமான மனிதர்கள் இருக்கிறாங்க அதனால நமக்கானவங்க யாருன்னு உணர முடியும்” என்றாள்.

ஆதிராவிடம் பதிலில்லை.அவளிடம் நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்தை நம்ப வைப்பது அத்தனை எளிதான விஷயமாக இருக்காது.

சிந்தியா “இந்த காரணங்களுக்காக கல்யாணத்துக்கு வராமல் இருப்பியா?” யோசனையாகக் கேட்டாள்.

“இல்லை இல்லை உன்னோட விருப்பம் தான் எனக்கு முக்கியம் சிந்தியா திருமணமே வேண்டாம்னு இருந்த உனக்கு ஒரு நம்பிக்கையோடு சந்தோஷமா கல்யாணம் பண்ணப் போற அதுவே பெரிய விஷயம் அதனால நான் கண்டிப்பா வரேன் எது எப்படியோ நான் நேர்ல வந்து உன்னோடவங்க எப்படின்னு பார்க்கிறேன்” என்றாள்.அதைக் கேட்ட சிந்தியா “சரி பாரு” என்று சொல்லி சிரித்தாள்.

நாட்கள் அழகாய் நகர ஆரம்பித்தது.தினமும் சிந்தியா கைப்பேசியில் அழைத்து நிறைய பேசினாள்.சரியாக அவள் தன் வாழ்க்கையை தொலைத்ததில் இருந்து ஆதிராவிடம் சரியாக பேசாமல் இருந்தவள் இப்போது தான் எப்போதும் போல் நன்றாக பேசினாள்.
 
Top