• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
23

“ஏன் டைவர்ஸ்கு ஒத்துக்க முடியாது சித்தார்த்? இது கட்டாயக் கல்யாணம். கேஸ் போட்டு நிரூபிச்சா மியூச்சுவல் இல்லாமலே விவாகரத்து கிடச்சிரும். ஆனா, எனக்கு ஒரு சந்தேகம்?” என்றதும் அனைவரும் அவனைக் காண, “ஒரே ஊர்க்காரங்களா சொந்தமா இருந்தும், எப்படி வெண்மதிக்கும்,, நட்சத்திராவிற்கும் அடையாளம் தெரியல? தாலி கட்டும்போது பக்கத்துல பார்த்தப்ப கூடவா தெரியல?”

‘விதி என்ன பண்றது’ என மனதினுள் நினைத்து, “இல்ல லாயர் சார் பார்த்ததில்லை. இன்னைக்குதான் நேர்ல பார்க்கிறேன். ஏன் நட்சத்திராவையுமே சின்ன வயசுல பார்த்ததுதான். இவ்வளவு பக்கத்துல பார்த்ததில்லை. அதனால ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான் தெரிஞ்சாங்க.”

“அப்புறம் எப்படி நட்சத்திராவைத் துரத்துனீங்க?”

“அ...அது ஒரு சந்தேகத்துலதான் பார்த்தேன். அவளின் பயமும் ஓட்டமும்தான் நட்சத்திரான்னு தோணிச்சி. என்னை அடையாளம் கண்டு ஓடுறாள்னு துரத்தினேன்” என்றான் சித்தார்த்.

‘நானாதான் போய் சிக்கினேனா’ என்று நட்சத்திரா விழிவிரிக்க, “நீ ரொம்ம்ம்ப நல்லவள் நட்டுமா” என கேலி செய்தாள் மின்னல்.

“நீங்க சித்தார்த்தைப் பார்த்திருக்கீங்களா வெண்மதி?”

“ம்... எதிரியைத் தெரிஞ்சி வச்சிருக்கணுமே. நேர்ல போய் திட்டுறதுக்கு பலமுறை நினைச்சி, பக்கத்துல போனதும் யோசனையைக் கைவிட்டிருக்கேன். ஆனா, இப்படி ஒரு சந்திப்பு, ப்ச்... சத்தியமா எதிர்பார்க்கலை” என்று கழுத்திலிருந்த தாலியைப் பார்த்தபடி கலங்கிய குரலில் சொன்னாள்.

“முடிவா நீங்க இரண்டு பேரும் என்னதான் பண்ணலாம்னு இருக்கீங்க? யோசிக்க டைம் வேணும்னாலும் எடுத்துக்கோங்க. நாங்க வெய்ட் பண்றோம்” என்றான் அரிச்சந்திரன்.

“டைம்லாம் வேண்டாம். எனக்கு அவள் வேணும்” என்று சித்தார்த்தும், “எனக்கு அவன் வேண்டாம்” என்று வெண்மதியும் ஒரே நேரத்தில் சொல்லி ஒருவரை ஒருவர் பார்க்க, அவள் கண்களில் கனலும், அவன் கண்களில் அன்பும், ‘என்னை மன்னிக்க மாட்டாயா’ என்ற கேள்விப் பார்வையுமே இருந்தது.

“நீங்க சொல்லுங்க ஆன்ட்டி?” என்று வெண்ணிலாவின் தாய் திலகவதியிடம் கேட்டான்.

தாய் என்ன சொல்வார் என்று உணர்ந்த பிள்ளைகளோ. “அம்மாகிட்ட ஏன் கேட்குறீங்க? நாங்கதான் வேண்டாம்னு சொல்றோம்ல. ஒரே ஆப்ஷன், அதுவும் டைவர்ஸ் மட்டுமே!”

“ரைட்! அப்ப கேஸ் பைல் பண்ணிரலாம்” என்றான்.

“அப்ப நான் சித்தார்த்துக்கு ஆதரவா வாதாடுவேன்” என்று சொன்ன தங்கையைப் பார்த்து, “உனக்கு என்ன அனுபவம் இருக்குன்னு கேஸ்ல ஆஜராகப்போற?” என்றான்.

“ரெண்டு பெரிய தலைங்ககிட்ட ஜுனியரா இருந்த அனுபவம் இருக்கு. இது போதாதா வாதாட? ஏன்ணா உனக்குத் தெரியாது? சான்ஸ் கிடைத்தால்தான் என்னுடைய முழுத்திறமையையும் நிரூபிக்க முடியும். இதை எனக்கான படிக்கட்டா எடுத்துக்குறேன்” என்றவள் சித்தார்த்திடம் திரும்பி, “என்ன ப்ரோ, உங்களைக் கேட்காமலே கமிட்டாகிட்டேன். இதுல உங்களுக்குச் சம்மதமா?” என்றாள்.

“நீ எடுமா. எதுவானாலும் நாங்க உன்கூட இருக்கோம்” என்று ரெங்கசாமி செல்லம்மா சொல்ல, அவர்கள் அருகில் வந்த திலகவதி, ‘நானும்’ என்பதை செய்கையால் சொல்லிவிட்டார்.

“ஏன்மா இப்படி இம்சை பண்றீங்க? பெத்த பொண்ணை விட, நம்மளை நடுத்தெருவில் நிப்பாட்டின இவங்க பெருசா?” வெண்மதி கடுப்போடு கேட்க,

“பெத்த பிள்ளையோட நல்லதுக்காகத்தான் இங்க நிற்கிறேன் வெண்மதி. எனக்கு உன் வாழ்க்கை முக்கியம். எப்படியோ உன் வாழ்க்கை சித்தார்த்தோடன்னு கடவுள் முடிச்சி போட்டுட்டார். அது அப்படியே இருக்கட்டும் என்பது என் ஆசை” என்றார் அழுத்தமாக.

“ம்மா... அவங்க என்மேல உள்ள பாசத்துல கூப்பிடலை. சொத்துக்காகம்மா! நான் மருமகளாகிட்டா அந்த கேஸை வாபஸ் வாங்கிடலாம்ன்ற எண்ணத்துலமா.”

“அப்படிப் பண்ணினாலும் தப்பில்லையே. யார் அனுபவிக்கிறது? என் அண்ணன், அண்ணிதான. அதை சந்தோஷமாதான் இதுவரை கொடுத்தேன். வேணும்னா இன்னும் கொடுப்பேன்” என்று தெளிவாக உரைத்தார்.

சித்தார்த் ஆச்சர்யப்பட்டான் என்றால், அவனின் அடாவடிப் பெற்றோருக்கோ திலகவதிக்கு தாங்கள் செய்த துரோகம் உறுத்தத் தொடங்கியது.

“இல்ல அத்தை. கேஸை வாபஸ் வாங்க வேண்டாம். அது எப்பவும்போல நடக்கட்டும். எங்க கல்யாணத்துக்கும், கேஸ்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என்றான் சித்தார்த்.

‘அட நீயென்ன அவ்வளவு நல்லவனா’ என்ற எள்ளல் பார்வை வெண்மதியிடம் இருந்து.

“சித்தார்த் ஏன்டா” என்ற செல்லம்மாவின் கைபிடித்து, “இதுக்கு மேல கௌரவம் கொளரவம்னு அது பின்னால ஓட முடியாதும்மா. அதுக்காக என் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கவும் மாட்டேன். இது கடவுளா போட்ட முடிச்சி. வேணும்னா அவரே அவிழ்க்கட்டும். நாம வேடிக்கை மட்டும் பார்க்கலாம்” என்றபடி மின்னலிடம் திரும்பியவன், “நீங்க என் சார்பா ஆஜராக நான் சம்மதிக்கிறேன் சிஸ்டர். என்னோட முழு ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு” என்றான்.

“கொடி எனக்கு எதிரா நிற்கப்போறியா? வேண்டாம்” என்றான் அரிச்சந்திரன். நட்சத்திராவும் தோழியிடம் அதையே சொல்ல, முகில் குமாரோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

தற்செயலாகத் திரும்பிய மின்னல் அவனின் பார்வை உணர்ந்து, ‘என்ன?’ என்று லேசாக தலையை அசைத்துக் கேட்க,

‘நீயெல்லாம் என்ன பொண்ணு?’ என்றான் பார்வையால்.

‘அடப்பார்றா!’ என கேலியாக உதடு சுளித்து, “நான் மின்னல் பொண்ணு. ரொம்ப முறைச்சா பொசுக்கிருவேன்” என்று உதடசைவில் சொல்ல,

“போடீ” என அவனும் உதடசைத்தான்.

“அடிங்க...” சட்டென்று எழுந்த கோவத்தில் அவனிடம் சென்றவள், “என் இடத்துல என்னையே சீண்டுறியா? இந்தக் கேஸ்ல நீ நினைக்கிற எதுவும் நடக்காது” என்றாள் சவாலாக.

“பார்க்கலாம் பார்க்கலாம். போ... போய் வேலையைப் பார்” என நக்கலாக உரைத்தான்.

“மின்னல் பெண்ணே! எனி ஹெல்ப்” என்று வந்த விஜயையும், அவளையும் பார்த்து அதே நக்கல் மாறாது, “இதுவே ஒரு ஆழாக்குப் படி. இதுக்கு சப்போர்ட் வேறையா. பொண்ணு பின்னாடி சுத்தாம போயி பொழைப்பைப் பாரு” என்றான் விஜயிடம்.

“ஏய் நான் யார்னு தெரியாமல் பேசுற?” என்று விஜய் எகிற,

“விடுங்க விஜய். சாருக்கு நாகரீகம்னா என்னென்னு தெரியாதுபோல” என்றாள் கிண்டலாக.

“பழங்கால நாகரீகம் தொட்டு, உச்சக்கட்ட நாகரீகம் வரை பார்த்தவன் நான். என்கிட்ட நாகரீகத்தைப் பற்றிப் பேசுறியா?” சண்டைச் சேவலாய் அவன் சிலிர்த்து நின்றான்.

அவனின் தெனாவெட்டான பதிலில் “அப்ப சாருக்கு ஏகப்பட்ட மங்கைகளைத் தெரியும் சொல்லுங்க.” தன் நக்கலைத் தூக்கலாக்கினாள் மின்னல்.

“மின்னல்மா வேண்டாம் வா. மண்டபத்தில் உள்ள எல்லாரும் உன்னைத்தான் பார்க்கிறாங்க” என்று மகளைப் பேசவிடாது தடுத்தார் ரவிச்சந்திரன்.

“அவன் எப்படிப் பேசுறான் பார்த்தீங்களாப்பா?”

“எப்படிப் பேசிட்டோமாம்? ஏர்லைன்ல ஏகப்பட்ட மங்கையர்கள் வர போகதான் செய்வாங்க. அதைத் தப்பா அர்த்தம் எடுத்தா தப்பு என்கிட்ட இல்ல. உன்கிட்ட... உன்கிட்ட மட்டும்தான்” என்றான் கோவமாக.

“நீ யோக்கியமா பேசுனியா? நாம எதைக் கொடுக்கிறோமோ அதுதான் திரும்பக் கிடைக்கும்” என்று அவளின் பதிலும் புல்லட்டாய் முகில் மேல் பாய,

“வக்கீல்ல சொல்லியா கொடுக்கணும்.” அதே கேலிக்குரல் அவனிடம்.

“நியாயத்தைக் கேட்க வக்கீல் தேவையில்லை. அன்ட் என் வாதத்தை கோர்ட்ல தெரிஞ்சிக்கோ.”

“மின்னல்மா விடுடா” என்றார் ரவிச்சந்திரன்.

“நீங்க ஏன்பா, தப்பு செஞ்சவனை விட்டுட்டு என்னை சமாதானப்படுத்துறீங்க?”

“தப்பு செஞ்சவங்களை தான் அமைதியா இருக்கச் சொல்வாங்க” என்று திரும்பவும் இடையிட்டான் முகில்.

“நான் என்ன....”

“நீ இருடா அப்பா பேசிக்கிறேன்” என்று மகளைத் தன் கைக்குள் அடக்கி “நீங்க அதிகம் பேசுறீங்க தம்பி. என் பொண்ணை குறை சொல்ற உரிமை யாருக்கும் கிடையாது. குறை சொல்ற மாதிரி அவள் நடந்துக்கவும் மாட்டா” என்றார் சற்று கடுமையான குரலில்.

“என்ன அண்ணா நீ. அவளைப்போய் தப்பா பேசுற? அவள் எனக்கு நாத்தனார் மட்டும் கிடையாது. என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட். எனக்கு இன்னொரு அம்மா மாதிரி.”

நட்சத்திராவின் வார்த்தையில் மின்னல் கண்கலங்க, தோழியிடம் திரும்பியவள் அவள் கைபிடித்து, “சாரிடி. அண்ணா எதோ கோவத்துல பேசிட்டாங்க. இனிமேல் அப்படிச் செய்யமாட்டாங்க” என்றாள்.

அவர்களை வெறிக்கப் பார்த்திருந்த முகிலிடம் வந்த அரிச்சந்திரன், “நீங்க நதி அண்ணன்றதால எதுவும் பேசாம நிற்கிறேன்னு நினைக்காதீங்க. இந்த இடத்தில் பேசினா நிறைய பிரச்சனையாகும்னுதான் பார்க்கிறேன். கோவம் நல்லதுதான், அது மற்றவர்களைப் பாதிக்காத வரையில். உங்க தங்கை வாழ்க்கை இப்படியாகிருச்சின்னு குழப்பத்துல இருக்கீங்க. அதனாலதான் நானும் பொறுத்துப் போறேன். யோசிச்சிப் பேசுறது நல்லது.”

“நமக்கு எதிரா வாதாடினா அவங்க எதிரி கிடையாது. தொடர்ந்து இப்படியே பிஹேவ் பண்ணினா... சாரி நீங்க வேற யாரையாவது பார்க்க வேண்டி வரும். குடும்பமா தொழிலா கேட்டா, எனக்குக் குடும்பம்தான் முக்கியம். அப்புறம் இவன் பொறுக்கி கிடையாது. இன்ஸ்பெக்டரா இருக்கான். அதான் பிரச்சனைன்னதும் உதவவான்னு கேட்டான். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்” என்று நகரந்தான்.

தன் தவறு புரிந்த முகில் மின்னலின் அருகே சென்று, “மன்னிச்சிருங்க” என்றுவிட்டு வேகமாகச் சென்றிட, சிறு அமைதிக்குப் பின் அனைவரும் சகஜமாகினார்கள்.

மாலை திருமண வரவேற்பு என்பதால், அன்றைய பொழுது அனைத்தும் மண்டபத்திலேயே செலவழிக்க எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் சித்தார்த்தும் திலகவதியின் வேண்டுகோளுக்காக, குடும்பத்துடன் மண்டபத்திலேயே தங்கிவிட்டான்.

இருந்த பிரச்சனையில் நட்சத்திராவிற்கு நிறைய விஷயங்கள் நினைவிலேயே இல்லை. ‘எப்படி தன் உறவினர்கள் திருமணத்திற்கு வந்தார்கள்? எப்படி அனைவரும் வித்தியாசம் இல்லாமல், அதாவது பெண் மாறியதைப் பற்றி எந்த சலசலப்பும் இல்லாமல் இருக்கிறார்கள்? இத்தனை ஆண்டுகள் தொடர்பில் இல்லாதவர்களும் இங்கே எப்படி?’ என்பதையும் உணரவில்லை.

மதியம் உணவு முடித்து மாப்பிள்ளை பெண்ணை ஓய்வெடுக்கச் சொல்ல, காலையிலிலிருந்து இருந்த பரபரப்பு போய் ஒரு படபடப்பு வந்தது அவளுள்.

அவளைப் பார்த்தபடி உள்ளே வந்தவன் கதவைத் தாழிட்டபடி, “என்ன நதி டென்ஷனா தெரியுற?” என்று கேட்க,

“அ...அப்படிலாம் எதுவுமில்லையே. நான் எப்பவும் போலதான் இருக்கேன்” என்று சிரித்தாள்.

“இல்ல பொய் சொல்ற? வா வந்து உட்கார்” என்றான் பேந்த விழித்தபடி நின்றிருந்தவளைப் பார்த்து.

“அதுக்கு முன்ன, ஏன் நான் பொய் சொல்றதா சொன்னீங்க?” என்று வீம்பு செய்ய,

மென்னகையுடன் அவளை அராயும் பார்வை பார்த்து. “எப்பவும் போலனா அமைதியா என் பக்கத்துல வந்து உட்கார்ந்திருப்ப” என்றான்.

சிறு புன்னகையுடன் கணவன் அருகில் அமர அவளின் கையை தன் கைகளுள் வைத்து, “உன் சின்ன வயசுல நடந்த எல்லாமே தெரியும். சில விஷயங்கள் உன்னோட பாய்ண்ட் ஆஃப் வியூல நீ சொன்னா மட்டுமே புரியும். இது சந்தேகத்தைத் தீர்க்கக் கேட்கலை நதி. ஒரு ஆர்வம்னு வச்சிக்கோயேன்.”

“என் சந்துரு பற்றி எனக்குத் தெரியும். அதுவும் என் வாழ்க்கையில் நடந்த எதையும் பெருசுபடுத்தாத குணம்.”

மனைவியின் முகத்தில் தெரிந்த அன்பும் காதலும் அவனை அசரடிக்க அவளைப் பிடித்திருந்த கையை விலக்கி அவளைக் கட்டியணைத்து “தேங்க்ஸ்” என்றான்.

உடலில் எழுந்த பரவசமான உணர்வுகளுடன், அவனை அணைத்துக்கொள்ள எழுந்த கைகளையும், மனதையும் அடக்கி, “தேங்க்ஸ் பேக்டரி வச்சிட்டிருக்கீங்க போலிருக்கு?” கேலியாகக் கூறி அவனிடம் இருந்து விலக முயன்றாள்.

“உன்னால்தான் அந்த பேக்டரி அப்பப்ப ஓபன் பண்ணி வேலையையும் நடத்துது” எனவும் அவள் செல்லமாய் முறைக்க, அவன் அதைக் கள்ளமாய் ரசித்துச் சிரித்து, “சொல்லு?” என்றான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
அதே நேரம் சித்தார்த்திடம் அவனைப்பற்றி விசாரிக்க மின்னல் கொடி வந்தாள்.

“எங்க ஊர் கழுகுமலை. எங்க அப்பாவும், வெண்மதி அப்பா முத்துக்குமாரும் கூடப்பிறந்தவங்க. கூட்டுக்குடும்பம் எங்களோடது.”

“ஹேய்! அப்ப சஞ்சித் அம்மா? அவங்க உன் அப்பா கூடப்பிறந்த தங்கை இல்லையா?”

“அப்பாவோட சித்தி பொண்ணுதான் அத்தை. அக்கா, தங்கச்சி இல்லாததால அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் அத்தையைப் பிடிக்கும். அத்தை கல்யாணத்திற்குப் பிறகு அவ்வளவா போக்குவரத்து இல்லை. அப்புறம் சித்தப்பாவுக்குக் கல்யாணம் முடிஞ்சி முகில் அண்ணா பிறந்து நாலு வருஷம் கழிச்சிதான் நான் பிறந்தேன். நான் பிறந்து ஒன்றரை வருஷம் கழித்து வெண்மதி.”

“சித்தியோட அப்பா இறந்த பிறகு சாவு வீட்டுல நிறைய சண்டை வர சித்தி ஒரே பொண்ணுன்றதால கொள்ளி வைக்கிறதுல நிறைய பேச்சாகி, சித்தியோட பெரியப்பா பையன் கொள்ளி வைக்கிறேன்னு ஒத்துக்கவும், அங்கிருந்த பெரியவங்க கொள்ளி வச்சா வைக்கிறவங்களுக்குப் பாதி சொத்து கொடுக்கணும்னு பழைய முறைமையைச் சொல்ல, அது என் அப்பாவுக்குப் பிடிக்கலை. அதெப்படி முடியும்? என் தம்பியே கொள்ளி வைக்கட்டும்னு சொல்லிருக்காங்க.”

“அதெப்படி மருமகன் மாமனாருக்கு வைக்க முடியும்? சடங்கு சம்பிரதாயத்தை மாத்தப் பார்க்குற. நமக்குன்னு ஒரு சட்டதிட்டம் இருக்கு, அதை மீறக்கூடாதுன்னு அங்க இருந்தவங்க சொல்ல, பேச்சு முற்றிப்போய் சித்தப்பா, சித்தியோட அண்ணனையே வைக்கச்சொல்லி, சொத்துல பாதி தர்றதாகவும் ஒத்துக்கிட்டாங்க. வேற வழியில்லாம சாவு சடங்கு முடியுறவரை அங்க இருந்துட்டு சித்தப்பாவையும் மாமனார் வீட்லயே இருக்கச் சொல்லிட்டாங்க அப்பா.”

“வருஷத்துல ஒன்றிரெண்டு முறைதான் சாத்தூர் போவோம். சித்தி ஊர் சாத்தூர் தான். அப்ப நைன்த் லீவ். நான் பெரிய பொண்ணாகி மூணுமாசம் முடிஞ்சிருந்தது. அண்ணனுக்கும், வெண்மதிக்கும் லீவ்னு சொல்லி எங்க வீட்டுக்கு வந்தவங்க, போகும்போது என்னை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.”

“சாத்தூர்ல இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்துல இருக்கு இருக்கன்குடி மாரியம்மன் கோவில்! இரண்டு ஆறு சேருற இடத்துல மாரியம்மன் இருப்பாங்க. ரொம்ப சக்திவாய்ந்த அம்மன். தெற்க உள்ள எல்லாருக்கும் தெரிந்த, பிரசித்தமான கோவில்னா ஆச்சர்யப்படுறதுக்கில்லை. எப்பவும் கூட்டம் ஜேஜேன்னு இருக்கும். திருவிழா டைம் சொல்லவே வேண்டாம்.”

“சித்தப்பா வீட்டுக்கு லீவுக்கு போயிருந்தப்ப மாரியம்மன் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க வச்சிதான் அந்த சித்தார்த் என்னைப் பார்த்திருக்கான்.”

“கோவில்லதான் சிஸ்டர் நட்சத்திராவை முதல்முறையா பார்த்தேன். அப்ப நான் காலேஜ் செகண்ட் இயர் மதுரையில படிச்சிட்டிருந்தேன். செமஸ்டர் லீவுலதான் அவளைப் பார்த்தது.”

சரியோ தவறோ திலகவதி தன் பிள்ளைகளுக்கு மாமனைப் பற்றித் தவறாக எதுவும் போதிக்கவில்லை. அவருக்கு சொத்தில் பாதியைக் கொடுப்பதில் எந்த ஆட்சேபணையும் இருந்ததில்லை. ஆனால், சுற்றம் என்று ஒன்று இருக்கிறதே, அது, நடந்த, நடக்கும், நடக்கப்போகும் அத்தனை கதைகளையும் பிள்ளைகளுக்குச் சொல்ல, தாங்களாகவே மாமனிடம் இருந்து விலகினார்கள். சித்தார்த் பதினொன்றாம் வகுப்பிலிருந்து மதுரையில் ஹாஸ்டலில் தங்கிப் படித்ததால், அவனிடமும் எந்த நெருக்கமும் இல்லை.

கோவிலுக்குத் தன் இருசக்கர வாகனத்தில் நண்பர்கள் இருவருடன் வந்திருந்தான். அத்தையைப் பார்த்ததும் அவரிடம் மட்டும் பேச்சிக்கொடுத்து, அருகிலிருந்த யாரையும் பார்க்காமல் செல்கையில், “டேய் சித்! அந்தப் பொண்ணு யாரு? பார்க்க அழகாயிருக்கா” என்றதும் வயதிற்கே உரிய ஆர்வத்தில் திரும்பிப் பார்த்தான்.

அவனுக்குமே யாரெனத் தெரியவில்லை. சில நிமிட யோசனைக்குப் பின், “எங்க மாமாவோட அண்ணன் பொண்ணுடா” என்றான்.

“ஓ... ரெண்டு பொண்ணுங்களும் பார்க்க ஒரே மாதிரி தெரிஞ்சதால உடன்பிறப்புன்னு நினைச்சேன். அப்ப முறைப்பையனுக்கு முறைப்பொண்ணு ரெடின்னு சொல்லு. எப்படா கல்யாணம்?” என்றான். கிண்டலாக.

“டேய்! அவள் சின்னப் பொண்ணுடா. அவளைப்போய்...”

“எங்களுக்கு அப்படித் தெரியலையே. இல்லடா” என இன்னொருவனிடம் கேட்க அவனும் ஆமோதித்தான்.

“ச்சீ... வாங்கடா” என இழுத்துச் சென்றான்.

சாத்தூர் திரும்பும்போது சித்தார்த்தின் இருசக்கர வாகனம் பழுதாகி நடுவழியில் நிற்பதைக் கண்ட முத்துகுமார் ஓட்டுநரிடம் வண்டியை சரிபண்ணி எடுத்து வரச்சொல்லி, ஓட்டுநரின் துணைக்கு முகிலையும் அனுப்பி, “பசங்களா நீங்க பின்னாடி உட்கார்ந்துக்கோங்க. திலகா நீ முன்னாடி வந்திரு. சித்தார்த் நீ பாப்பாங்க கூட உட்காரு. வீடு வந்ததும் இறக்கி விடுறேன்” என்று விகல்பமில்லாமல் உரைத்து முன்னே அமர்ந்தார்.

சித்தார்த்தின் நண்பர்கள் ‘ம்...ம்ம்...’ என செய்கையில் அவனை உற்சாகப்படுத்த, ‘போங்கடா’ என விரலால் மிரட்டி காரில் உட்காரச் சொல்லி அவனும் அமர, நண்பர்களின் பார்வை இருவரையும் சேர்த்துப் பார்த்து, ‘சூப்பர்’ என்று சைகையில் சொல்ல, சில நிமிடம் கழித்து அவனே அவளைப் பார்க்க ஆரம்பித்தான்.

திலகவதி அவனிடம் படிப்பு பற்றி விசாரித்தபடி வர, தடுமாறாது பதில் சொன்னான். திலகவதிக்குச் சித்தார்த்தின் மேல் தனிப் பாசம் உண்டு. ஜாடையில் அவரின் அப்பாவை நினைவுபடுத்துவதாலா, இல்லை தன்னிடம் பேசும் பாங்கா தெரியாது. அவனை யாரிடமும் விட்டுக்கொடுக்கவும் தோன்றாது அவருக்கு.

வீடு சேர்ந்ததும் சித்தார்த்தை நட்சத்திராவின் பெயர் சொல்லி கலாட்டா செய்தார்கள் நண்பர்கள். பெண்களிடம் வெறும் பார்வையை, சும்மா ரசிப்பது மட்டுமே செய்பவனிடம், ஒரே பெண்ணைத் திரும்பத்திரும்ப சொல்லி மனதில் இறுத்தினார்கள்.

***நட்பு! எப்படிச் சொல்வது? உன் நண்பனைச் சொல் உன்னைச் சொல்கிறேன் என்பது எவ்வளவு உண்மை. இதில் விதிவிலக்காக சிலரும் இருக்கிறார்கள். தப்பைத் தடுப்பது நல்நட்பு! தப்பு செய்யத் தூண்டுவது வேறு வகை நட்பு! இங்கு தடுப்பதைவிட தூண்டுவதே அதிகம். டேய்! கொஞ்சம் தண்ணி அடிடா தப்பில்லை என்பது ஒருவகை நட்பு! அதைத் தவறென்று சுட்டிக்காட்டுவது நல்நட்பு! உயிரைக் கொடுப்பான் தோழன் என்ற கதை மாறி, உயிரை எடுப்பான் தோழன் என்றாகிவிட்டது. கலிகாலத்தில் தவறும் சரியாகிறதோ!***

மறுநாள் “உன் அத்தை மகளைப் பார்க்கப் போகலையா?” என நண்பர்கள் கிளப்பிவிட, ஒரு ஆர்வத்தில் அவனும் கிளம்பிவிட்டான். காரணம் கேட்டால் என்ன சொல்வதென்று புரியாமல், அத்தை வீட்டின் அருகில் இருக்கும் தன் பள்ளித்தோழனைப் பார்க்கச் சென்று, அத்தையின் கண்ணில் படுமாறு அவன் வீட்டுற்கு முன் நின்று பேச, திலகவதியும் கவனித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

இப்படிச் சிலசில தூண்டல், சிலசில சந்திப்பு, சிலசில பார்வை சித்தார்த்தினுடைதாகிப் போனது.

“முதல் நாள் எங்களோட வந்தது மட்டும்தான்ங்க தெரியும். அப்பறம் வந்தாலும் கவனிச்சிப் பார்த்ததில்லை. அதைவிட அப்படிப் பார்க்கிற மெச்சூரிட்டி கிடையாது. விளையாட்டு, படிப்பு மட்டும்தான் நான். வேற எதுவும் கண்ணுக்குத் தெரியலைங்க. அப்பதான் ஒருநாள் என் எதிரில் பூவோட வந்து நின்னான்.”

“ஃப்ரண்ட்ஸ் ஏத்திவிட்டதுல ஒருவழியா எனக்குள்ளும் அதுதான்னு தோண, ரெட் ரோஸோட போயி அவளை வழிமறிச்சேன் சிஸ்டர். அவள் அண்ணன் வந்திருந்தா, ஒருவேளை சண்டையாகி என் நினைப்பும் மாறிப் போயிருக்குமோ என்னவோ, எப்பவும் அந்த குட்டி வாண்டு கூடதான் சுத்திட்டிருந்தா. அன்னைக்கும் அவளோடதான் இருந்தாள்.”

“அதாவது உங்க ஒய்ஃப்” என இடையிட்டாள் மின்னல் கொடி.

“அவளேதான் சிஸ்டர். நட்சத்திராகிட்ட பேசப் போனா, இவள்தான் என்ன வேணும்னு கேட்டு அடாவடியா வந்து நிற்பா. அப்ப தெரியாம போயிருச்சி, அந்த அடாவடிதான் என் எதிர்காலம்னு” என்று புன்னகைத்து, “ஒரு வழியா பூவை அவள்கிட்ட நீட்டிட்டேன்...”

“சட்டுன்னு அவன் பூவை நீட்டவும் நான் பயந்துட்டேன்ங்க. என்னதான் மெச்சூரிட்டி இல்லைன்னாலும், சிங்கிள் ரோஸ் கொடுத்து ஐ லவ் யூ சொல்றதை எத்தனை படங்கள்ல, சீரியல்ல பார்த்திருப்போம். அவன் ஃப்ரண்ட்ஸ் வெண்மதியைக் கூப்பிட என்னைவிட்டு நகரமாட்டேன்னு சொல்லிட்டா. பூ வாங்காம நாங்க நகரவும் எங்களை வழிமறிச்சி போகவிடாம செய்துட்டாங்க.”

“நானும் நீட்டிட்டே இருந்தேன் சிஸ்டர். என் ஃப்ரண்ட்ஸ் தொல்லை வேற தாங்கலை. அவள் கையில வலுக்கட்டாயமா திணிச்சிட்டுத் திரும்பிப் பார்க்காம வந்துட்டேன். சின்னது பூவைப் பிடுங்கி விசிறியடிச்சிட்டாள்னு ஃப்ரண்ட் பார்த்து சொன்னான்.

“அப்பவே உங்க ஒய்ஃப்கு பொறாமைன்னு சொல்லிராதீங்க. சின்னப்புள்ள பயந்துரப்போறேன்” என்று மின்னல் சித்தார்த்தை கலாய்க்க.

“நான் அந்தளவு அறிவில்லாம இல்லை சிஸ்டர்.”

“வீட்டுக்குப் போனதும் சித்திகிட்ட சொல்லிரலாம்னு நினைச்சா, அவங்க காய்ச்சல்ல நடுங்கிட்டு இருக்காங்க. சரி இனிமேல் எதாவது செய்தால் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். அடுத்த இரண்டு நாளில் ஊருக்குப் போறதா முடிவு பண்ணியிருந்தப்ப, வழக்கம்போல வந்து வழிமறிச்சான். நான் ஊருக்குப் போறேனே. அப்ப என்ன பண்ணவன்னு அவனுக்கு அலவம் காட்டிட்டு வந்துட்டேன்.”

ஊருக்குப் போவதைச் சொன்னதும் நண்பர்களுடன் சேர்ந்து வேறு திட்டம் தீட்டினான் சித்தார்த். அவனுக்கு அவள் வேண்டுமாம்! அதுதான் காதலாம்!

***ஊர்ல தொண்ணூறு சதவீதம் புள்ளைங்க இப்படித்தான் அலையுறாங்க. பருவத்தே பயிர் செய்னு சொன்னா, பிஞ்சிலயே பழுத்து, பயிரை நாசம் செய்திடுறாங்க. தட் இஸ் கலிகாலம் மக்களே!***
 
Member
Joined
May 9, 2025
Messages
71
Enna author neenghalae readers commentsum serundhu podurengha. Minnal is acting like Tom and Jerry to both Mughil and Vijay,just wondering to whom she is going to tie knot
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
834
Enna author neenghalae readers commentsum serundhu podurengha. Minnal is acting like Tom and Jerry to both Mughil and Vijay,just wondering to whom she is going to tie knot
பொதுக் கருத்து சிஸ்டர். கமண்ட் கிடையாது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top