Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
பகுதி – 3
சென்னை ரயில் நிலையத்தில் கால் தடம் பதித்தவளை வரவேற்க, தன் நண்பனின் சகோதரி வந்து இருப்பதை பார்த்தவள் புன்னகையுடன் அவளைச் சந்தித்தாள்.
“வெல்கம் ரோஜா. டிராவல் எல்லாம் ஓகே தானே” என்று கேட்டுக்கொண்டே ரோஜாவின் கையில் இருந்த பையை பெற்றுக்கொண்டு, "அப்புறம் உன் நண்பன் எப்படி இருக்கான்? இங்க நாங்க எல்லாம் அவனுக்காக காத்து இருக்கோம்ன்னு அவனுக்கு தெரியுமா, தெரியாதா?" என்று அவள் கேட்ட கேள்விக்கு, ரோஜாவின் பதில் புன்னகையாக மட்டுமே இருந்தது.
"உன்கிட்ட, உன்னோட பாஸ்ட் பற்றி எதையும் கேக்க கூடாதுன்னு என் தம்பி சொல்லிட்டான் ரோஜா. சோ, நான் உன்கிட்ட என் லிமிட்குள்ள இருந்துக்குறேன்" என்று சொன்ன அந்ப்த பெண்ணின் வயது முப்பதை தொட்டு இருக்கும்.
‘ஆள் பார்க்க சிரித்த முகம். கலகலப்பான பேச்சு. முகத்தை பார்த்தாலே இவரின் பெயர் லட்சுமி என்று தான் இருக்கும்’ என தனக்குள் நினைத்து கொண்டு இருந்த ரோஜாவின் கேள்விக்கு எதுவாக,
"ஆங் என் பெயர் கனகலட்சுமி. உனக்குத் தெரியும் இல்ல. நீ என்னை கனகான்னே கூப்பிடலாம்" என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட பெண்ணுக்கு இந்தச் சமூகம் தந்த பெயர் இளம் விதவை.
"நான் கொஞ்சம் லொட லொடன்னு பேசுவேன். ஆனா, உனக்கும் பேச ஸ்பேஸ் கொடுப்பேன். சரி சொல்லு. நம்ம வீட்டுல இருக்குற மாடி வீட்டில் தங்க போறியா? இல்ல உனக்கு நான் அப்பார்ட்மெண்ட்ல வீடு பாக்கவா" என்று ரோஜாவை கேட்டுக்கொண்டே ரயில்வே ஸ்டேஷன்னில் இருந்து வெளியே வந்த கனகா ரோஜாவின் பெட்டியை அவளின் காரில் வைத்தாள்
"உங்களுக்கு ஏன் சிர்மம்? நான் வாடகைக்கு எங்காவது..." என்று ரோஜா சொல்லும் முன்னதாக
"நீ நம்ம வீட்டு மாடியில் தங்கினாலும் வாடகை தந்து தான் ஆகணும். ஏன்னா அது நம்ம சொந்த வீடு இல்ல. நானும் வாடகைக்கு இருக்கும் வீடு தான் அது" என்று கனகா கண்கள் சிமிட்டி சொல்ல. ரோஜா சிரித்த முகத்துடன்.
"அப்போ நானுமே உங்க கூட உங்க வீட்ல வாடகை தந்துட்டு உங்க கூடவே இருக்கேன்" என்று ரோஜா சொன்னதும்
"சூப்பர் ஐடியா. எல்லாமே நீ பாதி நான் பாதி. ஆனா யாருடைய உடையையும் யாரும் தொடக்கூடாது." என்று கனகா அலட்டிகொள்ளாமல் சொல்லும் சொற்களுக்கு மரியாதை தரும் விதமாக.
"என் புத்தகத்தையும் அதனுடன் சேர்த்து கொள்ளுங்கள்" என்று ரோஜா சொன்னதும்,
"எனக்கு கிசு கிசு படிக்க மட்டும் தான் பிரியம். அதுவும் இப்போ எல்லாம் போன் வாயிலாக பாத்துப்பேன். சோ, உன் புத்தகத்தை நான் களவாட மாட்டேன். நீ என்னை நம்பு." என்று காரை ஓட்டிக்கொண்டே கனகா சொன்னாள்.
தன் விழிகளில் கலைந்து இருந்த கண் மையை சரி செய்து கொண்ட ரோஜாவை பார்த்த கனகா "வேலை தேடணுமா? இல்ல அதையும் உன் நண்பன் ரெடி பண்ணிட்டானா?"
"கை வசம் ஒரு வேலை இருக்கு. அதனால இந்த மாசம் எனக்கு வருமானத்துக்கு வழி தேட வேண்டியது இல்லை."
"என்ன சொல்ற? என்ன வேலை?" என்றாள் கனகா.
“போகப் போக தெரிஞ்சிப்பிங்க" என்று ரோஜா சொல்ல, கனகா ஏதும் புரியாத நிலையில் காரை தன் வீட்டின் முன் நிறுத்தினாள்.
"ரோஜா இந்தா சாவியைப் பிடி. அந்த ரோஸ் கலர் வீடு தான். நீ அங்க வெயிட் பண்ணு. நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்" என்று சொன்னவள் தன் காரை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்த.
ரோஜா தன் கைபேசியில் இருந்து அவள் கனகாவின் வீட்டை வந்தடைந்த விஷயத்தை, மெசேஜ் மூலம் தன் தோழன் தோழிக்கு தெரியப்படுத்தி, அவள் தந்தையிடம் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கச் சொன்னாள்.
கனகாவின் வீடு பார்க்க சின்னதாக இருந்தாலும், அந்த வீட்டை சுற்றி ரோஜா செடிகள் பல வண்ணங்களில் இவளை பல் இளித்து வரவேற்றது.
"வா உள்ள வா ரோஜா" என்று கனகா அழைக்க, ரோஜா வீட்டுக்குள் நுழைந்ததும் அவள் கண்ணில் பட்டது ஒரு ஆணின் புகைப்படம்.
"என்ன அப்படி பாக்குற. இவர் தான் என்னவர். பெயர் மோகன். அதுக்குன்னு மைக் எங்கன்னு கேக்காத" என்று போலியாக சிரித்த கனகாவின் கண்ணில், மோகனின் மீது உள்ள காதல் குறையவே இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
"மாடியில ஒரு ரூம் இருக்கு ரோஜா. நீ அங்க ஸ்டே பண்ணிக்கோ. கிச்சன் கீழே தான். அடுத்த மூணு நாள் நான் தான் உனக்கு எல்லாமே பண்ணுவேன். ஆனா, அதன்பிறகு வாரம் மூணு நாள் நீயும், மீதி நாள் நானும் தான் கிச்சன் ராணிகள். சரியா?” என்றாள் கனகா.
"விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான் என்ற கூற்றை அறிந்தவள் தான் நானும்" என்று சிரித்துக் கொண்டே சொன்ன ரோஜா, தன் பையை எடுத்து கொண்டு மாடிப்படியில் கால் வைத்தாள்.
"நீ மேல போ ரோஜா. நான் மாடி ரூம் சாவி கொண்டு வரேன்" என்று சொன்ன கனகா, கண் இமைக்கும் நேரத்தில் ரோஜாவைப் பின் தொடர்ந்து மாடிப்படி ஏறி அங்கு உள்ள அறையைத் திறந்தாள்.
"வா ரோஜா. ரூம் எப்பவும் சுத்தமா தான் இருக்கும். நான் வீக்லி ஒன்ஸ் கிளீன் பண்ணிடுவேன். உன் திங்க்ஸ் எல்லாம் நீ இங்க வச்சிக்கோ" என்று கனகா சொன்னதும், ரோஜா சுவற்றின் மூலையில் உள்ள டேபிளின் மேல் பையை வைத்தவள், முதல் வேலையாக தன் பையில் இருந்த தாய், தந்தையின் போட்டோவை எடுத்து மேசை மேல் வைத்தாள்.
"உங்க அம்மா அப்பாவா?" என்று கனகா கேட்டதும், ரோஜா "ம்" என்று சொன்னவள் அதே பையில் இருந்து நைட்டியை எடுத்தாள்.
சென்னை ரயில் நிலையத்தில் கால் தடம் பதித்தவளை வரவேற்க, தன் நண்பனின் சகோதரி வந்து இருப்பதை பார்த்தவள் புன்னகையுடன் அவளைச் சந்தித்தாள்.
“வெல்கம் ரோஜா. டிராவல் எல்லாம் ஓகே தானே” என்று கேட்டுக்கொண்டே ரோஜாவின் கையில் இருந்த பையை பெற்றுக்கொண்டு, "அப்புறம் உன் நண்பன் எப்படி இருக்கான்? இங்க நாங்க எல்லாம் அவனுக்காக காத்து இருக்கோம்ன்னு அவனுக்கு தெரியுமா, தெரியாதா?" என்று அவள் கேட்ட கேள்விக்கு, ரோஜாவின் பதில் புன்னகையாக மட்டுமே இருந்தது.
"உன்கிட்ட, உன்னோட பாஸ்ட் பற்றி எதையும் கேக்க கூடாதுன்னு என் தம்பி சொல்லிட்டான் ரோஜா. சோ, நான் உன்கிட்ட என் லிமிட்குள்ள இருந்துக்குறேன்" என்று சொன்ன அந்ப்த பெண்ணின் வயது முப்பதை தொட்டு இருக்கும்.
‘ஆள் பார்க்க சிரித்த முகம். கலகலப்பான பேச்சு. முகத்தை பார்த்தாலே இவரின் பெயர் லட்சுமி என்று தான் இருக்கும்’ என தனக்குள் நினைத்து கொண்டு இருந்த ரோஜாவின் கேள்விக்கு எதுவாக,
"ஆங் என் பெயர் கனகலட்சுமி. உனக்குத் தெரியும் இல்ல. நீ என்னை கனகான்னே கூப்பிடலாம்" என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட பெண்ணுக்கு இந்தச் சமூகம் தந்த பெயர் இளம் விதவை.
"நான் கொஞ்சம் லொட லொடன்னு பேசுவேன். ஆனா, உனக்கும் பேச ஸ்பேஸ் கொடுப்பேன். சரி சொல்லு. நம்ம வீட்டுல இருக்குற மாடி வீட்டில் தங்க போறியா? இல்ல உனக்கு நான் அப்பார்ட்மெண்ட்ல வீடு பாக்கவா" என்று ரோஜாவை கேட்டுக்கொண்டே ரயில்வே ஸ்டேஷன்னில் இருந்து வெளியே வந்த கனகா ரோஜாவின் பெட்டியை அவளின் காரில் வைத்தாள்
"உங்களுக்கு ஏன் சிர்மம்? நான் வாடகைக்கு எங்காவது..." என்று ரோஜா சொல்லும் முன்னதாக
"நீ நம்ம வீட்டு மாடியில் தங்கினாலும் வாடகை தந்து தான் ஆகணும். ஏன்னா அது நம்ம சொந்த வீடு இல்ல. நானும் வாடகைக்கு இருக்கும் வீடு தான் அது" என்று கனகா கண்கள் சிமிட்டி சொல்ல. ரோஜா சிரித்த முகத்துடன்.
"அப்போ நானுமே உங்க கூட உங்க வீட்ல வாடகை தந்துட்டு உங்க கூடவே இருக்கேன்" என்று ரோஜா சொன்னதும்
"சூப்பர் ஐடியா. எல்லாமே நீ பாதி நான் பாதி. ஆனா யாருடைய உடையையும் யாரும் தொடக்கூடாது." என்று கனகா அலட்டிகொள்ளாமல் சொல்லும் சொற்களுக்கு மரியாதை தரும் விதமாக.
"என் புத்தகத்தையும் அதனுடன் சேர்த்து கொள்ளுங்கள்" என்று ரோஜா சொன்னதும்,
"எனக்கு கிசு கிசு படிக்க மட்டும் தான் பிரியம். அதுவும் இப்போ எல்லாம் போன் வாயிலாக பாத்துப்பேன். சோ, உன் புத்தகத்தை நான் களவாட மாட்டேன். நீ என்னை நம்பு." என்று காரை ஓட்டிக்கொண்டே கனகா சொன்னாள்.
தன் விழிகளில் கலைந்து இருந்த கண் மையை சரி செய்து கொண்ட ரோஜாவை பார்த்த கனகா "வேலை தேடணுமா? இல்ல அதையும் உன் நண்பன் ரெடி பண்ணிட்டானா?"
"கை வசம் ஒரு வேலை இருக்கு. அதனால இந்த மாசம் எனக்கு வருமானத்துக்கு வழி தேட வேண்டியது இல்லை."
"என்ன சொல்ற? என்ன வேலை?" என்றாள் கனகா.
“போகப் போக தெரிஞ்சிப்பிங்க" என்று ரோஜா சொல்ல, கனகா ஏதும் புரியாத நிலையில் காரை தன் வீட்டின் முன் நிறுத்தினாள்.
"ரோஜா இந்தா சாவியைப் பிடி. அந்த ரோஸ் கலர் வீடு தான். நீ அங்க வெயிட் பண்ணு. நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்" என்று சொன்னவள் தன் காரை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்த.
ரோஜா தன் கைபேசியில் இருந்து அவள் கனகாவின் வீட்டை வந்தடைந்த விஷயத்தை, மெசேஜ் மூலம் தன் தோழன் தோழிக்கு தெரியப்படுத்தி, அவள் தந்தையிடம் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கச் சொன்னாள்.
கனகாவின் வீடு பார்க்க சின்னதாக இருந்தாலும், அந்த வீட்டை சுற்றி ரோஜா செடிகள் பல வண்ணங்களில் இவளை பல் இளித்து வரவேற்றது.
"வா உள்ள வா ரோஜா" என்று கனகா அழைக்க, ரோஜா வீட்டுக்குள் நுழைந்ததும் அவள் கண்ணில் பட்டது ஒரு ஆணின் புகைப்படம்.
"என்ன அப்படி பாக்குற. இவர் தான் என்னவர். பெயர் மோகன். அதுக்குன்னு மைக் எங்கன்னு கேக்காத" என்று போலியாக சிரித்த கனகாவின் கண்ணில், மோகனின் மீது உள்ள காதல் குறையவே இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
"மாடியில ஒரு ரூம் இருக்கு ரோஜா. நீ அங்க ஸ்டே பண்ணிக்கோ. கிச்சன் கீழே தான். அடுத்த மூணு நாள் நான் தான் உனக்கு எல்லாமே பண்ணுவேன். ஆனா, அதன்பிறகு வாரம் மூணு நாள் நீயும், மீதி நாள் நானும் தான் கிச்சன் ராணிகள். சரியா?” என்றாள் கனகா.
"விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான் என்ற கூற்றை அறிந்தவள் தான் நானும்" என்று சிரித்துக் கொண்டே சொன்ன ரோஜா, தன் பையை எடுத்து கொண்டு மாடிப்படியில் கால் வைத்தாள்.
"நீ மேல போ ரோஜா. நான் மாடி ரூம் சாவி கொண்டு வரேன்" என்று சொன்ன கனகா, கண் இமைக்கும் நேரத்தில் ரோஜாவைப் பின் தொடர்ந்து மாடிப்படி ஏறி அங்கு உள்ள அறையைத் திறந்தாள்.
"வா ரோஜா. ரூம் எப்பவும் சுத்தமா தான் இருக்கும். நான் வீக்லி ஒன்ஸ் கிளீன் பண்ணிடுவேன். உன் திங்க்ஸ் எல்லாம் நீ இங்க வச்சிக்கோ" என்று கனகா சொன்னதும், ரோஜா சுவற்றின் மூலையில் உள்ள டேபிளின் மேல் பையை வைத்தவள், முதல் வேலையாக தன் பையில் இருந்த தாய், தந்தையின் போட்டோவை எடுத்து மேசை மேல் வைத்தாள்.
"உங்க அம்மா அப்பாவா?" என்று கனகா கேட்டதும், ரோஜா "ம்" என்று சொன்னவள் அதே பையில் இருந்து நைட்டியை எடுத்தாள்.