Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 499
- Thread Author
- #1
டேய் காட்டான் தூக்கி விடுடாயென்று தாமரை சொல்லிய பிறகே நிகழ்விற்கு வந்தவன்,தாமரை என்று பதறி போய் கீழே விழுந்து கிடப்பவளை தூக்கி அங்கிருந்த கட்டிலில் உட்கார வைத்தவன்,நிஜமா நீ தானாடி என்று அவள் முகத்தை தொட்டு பார்த்தவாறு வர அவள் வாயிடம் விரல்கள் வந்ததும் நன்கு கடித்து வைத்தாள்.
ஆஆஆ...என்று கத்தியவனை பார்த்து முறைத்தவள் ஏன்யா இப்படிதான் தள்ளி விடுவதா என்க...
ஏய் ரொம்ப அடி பட்டுடுச்சாடி என்று அவள் இடுப்பில் கை வைக்க போக ம்ம் என்று முறைத்தவளை பார்த்தவன் மன்னிச்சிக்கோ தாமரை.உண்மையிலே இது கனவா இல்ல நிஜமாடி என்றான்.
அடப்பாவி புருசா...
உன்னை பார்க்க அடிச்சி புடிச்சி அந்த நாட்டிலிருந்து ஓடி வந்தாள் இவன் என்ன இப்படி கேட்குறானென்று நினைத்தவள் எட்டி அவன் மீசையை பிடித்து திருக அதில் வலி வந்தது.
ஏன்டி என முகத்தை சுருக்கி கதிர் கேட்க, நிஜம் தான் யா நம்புயென்றாள்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு பார்த்த தனது காதல் மனைவியை இப்பொழுது தான் விளக்கின் வெளிச்சத்தில் விழிகளை சுருக்கி நன்கு உற்றுப் பார்த்தான்.கதிரின் லேசர் பார்வையில் தாமரைக்கு ஒருவித குறுகுறுப்பை ஏற்படுத்தியது.
இவ்வளவு நேரம் அடாவடி பெண்ணாக இருந்தவள் இப்பொழுது தன் கணவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்தாள்.
தாமரை என்று எட்டி அவள் கையை பிடித்து இழுக்க பல்லி போல அவன் நெஞ்சில் ஒட்டியவளுக்கு நடுக்கம் வந்தது.
கதிர் பனியன் போட்டிருந்ததால் அவன் நெஞ்சின் ரோமங்கள் தாமரையின் முகத்தில் பட்டு கூச்சத்தை குடுக்க,ம்ம் என அவனிடமிருந்த விலக போனவளை இறுக்கி அணைத்தவன் கொஞ்ச நேரம் சும்மா இருடி.உன்னை ஒன்னும் முழிங்கிடமாட்டேன் என்றான்.
ஆமாம் அப்படியே முழிங்கிட்டாலுமென்று தாமரை முணு முணுக்க, ஏய் என்னடி சொன்னயென்று அவள் காதோரம் கேட்க தாமரைக்கு தான் கணவனின் தீண்டல்கள் பெரும் அவஸ்தையாக இருந்தது.
அவன் அணைவிற்குள் இருந்தவள் நெளிய மேலும் அவளை சோதிக்க விடாமால் எப்படி இருக்கடி என்றான்.
ம்ம் என்று கோவம் பொங்க முறைத்தவள் ஏண்டா ஒருத்தி நாட்டை விட்டு போனாளே என்னாச்சி ஏதாச்சினு ஒரு போன் பண்ண உனக்கு துப்பு இல்லையா என்று தனது இரண்டு கைகளாலும் கணவனை அடித்தவள் அவன் நெஞ்சின் மீது சாய்ந்து அழுதாள்.
மாமா என்ன மறந்துட்டாய் தானே என்று தாமரை கேட்க,தன்னவள் முதன் முதலில் மாமா என்று அழைத்தது கதிருக்கு சில்லென்ற பனிக்காற்று வீசியது போல குளிர்ச்சியாக இருந்தது.
ஏய் இப்போ எப்படி கூப்பிட்ட மீண்டும் ஒருமுறை கூப்பிடு என்று சொல்ல அப்பொழுது தான் ஐயோ மனசுல பேசுவதாக நினைச்சுட்டு வாயை விட்டு பேசிட்டேனே என்று தனது நாக்கை கடித்துக்கொண்டாள்.
அடியேய் உன்னை தான்டி கேட்குறேன்?
எப்படி கூப்பிட்ட சொல்லு என்க, நான் ஒன்னும் சொல்லவில்லையே என்று சாதித்தவள் என்னை விடுங்க ரெஸ்ட் ரூம் போகணுமென்றாள். ம்ம் போகலாமே என்றான்.
ஹலோ மிஸ்டர் முறுக்கு மீசை உங்களோட ஜோடி போட்டு போக அது என்ன பார்க்கா.. போயா என்றவள் விட்டால் போதுமென்று வேகமாக கதவை திறந்து உள்ளே போய் தாழ்ப்பாள் போட்டவளுக்கு இவ்வளவு நேரம் கணவனின் அணைப்பில் இருந்தது வெட்கம் வர முகத்தை மூடியவள் அங்கிருந்த கதவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.
கதிரோ சந்தோஷத்தில் துள்ளி குதித்தான். நிச்சயமா அவளுக்கு என் மேல் காதல் இருக்கு. அதனால் தான் இந்த நாளுக்கு சரியா வந்துட்டாள் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், அய்யனாரே காலையிலேயே என் பொண்டாட்டி கூட உன்ன பார்க்க வருகிறேன்யா என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்த கட்டில் மேல் உட்கார்ந்து கொண்டான்.
மேலும் சிறிது நிமிடங்கள் கடந்து செல்ல தாமரை வெளியில் வருவது போல தெரியவில்லை. இன்னும் என்ன பண்றா? ரெஸ்ட் ரூம் போனாளா இல்லை அங்கே பாய் போட்டு படுத்துட்டாளா என்றவாறு எழுந்து போய் கதவைத் தட்டியவன் அடியேய் இருக்கியா இல்லை உள்ளவே தூங்கிட்டியாடி என்றான்.
கதிரின் சத்தம் கேட்ட பிறகு தான் நிகழ்விற்கு வந்தவள் படிச்சிக்கிட்டு இருக்கேன் என்றாள்.
அதானே ஊர் திமிரு போகாதேயென்று முணுமுணுத்தவன் பாடம் சொல்லிதர வாத்தியார் நான் வெளியே இருக்கேன்டி என்க, போயா மக்கு வாத்தி என்று சிரித்தவள் இதோ வந்துட்டேன் என்று சொல்லிவிட்டு தலை குளித்து முடித்தவளுக்கு அப்பொழுது தான் மாற்றுடை எடுக்காமல் வந்தது நினைவு வந்தது.
அட அய்யனாரே என்று தலையில் கை வைத்தவள் நீங்க இங்க இருக்கீங்களா என்க, உள்ள தான் டி இருக்கேன் என்று சொன்னான்.
சரி வெளியே போங்களென்க,முடியாது வெளியே எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க. ஒரு பக்கம் மழை பெய்ஞ்சிட்டு இருக்கு நான் எங்கையும் போக முடியாதுடி இந்த ரூம்ல தான் இருப்பேன் என்று சொல்ல, அய்யோ இந்த மனுஷன் வேறு புரிஞ்சுக்க மாட்டேங்குறாரே என்ன பண்றது என நினைத்தவள் சரி வேற வழியில்லை.
விஷயத்தை சொல்லித்தான் ஆகணும்.ஏங்க மாத்திக்க டிரஸ் எடுக்காமல் வந்தேட்டேன் ப்ளீஸ் வெளியில போங்க என்று சொல்ல, பால்கனியின் கதவை திறக்கும் சத்தம் கேட்டது.
வேகமாக கதவை திறந்து வெளியே வந்தவள்,கொடியில் இருந்த டவளை எடுத்து போர்த்த போக அதிர்ந்து போனாள்.
இந்த மழையில் எதுக்கு பச்ச தண்ணியில் குளிச்சடி என்றவாறு பனி துளிகள் போல அங்கங்கே இருக்கும் நீர் திவளையில் விரல்களால் கோலம் போட்டபடி கதிர் கேட்க, தாமரையோ வார்த்தை வராமல் வாயடைத்து போனாள்.
எவ்வளவு மென்மையா இருக்கடி என்றவாறு அவளின் கைகளில் கோலம் போட்டபடி விரல்களை பிடிக்க கோயிலுக்கு போகணுமென்றாள்.
போ...
உன்னை யாரு வேண்டாமென்று சொன்னாங்களென அவள் காதோரம் கேட்க, அது வந்து வந்து என்று வார்த்தைகள் வராமல் தடுமாற...
மேலும் மனைவியை சோதிக்க விரும்பாமல் சரி தலையை துவட்டிட்டு சீக்கிரமா டிரஸை மாத்துடி என்றவாறு பால்கனிக்கு சென்றவன் ஸ்சூஊஊஊஊ.... இவள் இப்படி இருந்தால் கதிரு உன் பாடு அதோ கதிதான் என்றவன் கண்களை மூடி சற்று முன்னர் மனைவி நிற்கும் கோலத்தை நினைத்து பார்க்க அந்த முறுக்கு மீசைக்காரனுக்கு சிரிப்பு வந்தது.
தனது சூட்கேஸை திறந்து வேக வேகமாக டிரஸை எடுத்து மாற்றியவள் கண்ணாடி முன்பு போய் நின்று நெற்றியில் பொட்டை வைத்து பார்க்க, ஏனோ இன்று புதிதாய் இருப்பது போல உணர்ந்தவள் தலையை துவட்டியபடியே பால்கனிக்கு வரவும், அங்கு கதிரோ தூணின் மேல் சாய்ந்த படி மழையை பார்க்க....
இப்பொழுது கணவனின் உருவத்தை ரசித்து பார்த்தவள் முரட்டுபயலா இருப்பான் போலவேடி என்று சொல்லிக்கொண்டாள்.
பொறுமையாக அவனருகில் சென்றவள் சிறிது இடைவெளி விட்டு நின்று மாமா என்க வெறும் காத்து மட்டும் தான் வந்தது.
ஆண்டவா சோதிக்காதேயென தனக்குள் சொல்லியவள் மாமா என்க பட்டென்று திரும்பினான்.
ஏய் இப்போ கூப்பிட்டதானடி என்க...
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் மாமா என்றாள்.தாமரையென்று அவளை தொட போக குளிச்சிட்டு கோயிலுக்கு போகணும் அழுக்கு பையனா இருக்கீங்க என்னை தொடாதீங்களென்றாள்.
நிலவை பார்த்து வானம்
சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி என்னை தொடாதே என்று பாட...
ஹலோ.... மிஸ்டர் மாயாண்டி...இந்த நடிப்பை சிவாஜி படத்திலே பார்த்தாச்சு.
ரொம்ப எனக்கு படம் ஓட்டாதீங்க. போய் குளிச்சிட்டு வாங்களென்றாள்.
போறோன்டி போறேனென்று முணு முணுத்துக்கொண்டே அங்கிருந்து கதிர் சென்று விட, தாமரைக்கு சிரிப்பு வந்தது.
கதிரும் குளித்துவிட்டு வேறு உடையை மாற்றிக் கொள்ள, உள்ளே வந்தவள் தனது நீண்ட கூந்தலை பின்னி ஹேர்பேண்ட் போட்டு விட்டு கீழே போகலாம் மாமா என்றாள்.
ஏய் இப்படி சும்மா மாமா மாமா என்று கூப்பிட்டு உசுப்பேத்தாதடி என்றான்.
சரிடா மாயாண்டி என்றாள்...
எதே என்று கதிர் அதிர எஸ்சூஊஊஊ என்றவள் ம்ம் வாங்க என்றவாறு முன்கதவை திறந்தாள்.
பின்னர் இருவரும் இணைந்தே மாடிப்படியில் இறங்கி வர, காலடி சத்தம் கேட்டு டீ எடுத்து வந்த ராதா, கதிருதான் என்று நினைத்து கிச்சன் பக்கம் திரும்பி நின்று,அக்கா கதிருக்கும் டீ ஊற்று என்றவர் மீண்டும் மாடிப்படியை பார்க்க அங்கே வரும் மருமகளை பார்த்து தாமரைஐஐஐஐ என்று அதிர்ந்தார்.
ஆஆஆ...என்று கத்தியவனை பார்த்து முறைத்தவள் ஏன்யா இப்படிதான் தள்ளி விடுவதா என்க...
ஏய் ரொம்ப அடி பட்டுடுச்சாடி என்று அவள் இடுப்பில் கை வைக்க போக ம்ம் என்று முறைத்தவளை பார்த்தவன் மன்னிச்சிக்கோ தாமரை.உண்மையிலே இது கனவா இல்ல நிஜமாடி என்றான்.
அடப்பாவி புருசா...
உன்னை பார்க்க அடிச்சி புடிச்சி அந்த நாட்டிலிருந்து ஓடி வந்தாள் இவன் என்ன இப்படி கேட்குறானென்று நினைத்தவள் எட்டி அவன் மீசையை பிடித்து திருக அதில் வலி வந்தது.
ஏன்டி என முகத்தை சுருக்கி கதிர் கேட்க, நிஜம் தான் யா நம்புயென்றாள்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு பார்த்த தனது காதல் மனைவியை இப்பொழுது தான் விளக்கின் வெளிச்சத்தில் விழிகளை சுருக்கி நன்கு உற்றுப் பார்த்தான்.கதிரின் லேசர் பார்வையில் தாமரைக்கு ஒருவித குறுகுறுப்பை ஏற்படுத்தியது.
இவ்வளவு நேரம் அடாவடி பெண்ணாக இருந்தவள் இப்பொழுது தன் கணவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்தாள்.
தாமரை என்று எட்டி அவள் கையை பிடித்து இழுக்க பல்லி போல அவன் நெஞ்சில் ஒட்டியவளுக்கு நடுக்கம் வந்தது.
கதிர் பனியன் போட்டிருந்ததால் அவன் நெஞ்சின் ரோமங்கள் தாமரையின் முகத்தில் பட்டு கூச்சத்தை குடுக்க,ம்ம் என அவனிடமிருந்த விலக போனவளை இறுக்கி அணைத்தவன் கொஞ்ச நேரம் சும்மா இருடி.உன்னை ஒன்னும் முழிங்கிடமாட்டேன் என்றான்.
ஆமாம் அப்படியே முழிங்கிட்டாலுமென்று தாமரை முணு முணுக்க, ஏய் என்னடி சொன்னயென்று அவள் காதோரம் கேட்க தாமரைக்கு தான் கணவனின் தீண்டல்கள் பெரும் அவஸ்தையாக இருந்தது.
அவன் அணைவிற்குள் இருந்தவள் நெளிய மேலும் அவளை சோதிக்க விடாமால் எப்படி இருக்கடி என்றான்.
ம்ம் என்று கோவம் பொங்க முறைத்தவள் ஏண்டா ஒருத்தி நாட்டை விட்டு போனாளே என்னாச்சி ஏதாச்சினு ஒரு போன் பண்ண உனக்கு துப்பு இல்லையா என்று தனது இரண்டு கைகளாலும் கணவனை அடித்தவள் அவன் நெஞ்சின் மீது சாய்ந்து அழுதாள்.
மாமா என்ன மறந்துட்டாய் தானே என்று தாமரை கேட்க,தன்னவள் முதன் முதலில் மாமா என்று அழைத்தது கதிருக்கு சில்லென்ற பனிக்காற்று வீசியது போல குளிர்ச்சியாக இருந்தது.
ஏய் இப்போ எப்படி கூப்பிட்ட மீண்டும் ஒருமுறை கூப்பிடு என்று சொல்ல அப்பொழுது தான் ஐயோ மனசுல பேசுவதாக நினைச்சுட்டு வாயை விட்டு பேசிட்டேனே என்று தனது நாக்கை கடித்துக்கொண்டாள்.
அடியேய் உன்னை தான்டி கேட்குறேன்?
எப்படி கூப்பிட்ட சொல்லு என்க, நான் ஒன்னும் சொல்லவில்லையே என்று சாதித்தவள் என்னை விடுங்க ரெஸ்ட் ரூம் போகணுமென்றாள். ம்ம் போகலாமே என்றான்.
ஹலோ மிஸ்டர் முறுக்கு மீசை உங்களோட ஜோடி போட்டு போக அது என்ன பார்க்கா.. போயா என்றவள் விட்டால் போதுமென்று வேகமாக கதவை திறந்து உள்ளே போய் தாழ்ப்பாள் போட்டவளுக்கு இவ்வளவு நேரம் கணவனின் அணைப்பில் இருந்தது வெட்கம் வர முகத்தை மூடியவள் அங்கிருந்த கதவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.
கதிரோ சந்தோஷத்தில் துள்ளி குதித்தான். நிச்சயமா அவளுக்கு என் மேல் காதல் இருக்கு. அதனால் தான் இந்த நாளுக்கு சரியா வந்துட்டாள் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், அய்யனாரே காலையிலேயே என் பொண்டாட்டி கூட உன்ன பார்க்க வருகிறேன்யா என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்த கட்டில் மேல் உட்கார்ந்து கொண்டான்.
மேலும் சிறிது நிமிடங்கள் கடந்து செல்ல தாமரை வெளியில் வருவது போல தெரியவில்லை. இன்னும் என்ன பண்றா? ரெஸ்ட் ரூம் போனாளா இல்லை அங்கே பாய் போட்டு படுத்துட்டாளா என்றவாறு எழுந்து போய் கதவைத் தட்டியவன் அடியேய் இருக்கியா இல்லை உள்ளவே தூங்கிட்டியாடி என்றான்.
கதிரின் சத்தம் கேட்ட பிறகு தான் நிகழ்விற்கு வந்தவள் படிச்சிக்கிட்டு இருக்கேன் என்றாள்.
அதானே ஊர் திமிரு போகாதேயென்று முணுமுணுத்தவன் பாடம் சொல்லிதர வாத்தியார் நான் வெளியே இருக்கேன்டி என்க, போயா மக்கு வாத்தி என்று சிரித்தவள் இதோ வந்துட்டேன் என்று சொல்லிவிட்டு தலை குளித்து முடித்தவளுக்கு அப்பொழுது தான் மாற்றுடை எடுக்காமல் வந்தது நினைவு வந்தது.
அட அய்யனாரே என்று தலையில் கை வைத்தவள் நீங்க இங்க இருக்கீங்களா என்க, உள்ள தான் டி இருக்கேன் என்று சொன்னான்.
சரி வெளியே போங்களென்க,முடியாது வெளியே எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க. ஒரு பக்கம் மழை பெய்ஞ்சிட்டு இருக்கு நான் எங்கையும் போக முடியாதுடி இந்த ரூம்ல தான் இருப்பேன் என்று சொல்ல, அய்யோ இந்த மனுஷன் வேறு புரிஞ்சுக்க மாட்டேங்குறாரே என்ன பண்றது என நினைத்தவள் சரி வேற வழியில்லை.
விஷயத்தை சொல்லித்தான் ஆகணும்.ஏங்க மாத்திக்க டிரஸ் எடுக்காமல் வந்தேட்டேன் ப்ளீஸ் வெளியில போங்க என்று சொல்ல, பால்கனியின் கதவை திறக்கும் சத்தம் கேட்டது.
வேகமாக கதவை திறந்து வெளியே வந்தவள்,கொடியில் இருந்த டவளை எடுத்து போர்த்த போக அதிர்ந்து போனாள்.
இந்த மழையில் எதுக்கு பச்ச தண்ணியில் குளிச்சடி என்றவாறு பனி துளிகள் போல அங்கங்கே இருக்கும் நீர் திவளையில் விரல்களால் கோலம் போட்டபடி கதிர் கேட்க, தாமரையோ வார்த்தை வராமல் வாயடைத்து போனாள்.
எவ்வளவு மென்மையா இருக்கடி என்றவாறு அவளின் கைகளில் கோலம் போட்டபடி விரல்களை பிடிக்க கோயிலுக்கு போகணுமென்றாள்.
போ...
உன்னை யாரு வேண்டாமென்று சொன்னாங்களென அவள் காதோரம் கேட்க, அது வந்து வந்து என்று வார்த்தைகள் வராமல் தடுமாற...
மேலும் மனைவியை சோதிக்க விரும்பாமல் சரி தலையை துவட்டிட்டு சீக்கிரமா டிரஸை மாத்துடி என்றவாறு பால்கனிக்கு சென்றவன் ஸ்சூஊஊஊஊ.... இவள் இப்படி இருந்தால் கதிரு உன் பாடு அதோ கதிதான் என்றவன் கண்களை மூடி சற்று முன்னர் மனைவி நிற்கும் கோலத்தை நினைத்து பார்க்க அந்த முறுக்கு மீசைக்காரனுக்கு சிரிப்பு வந்தது.
தனது சூட்கேஸை திறந்து வேக வேகமாக டிரஸை எடுத்து மாற்றியவள் கண்ணாடி முன்பு போய் நின்று நெற்றியில் பொட்டை வைத்து பார்க்க, ஏனோ இன்று புதிதாய் இருப்பது போல உணர்ந்தவள் தலையை துவட்டியபடியே பால்கனிக்கு வரவும், அங்கு கதிரோ தூணின் மேல் சாய்ந்த படி மழையை பார்க்க....
இப்பொழுது கணவனின் உருவத்தை ரசித்து பார்த்தவள் முரட்டுபயலா இருப்பான் போலவேடி என்று சொல்லிக்கொண்டாள்.
பொறுமையாக அவனருகில் சென்றவள் சிறிது இடைவெளி விட்டு நின்று மாமா என்க வெறும் காத்து மட்டும் தான் வந்தது.
ஆண்டவா சோதிக்காதேயென தனக்குள் சொல்லியவள் மாமா என்க பட்டென்று திரும்பினான்.
ஏய் இப்போ கூப்பிட்டதானடி என்க...
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் மாமா என்றாள்.தாமரையென்று அவளை தொட போக குளிச்சிட்டு கோயிலுக்கு போகணும் அழுக்கு பையனா இருக்கீங்க என்னை தொடாதீங்களென்றாள்.
நிலவை பார்த்து வானம்
சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி என்னை தொடாதே என்று பாட...
ஹலோ.... மிஸ்டர் மாயாண்டி...இந்த நடிப்பை சிவாஜி படத்திலே பார்த்தாச்சு.
ரொம்ப எனக்கு படம் ஓட்டாதீங்க. போய் குளிச்சிட்டு வாங்களென்றாள்.
போறோன்டி போறேனென்று முணு முணுத்துக்கொண்டே அங்கிருந்து கதிர் சென்று விட, தாமரைக்கு சிரிப்பு வந்தது.
கதிரும் குளித்துவிட்டு வேறு உடையை மாற்றிக் கொள்ள, உள்ளே வந்தவள் தனது நீண்ட கூந்தலை பின்னி ஹேர்பேண்ட் போட்டு விட்டு கீழே போகலாம் மாமா என்றாள்.
ஏய் இப்படி சும்மா மாமா மாமா என்று கூப்பிட்டு உசுப்பேத்தாதடி என்றான்.
சரிடா மாயாண்டி என்றாள்...
எதே என்று கதிர் அதிர எஸ்சூஊஊஊ என்றவள் ம்ம் வாங்க என்றவாறு முன்கதவை திறந்தாள்.
பின்னர் இருவரும் இணைந்தே மாடிப்படியில் இறங்கி வர, காலடி சத்தம் கேட்டு டீ எடுத்து வந்த ராதா, கதிருதான் என்று நினைத்து கிச்சன் பக்கம் திரும்பி நின்று,அக்கா கதிருக்கும் டீ ஊற்று என்றவர் மீண்டும் மாடிப்படியை பார்க்க அங்கே வரும் மருமகளை பார்த்து தாமரைஐஐஐஐ என்று அதிர்ந்தார்.