• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சீமக்கரை.....

மூவரும் பேசிக்கொண்டே பக்கத்து டவுனாகிய தேனூருக்கு வந்தனர்.
தேனூர் தான் சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை கிராமத்திற்கும் பொதுவான டவுன்.

"எந்த பொருள் வேண்டுமென்றாலும் சுற்று வட்டார மக்கள் அனைவரும் இங்கு தான் வர வேண்டும். அதே போல் வெளி மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றாலும், தங்கள் ஊருக்கு வரும் டவுன் பஸ்ஸில் ஏறி இங்கு தான் வர வேண்டும்.

"அதனால், தேனூர் எப்போதும் பரபரப்பாக தான் இருக்கும். அதற்கு முக்கிய காரணமும் அங்கிருக்கும் சர்க்கரை ஆலை மற்றும் நூல் கம்பெனி இரண்டும்.இன்னும் ஊரின் உள்ளே இருக்கும் கடைவீதிக்கு சென்றால் தான் தாமரை கேட்ட மெஷின் எல்லாம் கிடைக்கும் என்பதால்,மாமா ஒரு டீ குடிக்கலாமா என்று கேட்டான் சிவா வண்டியில் போகும்போது.

"சரிடா என்றவன் வழக்கமாக குடிக்கும் டீக்கடையின் அருகே சென்று வண்டியை நிறுத்தி விட்டு இறங்கியவர்கள், தாமரை பார்க்க,எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.பிறகு இருவரும் டீ யை குடித்து முடித்து பின் அதற்கான காசை கொடுத்து விட்டு, வண்டியில் ஏறி கடைதெருவை நோக்கி சென்றனர்.

" சாகித் தையல் மெஷின் சேல்ஸ்& அன்ட் சர்வீஸ்... என்ற கடையின் முன்னே வந்து வண்டியை நிறுத்தி விட்டு, மூவரும் உள்ளே சென்றனர். கடையினுள்ளே இருந்த நடுத்தர வயதானவரோ, சொல்லுங்கப்பா என்ன வேண்டும் என்று கேட்க, தையல் மெஷின் தான் வேண்டுமென்றாள் தாமரை.

" தாமரை சொன்னதைக் கேட்டு வளவனுக்கு சிரிப்பு வந்தது.தனது பக்கத்தில் நிற்கும் சிவாவின் காதில் என்னடா உங்க அக்கா காமெடி பண்றா?,மெஷின் கடைக்கு வந்து அதை தானே வாங்க முடியும் என்று சிரிக்க, மாமா,அவளை விட கூறு கெட்டவன் அந்த கடைக்காரர் தான். இந்த கடையில் காய்கறியா வாங்க வருவாங்க அவள போய் என்ன வேணும்னு கேக்குறான் என்று சிவா சொல்ல,இருவர் பேசுவதும் அவள் காதில் விழுந்தது.

"திரும்பிப் பார்த்தவளுக்கு ஒன்னும் இல்லை என்று இருவரும் தலையசைத்து சொல்ல, உள்ளே வாங்கமா என்றவர், அங்கிருந்து உள்ளே இருக்கும் கதவை திறந்து விட ,அவரோடு மூவரும் உள்ளே சென்று பார்க்க, அங்கு ஏராளமான புதிய மாடல் மெஷின்களும்,செகண்ட் ஹேண்ட் மெஷின்களும்,மிகவும் பழமையான மெஷின்களும் இருந்தது.

"இதில் உனக்கு என்ன வேணும்னு பாரும்மா என்று கடைக்காரர் சொல்ல சரிங்க ஐயா என்றவள், ஒவ்வொரு மெஷினாக பார்த்துக் கொண்டே சென்றாள் தாமரை.சிவா, உன் அக்கா பார்த்துட்டு வரட்டும் வாடா நாம வெளியில இருக்கலாம் என்க,சரி மாமா என்றவன், அக்கா நீ மெஷினை பார்த்துட்டு வா நாங்க வெளியில இருக்கோம் என்று சொல்லி விட்டு கதவை திறந்து இருவரும் வெளியே சென்றனர்.

"அரை மணி நேரம் சென்றது. கதவை திறந்து வந்தவளிடம் என்னமா உனக்கு எந்த மிஷின் வேணும்னு பாத்துட்டியா என்று கேட்க, பாத்துட்டேன் ஐயா என்று சொன்னவளிடம், வந்து காட்டும்மா என்று சொல்லி குடோன் உள்ளே சென்றவருக்கு மெஷினை காட்ட, இதோட விலை 7500 என்றவர்,இரண்டு வருஷத்து யூஸ் தான், ஆனால் புதுசு போலவே இருக்கு பாரும்மா என்றார்.

அவர் சொன்னதும் உண்மைதான். அதைப் பார்த்தால் இரண்டு வருடத்தின் மெஷின் போல தெரியவில்லை.புத்தம் புதுசாகத்தான் இருந்தது. அதிகமாக யூஸ் பண்ணவில்லை என்று பார்த்த உடனே கண்டுபிடித்து விட்டாள் தாமரை. சரிங்கைய்யா,விலையை குறைத்து சொல்லுங்கள் என்றவளுக்கு, நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், இனி நீங்க தான் சொல்லனும்மா என்றார் அவர்.

"அஞ்சு 500 போட்டுக்கொள்ளுங்கள் என்றவளுக்கு, ரொம்ப விலைய குறைக்கிறியேம்மா என்றவர், இன்னும் 500 சேர்த்து ரவுண்டா குடுத்துடும்மா என்றவருக்கு, பரவாயில்ல எல்லாம் கட்டுபடி ஆகும் கொடுங்கள் என்றாள். சில நொடி யோசித்தவர், சரி மா காலையிலே முதல் வியாபாரம். உன்னை விடவும் எனக்கு மனசு வரலை. நீ கேட்ட விலையிலேயே தரேன் என்று சொன்னவர், வெளியே நின்ற கடைப்பையனை கூப்பிட்டு,
மெஷினை காட்டி, பேக் பண்ணி எடுத்துவர சொன்னார்.

" மெஷினின் விலையை கேட்டு,
அம்மா கொடுத்த பணத்தை எடுத்துக் கொடுத்தான் சிவா.அதை வாங்கியவர், மாஷா அல்லாஹ் என சொல்லி டிராவில் போட்டுக்கொண்டு, அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

" அவரிடமே நல்ல துணி மெட்டீரியல் எங்கு கிடைக்கும் என தாமரை கேட்க, தனக்கு தெரிந்த கடையின் பெயரை சொன்னவர், அதும் எங்களுடைய கடை தான் நீங்க போய் சொல்லுங்க சாதிக் பாய் அனுப்புனாங்கன்னு நான் போன்ல பேசிக்கிறேன் என்றார் சாதிக் பாய்.

அப்போ,முதல்ல துணி மெட்டீரியல், நூல் கண்டு எல்லாம் வாங்கிட்டு வந்துரலாம். பிறகு, இந்த மிஷினை எடுத்துக்கலாம் சிவா என்றவள், இது ஓகே தானே மாமா என வளவனிடம் கேட்க, அவள் மாமா என்று கூப்பிட்டதிலேயே இறக்கையின்றி ஆகாயத்தில் பறப்பதை போல உணர்ந்தான் வளவன்.

"மேலும் சிறிது நிமிடம் அழுத தேவி,எழுந்து தனது போனை எடுத்து கதிர் நம்பருக்கு அழைத்தாள்.மூன்று முறை அழைத்தும் அவன் எடுக்கவே இல்லை.மீண்டும் அவன் நம்பருக்கு கால் பண்ண,நாலாவது கால் அட்டென்ட் பண்ணியவன், சொல்லு தேவி என்ன விஷயம்? என்று கேட்க,மாமா நான் உயிரோடு இருக்கனுமா?, இல்லை வேண்டாமா?.

"என்ன முட்டாள் தனமாக பேசிட்டு இருக்க? எனக்கு வேலை இருக்கு சொல்லு,என்ன விஷயம் என்க, நீங்கள் எனக்கு இன்னைக்கு ஒரு பதில் சொல்லியே ஆகணும் என்றாள்.

"நாலு வருஷமா உனக்கு பதில் சொல்லிக்கிட்டு தான் இருக்கேன், இன்னும் என்ன பதில் என்கிட்ட எதிர்பார்க்கிற நீ என்றவன், பொண்டாட்டியா ஒரு போதும் உன்னை என்னால் நினைத்து பார்க்கவே முடியாது.உன்னால முடிஞ்சதை நீ பார்த்துக்கோ என்று சொல்லி கட் பண்ணியவன், பிறகு தனது போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டான்.

"மீண்டும் அவன் நம்பருக்கு அவள் கால் பண்ண சுவிட்ச் ஆஃப் சுவிட்ச் ஆஃப் என்ற குரல் தான் கேட்டது.மகளின் அறைக்கு வந்த வசந்தி,தேவி சாப்பிட வா என்க சாப்பாடு ஒன்னு தான் இப்போ எனக்கு குறைச்சலென்றாள்.

வீணாக மனசுல ஆசையை வளர்த்து கிட்டது நீ.அந்த தம்பிக்கு இஷ்டம் இல்லைனு தெரிஞ்சும் அந்த தம்பி தான் வேணும்னு அடம் பிடிப்பது உன் தப்பென்கும் அம்மாவை முறைத்து பார்த்தவள்,நீ எல்லாம் ஒரு அம்மாவா?..

"மகளுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கனும்னு நினைக்காமல் அந்த மனுஷனுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்கியே?

நீ மட்டும் ஆசைப்பட்டா போதாது.கதிர் தம்பிக்கும் இந்த எண்ணம் இருக்கனுமே, விருப்பமில்லாமல் கட்டிக்க யாருக்கு தான் பிடிக்கும்.

நீ ஆசைப்பட்டதும் வாங்கி கொடுக்க இது ஒன்றும் கடையில் விக்கின்ற பொருள் கிடையாது வாழ்க்கை உன்னோட விருப்பம் மட்டும் முக்கியம் கிடையாது என்றவர் ஒழுங்கா வந்து சாப்பிடு, இல்லை பட்னி கிடனு அங்கிருந்து சென்றார்.

"வயலில் நாற்று நடுபவர்களுக்கு , நாற்றுக்கட்டை எடுத்து வீசிக்கொண்டிருந்தவனின் சிந்தனைகள்,செல்லை ஆப் பண்ணி வச்சாலும் கிறுக்குத்தனமா எதையாவது செஞ்சு நம்ம உயிரை வாங்கிட போறாளோ?என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

"கடந்த சில நிமிடமாக பேரனின் முகத்தை கவனித்து கொண்டிருந்த பிரகாசம் என்னாச்சு இவனுக்கு? என யோசனையானார்.சரி,கத்திரிக்கா முத்தினால் கடைக்கு வந்து தானே ஆகணுமென்று முணுமுணுத்தவர், நடவை கவனிக்க தொடங்கினார்.

"சில பட்டத்தில் ஒவ்வொரு நாற்றுக்கும் அதிக இடைவெளி இருப்பதை கண்டு, எம்மா ரெண்டு ஆளு நடந்து போவலாம் போல,இன்னும் கொஞ்சம் நெருக்கி நடுங்கம்மா என பிரகாசம் சொல்ல, மாமனுக்கு கண்ணு நல்லா தெரியுதானு எங்களுக்குள் சின்ன போட்டி,அதான் சோதிச்சோம் மாமா என சொல்லிக்கொண்டே நாற்றை சேற்றில் நட்டார் நடுத்தர வயது உள்ள பெண்மணி ஒருவர்.

அதுசரி.... என்றவர்,உங்க அத்தைகாரி கிட்ட இந்த கேள்வியை கேளுங்கம்மா என்று சிரித்தார்.ம்ம்.அத்தை தானே, நல்லா சொல்லுவாங்க மாமா என்றார் இன்னொரு பெண்மணி.

"கதிருக்கு அவர்கள் பேசுவது எதுவும் காதில் விழவில்லை.அவன் சிந்தனைகளோ தேவி சொல்லியதிலே இருக்க,ஒரு கட்டத்தில் கையிலிருந்த நாற்று முடியை அப்படியே சேற்றில் போட்டு விட்டு கரையில் ஏறி,மரத்தடியில் தொங்கிக் கொண்டிருந்த தனது சட்டை பாக்கெட்டில் இருக்கும் செல்போனை எடுத்து ஆன் பண்ணியவன்,தேவ் நம்பருக்கு அழைத்தான்.

வண்டியில் சென்று கொண்டிருந்த தேவ்க்கு,பாக்கெட்டில் ஒலிக்கும் செல்போன் சத்தம் கேட்க,ஓரமாக நிறுத்தி விட்டு,யார் என்று பார்க்க அதில் கதிர் என்று வந்தது.

பின் அட்டென்ட் பண்ணி சொல்லுங்க மச்சான் என்க,மாமா எங்க இருக்கீங்க என்றான் கதிர்.டவுனுக்குதான் போறேன் மச்சான் சொல்லுங்க என்றான் தேவ்.

"பிறகு,தேவி போன் பண்ணி சொன்ன விஷயத்தை சொல்ல,அதைக்கேட்டவன், நீங்கள் இதை பெருசா எடுத்துக்காதீங்க மச்சான்,நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி அழைப்பை கட் பண்ணியவனுக்கு தங்கையின் மீது கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது.முதல்ல இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என்று சொல்லியவன், வண்டியை திருப்பி வீட்டை நோக்கி சென்றான்.

"தேவ் கிட்ட விஷயத்தை சொல்லியவனோ,மீண்டும் செல் போனை பாக்கெட்டில் போட்டு விட்டு, தூரத்தில் நடக்கும் வேலையை பார்க்க, அங்கே ஆட்கள்,அண்டை வெட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது..

"பின்னர்,மீண்டும் நாற்று எடுத்துப்போடும் வேலையை தொடர்ந்தான்.நடவு நடும் பெண்களோ, பிரகாசம் தாத்தாவிடம் வம்பு இழுத்துக்கொண்டே வேலையை செய்ய,அவரும் அவர்களுக்கு சரிசமமாக பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தார்.

"உச்சியில் வெயில் ஏறும் போது, அனைவருக்கும் டீ யும், வடையும் முத்து எடுத்து வர,வேலை செய்து கொண்டிருந்த பெண்களெல்லாம் நடவு வயலுக்கு பக்கத்தில் ஓடும் சிறு வாய்காலில் கை,கால்களை கழுவி விட்டு,மரத்து நிழலில் அமர,ஒரு முதிய பெண்மணியோ அனைவருக்கும் டீ மற்றும் வடையை பகிர்ந்து கொடுத்தார்.

"சரிப்பா,நான் போய் அண்டை வெட்டுறவங்களுக்கு கொடுத்து வரேனென்று சொல்லியவன்,அங்கு வேலையாட்களுக்கு தேவையானதை எடுத்து போய் கொடுத்து விட்டு,இதுவரை அவர்கள் செய்த வேலையையும் கவனித்து விட்டு இங்கே வந்தவன் அவனது பங்கை எடுத்து சாப்பிட்டான்.

"மேலும் சிறிது நிமிடங்கள் ஓய்வு எடுத்த பெண்கள்,மீண்டும் எழுந்து போய் வேலையை தொடர்ந்தனர்.மரத்தின் நிழலில் உட்க்கார்ந்திருந்த பிரகாசத்திடம்,அப்பா ஒரு விஷயம் என்றார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
"வேலையை கவனித்து கொண்டே, ம்ம் சொல்லு தம்பி என்க,காலையில் கண்ணன் வந்ததையும்,அவர் சொன்ன விஷயத்தையும் அதற்கு கதிர் சொன்ன பதிலையும் முத்து சொல்ல, பிரகாசத்திற்கு பேரனின் முக மாற்றத்திற்கான காரணம் தெரிந்தது.

"கதிருக்கு கல்யாண வயசும் வந்துட்டுப்பா என்ற மகனுக்கு, உம்மவனுக்கு ஏற்றவள் இனி புதுசா பொறக்க போறது இல்லை.கால நேரம் கூடி வந்தால் எல்லாம் நல்லதே நடக்கும், எனக்கும் கண்ணன் மவளை கட்ட இஷ்டம் இல்லை.

"அநியாயமா ஒரு பொண்ண பற்றி குறை சொல்ல கூடாது,ஆனால் அந்த பொண்ணு கிட்ட,அடக்கம், பொறுமையெல்லாம் இருக்க போல தெரியலை நான் கவனிச்ச வரைக்கும் என்றார் அந்த அனுபவம் வாய்ந்த முதியவர்.

தேவி வீடு...

சிறிது நிமிடத்தில் வீட்டிற்கு வந்த தேவ்,வண்டியை வாசலில் நிறுத்துவிட்டு,தேவி தேவி என்று கத்திக்கொண்டே உள்ளே வந்தான்.

"அண்ணனின் குரல் கேட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவளை பார்த்தவன்,ஓங்கி அறைய கீழே விழுந்தாள்.மகனின் சத்தம் கேட்டு மாடியில் இருந்து கீழே வந்தவர்,மகன் மகளை அடிப்பதை பார்த்து,என்னடா ஆச்சு என்க,என்ன ஆகலை?,உங்க பொண்ணு என்ன பண்ணி வச்சிருக்கானு தெரியுமா என்றவன், கதிர் சொன்னதை சொன்னான்.

மகன் சொன்னதைக் கேட்டவர் தேவி இதுவரைக்கும் அன்பான அப்பாவ தான் பாத்துட்டு இருக்க,அது தான் உனக்கு நல்லது.இனிமே இந்த வீட்டை தாண்டி நீ வெளிய போனினா,அது உன் கல்யாணத்துக்காக தான் இருக்கணும் என்றவர்,வசந்தி நேத்து ஒரு ஜாதகம் வந்துச்சே அதை எடுத்து வை நான் போய் ஜோசியரை பாத்துட்டு வரேன் என்றவர்,மகளை ஒரு முறை முறைத்து விட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார்.

வாங்கிய அறையில் அழுது கொண்டிருந்தவள் யாருக்கும் என் சந்தோஷம் பெருசா தெரியவில்லையா என்க,சந்தோஷம் சந்தோஷம் உனக்கு மட்டும் விருப்பம் இருந்தா போதுமா? பிடிக்காதவனை கட்டிக்கிட்டு நீ என்ன வாழ போற என்று கோபமாக கேட்டான்.

எனக்கு பிடிச்சிருக்கு என தேவி சொல்ல,உனக்கு மட்டும் பிடிச்சா போதாது,அவனுக்கு விருப்பம் இல்லன்னு உன்கிட்ட பலவாட்டி சொல்லி இருக்கிறான் அது தெரிஞ்சு சும்மா நீ அவனை தொந்தரவு பண்ணிட்டே இருப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று தங்கைக்கு புரிய வைக்க முயற்சித்தான் தேவ்.

தேவ் எவ்வளவோ அவளுக்கு எடுத்து சொல்லி,ஓரளவுக்கு அவள் மனநிலையை மாற்ற முயற்சித்தும் பலனில்லை.எப்படியோ போ என்றவன், வெளியே நிற்கும் வண்டியில் ஏறி தனது வேலையை பார்க்க சென்றுவிட்டான்.

"வசந்திக்கு தான் மகளை நினைத்து வேதனையாக இருந்தது. எல்லாத்துலையும் பிடிவாதம்.சிறு வயதிலேயே அவள் அடம்பிடிக்கும் போதெல்லாம் வசந்தி கண்டிக்க வர, கண்ணனோ என் மகள் என் மகள் என்று தூக்கி வைத்து அவள் ஆசைகளை நிறை வேற்றியே பழக்கப்படுத்தியதால் இன்னைக்கு இப்படி வந்து நிற்கிறது என்று புலம்பிக்கொண்டு சமையல் வேலையை செய்தார்.

"அவர் புலம்புவது அங்கு வந்த கண்ணனின் காதில் விழ,முதல் முறையாக மனைவியின் பேச்சை பற்றி யோசிக்க தொடங்கினார்.வசந்தி என்றவரின் குரல் கேட்டு பதறி திரும்ப, ஏண்டி இப்படி?".

சொல்லுங்க என பயத்தோடே கேட்க, ஒரு வாய் காஃபி போட்டு எடுத்துவாயென்று சொல்லி விட்டு, வீட்டு திண்ணையில் சென்று அமர்ந்து கொண்டு,மகளை பற்றி சிந்தித்தார்.

"என்னடி வசந்தி உன் புருஷனுக்கு என்னாச்சு? என உள்ளுக்குள் இருக்கும் மனசாட்சி கேள்வி கேட்க,யாருக்கு தெரியுமென்று சொல்லி விட்டு, காஃபியை எடுத்து போய் கணவரை தேட,அவர் வெளியே உள்ள திண்ணையில் இருப்பது தெரிந்து, கொண்டு போய் இந்தாங்க என்று நீட்ட வாங்கி குடித்தார்.

பின் உள்ளே வந்த வசந்தி, மகளை பார்க்க, அவள் ஷோபாவில் படுத்து அழுது கொண்டிருப்பது தெரிந்தது. பெற்ற மனம் கேட்காமல், தேவி என்று கூப்பிட, தாயின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவளிடம், வந்து சாப்டு என்றார்.

"வேண்டாம்மா என்று சொல்லி அவள் அழ, மகளின் அருகே சென்றவர், மனசை போட்டு குழப்பாம, போய் குளிச்சிட்டு வா, என்றார். என்ன நினைத்தாளோ தெரியவில்லை, முதல் முறையாக தாய் சொல்லியதற்கு மறுப்பு தெரிவிக்காமல், எழுந்து தனது அறைக்கு செல்லும் மகளின் செயலை கண்ட வசந்திக்கு, நெஞ்சு வலிக்காத குறை தான்.

" என்னடி வசந்தி, இன்னும் கொஞ்ச காலம் நீ உசுரோட இருந்து பேரன் பேத்தி பாக்கலாம்னு இருக்கிற ஆசையில் மண்ணு விழுந்திடும் போலையே?,உன் புருஷன் பொண்ணும் நடந்துக்கிற முறையை வைத்து என்று உள்ளுக்குள் சொன்னது அவர் மனசாட்சி.

"தனது ரூமிற்குள் வந்த தேவி, மனசுக்குள் பிளானை போட்டு விட்டு, குளித்து, டிரஸ் மாற்றி வெளியே வந்தவள், அம்மா சாப்பாடு எடுத்து வா என்க, இதோ வரேன் தேவின்னு சொல்லிக்கொண்டே வந்தார் வசந்தி.

"மகளுக்கு தட்டில் உணவை பறிமார, திருப்தியாக சாப்பிட்டவளோ, அம்மா நீங்க சொல்ற போல கேட்குறேன், ஆனால் எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும், சில மாசம் போகட்டும், இதை அப்பா கிட்ட பேசி சம்மதம் வாங்குமா என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.

தேவியின் பேச்சை கேட்டவர், அவள் சொல்வதும் சரி தானென்று தோன்ற, சரிமா, நான் அப்பா கிட்ட பேசுறேன், நீ சந்தோஷமா இரு என்று சொல்ல, ம்ம் மா என்றவள் , எழுந்து தனது அறைக்கு சென்று விட்டாள்.

" மகளின் மாற்றம் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் கொஞ்சம் சந்தேகமாக தான் இருந்தது. சரி,அந்த மாரியாத்தா மேலையே பாரத்தை போடுவோம் என மனதிற்குள் சொன்னவர், கணவரை சாப்பிட கூப்பிட சென்றார் வசந்தி.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top