Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
கதிர் வீடு:
வழக்கமாய் படுத்ததும் உறங்குபவனுக்கு,இன்று ஏனோ எள்ளளவும் உறக்கம் வருவது போல தெரியவில்லை.தன்னை மோதி சென்றவளை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவனோ மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் நடந்து சென்று,சற்று நேரத்திற்கு முன்னர் மர பீரோவில் வைத்த அந்த செயினை எடுத்து வந்தவன் மீண்டும் கட்டில் மீது அமர்ந்து கொண்டு,கண் முன்னால் இருக்கும் செயினை பார்த்தவனுக்கு இதற்கு சொந்தமானவள் யார் என்ற கேள்வியே தொடர்ந்தது.
"இரவு விளக்கின் வெளிச்சத்தில் அந்த டாலர் சரியாக தெரியாததால், அருகிலிருக்கும் சுவிட்ச் பாக்ஸில் லைட்டை ஆன் பண்ணியவன்,இடது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மீண்டும் அந்த செயினை பார்க்க, இப்பொழுது அது வித்யாசமாக தெரிந்தது.
பின் பார்வையை கூர்மையாக்கி அந்த டாலரை பார்த்தவனுக்கு,அதன் கலை நுட்பம் ஆச்சர்யத்தை தந்தது. சிறுதானியமான வரகு அரிசியால் அதில் தாமரை வடிவமும்,மற்ற இடங்களில் கேழ்வரகை கொண்டு நிரப்பட்டிருந்தது.நிச்சயமாக இதை உருவாக்கியவர் பெரும் ரசனைக்காரவங்களென்றான்.
"தன்னை அறியாமல் அந்த டாலரின் மேல் தன் உதட்டை பதித்தவன்,அடியேய்....யார்டி நீ?,எங்கே இருக்கிறடி?இப்படி என்னை புலம்ப வச்சிட்டியேடி என்று சொல்லிக் கொண்டிருந்தவன்,தன் மேல் அவள் விழுந்த போது,அவன் உடலில் மின்சாரம் தாக்கிய போல அதிர்வு வந்ததை நினைத்து பார்க்க ஒரு விதமான சிரிப்பு வந்தது.
"கதிர் பொதுவாகவே யாரிடமும் பேச மாட்டான்".அதும் முறைப்பொண்ணுங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.பட்டும் படாமலும் பதில் சொல்வதே தேவிக்கு மட்டும் தான்.
"பின் லைட்டை ஆப் பண்ணியவன், அந்த டாலரை நெஞ்சில் மீது வைத்துக்கொண்டு,அவளை பற்றி யோசித்தான்.ஆளு அவ்வளவு எடையா இல்லை,பின்ன எப்படி அவள் மோதுன வேகத்தில் நாம கீழ விழுந்தோம் என சிந்தித்தவனுக்கு,அவள் இடையில் தனது கை பட்ட போது இருந்த மென்மையை கண்ணை மூடி நினைவில் கொண்டு வந்து கிறங்கியவன்,எப்போ உறங்கினான் என்று தெரியவில்லை.
"வழக்கம் போல் எழுந்தவனுக்கு கண் எரிவது போல இருக்க, அறையிலிருக்கும் கண்ணாடியில் பார்க்க,கண்கள் இரண்டும் சிவந்திருப்பது தெரிந்தது.பின்,குளித்து தயாராகி கீழே வந்தவன்,தம்பி இவ்வளவு சீக்கிரம் கிளம்பி இருப்பதை வித்தியாசமாக பார்த்தான் .
"அண்ணனும் தன்னை பார்பதை கண்டவன்,அடப்பாவி! சண்டாளா
என தனது அத்தை மகனை மனதிற்குள் திட்டிய வளவன்,ஏதாவது சொல்லி சமாளிடா, இல்லை என்றால் அப்பாயி உன்னை ஒரு வழி பண்ணிடும் என்று முணுமுணுத்தவன்,கொஞ்சம் வேலை இருக்கு அதனாலதான் சீக்கிரம் கிளம்பிட்டேன்.
"அப்பொழுது,சமையல் அறையில் இருந்து டீ எடுத்துக் கொண்டு வந்த செல்வி,என்னடா அதிசயம்!,ஆனால் உண்மை என்று வளவனை பார்த்து சொல்ல,சுண்டெலிக்குலாம் கொடுக்கு முளைக்கும்னு கனவா கண்டேன்.
"ஏய் அண்ணா,சமாளிக்காத சமாளிக்காத.இவ்வளவு சீக்கிரம் நீ எங்க கிளம்பிட்ட?,செகண்ட் ஷிப்ட் என்றாலே காலை பத்து மணி என்பது உனக்கு மிட் நைட் ஆச்சே என்க,மனுஷன் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிட்டேன்.அது பொறுக்கலையா உங்களுக்கு என்றவன்,அம்மாஆஆ டீ குடுமா என்று குரல் கொடுத்துக் கொண்டே அங்கிருந்த டைனிங் சேரில் அமர்ந்தான்.
"வயலுக்கு சென்ற பிரகாசமும், முத்துவும் உள்ளே வர,அவர்களுக்கு நீராகரம் கலந்த மோர் தண்ணியும், மகன்களுக்கு டீயும் எடுத்து வந்து சீதா கொடுத்தார்"
"வளவனை பார்த்த பிரகாசம்,என்ன பா காலை ஷிப்ட்டா என்க,இல்லை பா, பேக்டிரியில் கொஞ்சம் பெண்டிங் வேலை இருக்கு,அதை முடிக்கலான்னு தான் என்க,ம்ம் சாப்பாடு ரெடியா?என மனைவியை பார்த்து கேட்க, இல்லைங்க என்றார்.
"காலையிலேயே வெறும் வயித்தோட அனுப்புறியே அறிவு இருக்கா,இல்லையா?என மனைவியை சத்தம் போட, அதற்கு வளவனோ அப்பா,நான் காலையிலே கிளம்பிடுவேன்னு அம்மாவுக்கு தெரியாது என்றான்.
"அதைக்கேட்டு ஓஓஓ என்றவர்,இரு எதாவது உங்கம்மா செஞ்சி தருவா சாப்பிட்டு கிளம்பு என்றவர்,தன் தாய் வள்ளி இருக்கும் பக்கம் திரும்பி,அம்மா கண்ணன் மச்சான் போன் பண்ணிருந்தார்.இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வரேன்,ஏதோ பேசனும்னு சொன்னாங்க.
"நேற்று நாம வயல்ல இருந்ததால் வந்து பார்த்திட்டு போய் விட்டதாக சொன்னார் என்க,அதைக்கேட்டு என்னவா இருக்கும் என வீட்டில் உள்ளவர்கள் யோசித்தனர்.
அடுப்பங்கறைக்கு சென்ற சீதா,இட்லி ஊத்தி அடுப்பில் வைக்க,ராதா சட்னியை தாளித்து முடித்து விட்டு, சாம்பாருக்கு தயார் செய்து,அதை அடுப்பில் வேக வைத்தார்.
"கால் மணி நேரத்தில் காலை உணவு தயாராக,வீட்டில் உள்ளவர்களுக்கும் பரிமாற,அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும், அங்கு கண்ணன் தனது மனைவி வசந்தியோடு வரவும் சரியாக இருந்தது.
"வணக்கம் மாப்பிள்ளை என சொல்லிக்கொண்டே உள்ளே வந்தவரை,வாங்க மாமா,வாம்மா வசந்தி என்றார்கள்,பெருமாளும், முத்துவும்.வரோம் என்று சொல்லியவர்கள்,உள்ளே வந்து சேரில் அமர்ந்தனர்,பின்னர் ஒரு முக்கியமான விஷயம் பேசிட்டு போலானு தான் வந்தோம்.
"அப்படியா,சொல்லுங்க மச்சான் என்ற பெருமாளுக்கு,பொண்ணோட கல்யாண விஷயம் பற்றி தான் என தயங்க, என்னா நம்ப தேவிக்கு இடம் அமைஞ்சிட்டா?,நல்ல விஷயம் தானே மச்சான்,அதுக்கு ஏன் தயங்குறீங்க என்க,அதைப்பற்றி தான் பேசனும்.
"எதா இருந்தாலும் சொல்லுங்க மாமா என்று முத்து சொல்ல,ஒரு சிரிப்பை உதிர்த்தவர்,தேவிக்கு நம்ப கதிரை தான் புடிச்சிருக்காம் என்று கண்ணன் சொல்லவும் அதைக்கேட்டவர்கள், என்னாஆஆ என்று அதிர்ச்சியாகினர், அங்கிருந்த கதிரை தவிர.
"பெருமாளோ கண்ணனை பார்த்து நீங்க என்ன சொல்றீங்க மாமா?என்க,ஆமாம் மாப்பிள்ளை.நேற்று தான் இந்த விஷயத்தை சொல்லுச்சி,கட்டுனா கதிர் மாமாவை தான் கட்டுவேன் இல்லை என்றால் கல்யாணமே வேண்டானு சொல்லுது.
"ஓஓஓ என்றவர் திரும்பி மகனை பார்க்க,மாமா எனக்கு தேவிய கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை, நீங்க வேற இடம் பாருங்கள் என்று பட்டென்று சொல்லி விட்டான். அதைக்கேட்டவருக்கு உள்ளுக்குள் திக்கென்றது.கல்யாணத்தை வைத்து எவ்வளவு பிளான் போட்டோம் மனசுக்குள்,எல்லாம் இவன் கெடுத்துருவான் போலையே.
"கதிரு...என்று கூப்பிட,இத பத்தி பேச வேண்டாம் மாமா.எனக்கு இஷ்டம் இல்லைனு உங்க பொண்ணு கிட்ட பலமுறை சொல்லிவிட்டேன் என்றவன், அப்பா நான் வயலுக்கு போறேன் நீங்க வந்துருங்க என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியே சென்று விட்டான்.
"மாப்பிள்ளை,நீங்க எதுவுமே சொல்லாம இருக்கீங்களே என்றவருக்கு,என் பேரனுக்கு விருப்பம் இல்லாதது இந்த வீட்ல நடக்காது கண்ணா என்றார் வள்ளி பாட்டி.அம்மா சொல்றதும் சரிதான்.பிள்ளைகளுக்கு அவரவர் விருப்பப்படி கல்யாணம் பண்ணனும்.
"வாழ போறது அவங்க தான். அவங்களுக்கு இஷ்டம் இல்லாததை செஞ்சு வைக்க எனக்கும் கொஞ்சம் கூட விருப்பமில்லைனு பெருமாளும் சொல்லி விட்டார் .
"இனியும் அவர்களிடம் சம்மதம் கேட்டு எதிர்பார்ப்பது வேஸ்ட் என்பது கண்ணனுக்கு நன்கு புரிந்து விட்டது. சரிங்க மாப்பிள்ளை,நாங்க போயிட்டு வரோம் என்று வீட்டை நோக்கி சென்றார்கள்.
"அவர்கள் சென்று சிறிதா நிமிடம் வரைக்கும் வீடு அமைதியாக இருந்தது. பிறகு பாட்டியே வாய் திறந்தார்.யாரு வீட்டுக்கு யாரு மருமகளா வர்றது என்க,என்னம்மா சொல்ற நீ என்று முத்து கேட்க,பின்ன,சின்ன வயசுல இருந்து அந்த தேவியை பார்த்துக்கிட்டு தானே இருக்கோம் அடக்கம்னா கடையில் எங்க விக்குதுன்னு கேட்கிறவ.
"எல்லாத்துக்கும் பிடிவாத குணம். அப்படியே,அவ அப்பனையும், தாத்தவையும் உரிச்சு வச்சு பிறந்து இருக்கிறாள்.அவ என் வீட்டுக்கு மூத்த மருமகளா வருவதா?என்று கோவமாக கேட்டார் மகனிடம்.
"நானும் வேறு ஏதோ ஒரு விஷயம் தான் சொல்ல வராங்கனு எதிர்பார்த்தேன்டா. நம்ம வீட்டுக்கு சம்பந்தம் எடுத்துட்டு வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை என்று பெருமாள் தனது தம்பியிடம் சொல்ல,அவங்க ஆசைப்படுவாங்க,நம்ம பிள்ளைக்கு விருப்பம் இல்லாம எப்படி முடியும் ணா? .
மாரியாத்தா என் பேத்தி தான் இந்த வீட்டுக்கு மருமகளா வரணும் அதுக்கு நீ தான் அருள் புரியணும் என்று "பாட்டியம்மாவோ தன் மனதிற்குள் மானசீகமாக வேண்டுதலை வைத்தார்.
"சரிப்பா நான் போயிட்டு வரேன் என்று சொல்லி வெளியே வந்த வளவன், தனது வண்டியில் ஏறி தெருவினுள் சென்றவன்,சிறிது தூரம் சென்று வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு சிவாவிற்கு கால் பண்ணினான்.முதல் அழைப்பு கட் ஆகியது இரண்டாம் அழைப்பு ஏற்கப்பட்டது.
"டேய்...நான் ரெடியாயிட்டேன்,நீங்க ரெண்டு பேரும் எங்கே இருக்கீங்க?,நாங்களும் ரெடி ஆயிட்டோம் நீங்க வந்து கிட்டே இருங்க, நம்ம தெரு மூலையில் ஜாயின் பண்ணிக்கலாம் என்கவும் ஓகே டா என்று கட் பண்ணி விட்டு,வண்டியை ஸ்டார்ட் பண்ணினான்.
"சொன்னப்போலவே இருவரும் ஜாயின் பண்ணிக்கொண்டு டவுனை நோக்கி, இரண்டு வண்டியில் மூவரும் பேசிக் கொண்டே சென்றனர்.அடேய் உன்னால் இன்றைக்கு என் மானமே காத்துல பறந்துச்சுடா என்ற வளவனுக்கு,இது என்ன புதுசா மாமா என்று சிவா தனது வண்டியில் இருந்து கொண்டு சொல்ல, ஏண்டா சொல்ல மாட்டேன் நீனு என்று முறைத்துப் பார்த்தான் அத்தை மகனை.
"இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று புரியாததால் என்ன ஆச்சுனு?தாமரை தனது தம்பியிடம் கேட்க,காலையில் நடந்ததை பற்றி சொல்லி சிரித்தான்.
பின்னர் வளவனும் தனது வீட்டில் நடந்ததை சொல்ல சிவாவும் தாமரையும் சத்தமிட்டு சிரித்தனர்.
"அவளின் சிரிப்பை பார்த்தவனுக்கு ஒரு வித மகிழ்ச்சியாக இருந்தது உள்ளுக்குள்.அப்புறம் மாப்பிள்ளை ஒரு விஷயம் என்று வளவன் சொல்ல, சொல்லு மாமா என்ற சிவாவிற்கு, தேவியின் அப்பா,அம்மா வீட்டுக்கு வந்ததையும்,அவர்கள் வந்து பேசிய விஷயத்தையும்,அதற்கு கதிர் சொன்னதையும் சொல்ல,ஏன்,உங்க அண்ணனுக்கு எங்கேயாவது உலக அழகி பிறந்திருக்காங்களா?.
ஏன்டா டேய்...என் அண்ணனுக்கு என்னடா குறைச்சல்,கிராமத்து இளம் சிங்கம் என்று சொல்ல,அதற்கு சிவாவோ,ஆமா ஒரு குறைச்சலும் கிடையாது தான் என்று சொல்லியவன், எப்ப பார்த்தாலும் கஞ்சி போட்ட போல விரைப்பாகவே தெரியுறார்.யார்கிட்ட வசமா சிக்க போறாருனு தெரியவில்லை என்றான்.
"என் அண்ணன் காட்டாறுடா.அப்படி யார்கிட்டயும் சிக்க மாட்டார் என்று சொல்ல,காட்டறையே கைப்பிடியில் அடக்க ஆள் வரும் மாமா.அதை பார்க்க தானே போறீங்க என்று சிவா சொன்னான்.இருவரும் பேசிக் கொள்வதை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு தனது பெரிய மாமன் மகன் கதிரை பற்றி தான் இருவரும் பேசுகிறார்கள் என புரிந்தது.
"அவ்வளவு பெரிய ஆளா அவன் என நினைத்தவள்,சிறு வயதில் பார்த்த முகத்தை நினைவு படுத்தி பார்க்க, அவன் இடது நெற்றி பக்கமிருக்கும் புருவத்தின் ஓரத்தில் இருக்கும் தழும்பு நினைவிற்கு வந்தது.மற்றபடி வேறு எதுவும் பெருசாக அவளுக்கு நினைவிலில்லை.
வழக்கமாய் படுத்ததும் உறங்குபவனுக்கு,இன்று ஏனோ எள்ளளவும் உறக்கம் வருவது போல தெரியவில்லை.தன்னை மோதி சென்றவளை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவனோ மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் நடந்து சென்று,சற்று நேரத்திற்கு முன்னர் மர பீரோவில் வைத்த அந்த செயினை எடுத்து வந்தவன் மீண்டும் கட்டில் மீது அமர்ந்து கொண்டு,கண் முன்னால் இருக்கும் செயினை பார்த்தவனுக்கு இதற்கு சொந்தமானவள் யார் என்ற கேள்வியே தொடர்ந்தது.
"இரவு விளக்கின் வெளிச்சத்தில் அந்த டாலர் சரியாக தெரியாததால், அருகிலிருக்கும் சுவிட்ச் பாக்ஸில் லைட்டை ஆன் பண்ணியவன்,இடது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மீண்டும் அந்த செயினை பார்க்க, இப்பொழுது அது வித்யாசமாக தெரிந்தது.
பின் பார்வையை கூர்மையாக்கி அந்த டாலரை பார்த்தவனுக்கு,அதன் கலை நுட்பம் ஆச்சர்யத்தை தந்தது. சிறுதானியமான வரகு அரிசியால் அதில் தாமரை வடிவமும்,மற்ற இடங்களில் கேழ்வரகை கொண்டு நிரப்பட்டிருந்தது.நிச்சயமாக இதை உருவாக்கியவர் பெரும் ரசனைக்காரவங்களென்றான்.
"தன்னை அறியாமல் அந்த டாலரின் மேல் தன் உதட்டை பதித்தவன்,அடியேய்....யார்டி நீ?,எங்கே இருக்கிறடி?இப்படி என்னை புலம்ப வச்சிட்டியேடி என்று சொல்லிக் கொண்டிருந்தவன்,தன் மேல் அவள் விழுந்த போது,அவன் உடலில் மின்சாரம் தாக்கிய போல அதிர்வு வந்ததை நினைத்து பார்க்க ஒரு விதமான சிரிப்பு வந்தது.
"கதிர் பொதுவாகவே யாரிடமும் பேச மாட்டான்".அதும் முறைப்பொண்ணுங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.பட்டும் படாமலும் பதில் சொல்வதே தேவிக்கு மட்டும் தான்.
"பின் லைட்டை ஆப் பண்ணியவன், அந்த டாலரை நெஞ்சில் மீது வைத்துக்கொண்டு,அவளை பற்றி யோசித்தான்.ஆளு அவ்வளவு எடையா இல்லை,பின்ன எப்படி அவள் மோதுன வேகத்தில் நாம கீழ விழுந்தோம் என சிந்தித்தவனுக்கு,அவள் இடையில் தனது கை பட்ட போது இருந்த மென்மையை கண்ணை மூடி நினைவில் கொண்டு வந்து கிறங்கியவன்,எப்போ உறங்கினான் என்று தெரியவில்லை.
"வழக்கம் போல் எழுந்தவனுக்கு கண் எரிவது போல இருக்க, அறையிலிருக்கும் கண்ணாடியில் பார்க்க,கண்கள் இரண்டும் சிவந்திருப்பது தெரிந்தது.பின்,குளித்து தயாராகி கீழே வந்தவன்,தம்பி இவ்வளவு சீக்கிரம் கிளம்பி இருப்பதை வித்தியாசமாக பார்த்தான் .
"அண்ணனும் தன்னை பார்பதை கண்டவன்,அடப்பாவி! சண்டாளா
"அப்பொழுது,சமையல் அறையில் இருந்து டீ எடுத்துக் கொண்டு வந்த செல்வி,என்னடா அதிசயம்!,ஆனால் உண்மை என்று வளவனை பார்த்து சொல்ல,சுண்டெலிக்குலாம் கொடுக்கு முளைக்கும்னு கனவா கண்டேன்.
"ஏய் அண்ணா,சமாளிக்காத சமாளிக்காத.இவ்வளவு சீக்கிரம் நீ எங்க கிளம்பிட்ட?,செகண்ட் ஷிப்ட் என்றாலே காலை பத்து மணி என்பது உனக்கு மிட் நைட் ஆச்சே என்க,மனுஷன் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிட்டேன்.அது பொறுக்கலையா உங்களுக்கு என்றவன்,அம்மாஆஆ டீ குடுமா என்று குரல் கொடுத்துக் கொண்டே அங்கிருந்த டைனிங் சேரில் அமர்ந்தான்.
"வயலுக்கு சென்ற பிரகாசமும், முத்துவும் உள்ளே வர,அவர்களுக்கு நீராகரம் கலந்த மோர் தண்ணியும், மகன்களுக்கு டீயும் எடுத்து வந்து சீதா கொடுத்தார்"
"வளவனை பார்த்த பிரகாசம்,என்ன பா காலை ஷிப்ட்டா என்க,இல்லை பா, பேக்டிரியில் கொஞ்சம் பெண்டிங் வேலை இருக்கு,அதை முடிக்கலான்னு தான் என்க,ம்ம் சாப்பாடு ரெடியா?என மனைவியை பார்த்து கேட்க, இல்லைங்க என்றார்.
"காலையிலேயே வெறும் வயித்தோட அனுப்புறியே அறிவு இருக்கா,இல்லையா?என மனைவியை சத்தம் போட, அதற்கு வளவனோ அப்பா,நான் காலையிலே கிளம்பிடுவேன்னு அம்மாவுக்கு தெரியாது என்றான்.
"அதைக்கேட்டு ஓஓஓ என்றவர்,இரு எதாவது உங்கம்மா செஞ்சி தருவா சாப்பிட்டு கிளம்பு என்றவர்,தன் தாய் வள்ளி இருக்கும் பக்கம் திரும்பி,அம்மா கண்ணன் மச்சான் போன் பண்ணிருந்தார்.இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வரேன்,ஏதோ பேசனும்னு சொன்னாங்க.
"நேற்று நாம வயல்ல இருந்ததால் வந்து பார்த்திட்டு போய் விட்டதாக சொன்னார் என்க,அதைக்கேட்டு என்னவா இருக்கும் என வீட்டில் உள்ளவர்கள் யோசித்தனர்.
அடுப்பங்கறைக்கு சென்ற சீதா,இட்லி ஊத்தி அடுப்பில் வைக்க,ராதா சட்னியை தாளித்து முடித்து விட்டு, சாம்பாருக்கு தயார் செய்து,அதை அடுப்பில் வேக வைத்தார்.
"கால் மணி நேரத்தில் காலை உணவு தயாராக,வீட்டில் உள்ளவர்களுக்கும் பரிமாற,அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும், அங்கு கண்ணன் தனது மனைவி வசந்தியோடு வரவும் சரியாக இருந்தது.
"வணக்கம் மாப்பிள்ளை என சொல்லிக்கொண்டே உள்ளே வந்தவரை,வாங்க மாமா,வாம்மா வசந்தி என்றார்கள்,பெருமாளும், முத்துவும்.வரோம் என்று சொல்லியவர்கள்,உள்ளே வந்து சேரில் அமர்ந்தனர்,பின்னர் ஒரு முக்கியமான விஷயம் பேசிட்டு போலானு தான் வந்தோம்.
"அப்படியா,சொல்லுங்க மச்சான் என்ற பெருமாளுக்கு,பொண்ணோட கல்யாண விஷயம் பற்றி தான் என தயங்க, என்னா நம்ப தேவிக்கு இடம் அமைஞ்சிட்டா?,நல்ல விஷயம் தானே மச்சான்,அதுக்கு ஏன் தயங்குறீங்க என்க,அதைப்பற்றி தான் பேசனும்.
"எதா இருந்தாலும் சொல்லுங்க மாமா என்று முத்து சொல்ல,ஒரு சிரிப்பை உதிர்த்தவர்,தேவிக்கு நம்ப கதிரை தான் புடிச்சிருக்காம் என்று கண்ணன் சொல்லவும் அதைக்கேட்டவர்கள், என்னாஆஆ என்று அதிர்ச்சியாகினர், அங்கிருந்த கதிரை தவிர.
"பெருமாளோ கண்ணனை பார்த்து நீங்க என்ன சொல்றீங்க மாமா?என்க,ஆமாம் மாப்பிள்ளை.நேற்று தான் இந்த விஷயத்தை சொல்லுச்சி,கட்டுனா கதிர் மாமாவை தான் கட்டுவேன் இல்லை என்றால் கல்யாணமே வேண்டானு சொல்லுது.
"ஓஓஓ என்றவர் திரும்பி மகனை பார்க்க,மாமா எனக்கு தேவிய கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை, நீங்க வேற இடம் பாருங்கள் என்று பட்டென்று சொல்லி விட்டான். அதைக்கேட்டவருக்கு உள்ளுக்குள் திக்கென்றது.கல்யாணத்தை வைத்து எவ்வளவு பிளான் போட்டோம் மனசுக்குள்,எல்லாம் இவன் கெடுத்துருவான் போலையே.
"கதிரு...என்று கூப்பிட,இத பத்தி பேச வேண்டாம் மாமா.எனக்கு இஷ்டம் இல்லைனு உங்க பொண்ணு கிட்ட பலமுறை சொல்லிவிட்டேன் என்றவன், அப்பா நான் வயலுக்கு போறேன் நீங்க வந்துருங்க என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியே சென்று விட்டான்.
"மாப்பிள்ளை,நீங்க எதுவுமே சொல்லாம இருக்கீங்களே என்றவருக்கு,என் பேரனுக்கு விருப்பம் இல்லாதது இந்த வீட்ல நடக்காது கண்ணா என்றார் வள்ளி பாட்டி.அம்மா சொல்றதும் சரிதான்.பிள்ளைகளுக்கு அவரவர் விருப்பப்படி கல்யாணம் பண்ணனும்.
"வாழ போறது அவங்க தான். அவங்களுக்கு இஷ்டம் இல்லாததை செஞ்சு வைக்க எனக்கும் கொஞ்சம் கூட விருப்பமில்லைனு பெருமாளும் சொல்லி விட்டார் .
"இனியும் அவர்களிடம் சம்மதம் கேட்டு எதிர்பார்ப்பது வேஸ்ட் என்பது கண்ணனுக்கு நன்கு புரிந்து விட்டது. சரிங்க மாப்பிள்ளை,நாங்க போயிட்டு வரோம் என்று வீட்டை நோக்கி சென்றார்கள்.
"அவர்கள் சென்று சிறிதா நிமிடம் வரைக்கும் வீடு அமைதியாக இருந்தது. பிறகு பாட்டியே வாய் திறந்தார்.யாரு வீட்டுக்கு யாரு மருமகளா வர்றது என்க,என்னம்மா சொல்ற நீ என்று முத்து கேட்க,பின்ன,சின்ன வயசுல இருந்து அந்த தேவியை பார்த்துக்கிட்டு தானே இருக்கோம் அடக்கம்னா கடையில் எங்க விக்குதுன்னு கேட்கிறவ.
"எல்லாத்துக்கும் பிடிவாத குணம். அப்படியே,அவ அப்பனையும், தாத்தவையும் உரிச்சு வச்சு பிறந்து இருக்கிறாள்.அவ என் வீட்டுக்கு மூத்த மருமகளா வருவதா?என்று கோவமாக கேட்டார் மகனிடம்.
"நானும் வேறு ஏதோ ஒரு விஷயம் தான் சொல்ல வராங்கனு எதிர்பார்த்தேன்டா. நம்ம வீட்டுக்கு சம்பந்தம் எடுத்துட்டு வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை என்று பெருமாள் தனது தம்பியிடம் சொல்ல,அவங்க ஆசைப்படுவாங்க,நம்ம பிள்ளைக்கு விருப்பம் இல்லாம எப்படி முடியும் ணா? .
மாரியாத்தா என் பேத்தி தான் இந்த வீட்டுக்கு மருமகளா வரணும் அதுக்கு நீ தான் அருள் புரியணும் என்று "பாட்டியம்மாவோ தன் மனதிற்குள் மானசீகமாக வேண்டுதலை வைத்தார்.
"சரிப்பா நான் போயிட்டு வரேன் என்று சொல்லி வெளியே வந்த வளவன், தனது வண்டியில் ஏறி தெருவினுள் சென்றவன்,சிறிது தூரம் சென்று வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு சிவாவிற்கு கால் பண்ணினான்.முதல் அழைப்பு கட் ஆகியது இரண்டாம் அழைப்பு ஏற்கப்பட்டது.
"டேய்...நான் ரெடியாயிட்டேன்,நீங்க ரெண்டு பேரும் எங்கே இருக்கீங்க?,நாங்களும் ரெடி ஆயிட்டோம் நீங்க வந்து கிட்டே இருங்க, நம்ம தெரு மூலையில் ஜாயின் பண்ணிக்கலாம் என்கவும் ஓகே டா என்று கட் பண்ணி விட்டு,வண்டியை ஸ்டார்ட் பண்ணினான்.
"சொன்னப்போலவே இருவரும் ஜாயின் பண்ணிக்கொண்டு டவுனை நோக்கி, இரண்டு வண்டியில் மூவரும் பேசிக் கொண்டே சென்றனர்.அடேய் உன்னால் இன்றைக்கு என் மானமே காத்துல பறந்துச்சுடா என்ற வளவனுக்கு,இது என்ன புதுசா மாமா என்று சிவா தனது வண்டியில் இருந்து கொண்டு சொல்ல, ஏண்டா சொல்ல மாட்டேன் நீனு என்று முறைத்துப் பார்த்தான் அத்தை மகனை.
"இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று புரியாததால் என்ன ஆச்சுனு?தாமரை தனது தம்பியிடம் கேட்க,காலையில் நடந்ததை பற்றி சொல்லி சிரித்தான்.
பின்னர் வளவனும் தனது வீட்டில் நடந்ததை சொல்ல சிவாவும் தாமரையும் சத்தமிட்டு சிரித்தனர்.
"அவளின் சிரிப்பை பார்த்தவனுக்கு ஒரு வித மகிழ்ச்சியாக இருந்தது உள்ளுக்குள்.அப்புறம் மாப்பிள்ளை ஒரு விஷயம் என்று வளவன் சொல்ல, சொல்லு மாமா என்ற சிவாவிற்கு, தேவியின் அப்பா,அம்மா வீட்டுக்கு வந்ததையும்,அவர்கள் வந்து பேசிய விஷயத்தையும்,அதற்கு கதிர் சொன்னதையும் சொல்ல,ஏன்,உங்க அண்ணனுக்கு எங்கேயாவது உலக அழகி பிறந்திருக்காங்களா?.
ஏன்டா டேய்...என் அண்ணனுக்கு என்னடா குறைச்சல்,கிராமத்து இளம் சிங்கம் என்று சொல்ல,அதற்கு சிவாவோ,ஆமா ஒரு குறைச்சலும் கிடையாது தான் என்று சொல்லியவன், எப்ப பார்த்தாலும் கஞ்சி போட்ட போல விரைப்பாகவே தெரியுறார்.யார்கிட்ட வசமா சிக்க போறாருனு தெரியவில்லை என்றான்.
"என் அண்ணன் காட்டாறுடா.அப்படி யார்கிட்டயும் சிக்க மாட்டார் என்று சொல்ல,காட்டறையே கைப்பிடியில் அடக்க ஆள் வரும் மாமா.அதை பார்க்க தானே போறீங்க என்று சிவா சொன்னான்.இருவரும் பேசிக் கொள்வதை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு தனது பெரிய மாமன் மகன் கதிரை பற்றி தான் இருவரும் பேசுகிறார்கள் என புரிந்தது.
"அவ்வளவு பெரிய ஆளா அவன் என நினைத்தவள்,சிறு வயதில் பார்த்த முகத்தை நினைவு படுத்தி பார்க்க, அவன் இடது நெற்றி பக்கமிருக்கும் புருவத்தின் ஓரத்தில் இருக்கும் தழும்பு நினைவிற்கு வந்தது.மற்றபடி வேறு எதுவும் பெருசாக அவளுக்கு நினைவிலில்லை.