Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
சீமக்கரை-கதிர் வீடு
வெற்றிவேல், திலகா, சிந்து, மற்றும் நவீன் நால்வரும்,கதிர்- தாமரை கல்யாணத்திற்கு வந்து விடுவதாக சொல்லிக்கொண்டு, அசாமை நோக்கிச்சென்றனர்.
இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. ராதாவும்,சீதாவும் வேதாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டனர்.
தாமரை தனது வீட்டிற்கு வந்தாலும், முன்பு போல யாரிடமும் இயல்பாக பேசவில்லை.
பூனாவில் அவள் விட்டு வந்த பொருட்களையெல்லாம், மாறனும் அனுப்பி வைத்தான்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் பூரணி மற்றும் விஸ்வத்தோடு ஃபோனில் பேசுவதை வழக்கமாக்கிக்கொண்டாள்.
இதோடு வேதா,வள்ளி அப்பாயி வீட்டிற்கு சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது.
வேதாவிடமும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தனது வேலையை தானே செய்து கொள்ளும் அளவிற்கு தேறியிருந்தார்.
அம்மாடி சீதா கதிரோட ஜாதக நோட்டை எடுத்துட்டு வாம்மா என்றார் பிரகாசம் தாத்தா.
சரிங்க மாமா என்றபடியே பீரோவிலிருந்த நோட்டை எடுத்து வந்து மாமனாரிடம் கொடுக்க, நானும் வள்ளியும், மச்சானையும் தங்கச்சியையும் கூப்பிட்டு கிட்டு நம்ப பழனி ஜோசியரை போய் பார்த்திட்டு வரோமென்றவர்,வளவா காரை எடு என்றவாறே வெளியே சென்றார்.
வேதாவும் வீட்டிற்கு வந்த பின்னர், அவசரத்திற்கு தங்களுக்கு கார் தேவை என்பது புரிந்து,டிராவல்ஸ் ஓனர் மூலயமாய், ஒன்பது பேர் பயணம் செய்யும் கியா கார்னிவல் காரை வாங்கினர்.
இந்த சோப்புட்டி காருக்கு இவ்வளவு பணமாயென்று,வள்ளி அப்பாயி தான் அடித்துக்கொண்டார் .
தாமரை வீட்டிற்கு வந்தவர்கள் விஷயத்தை சொல்ல,அன்பு, கவிதா இருவரும் அவர்களோடு கிளம்பினர்.
பின்னர் ஐவரும் தேனூரிலிருக்கும் பழனி ஜோதிடரிடம் செல்ல, இவர்களுக்கு முன்னதாக இரண்டு பேர் காத்திருந்தனர்.
ஒரு மணி நேரம் சென்ற பின்னர் இவர்கள் உள்ளே செல்ல, வாங்கோ வாங்கோ வணக்கமென்றார்.
பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு,ஜாதகத்தை கொடுக்க,இருவரின் ஜாதகத்தையும் கட்டம் போட்டு கணித்து முடிக்கவும்,மேலும் அரைமணி நேரம் சென்று,இருவருக்கும் இப்போ இரண்டாவது முறையா தான் கல்யாணம் நடக்கும் சரியா என்றார்.
இல்லைங்களேனு வளவன் சொல்ல, வாய்பில்லை தம்பி, ரெண்டு பேருக்கும் ஏற்கெனவே கல்யாணம் முடிஞ்சிருக்குனு கட்டம் சொல்லுதுப்பா.
சிலருக்கு மட்டும் தான் இன்னாருக்கு இன்னார்னு மேலோகத்திலே எழுதி, பூலோகத்திற்கு இறைவன் அனுப்பி வைப்பான்.
இந்த பொண்ணுக்கு எத்தனை இடத்தில் பேசி முடித்திருந்தாலும், கடைசி நேரத்தில் இந்த பையனுக்கு தான் பொண்டாட்டியா ஆகும்னு பாக்கியம் இருக்கு.
பத்தில் ஒன்பது பொருத்தம் நல்லா பொருந்தியிருக்கு. எலியும் பூனையுமாக இருந்தாலும், ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரிந்து போக வாய்ப்பில்லை.
தாராளமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க என்றவரிடம், கையோடு முகூர்த்த தேதியும் பார்த்து சொல்லிடுங்க என்றார் வள்ளி அப்பாயி.
அதற்கென்னங்கம்மா பார்த்துட்டால் போகுது என்றவர்,பஞ்சாங்கத்தில் சுபமுகூர்த்தத்தை பார்த்துக்கொண்டே வந்தவர், அடுத்த மாதத்தில் முதல் வாரத்திலே ரெண்டு முகூர்த்தம் வருது.
இவங்களுக்கு முதல் முகூர்த்தத்தில் கல்யாணம் பண்ணி வைத்தால், ரெண்டு பேரும் சீரும் சிறப்புமா இருப்பாங்க.நம்பி தாராளமா காரியத்தில் இறங்குங்கயென்றார் பழனி ஜோதிடர்.
பின்னர் ஜாதகம் பார்த்தற்கான பணத்தை அன்புவே கொடுத்தார்.
சரிங்க, நாங்க போய்ட்டு வரோமென்று அவரிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தவர்கள், காரில் ஏறி வீட்டிற்கு வந்தனர்.கவிதாவும், அன்புவும் தங்கள் வீடு இருக்கும் தெரு முனையிலே இறங்கிக்கொண்டனர்.
அவரவர் வீட்டிற்கு சென்று ஜோதிடர் சொன்னதை சொல்ல, கேட்டவர்களுக்கு திருப்தியாக இருந்தது.
அவ்வளவா நாள் நமக்கு இல்லை, அதனால் ஆளுக்கொரு வேலையாக பிரித்துக்கொள்ளலாமென்று செல்வம் சொல்ல, மச்சான் சொல்றது சரியென்றார் பெருமாள்.
மருமகளுங்களை பார்த்த பிரகாசம் தாத்தா,அம்மாடி நல்லநாளை பார்த்து திருபுவனத்தில் போய் முகூர்த்த புடவைய எடுத்துட்டு வந்துருங்க.
வேலுவும், வளவனும் பத்திரிக்கை வேலைய பாருங்க, பெருமாளு நீயும் செல்வமும் பந்தல், சமையல்காரர் ஏற்பாடு பண்ணிடுங்க, முத்துவும், கதிரும் சொந்த பந்தங்களுக்கு ஜவுளி எடுக்குற வேலையை பாருங்களென்று பிரித்து விட்டார் பிரகாசம் தாத்தா.
தாமரை வீட்டிலும் கல்யாணத்திற்கு தேவையானதை பட்டியல் போட்டனர்.
கவிதா, இப்போதைக்கு தாமரைக்கு எத்தனை பவுன் இருக்கென்று அன்பு கேட்க,அவரும் சொன்னார்.
சரி என்றவர், முதல்ல மாப்பிள்ளைக்கு போடுவதற்கான நகையையும், மரப்பொருளையும் வாங்கிடலாமென்க,அப்பா நானும் தாத்தாவும் ஆசாரி கிட்ட போறோம், நீயும் அம்மாவும், நகை வாங்குறதை பாருங்களென்று சிவா சொல்ல, அதுவும் சரிப்பா என்றார்.
அதைப்போல இரண்டு வீட்டிலும் கல்யாணவேலை ஜோராக நடந்து கொண்டிருந்தது.
அசாமிற்கு ஃபோன் பண்ணிய கதிர் வீட்டினர் கல்யாண தேதியை முன்னதாகவே சொல்லி விட்டனர்.
மாமா இன்றைக்கு கல்யாண புடவை வாங்க போகிறோமென்று பிரகாசம் தாத்தாவிடம் சீதா சொல்ல, சரிம்மா என்றார்.
புடவை எடுக்கப்போக வேண்டியதை பற்றி, முதல் நாளே ராதா-முத்து தம்பதியினர், நேரில் போய் தாமரை வீட்டினரிடம் சொல்லிட்டு வந்தனர்.
காலையிலே கதிர் வீட்டின் முன்னால் வந்து வேன் நின்று விட, பங்காளி வீட்டில் சிலரையும், தாமரை பெற்றோர்கள் மற்றும், வேதா, வள்ளி அப்பாயி, பிரகாசம் தவிர மற்றவர்களெல்லாரும் அதில் ஏறி திருபுவனத்திற்கு சென்றனர்.
கடைக்கு முன்பு போய் இறக்கி விட்ட வேன் டிரைவர், முடிந்ததும் கால் பண்ணுங்களென்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.
திருபுவனத்திலே நான்கு தலைமுறைக்கு மேலாக கடை வைத்திருக்கும் மங்கை சில்க்ஸ் கடைக்குள் நுழைய,அங்கிருந்தவர்கள் அவர்களை வாங்க வாங்களென்று வரவேற்று, என்ன பார்க்கனும் என்று கேட்க, கல்யாணப்புடவை என்றனர்.
முதல் தளத்தில் இருக்கு, லிப்டில் போங்களென்று சொல்ல, இருக்கட்டுமென்று படியில் ஏறி வர, அங்கிருந்தவர்கள் வாங்கம்மா, வாங்க சார் என்றனர்.
சொல்லுங்க என்ன விலையில் பாக்குறீங்க என்று சேல்ஸ்மேன் கேட்க,விலை பிரச்சினை இல்லை நீங்க எடுத்து போடுங்க என்றார் செல்வம்.
சொன்னதே போதுமென்று சேல்ஸ்மேனும் அடுக்கில் இருந்த விலை உயர்ந்த புடவைகளையெல்லாம் எடுத்து போட்டார்.
எம்மா பார்த்து நல்லதா என் தம்பி பொண்டாட்டிக்கு எடுங்க என்று பூசாரி சொல்ல,அதுக்கு என்ன மாப்பிள்ளை அரைணான் கயிறு வரை உருவி வித்துட்டே வாங்கிடுறோமென்று செல்வம் சொல்ல,மாமா தெரியாம சொல்லிட்டேனென்று சொல்லி பூசாரி சிரித்தார்.
பெண்கள் கூட்டத்தினரோ,இருக்கும் புடவைகளை புரட்டி தேர்ந்தெடுத்து முடிக்கவே மற்றவர்கள் நொந்து போகினர்.
ஒரு வழியாக சிகப்பு கலர் புடவையில் தங்க கலர் ஜரிகையும், அதே கலரில் சிறு சிறு ரோஜாக்கள் போட்ட பட்டுப்புடவையை கல்யாண புடவையாகவும், வைலட்டும், நீலமும் கலந்த பட்டுப்புடவை பொண்ணழைக்கவும், மயில் கலரில் பரிசம் போடுவதற்காகவும், என்று கணக்கு பண்ணி,மூன்று பட்டுப்புடவையை தாமரைக்காக தனியாக எடுத்து வைத்தனர்.
மற்றவர்களுக்கான ஜவுளியை மதிய உணவை முடித்து வந்து எடுத்து, பில் போட்டு வாங்கிக்கொண்டு வெளியே வரும் போது இரவானது.
இரவு உணவையும் வரும் வழியில் உள்ள ஹோட்டலிலே சாப்பிட்டு கிளம்பியவர்கள், நள்ளிரவில் ஊருக்குள் வந்து சேர்ந்தனர்.
கல்யாண பிளவுசை நானே தைத்துக்கொள்கிறேனென்று தாமரை சொல்லி விட,மறுநாள் மூன்று புடவைக்கான பிளவுஸ் துணிகளை எடுத்து வந்து சீதாவும் கொடுத்துச்சென்றார்.
கதிரும் எப்படியாவது தாமரையை பார்த்து விட முயற்சி செய்ய,பாவம் அதுக்கு வழியில்லாமல் போனது.
எனக்குனு ஒரு உருப்படாத மச்சான் கிடைச்சிருக்கான்.அவன் தங்கச்சி ஃபோன் நம்பரையாவது எனக்கு கொடுத்தானா பாரென்று வேலுவையும் திட்ட மறக்கவில்லை.
நாட்களும் ரொம்ப நெருங்கி வந்து விட்டது. தூரத்து சொந்தங்களுக்கு இரண்டு வீட்டினரும் பத்திரிக்கை வைத்து முடித்தனர்.
இடைப்பட்ட நாளில் இரண்டு முறை வேதாவே, இங்கு வந்து தனது வீட்டினரை பார்த்துச்சென்றார்.
ஏழாம் நாள் பந்தகால் ஊன்ற போவதாக ஊரில் உள்ளவர்களிடம் காலையிலே பெருமாள் தம்பதியினர் போய் சொல்லி விட்டு வந்தனர்.
பந்தகால் நடவும், முதலாம் நாள் கதிருக்கு நலுங்கு வைக்க தேவையானதை எடுத்து வைக்கும் போதே,அசாமிலிருந்து வந்து சேர்ந்தனர்.
ஊர்காரர்களும் வந்து சேரும் போது, கதிருக்கு தாய்மாமனின் இடத்திலிருந்து சீர்வகைகளோடு அன்புவும் கவிதாவும் அங்கு வந்து சேர, அவர்களை பார்த்து சீதாவிற்கு அழுகை வந்தது.
என்றைக்கு இருந்தாலும் உம் புள்ளைங்களுக்கு நான் தான் தாய்மாமனென்றார் அன்பு.
பின்னர் நல்லபடியாக பந்த கால் ஊன்றியதும் மணையில் கதிரை உட்கார வைத்து, அன்புவும், கவிதாவும் சந்தனம் பூசி, குங்குமம் வைத்து, தலையில் மூன்று முறை எண்ணெய், ஷாம்பு தொட்டு வைத்து, அங்கிருந்த மஞ்சள் கலந்த அரிசியால் ஆசீர்வாதம் செய்தவர்கள், கொண்டு வந்த சீர் தட்டை அவனிடம் கொடுத்தனர்.
மற்றவர்களும் நலுங்கு வைத்து முடித்ததும், குளித்து முடித்தவன், அன்பு எடுத்து வந்த டிரஸை போட்டு வர, சாமியிடம் வேண்டி விட்டு அவன் கழுத்தில் மாலை போட்டவர், இது தாய்மாமன் சீரென்று அவன் கையில் தங்க காப்பை போட்டு விட, சாமிக்கு ஆரத்தி காட்டி முடித்ததும், வந்திருந்தவர்களுக்கு வயிறார உணவை பரிமாறினர்.
தங்கள் வீட்டில் ஐந்தாம் நாள் பந்தல் கால் ஊன்றுவதாகவும், எல்லாரும் வரனுமென்று சொல்லிக்கொண்டு அன்புவும், கவிதாவும் வீட்டிற்கு சென்றனர்.
சொன்னப்போலவே ஐந்தாம் நாள் பந்தல்கால் நடுவதற்கு தாய்மாமனுங்கள் சீரென்று வெற்றிவேல், லாரன்ஸ், பெருமாள், முத்து நால்வரும் பெரும் சீர்வரிசையோடு, மேளதாளம் வாசிப்போடு தங்கை வீட்டிற்கு வர,அன்பு- கவிதா, மற்றும் செல்வம்- பார்வதி தம்பதியினர் வந்தவர்களை வரவேற்தனர்.
ஊர்மக்களோ அங்கிருந்த சீரை பார்த்து வாயை பிளந்தனர்.
நல்ல நேரத்தில் அவரவர் மனைவியின் சகிதமாய்,தாமரைக்கு நலுங்கை வைத்து முடிக்க, நால்வரும் சேர்ந்து வாங்கிய புடவை, நகையில் தங்க தேர் போல் ஜொலித்தவளுக்கு மாமனுங்கள் நால்வரும் சேர்ந்து மாலை போட்டு ஆசீர்வதித்தனர்.
இரண்டு வீட்டிலும் நல்ல முறையில் நலுங்கு முடிந்தது.
பொண்ணழைக்க, லாரன்ஸ் தம்பதியினர் ஊர்காரர்களோடு வந்தனர்.
பிறகு பெரியோர்கள் முன்னிலையில் பரிசம் போட்டு, ஆசீர்வாதம் பண்ணி மகளை அவர்களோடு அனுப்பி வைத்தனர் அன்பு தம்பதியினர்.
மேளதாளம், பேண்டு வாத்தியம், பட்டாசு சத்தத்தோடு கதிர் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
ராதா, சீதா, வேதா மூவரும் சேர்ந்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து போய், பூஜையறையில் விளக்கேற்றச்சொல்லி, பாலும் பழமும் குடிக்க கொடுத்தனர்.
காலையிலே முகூர்த்தம் என்பதால், வேதாவின் அறைக்கு தாமரையை அனுப்பி வைத்தனர்.
காலை கதிரவன் உதயமாகுவதற்கு முன்பே,வீடு பரபரப்பானது.
அம்மன் கோயிலுக்கு எதிரில் இருக்கும் பொதுவான இடத்தில்,கல்யாண பந்தல் போட்டிருந்தனர்.
திறந்த வெளியாய் இருந்த இடம், இப்பொழுது வண்ண மலர்கள் தோரணத்தில், அவ்வளவு அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
போதாததற்கு அமைச்சர் வந்திருப்பதால், எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாதென்று, போலீஸ் பாதுகாப்பும் போட்டிருந்தனர்.
வெற்றிவேல், திலகா, சிந்து, மற்றும் நவீன் நால்வரும்,கதிர்- தாமரை கல்யாணத்திற்கு வந்து விடுவதாக சொல்லிக்கொண்டு, அசாமை நோக்கிச்சென்றனர்.
இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. ராதாவும்,சீதாவும் வேதாவை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டனர்.
தாமரை தனது வீட்டிற்கு வந்தாலும், முன்பு போல யாரிடமும் இயல்பாக பேசவில்லை.
பூனாவில் அவள் விட்டு வந்த பொருட்களையெல்லாம், மாறனும் அனுப்பி வைத்தான்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் பூரணி மற்றும் விஸ்வத்தோடு ஃபோனில் பேசுவதை வழக்கமாக்கிக்கொண்டாள்.
இதோடு வேதா,வள்ளி அப்பாயி வீட்டிற்கு சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது.
வேதாவிடமும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தனது வேலையை தானே செய்து கொள்ளும் அளவிற்கு தேறியிருந்தார்.
அம்மாடி சீதா கதிரோட ஜாதக நோட்டை எடுத்துட்டு வாம்மா என்றார் பிரகாசம் தாத்தா.
சரிங்க மாமா என்றபடியே பீரோவிலிருந்த நோட்டை எடுத்து வந்து மாமனாரிடம் கொடுக்க, நானும் வள்ளியும், மச்சானையும் தங்கச்சியையும் கூப்பிட்டு கிட்டு நம்ப பழனி ஜோசியரை போய் பார்த்திட்டு வரோமென்றவர்,வளவா காரை எடு என்றவாறே வெளியே சென்றார்.
வேதாவும் வீட்டிற்கு வந்த பின்னர், அவசரத்திற்கு தங்களுக்கு கார் தேவை என்பது புரிந்து,டிராவல்ஸ் ஓனர் மூலயமாய், ஒன்பது பேர் பயணம் செய்யும் கியா கார்னிவல் காரை வாங்கினர்.
இந்த சோப்புட்டி காருக்கு இவ்வளவு பணமாயென்று,வள்ளி அப்பாயி தான் அடித்துக்கொண்டார் .
தாமரை வீட்டிற்கு வந்தவர்கள் விஷயத்தை சொல்ல,அன்பு, கவிதா இருவரும் அவர்களோடு கிளம்பினர்.
பின்னர் ஐவரும் தேனூரிலிருக்கும் பழனி ஜோதிடரிடம் செல்ல, இவர்களுக்கு முன்னதாக இரண்டு பேர் காத்திருந்தனர்.
ஒரு மணி நேரம் சென்ற பின்னர் இவர்கள் உள்ளே செல்ல, வாங்கோ வாங்கோ வணக்கமென்றார்.
பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு,ஜாதகத்தை கொடுக்க,இருவரின் ஜாதகத்தையும் கட்டம் போட்டு கணித்து முடிக்கவும்,மேலும் அரைமணி நேரம் சென்று,இருவருக்கும் இப்போ இரண்டாவது முறையா தான் கல்யாணம் நடக்கும் சரியா என்றார்.
இல்லைங்களேனு வளவன் சொல்ல, வாய்பில்லை தம்பி, ரெண்டு பேருக்கும் ஏற்கெனவே கல்யாணம் முடிஞ்சிருக்குனு கட்டம் சொல்லுதுப்பா.
சிலருக்கு மட்டும் தான் இன்னாருக்கு இன்னார்னு மேலோகத்திலே எழுதி, பூலோகத்திற்கு இறைவன் அனுப்பி வைப்பான்.
இந்த பொண்ணுக்கு எத்தனை இடத்தில் பேசி முடித்திருந்தாலும், கடைசி நேரத்தில் இந்த பையனுக்கு தான் பொண்டாட்டியா ஆகும்னு பாக்கியம் இருக்கு.
பத்தில் ஒன்பது பொருத்தம் நல்லா பொருந்தியிருக்கு. எலியும் பூனையுமாக இருந்தாலும், ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரிந்து போக வாய்ப்பில்லை.
தாராளமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க என்றவரிடம், கையோடு முகூர்த்த தேதியும் பார்த்து சொல்லிடுங்க என்றார் வள்ளி அப்பாயி.
அதற்கென்னங்கம்மா பார்த்துட்டால் போகுது என்றவர்,பஞ்சாங்கத்தில் சுபமுகூர்த்தத்தை பார்த்துக்கொண்டே வந்தவர், அடுத்த மாதத்தில் முதல் வாரத்திலே ரெண்டு முகூர்த்தம் வருது.
இவங்களுக்கு முதல் முகூர்த்தத்தில் கல்யாணம் பண்ணி வைத்தால், ரெண்டு பேரும் சீரும் சிறப்புமா இருப்பாங்க.நம்பி தாராளமா காரியத்தில் இறங்குங்கயென்றார் பழனி ஜோதிடர்.
பின்னர் ஜாதகம் பார்த்தற்கான பணத்தை அன்புவே கொடுத்தார்.
சரிங்க, நாங்க போய்ட்டு வரோமென்று அவரிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்தவர்கள், காரில் ஏறி வீட்டிற்கு வந்தனர்.கவிதாவும், அன்புவும் தங்கள் வீடு இருக்கும் தெரு முனையிலே இறங்கிக்கொண்டனர்.
அவரவர் வீட்டிற்கு சென்று ஜோதிடர் சொன்னதை சொல்ல, கேட்டவர்களுக்கு திருப்தியாக இருந்தது.
அவ்வளவா நாள் நமக்கு இல்லை, அதனால் ஆளுக்கொரு வேலையாக பிரித்துக்கொள்ளலாமென்று செல்வம் சொல்ல, மச்சான் சொல்றது சரியென்றார் பெருமாள்.
மருமகளுங்களை பார்த்த பிரகாசம் தாத்தா,அம்மாடி நல்லநாளை பார்த்து திருபுவனத்தில் போய் முகூர்த்த புடவைய எடுத்துட்டு வந்துருங்க.
வேலுவும், வளவனும் பத்திரிக்கை வேலைய பாருங்க, பெருமாளு நீயும் செல்வமும் பந்தல், சமையல்காரர் ஏற்பாடு பண்ணிடுங்க, முத்துவும், கதிரும் சொந்த பந்தங்களுக்கு ஜவுளி எடுக்குற வேலையை பாருங்களென்று பிரித்து விட்டார் பிரகாசம் தாத்தா.
தாமரை வீட்டிலும் கல்யாணத்திற்கு தேவையானதை பட்டியல் போட்டனர்.
கவிதா, இப்போதைக்கு தாமரைக்கு எத்தனை பவுன் இருக்கென்று அன்பு கேட்க,அவரும் சொன்னார்.
சரி என்றவர், முதல்ல மாப்பிள்ளைக்கு போடுவதற்கான நகையையும், மரப்பொருளையும் வாங்கிடலாமென்க,அப்பா நானும் தாத்தாவும் ஆசாரி கிட்ட போறோம், நீயும் அம்மாவும், நகை வாங்குறதை பாருங்களென்று சிவா சொல்ல, அதுவும் சரிப்பா என்றார்.
அதைப்போல இரண்டு வீட்டிலும் கல்யாணவேலை ஜோராக நடந்து கொண்டிருந்தது.
அசாமிற்கு ஃபோன் பண்ணிய கதிர் வீட்டினர் கல்யாண தேதியை முன்னதாகவே சொல்லி விட்டனர்.
மாமா இன்றைக்கு கல்யாண புடவை வாங்க போகிறோமென்று பிரகாசம் தாத்தாவிடம் சீதா சொல்ல, சரிம்மா என்றார்.
புடவை எடுக்கப்போக வேண்டியதை பற்றி, முதல் நாளே ராதா-முத்து தம்பதியினர், நேரில் போய் தாமரை வீட்டினரிடம் சொல்லிட்டு வந்தனர்.
காலையிலே கதிர் வீட்டின் முன்னால் வந்து வேன் நின்று விட, பங்காளி வீட்டில் சிலரையும், தாமரை பெற்றோர்கள் மற்றும், வேதா, வள்ளி அப்பாயி, பிரகாசம் தவிர மற்றவர்களெல்லாரும் அதில் ஏறி திருபுவனத்திற்கு சென்றனர்.
கடைக்கு முன்பு போய் இறக்கி விட்ட வேன் டிரைவர், முடிந்ததும் கால் பண்ணுங்களென்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.
திருபுவனத்திலே நான்கு தலைமுறைக்கு மேலாக கடை வைத்திருக்கும் மங்கை சில்க்ஸ் கடைக்குள் நுழைய,அங்கிருந்தவர்கள் அவர்களை வாங்க வாங்களென்று வரவேற்று, என்ன பார்க்கனும் என்று கேட்க, கல்யாணப்புடவை என்றனர்.
முதல் தளத்தில் இருக்கு, லிப்டில் போங்களென்று சொல்ல, இருக்கட்டுமென்று படியில் ஏறி வர, அங்கிருந்தவர்கள் வாங்கம்மா, வாங்க சார் என்றனர்.
சொல்லுங்க என்ன விலையில் பாக்குறீங்க என்று சேல்ஸ்மேன் கேட்க,விலை பிரச்சினை இல்லை நீங்க எடுத்து போடுங்க என்றார் செல்வம்.
சொன்னதே போதுமென்று சேல்ஸ்மேனும் அடுக்கில் இருந்த விலை உயர்ந்த புடவைகளையெல்லாம் எடுத்து போட்டார்.
எம்மா பார்த்து நல்லதா என் தம்பி பொண்டாட்டிக்கு எடுங்க என்று பூசாரி சொல்ல,அதுக்கு என்ன மாப்பிள்ளை அரைணான் கயிறு வரை உருவி வித்துட்டே வாங்கிடுறோமென்று செல்வம் சொல்ல,மாமா தெரியாம சொல்லிட்டேனென்று சொல்லி பூசாரி சிரித்தார்.
பெண்கள் கூட்டத்தினரோ,இருக்கும் புடவைகளை புரட்டி தேர்ந்தெடுத்து முடிக்கவே மற்றவர்கள் நொந்து போகினர்.
ஒரு வழியாக சிகப்பு கலர் புடவையில் தங்க கலர் ஜரிகையும், அதே கலரில் சிறு சிறு ரோஜாக்கள் போட்ட பட்டுப்புடவையை கல்யாண புடவையாகவும், வைலட்டும், நீலமும் கலந்த பட்டுப்புடவை பொண்ணழைக்கவும், மயில் கலரில் பரிசம் போடுவதற்காகவும், என்று கணக்கு பண்ணி,மூன்று பட்டுப்புடவையை தாமரைக்காக தனியாக எடுத்து வைத்தனர்.
மற்றவர்களுக்கான ஜவுளியை மதிய உணவை முடித்து வந்து எடுத்து, பில் போட்டு வாங்கிக்கொண்டு வெளியே வரும் போது இரவானது.
இரவு உணவையும் வரும் வழியில் உள்ள ஹோட்டலிலே சாப்பிட்டு கிளம்பியவர்கள், நள்ளிரவில் ஊருக்குள் வந்து சேர்ந்தனர்.
கல்யாண பிளவுசை நானே தைத்துக்கொள்கிறேனென்று தாமரை சொல்லி விட,மறுநாள் மூன்று புடவைக்கான பிளவுஸ் துணிகளை எடுத்து வந்து சீதாவும் கொடுத்துச்சென்றார்.
கதிரும் எப்படியாவது தாமரையை பார்த்து விட முயற்சி செய்ய,பாவம் அதுக்கு வழியில்லாமல் போனது.
எனக்குனு ஒரு உருப்படாத மச்சான் கிடைச்சிருக்கான்.அவன் தங்கச்சி ஃபோன் நம்பரையாவது எனக்கு கொடுத்தானா பாரென்று வேலுவையும் திட்ட மறக்கவில்லை.
நாட்களும் ரொம்ப நெருங்கி வந்து விட்டது. தூரத்து சொந்தங்களுக்கு இரண்டு வீட்டினரும் பத்திரிக்கை வைத்து முடித்தனர்.
இடைப்பட்ட நாளில் இரண்டு முறை வேதாவே, இங்கு வந்து தனது வீட்டினரை பார்த்துச்சென்றார்.
ஏழாம் நாள் பந்தகால் ஊன்ற போவதாக ஊரில் உள்ளவர்களிடம் காலையிலே பெருமாள் தம்பதியினர் போய் சொல்லி விட்டு வந்தனர்.
பந்தகால் நடவும், முதலாம் நாள் கதிருக்கு நலுங்கு வைக்க தேவையானதை எடுத்து வைக்கும் போதே,அசாமிலிருந்து வந்து சேர்ந்தனர்.
ஊர்காரர்களும் வந்து சேரும் போது, கதிருக்கு தாய்மாமனின் இடத்திலிருந்து சீர்வகைகளோடு அன்புவும் கவிதாவும் அங்கு வந்து சேர, அவர்களை பார்த்து சீதாவிற்கு அழுகை வந்தது.
என்றைக்கு இருந்தாலும் உம் புள்ளைங்களுக்கு நான் தான் தாய்மாமனென்றார் அன்பு.
பின்னர் நல்லபடியாக பந்த கால் ஊன்றியதும் மணையில் கதிரை உட்கார வைத்து, அன்புவும், கவிதாவும் சந்தனம் பூசி, குங்குமம் வைத்து, தலையில் மூன்று முறை எண்ணெய், ஷாம்பு தொட்டு வைத்து, அங்கிருந்த மஞ்சள் கலந்த அரிசியால் ஆசீர்வாதம் செய்தவர்கள், கொண்டு வந்த சீர் தட்டை அவனிடம் கொடுத்தனர்.
மற்றவர்களும் நலுங்கு வைத்து முடித்ததும், குளித்து முடித்தவன், அன்பு எடுத்து வந்த டிரஸை போட்டு வர, சாமியிடம் வேண்டி விட்டு அவன் கழுத்தில் மாலை போட்டவர், இது தாய்மாமன் சீரென்று அவன் கையில் தங்க காப்பை போட்டு விட, சாமிக்கு ஆரத்தி காட்டி முடித்ததும், வந்திருந்தவர்களுக்கு வயிறார உணவை பரிமாறினர்.
தங்கள் வீட்டில் ஐந்தாம் நாள் பந்தல் கால் ஊன்றுவதாகவும், எல்லாரும் வரனுமென்று சொல்லிக்கொண்டு அன்புவும், கவிதாவும் வீட்டிற்கு சென்றனர்.
சொன்னப்போலவே ஐந்தாம் நாள் பந்தல்கால் நடுவதற்கு தாய்மாமனுங்கள் சீரென்று வெற்றிவேல், லாரன்ஸ், பெருமாள், முத்து நால்வரும் பெரும் சீர்வரிசையோடு, மேளதாளம் வாசிப்போடு தங்கை வீட்டிற்கு வர,அன்பு- கவிதா, மற்றும் செல்வம்- பார்வதி தம்பதியினர் வந்தவர்களை வரவேற்தனர்.
ஊர்மக்களோ அங்கிருந்த சீரை பார்த்து வாயை பிளந்தனர்.
நல்ல நேரத்தில் அவரவர் மனைவியின் சகிதமாய்,தாமரைக்கு நலுங்கை வைத்து முடிக்க, நால்வரும் சேர்ந்து வாங்கிய புடவை, நகையில் தங்க தேர் போல் ஜொலித்தவளுக்கு மாமனுங்கள் நால்வரும் சேர்ந்து மாலை போட்டு ஆசீர்வதித்தனர்.
இரண்டு வீட்டிலும் நல்ல முறையில் நலுங்கு முடிந்தது.
பொண்ணழைக்க, லாரன்ஸ் தம்பதியினர் ஊர்காரர்களோடு வந்தனர்.
பிறகு பெரியோர்கள் முன்னிலையில் பரிசம் போட்டு, ஆசீர்வாதம் பண்ணி மகளை அவர்களோடு அனுப்பி வைத்தனர் அன்பு தம்பதியினர்.
மேளதாளம், பேண்டு வாத்தியம், பட்டாசு சத்தத்தோடு கதிர் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
ராதா, சீதா, வேதா மூவரும் சேர்ந்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து போய், பூஜையறையில் விளக்கேற்றச்சொல்லி, பாலும் பழமும் குடிக்க கொடுத்தனர்.
காலையிலே முகூர்த்தம் என்பதால், வேதாவின் அறைக்கு தாமரையை அனுப்பி வைத்தனர்.
காலை கதிரவன் உதயமாகுவதற்கு முன்பே,வீடு பரபரப்பானது.
அம்மன் கோயிலுக்கு எதிரில் இருக்கும் பொதுவான இடத்தில்,கல்யாண பந்தல் போட்டிருந்தனர்.
திறந்த வெளியாய் இருந்த இடம், இப்பொழுது வண்ண மலர்கள் தோரணத்தில், அவ்வளவு அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
போதாததற்கு அமைச்சர் வந்திருப்பதால், எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாதென்று, போலீஸ் பாதுகாப்பும் போட்டிருந்தனர்.