• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சதாரா!

வலது கண் காலையிலிருந்து துடித்துக்கொண்டிருப்பதை பார்த்த தாமரைக்கு,ஏன் இப்படி இருக்கென்று யோசனையானது.


மனதோ ஒரு பக்கம் படபடப்பாக இருப்பது போலவும் இருந்தது.

யாருக்கு என்னாச்சினு தெரியலையேனு புலம்பியவள், கதவை பூட்டிக்கொண்டு மொட்டை மாடிக்கு வந்தாள்.

அங்கிருந்து சுற்றி பார்க்க, தூரத்தில் தெரிந்த மலை முகடுகளும், சுற்றி இருக்கின்ற இயற்கையிலும் மனம் லயித்து போனது.

இங்கு வந்ததிலிருந்து பகலில் அவள் மாடிக்கு வந்ததில்லை, அதனால் தான் சுற்றியிருந்த இயற்கையின் அழகு தெரியாமல் போனது.

மாலை நேரச்சூரியன் மேற்கே மறையும் நேரத்தில் அதை பார்க்க, கொழுந்துவிட்டெரியும் நெருப்பு போல இருந்தது.

சூரியன் மறைந்து, இரவும் ஆரம்பமானது.

ஃப்ரஷ் ஆகி விட்டு கீழே வந்தவள், பூஜையறையிலிருந்த விளக்கை ஏற்றி,சாமி கும்பிட்டு வெளியே வர, விஸ்வமும் தூங்கி எழுந்து வந்தார்.

அங்கிள், அம்மா எப்போ வருவாங்கனு தெரியுமா?,ஒரு வார்த்தை கேட்டீங்கயென்றால்,அதற்கு ஏற்ற போல சமைக்கலாம்.

இதோ கேட்குறேன்மானு பூரணிக்கு கால் பண்ணியவர், எங்கிருக்கீங்க என்க, வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றோம்.இன்னும் இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவோமென்கவும், சரிமானு கட் பண்ணியவர்,பூரணி சொன்னதை சொல்ல,சரிங்க அங்கிள் என்றவள், கிச்சனிற்குள் சென்று டிபன் செய்ய ஆரம்பித்தாள்.

தாமரை.. நான் கொஞ்சம் வாக் போய்ட்டு வரேன், நீ உள் பக்கமாக வீட்டை பூட்டிக்கோ என்றவாறே விஸ்வம் வெளியே போக, கதவை பூட்டி விட்டு, தனது வேலையை தொடர்ந்தாள்.

சமையல் வேலையை முடித்தவள், வீட்டை பெருக்கி விட்டு, கொடியில் காய்ந்திருந்த துணிகளை எடுத்து மடித்து வைக்கும் போது, வீட்டின் காலிங்பெல் சத்தம் கேட்டது.

யாரென்று ,கதவில் இருந்த லென்ஸ் வழியாக தாமரை பார்க்க, மெயின் கேட்டில் விஸ்வம் நிற்பது தெரிந்தது.

பின்னர் கதவை திறக்க, அவரும் உள்ளே வந்து,தனது அறைக்குள் சென்று ஃப்ரஷ் ஆகி வெளியே வந்தவர், தாமரை இங்கு வாம்மா என்றார்.

இதோ அங்கிள் என்றபடியே அவர் உர்கார்ந்திருந்த ஷோஃபாவின் அருகில் வர, இங்கே உட்காரு என்றார்.

சொல்லுங்க அங்கிள் என்க,ஷீரடி தெரியுமா? என்க, ம்ம் கேள்வி பட்டுருக்கேன்.

அப்படியா, சரி,நாம போகலாமா?.

நிஜமாவா என்க,ஆமாமா எனக்கும் ஏதோ மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு.ஒரு எட்டு போய் தரிசனம் பண்ணிட்டு வரலானு தோனுதுமா.

எனக்கும் மதியத்திலிருந்து அப்படி தான் இருக்கு.வலது கண் துடித்துக்கொண்டே இருக்கின்றது அங்கிள்னு தாமரை சொல்ல,ஓஓஓ,அதுலாம் ஒன்னும் இல்லை மா.

நைட் கிளம்பினால் தான் காலையிலே முதல் தரிசனத்திற்கு போகலாம் என்றவர்,ஒரு செட் டிரஸ் எடுத்து வச்சிக்கோ.மாறனும், பூரணியும் வந்த பிறகு அவங்களையும் கேட்டு விட்டு, பிறகு கிளம்பலாம்

சரிங்க அங்கிள் என்றவளிடம் அவளின் டிசைனிங் ஆர்வத்தை பற்றி கேட்டவர், அவருக்கு தெரிந்தவைகளை சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்க,ஹாரன் சத்தம் கேட்டது.

கதவை திறக்க, பூரணியே மெயின் கேட்டை திறந்து, கார் ஷெட் கதவை திறக்க போனார்.

வேகமாக போனவள் நான் திறக்குறேன்மா என்றவாறே திறந்து விட, காரை உள்ளே வந்து நிறுத்தினான்.

பின்னர் அவளே மீண்டும் கதவை லாக் பண்ணி விட்டு பூரணியிடம் வந்தவர், போன இடத்தில் எப்படி இருக்காங்கமா என்க, கொஞ்சம் மோசமா தான் இருக்கு.எப்படியும் ரெக்கவர் ஆக இன்னும் கொஞ்ச நாளாகும் என்றார்.

சரி வாங்க உள்ளே போகலாம் என்றவளுடன், அவரும் சேர்ந்து உள்ளே வந்தார்.

விஸ்வமும் கேட்க, தாமரையிடம் சொன்னதையே கணவரிடமும் சொன்னார்.

சரி போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்கமா சாப்பிடலாமென்றவள், சமைத்த டிபனை டைனிங் டேபிளின் மேல் எடுத்து வந்து வைத்தவள், அங்கிள் உங்களுக்கு தரட்டுமா என்க,ரெண்டு பேரும் வரட்டுமா, ஒன்னாவே சாப்பிடலாமென்றார்.

அதேப்போல் இருவரும் வர, நால்வரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க, ஷீரடிக்கு போவதைப்பற்றி விஸ்வம் கேட்க, அப்பா நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.
அதனால்,நாளைக்கு நைட் கிளம்பலாமேனு மாறன் கேட்க,சரிப்பா என்றார்.

பின்னர் வழக்கமான வேலையை முடித்தவள், குட் நைட் சொல்லிக்கொண்டு மேலே தனது அறைக்குள் வந்து விட்டாள்.

சிறிது நேரம் ஓவியம் வரைய, ஏனோ மனம் அதில் ஒன்றவில்லை.சரி, நாளைக்கு பார்த்துக் கொள்ளலாமென்று படுத்து விட்டாள்.

சீமக்கரை...

சிவா என்ன சொல்லப்போறானோ என்று அங்கிருந்தவர்களுக்கு கவலையாக இருந்தது.

அய்யா என் மவளுக்கு இப்போ எப்படி இருக்கென்று பேரனிடம் சிவசாமி தாத்தா கேட்க, எதுவும் சொல்ல முடியாமல் சிவா அழுதான்.

எலேய் என்னாச்சினு சொல்லுய்யானு, மகள் வயிற்று பேரனை பிரகாசம் தாத்தா கேட்க,அவருக்கும் அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.

கீழே உட்கார்ந்திருந்த பார்வதி, சின்னவனே என்றவாறு அவன் அருகில் வந்தவர், சொல்லுய்யா ?, வேதாக்கு இப்போ எப்படி இருக்கென்க,அத்தை ரொம்ப சீரியஸாதான் இருக்குமானு அழுதான்.

அய்யோ, என்னய்யா சொல்லுற என்க?, டாக்டர் சொன்னதையும், மதுரைக்கு போனதையும் சொன்னான்.

அய்யோஓஓஓஓ அய்யனாரே,என் மவள் யாருக்கு என்ன கெடுதல் பண்ணுனானு இப்படி சோதிக்குற சாமி என்று, நெஞ்சில் அடித்துக்கொண்டு கலா அப்பாயி கதறி அழுதார்.

சிவா வீட்டிற்கு வந்து சொன்னதிலிருந்து, யாரும் பச்ச தண்ணீர் கூட குடிக்கவில்லை.

போய் இவ்வளவு நேரம் ஆகுது ஏன் இன்னும் யாரும் கால் பண்ணலை என்று சொல்லிக்கொண்ட சிந்து, தனது ஃபோனிலிருந்து நவீனுக்கு கால் பண்ண, அட்டென் பண்ணியவன், நிகிலேஷ் இங்கு இருப்பதையும், அவன் சொன்னதையெல்லாம் சொல்லி விட்டு ஃபோனை வைத்தான்.

நவீன் சொன்னதையெல்லாம் கேட்ட சிந்துக்கும் ,வேதாவை நினைத்து கவலையாக இருந்தது.

தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்களுக்கு விஷயத்தை சொல்லியவர், நிகிலேஷ் இருப்பதால் கவலை வேண்டாம் என்றவர்,நிகிலேஷ் யாரென்று சுருக்கமாக சொன்னார்.

மதியம் கோயிலில் சாப்பிட்டதோடு சரி, இதுவரை யாரும் ஒரு டீ கூட குடிக்கவில்லை. சீதா எழுந்து உள்ளே போய் டீயை போட்டு எடுத்து வந்து, அவர்களை வற்புறுத்தி கொடுத்தார்.அந்த டீயோடு அங்கையே எல்லாரும் படுத்து விட்டனர்.

மதுரை...

அங்கிள் பிரச்சினை இல்லை,கொஞ்ச நாள் டேப்லட் எடுத்துக்குங்க, இந்த மந்த் என்ட்ல சர்ஜரி பண்ணிக்கலாம் என்றவன், எதுக்கு இத்தனை பேர் இங்கே.யாராவது ரெண்டு பேர் இருங்க, மற்றவங்க வீட்டுக்கு போங்க.

சர்ஜரி முடிந்த பின்னர் வாங்க.

நிக்கி சொல்வது தான் சரி என்றார் வெற்றி வேல்.

இல்லை மச்சான் வேதா கண் முழித்த பின்ன, அடுத்ததை பற்றி யோசிக்கலாம். அங்க போனாலும் மனசு அடிச்சிக்கும் என்றார் செல்வம்.

அதுவும் சரி தானென்றவர்கள், சரி நாம வேன்லே படுத்துக்கலாம் என்றனர்.

பேஷன்ட் கூட யாரும் இப்போதைக்கு இருக்க விடமாட்டாங்க என்று சொல்லிய நிக்கி, நான் தங்கியிருக்கும் ஹோட்டலில் இன்னும் ரெண்டு ரூம் போட்டுக்கலாம், வாங்க போகலாமென்று எல்லாரையும் அழைத்துக்கொண்டு போனான்.

லாரன்ஸும் வேதாவை பார்த்துட்டு , நாளைக்கு போய்கலாம்பானு சொல்லி விட்டார்.

கவிதா மட்டும் ஹாஸ்பிட்டலில் இருக்கேனென்க, சரி என்றவன் அங்கிருந்த சிஸ்டரிடம் பேசி விட்டு, அவரை வேதா இருக்கும் ஐ. சி. யு. அறையில் விட்டு விட்டு, மற்றவர்களெல்லாரும் ரூமிற்கு வந்து, வாங்கி வந்த டிபனை கடமைக்கு சாப்பிட்டு படுத்து விட்டனர்.

படுத்தாலும் யாருக்கும் உறக்கம் அவ்வளவு சீக்கிரமாக வரவில்லை, பின்னர் உறங்கி விட்டனர்.

விடியல் ஆரம்பமானது. ரூமிலே ஒவ்வொருவராக குளித்தவர்கள், நேற்று போட்டிருந்த டிரஸையே போட்டுக்கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்தனர்.

நிகிலேஷ் உள்ளே போய் பார்க்க, வேதா விழித்துக்கொண்டு படுத்திருப்பது தெரிந்தது.

அங்கிருந்த சிஸ்டரிடம் எப்போ எழுந்தாங்கனு கேட்டு தெரிந்து கொண்டவன், வேதாவின் அருகில் சேரை போட்டு உட்கார்ந்தவன், நான் என்று சொல்லவர, டாக்டர். நிகிலேஷ் சந்தர் கார்டியாலஜிஸ்ட் என்றார் வேதா.

ஓஓஓ... என்னை தெரியுமானு நிக்கி கேட்க?,எஸ் டாக்டர். நான் அசாம்ல வொர்க் பண்ணிய ஹாஸ்பிட்டலுக்கு, நீங்க வந்துருக்கீங்க.

இதழ் பிரியாமல் சிரித்தவன், அப்போ உங்க ஹெல்த் கன்டிஷன் பற்றி உங்களுக்கு தெரியும் தானே?.

ம்ம் என்றவரிடம் சர்ஜரி பண்ணனும் என்க, கண்ணை மூடி திறந்தவர், என் தாமரையை பார்க்காமல் நான் டிரிட்மென்ட் எடுத்துக்க மாட்டேனென்று சொல்லி விட்டார்.

டாக்டராக எவ்வளவோ நிக்கி பேசி பார்த்து விட்டான். ஆனால் தனது முடிவிலிருந்து வேதா மாறவில்லை.

வெளியே வந்தவன் விஷயத்தை சொல்ல, கேட்டவர்களுக்கு இப்போ என்ன செய்வதென்று புரியவில்லை.

நான் போய் வேதா கிட்ட பேசி பார்க்கட்டுமானு பெருமாள் கேட்க, போங்க என்றான்.

கதவை திறந்து உள்ளே வந்த பெருமாளை,பெட்டில் படுத்திருந்த வேதா சிறிதும் எதிர் பார்க்கவில்லை.

அம்மாடி வேதா என்று கண் கலங்க, நல்லா இருக்கீங்களா மாமா என்று கேட்க, நீ எப்படி இருக்க தாயி?.

உசுரோட தான் இருக்கேன் மாமானு வேதா சொல்லும் போதே, அவர் கண்ணிலிருந்து நீர் வழிந்தோடியது.

இந்த மாமனை மன்னிச்சிடுத்தா, உன் வாழ்க்கையை நான் தெரியாம கெடுத்துட்டேனென்று கை கூப்ப, அய்யோ மாமா, என்று பதறிய வேதாவிற்கு மேல் மூச்சு வாங்கியது.

மானிட்டரின் சத்தம் கேட்டு ஓடி வந்த நர்ஸ், சார் அவங்க கிட்ட அதிர்ச்சியான விஷயம் எதுவும் பேசாதீங்க.

தயவு செய்து கொஞ்சம் வெளியில போங்க சார் என்றவர், மேடம் நீங்க ரொம்ப ஸ்டெயின் பண்ணாதீங்க என்றார்.

ஒரு நிமிஷமென்ற வேதா, மாமா தாமரையை பார்க்காமல் நான் எந்த முடிவுக்கும் வரமாட்டேனென்று சொல்லிவிட்டார்.

வெளியே வந்த பெருமாளும் நிக்கி சொன்னதையே சொல்லி கண்கலங்க, இப்போ என்ன தாமரை வந்தால் சரியாகிட போகுது என்றபடியே, தனது ஃபோனிலிருந்து யாருக்கோ கால் பண்ணி பேசிய வெற்றிவேல், ஏதோ சொல்லி விட்டு வைத்தார்.

அடுத்த அரை மணி நேரத்தில் வெற்றிவேலுக்கு கால் வந்தது. அட்டென் பண்ணி பேசியவர் அங்கு சொன்னதை கேட்டு விட்டு, சரி இனி நான் பார்த்துக்குறேன்.

உங்க உதவிக்கு நன்றி என்றார்.

பின்னர் தனது ஃபோனிற்கு வந்திருந்த மெசேஜை ஓப்பன் பண்ணியவர், அதிலிருந்த நம்பரை பார்த்து புருவத்தை சுருக்கினார், பின்னர் அந்த நம்பருக்கு கால் பண்ணினார்.

அங்கிருப்பவர்களுக்கு, வெற்றிவேல் என்ன செய்கிறார் என்பது புரியவில்லை.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
கால் அட்டென் பண்ணியவரிடம் அண்ணா என்க, அதற்கு விஸ்வமோ, என்னப்பா வேலு இன்றைக்கு பெரிய சர்ப்ரைஸா இருக்கேயென்றார்.
பின்னர் பொதுவாக இருவரும் நலம் விசாரித்தனர்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதில், வெற்றிவேல் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக இருக்கும் போது, விஸ்வத்தோடு பழக்கம் ஏற்பட்டது.

அதிலிருந்து அண்ணன்,தம்பியென்று இருவருக்கும் சுமூகமான உறவு இழையோடியது.அடிக்கடி இல்லையென்றாலும், மாதத்தில் ஒரு முறை இருவரும் பேசிக்கொள்வர்.

கடந்த மூன்று மாதங்களாக, வெற்றிவேலிடமிருந்து, விஸ்வத்திற்கு கால் வர வில்லை.சரி வேலை பிஸி என்று விஸ்வமும் இருந்து விட்டார்.

இன்று காலையிலே கால் வந்ததைக்கண்டு, என்னாச்சு வேலு என்க, விஷயத்தை சுருக்கமாக சொல்லியவர், தாமரையை உடனே அனுப்பி வைக்க சொன்னார்.

கண்டிப்பா வேலு என்றவர்,ஃபோனை வைத்து விட்டு பூரணி, பூரணி என்றார்.

என்னங்க என்று வந்தவரிடம், வெற்றிவேல் சொன்னதை சொல்லியவர், உடனே மதுரைக்கு போகனும் என்றார்.

அப்போ நானும் வரேங்க, அப்படியே மீனாட்சிய தரிசனம் பண்ணிட்டு வரலாமென்க, சரி ரெடியாகு, அதற்கு முன்னர் தாமரைய வரச்சொல்லி கால் பண்ணுவென்றார்.

இதோங்க என்றவர்,தனது ஃபோனிலிருந்து தாமரைக்கு கால் பண்ண, ரிங் போய்க்கொண்டிருந்தது எடுக்க வில்லை.

மீண்டும் முயற்சி பண்ணும் போது, குட்மார்னிங்மா என்றபடியே உள்ளே வந்தவளைக் கண்டவர், வாம்மா வா.

உனக்கு தான் கால் பண்ணுறேன், உடனே நாம மூன்று பேரும் மதுரைக்கு போகனும், சீக்கிரம் ரெடியாகு என்க, மதுரைக்கா என்று அதிர்ந்தாள்.

ஆமா தாமரை, நேரம் இல்லை சீக்கிரமென்றவர், அடுத்து அவளை பேச விடாமல் தனது அறைக்குள் தயாராக சென்று விட்டார்.

மேலே வந்தவள் எதுக்கு நம்மையும் கூப்பிடுறாங்க?, யாராவது பார்த்தால் என்ன ஆகுமென்று யோசிக்க?, அவள் மனசாட்சியோ ஏண்டி,உன் ஊர்ல இருக்கவங்களுக்கு வேற வேலை இல்லையா?.

அதுவும் இல்லாமல், உன் வீட்டில் இருப்பவர்களை தவிர , வேற யாருக்கு உன்னை தெரியுமென்றது?.

அட ஆமாமென்றவள் நம்மை தான் தெரியாதேனு தயாராகி கீழே வந்தாள்.

அங்கு மாறனும் இருந்தான்.

உள்ளே வருபவளையே இமைக்காமல் பார்க்க,இந்த மனுஷன் ஏன் ஆடு திருடுனவன் போல, குறு குறுனு நம்மை பாக்குறாரென்று? மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

பூரணி இன்னும் என்ன பண்ணுற? என்று விஸ்வம் கேட்க, இதோ வந்துட்டேங்க என்றவர், சாமியை வணங்கி விட்டு, மாறா நாங்க போய்ட்டு வரோம் பா.

பார்த்து பத்திரமா இரு, ஒழுங்கா சாப்பிடுனு மகனுக்கு சொல்ல,அம்மா நான் பார்த்துக்குறேன், நீங்க நல்லபடியாக போய்ட்டு வாங்கள்.

சரிப்பா என்றவாறு,வெளியே தயாராக இருந்த காரில் மூவரும் ஏற, கார் அங்கிருந்து புறப்பட்டது.

கண்ணிலிருந்து கார் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த மாறனுக்கு, மனதில் சுருக்கென்று சிறு வலி வந்தது.

பின்னர் சிறிது நேரம் கார்டனில் நடந்தவன், தனது ஃபோனிலிருந்து கால் பண்ணி,இன்று ஆபீஸ்கு வரவில்லை என்று சொல்லி விட்டு, உள்ளே போய் படுத்து விட்டான்.

மதுரை...

காலையில் கிளம்பிய மூவரும் மதுரைக்கு வந்து சேரும் போது, இரவு ஏழு மணியானது.

ஏர்போர்டிலிருந்து வெளியே வர, அவர்களுக்காக நவீன் நின்று கொண்டிருந்தான்.விஸ்வத்தை பார்த்தவன் அங்கிள் என்று கூப்பிட அவனருகில் வந்தவர், நல்லாயிருக்கியாப்பா? என்றார்.

பூரணியும் அவனை நலம் விசாரிக்க, இருவரிடமும் பதில் சொல்லியவன், அவர்களையும் நலம் விசாரித்துக்கொண்டே வெளியே வந்தவன்,கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க கார் எடுத்துட்டு வரேனென்று சொல்லிச்சென்றான்.

தாமரையிடம், நவீன் எனக்கு தெரிஞ்சவங்க பையனென்று விஸ்வம் சொன்னார்.

ஓஓஓ சரிங்க அங்கிள் என்றாள்.

சிறிது நிமிடத்தில் அவர்கள் முன்பு வந்து கார் நிற்க, மூவரும் அதனுள் ஏறிக்கொண்டதும், கார் அங்கிருந்து கே. கே. ஹாஸ்பிட்டலை நோக்கி சீறிப்பாய்ந்தது.

எதுக்கு இவன் இவ்வளவு வேகமாக போறானென்று, தாமரை தன் மனதிற்குள் நவீனை திட்டிக்கொண்டாள்.

நவீனோ கண்ணாடி வழியாக, தனது தாயின் சாயலில் இருக்கும் தங்கையை பார்த்துக்கொண்டு, கவனமாக காரையும் ஓட்டினான்.

அரை மணி நேர பயணத்தில், ஹாஸ்பிட்டலின் முன்பு வந்து அந்த கார் நின்றது.

இங்கே எதுக்கு வந்துருக்காங்கனு யோசனையானவள், சரி அவர்கள் விருப்பம்.கூட வந்தது மட்டும் தான் நம்மோட வேலையென்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு, கதவை திறந்து கீழே இறங்க, வாம்மா என்றபடியே உள்ளே இருந்த லிப்டை நோக்கிச்சென்றார்.

லிப்டில் ஏறி மூன்றாவது ஃப்ளோரை விஸ்வம் பிரஸ் பண்ண, டோர் லாக் ஆகியதும் லிப்ட் மேலே சென்றது.

சிறிதா நொடியில் லிப்ட் மூன்றாவது ஃப்ளோரில் வந்து நின்று டோர் ஓப்பன் ஆக,மூவரும் வெளியே வந்தனர்.

அங்கிருந்து ஐ. சி. யு நோக்கி வேகமாக விஸ்வம் நடக்க, தாமரைக்கு ஏனோ நெஞ்சு படபடப்பாக இருப்பது போலிருந்தது.

என்னாச்சி?, ஏன் நமக்கு இப்படி இருக்கென்று? முணுமுணுத்துக்கொண்டே சென்றவளின் பார்வையில், சில அடிகள் தூரத்தில் நின்ற அன்புவும், வேலுவும் கண்ணில் தெரிய, அப்பா என்றவாறே அவர்களை நோக்கி ஓடினாள்.

தாமரையின் குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க, அவர்கள் அருகில் ஓடி வந்தவள் யாருக்கு என்னாச்சுப்பா? என்று பதறினாள்.

எதுவும் பதில் சொல்லாமல் அன்பு அழ,அண்ணா நீயாவது சொல்லு?, யாருக்கு என்னணா? என்று கேட்கும் போதே, அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.

வேதா அத்தைக்கு என்று வேலு சொல்ல, என்னாஆஆஆஆ என்று அதிர்ந்தாள்.

சிறிது நொடிகளில் மீண்டவள் ஐ. சி.யு கதவை திறந்து உள்ளே போனவள் அங்கு பெட்டில் ஓய்ந்து போய் பல ஓயர்கள் மூக்கிலும், வாயிலும் பொருத்தி படுத்திருந்த வேதாவை பார்த்து,அத்தையம்மா என்றவாறு மயங்கி விழுந்தாள்.

அப்பொழுது தான் சிஸ்டரும் உள்ளே வர, கதவை திறந்தவர் சார் சீக்கிரம் வாங்க என்று கத்த, வேலு, அன்பு , விஸ்வம், பூரணி நால்வரும் உள்ளே ஓடி வந்து என்னாச்சு என்க, அந்த பொண்ணு மயங்கிட்டாங்க பாருங்க என்றவர், சீக்கிரம் தூக்கி பெட்டில் படுக்க வைங்க.

நான் டாக்டரை கூப்பிட்டு வரேனென்று சொல்லி வெளியே போக, நிகிலேஷ் மற்றவர்களோடு எதிரில் வந்துகொண்டிருப்பதை கண்டவர், டாக்டர் அந்த வேதா பேஷன்டை பார்க்க ஒரு பொண்ணு வந்தாங்கள், திடீர்னு மயங்கிட்டாங்கள் என்றார்.

ஓஓஓ என்றவன் வேக நடையோடு உள்ளே போனவன், தாமரையை செக் பண்ணி பார்த்து விட்டு, அதிர்ச்சியில் தான் மயங்கியிருக்காங்க என்றவன், இஞ்ஜக்க்ஷன் போட்டு விட்டு, கொஞ்ச நேரம் ஆனால் சரியாகிடும் என்றான்.

உள்ளே வந்தவர்களெல்லாம்,அங்கிருந்த தாமரையை பார்த்து திகைத்தனர்.

சரி எல்லாரும் இப்போ வெளியே வெய்ட் பண்ணலாம் வாங்ளென்று நிகிலேஷ் சொல்லிவிட்டு வெளியே போனான்.

பின்னர் வெற்றிவேல் விஸ்வத்திடம் வர இருவரும் கட்டி அணைத்து விட்டு, மற்றவர்களுக்கு விஸ்வத்தையும், பூரணியையும் அறிமுகப்படுத்த, தாமரை வீட்டினர் அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டனர்.

அச்சோ, தாமரையும் எங்களுக்கு மகள் போல தான் என்றனர் விஸ்வம் தம்பதியினர்.

கதிருக்கு தாமரையை பெட்டில் பார்த்ததிலிருந்து மனசு வலித்தது. தன்னால் தான் அவளுக்கு இந்த நிலமையென்று தன் மேலே ஆத்திரப்பட்டவன், அங்கிருந்த சுவற்றில் கையை குத்திக்கொண்டான்.

அவன் செயலை பார்த்த வேலு வந்து கையை பிடிக்க, என்னால தான் மச்சான் இருவருக்கும் இந்த நிலமையென்க, டேய் நடந்து முடிந்ததை விடு.இனி நடக்கப்போறதை பற்றி பேசலாமென்று வேலு சொன்னான்.

அரை மணி நேரம் சென்றிருக்க தாமரை மயக்கத்தில் இருந்து எழுந்து விட்டாளென்று சிஸ்டர் வந்து நிகிலேஷிடம் சொல்ல, ஓகே சிஸ்டர் என்றவாறே உள்ளே சென்றவன், இப்போ ஓகே தானே என்றான்.

எஸ் டாக்டரென்றாள் தாமரை.

சரி வாங்க வெளியே போய் பேசலாமென்றான்.

வேதாவை பார்த்தவள் அத்தைக்கு என்று கேட்க, அதைப்பற்றி தான் பேசனும். இங்க பேசினால் பேஷன்ட்கு தொந்தரவா இருக்கும் என்றவன் வெளியே செல்ல, அவன் பின்னாடியே வந்தவள், அங்கிருந்த கதிரை பார்த்து ஒரு நொடி விழிகள் விரித்து அதிர்ந்தவள், பின்னர் நிகிலேஷ் பின்னாடி சென்றாள்.

மற்றவர்களும் அவர்கள் பின்னாடியே சென்றனர்.

உள்ளே வந்தவளை பார்த்த நிகிலேஷ், உட்காருங்க தாமரை என்றவன், நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

லிசன் தாமரை, இப்போ உங்கள் அத்தைக்கு வந்திருக்கிறது சிவியர் அட்டாக்.

கண்டிஷன் கொஞ்சம் சீரியஸா இருக்கு.

அவங்களுக்கு உடனடியாக பை- பாஸ் சர்ஜரி பண்ணியே ஆகனும். இல்லை என்றால் அவர்கள் உயிரோட இருக்க, நாள் கணக்குக்கு கூட சுத்தமாக வாய்ப்பே இல்லை.

ஏற்கெனவே இவங்களுக்கு கண்டிப்பாக இரண்டு முறை அட்டாக் வந்திருக்கனும். அதைப்பற்றி எதாவது தெரியுமானு நிகிலேஷ் கேட்க?,இதுவரை அவன் சொன்னதிலே ஆணி அடித்தப்போல அதிர்ந்துவிட்டாள்.

ஹலோ தாமரை உங்களை தான் என்க, தெரியாது டாக்டரென்று சொல்லும் போதே அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.

டாக்டர் அப்போ உடனே சர்ஜரிக்கு ஏற்பாடு பண்ண வேண்டியது தானேனு தாமரை கேட்க, அதற்கு பேஷன்ட் அக்சப்ட் பண்ணிக்கனும்.

அவங்கள் உங்களை பார்க்காமல் எந்த டிரீட்மென்டும் எடுக்க முடியாதுனு, பிடிவாதமாக இருக்காங்களேன்னு நிகிலேஷ் சொன்னான்.

லுக் .... எவ்வளவு சீக்கிரமா சர்ஜரி பண்ணுறமோ அவங்களுக்கு நல்லது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவங்க கண் முழிச்சிடுவாங்க.நீங்க தான் அவங்க கிட்ட பேசி சம்மதிக்க வைக்கனுமென்றான்.

ஓகே டாக்டர் என்றவள், சர்ஜரி பண்ணினால் என் அத்தையம்மா நல்லா ஆகிடுவாங்க தானே என்க, எஸ் அதுக்கு நான் பொறுப்பு.

கண்ணை துடைத்துக்கொண்டு எழுந்தவள் வேதா இருக்கும் ஐ. சி. யுவை நோக்கி சென்றவள், ஒரு நொடி கதிரை பார்த்து தயங்கி நின்றவள், பின் கதவை திறந்து உள்ளே சென்று, வேதாவின் அருகே உட்கார, அவரும் கண்ணை திறந்தவர், அங்கிருந்த தாமரையை பார்க்க, இருவர் கண்ணிலும் கண்ணீர் மட்டுமே பேசியது.

அவரின் வயிற்றின் மேல் தலை வைத்து படுத்தவள், சத்தமின்றி குலுங்கி அழுதாள்.

சிறிது நிமிடம் சென்று தாமரை என்று வேதா கூப்பிட, நிமிர்ந்தவளிடம் கண்ணை துடைத்துக்கொள்.

உங்கிட்ட கொஞ்சம் பேசனும் என்றவர், கண்ணை மூடி திறந்து விட்டு, முத்துக்கும் அவருக்கும் கல்யாணம் ஆனதையும், அதற்கு பிறகு நடந்ததையும் சொல்ல, உள்ளுக்குள் பேரதிர்சியாக இருந்தாலும் வெளியே காட்டிக்காமல், சர்ஜரிக்கு ரெடியாகுங்க என்றாள்.

இல்லை,எனக்கு வாழ விருப்பமில்லை என்றார்.

அப்போ இத்தனை வருஷம் எனக்காக வாழ்ந்தது பொய்யானு தாமரை கேட்க, அது வேஸ்டென்று நீயே புரிய வச்சிட்டியே.

அத்தை ,கோவத்தில் ஏதோ பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்களென்று தாமரை அழ, நாம வீட்டிற்கு போகலாம்டா என்று வேதா சொல்ல, சற்று முன்னர் வேதாவின் உடல்நிலையை பற்றி அவளிடம் நிகிலேஷ் சொன்னது நினைவு வந்தது.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top