Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
நீலகிரி!
மாலை போட்டிருக்கும் பெற்றோர்கள் புகைப்படத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவள், ச்சை, எத்தனை நாளைக்கு தான் நல்லவளாக இருக்க போலவே நான் நடிக்கிறது?.
இப்போ தான் நிம்மதியா இருக்கு.சரி போனது தான் போனீங்களே, என்னையும் கூப்பிட்டு போயிருக்க வேண்டியது தானே?.
அப்போ,என்னை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியா நீங்க போய் சேர்ந்ததுக்கு, நான் எதுக்கு உங்களை நினைத்து அழனும்?.
நெவர்.... இந்த பவி உங்களுக்காக ஒரு நாளும் கண்ணீர் சிந்த மாட்டாளென்று அங்கிருந்து எழுந்து போய், ஷோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள்.
இவ்வளவு நேரம்,எப்படியும் அந்த தாமரைக்கு நம்ப அப்பா, அம்மா இறந்த விஷயம் தெரியாமலா இருக்கும்?.
ஒரு வார்த்தை கூட அவளுக்கு விசாரிக்க முடியலை போல?...
அது இருந்தாலும், மருது கூட எனக்கு நடந்த கல்யாணத்தை பற்றி வேதா ஆன்ட்டி சொல்லியிருப்பாங்க...
ஹாஹாஹா... அதைக்கேட்டு நீ இடிஞ்சி போய் உட்கார்ந்திருப்படி....என் கிட்ட தோற்றுட்ட தாமரைனு சிரிக்கும் போது, கைத்தட்டும் சத்தம் கேட்டு பட்டென்று திரும்பி பார்க்க,அங்கே மருது நின்று கொண்டிருந்தான்.
அவனைப்பார்த்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தவள்,வாங்க மிஸ்டர். புருஷா என்றாள்.
ஹாஹாஹா.... இப்பவும் நீ தான் டி தாமரை கிட்ட தோற்றுப்போனாயென்று மருது சொல்ல,என்னாஆஆஆ என்று அதிர்ந்து எழுந்தாள்.
எஸ்.... தாமரைக்கு கல்யாணம் ஆகிட்டு. அதும் உனக்கு முன்னாடியே..அவளோட நல்ல மனசுக்கு அவளுக்கு நல்லது தான் நடக்கும் டி. உன் கேவலமான புத்திக்கு என்று சொல்ல வந்தவன்,ச்சை....உன்னை போல விஷப்பாம்போட உண்மை குணம் தெரியாமல்,இத்தனை நாளா இருந்ததை நினைத்து வெட்கமா இருக்குடி.
அப்புறம், கூடிய சீக்கிரம் உனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் வரும், மரியாதையா கையெழுத்து போட்டு அனுப்பி வைக்குற.
இதுலையும் எதாவது டிராமா பண்ண முயற்சி பண்ணுனேனு தெரிஞ்சிது வெட்டி போட்டுருவேன் என்றவன், உன் முகத்தில முழிக்கிறதே பாவமென்று அங்கிருந்து சென்று விட்டான் .
என்னா டைவர்ஸா?, இப்படி ஒரு அதிரடியான வார்த்தையை, மருதுவிடமிருந்து பவி சிறிதும் எதிர் பார்க்கவில்லை .
இந்த முறையும் அவள் கிட்ட நான் தோற்றுவிட்டேனா அய்யோஓஓஓ என்று கத்தியவள், கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் கீழே தள்ளி விட்டவளோ வெறி பிடித்த போல நின்றாள்.
என்னைக்கு அவள் வந்தாளோ, அதிலிருந்து எனக்கு எல்லாவற்றிலும் இரண்டாம் இடம் தானா?.
ஏன்?ஏன்? எனக்கு மட்டும் இப்படி நடக்குது?.திரும்பவும் அவள் கிட்ட தோல்வியா என்று கண்ணாடியை பார்த்து பேசியவள், முதல்ல இவனை பற்றி யோசிப்போமென்று முடிவெடுத்தாள்.
இவன் சொன்னா செய்யுற ஆளாச்சே, இவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்தவளுக்கு, மயிலாவின் அப்பாவி குணம் ஞாபகம் வந்தது.
சூப்பர்... இந்த அம்மாவை வைத்து தான் அவனை நம்ப வழிக்கு வர வைக்க வேண்டுமென்று முடிவெடுத்தவள், எப்படியும் இரவு உணவு சமைக்க இங்கே வருவாங்க.
அவங்க கிட்ட அழுது நடித்தால் நம்பிடுவாங்களென்று கணக்கு போட்டவள், மதியம் சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம் போடுறதே பரம சுகமென்று சொல்லிக்கொண்டே, தனது அறைக்குள் சென்று மெத்தையில் படுத்தவள், நிம்மதியாக தூங்கி எழுந்து கண்ணை திறக்க அறை முழுவதும் இருட்டாக இருந்தது.
என்ன இவ்வளவு இருட்டாயிடுச்சு?,ரொம்ப நேரம் தூங்கிட்டோமோனு சொல்லிக் கொண்டு, வெளியே வந்து பார்க்க,வீடு முழுவதும் இருட்டாக தான் இருந்தது.
இவ்வளவு நேரம் அவங்க சமைச்சிக்கிட்டு இருப்பாங்களே, என்று யோசித்துக் கொண்டே ஹாலில் இருக்கும் லைட் சுவிட்சை ஆன் பண்ணி விட்டு, கதவை திறந்து வாசல் பக்கம் பார்க்க,அங்கும் இருட்டாக தான் இருந்தது.
என்னாச்சு இவங்களுக்கு?, என்று முணுமுணுத்தவள், வெளியேயும் லைட்டை ஆன் பண்ணி விட்டு, உள்ளே வந்தவள் பால் அடுப்பில் வைத்து விட்டு, முகத்தை கழுவி விட்டு வர, பாலும் கொதித்துக்கொண்டிருந்தது.
பின்னர் அடுப்பை ஆஃப் பண்ணி,காஃபி போட்டு எடுத்துக்கொண்டவள், ஷோஃபாவில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்கும் போது, வெளியே இருக்கும் இரும்பு கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
அதானே,அவங்களாவது இவ்ளோ நேரம் வராமல் இருப்பதானு உள்ளுக்குள் குதூகலித்தவளோ முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள்.
முன் கதவை இரண்டு முறை தட்டி விட்டு, கையிலிருந்த உணவு கூடையை, உள்ளே எட்டி வைத்த மூக்கையன், இதுல சாப்பாடு இருக்குமானு சொல்லி விட்டு, திண்ணைக்கு வந்து படுத்தவர், போர்வையால் தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டார் .
அதேப்போல் அதற்கு அடுத்த வந்த நாட்களிலும், மூக்கையன் தான் பவிக்கு சாப்பாடு எடுத்து வந்து கொடுத்துட்டு போனார்.
மயிலா அவள் இருக்கும் திசை பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை. ரொம்ப கோவமா இருக்காங்க போலனு மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், ஒன்பதாம் நாள் காரியம் முடியட்டும் பிறகு பேசி ஒரு வழி பண்ணிடலாமென்று மிதப்பாக இருந்தாள்.
சதாரா....
பூரணி சொல்லிய பொருட்களை எடுக்கப் போக, அங்கிருந்த ஜன்னலுக்கு தோரணம் கட்டிக் கொண்டிருந்தவன், முன்னாள் கணவனுக்காக விரதமா?,இல்லை வரப்போற கணவனுக்காக விரதமா? என,தாமரை காதில் மட்டும் விழும் படியாக கேட்டான்.
அவன் கேட்ட கேள்வியில் நிமிர்ந்து பார்த்தவள், எவனுக்காகவும் இல்லையென்றாள்.
அப்படியா என்று சந்தேகமாக கேட்டவன், பெண்கள் விரதம் இருந்தால் புருஷனுக்காக இருப்பாங்கள்.
இல்லை என்றால் வரப்போற புருஷனுக்காக இருப்பாங்கள். இது ரெண்டுமே இல்லாமல்,நீ எதுக்கு இருக்குற?, சும்மா என்று சொல்லி விட்டு பொருட்கள் இருந்து பையை எடுத்துக் கொண்டு,சாமி அறைக்குள் சென்று விட்டாள்.
பையில் இருந்த பொருட்களையெல்லாம் எடுத்து கீழே வைத்துக் கொண்டிருக்கும் போது, பூரணியும் அவளோடு வந்து இணைந்து கொண்டார்.
முதல்ல அம்மனுக்கு கலசத்தை ரெடி பண்ணிடலாம் தாமரை என்றவர்,கையோடு கழுவி எடுத்து வந்த கலசத்தில்,மஞ்சள், குங்குமம், சந்தனத்தை பொட்டாக சுற்றியும் வைத்தார்.
அந்த மஞ்சள் நூல் கண்டை குடுமா என்க, தாமரை எடுத்துக்கொடுக்க, அதை கலசத்தின் கழுத்து பகுதியில் சிறிது சுற்றி, முடிச்சை போட்டு விட்டு, மீதம் உள்ள நூலை கட் பண்ணி எடுத்து வைத்தார்.இத்தனை வருஷமா என் மாமியாருக்கு பிறகு, நான் தான் இதை செஞ்சிட்டு வரேன்.
லீனா இதையெல்லாம் செய்ய மாட்டாள்.இந்த வருஷம் நீ செய்யுறியா?, எனக்கு என்ன செய்யனுமென்று தெரியாதுங்கம்மானு தாமரை சொல்ல, நான் சொல்லி தரேன்.அதே போல செய்யுமா.
சரிங்கம்மா என்றவளிடம், மகாலட்சுமியை நல்லா வேண்டிக்கிட்டு, முதல்ல பச்சரிசி எடுத்து கலசத்துக்குள் போடு தாமரை என்க, அதேப்போல் போட்டாள்.
அடுத்து என்னம்மா பண்ணனுமென்க,எலுமிச்சம் பழம், மஞ்சள், நாணயம், ஜாதிக்காய், மாசிக்காய், ஏலக்காய், கிராம்பு,காதோல கருகமணி,இதை எல்லாத்தையும் கலசத்துக்குள் வை என்க, அனைத்தையும் உள்ளே வைத்ததும் கலசம் நிரப்பிட்டு.
இந்தா, அந்த தேங்காயை போய் நல்லா கழுவி எடுத்துட்டு வா.
தாமரையும் சொன்னதை செய்து வர,இதை கலசத்தின் மேல வைம்மா.சரிம்மா என்றவள், தேங்காயை கலசத்தின் மேலே வைத்தாள்.
இப்போ, இந்த கலசத்தில் மேல இருக்கும் தேங்காய் தான் நமக்கு அம்மன் சரியா.இதை அம்மன் போல அலங்காரம் பண்ணென்று சொல்லிவிட்டு எழுந்து சென்றவர்,பீரோவிலிருந்து சிறிது நகைகளை எடுத்துட்டு வந்தார்.
அதற்குள் தாமரை, அங்கிருந்த பொருட்களை வைத்து தேங்காயை அம்மன் போல் அழகாக ஜோடித்திருந்தாள்.
அம்மா மகாலட்சுமி எல்லாரையும் நீதான் காப்பாற்றனுமென்று வேண்டிக்கொண்டு, நகைகளை அவளிடம் கொடுத்தவர் இதை அம்மன் கழுத்தில் போடு என்க, தாமரையும் அவர் சொல்லிய போலவே செய்து முடித்தாள்.
அவ்வளவு தான் இனி பிரசாதம் செய்ய வேண்டியது தான்.அழகா பண்ணிருக்கமானு அவள் நெற்றியின் இருபுறமும் கைகளால் சுழற்றி நெட்டி முறித்தவர், மாறா இங்கு வந்து பாறேனென்றார்.
என்னமானு அங்கு வந்தவனிடம் அம்மனை பாருடா என்க, வாவ் சூப்பரா இருக்குமா..இத்தனை வருஷம் இல்லாமல்,இந்த வருஷம் மட்டும் ரொம்ப அழகா பண்ணிருக்கியேமா.
நான் பண்ணலை.இந்த முறை அம்மனுக்கு அலங்காரம் செய்தது எல்லாம் தாமரை தான்பா
ஓஓஓ என்றவன், அவளை பார்த்து ரொம்ப அழகா இருக்கென்றான். தேங்க்யூ சாரென்கவும், மூஞ்சியும் மொகரையும் பாரு, திரும்ப சாரு, நோருனு மனதிற்குள் அவளை திட்டியவனோ அங்கிருந்து சென்று விட்டான்.
பின்னர் பூரணியும், தாமரையும் கிச்சனிற்குள் சென்று,எதற்காக வரலட்சுமி நோன்பு இருக்கிறோம் என்பதை அவளுக்கு சொல்லிக் கொண்டே, சாய்ந்தரம் அம்மனுக்கு படைப்பதற்காக பிரசாதத்தை செய்து முடித்தனர்.
எல்லாம் முடிய நான்கு மணியானது. இடையில், பால், பழம் சாப்பிடச்சொல்லி அவளை சொல்ல, வேண்டாம்மா என்று சொல்லி விட்டாள்.சரிடா தாமரை, நீ போய்ட்டு ரெடியாகிட்டு,மாலை 5:00 மணிக்குலாம் கீழே வந்துருமா.
எல்லாரும் வர ஆரம்பிச்சுடுவாங்கனு பூரணி சொல்ல, சரிங்கம்மானு சொல்லிக்கொண்டு மேலே இருக்கும் தனது அறைக்குள் வந்தவள், பூஜைக்கு என்ன டிரஸ் போடலாமென்று டிராலி பேகை எடுத்து ஆராய்ந்தவள், எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வைத்த புடவை அவள் கண்ணில் பட்டது.
அதை எடுத்து வைத்தவள், பெரியவர்கள் நிறைய பேர் வருவாங்க, நாம சுடிதார் போட்டுகிட்டு நின்றால் நல்லா இருக்காது.புடவையே கட்டிப்போமென்று முடிவு செய்தவள், கதவை லாக் பண்ணி விட்டு குளிக்கச்சென்றாள்.
சிறிது நேரத்தில் குளித்து வந்தவள், ஆரஞ்சு நிறத்தில் அங்கங்கே, கோல்டன் கலரில் சின்ன சின்ன மயில் போட்டிருந்த மைசூர் சில்க்ஸ் புடவையை கட்டிக்கொண்டவள், அதற்கு மேட்சாக உள்ள நகைகளை தேடினாள்.
கோல்டே நல்லா இருக்குமென்று தோன்ற, ஆரி வொர்க் செய்த பிளவுஸும் கோல்டு கலர் என்பதால், கழுத்திற்கு மட்டும் வேதா வாங்கி கொடுத்த நகையை போட்டவள், கைக்கும், காதுக்கும் ஆரஞ்சு கலர் தோடும், வளையலையும் தேடி எடுத்து போட்டுக்கொண்டாள்.
நல்லவேளை வரும் அவசரத்தில் இந்த மேக்கப் கிட்டை எடுத்து வந்தோமென்று சொல்லிக்கொண்டே பொட்டை நெற்றியில் வைத்தவள், ஒரு முறை கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தவளுக்கு திருப்தியாக இருந்தது.
ஓகே தாமரை இனி கீழே போகலாமென்று சொல்லியவள், தனது ஃபோனை ஆப் பண்ணி வைத்து விட்டு, அறைக்கதவை பூட்டிக்கொண்டு கீழே வந்தவளை, வாசலில் நின்று கொண்டிருந்த மாறனோ,இரு கண்களை அகலமாக விரித்து பார்த்தான்.
மாலை போட்டிருக்கும் பெற்றோர்கள் புகைப்படத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவள், ச்சை, எத்தனை நாளைக்கு தான் நல்லவளாக இருக்க போலவே நான் நடிக்கிறது?.
இப்போ தான் நிம்மதியா இருக்கு.சரி போனது தான் போனீங்களே, என்னையும் கூப்பிட்டு போயிருக்க வேண்டியது தானே?.
அப்போ,என்னை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியா நீங்க போய் சேர்ந்ததுக்கு, நான் எதுக்கு உங்களை நினைத்து அழனும்?.
நெவர்.... இந்த பவி உங்களுக்காக ஒரு நாளும் கண்ணீர் சிந்த மாட்டாளென்று அங்கிருந்து எழுந்து போய், ஷோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள்.
இவ்வளவு நேரம்,எப்படியும் அந்த தாமரைக்கு நம்ப அப்பா, அம்மா இறந்த விஷயம் தெரியாமலா இருக்கும்?.
ஒரு வார்த்தை கூட அவளுக்கு விசாரிக்க முடியலை போல?...
அது இருந்தாலும், மருது கூட எனக்கு நடந்த கல்யாணத்தை பற்றி வேதா ஆன்ட்டி சொல்லியிருப்பாங்க...
ஹாஹாஹா... அதைக்கேட்டு நீ இடிஞ்சி போய் உட்கார்ந்திருப்படி....என் கிட்ட தோற்றுட்ட தாமரைனு சிரிக்கும் போது, கைத்தட்டும் சத்தம் கேட்டு பட்டென்று திரும்பி பார்க்க,அங்கே மருது நின்று கொண்டிருந்தான்.
அவனைப்பார்த்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தவள்,வாங்க மிஸ்டர். புருஷா என்றாள்.
ஹாஹாஹா.... இப்பவும் நீ தான் டி தாமரை கிட்ட தோற்றுப்போனாயென்று மருது சொல்ல,என்னாஆஆஆ என்று அதிர்ந்து எழுந்தாள்.
எஸ்.... தாமரைக்கு கல்யாணம் ஆகிட்டு. அதும் உனக்கு முன்னாடியே..அவளோட நல்ல மனசுக்கு அவளுக்கு நல்லது தான் நடக்கும் டி. உன் கேவலமான புத்திக்கு என்று சொல்ல வந்தவன்,ச்சை....உன்னை போல விஷப்பாம்போட உண்மை குணம் தெரியாமல்,இத்தனை நாளா இருந்ததை நினைத்து வெட்கமா இருக்குடி.
அப்புறம், கூடிய சீக்கிரம் உனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் வரும், மரியாதையா கையெழுத்து போட்டு அனுப்பி வைக்குற.
இதுலையும் எதாவது டிராமா பண்ண முயற்சி பண்ணுனேனு தெரிஞ்சிது வெட்டி போட்டுருவேன் என்றவன், உன் முகத்தில முழிக்கிறதே பாவமென்று அங்கிருந்து சென்று விட்டான் .
என்னா டைவர்ஸா?, இப்படி ஒரு அதிரடியான வார்த்தையை, மருதுவிடமிருந்து பவி சிறிதும் எதிர் பார்க்கவில்லை .
இந்த முறையும் அவள் கிட்ட நான் தோற்றுவிட்டேனா அய்யோஓஓஓ என்று கத்தியவள், கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் கீழே தள்ளி விட்டவளோ வெறி பிடித்த போல நின்றாள்.
என்னைக்கு அவள் வந்தாளோ, அதிலிருந்து எனக்கு எல்லாவற்றிலும் இரண்டாம் இடம் தானா?.
ஏன்?ஏன்? எனக்கு மட்டும் இப்படி நடக்குது?.திரும்பவும் அவள் கிட்ட தோல்வியா என்று கண்ணாடியை பார்த்து பேசியவள், முதல்ல இவனை பற்றி யோசிப்போமென்று முடிவெடுத்தாள்.
இவன் சொன்னா செய்யுற ஆளாச்சே, இவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்தவளுக்கு, மயிலாவின் அப்பாவி குணம் ஞாபகம் வந்தது.
சூப்பர்... இந்த அம்மாவை வைத்து தான் அவனை நம்ப வழிக்கு வர வைக்க வேண்டுமென்று முடிவெடுத்தவள், எப்படியும் இரவு உணவு சமைக்க இங்கே வருவாங்க.
அவங்க கிட்ட அழுது நடித்தால் நம்பிடுவாங்களென்று கணக்கு போட்டவள், மதியம் சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம் போடுறதே பரம சுகமென்று சொல்லிக்கொண்டே, தனது அறைக்குள் சென்று மெத்தையில் படுத்தவள், நிம்மதியாக தூங்கி எழுந்து கண்ணை திறக்க அறை முழுவதும் இருட்டாக இருந்தது.
என்ன இவ்வளவு இருட்டாயிடுச்சு?,ரொம்ப நேரம் தூங்கிட்டோமோனு சொல்லிக் கொண்டு, வெளியே வந்து பார்க்க,வீடு முழுவதும் இருட்டாக தான் இருந்தது.
இவ்வளவு நேரம் அவங்க சமைச்சிக்கிட்டு இருப்பாங்களே, என்று யோசித்துக் கொண்டே ஹாலில் இருக்கும் லைட் சுவிட்சை ஆன் பண்ணி விட்டு, கதவை திறந்து வாசல் பக்கம் பார்க்க,அங்கும் இருட்டாக தான் இருந்தது.
என்னாச்சு இவங்களுக்கு?, என்று முணுமுணுத்தவள், வெளியேயும் லைட்டை ஆன் பண்ணி விட்டு, உள்ளே வந்தவள் பால் அடுப்பில் வைத்து விட்டு, முகத்தை கழுவி விட்டு வர, பாலும் கொதித்துக்கொண்டிருந்தது.
பின்னர் அடுப்பை ஆஃப் பண்ணி,காஃபி போட்டு எடுத்துக்கொண்டவள், ஷோஃபாவில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்கும் போது, வெளியே இருக்கும் இரும்பு கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
அதானே,அவங்களாவது இவ்ளோ நேரம் வராமல் இருப்பதானு உள்ளுக்குள் குதூகலித்தவளோ முகத்தை பாவமாக வைத்துக் கொண்டாள்.
முன் கதவை இரண்டு முறை தட்டி விட்டு, கையிலிருந்த உணவு கூடையை, உள்ளே எட்டி வைத்த மூக்கையன், இதுல சாப்பாடு இருக்குமானு சொல்லி விட்டு, திண்ணைக்கு வந்து படுத்தவர், போர்வையால் தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டார் .
அதேப்போல் அதற்கு அடுத்த வந்த நாட்களிலும், மூக்கையன் தான் பவிக்கு சாப்பாடு எடுத்து வந்து கொடுத்துட்டு போனார்.
மயிலா அவள் இருக்கும் திசை பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை. ரொம்ப கோவமா இருக்காங்க போலனு மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், ஒன்பதாம் நாள் காரியம் முடியட்டும் பிறகு பேசி ஒரு வழி பண்ணிடலாமென்று மிதப்பாக இருந்தாள்.
சதாரா....
பூரணி சொல்லிய பொருட்களை எடுக்கப் போக, அங்கிருந்த ஜன்னலுக்கு தோரணம் கட்டிக் கொண்டிருந்தவன், முன்னாள் கணவனுக்காக விரதமா?,இல்லை வரப்போற கணவனுக்காக விரதமா? என,தாமரை காதில் மட்டும் விழும் படியாக கேட்டான்.
அவன் கேட்ட கேள்வியில் நிமிர்ந்து பார்த்தவள், எவனுக்காகவும் இல்லையென்றாள்.
அப்படியா என்று சந்தேகமாக கேட்டவன், பெண்கள் விரதம் இருந்தால் புருஷனுக்காக இருப்பாங்கள்.
இல்லை என்றால் வரப்போற புருஷனுக்காக இருப்பாங்கள். இது ரெண்டுமே இல்லாமல்,நீ எதுக்கு இருக்குற?, சும்மா என்று சொல்லி விட்டு பொருட்கள் இருந்து பையை எடுத்துக் கொண்டு,சாமி அறைக்குள் சென்று விட்டாள்.
பையில் இருந்த பொருட்களையெல்லாம் எடுத்து கீழே வைத்துக் கொண்டிருக்கும் போது, பூரணியும் அவளோடு வந்து இணைந்து கொண்டார்.
முதல்ல அம்மனுக்கு கலசத்தை ரெடி பண்ணிடலாம் தாமரை என்றவர்,கையோடு கழுவி எடுத்து வந்த கலசத்தில்,மஞ்சள், குங்குமம், சந்தனத்தை பொட்டாக சுற்றியும் வைத்தார்.
அந்த மஞ்சள் நூல் கண்டை குடுமா என்க, தாமரை எடுத்துக்கொடுக்க, அதை கலசத்தின் கழுத்து பகுதியில் சிறிது சுற்றி, முடிச்சை போட்டு விட்டு, மீதம் உள்ள நூலை கட் பண்ணி எடுத்து வைத்தார்.இத்தனை வருஷமா என் மாமியாருக்கு பிறகு, நான் தான் இதை செஞ்சிட்டு வரேன்.
லீனா இதையெல்லாம் செய்ய மாட்டாள்.இந்த வருஷம் நீ செய்யுறியா?, எனக்கு என்ன செய்யனுமென்று தெரியாதுங்கம்மானு தாமரை சொல்ல, நான் சொல்லி தரேன்.அதே போல செய்யுமா.
சரிங்கம்மா என்றவளிடம், மகாலட்சுமியை நல்லா வேண்டிக்கிட்டு, முதல்ல பச்சரிசி எடுத்து கலசத்துக்குள் போடு தாமரை என்க, அதேப்போல் போட்டாள்.
அடுத்து என்னம்மா பண்ணனுமென்க,எலுமிச்சம் பழம், மஞ்சள், நாணயம், ஜாதிக்காய், மாசிக்காய், ஏலக்காய், கிராம்பு,காதோல கருகமணி,இதை எல்லாத்தையும் கலசத்துக்குள் வை என்க, அனைத்தையும் உள்ளே வைத்ததும் கலசம் நிரப்பிட்டு.
இந்தா, அந்த தேங்காயை போய் நல்லா கழுவி எடுத்துட்டு வா.
தாமரையும் சொன்னதை செய்து வர,இதை கலசத்தின் மேல வைம்மா.சரிம்மா என்றவள், தேங்காயை கலசத்தின் மேலே வைத்தாள்.
இப்போ, இந்த கலசத்தில் மேல இருக்கும் தேங்காய் தான் நமக்கு அம்மன் சரியா.இதை அம்மன் போல அலங்காரம் பண்ணென்று சொல்லிவிட்டு எழுந்து சென்றவர்,பீரோவிலிருந்து சிறிது நகைகளை எடுத்துட்டு வந்தார்.
அதற்குள் தாமரை, அங்கிருந்த பொருட்களை வைத்து தேங்காயை அம்மன் போல் அழகாக ஜோடித்திருந்தாள்.
அம்மா மகாலட்சுமி எல்லாரையும் நீதான் காப்பாற்றனுமென்று வேண்டிக்கொண்டு, நகைகளை அவளிடம் கொடுத்தவர் இதை அம்மன் கழுத்தில் போடு என்க, தாமரையும் அவர் சொல்லிய போலவே செய்து முடித்தாள்.
அவ்வளவு தான் இனி பிரசாதம் செய்ய வேண்டியது தான்.அழகா பண்ணிருக்கமானு அவள் நெற்றியின் இருபுறமும் கைகளால் சுழற்றி நெட்டி முறித்தவர், மாறா இங்கு வந்து பாறேனென்றார்.
என்னமானு அங்கு வந்தவனிடம் அம்மனை பாருடா என்க, வாவ் சூப்பரா இருக்குமா..இத்தனை வருஷம் இல்லாமல்,இந்த வருஷம் மட்டும் ரொம்ப அழகா பண்ணிருக்கியேமா.
நான் பண்ணலை.இந்த முறை அம்மனுக்கு அலங்காரம் செய்தது எல்லாம் தாமரை தான்பா
ஓஓஓ என்றவன், அவளை பார்த்து ரொம்ப அழகா இருக்கென்றான். தேங்க்யூ சாரென்கவும், மூஞ்சியும் மொகரையும் பாரு, திரும்ப சாரு, நோருனு மனதிற்குள் அவளை திட்டியவனோ அங்கிருந்து சென்று விட்டான்.
பின்னர் பூரணியும், தாமரையும் கிச்சனிற்குள் சென்று,எதற்காக வரலட்சுமி நோன்பு இருக்கிறோம் என்பதை அவளுக்கு சொல்லிக் கொண்டே, சாய்ந்தரம் அம்மனுக்கு படைப்பதற்காக பிரசாதத்தை செய்து முடித்தனர்.
எல்லாம் முடிய நான்கு மணியானது. இடையில், பால், பழம் சாப்பிடச்சொல்லி அவளை சொல்ல, வேண்டாம்மா என்று சொல்லி விட்டாள்.சரிடா தாமரை, நீ போய்ட்டு ரெடியாகிட்டு,மாலை 5:00 மணிக்குலாம் கீழே வந்துருமா.
எல்லாரும் வர ஆரம்பிச்சுடுவாங்கனு பூரணி சொல்ல, சரிங்கம்மானு சொல்லிக்கொண்டு மேலே இருக்கும் தனது அறைக்குள் வந்தவள், பூஜைக்கு என்ன டிரஸ் போடலாமென்று டிராலி பேகை எடுத்து ஆராய்ந்தவள், எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வைத்த புடவை அவள் கண்ணில் பட்டது.
அதை எடுத்து வைத்தவள், பெரியவர்கள் நிறைய பேர் வருவாங்க, நாம சுடிதார் போட்டுகிட்டு நின்றால் நல்லா இருக்காது.புடவையே கட்டிப்போமென்று முடிவு செய்தவள், கதவை லாக் பண்ணி விட்டு குளிக்கச்சென்றாள்.
சிறிது நேரத்தில் குளித்து வந்தவள், ஆரஞ்சு நிறத்தில் அங்கங்கே, கோல்டன் கலரில் சின்ன சின்ன மயில் போட்டிருந்த மைசூர் சில்க்ஸ் புடவையை கட்டிக்கொண்டவள், அதற்கு மேட்சாக உள்ள நகைகளை தேடினாள்.
கோல்டே நல்லா இருக்குமென்று தோன்ற, ஆரி வொர்க் செய்த பிளவுஸும் கோல்டு கலர் என்பதால், கழுத்திற்கு மட்டும் வேதா வாங்கி கொடுத்த நகையை போட்டவள், கைக்கும், காதுக்கும் ஆரஞ்சு கலர் தோடும், வளையலையும் தேடி எடுத்து போட்டுக்கொண்டாள்.
நல்லவேளை வரும் அவசரத்தில் இந்த மேக்கப் கிட்டை எடுத்து வந்தோமென்று சொல்லிக்கொண்டே பொட்டை நெற்றியில் வைத்தவள், ஒரு முறை கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தவளுக்கு திருப்தியாக இருந்தது.
ஓகே தாமரை இனி கீழே போகலாமென்று சொல்லியவள், தனது ஃபோனை ஆப் பண்ணி வைத்து விட்டு, அறைக்கதவை பூட்டிக்கொண்டு கீழே வந்தவளை, வாசலில் நின்று கொண்டிருந்த மாறனோ,இரு கண்களை அகலமாக விரித்து பார்த்தான்.