Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
கதிர் வீட்டு வயல்...
"ஏத்தா செல்வி என பிரகாசம் கூப்பிட, இதோ வரேன் தாத்தா என சொல்லிக்கொண்டே சேற்று வயலில் இருந்து, வரப்பின் மேலே ஏறி வந்தவள், சொல்லு தாத்தா என்க, குடிக்க கொஞ்சம் நீராகரம் ஊத்திட்டு வா என்றார்.
ம்ம் என சொல்லியவள்,வரப்பின் கீழே ஓடும் வாய்க்காலில் இறங்கி கையை கழுவி விட்டு,மரத்து நிழலில் இருக்கும் மண் பானையை திறந்தவள், அங்கிருந்த சில்வர் செம்பால் உள்ளே விலாவி விட்டு,பானையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டே நாற்று பறித்து கொண்டிருக்கும் தாத்தாவிடம் சென்றாள்.
"தாத்தா என கூப்பிட,இதோ என்றவர், பறித்த நாற்றை முடி போட்டு சேற்றில் வைத்து விட்டு,தலையில் கட்டிய துண்டை அவிழ்த்து முகத்தை துடைத்தவர்,பேத்தி கொடுத்த மோர் கலந்த நீராகரத்தை வாங்கிக் குடித்தார்.
பின்னர் போத்தா,எல்லாருக்கும் கொடு என்றவர்,அங்கிருந்த வரப்பில் உட்கார்ந்து கொண்டு இளைப்பாற தொடங்கினார்.
வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ சொல்லியாச்சி,வயலில் இறங்கி வேலை பாக்க வேண்டாமென்று, இவரோ அதை கேட்ப்பதில்லை.உசுரு இருக்கும் வரை இந்த கட்டை சேத்துல தான் உறவாடும் என உறுதியாய் சொல்லி விட்டார்.
நாற்று பறித்தவர்களுக்கு நீராகரத்தை கொடுத்து முடித்தவள்,தூரத்தில் வேலை செய்யும் தனது தந்தையை நோக்கி சென்றாள்.முத்துவோ அங்கு நடவு நடப்போகும் வரப்பிற்கு,அண்டை வெட்டி கொண்டிருந்தார் .
"அப்பா என்ற மகளின் குரல் கேட்டு, நிமிர்ந்து பார்த்தவரிடம் சொம்பை நீட்ட, இன்னுமா வளவன் வரலை என்க,வந்து கிட்டே இருக்கும் பா என்கும் மகளிடமிருந்து செம்பை வாங்கி அதிலிருந்ததை குடித்து முடித்தவர்,மணி என்ன ஆகுது? எவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருப்பாங்க பெரியவங்கனு யோசிக்கிறது இல்லையா? எப்ப தான் இவனுக்கு பொறுப்பு வரப்போகிறதுனு தெரியவில்லை.
அப்பா...அங்க ஏதாச்சு வேலையா இருக்கும், அதனால தான் அண்ணன் வர நேரம் ஆயிடுச்சு என்றவள், அங்கிருந்த மரத்தடிக்கு வந்து பானையை முன்பு இருந்த இடத்திலே வைத்து விட்டு,அவளும் கொஞ்சம் மோர் எடுத்து குடித்தாள்.
"அப்பொழுது,வயலில் நாற்று அடித்துக் கொண்டிருந்தவர்கள்,காலை சாப்பாடு சாப்பிடுவதற்காக அங்கிருந்து வீட்டை நோக்கி கலைந்து சென்றார்கள். போகிறவர்கள் காதில் விழுவது போல,சாப்பிட்டு கொஞ்சம் சீக்கிரமா வாங்கப்பா,உச்சி வெயில் ஏறுறதுக்குள்ள இந்த வயல்ல நாற்றை பறிச்சாகனும் என்க,அதெல்லாம் ஒன்னும் கவலைப்படாதீங்க முடிச்சிடலாம் பெரியப்பா என்று ஒருத்தர் சொல்லிக்கொண்டே செல்ல,வெயில் உச்சில ரொம்ப ஏறிட்டா உங்களுக்கு தான் கஷ்டம் அதனால தான் பார்க்கிறேன் என்றார் பிரகாசம்.
"செல்வியும் பிரகாசமும் மரத்தடி நிழலில் அமர்ந்து கொண்டு,நாளைக்கு நடக்க போகும் நடவை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.அப்பொழுது,பள்ளி கூடம் படிக்கிற பிள்ளை எதுக்கு இந்த வயல்ல வந்து கஷ்டப்படனும் என்க, நம்ப வயல்ல செய்யாம,வீட்லே தின்னுட்டு தூங்கனுமா என்றவள்,இப்ப லீவு தான்,இதுக்கப்புறம் பொங்கல் முடிஞ்சுதான் பள்ளிக்கூடம் கவலைப்படாத தாத்தா.
தூரத்தில் வளவன் நடந்து வருவதை பார்த்தவர், அம்மாடி அப்பாவ சாப்பிட கூப்பிடு என்று சொல்ல,அப்பா என்று அங்கிருந்து செல்வி கூப்பிட, திரும்பி பார்த்த முத்துவிடம் வளவன் வரும் திசையில் கையை நோக்கி காட்டினாள்.
அவரும் பார்த்துவிட்டு சரி என்று தலையசைத்து, மண்வெட்டியை வரப்பில் வைத்து விட்டு,அங்கிருந்த வாய்க்காலில் கை,கால்களை கழுவிக்கொண்டு, இருவரும் அமர்ந்திருக்கும் மரத்தடிக்கு வந்து சேர்ந்தார்.
"அங்கு வந்தவனிடம்,ஏப்பா மணி என்ன ஆகுது இப்பதான் வர என்று முத்து கோபமாக கேட்க,அது வந்துப்பா,அம்மா கடைக்கு அனுப்பி இருந்துச்சு.அங்க போய்ட்டு வர லேட் ஆயிடுச்சு.தினமும் ஒங்கொம்மாக்கு கடையில் போய் ஏதாச்சும் வாங்கிட்டு வர சொல்லிட்டு இருக்கனும்,மொத்தமா வாங்கி வைத்துக்கனும்னு பழக்கமே கிடையாது,என்று முத்து சத்தம் போட்டு போட, ஏன்பா என்று பிரகாசம் பார்க்க, தந்தை கேட்டதிலையே அமைதியாகிவிட்டார் முத்துவும் .
பிறகு, அண்ணன் எடுத்துட்டு வந்திருந்த சோள சோற்றையும்,கத்தரிக்காய் குழம்பையும்,ஆளுக்கு ஒரு தட்டில் போட்டு கொடுத்தவள்,அவளுக்கும் எடுத்து வைத்துக்கொண்டு நால்வரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.
பெரியவன் வந்துட்டானா? என்று தாத்தா கேட்க,இன்னும் இல்லையென்றான். ம்ம் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க அம்மாங்க கிட்ட சொல்லி, குடிக்க டீயும், அவங்களுக்கு சாப்ட எதாவது வாங்கிட்டு வந்துருப்பா என சாப்பிட்டுக்கொண்டே மகனிடம் சொன்னார் முத்து.
இப்பதானே சாப்பிட்டு இருக்காங்க அதுக்குள்ள எப்படிப்பா டீ குடிப்பாங்க? என்று செல்வி கேட்க,உச்சில வெயில் வரப்போகுது இல்லையா, வேலை வேகத்துல சாப்பிட்டது சீக்கிரம் செரிச்சிடும் கண்ணு.
ம்ம்... அதுவும் சரிதான் என்றவள், நால்வரும் சாப்பிட்ட பாத்திரங்களை, வாய்க்காலில் கழுவி கூடையில் வைத்து விட்டு,அண்ணனிமிருந்து போனை வாங்கி யூடூப் பாக்க ஆரம்பித்தாள்.
முத்துவோ,ஏர் ஓட்டும் வயலை பார்த்திட்டு வருவதாக சொல்லிட்டு சொல்ல,தாத்தா ஒரு விஷயம் என்றான் வளவன்.
சொல்லுய்யானு சொல்லிக்கொண்டே வெத்தலையின் மேல் சுண்ணாம்பை தடவி,வாயில் ஏற்கனவே போட்டிருந்த பாக்கோடு சேர்த்து மென்று கொண்டே, சொல்ல சொல்லி தலையசைக்க,உன் பேத்தி வந்திருக்கிறாள்.
"பேரன் அல்லியை தான் சொல்கிறான் என்று நினைத்தவர்,அல்லி புள்ள வீட்டுக்கு வந்துச்சா? என்று அதிர்ச்சியாக கேட்டார் பிரகாசம்.அய்யோஓஓஓஓ தாத்தா,உன் பெரிய பேத்தி தாமரை இருக்காளே, அவ ஊருக்குள்ள வந்துருக்காள் என்க, என்னப்பா சொல்லுற என மீண்டும் அதிர்ந்து கேட்டார் பிரகாசம்!.
ம்கும்.... காது அவுட்டா என்றவனின் தோள் பட்டையில் தட்டிக்கொண்டே, வாயில் போட்ட வெற்றிலையை துப்பியவர்,நெசமாவா அய்யா? என்க, ஆமா தாத்தா நான் பார்த்து பேசிட்டு தான் வரேன்.
எப்படி இருக்காய்யா?,பெரிய பொண்ணா இருப்பாளா?,நம்மளை எல்லாம் அவளுக்கு ஞாபகம் இருக்கா? என்று தனது மகள் வயிற்று பேத்தியை பற்றி பேரனிடம் கேள்விகளை அடுக்கினார் பிரகாசம்.
"அவளுக்கு என்ன தாத்தா ஜம்முனு இருக்கா என்று சொல்லி சிரித்தவன், எல்லாரையும் விசாரிச்சா தான் எனறவனிடம்,ம்ம்... அந்த அய்யனாரு என்ன முடிவு பண்ணி எங்குடும்பத்துல விளையாடுறான்னு தெரியலை,இப்படி சிதைஞ்சிட்டேனு வருத்தப்பட்டார்.
அதை கேட்டவன்,ஆமா அய்யனாருக்கு வேற வேலையே கிடையாது?,உங்க ரெண்டு பேர் குடும்பத்தில் தான் விளையாடுறது பாரேன்.மனுஷால் செய்த தப்புக்கு கடவுள் மேல எதுக்கு பழி போடுறீங்க? என்றான்.
சற்று தொலைவில் அமர்ந்து போன் பார்த்துக் கொண்டிருந்த செல்விற்கு இருவரும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தற்செயலாக நிமிர்ந்து பார்த்தவளுக்கு இருவரும் காரசாரமாக ஏதோ விவாதிப்பது தெரிந்து, அங்கிருந்து எழுந்து அவர்கள் அருகில் வந்தவள், என்னாச்சிணா?.
தாத்தா முகத்தில் கவலை இருப்பது போல தெரிய,நல்லா தானே இருந்தாங்க?,அதுக்குள்ளே என்ன ஆச்சு என்று யோசனையானவள்,தாத்தா எதுக்கு உம்முனு இருக்கீங்க என்க, உன் அத்தமவள் வந்துருக்காளாம் என்றார்
அல்லி நம்ப வீட்டுக்கு வந்துருக்காளா? என அவளும் அதிர்ச்சியாக கேட்க, அல்லி இல்லை,அவளோட அக்கா தாமரை என்றான் வளவன்.
என்னாஆஆஆஆ அல்லிக்கு அக்கா இருக்காங்களா? என்று அதிர்ந்தவளுக்கு,என் முதல் பேத்திம்மா தாமரை எனச் சொல்லி வருத்தப்பட்டார் பிரகாசம்.
என்ன தாத்தா சொல்லுற என்க, ஆமாம்மா, னதாமரை தான் உன் அத்தைக்கு தலைச்சன்,பிறகு தான் சிவாவும்,அல்லியும் என்றவர்,இத்தனை வருஷமா அவளோட அத்த கூடவே வளர்ந்தாள்.இப்போ தான் ஊருக்குள்ள வந்துருக்காள்.
ஓஓஓ... என்றவள்,இப்படி ஒரு ஆள் இருக்குனு யார் தான் சொல்லியிருக்கீங்க என அங்கலாய்த்தவள்,ஆமா இது எப்படி தெரியும் என்க,அது வந்து என்று வளவன் இழுக்க,டேய் அண்ணாஆஆ நீ தானே அத்தை வீட்டுக்கு போன?.
ஏய்... நான் ஏண்டி அங்க போகப்போறேன்?,கொழுப்பா உனக்கு என தங்கையை சத்தம் போட,சும்மா நடிக்காதடா,நீ அத்தை கிட்ட பேசுறதும், அவங்க வீட்டுக்கு போவதும் அல்லி சொல்லிருக்காள்.
அடிப்பாவி என அல்லியை மனதிற்குள் திட்டியவன்,உன்கிட்ட அப்படி சொன்னாளா? என தங்கச்சியிடம் வளவன் கேட்க,அது வந்து என இப்பொழுது என்ன சொல்வதென்று செல்வி முழித்தாள்.
அவளின் முக மாற்றமே ஏதோ இருவருக்கும் சொல்ல,ஏம்மா செல்வி, நீ அல்லி கிட்ட பேசுவியா? என்றார் பிரகாசம்.தாத்தா... அது வந்து, அது வந்து என இழுக்க,சொல்லும்மா என்றவரிடம், அப்பாகிட்ட சொல்லிடாத, நானும் அல்லியும் ப்ரண்டு தான்.
பள்ளி கூடத்துல மட்டும் தான் பேசிப்போம் என்றவள் தலையில் கொட்டினான் வளவன். ஆஹான்.... தோழிக்கு அக்கா இருக்குறது மட்டும் தெரியாது, ஆனால் வீட்டுக்கு யார் வராங்க?,யார் வரலைனு? மட்டும் பேசிக்குறீங்க போல.
பேரன் பேத்தியை பார்த்தவர் உரிமை உள்ளவங்கள் இப்படி மறைமுகமாக பேசி பழகவேண்டிய சூழல் வந்து விட்டதே,என்று தான் எல்லாம் சரியாகுமோ அது அய்யனாரப்பனுக்கு தான் வெளிச்சமென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.
அண்ணா,நிஜமாவே அந்த குள்ளி, அக்கானு ஒருத்தவங்க இருப்பதை இதுவரை என்னிடம் சொன்னதேயில்லைணா என வருத்தமாக செல்வி சொல்ல,ஓஓஓ... உனக்கு தெரியும்னு இருந்திருப்பாள், அதான் சொல்லலை போல.
வரட்டும் கிளாஸ்க்கு அப்போ இருக்கு அந்த குள்ளச்சிக்கு என்ற செல்வி, தாத்தா சாப்ட போன ஆளுங்களாம் வராங்க என்றவள்,நான் அண்ணா கூட வீட்டுக்கு போறேனென்று சொல்லிக்கொண்டே,சாப்பாட்டு பேகை கையிலெடுத்தவள்,போலாமாணா என்றாள்.
ம்ம் என்றவன் தங்கை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே வரப்பில் நடந்தவனின் செல்லுக்கு கால் வர, பாக்கெட்டில் இருந்த எடுத்தவன் புது நம்பராக இருக்க,யோசனையோடே அட்டென் பண்ணி ஹலோ என்க,
அந்தப்பக்கத்தில் இருந்து மாமா..நான் தாமரை பேசுறேன் என்றாள்.
"அந்த மென்மையான குரலும், அவளின் உரிமையான அழைப்பும் வளவனுக்கு ஏதோ உள்ளுக்குள் குறு குறுத்தது. ஹலோஓஓ..மாமா இருக்கீங்களா என மீண்டும் அவள் கேட்பதில் சுதாரித்தவன்,சொல்லு தாமரை என்க, ஒரு ஹெல்ப் பண்ணனும்.
சொல்லு, என்ன பண்ணனும் என வளவன் கேட்க, தன்னோடு நாளைக்கு பக்கத்து டவுனுக்கு வர முடியுமா? என்றாள் தாமரை.
ஓஓ என்றவன்,நாளைக்கு மதிய ஷிப்ட் தான் எனக்கு.அதனால,காலை 11 மணிக்கு மேல போகலாமா என இவன் கேட்க,ம்,மாமா என்று சொல்லியவளின் அழைப்பு கட்டானது.
கதிர்:
"வயலுக்கு தேவையான உரங்களை வாங்கியவன்,தங்களது வண்டியில் ஏற்றி விட்டு,அம்மா சொல்லிய பொருட்களை வாங்கிட்டு வரேன், நீங்க டெம்போல போய்டுங்கப்பா என பெருமாளிடம் சொல்ல,சரிப்பா என்றவர் வழக்கம் போல தன் மகனை ரசித்து பார்த்தார்.
"அடர் குங்கும கலர் சட்டையும்,அதே கலரில் சிறு பார்டர் வைத்த வெள்ளை வேட்டியும்,கழுத்தில் வெந்தய விதை மாடலில் செயினும்,நெற்றியில் சிறு கீற்றாக சந்தனமும்,அதன் மேல் சிறிது குங்குமமும்,இரு புறமும் முறுக்கி விட்ட மீசையும்,அளவான தாடியுடன் கதிரை பார்க்க அவ்வளவு கம்பீரமாக இருந்தது.இவன் என் மகன் என்ற பெருமிதம் அவர் முகத்தில் சிரிப்பை தந்தது.
"ஒரு கையால் லேசாக வேட்டியின் முனையை தூக்கி பிடித்து அவன் நின்ற தோரணம் ஆஹாஆஆஆ.... தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தந்தைக்கு, என்னப்பா என்க, ஒன்றும் இல்லைபா என்றவர்,டெம்போவில் ஏற வண்டி அங்கிருந்து சென்றது.
"ஏத்தா செல்வி என பிரகாசம் கூப்பிட, இதோ வரேன் தாத்தா என சொல்லிக்கொண்டே சேற்று வயலில் இருந்து, வரப்பின் மேலே ஏறி வந்தவள், சொல்லு தாத்தா என்க, குடிக்க கொஞ்சம் நீராகரம் ஊத்திட்டு வா என்றார்.
ம்ம் என சொல்லியவள்,வரப்பின் கீழே ஓடும் வாய்க்காலில் இறங்கி கையை கழுவி விட்டு,மரத்து நிழலில் இருக்கும் மண் பானையை திறந்தவள், அங்கிருந்த சில்வர் செம்பால் உள்ளே விலாவி விட்டு,பானையை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டே நாற்று பறித்து கொண்டிருக்கும் தாத்தாவிடம் சென்றாள்.
"தாத்தா என கூப்பிட,இதோ என்றவர், பறித்த நாற்றை முடி போட்டு சேற்றில் வைத்து விட்டு,தலையில் கட்டிய துண்டை அவிழ்த்து முகத்தை துடைத்தவர்,பேத்தி கொடுத்த மோர் கலந்த நீராகரத்தை வாங்கிக் குடித்தார்.
பின்னர் போத்தா,எல்லாருக்கும் கொடு என்றவர்,அங்கிருந்த வரப்பில் உட்கார்ந்து கொண்டு இளைப்பாற தொடங்கினார்.
வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ சொல்லியாச்சி,வயலில் இறங்கி வேலை பாக்க வேண்டாமென்று, இவரோ அதை கேட்ப்பதில்லை.உசுரு இருக்கும் வரை இந்த கட்டை சேத்துல தான் உறவாடும் என உறுதியாய் சொல்லி விட்டார்.
நாற்று பறித்தவர்களுக்கு நீராகரத்தை கொடுத்து முடித்தவள்,தூரத்தில் வேலை செய்யும் தனது தந்தையை நோக்கி சென்றாள்.முத்துவோ அங்கு நடவு நடப்போகும் வரப்பிற்கு,அண்டை வெட்டி கொண்டிருந்தார் .
"அப்பா என்ற மகளின் குரல் கேட்டு, நிமிர்ந்து பார்த்தவரிடம் சொம்பை நீட்ட, இன்னுமா வளவன் வரலை என்க,வந்து கிட்டே இருக்கும் பா என்கும் மகளிடமிருந்து செம்பை வாங்கி அதிலிருந்ததை குடித்து முடித்தவர்,மணி என்ன ஆகுது? எவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருப்பாங்க பெரியவங்கனு யோசிக்கிறது இல்லையா? எப்ப தான் இவனுக்கு பொறுப்பு வரப்போகிறதுனு தெரியவில்லை.
அப்பா...அங்க ஏதாச்சு வேலையா இருக்கும், அதனால தான் அண்ணன் வர நேரம் ஆயிடுச்சு என்றவள், அங்கிருந்த மரத்தடிக்கு வந்து பானையை முன்பு இருந்த இடத்திலே வைத்து விட்டு,அவளும் கொஞ்சம் மோர் எடுத்து குடித்தாள்.
"அப்பொழுது,வயலில் நாற்று அடித்துக் கொண்டிருந்தவர்கள்,காலை சாப்பாடு சாப்பிடுவதற்காக அங்கிருந்து வீட்டை நோக்கி கலைந்து சென்றார்கள். போகிறவர்கள் காதில் விழுவது போல,சாப்பிட்டு கொஞ்சம் சீக்கிரமா வாங்கப்பா,உச்சி வெயில் ஏறுறதுக்குள்ள இந்த வயல்ல நாற்றை பறிச்சாகனும் என்க,அதெல்லாம் ஒன்னும் கவலைப்படாதீங்க முடிச்சிடலாம் பெரியப்பா என்று ஒருத்தர் சொல்லிக்கொண்டே செல்ல,வெயில் உச்சில ரொம்ப ஏறிட்டா உங்களுக்கு தான் கஷ்டம் அதனால தான் பார்க்கிறேன் என்றார் பிரகாசம்.
"செல்வியும் பிரகாசமும் மரத்தடி நிழலில் அமர்ந்து கொண்டு,நாளைக்கு நடக்க போகும் நடவை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.அப்பொழுது,பள்ளி கூடம் படிக்கிற பிள்ளை எதுக்கு இந்த வயல்ல வந்து கஷ்டப்படனும் என்க, நம்ப வயல்ல செய்யாம,வீட்லே தின்னுட்டு தூங்கனுமா என்றவள்,இப்ப லீவு தான்,இதுக்கப்புறம் பொங்கல் முடிஞ்சுதான் பள்ளிக்கூடம் கவலைப்படாத தாத்தா.
தூரத்தில் வளவன் நடந்து வருவதை பார்த்தவர், அம்மாடி அப்பாவ சாப்பிட கூப்பிடு என்று சொல்ல,அப்பா என்று அங்கிருந்து செல்வி கூப்பிட, திரும்பி பார்த்த முத்துவிடம் வளவன் வரும் திசையில் கையை நோக்கி காட்டினாள்.
அவரும் பார்த்துவிட்டு சரி என்று தலையசைத்து, மண்வெட்டியை வரப்பில் வைத்து விட்டு,அங்கிருந்த வாய்க்காலில் கை,கால்களை கழுவிக்கொண்டு, இருவரும் அமர்ந்திருக்கும் மரத்தடிக்கு வந்து சேர்ந்தார்.
"அங்கு வந்தவனிடம்,ஏப்பா மணி என்ன ஆகுது இப்பதான் வர என்று முத்து கோபமாக கேட்க,அது வந்துப்பா,அம்மா கடைக்கு அனுப்பி இருந்துச்சு.அங்க போய்ட்டு வர லேட் ஆயிடுச்சு.தினமும் ஒங்கொம்மாக்கு கடையில் போய் ஏதாச்சும் வாங்கிட்டு வர சொல்லிட்டு இருக்கனும்,மொத்தமா வாங்கி வைத்துக்கனும்னு பழக்கமே கிடையாது,என்று முத்து சத்தம் போட்டு போட, ஏன்பா என்று பிரகாசம் பார்க்க, தந்தை கேட்டதிலையே அமைதியாகிவிட்டார் முத்துவும் .
பிறகு, அண்ணன் எடுத்துட்டு வந்திருந்த சோள சோற்றையும்,கத்தரிக்காய் குழம்பையும்,ஆளுக்கு ஒரு தட்டில் போட்டு கொடுத்தவள்,அவளுக்கும் எடுத்து வைத்துக்கொண்டு நால்வரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.
பெரியவன் வந்துட்டானா? என்று தாத்தா கேட்க,இன்னும் இல்லையென்றான். ம்ம் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க அம்மாங்க கிட்ட சொல்லி, குடிக்க டீயும், அவங்களுக்கு சாப்ட எதாவது வாங்கிட்டு வந்துருப்பா என சாப்பிட்டுக்கொண்டே மகனிடம் சொன்னார் முத்து.
இப்பதானே சாப்பிட்டு இருக்காங்க அதுக்குள்ள எப்படிப்பா டீ குடிப்பாங்க? என்று செல்வி கேட்க,உச்சில வெயில் வரப்போகுது இல்லையா, வேலை வேகத்துல சாப்பிட்டது சீக்கிரம் செரிச்சிடும் கண்ணு.
ம்ம்... அதுவும் சரிதான் என்றவள், நால்வரும் சாப்பிட்ட பாத்திரங்களை, வாய்க்காலில் கழுவி கூடையில் வைத்து விட்டு,அண்ணனிமிருந்து போனை வாங்கி யூடூப் பாக்க ஆரம்பித்தாள்.
முத்துவோ,ஏர் ஓட்டும் வயலை பார்த்திட்டு வருவதாக சொல்லிட்டு சொல்ல,தாத்தா ஒரு விஷயம் என்றான் வளவன்.
சொல்லுய்யானு சொல்லிக்கொண்டே வெத்தலையின் மேல் சுண்ணாம்பை தடவி,வாயில் ஏற்கனவே போட்டிருந்த பாக்கோடு சேர்த்து மென்று கொண்டே, சொல்ல சொல்லி தலையசைக்க,உன் பேத்தி வந்திருக்கிறாள்.
"பேரன் அல்லியை தான் சொல்கிறான் என்று நினைத்தவர்,அல்லி புள்ள வீட்டுக்கு வந்துச்சா? என்று அதிர்ச்சியாக கேட்டார் பிரகாசம்.அய்யோஓஓஓஓ தாத்தா,உன் பெரிய பேத்தி தாமரை இருக்காளே, அவ ஊருக்குள்ள வந்துருக்காள் என்க, என்னப்பா சொல்லுற என மீண்டும் அதிர்ந்து கேட்டார் பிரகாசம்!.
ம்கும்.... காது அவுட்டா என்றவனின் தோள் பட்டையில் தட்டிக்கொண்டே, வாயில் போட்ட வெற்றிலையை துப்பியவர்,நெசமாவா அய்யா? என்க, ஆமா தாத்தா நான் பார்த்து பேசிட்டு தான் வரேன்.
எப்படி இருக்காய்யா?,பெரிய பொண்ணா இருப்பாளா?,நம்மளை எல்லாம் அவளுக்கு ஞாபகம் இருக்கா? என்று தனது மகள் வயிற்று பேத்தியை பற்றி பேரனிடம் கேள்விகளை அடுக்கினார் பிரகாசம்.
"அவளுக்கு என்ன தாத்தா ஜம்முனு இருக்கா என்று சொல்லி சிரித்தவன், எல்லாரையும் விசாரிச்சா தான் எனறவனிடம்,ம்ம்... அந்த அய்யனாரு என்ன முடிவு பண்ணி எங்குடும்பத்துல விளையாடுறான்னு தெரியலை,இப்படி சிதைஞ்சிட்டேனு வருத்தப்பட்டார்.
அதை கேட்டவன்,ஆமா அய்யனாருக்கு வேற வேலையே கிடையாது?,உங்க ரெண்டு பேர் குடும்பத்தில் தான் விளையாடுறது பாரேன்.மனுஷால் செய்த தப்புக்கு கடவுள் மேல எதுக்கு பழி போடுறீங்க? என்றான்.
சற்று தொலைவில் அமர்ந்து போன் பார்த்துக் கொண்டிருந்த செல்விற்கு இருவரும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தற்செயலாக நிமிர்ந்து பார்த்தவளுக்கு இருவரும் காரசாரமாக ஏதோ விவாதிப்பது தெரிந்து, அங்கிருந்து எழுந்து அவர்கள் அருகில் வந்தவள், என்னாச்சிணா?.
தாத்தா முகத்தில் கவலை இருப்பது போல தெரிய,நல்லா தானே இருந்தாங்க?,அதுக்குள்ளே என்ன ஆச்சு என்று யோசனையானவள்,தாத்தா எதுக்கு உம்முனு இருக்கீங்க என்க, உன் அத்தமவள் வந்துருக்காளாம் என்றார்
அல்லி நம்ப வீட்டுக்கு வந்துருக்காளா? என அவளும் அதிர்ச்சியாக கேட்க, அல்லி இல்லை,அவளோட அக்கா தாமரை என்றான் வளவன்.
என்னாஆஆஆஆ அல்லிக்கு அக்கா இருக்காங்களா? என்று அதிர்ந்தவளுக்கு,என் முதல் பேத்திம்மா தாமரை எனச் சொல்லி வருத்தப்பட்டார் பிரகாசம்.
என்ன தாத்தா சொல்லுற என்க, ஆமாம்மா, னதாமரை தான் உன் அத்தைக்கு தலைச்சன்,பிறகு தான் சிவாவும்,அல்லியும் என்றவர்,இத்தனை வருஷமா அவளோட அத்த கூடவே வளர்ந்தாள்.இப்போ தான் ஊருக்குள்ள வந்துருக்காள்.
ஓஓஓ... என்றவள்,இப்படி ஒரு ஆள் இருக்குனு யார் தான் சொல்லியிருக்கீங்க என அங்கலாய்த்தவள்,ஆமா இது எப்படி தெரியும் என்க,அது வந்து என்று வளவன் இழுக்க,டேய் அண்ணாஆஆ நீ தானே அத்தை வீட்டுக்கு போன?.
ஏய்... நான் ஏண்டி அங்க போகப்போறேன்?,கொழுப்பா உனக்கு என தங்கையை சத்தம் போட,சும்மா நடிக்காதடா,நீ அத்தை கிட்ட பேசுறதும், அவங்க வீட்டுக்கு போவதும் அல்லி சொல்லிருக்காள்.
அடிப்பாவி என அல்லியை மனதிற்குள் திட்டியவன்,உன்கிட்ட அப்படி சொன்னாளா? என தங்கச்சியிடம் வளவன் கேட்க,அது வந்து என இப்பொழுது என்ன சொல்வதென்று செல்வி முழித்தாள்.
அவளின் முக மாற்றமே ஏதோ இருவருக்கும் சொல்ல,ஏம்மா செல்வி, நீ அல்லி கிட்ட பேசுவியா? என்றார் பிரகாசம்.தாத்தா... அது வந்து, அது வந்து என இழுக்க,சொல்லும்மா என்றவரிடம், அப்பாகிட்ட சொல்லிடாத, நானும் அல்லியும் ப்ரண்டு தான்.
பள்ளி கூடத்துல மட்டும் தான் பேசிப்போம் என்றவள் தலையில் கொட்டினான் வளவன். ஆஹான்.... தோழிக்கு அக்கா இருக்குறது மட்டும் தெரியாது, ஆனால் வீட்டுக்கு யார் வராங்க?,யார் வரலைனு? மட்டும் பேசிக்குறீங்க போல.
பேரன் பேத்தியை பார்த்தவர் உரிமை உள்ளவங்கள் இப்படி மறைமுகமாக பேசி பழகவேண்டிய சூழல் வந்து விட்டதே,என்று தான் எல்லாம் சரியாகுமோ அது அய்யனாரப்பனுக்கு தான் வெளிச்சமென்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.
அண்ணா,நிஜமாவே அந்த குள்ளி, அக்கானு ஒருத்தவங்க இருப்பதை இதுவரை என்னிடம் சொன்னதேயில்லைணா என வருத்தமாக செல்வி சொல்ல,ஓஓஓ... உனக்கு தெரியும்னு இருந்திருப்பாள், அதான் சொல்லலை போல.
வரட்டும் கிளாஸ்க்கு அப்போ இருக்கு அந்த குள்ளச்சிக்கு என்ற செல்வி, தாத்தா சாப்ட போன ஆளுங்களாம் வராங்க என்றவள்,நான் அண்ணா கூட வீட்டுக்கு போறேனென்று சொல்லிக்கொண்டே,சாப்பாட்டு பேகை கையிலெடுத்தவள்,போலாமாணா என்றாள்.
ம்ம் என்றவன் தங்கை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டே வரப்பில் நடந்தவனின் செல்லுக்கு கால் வர, பாக்கெட்டில் இருந்த எடுத்தவன் புது நம்பராக இருக்க,யோசனையோடே அட்டென் பண்ணி ஹலோ என்க,
அந்தப்பக்கத்தில் இருந்து மாமா..நான் தாமரை பேசுறேன் என்றாள்.
"அந்த மென்மையான குரலும், அவளின் உரிமையான அழைப்பும் வளவனுக்கு ஏதோ உள்ளுக்குள் குறு குறுத்தது. ஹலோஓஓ..மாமா இருக்கீங்களா என மீண்டும் அவள் கேட்பதில் சுதாரித்தவன்,சொல்லு தாமரை என்க, ஒரு ஹெல்ப் பண்ணனும்.
சொல்லு, என்ன பண்ணனும் என வளவன் கேட்க, தன்னோடு நாளைக்கு பக்கத்து டவுனுக்கு வர முடியுமா? என்றாள் தாமரை.
ஓஓ என்றவன்,நாளைக்கு மதிய ஷிப்ட் தான் எனக்கு.அதனால,காலை 11 மணிக்கு மேல போகலாமா என இவன் கேட்க,ம்,மாமா என்று சொல்லியவளின் அழைப்பு கட்டானது.
கதிர்:
"வயலுக்கு தேவையான உரங்களை வாங்கியவன்,தங்களது வண்டியில் ஏற்றி விட்டு,அம்மா சொல்லிய பொருட்களை வாங்கிட்டு வரேன், நீங்க டெம்போல போய்டுங்கப்பா என பெருமாளிடம் சொல்ல,சரிப்பா என்றவர் வழக்கம் போல தன் மகனை ரசித்து பார்த்தார்.
"அடர் குங்கும கலர் சட்டையும்,அதே கலரில் சிறு பார்டர் வைத்த வெள்ளை வேட்டியும்,கழுத்தில் வெந்தய விதை மாடலில் செயினும்,நெற்றியில் சிறு கீற்றாக சந்தனமும்,அதன் மேல் சிறிது குங்குமமும்,இரு புறமும் முறுக்கி விட்ட மீசையும்,அளவான தாடியுடன் கதிரை பார்க்க அவ்வளவு கம்பீரமாக இருந்தது.இவன் என் மகன் என்ற பெருமிதம் அவர் முகத்தில் சிரிப்பை தந்தது.
"ஒரு கையால் லேசாக வேட்டியின் முனையை தூக்கி பிடித்து அவன் நின்ற தோரணம் ஆஹாஆஆஆ.... தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தந்தைக்கு, என்னப்பா என்க, ஒன்றும் இல்லைபா என்றவர்,டெம்போவில் ஏற வண்டி அங்கிருந்து சென்றது.