Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
அசாம்!
ஃபோன் பேசி முடித்து உள்ளே வந்த நவீன், அங்கிருந்த பெண் வீட்டினரை பார்த்தவன் சிரமத்திற்கு மன்னிக்கனும், உங்கள் பொண்ணை எனக்கு பிடித்திருக்கின்றது.
இப்பொழுது நான் உடனடியே பர்சனல் வேலையா போயாகனும்.தப்பாக எடுத்துக்காதீங்க அங்கிள் என்கவும்,தம்பி என் பொண்ணை இன்னும் நீங்க பார்க்கவே இல்லையே?.
குணத்தை கேட்டேன் அங்கிள் அது போதும் என்றவனை,அங்கிருந்தவர்கள் புரியாமல் பார்த்தனர்.
நான் உள்ளே வரும் போது,வீட்டுக்கு நீ மட்டும் தான் மருமகள்.உன் ராஜியம் தான்.சொத்துக்கு எந்த பிக்கல் பிடுங்களுமில்லை, இனி நீ தான் அந்த வீட்டுக்கு மகாராணினு உங்க பொண்ணோட தோழிங்க சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அதற்கு உங்க பொண்ணோ இல்லை என்னோட பொண்டாட்டி சொன்ன பதில், நான் நல்ல மனைவியா,மருமகளாக தான்டி இருக்கு ஆசைப்படுகிறேன். மகாராணியா இல்லைனு சொன்னாள்.
அந்த குணமே அவளோட வளர்ப்பு முறையை சொல்லி விட்டு என்றவன், தனது மாமா வெற்றிவேலை பார்த்து, கல்யாணத்துக்கு சம்மதம் மாமா என்க.
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அவனுக்காக பார்க்கும் பொண்ணுங்களையெல்லாம், எதாவது காரணம் சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டே வந்தவன் இன்று சம்மதம் சொன்னதைக்கேட்டு ஆனந்த அதிர்ச்சியாகினர்.
அம்மாடி சிந்து, நீ என்ன சொல்லுறனு வெற்றிவேல் கேட்க, அண்ணா எனக்கு நெஞ்சு வலிக்கிற போல இருக்கென்கவுப்,உனக்குமாடி என்றார் வெற்றிவேலின் மனைவி திலகா.
இருவரையும் பார்த்து நவீன் முறைக்க, அங்கிருந்த நவீனின் ஆருயிர் நண்பன் ஆதிக்கும்,அவன் மனைவிக்கும் சிரிப்பு தாங்கவில்லை.
அப்போ இதை நிச்சயமாக பண்ணிக்கலாமா? என்று வெற்றிவேல் கேட்க, தாராளமாக பண்ணிடலாமே என்றார் பொண்ணின் தந்தை.
எதற்கு இவ்வளவு மரியாதை என்க, ஆயிரம் தான் இருந்தாலும் நீங்க இந்த மாநிலத்தின் அமைச்சர்.அதற்காவது மரியாதை கொடுக்கணுமே..
வெற்றிவேல் அமைச்சர் என்பது வெளி உலகத்துக்காக தான்.என்னோட குடும்பத்துக்கு நான் எப்பவுமே வெற்றிவேல் தான் என்றவர்,ஆதி, நீயும்,ஜீவியும் போய் நிச்சயத்திற்கான நகையை வாங்கிட்டு வாங்க.
நான் மற்றதை பார்க்குறேன் என்க,அப்பா நீங்க இங்க இருந்து பார்த்துக்குங்க. எனக்கு தெரிஞ்ச கிளைன்ட் மேரேஜ் ஈவ்மென்ட் கம்பெனி வச்சிருக்காங்க.
அவங்க கிட்ட சொன்னால் போதும் ஒரு மணி நேரத்தில் எல்லாம் ரெடியாயிடும் என்றவனோ தங்கள் மூன்று வயது குழந்தையை அவர்களிடம் விட்டு விட்டு நகைக்கடைக்கு சென்றனர்.
அதைப்போல பங்ஷனுக்கான அலங்காரம் செய்ய ஆட்களும் வந்தனர்.
பெண் வீட்டு தோட்டமே பெரியதாக இருந்ததால், விரைவில் அலங்காரத்தை முடித்தனர்.
வர்ஷனுக்கும், மித்ரனுக்கும், லண்டனில் இருக்கும் மற்றொரு நண்பனுக்கும் நவீன் நிச்சயத்தை சொல்ல,அதைக்கேட்டு சந்தோஷப்பட்டனர்.கடைசி நேரத்தில் சொல்லியதைக்கேட்டு மூவரும் திட்ட, திடீர் பிளானை பற்றி சொன்னதும் அவர்களும் சரியென்றனர்.
நெருங்கிய உறவுகளுக்கு முன்னிலையில் நவீன்-மிஷா இருவருக்கும் நிச்சயம் நல்லபடியாக முடிந்தது.பின்னர் மிஷா வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு,வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
ஆதி லண்டனிலிருந்து வந்த பின்னர் இருவரின் சம்பாத்தியத்தை வைத்து, ஒரே மாடலில் அருகருகே இரண்டு வீட்டை கட்டி, இரண்டு குடும்பமும் புது வீட்டிற்கே குடி வந்து விட்டனர்.
வீட்டில் வந்து ஹாயாக ஷோஃபாவில் உட்கார,மாமா ஒரு விஷயம் என்றான்.சொல்லுப்பா என்று வெற்றிவேல் கேட்க, நைட் பன்னிரெண்டு மணிக்கு பிளைட், நீங்க மூன்று பேரும் ரெடியாக இருங்க.
வெற்றிவேல் மற்றும் ஆதியிடம் மிஷா வீட்டில் இருக்கும் போதே வர்ஷன் ஃபோன் பண்ணி பேசிய விஷயத்தை சொல்ல, ஆதியோ அதிர்ந்தான், அவனின் தந்தையோ எனக்கு இது தெரியும் என்ற தோரணையில் இருந்தார்.
அப்பா என்ன நீ பாட்டுக்கு புடிச்சு வச்ச சிலை போல போஸ் குடுக்குற?, எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிருக்கானென்று ஆதி கேட்க, அடேய் உங்களுக்கு நான் அப்பன்டா.
எனக்கு எப்படி இது தெரியாமல் இருக்கும்?
பிறகு தான் சீமக்கரைக்கு போவதற்காய், சென்னைக்கு போய்ட்டு, அங்கிருந்து மதுரைக்கு செல்ல ஃபிளைட் டிக்கெட் போட்டனர்.
எங்கே தான் போறோமென்று திலகாவும் சிந்துவும் கேட்க?,சொன்னா தான் இரண்டு மேடம் வருவீங்களோ என்றார் வெற்றிவேல்.
அப்படி இல்லை, ஓகே போகலாம் என்று அவரவர் பேகை ரெடி பண்ண சென்றனர்.
சீமக்கரை...
பொங்கல் லீவ் முடிந்து பள்ளி தொடங்கியது.வீட்டில் நடந்த களோபரத்தில் அடுத்து வந்த இரண்டு நாட்கள் அல்லி, நிலவன் மற்றும் செல்வி மூவரும் ஸ்கூலுக்கு செல்லவில்லை.
திங்கள் கிழமை விடியல் ஆரம்பமானது.வழக்கம் போல உள்ளுக்குள் வலியை மறைத்துக்கொண்டு வேலையை செய்தனர் இரண்டு வீட்டில் உள்ளவர்களும்
அங்கு அல்லியும், இங்கு நிலவன், மற்றும் செல்வி மூவரும், ஸ்கூலுக்கு செல்ல ரெடியாகிக்கொண்டிருந்தனர்.
இருவருக்குமான மதிய உணவை ராதா டிபன் பாக்ஸில் வைத்து அவர்களுக்குரிய பேகில் வைத்தார்.
அதற்குள் இருவரும் சீதா கொடுத்த டிபனை சாப்பிட்டு முடிக்க, வாசலில ஹாரன் சத்தம் கேட்க,இருவரும் வீட்டில் சொல்லிக்கொண்டு பேகை எடுத்து வெளியே வந்தனர்.
செல்வி வளவனின் பின்னால் உட்கார, நிலவன் அவனுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டான்.
மூவரும் அங்கிருந்து சீமக்கரை பஸ் ஸ்டாப்பை நோக்கிச்செல்லும் போது, அல்லியை அழைத்துக்கொண்டு சிவாவும் வண்டியில் வந்தான்.
நிலவனுடைய நண்பர்களும் அவனோடு சைக்கிளில் வந்து இணைந்து கொண்டனர்.
பஸ் வந்ததும் இருவரையும் ஏற்றி விட்டு வளவன் தனது கம்பெனிக்கும், சிவா அவனது காலேஜிக்கும் சென்றான்.
இருவரும் சிறிது நிமிடம் வரை அமைதியாகவே வண்டியில் வந்தனர்.
அப்பொழுது மாமா என்று சிவா கூப்பிட, ம்ம் சொல்லுடா.
ஒரு விஷயம் சொல்லனும் மாமா என்க, சொல்லுடானு வளவன் கேட்க, முதல் நாள் தனது வீட்டில் நடந்ததை பற்றி,சிவா சொல்ல தொடங்கினான்.
தாமரை வீடு...
பேசிக்கிட்டு இருக்கும் போது திடிரென்று ஃபோன் கால் கட் ஆனதும், மீண்டும் மூக்கையன் நம்பருக்கு வேதா கால் பண்ண, சுவிட்ச் ஆப் என்று வந்தது.
என்னாச்சி வேதா என்று அன்பு கேட்க, அண்ணா மருது கிட்ட விஷயத்தை சொல்லிக்கொண்டு இருக்கும் போது திடீர்னு கட் ஆகிட்டுணா.
திரும்ப கால் பண்ணுனேன் ஆஃப்ல இருக்குனு வருது.அப்புறம் ணா ஒரு விஷயம் சொல்லனும்.
ம்ம் சொல்லு வேதா?
மருதுக்கு பவி கூட கல்யாணம் ஆகிட்டுணா என்கவும்,என்ன வேதா சொல்லுறனு அதிர்ந்தனர்.
ஆமாணா என்றவர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.பவியோட அப்பா, அம்மா காதலிச்சி கல்யாணம் செய்து கொண்டதால் அவங்களை வீட்டில் சேர்க்கவில்லைனு உங்களுக்கு தெரியும் இல்லையா என்க,அன்புவோ ஆமாம்மா தெரியுமென்றார்.
தாமரை இங்க வருவதற்கு இரண்டு நாளைக்கு முன்னாடி பவியோட பாட்டிக்கு, அதாவது அப்பா வழி பாட்டிக்கு ரொம்ப உடம்பு சரியில்லைன்னு ஃபோன் வந்துருக்கு.
அதனால் அவங்க மூணு பேரும் கோயம்புத்தூர் போயி பார்த்து விட்டு, மூன்று நாள் சென்று நீலகிரிக்கு வந்து விட்டதாக பவி என் கிட்ட சொன்னாள்.
பிறகு பொங்கல் அன்றைக்கு அவங்களுக்கு திரும்பவும் உடம்பு முடியலைனு, பவிய என் கிட்ட விட்டுவிட்டு, அவங்க ரெண்டு பேரும் கோயம்புத்தூருக்கு போய்ட்டாங்க.
மறுநாள் மாட்டு பொங்கல் அன்றைக்கு அந்த அம்மாவை ஹாஸ்பிட்டல்ல காட்டுவதற்காக ஆட்டோல அனுப்பிட்டு, இவங்க ரெண்டு பேரும் வண்டியில வரும் போது, லாரிகாரன் மோதுனதில், பவியோட அப்பா ஸ்பார்ட்லே இறந்துட்டார்.அவ அம்மா சீரியஸா இருக்காங்கனு ஃபோன் வந்ததும்,எனக்கு கையும் ஓடல, காலும் ஓடலைணா.
அவள் கிட்ட பாட்டிக்கு சீரியஸ்னு சொல்லி, நான், மயிலா, மருது, பவி நாலு பேரும் அங்கிருந்து ஹாஸ்பிட்டலுக்கு போனப்போ, ஐசியுல இருந்தாங்க.
அங்க போன பிறகு தான் பவிக்கு விஷயம் தெரிஞ்சி கதற,கடைசி நேரத்தில் தனது மகளை அனாதையா விட்டு போகாமல், அவங்க தாலியை காட்டி மருதுவை கட்ட சொல்லி கையெடுத்து கும்பிட்டாங்க.
அதை பார்த்த மயிலா, தனது மகனை பவி கழுத்துல தாலி கட்ட நிர்பந்திக்க, வேற வழி இல்லாமல் அவன் கட்டி முடிச்சதும், உயிர் போயிட்டுணா.
பிறகு பாடிய எடுத்து வந்து நீலகிரில தான் எரிச்சது.
அன்றையில் இருந்து பவி எதுவும் பேசுறது இல்லைணா.சித்த பிரம்மை புடிச்ச போல இருக்காள்.அந்த சூழல்ல என்னால் உங்க கிட்டயும் விஷயத்தை சொல்ல முடியலைணா.
பவியோட தாத்தா அவர் மனைவி கிட்ட கூட மகன், மருமகள் இறந்த விஷயத்தை சொல்ல முடியாமல் தவிச்சிக்கிட்டு இருக்கார்ணானு நடந்த எல்லாவற்றையும் வேதா சொல்லக்கேட்டவர்களுக்கு பேரதிர்ச்சியாக தான் இருந்தது.
நம்ப வீட்டில் நடந்ததை விட பெருக்கொடுமை நடந்துருக்கேயென்று, கலா அப்பாயி சொல்லி வருத்தப்பட்டார்.
இதான் மாமா என்று வளவனிடம் சொல்ல,கேட்டவனுக்கும் பவிய நினைத்து பாவமாக இருந்தது.
நேரமும் கடந்து சென்றது.வேதா சாப்பிடவானு கவிதா கூப்பிட, எதுவுமே பதில் சொல்லாமல் இருந்தார்.
அப்பொழுது வேதா என்று குரல் கேட்டு திரும்பி பார்க்க, அங்கே ராதா, பார்வதி, சீதா மற்றும் வள்ளி அப்பாயி நான்கு பேரும் நிற்பது தெரிந்தது.
வேதா என்று வேகமாக வந்த பார்வதி கையை பிடிக்க, நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது தோழியை பார்த்த வேதாவிற்கு கண்கள் கலங்கியது.
எப்படிடி இருக்கிறயென்று பார்வதி கேட்க, உசுரோட தான் இருக்குறேன் பாரு.
வேதாவுக்கும் பார்வதிக்கும் மூன்று வருடம் வயது வித்தியாசம் இருந்தாலும் தோழியாக தான் இருவரும் பழகினர்.
ஏண்டி ஒரு வார்த்தை கூட சொல்லாம போனனு பார்வதி கேட்க,என் தலையெழுத்து பாரு.
அப்பொழுது வேதா என்று சீதா கூப்பிட, அவர் குரலைக்கேட்டு திரும்பி பார்க்காமல்,என் பொண்ணு காணும் என்றதால் தான் இங்கு வந்தேன்.
மற்றப்படி உங்க தங்கச்சி வாழ்க்கையை கெடுத்து, அதில் பங்கு போட நான் வரவில்லைனு வேதா சொல்லியதைக்கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்ல, வயலுக்கு போய்விட்டு வீட்டிற்குள் வந்த அன்புவும் அதிர்ந்தார்.
அய்யோ வேதா என்னை மன்னிச்சிடு. உண்மை தெரியாமல் நானும் உன்னை தப்பா பேசிட்டேனென்று மன்னிப்புக்கேட்டு சீதா அழுதார்.
இப்போ என்ன சொன்ன வேதா? என்ற அன்புவின் குரல் கேட்டு,வேதாவிற்கு உள்ளுக்குள் புயல் அடித்தது.
சீதா என்ன விஷயம்மா?.
வளவனும் அன்னைக்கு தெரிஞ்சே அப்பாவும் பாவம் பண்ணிட்டாருனு மன்னிப்பு கேட்டான், இப்போ நீயும் கேட்குற?.
என்ன நடந்துச்சினு யாராவது சொல்லி தொலைங்க என்று கத்தினார்.
ஃபோன் பேசி முடித்து உள்ளே வந்த நவீன், அங்கிருந்த பெண் வீட்டினரை பார்த்தவன் சிரமத்திற்கு மன்னிக்கனும், உங்கள் பொண்ணை எனக்கு பிடித்திருக்கின்றது.
இப்பொழுது நான் உடனடியே பர்சனல் வேலையா போயாகனும்.தப்பாக எடுத்துக்காதீங்க அங்கிள் என்கவும்,தம்பி என் பொண்ணை இன்னும் நீங்க பார்க்கவே இல்லையே?.
குணத்தை கேட்டேன் அங்கிள் அது போதும் என்றவனை,அங்கிருந்தவர்கள் புரியாமல் பார்த்தனர்.
நான் உள்ளே வரும் போது,வீட்டுக்கு நீ மட்டும் தான் மருமகள்.உன் ராஜியம் தான்.சொத்துக்கு எந்த பிக்கல் பிடுங்களுமில்லை, இனி நீ தான் அந்த வீட்டுக்கு மகாராணினு உங்க பொண்ணோட தோழிங்க சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அதற்கு உங்க பொண்ணோ இல்லை என்னோட பொண்டாட்டி சொன்ன பதில், நான் நல்ல மனைவியா,மருமகளாக தான்டி இருக்கு ஆசைப்படுகிறேன். மகாராணியா இல்லைனு சொன்னாள்.
அந்த குணமே அவளோட வளர்ப்பு முறையை சொல்லி விட்டு என்றவன், தனது மாமா வெற்றிவேலை பார்த்து, கல்யாணத்துக்கு சம்மதம் மாமா என்க.
கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அவனுக்காக பார்க்கும் பொண்ணுங்களையெல்லாம், எதாவது காரணம் சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டே வந்தவன் இன்று சம்மதம் சொன்னதைக்கேட்டு ஆனந்த அதிர்ச்சியாகினர்.
அம்மாடி சிந்து, நீ என்ன சொல்லுறனு வெற்றிவேல் கேட்க, அண்ணா எனக்கு நெஞ்சு வலிக்கிற போல இருக்கென்கவுப்,உனக்குமாடி என்றார் வெற்றிவேலின் மனைவி திலகா.
இருவரையும் பார்த்து நவீன் முறைக்க, அங்கிருந்த நவீனின் ஆருயிர் நண்பன் ஆதிக்கும்,அவன் மனைவிக்கும் சிரிப்பு தாங்கவில்லை.
அப்போ இதை நிச்சயமாக பண்ணிக்கலாமா? என்று வெற்றிவேல் கேட்க, தாராளமாக பண்ணிடலாமே என்றார் பொண்ணின் தந்தை.
எதற்கு இவ்வளவு மரியாதை என்க, ஆயிரம் தான் இருந்தாலும் நீங்க இந்த மாநிலத்தின் அமைச்சர்.அதற்காவது மரியாதை கொடுக்கணுமே..
வெற்றிவேல் அமைச்சர் என்பது வெளி உலகத்துக்காக தான்.என்னோட குடும்பத்துக்கு நான் எப்பவுமே வெற்றிவேல் தான் என்றவர்,ஆதி, நீயும்,ஜீவியும் போய் நிச்சயத்திற்கான நகையை வாங்கிட்டு வாங்க.
நான் மற்றதை பார்க்குறேன் என்க,அப்பா நீங்க இங்க இருந்து பார்த்துக்குங்க. எனக்கு தெரிஞ்ச கிளைன்ட் மேரேஜ் ஈவ்மென்ட் கம்பெனி வச்சிருக்காங்க.
அவங்க கிட்ட சொன்னால் போதும் ஒரு மணி நேரத்தில் எல்லாம் ரெடியாயிடும் என்றவனோ தங்கள் மூன்று வயது குழந்தையை அவர்களிடம் விட்டு விட்டு நகைக்கடைக்கு சென்றனர்.
அதைப்போல பங்ஷனுக்கான அலங்காரம் செய்ய ஆட்களும் வந்தனர்.
பெண் வீட்டு தோட்டமே பெரியதாக இருந்ததால், விரைவில் அலங்காரத்தை முடித்தனர்.
வர்ஷனுக்கும், மித்ரனுக்கும், லண்டனில் இருக்கும் மற்றொரு நண்பனுக்கும் நவீன் நிச்சயத்தை சொல்ல,அதைக்கேட்டு சந்தோஷப்பட்டனர்.கடைசி நேரத்தில் சொல்லியதைக்கேட்டு மூவரும் திட்ட, திடீர் பிளானை பற்றி சொன்னதும் அவர்களும் சரியென்றனர்.
நெருங்கிய உறவுகளுக்கு முன்னிலையில் நவீன்-மிஷா இருவருக்கும் நிச்சயம் நல்லபடியாக முடிந்தது.பின்னர் மிஷா வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு,வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
ஆதி லண்டனிலிருந்து வந்த பின்னர் இருவரின் சம்பாத்தியத்தை வைத்து, ஒரே மாடலில் அருகருகே இரண்டு வீட்டை கட்டி, இரண்டு குடும்பமும் புது வீட்டிற்கே குடி வந்து விட்டனர்.
வீட்டில் வந்து ஹாயாக ஷோஃபாவில் உட்கார,மாமா ஒரு விஷயம் என்றான்.சொல்லுப்பா என்று வெற்றிவேல் கேட்க, நைட் பன்னிரெண்டு மணிக்கு பிளைட், நீங்க மூன்று பேரும் ரெடியாக இருங்க.
வெற்றிவேல் மற்றும் ஆதியிடம் மிஷா வீட்டில் இருக்கும் போதே வர்ஷன் ஃபோன் பண்ணி பேசிய விஷயத்தை சொல்ல, ஆதியோ அதிர்ந்தான், அவனின் தந்தையோ எனக்கு இது தெரியும் என்ற தோரணையில் இருந்தார்.
அப்பா என்ன நீ பாட்டுக்கு புடிச்சு வச்ச சிலை போல போஸ் குடுக்குற?, எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிருக்கானென்று ஆதி கேட்க, அடேய் உங்களுக்கு நான் அப்பன்டா.
எனக்கு எப்படி இது தெரியாமல் இருக்கும்?
பிறகு தான் சீமக்கரைக்கு போவதற்காய், சென்னைக்கு போய்ட்டு, அங்கிருந்து மதுரைக்கு செல்ல ஃபிளைட் டிக்கெட் போட்டனர்.
எங்கே தான் போறோமென்று திலகாவும் சிந்துவும் கேட்க?,சொன்னா தான் இரண்டு மேடம் வருவீங்களோ என்றார் வெற்றிவேல்.
அப்படி இல்லை, ஓகே போகலாம் என்று அவரவர் பேகை ரெடி பண்ண சென்றனர்.
சீமக்கரை...
பொங்கல் லீவ் முடிந்து பள்ளி தொடங்கியது.வீட்டில் நடந்த களோபரத்தில் அடுத்து வந்த இரண்டு நாட்கள் அல்லி, நிலவன் மற்றும் செல்வி மூவரும் ஸ்கூலுக்கு செல்லவில்லை.
திங்கள் கிழமை விடியல் ஆரம்பமானது.வழக்கம் போல உள்ளுக்குள் வலியை மறைத்துக்கொண்டு வேலையை செய்தனர் இரண்டு வீட்டில் உள்ளவர்களும்
அங்கு அல்லியும், இங்கு நிலவன், மற்றும் செல்வி மூவரும், ஸ்கூலுக்கு செல்ல ரெடியாகிக்கொண்டிருந்தனர்.
இருவருக்குமான மதிய உணவை ராதா டிபன் பாக்ஸில் வைத்து அவர்களுக்குரிய பேகில் வைத்தார்.
அதற்குள் இருவரும் சீதா கொடுத்த டிபனை சாப்பிட்டு முடிக்க, வாசலில ஹாரன் சத்தம் கேட்க,இருவரும் வீட்டில் சொல்லிக்கொண்டு பேகை எடுத்து வெளியே வந்தனர்.
செல்வி வளவனின் பின்னால் உட்கார, நிலவன் அவனுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டான்.
மூவரும் அங்கிருந்து சீமக்கரை பஸ் ஸ்டாப்பை நோக்கிச்செல்லும் போது, அல்லியை அழைத்துக்கொண்டு சிவாவும் வண்டியில் வந்தான்.
நிலவனுடைய நண்பர்களும் அவனோடு சைக்கிளில் வந்து இணைந்து கொண்டனர்.
பஸ் வந்ததும் இருவரையும் ஏற்றி விட்டு வளவன் தனது கம்பெனிக்கும், சிவா அவனது காலேஜிக்கும் சென்றான்.
இருவரும் சிறிது நிமிடம் வரை அமைதியாகவே வண்டியில் வந்தனர்.
அப்பொழுது மாமா என்று சிவா கூப்பிட, ம்ம் சொல்லுடா.
ஒரு விஷயம் சொல்லனும் மாமா என்க, சொல்லுடானு வளவன் கேட்க, முதல் நாள் தனது வீட்டில் நடந்ததை பற்றி,சிவா சொல்ல தொடங்கினான்.
தாமரை வீடு...
பேசிக்கிட்டு இருக்கும் போது திடிரென்று ஃபோன் கால் கட் ஆனதும், மீண்டும் மூக்கையன் நம்பருக்கு வேதா கால் பண்ண, சுவிட்ச் ஆப் என்று வந்தது.
என்னாச்சி வேதா என்று அன்பு கேட்க, அண்ணா மருது கிட்ட விஷயத்தை சொல்லிக்கொண்டு இருக்கும் போது திடீர்னு கட் ஆகிட்டுணா.
திரும்ப கால் பண்ணுனேன் ஆஃப்ல இருக்குனு வருது.அப்புறம் ணா ஒரு விஷயம் சொல்லனும்.
ம்ம் சொல்லு வேதா?
மருதுக்கு பவி கூட கல்யாணம் ஆகிட்டுணா என்கவும்,என்ன வேதா சொல்லுறனு அதிர்ந்தனர்.
ஆமாணா என்றவர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.பவியோட அப்பா, அம்மா காதலிச்சி கல்யாணம் செய்து கொண்டதால் அவங்களை வீட்டில் சேர்க்கவில்லைனு உங்களுக்கு தெரியும் இல்லையா என்க,அன்புவோ ஆமாம்மா தெரியுமென்றார்.
தாமரை இங்க வருவதற்கு இரண்டு நாளைக்கு முன்னாடி பவியோட பாட்டிக்கு, அதாவது அப்பா வழி பாட்டிக்கு ரொம்ப உடம்பு சரியில்லைன்னு ஃபோன் வந்துருக்கு.
அதனால் அவங்க மூணு பேரும் கோயம்புத்தூர் போயி பார்த்து விட்டு, மூன்று நாள் சென்று நீலகிரிக்கு வந்து விட்டதாக பவி என் கிட்ட சொன்னாள்.
பிறகு பொங்கல் அன்றைக்கு அவங்களுக்கு திரும்பவும் உடம்பு முடியலைனு, பவிய என் கிட்ட விட்டுவிட்டு, அவங்க ரெண்டு பேரும் கோயம்புத்தூருக்கு போய்ட்டாங்க.
மறுநாள் மாட்டு பொங்கல் அன்றைக்கு அந்த அம்மாவை ஹாஸ்பிட்டல்ல காட்டுவதற்காக ஆட்டோல அனுப்பிட்டு, இவங்க ரெண்டு பேரும் வண்டியில வரும் போது, லாரிகாரன் மோதுனதில், பவியோட அப்பா ஸ்பார்ட்லே இறந்துட்டார்.அவ அம்மா சீரியஸா இருக்காங்கனு ஃபோன் வந்ததும்,எனக்கு கையும் ஓடல, காலும் ஓடலைணா.
அவள் கிட்ட பாட்டிக்கு சீரியஸ்னு சொல்லி, நான், மயிலா, மருது, பவி நாலு பேரும் அங்கிருந்து ஹாஸ்பிட்டலுக்கு போனப்போ, ஐசியுல இருந்தாங்க.
அங்க போன பிறகு தான் பவிக்கு விஷயம் தெரிஞ்சி கதற,கடைசி நேரத்தில் தனது மகளை அனாதையா விட்டு போகாமல், அவங்க தாலியை காட்டி மருதுவை கட்ட சொல்லி கையெடுத்து கும்பிட்டாங்க.
அதை பார்த்த மயிலா, தனது மகனை பவி கழுத்துல தாலி கட்ட நிர்பந்திக்க, வேற வழி இல்லாமல் அவன் கட்டி முடிச்சதும், உயிர் போயிட்டுணா.
பிறகு பாடிய எடுத்து வந்து நீலகிரில தான் எரிச்சது.
அன்றையில் இருந்து பவி எதுவும் பேசுறது இல்லைணா.சித்த பிரம்மை புடிச்ச போல இருக்காள்.அந்த சூழல்ல என்னால் உங்க கிட்டயும் விஷயத்தை சொல்ல முடியலைணா.
பவியோட தாத்தா அவர் மனைவி கிட்ட கூட மகன், மருமகள் இறந்த விஷயத்தை சொல்ல முடியாமல் தவிச்சிக்கிட்டு இருக்கார்ணானு நடந்த எல்லாவற்றையும் வேதா சொல்லக்கேட்டவர்களுக்கு பேரதிர்ச்சியாக தான் இருந்தது.
நம்ப வீட்டில் நடந்ததை விட பெருக்கொடுமை நடந்துருக்கேயென்று, கலா அப்பாயி சொல்லி வருத்தப்பட்டார்.
இதான் மாமா என்று வளவனிடம் சொல்ல,கேட்டவனுக்கும் பவிய நினைத்து பாவமாக இருந்தது.
நேரமும் கடந்து சென்றது.வேதா சாப்பிடவானு கவிதா கூப்பிட, எதுவுமே பதில் சொல்லாமல் இருந்தார்.
அப்பொழுது வேதா என்று குரல் கேட்டு திரும்பி பார்க்க, அங்கே ராதா, பார்வதி, சீதா மற்றும் வள்ளி அப்பாயி நான்கு பேரும் நிற்பது தெரிந்தது.
வேதா என்று வேகமாக வந்த பார்வதி கையை பிடிக்க, நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது தோழியை பார்த்த வேதாவிற்கு கண்கள் கலங்கியது.
எப்படிடி இருக்கிறயென்று பார்வதி கேட்க, உசுரோட தான் இருக்குறேன் பாரு.
வேதாவுக்கும் பார்வதிக்கும் மூன்று வருடம் வயது வித்தியாசம் இருந்தாலும் தோழியாக தான் இருவரும் பழகினர்.
ஏண்டி ஒரு வார்த்தை கூட சொல்லாம போனனு பார்வதி கேட்க,என் தலையெழுத்து பாரு.
அப்பொழுது வேதா என்று சீதா கூப்பிட, அவர் குரலைக்கேட்டு திரும்பி பார்க்காமல்,என் பொண்ணு காணும் என்றதால் தான் இங்கு வந்தேன்.
மற்றப்படி உங்க தங்கச்சி வாழ்க்கையை கெடுத்து, அதில் பங்கு போட நான் வரவில்லைனு வேதா சொல்லியதைக்கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்ல, வயலுக்கு போய்விட்டு வீட்டிற்குள் வந்த அன்புவும் அதிர்ந்தார்.
அய்யோ வேதா என்னை மன்னிச்சிடு. உண்மை தெரியாமல் நானும் உன்னை தப்பா பேசிட்டேனென்று மன்னிப்புக்கேட்டு சீதா அழுதார்.
இப்போ என்ன சொன்ன வேதா? என்ற அன்புவின் குரல் கேட்டு,வேதாவிற்கு உள்ளுக்குள் புயல் அடித்தது.
சீதா என்ன விஷயம்மா?.
வளவனும் அன்னைக்கு தெரிஞ்சே அப்பாவும் பாவம் பண்ணிட்டாருனு மன்னிப்பு கேட்டான், இப்போ நீயும் கேட்குற?.
என்ன நடந்துச்சினு யாராவது சொல்லி தொலைங்க என்று கத்தினார்.