Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
நீலகிரி.!
ஃபோன் கீழே விழுந்தது கூட தெரியாமல் அதிர்வில் இருந்த மகனின் தோளை தட்டிய மயிலா, தம்பி, தம்பி என்றார்.
தாயின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவன், அம்மா என்கும் போதே அவன் கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
எப்பாடி என்னாச்சியா?, சொல்லுப்பா என்க,அம்மா தாமரை தாமரை என்க, சொல்லுய்யா தாமரைக்கு என்னாச்சினு மயிலா கேட்க, அவளுக்கு கல்யாணம் ஆகிட்டாமா.
என்னா கல்யாணம் ஆகிட்டா என்றவர், தெளிவா சொல்லுய்யா என்க, கதிர் தாலி கட்டியது, அதை கழற்றி அவன் முகத்தில் தூக்கி எறிந்தது, பின்னர் லெட்டர் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்றது வரை சொல்லி முடித்தவன், ஏன் இந்த கடவுள் எங்களை இப்படி சோதிக்கிறார் மா?.
ஒருத்திய மனசார ஆசைப்பட்டேன், அவள் தான் வாழ்க்கைனு எத்தனை கனவு என்குள்ள இருந்துச்சி, அதை நீ நாசமாக்கிட்ட.
இப்போ அவ வாழ்க்கைய அங்க ஒருத்தன் நாசமாக்கிட்டான். ச்சை... என்ன வாழ்க்கை இது?.
உன் அவசர புத்தியால என் வாழ்க்கையில இப்போ என்ன நடந்துருக்கு பார்த்தியா? என்றவன், பெத்த மகன் ஆசையை விட,எவங்களோ ஒருவரோட உசுரு தான் உனக்கு பெருசா போகிட்டு இல்லை?.
அடுத்து எவனோ,இல்லை எவளாவது சாக கிடப்பாங்க, அவங்களுக்கும் மகள் இருந்தா முன்னாடியே போய் சொல்லி வச்சிடு, என் மகன் வாழ்க்கை கொடுப்பான்னு.
ஏன்னா உனக்கு தான் அடுத்தவங்க உசுரு நல்லா போகனும்னு பெரும் கவலையே என்றவன், ஏன்பா இதையெல்லாம் நான் தெரிஞ்சிக்க தான் என்னை வர வைத்தாயா?.
சொல்லுப்பா?, இப்போ உனக்கு சந்தோஷம் தானே?.
ஒருத்தி இத்தனை நாளா நடிச்சி ஏமாத்தியிருக்காள் அவளை கண்டு பிடிக்க துப்பு இல்லை, ஆனால் தியாகி பட்டம் வாங்க மட்டும் ரெடியா இருப்பீங்க இல்லையா?.
ஏன் டா இங்கு வந்தேனு இருக்கு ச்சை என்றவன், அப்பா இத்தனை நாளா என்னை வெளி நாட்டில் இருக்கும் முதலாளியோட இன்னொரு கார்மென்ட்ஸ்கு போறியானு கேட்டுக்கிட்டே இருந்தார்.அதுக்கான அவசியம் இதுவரை எனக்கு வரலை. இப்போ நான் போகனும்னு இருக்கேன்.
இப்போதைக்கு எனக்கு மன மாற்றம் வேண்டும். இந்த சூழலில் இருந்தால் நான் பைத்தியமாகுவேன், இல்லை வேற எதாவது முடிவெடுப்பேன். அதனால் நான் அங்கே போக முடிவு செய்துட்டேன்.என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை .
வேண்டும்னா அவளை டைவர்ஸ் பண்ணிட்டு, வேறு கல்யாணம் பண்ணிக்கொள்ள சொல்லுங்க.
எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதுமில்லாமல் அவள் முகத்தை பார்க்க கூட எனக்கு பிடிக்கலைப்பா என்றவன், வேக வேகமாக தயாராகி பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டு, அவர்கள் பதிலை கூட எதிர் பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.
போகும் மகனை தடுத்து நிறுத்த வழி இல்லாமல்,மயிலாவும், மூக்கையனும் பேயறைந்தது போல அதிர்ந்து போய் நின்றனர்!
சதாரா...
வேலை முடிந்து மாறனோடு வீட்டிற்கு வந்த தாமரை, தனது ரூமிற்கு சென்று ஃப்ரஷ் ஆகி கீழே வந்து சாப்பிட்டு முடித்து தனது அறைக்குள் வந்தவள், பின்னர் வி. வி கொடுத்த வேலையை தொடங்க,மனம் சஞ்சலமாக இருக்க,அவளால் ஓவியத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.
அதற்கு காரணம் இன்று அவளோடு டிரைனிங்கில் இருந்தவர்களெல்லாரும் அவளிடம் நீங்கள் மிஸ், ஆர் மிசஸ் தாமரையா என்க,எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை.வெறும் சிரிப்போடு ஐ ஆம் தாமரை என்று நிறுத்திக்கொண்டாள்.
அவள் நேரமோ என்னவோ தெரியவில்லை.இன்று அவர்கள் டிசைனிங் செக்க்ஷனுக்கு,திருமண லெகங்ஹா டிசைன் பார்க்க இரண்டு ஜோடிகள் வந்திருந்தனர்.
எல்லாம் சேர்ந்துக்கொண்டு கதிரின் நினைவுகளோ, தாமரையை வண்டாய் குடைய ஆரம்பித்தது.அதிலிருந்து தப்பித்து ஓடி வந்தும்,அவன் செய்த செயல்கள் நினைவில் வருவதை தடுக்க முடியாமல் உள்ளுக்குள் போராடிக்கொண்டிருக்க, வெளியே இயல்பாக இருப்பதைப்போல காட்டிக்கொண்டாள்.
ஒரு வழியாக வீட்டிற்கும் வந்தாச்சி, இனி தனது வேலையில் கவனத்தை செலுத்த நினைக்க, அவன் நினைவே வருதேனு தலையை பிடித்து கண்ணை மூட, ஏரிக்கரையில் அவன் கையை பிடித்து நிறுத்திய நினைவு வரவும் தன்னை மறந்து முரட்டுப்பயலென்று திட்டினாள்.
இனி வரைய முடியாது என்பது தோன்ற, அதையெல்லாம் எடுத்து வைத்து விட்டு, நைட் லேம்பை மட்டும் ஆன் பண்ணி மெத்தையில் படுத்துக்கொண்டாள்.
நேரமும் கடந்து சென்றும் தாமரைக்கு தூக்கம் வருவது போல தெரியவில்லை.
சிறிது நேரம் புரண்டு படுத்தவள், சரி கொஞ்ச நேரம் வாக் பண்ணினால் நன்றாக இருக்குமென்று தோன்ற, கதவை திறந்தவள், அங்கிருந்து மாடிக்கு சென்று பார்க்க, இரவு நேரமும், தூரத்தில் தெரியும் மின் விளக்கின் ஒளியும், வானில் இருந்த வெண்மதியும் அவளை வரவேற்றது.
நிலவின் வெளிச்சம் நன்கு தெரிந்தது. அப்பொழுது மாடிப்படியில் யாரோ வரும் காலடி சத்தம் கேட்டு பயந்தவள்,குரலில் தைரியத்தை வர வைத்துக்கொண்டு யாரு? என்றாள்.
நான் தான் என்றவாறே, மாறன் வந்து கொண்டிருந்தான்.
தூங்காமல் இந்த நேரத்தில் என்ன பண்ணுறீங்கனு இருவரும் ஒரே நேரத்தில் கேள்வியை கேட்டனர்.
தூக்கம் வரலை, சரி கொஞ்சம் வாக் பண்ணலானு மாடிக்கு வந்தேனென்றாள்.
ஓஓ என்றவன், கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வேறு யாரும் வர வாய்ப்பு இல்லை, இருந்தாலும் ஒரு சந்தேகம், அதனால் தான் வந்தேனென்றான் மாறனும்.
ம்ம் என்றவள் தூரத்து நிலவை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பதை கண்டவன், எதுவும் நிரந்தரமில்லை என்றான்.
யார் சொன்னாலென அவனை திரும்பி பார்க்காமலே கேட்டாள்.
குட் கொஸ்டீன் என்றவன், பழமொழி சொன்னால் கேட்டுக்கனும், ஆராய்ச்சி பண்ணக்கூடாது.என்ன பிரச்சினை உனக்கென்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
மாறனின் கேள்வியில் திடுக்கிட்டவள், அப்படிலாம் ஒன்னும் இல்லையே.
ஆஹான் என்றவாறே அவளருகில் வந்தவன், எங்கே என்னை பார்த்து சொல்லு பார்க்கலாம் என்க, அருகில் கேட்ட மாறனின் குரலில் அதிர்ந்து திரும்ப,இரண்டடி இடைவெளியில் மாறன் நின்றிருந்தான்.
கமான் இப்போ சொல்லென்று அவளை தீர்கமாக பார்க்க, ஒரு முறை அவனை நிமிர்ந்து பார்த்தவள், தன்னைப்பற்றி சொல்லத்தொடங்கினாள்.
நான் தாமரை என்க, நெக்ஸ்ட் என்றான்.
பின்னர் ஏழு வயதில் தனது அத்தை வேதாவோடு நீலகிரிக்கு வந்ததையும், அங்குள்ள மலைவாழ் மக்களுக்கான சின்ன மருத்துவமனையில் வேதா நர்சாக இருப்பதாக சொன்னாள்.
பின்னர் அங்கு பவியும், மருதுவும் நண்பர்களானது, ஒரே பள்ளியில் மூவரும் படித்ததையும், மருது மூன்று வயது பெரியவனென்றாள்.
கல்லூரி வரை அங்கையே படித்து விட்டு கோவையில் இருக்கும் பிரபலமான டெக்ஸ்டைல்ஸில் ஆறு மாதம் வேலை பார்த்ததும், சிறு வயதில் இருந்து ஆசைப்பட்ட தனது லட்சியத்தை நோக்கி செல்ல வேண்டியதால், இரண்டு மாதம் தன்னை பெற்றவர்களோடு இருந்து விட்டு வர, வேதாவிடம் சொல்லிக்கொண்டு சீமக்கரைக்கு வந்ததும்,பொங்கல் பண்டிகையில் மஞ்சள் நீர் ஊற்றி விளையாடும் விழாவில் கதிர் தனக்கு தாலிக்கட்டியதையும் அவன் சொல்லிய காரணத்தையும், அவன் கட்டிய தாலியை கழற்றி எறிந்து விட்டதையும், இரு குடும்பத்திற்கும் உள்ள மனஸ்தாபத்தில், என் வாழ்க்கை கால் பந்தாகிவிட்டது என்று சொல்லி கண்கலங்கினாள்.
கேட்ட மாறனுக்கும் கதிரின் மேல் கோவம் வந்தது. பெரியவர்கள் பிரச்சினை என்றால் அவர்களிடம் மோத வேண்டும்.
அது என்ன பெண் பிள்ளை வாழ்க்கையில் விளையாடுவதென்று பல்லை கடித்தவன்,லீனாவை எப்படி தெரியுமென்று கேட்டான்.
அவன் கேள்வியில் உள்ளுக்குள் அதிர்ந்தவள்,என்ன சொல்வதென்று முழித்தவளோ பேஸ்புக் ப்ரண்ட் என்று அடித்து விட்டாள்.
ஓஓ என்றவன் அவள் பேஸ்புக்ல அக்கவுன்ட் வச்சிருக்காளானு கேட்கும் போதே மாறனின் முகம் கோவத்தில் சிவந்தது.
இல்லை இல்லை ... முன்னாடி இருந்தாங்க, இப்போ இல்லை என்கவும் அப்படியா?.
வீட்டில் என்னை எப்படி தெரியுமென்று விசாரித்தால் இப்படி எதாவது சொல்லென்று,லீனா தான் சொல்லிக்கொடுத்தது.
ஆமாம் என்றாள்...
சரி அடுத்து என்ன பிளான் என்றான்.
எதற்கென்று தாமரை கேட்க, அவளை ஒரு பார்வை பார்த்தவன், ம்ம் நம்ப கல்யாணத்துக்கென்றான்.
அவன் சொன்னதைக்கேட்டவள் என்னாஆஆ என்று கண்கள் விரிய அதிர, ஹேய் சும்மா சொன்னேன்.கல்யாணம் பண்ணுற ஐடியாலாம் இப்போதைக்கு எனக்கு கிடையாது என்றான்.
ம்ம்..கொஞ்ச நாள் போகட்டும்,பிறகு அடுத்தது என்னவென்று யோசிக்குறேனென்றாள்.
சரி.அதுவரை மேடம் என் கம்பெனியில் அடைக்கலமோ என்க,அது உங்க கம்பெனி தானென்று இன்டர்வியூவில் உங்களை பார்க்குற வரைக்கும் எனக்கு தெரியாதுங்களே சார்.
அதற்கு ஓஓ என்றவன்,எதுக்கு இந்த சாரை பிடித்து தொங்கிட்டு இருக்க?.
ஆபிஸ்ல தான் நான் உனக்கு சார்.ஆமாம் அந்த ஹீரோ பேரு என்ன?
எந்த ஹீரெவென்றாள்?.
ம்ம் உன் முன்னால் கணவனென்க, எதேஏஏஏ முன்னால் கணவனானு திகைத்தாள்!.
எஸ்... நீ தான் அவன் வேண்டாமென்று தாலியை கழட்டி தூக்கி எறிந்து விட்டாயே, அப்போ முன்னால் கணவன் தானேனு மாறன் சொல்ல,அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
இப்போ நீங்க மிஸ் தாமரையா?, இல்லை மிசஸா? என்றான்.
ஒரு நொடி கண்ணை மூடி திறந்தவள், இப்போதைக்கு நான் தாமரை மட்டுமென்று சொல்லி விட்டு, படியிலிறங்கி கீழே சென்று விட்டாள்.
கீழே சென்றவள் சொல்லிச்சென்ற விஷயத்தை பற்றி தான் மாறன் யோசித்துக்கொண்டிருந்தான்.
எந்த பெண்ணுக்கும் ஏற்க முடியாத சூழல் தான்.
விரும்பி கல்யாணம் பண்ணுவது வேறு, இல்லை, ஒரு தலையாக காதலித்து அதற்காகவும் கல்யாணம் பண்ணிக்கொள்ளும் சிலரும் உண்டு.
ஆனால் இங்கு தாமரை விஷயத்தில் குடும்பத்தை பழி வாங்க நினைத்து பண்ணிருக்கானே இவனெல்லாம் என்ன ஆம்பளை?.நேரடியாக மோத தைரியம் இல்லாதவன் பொண்ணு கிட்ட போய் வீரத்தை காட்டிருக்கான் கோழைப்பயலென்று திட்டிக்கொண்டிருந்தான்.
அப்பொழுது மாறனின் மனசாட்சியோ,ஆமாம் நீ எதுக்கு இப்படி ஓவரா துள்ளுறாய்?.இது அவளோட பிரச்சினை. அதுக்கு என்ன முடிவு எடுக்கனுமென்று அவளுக்கு நல்லா தெரியும், உனக்கு என்ன வந்துச்சி?.
அது என்ன இத்தனை நாளும் இல்லாமல் எங்கிருந்தோ வந்த ஒருத்திக்காக உருகுற?, என்ன தம்பி லவ்வா என்றது?.
அப்படிலாம் ஒரு மண்ணும் இல்லை.
இந்த காதல் கன்றாவியெல்லாம் எனக்கு செட்டாகாது என்றவன், ஒரு மனிதாபிமான அடிப்படையில் தான் அவ கிட்ட கேட்டேனென்றான்.
அப்படி இருந்தால் நல்லது தானென்று மனசாட்சி செல்ல, சிறிது நிமிடம் நிலவை வெறித்து பார்த்தவன் பின்னர் கீழே சென்று விட்டான்.
ஃபோன் கீழே விழுந்தது கூட தெரியாமல் அதிர்வில் இருந்த மகனின் தோளை தட்டிய மயிலா, தம்பி, தம்பி என்றார்.
தாயின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவன், அம்மா என்கும் போதே அவன் கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
எப்பாடி என்னாச்சியா?, சொல்லுப்பா என்க,அம்மா தாமரை தாமரை என்க, சொல்லுய்யா தாமரைக்கு என்னாச்சினு மயிலா கேட்க, அவளுக்கு கல்யாணம் ஆகிட்டாமா.
என்னா கல்யாணம் ஆகிட்டா என்றவர், தெளிவா சொல்லுய்யா என்க, கதிர் தாலி கட்டியது, அதை கழற்றி அவன் முகத்தில் தூக்கி எறிந்தது, பின்னர் லெட்டர் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்றது வரை சொல்லி முடித்தவன், ஏன் இந்த கடவுள் எங்களை இப்படி சோதிக்கிறார் மா?.
ஒருத்திய மனசார ஆசைப்பட்டேன், அவள் தான் வாழ்க்கைனு எத்தனை கனவு என்குள்ள இருந்துச்சி, அதை நீ நாசமாக்கிட்ட.
இப்போ அவ வாழ்க்கைய அங்க ஒருத்தன் நாசமாக்கிட்டான். ச்சை... என்ன வாழ்க்கை இது?.
உன் அவசர புத்தியால என் வாழ்க்கையில இப்போ என்ன நடந்துருக்கு பார்த்தியா? என்றவன், பெத்த மகன் ஆசையை விட,எவங்களோ ஒருவரோட உசுரு தான் உனக்கு பெருசா போகிட்டு இல்லை?.
அடுத்து எவனோ,இல்லை எவளாவது சாக கிடப்பாங்க, அவங்களுக்கும் மகள் இருந்தா முன்னாடியே போய் சொல்லி வச்சிடு, என் மகன் வாழ்க்கை கொடுப்பான்னு.
ஏன்னா உனக்கு தான் அடுத்தவங்க உசுரு நல்லா போகனும்னு பெரும் கவலையே என்றவன், ஏன்பா இதையெல்லாம் நான் தெரிஞ்சிக்க தான் என்னை வர வைத்தாயா?.
சொல்லுப்பா?, இப்போ உனக்கு சந்தோஷம் தானே?.
ஒருத்தி இத்தனை நாளா நடிச்சி ஏமாத்தியிருக்காள் அவளை கண்டு பிடிக்க துப்பு இல்லை, ஆனால் தியாகி பட்டம் வாங்க மட்டும் ரெடியா இருப்பீங்க இல்லையா?.
ஏன் டா இங்கு வந்தேனு இருக்கு ச்சை என்றவன், அப்பா இத்தனை நாளா என்னை வெளி நாட்டில் இருக்கும் முதலாளியோட இன்னொரு கார்மென்ட்ஸ்கு போறியானு கேட்டுக்கிட்டே இருந்தார்.அதுக்கான அவசியம் இதுவரை எனக்கு வரலை. இப்போ நான் போகனும்னு இருக்கேன்.
இப்போதைக்கு எனக்கு மன மாற்றம் வேண்டும். இந்த சூழலில் இருந்தால் நான் பைத்தியமாகுவேன், இல்லை வேற எதாவது முடிவெடுப்பேன். அதனால் நான் அங்கே போக முடிவு செய்துட்டேன்.என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை .
வேண்டும்னா அவளை டைவர்ஸ் பண்ணிட்டு, வேறு கல்யாணம் பண்ணிக்கொள்ள சொல்லுங்க.
எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதுமில்லாமல் அவள் முகத்தை பார்க்க கூட எனக்கு பிடிக்கலைப்பா என்றவன், வேக வேகமாக தயாராகி பெற்றோர்களிடம் சொல்லிக்கொண்டு, அவர்கள் பதிலை கூட எதிர் பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.
போகும் மகனை தடுத்து நிறுத்த வழி இல்லாமல்,மயிலாவும், மூக்கையனும் பேயறைந்தது போல அதிர்ந்து போய் நின்றனர்!
சதாரா...
வேலை முடிந்து மாறனோடு வீட்டிற்கு வந்த தாமரை, தனது ரூமிற்கு சென்று ஃப்ரஷ் ஆகி கீழே வந்து சாப்பிட்டு முடித்து தனது அறைக்குள் வந்தவள், பின்னர் வி. வி கொடுத்த வேலையை தொடங்க,மனம் சஞ்சலமாக இருக்க,அவளால் ஓவியத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.
அதற்கு காரணம் இன்று அவளோடு டிரைனிங்கில் இருந்தவர்களெல்லாரும் அவளிடம் நீங்கள் மிஸ், ஆர் மிசஸ் தாமரையா என்க,எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை.வெறும் சிரிப்போடு ஐ ஆம் தாமரை என்று நிறுத்திக்கொண்டாள்.
அவள் நேரமோ என்னவோ தெரியவில்லை.இன்று அவர்கள் டிசைனிங் செக்க்ஷனுக்கு,திருமண லெகங்ஹா டிசைன் பார்க்க இரண்டு ஜோடிகள் வந்திருந்தனர்.
எல்லாம் சேர்ந்துக்கொண்டு கதிரின் நினைவுகளோ, தாமரையை வண்டாய் குடைய ஆரம்பித்தது.அதிலிருந்து தப்பித்து ஓடி வந்தும்,அவன் செய்த செயல்கள் நினைவில் வருவதை தடுக்க முடியாமல் உள்ளுக்குள் போராடிக்கொண்டிருக்க, வெளியே இயல்பாக இருப்பதைப்போல காட்டிக்கொண்டாள்.
ஒரு வழியாக வீட்டிற்கும் வந்தாச்சி, இனி தனது வேலையில் கவனத்தை செலுத்த நினைக்க, அவன் நினைவே வருதேனு தலையை பிடித்து கண்ணை மூட, ஏரிக்கரையில் அவன் கையை பிடித்து நிறுத்திய நினைவு வரவும் தன்னை மறந்து முரட்டுப்பயலென்று திட்டினாள்.
இனி வரைய முடியாது என்பது தோன்ற, அதையெல்லாம் எடுத்து வைத்து விட்டு, நைட் லேம்பை மட்டும் ஆன் பண்ணி மெத்தையில் படுத்துக்கொண்டாள்.
நேரமும் கடந்து சென்றும் தாமரைக்கு தூக்கம் வருவது போல தெரியவில்லை.
சிறிது நேரம் புரண்டு படுத்தவள், சரி கொஞ்ச நேரம் வாக் பண்ணினால் நன்றாக இருக்குமென்று தோன்ற, கதவை திறந்தவள், அங்கிருந்து மாடிக்கு சென்று பார்க்க, இரவு நேரமும், தூரத்தில் தெரியும் மின் விளக்கின் ஒளியும், வானில் இருந்த வெண்மதியும் அவளை வரவேற்றது.
நிலவின் வெளிச்சம் நன்கு தெரிந்தது. அப்பொழுது மாடிப்படியில் யாரோ வரும் காலடி சத்தம் கேட்டு பயந்தவள்,குரலில் தைரியத்தை வர வைத்துக்கொண்டு யாரு? என்றாள்.
நான் தான் என்றவாறே, மாறன் வந்து கொண்டிருந்தான்.
தூங்காமல் இந்த நேரத்தில் என்ன பண்ணுறீங்கனு இருவரும் ஒரே நேரத்தில் கேள்வியை கேட்டனர்.
தூக்கம் வரலை, சரி கொஞ்சம் வாக் பண்ணலானு மாடிக்கு வந்தேனென்றாள்.
ஓஓ என்றவன், கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வேறு யாரும் வர வாய்ப்பு இல்லை, இருந்தாலும் ஒரு சந்தேகம், அதனால் தான் வந்தேனென்றான் மாறனும்.
ம்ம் என்றவள் தூரத்து நிலவை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பதை கண்டவன், எதுவும் நிரந்தரமில்லை என்றான்.
யார் சொன்னாலென அவனை திரும்பி பார்க்காமலே கேட்டாள்.
குட் கொஸ்டீன் என்றவன், பழமொழி சொன்னால் கேட்டுக்கனும், ஆராய்ச்சி பண்ணக்கூடாது.என்ன பிரச்சினை உனக்கென்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
மாறனின் கேள்வியில் திடுக்கிட்டவள், அப்படிலாம் ஒன்னும் இல்லையே.
ஆஹான் என்றவாறே அவளருகில் வந்தவன், எங்கே என்னை பார்த்து சொல்லு பார்க்கலாம் என்க, அருகில் கேட்ட மாறனின் குரலில் அதிர்ந்து திரும்ப,இரண்டடி இடைவெளியில் மாறன் நின்றிருந்தான்.
கமான் இப்போ சொல்லென்று அவளை தீர்கமாக பார்க்க, ஒரு முறை அவனை நிமிர்ந்து பார்த்தவள், தன்னைப்பற்றி சொல்லத்தொடங்கினாள்.
நான் தாமரை என்க, நெக்ஸ்ட் என்றான்.
பின்னர் ஏழு வயதில் தனது அத்தை வேதாவோடு நீலகிரிக்கு வந்ததையும், அங்குள்ள மலைவாழ் மக்களுக்கான சின்ன மருத்துவமனையில் வேதா நர்சாக இருப்பதாக சொன்னாள்.
பின்னர் அங்கு பவியும், மருதுவும் நண்பர்களானது, ஒரே பள்ளியில் மூவரும் படித்ததையும், மருது மூன்று வயது பெரியவனென்றாள்.
கல்லூரி வரை அங்கையே படித்து விட்டு கோவையில் இருக்கும் பிரபலமான டெக்ஸ்டைல்ஸில் ஆறு மாதம் வேலை பார்த்ததும், சிறு வயதில் இருந்து ஆசைப்பட்ட தனது லட்சியத்தை நோக்கி செல்ல வேண்டியதால், இரண்டு மாதம் தன்னை பெற்றவர்களோடு இருந்து விட்டு வர, வேதாவிடம் சொல்லிக்கொண்டு சீமக்கரைக்கு வந்ததும்,பொங்கல் பண்டிகையில் மஞ்சள் நீர் ஊற்றி விளையாடும் விழாவில் கதிர் தனக்கு தாலிக்கட்டியதையும் அவன் சொல்லிய காரணத்தையும், அவன் கட்டிய தாலியை கழற்றி எறிந்து விட்டதையும், இரு குடும்பத்திற்கும் உள்ள மனஸ்தாபத்தில், என் வாழ்க்கை கால் பந்தாகிவிட்டது என்று சொல்லி கண்கலங்கினாள்.
கேட்ட மாறனுக்கும் கதிரின் மேல் கோவம் வந்தது. பெரியவர்கள் பிரச்சினை என்றால் அவர்களிடம் மோத வேண்டும்.
அது என்ன பெண் பிள்ளை வாழ்க்கையில் விளையாடுவதென்று பல்லை கடித்தவன்,லீனாவை எப்படி தெரியுமென்று கேட்டான்.
அவன் கேள்வியில் உள்ளுக்குள் அதிர்ந்தவள்,என்ன சொல்வதென்று முழித்தவளோ பேஸ்புக் ப்ரண்ட் என்று அடித்து விட்டாள்.
ஓஓ என்றவன் அவள் பேஸ்புக்ல அக்கவுன்ட் வச்சிருக்காளானு கேட்கும் போதே மாறனின் முகம் கோவத்தில் சிவந்தது.
இல்லை இல்லை ... முன்னாடி இருந்தாங்க, இப்போ இல்லை என்கவும் அப்படியா?.
வீட்டில் என்னை எப்படி தெரியுமென்று விசாரித்தால் இப்படி எதாவது சொல்லென்று,லீனா தான் சொல்லிக்கொடுத்தது.
ஆமாம் என்றாள்...
சரி அடுத்து என்ன பிளான் என்றான்.
எதற்கென்று தாமரை கேட்க, அவளை ஒரு பார்வை பார்த்தவன், ம்ம் நம்ப கல்யாணத்துக்கென்றான்.
அவன் சொன்னதைக்கேட்டவள் என்னாஆஆ என்று கண்கள் விரிய அதிர, ஹேய் சும்மா சொன்னேன்.கல்யாணம் பண்ணுற ஐடியாலாம் இப்போதைக்கு எனக்கு கிடையாது என்றான்.
ம்ம்..கொஞ்ச நாள் போகட்டும்,பிறகு அடுத்தது என்னவென்று யோசிக்குறேனென்றாள்.
சரி.அதுவரை மேடம் என் கம்பெனியில் அடைக்கலமோ என்க,அது உங்க கம்பெனி தானென்று இன்டர்வியூவில் உங்களை பார்க்குற வரைக்கும் எனக்கு தெரியாதுங்களே சார்.
அதற்கு ஓஓ என்றவன்,எதுக்கு இந்த சாரை பிடித்து தொங்கிட்டு இருக்க?.
ஆபிஸ்ல தான் நான் உனக்கு சார்.ஆமாம் அந்த ஹீரோ பேரு என்ன?
எந்த ஹீரெவென்றாள்?.
ம்ம் உன் முன்னால் கணவனென்க, எதேஏஏஏ முன்னால் கணவனானு திகைத்தாள்!.
எஸ்... நீ தான் அவன் வேண்டாமென்று தாலியை கழட்டி தூக்கி எறிந்து விட்டாயே, அப்போ முன்னால் கணவன் தானேனு மாறன் சொல்ல,அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
இப்போ நீங்க மிஸ் தாமரையா?, இல்லை மிசஸா? என்றான்.
ஒரு நொடி கண்ணை மூடி திறந்தவள், இப்போதைக்கு நான் தாமரை மட்டுமென்று சொல்லி விட்டு, படியிலிறங்கி கீழே சென்று விட்டாள்.
கீழே சென்றவள் சொல்லிச்சென்ற விஷயத்தை பற்றி தான் மாறன் யோசித்துக்கொண்டிருந்தான்.
எந்த பெண்ணுக்கும் ஏற்க முடியாத சூழல் தான்.
விரும்பி கல்யாணம் பண்ணுவது வேறு, இல்லை, ஒரு தலையாக காதலித்து அதற்காகவும் கல்யாணம் பண்ணிக்கொள்ளும் சிலரும் உண்டு.
ஆனால் இங்கு தாமரை விஷயத்தில் குடும்பத்தை பழி வாங்க நினைத்து பண்ணிருக்கானே இவனெல்லாம் என்ன ஆம்பளை?.நேரடியாக மோத தைரியம் இல்லாதவன் பொண்ணு கிட்ட போய் வீரத்தை காட்டிருக்கான் கோழைப்பயலென்று திட்டிக்கொண்டிருந்தான்.
அப்பொழுது மாறனின் மனசாட்சியோ,ஆமாம் நீ எதுக்கு இப்படி ஓவரா துள்ளுறாய்?.இது அவளோட பிரச்சினை. அதுக்கு என்ன முடிவு எடுக்கனுமென்று அவளுக்கு நல்லா தெரியும், உனக்கு என்ன வந்துச்சி?.
அது என்ன இத்தனை நாளும் இல்லாமல் எங்கிருந்தோ வந்த ஒருத்திக்காக உருகுற?, என்ன தம்பி லவ்வா என்றது?.
அப்படிலாம் ஒரு மண்ணும் இல்லை.
இந்த காதல் கன்றாவியெல்லாம் எனக்கு செட்டாகாது என்றவன், ஒரு மனிதாபிமான அடிப்படையில் தான் அவ கிட்ட கேட்டேனென்றான்.
அப்படி இருந்தால் நல்லது தானென்று மனசாட்சி செல்ல, சிறிது நிமிடம் நிலவை வெறித்து பார்த்தவன் பின்னர் கீழே சென்று விட்டான்.