• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
ஏனாதி!

இரவெல்லாம் தூங்காமல், தந்தையின் நினைவிலேயே, அக்கா தங்கை இருவரும் அழுது கொண்டே இருந்தார்கள்.

சீதாவையும்,ராதாவையும், சொந்தக்காரர் பெண்மணிகள் எவ்வளவோ சமாதானப்படுத்தி பார்த்தனர்,ஆனால் எதற்கும் அசரவில்லை.

விடியலும் ஆரம்பமாகியது.ரொம்ப தூரத்தில் இருக்கும் உறவினர்களும், காளியின் இறுதி சடங்கிற்கு வந்து சேர்ந்தனர்.

யாருப்பா கொள்ளி வைக்கிறது? என்னும் பேச்சு வந்தது.

காளிக்கு இரண்டும் பெண் பிள்ளைகள் என்பதால், பங்காளி வீட்டில் உள்ள பையனை வைக்க சொல்லி,ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டது.

ஆனால் சீதாவோ, தந்தைக்கு தான் தான் கொள்ளி வைப்பேனென்று, உறுதியாக சொல்லி விட்டாள்.

சில பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, சீதாவே கொள்ளி வைப்பதாகவும், சில அடி தூரம் எடுத்துட்டு வந்து கொடுத்து விட்டு, பிறகு வீட்டுக்கு சென்று விடனுமென ஒரு மனதாக முடிவெடுத்தனர்.

இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சீதாவின் தூரத்து அத்தை குடும்பம், முதல் பொண்ணை தான் நமக்கு கொடுக்கல.ரெண்டாவது பொண்ணை தனது மகனுக்கு கட்டி,இருக்கும் சொத்தை கைப்பற்றிக் கொள்ளலாமென்று திட்டம் போட்டனர்.

முத்துவோ, இரண்டு நாள் லீவுக்காக சீமக்கரைக்கு வந்திருக்க,எங்கே யாரையும் காணுமென்று தோட்டத்துக்கு வர,அண்ணியின் தந்தை இறந்து விட்டதால் எல்லாரும் ஏனாதிக்கு போயிருப்பதாக பார்வதி சொன்னாள்.

பின்னர்,மறுநாள் ஊரிலிருக்கும் சிலரை கூப்பிட்டுக்கொண்டு ஏனாதிக்கு வந்து சேர்ந்தனர்.

பிரேதத்தை குளிப்பாட்டுவதற்கு, தண்ணீர் கொண்டு வர, ஊர் முக்கியஸ்தர்கள் ஏற்பாடு பண்ணினார்.

பங்காளி வீட்டில் சில பெண்களோடு, சீதா,ராதாவும் ஊர் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்துட்டு வந்தனர்.
பிறகு காளியின் உடலுக்கு,வழக்கமாக செய்யும் சடங்குகளை செய்ததும்
தயாராக இருந்த பாடையில் காளியின் உடலை தூக்கி வைத்து, சீதாவின் கையில் கொள்ளியை கொடுத்து, சுடுகாட்டை நோக்கி சென்றனர்.

சில அடி தூரம் சென்ற பின்பு,அழுது கொண்டே தந்தைக்கு கொள்ளி தூக்கி வந்த சீதாவிடமிருந்து, வேறொருவர் வாங்கிக்கொண்டு, திரும்பி பார்க்காமல் நீ வீட்டுக்கு போம்மா என்று அனுப்பி வைத்தனர்.

அப்பா இப்படி பாதியிலே நம்பல அனாதையா விட்டுட்டு போயிட்டாரேடினு தங்கையை கட்டிக்கொண்டு அழுதாள்

சில பெண்கள் கீழே கிடந்த பூக்களை எல்லாம் கூட்டி குப்பையில் கொட்டி விட்டு, வீட்டை கழுவி விட்டனர்.

அரை மணி நேரம் மேலானது சுடுகாட்டுக்கு சென்றவர்கள் திரும்பி வருவதற்கு.சில முக்கியமானவர்கள் மட்டும் அங்கிருந்தனர்.அப்பொழுது, காரியம் எப்போ வைத்துக்கொள்ளலாம் என்ற பேச்சு எழுந்தது.

பதினாறாம் நாள் வைத்துக்கொள்ளலாமென்று முடிவு செய்தனர்.காரியம் முடிந்ததும்,ராதாவை எங்கள் வீட்டிற்கு கூப்பிட்டு போறோம் என்றார் பெருமாள்.

அதற்கு சீதாவின் தூரத்து வழி அத்தையோ,அது எப்படிப்பா சரி வரும் ? ராதா வயசு பொண்ணு.உன் வீட்ல வயசு பையன வச்சிருக்க. நாளைக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிட்டால், என் அண்ணன் பெயருக்கு தான் கெட்ட பேரு.அதனால் 16 ஆம் நாள் காரியம் முடிந்த பிறகு, இரண்டாவது பொண்ணை என் பையனுக்கு கட்டி வையுங்க.வீட்டோட மாப்பிள்ளையா இருந்துக்கிறோம்.பெரியவளுக்கும் ஒத்தாசையாக இருக்குமென்றார்.

அவர் சொல்லியது சிலருக்கு சரியாக இருந்தது.சிலருக்கு சரியாக படவில்லை.

அதெல்லாம் சரிப்பட்டு வராதுமா. என் மச்சினிச்சிக்கு வெளியில பையனை பார்த்து கட்டி வைக்கிறோமென்று பெருமாள் சொல்ல, அது எப்படிப்பா?.

முறை பையன் என் பையன் இருக்கும் போது, நீ எப்படி வெளியில பார்க்கனும்னு சொல்லலாமென்க, பதிலுக்கு பெருமாளும் பேச, சுற்றி இருப்பவர்கள் இருவரையும் தடுத்து பார்த்தனர்.ஆனால்,வாக்குவாதம் முத்தி சண்டை வந்தது.

அப்பொழுது, இவ்வளவு பேசுறியே நீ, உன் தம்பிக்கு கட்டி வைப்பியானு அந்த அம்மா கேட்க, இப்பவே என் தம்பிக்கு என் மச்சினிச்சிய கட்டி வைக்கிறேனென்று, அத்தனை பேருக்கு முன்னாடி வாக்கு கொடுத்து விட்டார்.

அதைக் கேட்டு சீதாவும்,முத்துவும் அதிர்ந்தனர்.மற்றவர்களுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அண்ணா எதுக்கு இந்த அவசரமென்று முத்து கேட்க,நீ சும்மா இருடா, அந்த அம்மா எப்படிலாம் பேசுது?.இந்த அண்ணனோட மானம் மரியாதையெல்லாம் உன் கையில தானிருக்கு.ஏய் சீதா போய் உங்கம்மா தாலிய கொண்டு வா.

என்னங்க நடக்குது இங்கே?.

எங்க அப்பா செத்து ஒரு நாள் கூட ஆகலை, அதற்குள் என்ன பேச்சு இதெல்லாம்.

இங்க இவ்வளவு நடக்குதே நீங்க எல்லாம் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தமென்று மாமனார், மாமியாரிடம் கேட்க,பெரியவனே என்று பிரகாசம் சொல்ல,அப்பா இது உங்க மகனோட மான பிரச்சினை.நான் என்ன வக்கில்லாத பயலுக்கா பொண்ண கட்டி வைக்க சொல்லுறேன்?.

என் தம்பிக்கு தானே என்றவர்,வீட்டின் உள்ளே போய், சீதாவுடைய அம்மாவின் ஃபோட்டோவில் தொங்கி கொண்டிருந்த தாலியை எடுத்து வந்து தம்பியின் முன்பு நீட்டினார்.

அண்ணாஆஆ என்று முத்து அதிர,இது உன் கையால் தங்கச்சி கழுத்துல ஏறலை,அக்கா கழுத்துல தாலி இருக்காதென்று சொல்ல, அதைக்கேட்டு எல்லாரும் அதிர்ந்தனர்.

கணவனின் வார்த்தையை கேட்ட சீதாவோ,அதற்கு பின்னர் எதுவும் பேசாமல் அமைதியாக திண்ணையின் ஓரத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்.

கட்டுடா என்க,கண்ணீரோடு கையில் வாங்கிய முத்துவோ,அண்ணனின் உசுரு தான் பெருசென்று, அங்கே அழுது கொண்டிருந்த ராதாவின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டு விட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.

இப்படி அதிரடியாக பெருமாள் செயல்படுவார் என்பதை அத்தை குடும்பமும் எதிர் பார்க்கவில்லை.

அப்புறம் என்னம்மா, தம்பி சொன்ன போல செஞ்சுட்டு என்றார் கூட்டத்தில் ஒருவர்.

அதற்கு சீதாவின் அத்தையோ,எப்படியோ என் அண்ணன் மவளுக்கு நல்லது நடந்தால் சரியென்று, ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

மனைவியிடம் வந்த பெருமாள்,பத்திரமா இருங்க, ரெண்டு நாளைக்கு ஒரு முறை வந்து பாக்குறேனென்று சொல்லி விட்டு, தனது தாய் தந்தை, மற்றும் சொந்தத்தை கூட்டிக்கொண்டு சீமக்கரைக்கு கிளம்பிவிட்டார்.

நாட்களும் ஓடியது. ஏழாம் நாள் துக்கம் முடிந்தது.இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.விடிந்தால் கருமாதி என்பதால், வீட்டில் கொஞ்சம் பரபரப்பாக வேலை நடந்தது.

மறுநாள் பண்டாரத்தை வைத்து சடங்கை செய்து முடித்து, வந்திருந்தவர்களுக்கு கறி விருந்து வைத்தனர்.

ஏனாதியில் இருக்கும் காளியின் வீட்டையும், நிலத்தையும் அந்த ஊரில் இருக்கும் தெரிந்தவர் ஒருவருடைய பாதுகாப்பில் விட்ட பெருமாள், மனைவியையும், மச்சினிச்சியையும் அழைத்துக்கொண்டு சீமக்கரைக்கு வந்தார்.அம்மா, போய் ஆரத்தி எடுத்துட்டு, முத்துவை கூப்பிட்டுவா என்றார் பெருமாள்.

பெரியவனே, நல்லவன் கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் வேலை பாக்குற இடத்தில் இருந்து கடுதாசி வந்துருந்துச்சினு கிளம்பி போயாச்சே.

சரிமா நம்ப ஊட்டு புள்ளை,நீ உள்ள கூப்பிட்டு போ என்க, வாத்தா என்று சின்ன மருமகளை அழைத்துச்சென்றார்.ராதாவும் சீமக்கரைக்கு வந்து ஒரு மாதம் கடந்திருக்க, போஸ்ட்மேன் வந்து வாசலில் பெல் அடித்தார்.

சத்தம் கேட்டு யாரென்று வெளியே போய் பார்க்க, ராதாவிடம் லட்டர் வந்துருக்குமா என்றார் .

கிட்ட போய் வாங்கிய ராதா, யாரிடமிருந்து வந்துருக்கென்று அனுப்புனர் பெயரை பார்க்க, முத்துவிடமிருந்து தான் லட்டர் வந்திருந்தது .

மாமாவா என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவள், வீட்டினுள் வந்தவள் சீதா, முத்து மாமா தான் லட்டர் போட்டுருக்காருடி.

முத்துவா என யோசனையோடே தங்கையிடமிருந்து கடிதத்தை வாங்கி பிரித்து படிக்க, எதிர் பார்த்த விஷயம் தான்.எத்தனை நாளுக்கு ஓடி ஒளிவீங்க கொழுந்தனாரேனு, உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவர், இந்தாடி.உன் புருஷன் லட்டரை நீயே படி.

அக்காவிடமிருந்து வாங்கி படிக்க ஆரம்பித்தாள் ராதா..

அன்புள்ள அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, மற்றும் ராதாவிற்கு, முத்து எழுதுவது.

நான் இங்கு நலமாக இருக்கிறேன். நீங்களும் அங்கு நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

கம்பெனியிலிருந்து என்னை ஒரு வருடம் அக்ரிமெண்டில் வடநாட்டிற்கு அனுப்புகின்றனர்.

இது தவிர்க்க முடியாத பயணமென்பதால் நான் போய் தான் ஆக வேண்டும்.நேரில் வந்து சொல்ல முடியவில்லை.

இந்த கடிதம் உங்களிடம் கிடைக்கும் போது, நான் ட்ரெயினில் இருந்தாலும் இருப்பேன்.

அங்கு போய் சேர்ந்து விட்டு உங்களுக்கு கடிதம் போடுகின்றேன். எல்லாரும் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் கவனம்.

ராதா ஆசைப்பட்டால் மேற்கொண்டு படிக்க வைக்கவும்.

இப்படிக்கு முத்து..

என்று எழுதியிருந்தது...

குழந்தைகளோடு வயலுக்கு சென்றிருந்த ஜூலி, வள்ளி, மற்றும் பிரகாசமும் வீட்டிற்கு வந்தனர்.

அவர்களிடம் முத்து அனுப்பிய லட்டரை பற்றி ராதா சொல்ல, வள்ளிக்கு மட்டும் மகனை நினைத்து யோசனையானது.

இருந்தாலும் மகன் மேல் உள்ள நம்பிக்கையால், நடப்பது நடக்கட்டுமென்று இருந்து விட்டார்.

நாட்களும் வேகமாக ஓடியது.

அப்பொழுது லாரன்ஸிற்கு மிலிட்ரியில் வேலை கிடைத்திருப்பதாக தந்தி வந்தது.எல்லாரும் போய், லாரன்ஸை காஷ்மீருக்கு அனுப்பி வைத்தனர்.

முத்து சொன்ன போலவே நல்லபடியாக அஸாமிற்கு வந்து விட்டதாக லட்டர் போட்டார்.

ஒரு நாள் வேலையாக இருந்த ராதாவை கூப்பிட்ட பெருமாள்,மேற்கொண்டு படிக்கிறியாமா? என்று ராதாவிடம் கேட்க, வேண்டாம் மாமா என்று சொல்லி விட்டாள்.

நீ எது ஆசைப்பட்டாலும் மாமன் படிக்க வைக்கிறேன்.அப்பா இல்லைனா என்னம்மா?.அந்த ஸ்தானத்தில் அப்பனா நான் இருக்கிறேன். நீ படிம்மா என்க,அதற்கு ராதாவோ,நான் அக்காங்க, பசங்களோடே இருக்கேன் மாமா என்று உறுதியாக சொல்ல, சரி என்று விட்டு விட்டார்.

மாதம் தவறாமல், லட்டர் போடுவதை மட்டும் முத்து நிறுத்தவில்லை.

லாரன்ஸிற்கு நல்ல படியாக டிரைனிங்கும் முடிந்தது.காஷ்மீர் பார்டரிலே வேலை கிடைத்திருப்பதாக தந்தி அனுப்பியிருந்தார்.இதோ ஒன்னரை வருடங்கள் கண் மூடி கண் திறப்பதற்குள் ஓடி விட்டது.

விடிந்தால் உலகமெங்கும் தீபாவளி....

அதிகாலையில் ஊருக்குள் சிறு பிள்ளைகள் வெடி வெடிக்கும் சத்தம் பலரின் தூக்கத்தை கலைத்தது.

ராதா,வழக்கம் போல எழுந்து வாசலை கூட்ட போக, வாசல் படலை திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தார் முத்து.

ஒன்னறை வருடங்களுக்கு பிறகு கணவனை பார்த்த, ராதாவிற்கு அழுகையாக வந்தது.மனைவியை பார்த்தவர், ராதா என்க,மாமா என்று உள்ளே ஓடி விட, முத்துவோ சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான்.

அப்பொழுது தான் வள்ளியும் துங்கி எழ உள்ளே வந்த மகனை பார்த்து, எப்பாடி வந்துட்டியா என்று மகனை கட்டிக்கொண்டார்.

எப்படிமா இருக்க? என்க, நான் நல்லா இருக்கேன் ராசா.நீ எப்படிப்பா இருக்க?.

இருவரின் பேச்சுக்குரலை கேட்டு பெருமாளும் வெளியே வந்து பார்க்க, அங்கு நின்ற தம்பி கண்டு முத்து என்று அதிர்ந்தார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
அண்ணனின் குரலை கேட்டு அவரிடம் செல்ல, தம்பியை அணைத்துக் கொண்டு எப்படிடா இருக்க? என்கும் போதே, பெருமாளின் கண்ணில் இருந்து விழுந்த கண்ணீர்,முத்துவின் முதுகில் பட்டது.

பிறந்ததிலிருந்து பிரியாமல் இருந்து விட்டு, முதல் முறையாக ஒரு வருடம் தம்பியை பிரிந்து இருந்தது,அவருக்கு கஷ்டமாக இருந்தது.சரிடா போய் துணியை மாத்திட்டு வா. அதுக்குள்ள உன் அண்ணி டீ போட்டு வைப்பாள்.

சரிணா என்று பேகோடு தனது அறைக்கு வர, அங்கே ஜன்னல் ஓரமாய் ராதா நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

கதவை சாத்தியவர், ராதா என்ற கூப்பிட, கணவனின் குரலில் ராதா திரும்ப, இரண்டு கையையும் மனைவியை நோக்கி முத்து நீட்ட, வேகமாக வந்தவள், இரு கைகளுக்குள் அடைக்கலமானாள்.

மனைவி ராதாவோடு குடும்ப வாழ்க்கையை முத்துவும் தொடங்கினார்.ஒரு வருடம் கடந்து செல்ல, வளவன் பிறந்தான்.

மகன் பிறந்த பின்னர் முத்து தான் பார்த்த வேலையை விட்டு விட்டு, அண்ணனோடு விவசாயத்தில் இணைந்து கொண்டார். பிள்ளைகளையும் பள்ளியில் சேர்த்தனர்.ஜானோடு ஜூலியும் தேனூருக்கு சென்று விட்டார்.

கதிர், வேலு, ஜான் மூவரும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, அன்பழகனுக்கும் கவிதாவிற்கும் திருமணம் செய்து வைத்தனர்.
அந்த தம்பதியருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது, அவள் தான் தாமரை.குழந்தையை பார்க்க அனைவரும் கலா வீட்டிற்கு சென்றனர்.

பேத்தியை கையில் தூக்கி வைத்திருந்த வள்ளியோ, இவ தான் அப்பு உன் பொண்டாட்டி என்று கதிரிடம் காட்டினார்.அந்த வயதில் என்ன புரிந்ததோ அவனுக்கு வெட்கம் வந்து ஓடிவிட்டான்.பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், குழந்தையை பார்த்து செல்ல மற்றும் கதிர் மறக்கவில்லை.

மீண்டும் ராதா கர்பமாக, நிலவன் பிறந்தான்.அவன் பிறந்து இரண்டு வருடம் கழித்து, சீதாவிற்கு செல்வி பிறந்தாள்.அதேப்போல் மீண்டும் கர்ப்பமான கவிதாவோ, சிவாவையும், அல்லியையும் பெற்றெடுத்தார்.

குழந்தைகள் எல்லாரும் ஒற்றுமையாகவே வளர்ந்தனர்.

தாமரையையும் பள்ளியில் சேர்த்தனர்.

கதிர், வேலு, ஜான் மூவரும் ஏழாம் வகுப்பும், வளவன் நான்காம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தார்கள்.அப்பொழுது,ஊருக்குள் பஞ்சாயத்து தேர்தல் வந்தது.வழக்கமாக சிவசாமி குடும்பம் தான் பஞ்சாயத்து தலைவராக, மூன்று தலைமுறையாக இருந்து கொண்டிருக்கின்றனர்.இந்த முறை அன்பழகனை நிறுத்துவதற்கு, ஊர்மக்கள் ஒரு மனதாக முடிவு பண்ணினார்.

இந்த விஷயம் அவருக்கு விருப்பமில்லை. ஆனால் மக்கள் எல்லாம் ஒன்று கூடி பேசி, ஒரு வழியாக சம்மதிக்க வைத்தனர்.இதற்கு இடையில், எதிர்பாராத விதமாக பெருமாளும் அதே பதவிக்கு போட்டியிட்டது, எல்லாருக்கும் அதிர்ச்சி தான்.

இருவரும் நம்ப வீட்டு பிள்ளைகள், ஒருவர் ஜெயித்து மற்றொருவர் தோற்றால் மன வருத்தம் வரும்.அதனால் பெருமாளை போட்டியிலிருந்து வாபஸ் வாங்க சொல்ல, அவர் கேட்கவேயில்லை.

தேர்தலும் வந்தது. அதேப்போல் சொன்ன நாளில் ஓட்டு எண்ணப்பட்டது.
அன்பழகன் ஜெயித்ததாக மைக்கில் சொன்னார்கள்.

ஒரு பக்கம் வீட்டில் இருப்பவர்களுக்கு சந்தோஷம்,இன்னொரு பக்கம் பெருமாள் தோல்வி அடைந்ததை நினைத்து வருத்தப்பட்டனர்.

ஊர்காரர்கள் அன்பழகனுக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது அங்கு வந்த பெருமாள் அன்பழகனின் சட்டையை பிடித்தவர், பணத்துக்காகவும், பதவிக்காகவும் உன் பொண்டாட்டி, புள்ளைய எல்லாருக்கும் அனுப்பி வைப்படா என்று சொல்ல, அதைக்கேட்டு கோவம் வந்து பெருமாளை அடித்தார்.

அந்த நேரத்தில் தான் தேனூருக்கு மாலை வாங்கி வரப்போன முத்துவும், கதிரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர்கள் வரும் போது அன்பு,பெருமாளை அடித்துக்கொண்டிருந்தார்.

வண்டியை நிறுத்தி விட்டு ஓடி வந்த முத்து, இருவரையும் பிரித்து விட்டு, அங்கு ஓரத்தில் கிடந்த கட்டையை எடுத்து வந்தவர், அன்புவை அடிக்க போக,கவிதா குறுக்கே வந்து நின்றார் .
தங்கையை பார்த்ததும் கட்டையை கீழே போட்டு விட்டார்.

தன் குடும்பத்தாரும், பதினாறு ஊர் மக்கள் எல்லாரும் வேடிக்கை பார்ப்பதை பார்த்த கவிதா, இந்த நிமிஷத்திலிருந்து உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவு முடிஞ்சு போச்சு.இனி வாழு சாவு எதுவும் கிடையாது என்றவர், அன்புவை கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.

அன்றைக்கு பேசாமல் போன குடும்பம் தான், இதோ பதினைந்து வருஷம் ஆகிட்டு.எந்த பேச்சு வார்த்தையும் இல்லை என்று, கடந்த கால கதையை சொல்லி முடித்தார் வள்ளி அப்பாயி.

பின்னர் பேரனிடம் சென்றவர், உன் அம்மாவையும், தங்கச்சியையும் யாராவது தப்பா பேசுனா நீ விட்டுறுவியா?, சொல்லுடா நீ விட்டுறுவியா?.

அத்தனை பேருக்கு முன்னால் என் பொண்ணை, உன் அப்பன் எவ்வளவு தரகுறைவா பேசினான் தெரியுமா?.
அந்த நேரத்தில் பெத்தவளுக்கு எப்படி இருந்துச்சுனு உனக்கு தெரியுமா என்று சொல்லி கதறி அழுதார் வள்ளி அப்பாயி.

அப்பாயின் மூலயமாய் அனைத்தையும் தெரிந்து கொண்ட கதிருக்கு, தப்பு பண்ணிட்டோமே என்று மனசாட்சி உறுத்தியது.

இதுவரை அமைதியாக அனைத்தையும் தோட்டத்து வாசலில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சீதாவோ,எழுந்து உள்ளே வந்தவர், என்ன கொழுந்தனாரே உங்க கதைய நீங்களே சொல்லுறீங்களா?,இல்லை நானே சொல்லட்டுமா?.

அப்பா, நீ என்னத்த மறைச்சு வச்சிருக்க?ஒரேடியா சொல்லி தொலைங்க, கேட்டுக்குறோமென்று வளவனும் கத்தினான்.

மகனின் கேள்விக்கு நிமிர்ந்த முத்து,எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு சொல்லத் தொடங்கினார்.வேதா மதுரையில் இருந்து விடுமுறைக்கு வரும் போது,நானும் அதே பஸ்ஸில் வர, நாளடைவில் எங்கள் இருவருக்கும் இடையில் காதல் துளிர்விட்டது.

மூன்று மாதம் சென்னையில் இருக்கும் வேறு கம்பெனிக்கு, டிரைனிங் அனுப்ப கம்பெனியில் இருந்து என்னை தான் தேர்ந்தெடுத்தனர்.

வழக்கம் போல் வார விடுமுறையில் வேதாவை சந்திக்க போகும் போது, கம்பெனியில் தேர்வான விஷயத்தை நான் சொன்னேன்.

அதைக் கேட்டு வேதா சந்தோஷப்பட்டாலும், இன்னொரு பக்கம் வருத்தப்பட்டாள்.

மூன்று மாதம் எப்படி மாமா உன்னை பார்க்காமல் என்னால இருக்க முடியுமென்று, என் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.எனக்கும் அவளை பார்க்காமல் இருப்பது கஷ்டமாக தான் இருந்தது.எவ்வளவோ சமாதானப்படுத்தி பார்த்தேன்.ஆனால் வேதாவோ சமாதானமாகுவது போல் தெரியவில்லை.

சரி நாளைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வா என்று சொல்லி அவளை ஹாஸ்டலில் விட்டு விட்டு, எனது மேன்ஷனிற்கு வந்துட்டேன்.

ரூமிற்கு வந்த எனக்கு பல யோசனை வந்தது.அதுவும் இல்லாம வேதா அழுதது தான் கண்ணு முன்னாடி வந்து நின்னுது.சரினு ஒரு முடிவை எடுத்துட்டு படுத்துட்டேன்.

காலையில் கடைக்கு போய் தேவையானதை வாங்கி கிட்டு, நான் கோயிலுக்கு போக, வாசலிலே எனக்காக வேதா காத்து கிட்டு இருந்தாள்.அவளையும் கூப்பிட்டுக்கிட்டு கோவில் உள்ள போயிட்டேன்.

கொஞ்ச நேரத்துல என் கூட வேலை பாக்குற நண்பர்கள் சிலர் அங்கு வந்தாங்கள்.

உனக்கு எனக்கும் இப்பொழுது கல்யாணம் நடக்க போகுதுனு வேதாகிட்ட அப்போ தான் சொன்னேன். அதைக்கேட்டவள், என்னா என்று அதிர்ச்சியாகிட்டாள்.

எதுக்கு மாமா இவ்வளவு அவசரம்னு கேட்கும் போது,எனக்கு தோணுது அப்படின்னு சொன்னேன்.

என்றைக்கு இருந்தாலும் உனக்கு தான் மாமா நான்னு சொல்லி வேதாவும் சம்மதம் சொல்ல, நண்பர்கள் முன்னிலையில் கோயிலில் தாலி கட்டி என் மனைவியா ஏத்துக்கிட்டேன்.

பிறகு நான் சென்னைக்கு டிரைனிங் போய்ட்டேன்.இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வேதாவை வந்து பார்த்துட்டு போவேன்.இப்படியே மூணு மாசம் முடிஞ்சிட்டு.

வீட்டில் இருப்பவர்களை பார்த்து மூணு மாதம் ஆகிட்டேனு,சென்னையிலிருந்து நான் நம்ப ஊருக்கு வந்த அன்றைக்கு தான் அண்ணியோட அப்பா இறந்துட்டாங்க.மறுநாள் அண்ணன் தாலி கட்ட சொல்லும் போது எனக்கு விருப்பமே இல்லை.வேதாவை பற்றி நான் சொல்ல வரும் போது தான், அண்ணி கழுத்துல தாலி இறங்கனுமானு அண்ணன் கேட்டுச்சி.

அந்த நேரத்துல அண்ணன் உசுரு தான் எனக்கு பெருசா இருந்துச்சி. வேதா கிட்ட மனசுக்குள் மன்னிப்பு கேட்டுட்டு, ராதா கழுத்தில் தாலி கட்டிட்டுனேன்.

அன்றைக்கே நான் மதுரைக்கு வந்து வேதாகிட்ட எல்லாம் சொன்னேன். ஒரே ஒரு பார்வை தான் என்னை பார்த்தவள்
இனிமே என் முகத்தில் முழிக்காதீங்கனு சொல்லிட்டு போய்ட்டாள்.

கம்பெனில பீகாருக்கு மாற்றல் வாங்கிட்டு நானும் போயிட்டேன்.

எப்படியும் கொஞ்சம் காலம் போனால் வேதா, வீட்ல பாக்குற பையனை கல்யாணம் பண்ணிப்பானு,நானும் என் வாழ்க்கையை ஆரம்பிச்சேன்.

ஆனால் அவள் எந்த ஊருக்கோ வேலையை வாங்கிட்டு போய்விட்டாள்.அவள் கூட வேலை பார்த்தவங்க எல்லார்கிட்டயும் கேட்டேன் யாருக்கும் எதுவும் தெரியலை.

அப்படியே வருஷமும் போய்ட்டு.

ஓட்டு எண்ணுற அன்றைக்கு நடந்ததை வைத்து அன்பு மேல எனக்கு கோவம் வந்துச்சி.அப்போ தான் ஐந்து வருஷம் கழித்து வேதாவும் ஊருக்குள் வந்தாள்.

ஒரு நாள் நம்ப குல தெய்வ
கோயில்ல சாமி கும்பிடும் போது, கழுத்துல மறைச்சிருந்த தாலிய எடுத்து அவள் பொட்டு வைக்கும் போது தான் எனக்கு தெரிஞ்சிது.நான் கட்டுன தாலி இன்னும் அவள் கழுத்துல இருக்குனு.

அதைப் பார்த்ததும் எனக்கு புத்தி கொஞ்சம் வேற மாதிரி யோசிக்க ஆரம்பிச்சிருச்சு.

வேதாவோ அப்போ தேனூருக்கு வேலைக்கு போயிட்டு இருந்தாள். அவளை வழி மறைத்து ,
தாலியை கழட்டி குடுன்னு, நான் தொந்தரவு பண்ணுனேன்.

அவ முடியாதுன்னு சொல்லிட்டே இருந்தாள். நான் கட்டுன தாலி,உன் கழுத்துல இருக்கும்போது அப்ப நீ என் பொண்டாட்டி தானே? .

என் கூட வந்து வாழுடினு தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தேன். ஆனால் அவள் எதுக்கும் ஒத்துக்கலை.

அப்போ தாலி கழட்டி தூக்கி எரிஞ்சிட்டு, வேற எவனையாவது கட்டிக்கடினு டார்சர் பண்ணுனேன்.அவள் அண்ணனை பார்க்கும் போதெல்லாம் வரும் கோவத்தை, வேதா கிட்ட தான் காட்டுனேன்.

அன்று,நாளைக்கு காலையில் கோயில் கிட்ட இருப்பேன்.உன் கழுத்துல கட்டின தாலியை நீயே கழட்டி கொடுக்கணும்.
இல்லன்னா பொண்டாட்டியா என் கூட வந்து வாழனும்னு சொன்னேன்.

மறுநாள் அவளுக்காக கோவிலில் காத்திருந்தேன் அவ வரலை.கோவமா அவ வீட்டு பக்கம் போகும் போது தெரிஞ்சிது ஊரை விட்டே போயிட்டாளென்று.

என் தொல்லை தாங்க முடியாம தான் வேதா இங்கிருந்து போனாளென்று, முத்துவும் மனதில் உள்ளதை எல்லாம் சொல்லி முடித்து கண் கலங்க,இதையும் கேட்டு அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.யாருக்கும் எதுவும் சொல்ல முடியவில்லை.

ஏன்பா இப்படி பண்ணுன?. ஒரு பொண்ணோட வாழ்க்கையை இப்படி கெடுத்துட்டியே நல்லவனே என்று வள்ளி கேட்க,புத்தி கெட்டு போய் பண்ணிட்டேன்மானு தாயின் கையை பிடித்துக் கொண்டு கதறி அழுதார்..

அப்பொழுது,ஏம்பா பெரியவனே, இத்தனை வருஷமா உன் கிட்ட கேட்காத கேள்வி, எனக்கொன்னு இருக்கென்றார் பிரகாசம் தாத்தா.

கேளுப்பா, உனக்கு என்ன தெரியனும்?.

ம்..இவ்வளவு வருஷம் இல்லாமல்,இப்போ மட்டும் பிரசிடென்ட் ஆகனுமென்ற திடீர்னு ஆசை எப்படி வந்துச்சி?.

கண்மணி வருவாள்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top