Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
தாமரையின் நினைவுகள்!
"இப்படி ஒன்று நடக்கும் என்று, யாரும் நினைத்து பார்க்கவில்லை".
இவ்வளவு நேரம் சுவற்றில் சாய்ந்தமர்ந்தவளோ, கதவை திறந்து வெளியே வந்தாள்."மகளை பார்த்த கவிதா, எம்மாடி என்று எழுந்து அவளிடம் வர, கையை நீட்டி தடுத்தவள், அன்பழகனிடம் சென்றாள்".
மகளை பார்த்தவர், என்னத்தா?.
"உனக்கு என்ன தெரியனும்?.
கவனமாக அப்பா என்று அழைப்பதை தவிர்த்து என்ன நடந்துச்சினு சொல்லுங்க?.
உங்களுக்கும், அவங்க குடும்பத்திற்கும் என்ன பிரச்சினை?.
அன்பழகனும் விஷயத்தை சொல்ல தொடங்கினார்.இரண்டு குடும்பத்தின் சொந்தம் எப்படி என்று உனக்கு தெரியும் தான்.அதை மீண்டும் விளக்க வேண்டாம் தானே? என்று மகளிடம் கேட்க, வேண்டாம் என்றாள்.
ம்ம் சரி மா.நன்றாக போய்க்கொண்டிருந்த உறவில் விரிசல் விழ காரணம், பஞ்சாயத்து ஃபோர்டு எலெக்க்ஷன் தான்.எனக்கு விருப்பமில்லை நிற்பதற்கு.
ஆனால் ஊர் மக்களோ, வழி வழியாக நம்ப குடும்பம் அவர்களுக்கு நன்மை செய்வதை கண்டு, என்னோட அப்பாவிற்கு பிறகு,அந்த பதவிக்கு பிடிவாதமாக என்னையும் நிற்க வைத்தனர்.
"ஆனால்,இதற்கு நடுவில் பெருமாளும் அதே போஸ்டிங்கிற்கு போட்டி போட்டார்".எனக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது.
என்னடா, நம்ப மச்சான் ஒரு வார்த்தையும் நம்ம கிட்ட சொல்லாமலே, வேட்பாளரா போட்டியிடுறாரேனு.
நானும் போய் கேட்க, ஏன் உங்களுக்கு மட்டும் தான் இது பொதுச்சொத்தா என்றதும், நான் கிண்டல்னு நினைச்சிட்டேன்.பதவிக்கு யார் வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யனும், என்று தான் என் விருப்பம்.
எனக்கு தெரிஞ்ச எல்லார்கிட்டயும், நான் பெருமாளுக்கு தான் ஓட்டு போடச்சொன்னேன்.
இந்த நேரத்தில் பேச்சு வார்த்தையிலும் சிறிது இடைவெளி விழுந்தது.
"சொன்ன நாளில் தேர்தலும் வந்தது".
அதைப்போல அறிவித்த நாளில், எலெக்க்ஷன் ரிசல்டும் வந்துச்சி.
என்னால் நம்ப முடியவில்லை.
"ஏனென்றால்,நான் தான் ஜெயிச்சேன்".
எனக்கு பயங்கர அதிர்ச்சியாக தான் இருந்தது அதைக்கேட்டு.
"அப்பொழுது, திடீர்னு என் கிட்ட வந்த பெருமாளுக்கு என்னாச்சினு தெரியலை,சண்டை போட்டான்".
வார்த்தைகள் தடித்து அடி தடி அளவிற்கு போய்விட்டது.
அன்றோடு அவங்க கூட இருந்த உறவும் கட் ஆகிட்டு என்று சொல்லி முடிக்க, அனைத்தையும் கேட்டவள்,மீண்டும் அறைக்குள் சென்று கதவை லாக் பண்ணினாள்.
பின்னர் ரெஸ்ட் ரூமிற்கு சென்றவளோ, ஃப்ரஷ் ஆகி வெளியே வந்தவள், தனது லேப்டாப்பை ஆன் பண்ணி, வி. வி க்கு மெயில் பண்ண, உடனே ரிப்ளை வந்தது.
தனது சூழ்நிலையை தெளிவாக மெயில் அனுப்ப, அதை படித்து பார்த்தவர், ஆறுதல் சொல்லி மேலும் அவளுக்கு நடந்ததை நினைவு படுத்த விரும்பவில்லை.
உனக்கு என்ன செய்யனும் ஏஞ்சல்? என்று பதில் மெயில் வந்தது.
என் கனவு நிறைவேறனும்.
இப்பொழுது என் எண்ணமெல்லாம், அதில் தான் இருக்கின்றது.கண்டவன் செய்த முட்டாள்தனமான செயலை நினைத்து, நான் ஏன் உடைந்து போகனும்?.இப்பொழுது நான் சிங்கப்பூர் வந்தாலும் வீட்ல உள்ளவங்களுக்கு தெரிஞ்சிடும்.அதனால்,யாருக்கும் தெரியாத இடத்திற்கு நான் போகனும்.
இங்கு இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும், எனக்கு மூச்சு முட்டுற போல இருக்கின்றது.
என் லட்சியம் என்னவென்று, நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை வி. வி.அதை நானே அழிக்க நினைச்சேனென்றால், உயிரோட இருந்தும் பிணம் போல தான் நான் ஆகிடுவேன்.நீங்க கொடுத்த ப்ராஜெக்ட் வேலையை நல்ல படியாக நான் முடிக்கனும்.என் கனவு நிறைவேறனும் என்று மெயில் அனுப்பியிருந்தாள்.
அவள் மெயிலை படித்தவர், பதில் அனுப்பினார்,வெரிகுட்.
இந்த செயலை தான் உன்னிடம் நான் எதிர் பாக்குறேன்.
பெண்கள் குணமே பொதுவாக எதாவது நடந்து விட்டால்,உடைந்து போய் விடுவதையே வழக்கமாக வைத்துக்கொள்கின்றனர்.மீண்டும் ஒருமுறை, நன்கு யோசித்து முடிவு செய் ஏஞ்சல்.இந்திய பெண்கள் தாலி சென்டிமென்டில் ஊறிப்போனவர்கள்.
ஊரறிய நடந்தாலும், இல்லை ஒருவருக்கும் தெரியாமல் நடந்தாலும் அதற்கு பெயர் திருமணம் தான்.நீ அதில் விதி விலக்கென்று உணர்த்திவிட்டாய் மை டியர்.இன்னும் 6 மணி நேரத்தில் உனக்காக, உன் வீட்டு தெரு முனையில் ஒரு கார் நிற்கும்.என் மேல் நம்பிக்கை இருந்தால், உனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு அதில் ஏறு.மற்றது எல்லாம் அவர்களே பார்த்துக்கொள்ளுவாங்கள் என்றார் வி. வி.
நம்பிக்கை இல்லாமலா இத்தனை வருஷமாக பேசிக்கிட்டு இருக்கேன்? என்று,கோவமாக இமோஜிகளை போட்டு அனுப்ப, கூல் மைடியர்.
புதிய பயணத்தை தொடங்க வாழ்த்துக்கள் என்று சொல்லி, ஆஃப் லைனிற்கு சென்று விட்டார் வினிதா வில்லியம்ஸ் அலைஸ் வி. வி.
லேப்டாப்பை ஆஃப் பண்ணியவள், தேவையானவைகளை, பேக்கிங் பண்ண ஆரம்பித்தவளுக்கு,கண்ணீர் வழிந்து ஓடியது.
இத்தனை வருடம் தன்னை வளர்த்த, அத்தையம்மாவிடம் கூட சொல்ல முடியாமல், ஓடி ஒளிய வைத்து விட்டானே என்று, கதிர் மேல் கோவம் அதிகமானது.நேரடியாக மோத துப்பு இல்லாமல், இப்படி ஓர் வழிய தேர்ந்தெடுத்திருக்கான் என்றால், பல நாளாக இவன் யோசித்திருக்கனும்.
இவ்வளவு நடந்துருக்கு, ஆனால் நம்மிடம் எதுவும் சொல்லவில்லையே என்று, பெற்றோர்களின் மீதும் கோவம் அதிகமானது தாமரைக்கு.
நேரமும் கடந்து சென்றது.
பின்னர் லட்டர் எழுதி வைத்தவள், தன்னிடமிருந்த பணத்தில் இருந்து, ஏழாயிரத்தை தனியாக எடுத்து, டிராவினுல் வைத்தாள்.
"கலா அப்பாயி கொடுத்த நகைகளையும் சூட்கேஸில் இருந்து எடுத்து, பணத்தோடே வைத்தாள்".
தனது ஃபோனில் இருந்து மணி எத்தனை என்று பார்க்க, நள்ளிரவு இரண்டு என்று காட்டியது.
இன்னும் இரண்டு மணி நேரம் தான் இந்த வீட்டிற்கும், நமக்கும் உள்ள சம்பந்தம் என்று நினைத்தவள்,கண்ணை மூடி தரையில் படுத்தவளுக்கு, வேதாவோடு இருந்த நாட்களெல்லாம் நினைவிற்குள் வந்தது.
அப்பொழுது மருதுவும், பவியோடு இருந்த தருணங்கள் கண் முன் வந்து செல்ல, தரையில் படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்து கொண்டாள்.
மூன்று வருடமாக தனக்காக காத்திருக்கும் மருதுவை நினைத்து பார்த்தவளுக்கு, வேதனையாக இருந்தது.நிச்சயமாக அவனால் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, என்பது தாமரைக்கு புரிந்தது.மானசீகமாக வேதாவிடமும், மருதுவிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்.
வேதாவிடமே திரும்ப செல்லலாம்.
ஆனால் இந்த நிகழ்வுகளை மீண்டும் நினைக்க அவள் விரும்பவில்லை.
வேதாவின் மேலும் ஒரு பக்கம் வருத்தம் இருந்தது.அவரும் உண்மையை மறைத்து விட்டாரே என்று.
நான் சீமக்கரைக்கு போய் வருகிறேன் என்று சொல்லியபோது, அத்தையம்மா என்னிடம் இதைப்பற்றி சொல்லியிருக்கலாம்.அப்பவே தெரிந்திருந்தால் நிச்சயமாக நான் இங்கு வந்திருக்க மாட்டேன்.
இப்படி ஒரு அவலம் எனக்கு நடந்திருக்காதே என்று மனதிற்குள் பேசினாலும், கண்கள் மட்டும் நீரை சிந்த மறக்கவில்லை.தனது செல்ஃபோனில் இருந்து மீண்டும் மணியை பார்க்க, நான்கு ஆக இன்னும் அரைமணி நேரம் இருப்பதாக காட்டியது.
ரெஸ்ட் ரூமிற்குள் சென்று குளித்து வெளியே வந்தவள்,முன்பே எடுத்து வைத்த டிரஸ்ஸை போட்டுக்கொண்டாள்.
பின்னர் தனது நீண்ட முடியை பின்னி முடித்தவள், நெற்றியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டை மட்டும் வைத்துக்கொண்டு, தேவையானது எல்லாம் இருக்கின்றதானு மீண்டும் ஒரு முறை செக் பண்ணி டிராலியை லாக் பண்ணியவள் சத்தம் வராமல் கதவை பொறுமையாக திறந்து பார்க்க, முற்றத்தில் அங்கங்கே வீட்டினர் தூங்குவது தெரிந்தது.
ஒரு கையில் செல்ஃபோனும், இன்னொரு கையில் டிராலி ஃபேகை எடுத்து வெளியே வந்தவள், கதவை மீண்டும் பொறுமையாக சாத்தி விட்டு, கவனமாக நடந்தவள், வீட்டின் இன்னொரு சாவியை எடுத்து,முன் கதவை திறந்து மெல்ல வெளியே வந்தவளை, சுற்றி இருக்கும் இருட்டு தான் வரவேற்தது.
கையில் இருந்த சாவியால் லாக் பண்ணி விட்டு,முன்னெச்சரிக்கையாக திறந்து வைத்த ஜன்னல் வழியாக,சாவியை உள்ளே போட்டு விட்டு ஜன்னலை மூடினாள்.
தனது இஷ்ட தெய்வமான மலையம்மனிடம் கண்ணை மூடி வேண்டியவள், டிராலிஃபேகேடு தெருவில் நடந்து செல்ல,சொன்ன போலவே அவளுக்காக அங்கே கார் நின்று கொண்டிருந்தது.
வேக எட்டுக்களோடு நடந்தவள் காரின் அருகில் நடந்து செல்லும் போது,முன் பக்க கதவை திறந்து ஒரு இளம் பெண் இறங்கினாள்.கிட்ட வந்த தாமரையிடம் ஃபோனை நீட்ட, யோசனையோடே வாங்கி,தனது காதில் வைக்க லீனா தான் பேசினாள்.
தாமரை அவங்களோடு பயப்படாமல் போ என்று சொல்லி லீனா ஃபோனை வைத்ததும், பின் பக்க கதவை திறந்து தாமரையும், அந்த இளம்பெண்ணும் ஏறியதும், கார் அங்கிருந்து கிளம்பியது.
பிளாஷ் பேக்!
மாணவர்களை அழைத்துச்சென்ற ஆசிரியர்கள் இருவரும் அவரிடம் மதுரைக்கு சென்றதில் இருந்து திரும்ப வந்தது வரை ஒன்று விடாமல் சொல்லினர்.
சரி வாங்க.
அவங்க வீட்ல இருந்து வந்தவங்கள் கிட்ட உண்மைய சொல்லலாம் என்றவர், சிந்து வீட்ல இருந்து யாரு வந்திருக்கா? என்று பார்க்க, பெருமாள் வாசலில் நின்றிருப்பது தெரிந்தது.
தலமையாசிரியரோ அட்டென்டரை விட்டு, பெருமாளை அழைத்து வரச்சொன்னார்.வழக்கம் போல் தங்கையை பாராட்ட தான் கூப்பிடுகிறார்கள்னு,மகிழ்ச்சியாக வந்தவரிடம் விஷயத்தை சொல்ல, அதைக்கேட்டவரோ அதிர்ந்தவர்,"என்ன சார் சொல்றீங்க?.உங்களை நம்பி தானே அனுப்பி வச்சோம்".
இப்போ இப்படி சொன்னால் என்ன அர்த்தம்?? என்று சண்டை போட்டவரை,தலைமையாசிரியரும், மற்றவர்களும் சமாதானப்படுத்த வழி தெரியாமல் நின்றார்கள்.
பெருமாள், எங்களுக்கும் இது பேரதிர்ச்சி தான்.உங்கள் நிலமையில் தான் நாங்களும் இருக்கின்றோம். எல்லாரும் இருக்கும் போது, சிந்து மட்டும் எங்கே போனாளென்று தெரியவில்லை.
மதுரையில் உள்ள போலிஸ் ஸ்டேஷனிலும், அந்த ஸ்கூல் தலைமையாசிரியரை விட்டு கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லியிருக்கோம்.
உங்களுக்கு நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால், நீங்களும் வாங்க நேரிலே போய் பார்க்கலாம் என்றார்,அந்த பள்ளியின் தலைமையாசிரியர்.
சார்.... உங்க மேல நம்பிக்கை இல்லாமல் இல்லை.இப்போ என் தங்கச்சிக்கு என்ன ஆச்சி என்றே தெரியாமல், இதை வீட்டில் எப்படி நான் சொல்வேன்?.ஊருக்குள்ளே இருக்கவங்களுக்கு என் தங்கச்சிய காணும் என்று தெரிந்தால், யாரும் நல்ல விதமாக யோசிக்க மாட்டாங்க சார்.தப்பு தப்பா தான் பேசுவாங்க.
மக்களோட மனநிலை எப்படி யோசிக்கும் என்று, நான் சொல்லி தான் தெரிய வேண்டாம்.சின்ன பொண்ணு சார், என்ன ஆச்சோ?, ஏதாச்சோனு தெரியலையே? என்று கண் கலங்கினார் பெருமாள்.
உங்களை என்னால் கண்டிப்பாக புரிந்து கொள்ள முடிகிறது.சீக்கிரமாக சிந்துவை தேடி கண்டுபிடிக்க எல்லா வழியிலும் முயற்சி பண்ணலாம்.
நீங்க தைரியமாக போயிட்டு வாங்க என்று, ஒரு வழியாக பெருமாளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள்.
"இப்படி ஒன்று நடக்கும் என்று, யாரும் நினைத்து பார்க்கவில்லை".
இவ்வளவு நேரம் சுவற்றில் சாய்ந்தமர்ந்தவளோ, கதவை திறந்து வெளியே வந்தாள்."மகளை பார்த்த கவிதா, எம்மாடி என்று எழுந்து அவளிடம் வர, கையை நீட்டி தடுத்தவள், அன்பழகனிடம் சென்றாள்".
மகளை பார்த்தவர், என்னத்தா?.
"உனக்கு என்ன தெரியனும்?.
கவனமாக அப்பா என்று அழைப்பதை தவிர்த்து என்ன நடந்துச்சினு சொல்லுங்க?.
உங்களுக்கும், அவங்க குடும்பத்திற்கும் என்ன பிரச்சினை?.
அன்பழகனும் விஷயத்தை சொல்ல தொடங்கினார்.இரண்டு குடும்பத்தின் சொந்தம் எப்படி என்று உனக்கு தெரியும் தான்.அதை மீண்டும் விளக்க வேண்டாம் தானே? என்று மகளிடம் கேட்க, வேண்டாம் என்றாள்.
ம்ம் சரி மா.நன்றாக போய்க்கொண்டிருந்த உறவில் விரிசல் விழ காரணம், பஞ்சாயத்து ஃபோர்டு எலெக்க்ஷன் தான்.எனக்கு விருப்பமில்லை நிற்பதற்கு.
ஆனால் ஊர் மக்களோ, வழி வழியாக நம்ப குடும்பம் அவர்களுக்கு நன்மை செய்வதை கண்டு, என்னோட அப்பாவிற்கு பிறகு,அந்த பதவிக்கு பிடிவாதமாக என்னையும் நிற்க வைத்தனர்.
"ஆனால்,இதற்கு நடுவில் பெருமாளும் அதே போஸ்டிங்கிற்கு போட்டி போட்டார்".எனக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது.
என்னடா, நம்ப மச்சான் ஒரு வார்த்தையும் நம்ம கிட்ட சொல்லாமலே, வேட்பாளரா போட்டியிடுறாரேனு.
நானும் போய் கேட்க, ஏன் உங்களுக்கு மட்டும் தான் இது பொதுச்சொத்தா என்றதும், நான் கிண்டல்னு நினைச்சிட்டேன்.பதவிக்கு யார் வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்யனும், என்று தான் என் விருப்பம்.
எனக்கு தெரிஞ்ச எல்லார்கிட்டயும், நான் பெருமாளுக்கு தான் ஓட்டு போடச்சொன்னேன்.
இந்த நேரத்தில் பேச்சு வார்த்தையிலும் சிறிது இடைவெளி விழுந்தது.
"சொன்ன நாளில் தேர்தலும் வந்தது".
அதைப்போல அறிவித்த நாளில், எலெக்க்ஷன் ரிசல்டும் வந்துச்சி.
என்னால் நம்ப முடியவில்லை.
"ஏனென்றால்,நான் தான் ஜெயிச்சேன்".
எனக்கு பயங்கர அதிர்ச்சியாக தான் இருந்தது அதைக்கேட்டு.
"அப்பொழுது, திடீர்னு என் கிட்ட வந்த பெருமாளுக்கு என்னாச்சினு தெரியலை,சண்டை போட்டான்".
வார்த்தைகள் தடித்து அடி தடி அளவிற்கு போய்விட்டது.
அன்றோடு அவங்க கூட இருந்த உறவும் கட் ஆகிட்டு என்று சொல்லி முடிக்க, அனைத்தையும் கேட்டவள்,மீண்டும் அறைக்குள் சென்று கதவை லாக் பண்ணினாள்.
பின்னர் ரெஸ்ட் ரூமிற்கு சென்றவளோ, ஃப்ரஷ் ஆகி வெளியே வந்தவள், தனது லேப்டாப்பை ஆன் பண்ணி, வி. வி க்கு மெயில் பண்ண, உடனே ரிப்ளை வந்தது.
தனது சூழ்நிலையை தெளிவாக மெயில் அனுப்ப, அதை படித்து பார்த்தவர், ஆறுதல் சொல்லி மேலும் அவளுக்கு நடந்ததை நினைவு படுத்த விரும்பவில்லை.
உனக்கு என்ன செய்யனும் ஏஞ்சல்? என்று பதில் மெயில் வந்தது.
என் கனவு நிறைவேறனும்.
இப்பொழுது என் எண்ணமெல்லாம், அதில் தான் இருக்கின்றது.கண்டவன் செய்த முட்டாள்தனமான செயலை நினைத்து, நான் ஏன் உடைந்து போகனும்?.இப்பொழுது நான் சிங்கப்பூர் வந்தாலும் வீட்ல உள்ளவங்களுக்கு தெரிஞ்சிடும்.அதனால்,யாருக்கும் தெரியாத இடத்திற்கு நான் போகனும்.
இங்கு இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும், எனக்கு மூச்சு முட்டுற போல இருக்கின்றது.
என் லட்சியம் என்னவென்று, நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை வி. வி.அதை நானே அழிக்க நினைச்சேனென்றால், உயிரோட இருந்தும் பிணம் போல தான் நான் ஆகிடுவேன்.நீங்க கொடுத்த ப்ராஜெக்ட் வேலையை நல்ல படியாக நான் முடிக்கனும்.என் கனவு நிறைவேறனும் என்று மெயில் அனுப்பியிருந்தாள்.
அவள் மெயிலை படித்தவர், பதில் அனுப்பினார்,வெரிகுட்.
இந்த செயலை தான் உன்னிடம் நான் எதிர் பாக்குறேன்.
பெண்கள் குணமே பொதுவாக எதாவது நடந்து விட்டால்,உடைந்து போய் விடுவதையே வழக்கமாக வைத்துக்கொள்கின்றனர்.மீண்டும் ஒருமுறை, நன்கு யோசித்து முடிவு செய் ஏஞ்சல்.இந்திய பெண்கள் தாலி சென்டிமென்டில் ஊறிப்போனவர்கள்.
ஊரறிய நடந்தாலும், இல்லை ஒருவருக்கும் தெரியாமல் நடந்தாலும் அதற்கு பெயர் திருமணம் தான்.நீ அதில் விதி விலக்கென்று உணர்த்திவிட்டாய் மை டியர்.இன்னும் 6 மணி நேரத்தில் உனக்காக, உன் வீட்டு தெரு முனையில் ஒரு கார் நிற்கும்.என் மேல் நம்பிக்கை இருந்தால், உனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு அதில் ஏறு.மற்றது எல்லாம் அவர்களே பார்த்துக்கொள்ளுவாங்கள் என்றார் வி. வி.
நம்பிக்கை இல்லாமலா இத்தனை வருஷமாக பேசிக்கிட்டு இருக்கேன்? என்று,கோவமாக இமோஜிகளை போட்டு அனுப்ப, கூல் மைடியர்.
புதிய பயணத்தை தொடங்க வாழ்த்துக்கள் என்று சொல்லி, ஆஃப் லைனிற்கு சென்று விட்டார் வினிதா வில்லியம்ஸ் அலைஸ் வி. வி.
லேப்டாப்பை ஆஃப் பண்ணியவள், தேவையானவைகளை, பேக்கிங் பண்ண ஆரம்பித்தவளுக்கு,கண்ணீர் வழிந்து ஓடியது.
இத்தனை வருடம் தன்னை வளர்த்த, அத்தையம்மாவிடம் கூட சொல்ல முடியாமல், ஓடி ஒளிய வைத்து விட்டானே என்று, கதிர் மேல் கோவம் அதிகமானது.நேரடியாக மோத துப்பு இல்லாமல், இப்படி ஓர் வழிய தேர்ந்தெடுத்திருக்கான் என்றால், பல நாளாக இவன் யோசித்திருக்கனும்.
இவ்வளவு நடந்துருக்கு, ஆனால் நம்மிடம் எதுவும் சொல்லவில்லையே என்று, பெற்றோர்களின் மீதும் கோவம் அதிகமானது தாமரைக்கு.
நேரமும் கடந்து சென்றது.
பின்னர் லட்டர் எழுதி வைத்தவள், தன்னிடமிருந்த பணத்தில் இருந்து, ஏழாயிரத்தை தனியாக எடுத்து, டிராவினுல் வைத்தாள்.
"கலா அப்பாயி கொடுத்த நகைகளையும் சூட்கேஸில் இருந்து எடுத்து, பணத்தோடே வைத்தாள்".
தனது ஃபோனில் இருந்து மணி எத்தனை என்று பார்க்க, நள்ளிரவு இரண்டு என்று காட்டியது.
இன்னும் இரண்டு மணி நேரம் தான் இந்த வீட்டிற்கும், நமக்கும் உள்ள சம்பந்தம் என்று நினைத்தவள்,கண்ணை மூடி தரையில் படுத்தவளுக்கு, வேதாவோடு இருந்த நாட்களெல்லாம் நினைவிற்குள் வந்தது.
அப்பொழுது மருதுவும், பவியோடு இருந்த தருணங்கள் கண் முன் வந்து செல்ல, தரையில் படுத்திருந்தவள் எழுந்து அமர்ந்து கொண்டாள்.
மூன்று வருடமாக தனக்காக காத்திருக்கும் மருதுவை நினைத்து பார்த்தவளுக்கு, வேதனையாக இருந்தது.நிச்சயமாக அவனால் இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, என்பது தாமரைக்கு புரிந்தது.மானசீகமாக வேதாவிடமும், மருதுவிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டாள்.
வேதாவிடமே திரும்ப செல்லலாம்.
ஆனால் இந்த நிகழ்வுகளை மீண்டும் நினைக்க அவள் விரும்பவில்லை.
வேதாவின் மேலும் ஒரு பக்கம் வருத்தம் இருந்தது.அவரும் உண்மையை மறைத்து விட்டாரே என்று.
நான் சீமக்கரைக்கு போய் வருகிறேன் என்று சொல்லியபோது, அத்தையம்மா என்னிடம் இதைப்பற்றி சொல்லியிருக்கலாம்.அப்பவே தெரிந்திருந்தால் நிச்சயமாக நான் இங்கு வந்திருக்க மாட்டேன்.
இப்படி ஒரு அவலம் எனக்கு நடந்திருக்காதே என்று மனதிற்குள் பேசினாலும், கண்கள் மட்டும் நீரை சிந்த மறக்கவில்லை.தனது செல்ஃபோனில் இருந்து மீண்டும் மணியை பார்க்க, நான்கு ஆக இன்னும் அரைமணி நேரம் இருப்பதாக காட்டியது.
ரெஸ்ட் ரூமிற்குள் சென்று குளித்து வெளியே வந்தவள்,முன்பே எடுத்து வைத்த டிரஸ்ஸை போட்டுக்கொண்டாள்.
பின்னர் தனது நீண்ட முடியை பின்னி முடித்தவள், நெற்றியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டை மட்டும் வைத்துக்கொண்டு, தேவையானது எல்லாம் இருக்கின்றதானு மீண்டும் ஒரு முறை செக் பண்ணி டிராலியை லாக் பண்ணியவள் சத்தம் வராமல் கதவை பொறுமையாக திறந்து பார்க்க, முற்றத்தில் அங்கங்கே வீட்டினர் தூங்குவது தெரிந்தது.
ஒரு கையில் செல்ஃபோனும், இன்னொரு கையில் டிராலி ஃபேகை எடுத்து வெளியே வந்தவள், கதவை மீண்டும் பொறுமையாக சாத்தி விட்டு, கவனமாக நடந்தவள், வீட்டின் இன்னொரு சாவியை எடுத்து,முன் கதவை திறந்து மெல்ல வெளியே வந்தவளை, சுற்றி இருக்கும் இருட்டு தான் வரவேற்தது.
கையில் இருந்த சாவியால் லாக் பண்ணி விட்டு,முன்னெச்சரிக்கையாக திறந்து வைத்த ஜன்னல் வழியாக,சாவியை உள்ளே போட்டு விட்டு ஜன்னலை மூடினாள்.
தனது இஷ்ட தெய்வமான மலையம்மனிடம் கண்ணை மூடி வேண்டியவள், டிராலிஃபேகேடு தெருவில் நடந்து செல்ல,சொன்ன போலவே அவளுக்காக அங்கே கார் நின்று கொண்டிருந்தது.
வேக எட்டுக்களோடு நடந்தவள் காரின் அருகில் நடந்து செல்லும் போது,முன் பக்க கதவை திறந்து ஒரு இளம் பெண் இறங்கினாள்.கிட்ட வந்த தாமரையிடம் ஃபோனை நீட்ட, யோசனையோடே வாங்கி,தனது காதில் வைக்க லீனா தான் பேசினாள்.
தாமரை அவங்களோடு பயப்படாமல் போ என்று சொல்லி லீனா ஃபோனை வைத்ததும், பின் பக்க கதவை திறந்து தாமரையும், அந்த இளம்பெண்ணும் ஏறியதும், கார் அங்கிருந்து கிளம்பியது.
பிளாஷ் பேக்!
மாணவர்களை அழைத்துச்சென்ற ஆசிரியர்கள் இருவரும் அவரிடம் மதுரைக்கு சென்றதில் இருந்து திரும்ப வந்தது வரை ஒன்று விடாமல் சொல்லினர்.
சரி வாங்க.
அவங்க வீட்ல இருந்து வந்தவங்கள் கிட்ட உண்மைய சொல்லலாம் என்றவர், சிந்து வீட்ல இருந்து யாரு வந்திருக்கா? என்று பார்க்க, பெருமாள் வாசலில் நின்றிருப்பது தெரிந்தது.
தலமையாசிரியரோ அட்டென்டரை விட்டு, பெருமாளை அழைத்து வரச்சொன்னார்.வழக்கம் போல் தங்கையை பாராட்ட தான் கூப்பிடுகிறார்கள்னு,மகிழ்ச்சியாக வந்தவரிடம் விஷயத்தை சொல்ல, அதைக்கேட்டவரோ அதிர்ந்தவர்,"என்ன சார் சொல்றீங்க?.உங்களை நம்பி தானே அனுப்பி வச்சோம்".
இப்போ இப்படி சொன்னால் என்ன அர்த்தம்?? என்று சண்டை போட்டவரை,தலைமையாசிரியரும், மற்றவர்களும் சமாதானப்படுத்த வழி தெரியாமல் நின்றார்கள்.
பெருமாள், எங்களுக்கும் இது பேரதிர்ச்சி தான்.உங்கள் நிலமையில் தான் நாங்களும் இருக்கின்றோம். எல்லாரும் இருக்கும் போது, சிந்து மட்டும் எங்கே போனாளென்று தெரியவில்லை.
மதுரையில் உள்ள போலிஸ் ஸ்டேஷனிலும், அந்த ஸ்கூல் தலைமையாசிரியரை விட்டு கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்லியிருக்கோம்.
உங்களுக்கு நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால், நீங்களும் வாங்க நேரிலே போய் பார்க்கலாம் என்றார்,அந்த பள்ளியின் தலைமையாசிரியர்.
சார்.... உங்க மேல நம்பிக்கை இல்லாமல் இல்லை.இப்போ என் தங்கச்சிக்கு என்ன ஆச்சி என்றே தெரியாமல், இதை வீட்டில் எப்படி நான் சொல்வேன்?.ஊருக்குள்ளே இருக்கவங்களுக்கு என் தங்கச்சிய காணும் என்று தெரிந்தால், யாரும் நல்ல விதமாக யோசிக்க மாட்டாங்க சார்.தப்பு தப்பா தான் பேசுவாங்க.
மக்களோட மனநிலை எப்படி யோசிக்கும் என்று, நான் சொல்லி தான் தெரிய வேண்டாம்.சின்ன பொண்ணு சார், என்ன ஆச்சோ?, ஏதாச்சோனு தெரியலையே? என்று கண் கலங்கினார் பெருமாள்.
உங்களை என்னால் கண்டிப்பாக புரிந்து கொள்ள முடிகிறது.சீக்கிரமாக சிந்துவை தேடி கண்டுபிடிக்க எல்லா வழியிலும் முயற்சி பண்ணலாம்.
நீங்க தைரியமாக போயிட்டு வாங்க என்று, ஒரு வழியாக பெருமாளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள்.