Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
தாமரை வீடு!
தங்கையின் சத்தம் கேட்டு தாமரையும் விஷயத்தை புரிந்து கொண்டு, தோட்டத்து பக்கம் ஓட,வளவனோ அத்தை மகளுங்களை துரத்த ஆரம்பித்தான்.
அக்கா...,மாலாக்கா வீட்டு சந்து வழியாக ஓடிடுனு சொல்லிக்கொண்டே அல்லி ஓட,தாமரையும் அந்த சந்தில் புகுந்து ஓடியவளோ முன் பக்கம் இருக்கும் ரோட்டுக்கு ஓடி வந்தாள்.
தூரத்தில் அல்லி கையை காட்டி இங்க வந்துடுனு கத்தி சொல்ல,தாமரையோ பின்னாடி துரத்தி வரும் வளவனை, அப்போ,அப்போ பின் பக்கமாய் திரும்பி பார்த்துக்கொண்டே ஓடியவள், எதன் மீதே வேகமாக போய் இடித்து நின்றாள்.
இடித்த வேகத்தில் அவள் நெற்றியில் நன்கு அடிபட்டதும் கண்ணை மூடியவள்,அப்பா என்று சொல்லி நிமிர்ந்து பார்ப்பதற்குள்,தன் மேல் இடித்து நிற்ப்பவளின் கழுத்தில்,மூன்று முடிச்சை போட்டிருந்தான் கதிர்.
தாமரையை துரத்தி வந்த வளவனோ, அண்ணன் செய்ததை பார்த்து, "அண்ணாஆஆஆ என்று அதிர்ந்து சொன்னான்".
தெருவில் தண்ணீர் ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தவர்களும், அங்கு நடந்ததை பார்த்து அதிர்ந்து தான் நின்றார்கள்.
வளவனின் குரலில் கண்ணை திறந்தவளோ,கழுத்தில் இருந்த தாலியை பார்க்க,"தாமரையின் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்தது".
தனது பாக்கெட்டில் இருந்த மஞ்சள் பொடியை நிதானமாக எடுத்தவன், அதிர்ந்து நிற்ப்பவளின் முகத்தை பார்த்துக்கொண்டே,அவளின் கன்னங்கள் மஞ்சளை பூசி விட்டான்.
கன்னம் வலிக்க,அழுத்தி மஞ்சள் தடவியதில்,அதிர்வில் இருந்தவளோ நிகழ்வுக்கு வந்ததை பார்த்தவன், பதினாறு ஊர் பஞ்சாயத்துக்கு முன்னாடி உன் அப்பனை,"எங்க அப்பா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லுடி".
பிறகு உன்னை கூட்டிட்டு போய் குடும்பம் நடத்துறேன்டி என் செல்ல பொண்டாட்டி என்றவாறு,அவள் கன்னம் வலிக்க தட்டி விட்டு,வந்த வழியே கதிர் திரும்பி செல்ல,நில்லுடா என்ற குரல் ஆங்காரமாக கேட்டது.
அந்த குரலில் திரும்பி பார்த்தவனோ, கோவம் கொப்பளிக்க தன் முன் நடந்து வருபவளை,அந்த சூழலிலும் ரசித்து பார்த்தான்.
சில அடி தொலைவிலிருந்த அல்லிக்கு, இங்கு நடந்தது தெரிய,அக்கா என்றபடியே தாமரையிடம் ஓடி வந்தாள்.
அதற்குள் சிலர், இங்கு நடந்ததை கதிர் வீட்டுக்கும்,கவிதாவிடமும் சொல்லி விட, கேட்ட இரண்டு வீட்டினரும் அதிர்ந்து போய்,ஓடி வந்தனர்.
ஒரு அடி இடைவெளி தூரத்தில் வந்து நின்ற தாமரையோ,கதிரை பார்த்தவள், யார்டா நீ?.உனக்கு எவ்வளவு திமிரு இருந்தால்,இந்த மஞ்சள் கயிற்றை என் கழுத்தில் கட்டுவ?.
என்ன சொன்ன?
என் அப்பா உன் அப்பன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க்கனுமா? என்று ஆங்கரமாக சொன்னவள்,தன் கழுத்தில் இருந்த தாலிக்கயிற்றை கழற்றி, கதிரின் முகத்தில் தூக்கி எறியும் போது
இரண்டு வீட்டினரும் அங்கே வந்து சேர்ந்தனர்
அங்கு நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்களை விட,கதிருக்கு தான் பேரதிர்ச்சியாக இருந்தது.அவள் கோவப்படுவாள் என்று எதிர் பார்த்தவன்,"தாலியை கழட்டி எறிவாளென்று சிறிதும் எதிர் பார்க்கவில்லை".
ஒரு கயித்தை கட்டிட்டா நீ சொல்ற படி நான் கேட்ப்பேனு என்ன நம்பிக்கைடா என்றபடியே,அத்தனை பேரின் முன்னாலும் கதிரின் கன்னத்தில் மாறி, மாறி அறைந்தவளின் கையை ஓடி வந்து கவிதாவும் பிடித்தார்.
தன் கையை யார் பிடிக்கிறார்கள் என்று திரும்பியவளோ அங்கிருந்த தாயை பார்த்தவள் யார்மா இவன்?.
என்னமோ,ஒரு மஞ்சள் கயிற்றை தூக்கிட்டு வந்து என் கழுத்தில கட்டி விட்டு,அப்பா மன்னிப்பு கேட்கனும், ஆட்டு குட்டி மன்னிப்பு கேட்கனும்னு ஒளறிகிட்டு இருக்கான்?.
யார் இவன்?,என்று கதிர் பக்கமாய் கையை நீட்டி கேட்கும் போது,அங்கு வந்த சீதாவோ,மகனின் அருகில் போனவர் ஏன் இப்படி பண்ணுனடா? என்று கேட்டபடியே அவரும் மகனை மாற்றி,மாற்றி அறைந்தார்.
அங்கிருப்பவனை தனது அத்தையும் அடிப்பதை பார்த்தவள்,அம்மா... அப்போ இது?என்று அதிர்ச்சியாக கேட்க, கவிதாவோ அழுது கொண்டே ஆம் என்று தலையசைத்தார்.
தனது அம்மாவை ஒரு பார்வை பார்த்தவள்,தனது ரூமிற்குள் போய் கதவை தாழிட்டுக்கொண்டாள்.
தான் கட்டிய தாலியை தாமரை கழட்டி எறிந்ததில் அதிர்ச்சியில் நின்றவன் தான்,பின்னர் அங்கு நடப்பது எதுவும் அவனால் உணர முடியவில்லை.சற்று முன்னர்,தன் முகத்தில் தாலியை கழற்றி எறிந்தது மட்டும் தான் கதிருக்கு நினைவில் இருந்தது.
ஒரு கட்டத்தில் மகனை அடித்து ஓய்ந்தவர்,அழுது கொண்டே கவிதாவின் வீட்டை நோக்கி சென்றார்.
பதினைந்து வருடங்களுக்கு பிறகு அந்த வீட்டிற்குள் போனவர் தாமரை.. அம்மாடி தாமரை என்று கதவை தட்ட,தாமரையோ எதுவும் சொல்லாமல்,சுவற்றின் மீது சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.
கவிதா,அல்லி,மற்றும் வீட்டினர் அனைவரும் கதவை தட்டி ஓய்ந்தனர்.
அம்மாடி நான் சொல்றதை கேளுடி என்று சீதா எவ்வளவோ கெஞ்ச,அவளோ வாயை திறக்கவில்லை.
கம்மங்காட்டிற்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்த அன்பு,வாசலில் தனது மாமனார் வீட்டினர் நிற்பதை பார்த்து, அந்த நேரத்திலும்,உள்ளே வாங்க மாமானு பிரகாசத்திடம் சொல்லிக்கொண்டே, என்னாச்சுனு கேட்டுக்கொண்டு உள்ளே வர,அங்கே தாமரையின் அறைக்கதவை தட்டிக்கொண்டிருந்த ராதாவை பார்த்தார்.
கவிதா,தாமரைக்கு என்ன ஆச்சு?? என்று கேட்டபடியே,அவள் அறைக்கிட்ட வந்தவர்,அம்மாடி தாமரை,தாமரை, என்று கூப்பிட,தந்தையின் குரலைக்கேட்டவள், "யாரையும் பார்க்க எனக்கு விருப்பமில்லை".
நான் உயிரோட இருக்கனும்னு நினைச்சீங்கனா என்னை தனியா விடுங்க என்றாள்.
கவிதா...என்ன நடந்தது என்று சொல்லப்போறியா?, இல்லையா? என்று அன்பு கத்த நடந்ததை எல்லாம் தந்தையிடம் அழுது கொண்டே அல்லியும் சொல்லி முடித்தாள்.
சின்ன மகளின் மூலமாக விஷயத்தை தெரிந்து கொண்டவர்,என்ன என்று அதிர்ந்து,நெஞ்சில் கை வைத்தவர்,சீதா என்று அழைத்தார்.
அண்ணா,சாமி சத்தியமா நடந்தது எதுவும் எனக்கு தெரியாது என்று சீதா சொல்ல,நீங்க வீட்டுக்கு போங்கம்மானு ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார்.
அண்ணா அது வந்து என்று ராதா சொல்ல,கையெடுத்து கும்பிட்ட அன்பு, தயவு செய்து போங்கம்மா.பிறகு பேசிக்கலாம்.
நெல்லு மண்டிக்கு வந்து பணம் வாங்கிட்டு போக வர சொல்லியதால், வேலுவும்,ஜானும் காலையில் கிளம்பி அங்கே சென்று விட்டனர்.
கவிதா வீட்டிலிருந்து வெளியே வந்த சீதாவையும்,ராதாவையும் பார்த்த, வள்ளியும்,பிரகாசமும், என்னாச்சிமா என்க?,எதுவும் பேசாமல் இருவரும் வீட்டிற்கு சென்றார்கள்.
கவிதா வீட்டிற்கு இவர்கள் போகும் போது,கதிர் எந்த இடத்தில் நின்றானோ, இன்னமும் அதே இடத்தில் தான் நின்று கொண்டிருந்தான்.
செல்வம்,பார்வதி,முத்து இவர்கள் மூவரும்,வயலில் உளுந்து விதைக்க சென்றிருந்ததால் அவர்களுக்கும் இங்கு நடந்தது எதுவும் தெரியவில்லை.
விதைப்பு வேலையை முடித்து விட்டு,மூவரும் பேசிக்கொண்டே தெருவில் நடந்து வரும் பொழுது,அங்கு தெரிந்த ஒருவர் நடந்த விஷயத்தை சொல்ல என்ன என்று கேட்டு மூவரும் அதிர்ச்சியாகினார்.
கதிர் வீடு!
ரோட்டில் நின்று கொண்டிருந்த அண்ணனின் தோளை தட்டியவன், அண்ணா அண்ணா என்று கூப்பிட, கதிரோ எதுவும் சொல்லாமல் தம்பியை ஒரு பார்வை பார்த்தவன்,திரும்பி வீட்டிற்கு சென்றான்.
வீட்டிற்குள்ளே வந்த சீதாவோ, அங்கிருந்த முற்றத்து தூணில் சாய்ந்த அமர்ந்து,கண்ணை மூடிக்கொள்ள, அவர் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து ஒடிக்கொண்டிருந்தது.
அந்நேரம்,வெளியே போயிருந்த பெருமாளும் வீட்டிற்குள் வந்தார்.
மற்றவர்களும் வீட்டிற்குள் வந்தனர்.
யார் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
சீதா அங்கு அழுது கொண்டிருப்பதை பார்த்த பெருமாள்,ராதா என்னாச்சு?.
வாழுற வீட்டுல,எதுக்கு உன் அக்கா இப்படி ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்கா?என்று சத்தம் போட்டார்.
கணவரின் வார்த்தையை கேட்டு கண்ணை திறந்தவர்,"உங்க மகன் செய்த காரியத்தை நினைத்து ஆனந்த கண்ணீரென்றார்".
என்னடி பேச்சுலாம் குத்தலா இருக்கு?என்கும் போது,கதிரும் வீட்டிற்குள் வர, அதோ வராறே நீதியரசர் அங்க கேளுங்க?,என்ன நடந்ததென்று கோவமாக சீதா சொல்ல,பெரியவனே என்ன ஆச்சு?
உன் ஆத்தாகாரி என்னமோ பானையில போட்ட நண்டு போல,லொட லொடனு கத்திக்கிட்டு இருக்கா.
அப்பாவின் கேள்விக்கு எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தவன்,சற்று முன்னர் நடந்ததை சொல்ல,அதைக்கேட்டவர் என்னாஆஆஆ என்று அதிர்ந்தார்.
அவரின் அதிர்ச்சியை பார்த்தவன், அப்பா அன்றைக்கு நடந்ததுக்கும் இன்றைக்கு நடந்ததும் சரியா போகிட்டு என்று சொன்னது தான் தாமதம்,கீழே உட்கார்ந்திருந்த சீதா,எழுந்து மகனிடம் வந்தவர் என்ன சொன்ன?,என்க.
பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததென்று வாயை திறந்தவனின் கன்னத்தில்,மீண்டும் மாறி மாறி அறைந்தவர்,அன்றைக்கு நடந்ததை பற்றி உனக்கு என்னடா தெரியும்?.
நேர்ல நடந்ததுனு என்னனு நீ பார்த்தியா?என்று மகனிடம் கேட்க, நானும் முத்து அப்பாவும் அங்கு வரும் போது,அந்த அன்பழகன் அத்தனை பேருக்கு முன்னாடி எங்கப்பாவை அடிச்சாரே என்றான் கதிர்.
மகன் சொன்னதை கேட்ட சீதாவோ, கணவரின் முன்பு போய் நின்றவர் எதுக்கு உங்களை அன்பு அண்ணன் அன்றைக்கு அடிச்சாங்களென்று கேட்க, அவர் எந்த பதிலும் சொல்ல முடியாமல கீழே குனிந்து கொண்டார்.
ஏற்கெனவே செஞ்ச பாவத்துக்கே இன்னும் பிரயாச்சித்தம் பண்ணலை.
அந்த பாவத்தை தீர்க வழியில்லாமல் இருக்கவும்,அப்பனுக்கு தப்பாமல் நீயும் புள்ளையா வந்து பொறந்துருக்கியே பாவி.
உன்னை போய் பத்து மாசம் சுமந்து பெத்தை நினைச்சி வெக்கமா இருக்கென்றவர் என்ன கொழுந்தனாரே,குடும்பமே அந்த குடும்பத்துக்கு பாவத்தை தான் செய்யனும்னு வரம் வேண்டி வந்துருக்கீங்களா?என்று ஒவ்வொருவர் தலையிலும் கேள்வியால் இடியை இறக்கினார்.
அம்மா...நீ என்ன பேசுறனு கொஞ்சம் புரியுர போல சொல்லுறியானு வளவன் கத்த,மகனை திரும்பி பார்த்த சீதா, அதான் குத்துக்கல்லு கணக்கா உன் அப்பா,இதோ ஊர் உலகத்துக்கு பஞ்சாயத்து பண்ணும் மனுஷன் நிக்கிறாரே.அவர் கிட்டவே கேளுடானு சொல்லி விட்டு,தோட்டத்து கதவை திறந்து வெளியே சென்று விட்டார்.
அம்மா...நீயாவது வாய திறந்து சொல்ல போறியா?,இல்லையா என்கவும் ராதாவும் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே தனது அறைக்கு சென்று விட்டார்.
அங்கிருந்த பாட்டி,அத்தை மாமாவை பார்த்த வளவன்,அத்தை உனக்கு கண்டிப்பா விஷயம் தெரிஞ்சிருக்கும்.
நீயாவது சொல்லுனு பார்வதியின் அருகில் சென்று கேட்க,என்னத்தை சொல்ல சொல்லுற அப்பு என்று கதறி அழுதார்.
என்னடா உனக்கு தெரியனும்?. பதினாறு ஊர் மக்களுக்கு முன்னாடியே நம்ப அப்பாவை அந்த அன்பழகன், ரோட்டுல விட்டு அடிச்சார்டா என்று கதிர் கத்தி சொல்ல, வாய மூடுடா என்று வள்ளி அப்பாயி கத்தினார்.
அடிச்சாங்க?,அடிச்சாங்கனு சொல்லுறியே, ஏன் அடிச்சாங்கனு தெரியுமா உனக்கு?,சொல்லு?,உனக்கு தெரியுமா?என்றார்.
தங்கையின் சத்தம் கேட்டு தாமரையும் விஷயத்தை புரிந்து கொண்டு, தோட்டத்து பக்கம் ஓட,வளவனோ அத்தை மகளுங்களை துரத்த ஆரம்பித்தான்.
அக்கா...,மாலாக்கா வீட்டு சந்து வழியாக ஓடிடுனு சொல்லிக்கொண்டே அல்லி ஓட,தாமரையும் அந்த சந்தில் புகுந்து ஓடியவளோ முன் பக்கம் இருக்கும் ரோட்டுக்கு ஓடி வந்தாள்.
தூரத்தில் அல்லி கையை காட்டி இங்க வந்துடுனு கத்தி சொல்ல,தாமரையோ பின்னாடி துரத்தி வரும் வளவனை, அப்போ,அப்போ பின் பக்கமாய் திரும்பி பார்த்துக்கொண்டே ஓடியவள், எதன் மீதே வேகமாக போய் இடித்து நின்றாள்.
இடித்த வேகத்தில் அவள் நெற்றியில் நன்கு அடிபட்டதும் கண்ணை மூடியவள்,அப்பா என்று சொல்லி நிமிர்ந்து பார்ப்பதற்குள்,தன் மேல் இடித்து நிற்ப்பவளின் கழுத்தில்,மூன்று முடிச்சை போட்டிருந்தான் கதிர்.
தாமரையை துரத்தி வந்த வளவனோ, அண்ணன் செய்ததை பார்த்து, "அண்ணாஆஆஆ என்று அதிர்ந்து சொன்னான்".
தெருவில் தண்ணீர் ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தவர்களும், அங்கு நடந்ததை பார்த்து அதிர்ந்து தான் நின்றார்கள்.
வளவனின் குரலில் கண்ணை திறந்தவளோ,கழுத்தில் இருந்த தாலியை பார்க்க,"தாமரையின் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்தது".
தனது பாக்கெட்டில் இருந்த மஞ்சள் பொடியை நிதானமாக எடுத்தவன், அதிர்ந்து நிற்ப்பவளின் முகத்தை பார்த்துக்கொண்டே,அவளின் கன்னங்கள் மஞ்சளை பூசி விட்டான்.
கன்னம் வலிக்க,அழுத்தி மஞ்சள் தடவியதில்,அதிர்வில் இருந்தவளோ நிகழ்வுக்கு வந்ததை பார்த்தவன், பதினாறு ஊர் பஞ்சாயத்துக்கு முன்னாடி உன் அப்பனை,"எங்க அப்பா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லுடி".
பிறகு உன்னை கூட்டிட்டு போய் குடும்பம் நடத்துறேன்டி என் செல்ல பொண்டாட்டி என்றவாறு,அவள் கன்னம் வலிக்க தட்டி விட்டு,வந்த வழியே கதிர் திரும்பி செல்ல,நில்லுடா என்ற குரல் ஆங்காரமாக கேட்டது.
அந்த குரலில் திரும்பி பார்த்தவனோ, கோவம் கொப்பளிக்க தன் முன் நடந்து வருபவளை,அந்த சூழலிலும் ரசித்து பார்த்தான்.
சில அடி தொலைவிலிருந்த அல்லிக்கு, இங்கு நடந்தது தெரிய,அக்கா என்றபடியே தாமரையிடம் ஓடி வந்தாள்.
அதற்குள் சிலர், இங்கு நடந்ததை கதிர் வீட்டுக்கும்,கவிதாவிடமும் சொல்லி விட, கேட்ட இரண்டு வீட்டினரும் அதிர்ந்து போய்,ஓடி வந்தனர்.
ஒரு அடி இடைவெளி தூரத்தில் வந்து நின்ற தாமரையோ,கதிரை பார்த்தவள், யார்டா நீ?.உனக்கு எவ்வளவு திமிரு இருந்தால்,இந்த மஞ்சள் கயிற்றை என் கழுத்தில் கட்டுவ?.
என்ன சொன்ன?
என் அப்பா உன் அப்பன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க்கனுமா? என்று ஆங்கரமாக சொன்னவள்,தன் கழுத்தில் இருந்த தாலிக்கயிற்றை கழற்றி, கதிரின் முகத்தில் தூக்கி எறியும் போது
இரண்டு வீட்டினரும் அங்கே வந்து சேர்ந்தனர்
அங்கு நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்களை விட,கதிருக்கு தான் பேரதிர்ச்சியாக இருந்தது.அவள் கோவப்படுவாள் என்று எதிர் பார்த்தவன்,"தாலியை கழட்டி எறிவாளென்று சிறிதும் எதிர் பார்க்கவில்லை".
ஒரு கயித்தை கட்டிட்டா நீ சொல்ற படி நான் கேட்ப்பேனு என்ன நம்பிக்கைடா என்றபடியே,அத்தனை பேரின் முன்னாலும் கதிரின் கன்னத்தில் மாறி, மாறி அறைந்தவளின் கையை ஓடி வந்து கவிதாவும் பிடித்தார்.
தன் கையை யார் பிடிக்கிறார்கள் என்று திரும்பியவளோ அங்கிருந்த தாயை பார்த்தவள் யார்மா இவன்?.
என்னமோ,ஒரு மஞ்சள் கயிற்றை தூக்கிட்டு வந்து என் கழுத்தில கட்டி விட்டு,அப்பா மன்னிப்பு கேட்கனும், ஆட்டு குட்டி மன்னிப்பு கேட்கனும்னு ஒளறிகிட்டு இருக்கான்?.
யார் இவன்?,என்று கதிர் பக்கமாய் கையை நீட்டி கேட்கும் போது,அங்கு வந்த சீதாவோ,மகனின் அருகில் போனவர் ஏன் இப்படி பண்ணுனடா? என்று கேட்டபடியே அவரும் மகனை மாற்றி,மாற்றி அறைந்தார்.
அங்கிருப்பவனை தனது அத்தையும் அடிப்பதை பார்த்தவள்,அம்மா... அப்போ இது?என்று அதிர்ச்சியாக கேட்க, கவிதாவோ அழுது கொண்டே ஆம் என்று தலையசைத்தார்.
தனது அம்மாவை ஒரு பார்வை பார்த்தவள்,தனது ரூமிற்குள் போய் கதவை தாழிட்டுக்கொண்டாள்.
தான் கட்டிய தாலியை தாமரை கழட்டி எறிந்ததில் அதிர்ச்சியில் நின்றவன் தான்,பின்னர் அங்கு நடப்பது எதுவும் அவனால் உணர முடியவில்லை.சற்று முன்னர்,தன் முகத்தில் தாலியை கழற்றி எறிந்தது மட்டும் தான் கதிருக்கு நினைவில் இருந்தது.
ஒரு கட்டத்தில் மகனை அடித்து ஓய்ந்தவர்,அழுது கொண்டே கவிதாவின் வீட்டை நோக்கி சென்றார்.
பதினைந்து வருடங்களுக்கு பிறகு அந்த வீட்டிற்குள் போனவர் தாமரை.. அம்மாடி தாமரை என்று கதவை தட்ட,தாமரையோ எதுவும் சொல்லாமல்,சுவற்றின் மீது சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.
கவிதா,அல்லி,மற்றும் வீட்டினர் அனைவரும் கதவை தட்டி ஓய்ந்தனர்.
அம்மாடி நான் சொல்றதை கேளுடி என்று சீதா எவ்வளவோ கெஞ்ச,அவளோ வாயை திறக்கவில்லை.
கம்மங்காட்டிற்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்த அன்பு,வாசலில் தனது மாமனார் வீட்டினர் நிற்பதை பார்த்து, அந்த நேரத்திலும்,உள்ளே வாங்க மாமானு பிரகாசத்திடம் சொல்லிக்கொண்டே, என்னாச்சுனு கேட்டுக்கொண்டு உள்ளே வர,அங்கே தாமரையின் அறைக்கதவை தட்டிக்கொண்டிருந்த ராதாவை பார்த்தார்.
கவிதா,தாமரைக்கு என்ன ஆச்சு?? என்று கேட்டபடியே,அவள் அறைக்கிட்ட வந்தவர்,அம்மாடி தாமரை,தாமரை, என்று கூப்பிட,தந்தையின் குரலைக்கேட்டவள், "யாரையும் பார்க்க எனக்கு விருப்பமில்லை".
நான் உயிரோட இருக்கனும்னு நினைச்சீங்கனா என்னை தனியா விடுங்க என்றாள்.
கவிதா...என்ன நடந்தது என்று சொல்லப்போறியா?, இல்லையா? என்று அன்பு கத்த நடந்ததை எல்லாம் தந்தையிடம் அழுது கொண்டே அல்லியும் சொல்லி முடித்தாள்.
சின்ன மகளின் மூலமாக விஷயத்தை தெரிந்து கொண்டவர்,என்ன என்று அதிர்ந்து,நெஞ்சில் கை வைத்தவர்,சீதா என்று அழைத்தார்.
அண்ணா,சாமி சத்தியமா நடந்தது எதுவும் எனக்கு தெரியாது என்று சீதா சொல்ல,நீங்க வீட்டுக்கு போங்கம்மானு ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார்.
அண்ணா அது வந்து என்று ராதா சொல்ல,கையெடுத்து கும்பிட்ட அன்பு, தயவு செய்து போங்கம்மா.பிறகு பேசிக்கலாம்.
நெல்லு மண்டிக்கு வந்து பணம் வாங்கிட்டு போக வர சொல்லியதால், வேலுவும்,ஜானும் காலையில் கிளம்பி அங்கே சென்று விட்டனர்.
கவிதா வீட்டிலிருந்து வெளியே வந்த சீதாவையும்,ராதாவையும் பார்த்த, வள்ளியும்,பிரகாசமும், என்னாச்சிமா என்க?,எதுவும் பேசாமல் இருவரும் வீட்டிற்கு சென்றார்கள்.
கவிதா வீட்டிற்கு இவர்கள் போகும் போது,கதிர் எந்த இடத்தில் நின்றானோ, இன்னமும் அதே இடத்தில் தான் நின்று கொண்டிருந்தான்.
செல்வம்,பார்வதி,முத்து இவர்கள் மூவரும்,வயலில் உளுந்து விதைக்க சென்றிருந்ததால் அவர்களுக்கும் இங்கு நடந்தது எதுவும் தெரியவில்லை.
விதைப்பு வேலையை முடித்து விட்டு,மூவரும் பேசிக்கொண்டே தெருவில் நடந்து வரும் பொழுது,அங்கு தெரிந்த ஒருவர் நடந்த விஷயத்தை சொல்ல என்ன என்று கேட்டு மூவரும் அதிர்ச்சியாகினார்.
கதிர் வீடு!
ரோட்டில் நின்று கொண்டிருந்த அண்ணனின் தோளை தட்டியவன், அண்ணா அண்ணா என்று கூப்பிட, கதிரோ எதுவும் சொல்லாமல் தம்பியை ஒரு பார்வை பார்த்தவன்,திரும்பி வீட்டிற்கு சென்றான்.
வீட்டிற்குள்ளே வந்த சீதாவோ, அங்கிருந்த முற்றத்து தூணில் சாய்ந்த அமர்ந்து,கண்ணை மூடிக்கொள்ள, அவர் கண்ணிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து ஒடிக்கொண்டிருந்தது.
அந்நேரம்,வெளியே போயிருந்த பெருமாளும் வீட்டிற்குள் வந்தார்.
மற்றவர்களும் வீட்டிற்குள் வந்தனர்.
யார் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
சீதா அங்கு அழுது கொண்டிருப்பதை பார்த்த பெருமாள்,ராதா என்னாச்சு?.
வாழுற வீட்டுல,எதுக்கு உன் அக்கா இப்படி ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்கா?என்று சத்தம் போட்டார்.
கணவரின் வார்த்தையை கேட்டு கண்ணை திறந்தவர்,"உங்க மகன் செய்த காரியத்தை நினைத்து ஆனந்த கண்ணீரென்றார்".
என்னடி பேச்சுலாம் குத்தலா இருக்கு?என்கும் போது,கதிரும் வீட்டிற்குள் வர, அதோ வராறே நீதியரசர் அங்க கேளுங்க?,என்ன நடந்ததென்று கோவமாக சீதா சொல்ல,பெரியவனே என்ன ஆச்சு?
உன் ஆத்தாகாரி என்னமோ பானையில போட்ட நண்டு போல,லொட லொடனு கத்திக்கிட்டு இருக்கா.
அப்பாவின் கேள்விக்கு எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தவன்,சற்று முன்னர் நடந்ததை சொல்ல,அதைக்கேட்டவர் என்னாஆஆஆ என்று அதிர்ந்தார்.
அவரின் அதிர்ச்சியை பார்த்தவன், அப்பா அன்றைக்கு நடந்ததுக்கும் இன்றைக்கு நடந்ததும் சரியா போகிட்டு என்று சொன்னது தான் தாமதம்,கீழே உட்கார்ந்திருந்த சீதா,எழுந்து மகனிடம் வந்தவர் என்ன சொன்ன?,என்க.
பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததென்று வாயை திறந்தவனின் கன்னத்தில்,மீண்டும் மாறி மாறி அறைந்தவர்,அன்றைக்கு நடந்ததை பற்றி உனக்கு என்னடா தெரியும்?.
நேர்ல நடந்ததுனு என்னனு நீ பார்த்தியா?என்று மகனிடம் கேட்க, நானும் முத்து அப்பாவும் அங்கு வரும் போது,அந்த அன்பழகன் அத்தனை பேருக்கு முன்னாடி எங்கப்பாவை அடிச்சாரே என்றான் கதிர்.
மகன் சொன்னதை கேட்ட சீதாவோ, கணவரின் முன்பு போய் நின்றவர் எதுக்கு உங்களை அன்பு அண்ணன் அன்றைக்கு அடிச்சாங்களென்று கேட்க, அவர் எந்த பதிலும் சொல்ல முடியாமல கீழே குனிந்து கொண்டார்.
ஏற்கெனவே செஞ்ச பாவத்துக்கே இன்னும் பிரயாச்சித்தம் பண்ணலை.
அந்த பாவத்தை தீர்க வழியில்லாமல் இருக்கவும்,அப்பனுக்கு தப்பாமல் நீயும் புள்ளையா வந்து பொறந்துருக்கியே பாவி.
உன்னை போய் பத்து மாசம் சுமந்து பெத்தை நினைச்சி வெக்கமா இருக்கென்றவர் என்ன கொழுந்தனாரே,குடும்பமே அந்த குடும்பத்துக்கு பாவத்தை தான் செய்யனும்னு வரம் வேண்டி வந்துருக்கீங்களா?என்று ஒவ்வொருவர் தலையிலும் கேள்வியால் இடியை இறக்கினார்.
அம்மா...நீ என்ன பேசுறனு கொஞ்சம் புரியுர போல சொல்லுறியானு வளவன் கத்த,மகனை திரும்பி பார்த்த சீதா, அதான் குத்துக்கல்லு கணக்கா உன் அப்பா,இதோ ஊர் உலகத்துக்கு பஞ்சாயத்து பண்ணும் மனுஷன் நிக்கிறாரே.அவர் கிட்டவே கேளுடானு சொல்லி விட்டு,தோட்டத்து கதவை திறந்து வெளியே சென்று விட்டார்.
அம்மா...நீயாவது வாய திறந்து சொல்ல போறியா?,இல்லையா என்கவும் ராதாவும் எதுவும் சொல்லாமல் அழுது கொண்டே தனது அறைக்கு சென்று விட்டார்.
அங்கிருந்த பாட்டி,அத்தை மாமாவை பார்த்த வளவன்,அத்தை உனக்கு கண்டிப்பா விஷயம் தெரிஞ்சிருக்கும்.
நீயாவது சொல்லுனு பார்வதியின் அருகில் சென்று கேட்க,என்னத்தை சொல்ல சொல்லுற அப்பு என்று கதறி அழுதார்.
என்னடா உனக்கு தெரியனும்?. பதினாறு ஊர் மக்களுக்கு முன்னாடியே நம்ப அப்பாவை அந்த அன்பழகன், ரோட்டுல விட்டு அடிச்சார்டா என்று கதிர் கத்தி சொல்ல, வாய மூடுடா என்று வள்ளி அப்பாயி கத்தினார்.
அடிச்சாங்க?,அடிச்சாங்கனு சொல்லுறியே, ஏன் அடிச்சாங்கனு தெரியுமா உனக்கு?,சொல்லு?,உனக்கு தெரியுமா?என்றார்.