Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
நீலகிரி!
பொழுதும் விடிந்தது.நெருங்கிய சொந்தங்கள் மட்டும் தான்," இரவு முழுவதும் சாவு வீட்டில் இருந்தனர்".
அங்கு இருந்தவர்களுக்காக,வாங்கி வந்த டீயை,மிலனுன், கொடுத்துக்கொண்டிருந்தான்."இந்த குளிருக்கு,அந்த டீ தேவையாகவே இருந்தது".
பவியோ இரவு முழுவதும் தூக்கமால், சிலை போல,நேற்று எங்கே உட்கார்ந்தாளோ,அதே இடத்தில் இப்பொழுது வரை உட்கார்ந்திருந்தாள்.
"போஸ்ட்மார்டம் செய்த உடல்.அதை ரொம்ப நேரம் வைத்திருக்க வேண்டாமென்று இரவே முடிவு செய்ததால்,காலை பத்து மணிக்கு மேல் பாடியை எடுக்கும் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.
ஒரு வாய் டீயாவது குடி பவியென்று வேதா வற்புறுத்தியும் அவள் அசரவில்லை.
பவியின் தாய்வழி உறவினர்கள் யாரும் இல்லாததால்,தந்தை வழியில் சிலருக்கு மட்டுமே செய்தியை தெரிவித்தனர்.
செய்ய வேண்டிய சடங்குகளை அங்குள்ளவர்கள்,இருவருக்கும் செய்து முடித்து,இருவரின் உடலையும் ஊர்தியில் ஏற்ற,அங்கிருந்து சுடுகாட்டை நோக்கி சென்றனர்.
ஆண்களும்,தூரத்திலிருந்து வந்திருந்த உறவினர்களும்,பாடியின் பின்னாடியே சென்றனர்.
எனக்கு கொள்ளி வைப்பாயென்று வரம் வாங்கி பெத்தனே,இன்னைக்கு உனக்கு கொள்ளி போடுறனேனு கொள்ளிக்குடத்தோடு பவியின் தாத்தாவோ அழுதபடி வந்தார்.
மயிலாவும், இன்னும் சில பெண்களுப் வீடு வாசலை கழுவி விட்டனர்.வேதாவோ பவியை எழுப்பி கொண்டு போய் குளிக்க அனுப்ப,"பொம்மை போல அவர் சொன்னதையெல்லாம் செய்தாள்".
நர்சம்மா..இந்த பொண்ணு என்ன இப்படி இருக்கா?,எனக்கு ஏதோ அச்சமா இருக்குங்கம்மானு மயிலா சொல்ல, "எனக்கும் அந்த யோசனை தான்". நாளைக்கு நம்ப ஹாஸ்பிட்டலுக்கு டாக்டர் வருவாங்க.எதுக்கும் பவிய அவர் கிட்ட காட்டலாம் மயிலா.
அதிர்ச்சிதான்.மனசு விட்டு அழுதால் எல்லாம் சரியாகிடும்.ஆனால்,ஒரு சாமார்த்தியமா அழாம இருக்காளே, அது தான் தாங்க முடியலை மயிலா.
"பெத்தவள் இல்லைனு கேட்டே இப்படி ஆகிட்டாள்".
இதில் அப்பாவும் இல்லைனு என்னைக்கு இவளுக்கு புரியப்போகுதோனு,அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
சிட்டுக்குருவி போல திரிஞ்சவ,இப்படி முடங்கி போயிருக்காளே மயிலானா வேதாவும் கண் கலங்கினார் .
சுடுகாட்டுக்கு சென்றவர்களில் சிலர் மட்டுமே வீட்டிற்கு வந்தனர்.
பவியின் தாத்தாவோ,அங்கிருந்த மருது குடும்பத்திடமும்,வேதாவிடமும் சொல்லிக்கொண்டு கோவைக்கு கிளம்பினார். உடல்நிலை சரியில்லாத மனைவியை,பார்க்க வேண்டிய கடமையும் அவருக்கு இருப்பது மற்றவர்களுக்கு புரிந்தது.
இனி பவி கூட யார் இங்கிருந்து, தினமும் மதிய வேளைக்கு படைக்க உணவு சமைப்பது என்ற பேச்சு வந்தது.
வேதாவின் வேலை பற்றி தெரிந்ததால், தனது வீட்டிலே சமைத்து கொண்டு வந்து இங்கே படைக்கலாம் என்றார் மயிலா.
அப்பொழுது,மருதுவோ ஷோல்டரில் ஃபேகை மாட்டிக்கொண்டு,
தூரத்தில் வந்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
அங்கே வந்தவன்,நைட் டூட்டிக்கு போகனும் என்றும்,காரியத்தின் அப்பொழுது வரேனென்று தந்தையிடம் மட்டும் சொல்லி விட்டு வேறு யாரையும் பார்க்காமல் செல்ல,மயிலாவோ பேயறைந்தது போல,அதிர்ந்து போனார் .
நேற்றிலிருந்து இதுவரை ஒரு வார்த்தை,ஏன் அவர் முகத்தை கூட மருது பார்க்கவில்லை.
என்னய்யா இவனென்று கணவனிடம் கேட்க,மூக்கையனோ,மனைவியை ஒரு முறை முறைத்து பார்க்க,வாயை மூடிக்கொண்டார் மயிலா.
அப்பொழுது பவியின் வீட்டின் உள்ளே இருந்து வந்த வேதாவோ,நான் வீட்டுக்கு போய் புடவைய மாத்திட்டு வரேன்.பிறகு நீ வீட்டுக்கு போ என்க,சரிங்க நர்சம்மா நீங்க போய்ட்டு வாங்க என்றார்.
வேதா போகும் வரை அமைதியாக இருந்த மயிலா,தற்பொழுது அங்கு யாரும் இல்லை என்பதால்,என்னங்க அவன் பாட்டுக்கு போறான்.நீங்க எதுவுமே சொல்லாம குத்து கல்லா இருக்கீங்க என்க?,மூக்கையனோ நீ சொல்லிட்டு செஞ்சியானு அழுத்தமாக கேட்டார் .
"அவர் கேள்விக்கு மயிலாவால் பதிலும் சொல்ல முடியவில்லை".அது வந்துயானு சொல்ல வர,கையை நீட்டி மனைவியை தடுத்தவர்,அவன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சி,நீ இப்படி ஒரு நிலமையில இழுத்து விட்டது உனக்கு பெருசா தெரியலை?.
அவன் சொல்லாம போனது தான் இப்போ தெய்வ குத்தம் அப்படி தானேனு பல்லை கடித்துக்கொண்டே கேட்க,ஏங்க...அந்த இடத்தில் எனக்கு என்ன தோனுச்சோ அதை தாங்க செஞ்சேன் என்கவும்,உனக்கு தோனுவதை செய்ய,அவனோட விருப்பம் தேவையில்லை அப்படி தானே?
வார்த்தைகளை சாட்டையை போல் சுடற்றி அடித்து,கேள்வியாய் கேட்ட கணவருக்கு,பதில் சொல்ல வழி இல்லாமல் நொறுங்கி நின்றார்.
ஆனது ஆகிட்டு...கொஞ்ச நாள் அவனை விடு.உடனே,ஊர்ல இருக்க பொம்பளைங்க போல,பேரப்புள்ளைய பாக்கனும்,அது இதுனு,வாய தொரந்த நல்லா இருக்காது.முதல்ல ஒன்பதாம் நாள் காரியம் முடியட்டும்.மற்றதை பிறகு பேசிக்கலாம்.போய் பவி கூட இரு.
ம்ம் என்றவாரே தலையசைத்து,உள்ளே சென்று பார்த்தவரின் கண்ணிலிருந்து அருவி தான் பொழிந்தது.பவியோ அங்கே தாய் தந்தையின் போட்டோவை தரையில் வைத்து,அதன் மேல் தலை வைத்து படுத்திருந்தாள்.
ஆனாலும் அவள் கண்ணில் இருந்து ஒரு துளி நீர் வரவில்லை. மலையம்மா.நீதான் என் புள்ளைங்களுக்கு துணையா இருக்கனும் ஆத்தா என்று வேண்டிக்கொண்டார்.
சீமக்கரை கதிர் வீடு!
தங்கள் வீட்டு மாடுகளின் மேல்,விபூதி பட்டைகளை பூசி,அதன் மேல் குங்குமம் வைத்தான் வளவன்.கதிரும்,முத்துவும், மாடுகளுக்கு வாங்கிய சலங்கை வைத்த குஞ்சத்தை,அதன் கொம்புகளில் கட்டிக் கொண்டிருந்தனர்.
கதிரோ காலையிலே கொம்புகளை சீவி,அதன் மேல் பளபளக்கும் வகையில் வண்ணங்களை பூசி விட்டான்.
பிரகாசம் தாத்தாவோ நெற்கதிரில் பின்னிய மாலையை,எல்லா மாடுகளுக்கும் கழுத்தில் கட்டிக் கொண்டே வந்தார்.செல்வியோ,சுத்தம் செய்த உழவுக்கருவிகளின் மேலே சந்தனத்தையும்,குங்குமத்தையும் வைத்துக் கொண்டிருந்தாள்.
நிலவனோ விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும், பாறை,மண்வெட்டி,கதிர் அருவாள்,ஏர் கலப்பைகள்,என உழவுப் பொருட்களையெல்லாம் அங்கே கொண்டு வந்து வைத்தான்.
வீட்டில் சமைத்த உணவுகளோடு,தாம்பாளத் தட்டுகளில் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், வயலில் விளைந்த நெல்,சோளம், பயிறுகளையும்,இன்னொரு தட்டில்,தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என,எல்லாம் பூஜைக்காக எடுத்து வைத்தனர்.
என்னம்மா ஆரம்பிக்கலாமானா பிரகாசம் தாத்தா கேட்க,இதோ என்றவாறே,உள்ளே இருந்த எல்லாவற்றையும் வெளியே எடுத்து வந்து வைத்தார்கள்.
அப்பொழுது,வேலு,ஜான்,மற்றும் செல்வமும் அங்கு வந்து சேர்ந்தார்கள். செல்வத்தை பார்த்து வாங்க மாப்பிள்ளை என்றார் பிரகாசம் தாத்தா.
வரேன் மாமா என்றவரிடம், மற்றவர்களும் வாங்க வாங்க என்றனர்.
இன்னும் உன் பெரிய மவன் வரலையானு பிரகாசம் தாத்தா வள்ளி அப்பாயிடம் கேட்டுக்கொண்டிருக்கும் போதே பெருமாளும்,லாரன்ஸ் தம்பதியினரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
லாரன்ஸ் தம்பதியை பார்த்து வாங்க என்று சொல்லி விட்டு,பூஜை முடிந்த பிறகு மற்றது பேசிக் கொள்ளலாம் என்றார்.பின்னர்,அவரவர் கைகளில் கிடைத்த பொருட்களை மேளமாக தட்டிக்கொண்டே,பொங்கலோ பொங்கல்,மாட்டுப்பொங்கல் என்று, அனைவரும் சொல்லிக்கொண்டே மூன்று முறை மாடுகளை சுற்றி வந்தார்கள்.
பிறகு,சூடத்தை ஏற்றிய பிரகாசம் தாத்தா,மாடுகளுக்கும், உழவுப்பொருட்களுக்கும் காட்டி விட்டு, வீட்டிள் உள்ளவர்களுக்கு எரிகின்ற சூடத்தை காட்ட,அவர்களும் சூடத்தை வணங்கிய பின்,அனைவரும் மாடுகளுக்கு முன்பு,நெடுஞ்சான் கிடையாக கீழே விழுந்து வேண்டிக்கொண்டனர்.
முத்துவோ சமைத்த சக்கரை பொங்கல், உப்பில்லாத வெண்பொங்கல், அதற்கு தொட்டுக்கொள்ள செய்த,உப்பில்லாத பரங்கிக்காய் பச்சடி,மற்றும் வாழைப்பழத்தை எல்லாம் ஒன்றாக கலந்தார்.
பிறகு,அதை எடுத்துக்கொண்டு போனவர்,எல்லா மாடுகள் வாயிலும் கொஞ்சமாக கலந்த சாதத்தை வைத்து விட, மாட்டுப்பொங்கல் பூஜையும் சிறப்பாக முடிந்தது.இனியாவது மனுஷன் வயிற்றுக்கு எதாவது போடுவீங்களா?என்றான் நிலவன்.
மாடுகளுக்கு பொங்கல் வைப்பதால் பெரும்பாலும்,மதிய உணவு வீட்டில் செய்ய மாட்டார்கள்.நிலவா,இனி உள்ள போய் சாமிக்கு சூடம் காட்டிட்டு,சாப்டலாம்பாஎன்றார் பெருமாள்.
அதைப்போலவே வீட்டின் உள்ளேயும் போய்,அங்கிருந்த சாமி படத்திற்கு முன்பு பூஜையை முடித்ததும், செல்வி...,இலைய கழுவி எடுத்து வா என்க.பார்வதியும்,சீதாவும் சமைத்த உணவுகள் மற்றும்,இனிப்பு பதார்த்தங்களை எடுத்து வந்து முற்றத்தில் வைத்தார்கள்.
அண்ணி எல்லாரையும் கூப்டுங்க என்று ராதா சொல்ல,வெளியே வந்த பார்வதி,அப்பா சாப்ட வரச்சொல்லுங்க..
லாரன்ஸ்,பெருமாள்,முத்து,ன பிரகாசம், செல்வம், இவர்கள் ஐவரைத் தவிர, மற்றவர்கள் எல்லாரும்,வரிசையாக முற்றத்தின் தரையில் வந்து உட்கார்ந்தனர்.
செல்வியும் வாழை இலையை வைத்து,அதன் மேல் தண்ணீரை தெளித்து செல்ல,சீதாவும்,பார்வதியும் சமைத்தவைகளை இலையிலும் பரிமாறினார்கள்.
அப்பொழுது,செல்வி,இதில் நீ சமைச்சது எதுனு வேலு கேட்க,மாமா.. நான் சும்மா எடுபுடி வேலை தான்,மெயின் பிச்சரை ஓட்டுனது எல்லாம் உங்கள் தாய்க்குலங்கள் தானென்றாள்.
ஹப்பாடா....அப்போ உசுருக்கு ஆபத்து இல்லை.நம்பி சாப்டலாம்டா என்ற வேலுவின் வார்த்தையை கேட்டு மற்றவர்கள் சிரிக்க,செல்வியோ கொலை வெறியில் அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.
ஏன் டா,குட்டி கிட்ட வம்பு பண்ணலைனா, தூக்கம் வராதோ என்றான் ஜான்?.
ஆமாடா....நீ வேண்டுமானால் ராவுக்கு தூங்க தாலாட்டு பாடு.நான் நல்லா நிம்மதியா தூங்குறேன்.முதல்ல சாப்ட்டு எந்திரிங்கடா.மூன்று ஐயனாரும் ஒன்னா கூடிருக்காங்க.கல்யாணம் பண்ணலை,காது குத்தலைனு பேசியே கொன்னுடுவாங்க.நாமளாம் அதுக்குள்ள சாப்ட்டு தப்பிக்கனும் என்றான் வேலு.
கிண்டல்,கேலிகளோடு சாப்பிட்டு முடித்து இவர்கள் எழவும்,வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அந்த மாரியாத்தா புண்ணியத்துல,மாட்டாமல் தப்பிச்சோம்டா பனைமரம்.
இல்லை காதுல ரத்த ஆறே ஓடியிருக்கும்.
மாப்பு...நேரத்தை கடத்தாம சீக்கிரம் மாட்டை ஓட்டியாங்கடா,கோயிலுக்கு போகலாமென்று வேலு சொல்ல,யோவ் மாமா,எதுக்குயா சுடுதண்ணி காலுல கொட்டுன போல பதறி கிட்டு இருக்கனு நிலவன் கேட்கவும்,அதற்கு வேலுவோ,நீ போய் அந்த மூன்று மீசைங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வாயேன் என்றான்.
ஏன் மாமா?,ஏன் இப்படி? என் காது நல்லா இருக்குறது உனக்கு பொறுக்கலையா?.
இப்போ தெரியுது இல்லை,வாய மூடிகிட்டு வாடா என்றவன்,நீங்க என்னடா புதுப்பொண்ணு சமைஞ்சதை பார்த்த போல நிக்கிறீங்கனு அவர்கள் மூவரையும் முறைத்துப் பார்த்தான்.
பொழுதும் விடிந்தது.நெருங்கிய சொந்தங்கள் மட்டும் தான்," இரவு முழுவதும் சாவு வீட்டில் இருந்தனர்".
அங்கு இருந்தவர்களுக்காக,வாங்கி வந்த டீயை,மிலனுன், கொடுத்துக்கொண்டிருந்தான்."இந்த குளிருக்கு,அந்த டீ தேவையாகவே இருந்தது".
பவியோ இரவு முழுவதும் தூக்கமால், சிலை போல,நேற்று எங்கே உட்கார்ந்தாளோ,அதே இடத்தில் இப்பொழுது வரை உட்கார்ந்திருந்தாள்.
"போஸ்ட்மார்டம் செய்த உடல்.அதை ரொம்ப நேரம் வைத்திருக்க வேண்டாமென்று இரவே முடிவு செய்ததால்,காலை பத்து மணிக்கு மேல் பாடியை எடுக்கும் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.
ஒரு வாய் டீயாவது குடி பவியென்று வேதா வற்புறுத்தியும் அவள் அசரவில்லை.
பவியின் தாய்வழி உறவினர்கள் யாரும் இல்லாததால்,தந்தை வழியில் சிலருக்கு மட்டுமே செய்தியை தெரிவித்தனர்.
செய்ய வேண்டிய சடங்குகளை அங்குள்ளவர்கள்,இருவருக்கும் செய்து முடித்து,இருவரின் உடலையும் ஊர்தியில் ஏற்ற,அங்கிருந்து சுடுகாட்டை நோக்கி சென்றனர்.
ஆண்களும்,தூரத்திலிருந்து வந்திருந்த உறவினர்களும்,பாடியின் பின்னாடியே சென்றனர்.
எனக்கு கொள்ளி வைப்பாயென்று வரம் வாங்கி பெத்தனே,இன்னைக்கு உனக்கு கொள்ளி போடுறனேனு கொள்ளிக்குடத்தோடு பவியின் தாத்தாவோ அழுதபடி வந்தார்.
மயிலாவும், இன்னும் சில பெண்களுப் வீடு வாசலை கழுவி விட்டனர்.வேதாவோ பவியை எழுப்பி கொண்டு போய் குளிக்க அனுப்ப,"பொம்மை போல அவர் சொன்னதையெல்லாம் செய்தாள்".
நர்சம்மா..இந்த பொண்ணு என்ன இப்படி இருக்கா?,எனக்கு ஏதோ அச்சமா இருக்குங்கம்மானு மயிலா சொல்ல, "எனக்கும் அந்த யோசனை தான்". நாளைக்கு நம்ப ஹாஸ்பிட்டலுக்கு டாக்டர் வருவாங்க.எதுக்கும் பவிய அவர் கிட்ட காட்டலாம் மயிலா.
அதிர்ச்சிதான்.மனசு விட்டு அழுதால் எல்லாம் சரியாகிடும்.ஆனால்,ஒரு சாமார்த்தியமா அழாம இருக்காளே, அது தான் தாங்க முடியலை மயிலா.
"பெத்தவள் இல்லைனு கேட்டே இப்படி ஆகிட்டாள்".
இதில் அப்பாவும் இல்லைனு என்னைக்கு இவளுக்கு புரியப்போகுதோனு,அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
சிட்டுக்குருவி போல திரிஞ்சவ,இப்படி முடங்கி போயிருக்காளே மயிலானா வேதாவும் கண் கலங்கினார் .
சுடுகாட்டுக்கு சென்றவர்களில் சிலர் மட்டுமே வீட்டிற்கு வந்தனர்.
பவியின் தாத்தாவோ,அங்கிருந்த மருது குடும்பத்திடமும்,வேதாவிடமும் சொல்லிக்கொண்டு கோவைக்கு கிளம்பினார். உடல்நிலை சரியில்லாத மனைவியை,பார்க்க வேண்டிய கடமையும் அவருக்கு இருப்பது மற்றவர்களுக்கு புரிந்தது.
இனி பவி கூட யார் இங்கிருந்து, தினமும் மதிய வேளைக்கு படைக்க உணவு சமைப்பது என்ற பேச்சு வந்தது.
வேதாவின் வேலை பற்றி தெரிந்ததால், தனது வீட்டிலே சமைத்து கொண்டு வந்து இங்கே படைக்கலாம் என்றார் மயிலா.
அப்பொழுது,மருதுவோ ஷோல்டரில் ஃபேகை மாட்டிக்கொண்டு,
தூரத்தில் வந்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
அங்கே வந்தவன்,நைட் டூட்டிக்கு போகனும் என்றும்,காரியத்தின் அப்பொழுது வரேனென்று தந்தையிடம் மட்டும் சொல்லி விட்டு வேறு யாரையும் பார்க்காமல் செல்ல,மயிலாவோ பேயறைந்தது போல,அதிர்ந்து போனார் .
நேற்றிலிருந்து இதுவரை ஒரு வார்த்தை,ஏன் அவர் முகத்தை கூட மருது பார்க்கவில்லை.
என்னய்யா இவனென்று கணவனிடம் கேட்க,மூக்கையனோ,மனைவியை ஒரு முறை முறைத்து பார்க்க,வாயை மூடிக்கொண்டார் மயிலா.
அப்பொழுது பவியின் வீட்டின் உள்ளே இருந்து வந்த வேதாவோ,நான் வீட்டுக்கு போய் புடவைய மாத்திட்டு வரேன்.பிறகு நீ வீட்டுக்கு போ என்க,சரிங்க நர்சம்மா நீங்க போய்ட்டு வாங்க என்றார்.
வேதா போகும் வரை அமைதியாக இருந்த மயிலா,தற்பொழுது அங்கு யாரும் இல்லை என்பதால்,என்னங்க அவன் பாட்டுக்கு போறான்.நீங்க எதுவுமே சொல்லாம குத்து கல்லா இருக்கீங்க என்க?,மூக்கையனோ நீ சொல்லிட்டு செஞ்சியானு அழுத்தமாக கேட்டார் .
"அவர் கேள்விக்கு மயிலாவால் பதிலும் சொல்ல முடியவில்லை".அது வந்துயானு சொல்ல வர,கையை நீட்டி மனைவியை தடுத்தவர்,அவன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சி,நீ இப்படி ஒரு நிலமையில இழுத்து விட்டது உனக்கு பெருசா தெரியலை?.
அவன் சொல்லாம போனது தான் இப்போ தெய்வ குத்தம் அப்படி தானேனு பல்லை கடித்துக்கொண்டே கேட்க,ஏங்க...அந்த இடத்தில் எனக்கு என்ன தோனுச்சோ அதை தாங்க செஞ்சேன் என்கவும்,உனக்கு தோனுவதை செய்ய,அவனோட விருப்பம் தேவையில்லை அப்படி தானே?
வார்த்தைகளை சாட்டையை போல் சுடற்றி அடித்து,கேள்வியாய் கேட்ட கணவருக்கு,பதில் சொல்ல வழி இல்லாமல் நொறுங்கி நின்றார்.
ஆனது ஆகிட்டு...கொஞ்ச நாள் அவனை விடு.உடனே,ஊர்ல இருக்க பொம்பளைங்க போல,பேரப்புள்ளைய பாக்கனும்,அது இதுனு,வாய தொரந்த நல்லா இருக்காது.முதல்ல ஒன்பதாம் நாள் காரியம் முடியட்டும்.மற்றதை பிறகு பேசிக்கலாம்.போய் பவி கூட இரு.
ம்ம் என்றவாரே தலையசைத்து,உள்ளே சென்று பார்த்தவரின் கண்ணிலிருந்து அருவி தான் பொழிந்தது.பவியோ அங்கே தாய் தந்தையின் போட்டோவை தரையில் வைத்து,அதன் மேல் தலை வைத்து படுத்திருந்தாள்.
ஆனாலும் அவள் கண்ணில் இருந்து ஒரு துளி நீர் வரவில்லை. மலையம்மா.நீதான் என் புள்ளைங்களுக்கு துணையா இருக்கனும் ஆத்தா என்று வேண்டிக்கொண்டார்.
சீமக்கரை கதிர் வீடு!
தங்கள் வீட்டு மாடுகளின் மேல்,விபூதி பட்டைகளை பூசி,அதன் மேல் குங்குமம் வைத்தான் வளவன்.கதிரும்,முத்துவும், மாடுகளுக்கு வாங்கிய சலங்கை வைத்த குஞ்சத்தை,அதன் கொம்புகளில் கட்டிக் கொண்டிருந்தனர்.
கதிரோ காலையிலே கொம்புகளை சீவி,அதன் மேல் பளபளக்கும் வகையில் வண்ணங்களை பூசி விட்டான்.
பிரகாசம் தாத்தாவோ நெற்கதிரில் பின்னிய மாலையை,எல்லா மாடுகளுக்கும் கழுத்தில் கட்டிக் கொண்டே வந்தார்.செல்வியோ,சுத்தம் செய்த உழவுக்கருவிகளின் மேலே சந்தனத்தையும்,குங்குமத்தையும் வைத்துக் கொண்டிருந்தாள்.
நிலவனோ விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும், பாறை,மண்வெட்டி,கதிர் அருவாள்,ஏர் கலப்பைகள்,என உழவுப் பொருட்களையெல்லாம் அங்கே கொண்டு வந்து வைத்தான்.
வீட்டில் சமைத்த உணவுகளோடு,தாம்பாளத் தட்டுகளில் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், வயலில் விளைந்த நெல்,சோளம், பயிறுகளையும்,இன்னொரு தட்டில்,தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என,எல்லாம் பூஜைக்காக எடுத்து வைத்தனர்.
என்னம்மா ஆரம்பிக்கலாமானா பிரகாசம் தாத்தா கேட்க,இதோ என்றவாறே,உள்ளே இருந்த எல்லாவற்றையும் வெளியே எடுத்து வந்து வைத்தார்கள்.
அப்பொழுது,வேலு,ஜான்,மற்றும் செல்வமும் அங்கு வந்து சேர்ந்தார்கள். செல்வத்தை பார்த்து வாங்க மாப்பிள்ளை என்றார் பிரகாசம் தாத்தா.
வரேன் மாமா என்றவரிடம், மற்றவர்களும் வாங்க வாங்க என்றனர்.
இன்னும் உன் பெரிய மவன் வரலையானு பிரகாசம் தாத்தா வள்ளி அப்பாயிடம் கேட்டுக்கொண்டிருக்கும் போதே பெருமாளும்,லாரன்ஸ் தம்பதியினரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
லாரன்ஸ் தம்பதியை பார்த்து வாங்க என்று சொல்லி விட்டு,பூஜை முடிந்த பிறகு மற்றது பேசிக் கொள்ளலாம் என்றார்.பின்னர்,அவரவர் கைகளில் கிடைத்த பொருட்களை மேளமாக தட்டிக்கொண்டே,பொங்கலோ பொங்கல்,மாட்டுப்பொங்கல் என்று, அனைவரும் சொல்லிக்கொண்டே மூன்று முறை மாடுகளை சுற்றி வந்தார்கள்.
பிறகு,சூடத்தை ஏற்றிய பிரகாசம் தாத்தா,மாடுகளுக்கும், உழவுப்பொருட்களுக்கும் காட்டி விட்டு, வீட்டிள் உள்ளவர்களுக்கு எரிகின்ற சூடத்தை காட்ட,அவர்களும் சூடத்தை வணங்கிய பின்,அனைவரும் மாடுகளுக்கு முன்பு,நெடுஞ்சான் கிடையாக கீழே விழுந்து வேண்டிக்கொண்டனர்.
முத்துவோ சமைத்த சக்கரை பொங்கல், உப்பில்லாத வெண்பொங்கல், அதற்கு தொட்டுக்கொள்ள செய்த,உப்பில்லாத பரங்கிக்காய் பச்சடி,மற்றும் வாழைப்பழத்தை எல்லாம் ஒன்றாக கலந்தார்.
பிறகு,அதை எடுத்துக்கொண்டு போனவர்,எல்லா மாடுகள் வாயிலும் கொஞ்சமாக கலந்த சாதத்தை வைத்து விட, மாட்டுப்பொங்கல் பூஜையும் சிறப்பாக முடிந்தது.இனியாவது மனுஷன் வயிற்றுக்கு எதாவது போடுவீங்களா?என்றான் நிலவன்.
மாடுகளுக்கு பொங்கல் வைப்பதால் பெரும்பாலும்,மதிய உணவு வீட்டில் செய்ய மாட்டார்கள்.நிலவா,இனி உள்ள போய் சாமிக்கு சூடம் காட்டிட்டு,சாப்டலாம்பாஎன்றார் பெருமாள்.
அதைப்போலவே வீட்டின் உள்ளேயும் போய்,அங்கிருந்த சாமி படத்திற்கு முன்பு பூஜையை முடித்ததும், செல்வி...,இலைய கழுவி எடுத்து வா என்க.பார்வதியும்,சீதாவும் சமைத்த உணவுகள் மற்றும்,இனிப்பு பதார்த்தங்களை எடுத்து வந்து முற்றத்தில் வைத்தார்கள்.
அண்ணி எல்லாரையும் கூப்டுங்க என்று ராதா சொல்ல,வெளியே வந்த பார்வதி,அப்பா சாப்ட வரச்சொல்லுங்க..
லாரன்ஸ்,பெருமாள்,முத்து,ன பிரகாசம், செல்வம், இவர்கள் ஐவரைத் தவிர, மற்றவர்கள் எல்லாரும்,வரிசையாக முற்றத்தின் தரையில் வந்து உட்கார்ந்தனர்.
செல்வியும் வாழை இலையை வைத்து,அதன் மேல் தண்ணீரை தெளித்து செல்ல,சீதாவும்,பார்வதியும் சமைத்தவைகளை இலையிலும் பரிமாறினார்கள்.
அப்பொழுது,செல்வி,இதில் நீ சமைச்சது எதுனு வேலு கேட்க,மாமா.. நான் சும்மா எடுபுடி வேலை தான்,மெயின் பிச்சரை ஓட்டுனது எல்லாம் உங்கள் தாய்க்குலங்கள் தானென்றாள்.
ஹப்பாடா....அப்போ உசுருக்கு ஆபத்து இல்லை.நம்பி சாப்டலாம்டா என்ற வேலுவின் வார்த்தையை கேட்டு மற்றவர்கள் சிரிக்க,செல்வியோ கொலை வெறியில் அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.
ஏன் டா,குட்டி கிட்ட வம்பு பண்ணலைனா, தூக்கம் வராதோ என்றான் ஜான்?.
ஆமாடா....நீ வேண்டுமானால் ராவுக்கு தூங்க தாலாட்டு பாடு.நான் நல்லா நிம்மதியா தூங்குறேன்.முதல்ல சாப்ட்டு எந்திரிங்கடா.மூன்று ஐயனாரும் ஒன்னா கூடிருக்காங்க.கல்யாணம் பண்ணலை,காது குத்தலைனு பேசியே கொன்னுடுவாங்க.நாமளாம் அதுக்குள்ள சாப்ட்டு தப்பிக்கனும் என்றான் வேலு.
கிண்டல்,கேலிகளோடு சாப்பிட்டு முடித்து இவர்கள் எழவும்,வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
அந்த மாரியாத்தா புண்ணியத்துல,மாட்டாமல் தப்பிச்சோம்டா பனைமரம்.
இல்லை காதுல ரத்த ஆறே ஓடியிருக்கும்.
மாப்பு...நேரத்தை கடத்தாம சீக்கிரம் மாட்டை ஓட்டியாங்கடா,கோயிலுக்கு போகலாமென்று வேலு சொல்ல,யோவ் மாமா,எதுக்குயா சுடுதண்ணி காலுல கொட்டுன போல பதறி கிட்டு இருக்கனு நிலவன் கேட்கவும்,அதற்கு வேலுவோ,நீ போய் அந்த மூன்று மீசைங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வாயேன் என்றான்.
ஏன் மாமா?,ஏன் இப்படி? என் காது நல்லா இருக்குறது உனக்கு பொறுக்கலையா?.
இப்போ தெரியுது இல்லை,வாய மூடிகிட்டு வாடா என்றவன்,நீங்க என்னடா புதுப்பொண்ணு சமைஞ்சதை பார்த்த போல நிக்கிறீங்கனு அவர்கள் மூவரையும் முறைத்துப் பார்த்தான்.