Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
சீமக்கரை:
வண்டியில் கணம் இருந்தாலும்,"மேடு பள்ளம் பார்க்காமல் குதிரையைப் போல வேகமெடுத்து ஓடியது இரண்டு காளை மாடுகளும்".
இன்னும் ஐநூறூ அடி தூரத்திலிருக்கும் சுடுகாட்டு பாதையை கடந்து விட்டால் ஊருக்குள் செல்லும் வழியில் வெளிச்சம் வந்துவிடும்.அங்கிருந்து தான் தெரு விளக்கு இருக்கும் போஸ்ட் கம்பம் தொடங்குகின்றது.
வண்டியின் வேகத்திலிலும்,டயர்கள் கற்களின் மீது ஏறி இறங்கிய ஆட்டத்தில்,கரும்பு கட்டின் மேல் உறங்கி கொண்டிருந்தவர்களுக்கு விழிப்பு வந்தது.
என்ன மாமா இவ்வளவு வேகம் என்றவாறு அவர்கள் அருகில் நகர்ந்து வந்தான் வேலு.
பசிக்குதுனு சொன்னியேடா?.அதான் வேகமா வண்டிய ஓட்டுறேன் என்றவரின் பார்வையில் பட்டது, தூரத்தில் இருக்கும் உருவம்.அவரின் மேல் ஐய்யனார் சாமி இறங்குவதால், காத்து கருப்புலாம் கண்ணுக்கு தெரிந்து விடும்.யாருக்காவது ஊருக்குள் சேட்டை குணம் வந்தால்,"இவரிடம் தான் விபூதி போட்டுக்கொள்ள வருவார்கள்".
மாப்ளை...ரெண்டு பேரும் படுங்கடா என்றவர்,கழுத்தில் இருந்த தாயத்தை ஒரு நிமிடம் தொட்டு வணங்கி விட்டு, மீண்டும் மாட்டின் முதுகில் ஊசியால் குத்த,"முன்பை விட வேக மாக ஓடியது மாடுகள்".
இன்னும் பத்தடி தூரமே என்பதை கணக்கில் கொண்டவர்,அப்பா ஐய்யனாரே....உன் புள்ளைங்களுக்கு நீ தான்யா துணையா வரணுமென்று சத்தமிட்டு சொல்லிய படியே, அங்கிருக்கும் உருவத்தை பார்க்காதது போல வேகமாக வண்டியை ஓட்டினார்.
ஆனாலும் அவ்வுருவமோ மாடுகளின் கண்ணுக்கு முன் தெரிய, ஓடிக்கொண்டிருந்தவைகள் கத்த ஆரம்பித்து,இரண்டும் மிரள,கயிற்றை லாவகமாக இழுத்து பிடித்து சமாளித்து, வண்டியின் வேகத்தை சீராக்கியவர், எந்திரிங்கலே என்க,என்னாச்சு மாமா?என்றனர் வேலுவும்,இன்னொருவரும்.
"அதையெல்லாம் காலையில பேசிக்கலாம்".தூக்குறவனுங்களை எழுப்புங்க."ஊருக்குள்ள போகப்போறோம் என்றபடியே வண்டியை ஓட்டினார்".
ஒரு வழியாக எந்த அசம்பாவிதமும் இல்லாமல்,நள்ளிரவில் தெருவினுள் வந்து சேர்ந்தனர்.
"வண்டியை நேராக கதிரின் வீட்டிற்கே விட இவர்கள் வருகைக்காக தூங்காமல் அவர்கள் காத்திருந்தனர்.
வண்டியிலிருந்து அனைவரும் இறங்கிய பின்னர் மாடுகளை அவிழ்த்தவர்,அதற்கான தொட்டிகளில் இருந்த தண்ணீரை காட்ட,இரண்டு வாயில்லாத ஜீவன்களும் தாகத்தை தீர்த்துக்கொண்டது,.
பின்னர் மாடுகளை அதற்குரிய கவனையில் கட்டி விட்டு,அவர்களை தடவி கொடுத்தவர் காலையில் பாக்கலாம் என்று வீட்டிற்கு கிளம்ப, "சாப்ட்டு போடா தம்பி என்றார் வள்ளி அப்பாயி".
இருக்கட்டும் பெரிம்மா.."உன் மருமவ வாசலையே பார்த்து கிட்டு கிடப்பா", நான் போய்க்கிறேன் என்கவும் மற்றவர்களும் சொல்லிக்கொண்டு சென்றனர்.
வேலுவும் வீட்டுக்கு கிளம்புறேன் என்க,அடேய் இனி போய் என்ன சோறா கிண்ட போற?வந்து சாப்ட்டு படுடா என்றார் அப்பாயி.செல்லம்...உனக்கு இந்த மாமன் மேல எவ்வளவு பாசம் பாரு என்றவன்,இரு உன் மவ பாருக்கு ஒரு போன் பண்ணிக்குறேன் என்க, எல்லாம் சொல்லியாச்சுடா.வந்து சாப்டுங்க என்றார் பெருமாள்.
கதிரும்,வேலுவும் கை கால் கழுவி வர, இருவருக்கும் முன்னோர்களுக்கு படைக்க செய்திருந்த உணவுகளோடு, பரிமாறிவிட்டு அவனுங்களோடு ராதா,சீதா மற்றும் வளவன் மூவரும் சாப்பிட உட்கார்ந்தனர்.
நீங்க இன்னும் சாப்டாம என்ன பண்ணுறீங்கனு கதிர் கேட்க,சீதாவோ நீங்க வந்த பிறகு சாப்டலானு இருந்தோம் பா என்கவும் பின்னர் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்." மற்றவர்களோ அறைக்கு சென்று படுத்து விட்டனர்".
வேலு,கதிர்,வளவன் மூவரும் தலகாணியோடு டீவிக்கு முன்பு இருக்கும் தரையில் பாயை விரித்து, படுத்தவுடனே அசதியில் தூங்கி விட்டனர்.
"செங்கதிர்களை அனைவருக்கும் சமமாக காட்சியளித்தபடியே,கிழக்கே உதயமாக தொடங்கியது சூரியன்".
அதிகாலையிலே எழுந்த செல்வி, அம்மாக்கள் உதவியோடு வாசலில் சாணம் தெளித்து,கூட்டி முடித்த பின், கோலத்தை போட்டவள்,அதன் மேலே கலர் பொடிகளால் வண்ணம் தீட்டி விட்டு,மாட்டிலிருந்து அதிகாலையில் வரும் கோமியத்தை பிடிக்க கொட்டகைக்குள் சென்றாள்.
சிறிது நேரத்திலே கோமியம் வருவது தெரிய,கையிலிருந்த சொம்பால் புடித்தவள்,மாட்டு கொட்டகையின் ஓரமாக வைத்து மூடி விட்டு,வெளியே இருக்கும் பைப்பில் கையை கழுவி உள்ளே வர,மகளுக்கு பிடித்த சூடான காஃபியை நீட்டினர்.
"அம்மானா அம்மா தான் என்று ராதாவை போய் கட்டி சொல்ல",போய் பல்லை விளக்கிட்டு குடி என்றார் சீதா.
அதானே,என்னமோ நீயே போட்ட போல ரூல்ஸ் பேசுற?,போடி,போடி என்றவாரே ஆக வேண்டிய வேலையை பார்க்க சென்றார்.ஆவி பறக்கும் காஃபி கப்போடு ஹாலிற்கு வந்தவளின் கண்ணில் தூங்கும் முவரும் பட்டனர்.
"யாரு இங்கே துங்குறா??", என்று யோசித்துக்கொண்டே வந்தவள், முதலில் தூங்கிக்கொண்டிருப்பவன், போர்வையை விலக்கி பார்க்க, வளவனாக இருந்தது.
என்னா அண்ணன் இங்கே தூங்குது???என்றபடியே,அடுத்த போர்வையை விலக்க,அந்த நேரம் பார்த்து வேலுக்கு விழிப்பு வர முகத்துக்கு மேலே தலைகீழாக தெரியும் உருவத்தை பார்த்தவன்,அய்யோ..."பேய் பேய் என்று அலறி எழுந்தான்".
அவன் எழுந்த வேகத்தில்,செல்வியின் கையிலிருந்த சூடான காஃபி தட்டி, வேலுவின் மேலேயே விழ "அய்யோ கொலை கொலை என்று மீண்டும் கத்தினான்".
வேலுவின் சத்தத்தில் தூங்கிக்கொண்டிருந்த இருவரும் அடித்து புடித்து எழுந்து பார்க்க,அங்கே, முகத்துக்கு நேற்று இரவு,கடலைமாவும் மஞ்சளும் கலந்த போட்ட பேஸ் பேக்கை கழுவாமல் நின்று கொண்டிருந்தாள் செல்வி.
அடேய்.... என்ற பெருமாள் சத்தத்தில் கண் திறந்து பார்த்தான் வேலு.
ஏன் யா இப்படி?? என்று வளவன் கேட்க, ஏண்டா....,நான் என்னமோ வேண்டும்னு பண்ணுன போல ஏன்,நோன்னு...?.
இந்த பேய் தான் டா மூஞ்ச கிட்ட வந்து காட்டுச்சி என்று செல்வியை காட்ட, அவளை முறைத்து பார்த்தான் கதிர். அண்ணா....அது வந்து என்று செல்வி பயப்பட...தங்கையை ஒரு முறை முறைத்தவன், போய் மூஞ்ச கழுவு என்று சொல்லி விட்டு, படியில் ஏறி மேலே செல்ல,இவர்கள் இருவரும் கீழே படுத்து,விட்ட தூக்கத்தை தொடர்ந்தனர்.
நல்லவேளைடி தப்பிச்சனு சொல்லிக்கொண்டே அய்யோஓஓஓ காஃபி போச்சே என்றவள்,மீண்டும் வேலுவிடம் வந்து மாமா,மாமா என்று எழுப்ப,என்னடி என்றவாரே போர்வையை விலக்கி பார்த்தான்.
காஃபி ஊத்திட்டே என்று சொல்ல, அதை எப்போடி வந்து கேட்குற?, எங்கெங்கோ வெந்துச்சோ போ.கொஞ்ச தூங்க விடு செல்வி என்க, சரி மாமா என்று அங்கிருந்து சென்றாள்.
சூரியன் தன் முழு உருவத்தோடு கிழக்கே வந்தது.அவரவர் வீட்டில் வழக்கம் போல வேலையை தொடங்கினர்.
அப்பொழுது ஊருக்குள் தண்டோரா சத்தம் கேட்டது.என்ன சொல்ல போகிறார் என்று அங்கிருப்பவர்களுக்கு தெரிந்தாலும்,மக்களோ அவர் சொல்லப்போவதை வெளியே வந்து கேட்டனர்.
இதனால் சீமக்கரை மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்,
இன்று தைத்திங்கள் முதல் நாளாகிய பொங்கல் திருநாளை முன்னிட்டு,காலம் காலமாக முன்னோர்கள் கொண்டாடிச் சென்ற வழக்கம் போல,மாலை நான்கு மணிக்கு மேலே,அனைவரும் அவரவர் வீட்டில் செய்த பொங்கலோடு, படையலுக்கு கோயில் கிட்ட வந்து விடுமாறு பஞ்சாயத்து உத்தரவுங்கோ.....,என்று சொல்லிக்கொண்டே சென்றார்.
கரும்பு கட்டுகளை எடுத்து போக நேற்று போன ஆறு பேரும் கதிரின் வீட்டிற்கு வர,மேலிருந்து அவர்கள் வருவதை பார்த்து விட்டு கீழே இறங்கி வந்தான் கதிர்.
தம்பி....கரும்பை பிரித்து கொடுத்துட்டு, எவ்வளவு ஆகும்னு கணக்கு சொல்லுப்பா என்றார் ஒருவர்.
அண்ணே...முதல்ல கரும்ப கொண்டு போய் புள்ளைங்கள்ட கொடுங்கண்ணா. பொறவு கணக்கு பாக்கலாமென்க,இருக்கட்டும் தம்பி என்றார்.
பின்னர் அவர்கள் ஏற்கெனவே சொல்லி வைத்த போல,அவர்களுக்கான கரும்பு கட்டுகளை அனைவரும் பிரித்து எடுத்து விட்டு,கதிருக்கும் வேலுக்கும் உரிய பங்கை மீதம் வைத்து,எவ்வளவு என கணக்கு பண்ணி பணத்தை கொடுத்து கரும்பை எடுத்து சென்றனர்.
வண்டி ஓட்டிய பூசாரி மட்டும் பிரகாசத்தின் அருகில் சென்று,இராவுல மாடு கத்துச்சாப்பா?என்றார்.
ஆமாப்பா...உன் பெரியம்மாவும் நானும் வந்து பார்த்தோம் எப்படியும் ரெண்டு மணி இருக்கும் பிறகு சத்தம் இல்லை என்றவர்,ஏம்பா?.
அவரிடம் நேற்று இரவு வரும் வழியில் நடந்ததை சொல்லியவர்,நாளைக்கு மூக்கனாங்கயிரு மாத்தும் போது,நம்ப ஐய்யனார்கிட்ட வேண்டி சங்கை ரெண்டு கழுத்திலும் கட்டி விடலாம் பெரியப்பா,சரிப்பா செஞ்சிடலாம் என்றார் பிரகாசம்.
சீமக்கரை ஊர் மக்கள்...
அவரவர் வீட்டின் முன்பு இருக்கும் இடத்தில் கரும்பால் பந்தலிட்டு,வருடா வருடம் தரையில் குழி தோண்டி,அடுப்பு உண்டாக்கும் அதே இடத்தில் தோண்டினர்.ஒரு வாரத்திற்கு முன்பே செம்மண்ணால் மூன்று முட்டுகள் கொண்ட அடுப்புகளை செய்து காய வைத்திருந்தனர்.
அதை அடுப்புக்கு தோண்டிய குழியின் மூன்று புறமும் வைத்து விட்டு,முதல் நாள் வாங்கி வந்த மண் பானையில் , விபூதி பட்டை போட்டு,அதன் கழுத்தில் மஞ்சள்,இஞ்சி கொத்துக்களை முடிந்து, அடுப்பில் வைத்து,அதனுல் பாலை ஊற்றி,குழியில் விறகுகளை வைத்து நெருப்பை மூட்டினர்.
பால் சூடாகியதும்,தண்ணீரை ஊற்றி கொதி வந்தது.பின்,கழுவி வைத்த பச்சரிசி,பயத்தம் பருப்பை அதில் கொட்டி வெந்து பொங்கி வழிய,வீட்டில் இருந்தவர்களோ பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியாக கத்தினார்கள்.
இதில் சிறு பிள்ளைகளோ, எங்கள் வீட்டில் தான் முதலில் பொங்கியது என்று போட்டி ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.
தாமரை வீடு...
தங்கள் வீட்டு வாசலில் "மகளை விட்டே பொங்கல் செய்ய சொல்லி விட்டார் கவிதா".
தாமரையும் வெந்த பச்சரிசி குழைவில் இடித்த வெள்ளத்தை போட்டு நன்கு கிண்டி,இன்னொரு கடாயில் நெய் ஊற்றி,அதில் முந்திரி, திராட்சைகளை வறுத்து,அதை பொங்கலில் கொட்டி இறக்கி வைத்தாள்.
"கடந்த பதினைந்து வருடமாக, கவிதாவும்,அன்பழகனும் இந்த பூஜையில் கலந்து கொள்வதில்லை".
பொங்கலை மட்டும் தயார் செய்து மாமியார்,மாமனாரிடம் கொடுத்து, அவர்களோடு பிள்ளைகளை அனுப்பி வைத்து விடுவார்.மணி எத்தனைனு பாருப்பா என்று கலா அப்பாயி சொல்ல,மூன்று ஆகின்றது என்றான்.
இரண்டு பேத்திகளிடமும் தலைய சீவிகிட்டு கோயிலுக்கு போக தயாராகுங்கம்மா என்றார் .
சரி அப்பாயி என்றபடியே, "அக்கா, தங்கை இருவரும் அவரவர் அறையின் உள்ளே சென்றனர்".
வண்டியில் கணம் இருந்தாலும்,"மேடு பள்ளம் பார்க்காமல் குதிரையைப் போல வேகமெடுத்து ஓடியது இரண்டு காளை மாடுகளும்".
இன்னும் ஐநூறூ அடி தூரத்திலிருக்கும் சுடுகாட்டு பாதையை கடந்து விட்டால் ஊருக்குள் செல்லும் வழியில் வெளிச்சம் வந்துவிடும்.அங்கிருந்து தான் தெரு விளக்கு இருக்கும் போஸ்ட் கம்பம் தொடங்குகின்றது.
வண்டியின் வேகத்திலிலும்,டயர்கள் கற்களின் மீது ஏறி இறங்கிய ஆட்டத்தில்,கரும்பு கட்டின் மேல் உறங்கி கொண்டிருந்தவர்களுக்கு விழிப்பு வந்தது.
என்ன மாமா இவ்வளவு வேகம் என்றவாறு அவர்கள் அருகில் நகர்ந்து வந்தான் வேலு.
பசிக்குதுனு சொன்னியேடா?.அதான் வேகமா வண்டிய ஓட்டுறேன் என்றவரின் பார்வையில் பட்டது, தூரத்தில் இருக்கும் உருவம்.அவரின் மேல் ஐய்யனார் சாமி இறங்குவதால், காத்து கருப்புலாம் கண்ணுக்கு தெரிந்து விடும்.யாருக்காவது ஊருக்குள் சேட்டை குணம் வந்தால்,"இவரிடம் தான் விபூதி போட்டுக்கொள்ள வருவார்கள்".
மாப்ளை...ரெண்டு பேரும் படுங்கடா என்றவர்,கழுத்தில் இருந்த தாயத்தை ஒரு நிமிடம் தொட்டு வணங்கி விட்டு, மீண்டும் மாட்டின் முதுகில் ஊசியால் குத்த,"முன்பை விட வேக மாக ஓடியது மாடுகள்".
இன்னும் பத்தடி தூரமே என்பதை கணக்கில் கொண்டவர்,அப்பா ஐய்யனாரே....உன் புள்ளைங்களுக்கு நீ தான்யா துணையா வரணுமென்று சத்தமிட்டு சொல்லிய படியே, அங்கிருக்கும் உருவத்தை பார்க்காதது போல வேகமாக வண்டியை ஓட்டினார்.
ஆனாலும் அவ்வுருவமோ மாடுகளின் கண்ணுக்கு முன் தெரிய, ஓடிக்கொண்டிருந்தவைகள் கத்த ஆரம்பித்து,இரண்டும் மிரள,கயிற்றை லாவகமாக இழுத்து பிடித்து சமாளித்து, வண்டியின் வேகத்தை சீராக்கியவர், எந்திரிங்கலே என்க,என்னாச்சு மாமா?என்றனர் வேலுவும்,இன்னொருவரும்.
"அதையெல்லாம் காலையில பேசிக்கலாம்".தூக்குறவனுங்களை எழுப்புங்க."ஊருக்குள்ள போகப்போறோம் என்றபடியே வண்டியை ஓட்டினார்".
ஒரு வழியாக எந்த அசம்பாவிதமும் இல்லாமல்,நள்ளிரவில் தெருவினுள் வந்து சேர்ந்தனர்.
"வண்டியை நேராக கதிரின் வீட்டிற்கே விட இவர்கள் வருகைக்காக தூங்காமல் அவர்கள் காத்திருந்தனர்.
வண்டியிலிருந்து அனைவரும் இறங்கிய பின்னர் மாடுகளை அவிழ்த்தவர்,அதற்கான தொட்டிகளில் இருந்த தண்ணீரை காட்ட,இரண்டு வாயில்லாத ஜீவன்களும் தாகத்தை தீர்த்துக்கொண்டது,.
பின்னர் மாடுகளை அதற்குரிய கவனையில் கட்டி விட்டு,அவர்களை தடவி கொடுத்தவர் காலையில் பாக்கலாம் என்று வீட்டிற்கு கிளம்ப, "சாப்ட்டு போடா தம்பி என்றார் வள்ளி அப்பாயி".
இருக்கட்டும் பெரிம்மா.."உன் மருமவ வாசலையே பார்த்து கிட்டு கிடப்பா", நான் போய்க்கிறேன் என்கவும் மற்றவர்களும் சொல்லிக்கொண்டு சென்றனர்.
வேலுவும் வீட்டுக்கு கிளம்புறேன் என்க,அடேய் இனி போய் என்ன சோறா கிண்ட போற?வந்து சாப்ட்டு படுடா என்றார் அப்பாயி.செல்லம்...உனக்கு இந்த மாமன் மேல எவ்வளவு பாசம் பாரு என்றவன்,இரு உன் மவ பாருக்கு ஒரு போன் பண்ணிக்குறேன் என்க, எல்லாம் சொல்லியாச்சுடா.வந்து சாப்டுங்க என்றார் பெருமாள்.
கதிரும்,வேலுவும் கை கால் கழுவி வர, இருவருக்கும் முன்னோர்களுக்கு படைக்க செய்திருந்த உணவுகளோடு, பரிமாறிவிட்டு அவனுங்களோடு ராதா,சீதா மற்றும் வளவன் மூவரும் சாப்பிட உட்கார்ந்தனர்.
நீங்க இன்னும் சாப்டாம என்ன பண்ணுறீங்கனு கதிர் கேட்க,சீதாவோ நீங்க வந்த பிறகு சாப்டலானு இருந்தோம் பா என்கவும் பின்னர் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்." மற்றவர்களோ அறைக்கு சென்று படுத்து விட்டனர்".
வேலு,கதிர்,வளவன் மூவரும் தலகாணியோடு டீவிக்கு முன்பு இருக்கும் தரையில் பாயை விரித்து, படுத்தவுடனே அசதியில் தூங்கி விட்டனர்.
"செங்கதிர்களை அனைவருக்கும் சமமாக காட்சியளித்தபடியே,கிழக்கே உதயமாக தொடங்கியது சூரியன்".
அதிகாலையிலே எழுந்த செல்வி, அம்மாக்கள் உதவியோடு வாசலில் சாணம் தெளித்து,கூட்டி முடித்த பின், கோலத்தை போட்டவள்,அதன் மேலே கலர் பொடிகளால் வண்ணம் தீட்டி விட்டு,மாட்டிலிருந்து அதிகாலையில் வரும் கோமியத்தை பிடிக்க கொட்டகைக்குள் சென்றாள்.
சிறிது நேரத்திலே கோமியம் வருவது தெரிய,கையிலிருந்த சொம்பால் புடித்தவள்,மாட்டு கொட்டகையின் ஓரமாக வைத்து மூடி விட்டு,வெளியே இருக்கும் பைப்பில் கையை கழுவி உள்ளே வர,மகளுக்கு பிடித்த சூடான காஃபியை நீட்டினர்.
"அம்மானா அம்மா தான் என்று ராதாவை போய் கட்டி சொல்ல",போய் பல்லை விளக்கிட்டு குடி என்றார் சீதா.
அதானே,என்னமோ நீயே போட்ட போல ரூல்ஸ் பேசுற?,போடி,போடி என்றவாரே ஆக வேண்டிய வேலையை பார்க்க சென்றார்.ஆவி பறக்கும் காஃபி கப்போடு ஹாலிற்கு வந்தவளின் கண்ணில் தூங்கும் முவரும் பட்டனர்.
"யாரு இங்கே துங்குறா??", என்று யோசித்துக்கொண்டே வந்தவள், முதலில் தூங்கிக்கொண்டிருப்பவன், போர்வையை விலக்கி பார்க்க, வளவனாக இருந்தது.
என்னா அண்ணன் இங்கே தூங்குது???என்றபடியே,அடுத்த போர்வையை விலக்க,அந்த நேரம் பார்த்து வேலுக்கு விழிப்பு வர முகத்துக்கு மேலே தலைகீழாக தெரியும் உருவத்தை பார்த்தவன்,அய்யோ..."பேய் பேய் என்று அலறி எழுந்தான்".
அவன் எழுந்த வேகத்தில்,செல்வியின் கையிலிருந்த சூடான காஃபி தட்டி, வேலுவின் மேலேயே விழ "அய்யோ கொலை கொலை என்று மீண்டும் கத்தினான்".
வேலுவின் சத்தத்தில் தூங்கிக்கொண்டிருந்த இருவரும் அடித்து புடித்து எழுந்து பார்க்க,அங்கே, முகத்துக்கு நேற்று இரவு,கடலைமாவும் மஞ்சளும் கலந்த போட்ட பேஸ் பேக்கை கழுவாமல் நின்று கொண்டிருந்தாள் செல்வி.
அடேய்.... என்ற பெருமாள் சத்தத்தில் கண் திறந்து பார்த்தான் வேலு.
ஏன் யா இப்படி?? என்று வளவன் கேட்க, ஏண்டா....,நான் என்னமோ வேண்டும்னு பண்ணுன போல ஏன்,நோன்னு...?.
இந்த பேய் தான் டா மூஞ்ச கிட்ட வந்து காட்டுச்சி என்று செல்வியை காட்ட, அவளை முறைத்து பார்த்தான் கதிர். அண்ணா....அது வந்து என்று செல்வி பயப்பட...தங்கையை ஒரு முறை முறைத்தவன், போய் மூஞ்ச கழுவு என்று சொல்லி விட்டு, படியில் ஏறி மேலே செல்ல,இவர்கள் இருவரும் கீழே படுத்து,விட்ட தூக்கத்தை தொடர்ந்தனர்.
நல்லவேளைடி தப்பிச்சனு சொல்லிக்கொண்டே அய்யோஓஓஓ காஃபி போச்சே என்றவள்,மீண்டும் வேலுவிடம் வந்து மாமா,மாமா என்று எழுப்ப,என்னடி என்றவாரே போர்வையை விலக்கி பார்த்தான்.
காஃபி ஊத்திட்டே என்று சொல்ல, அதை எப்போடி வந்து கேட்குற?, எங்கெங்கோ வெந்துச்சோ போ.கொஞ்ச தூங்க விடு செல்வி என்க, சரி மாமா என்று அங்கிருந்து சென்றாள்.
சூரியன் தன் முழு உருவத்தோடு கிழக்கே வந்தது.அவரவர் வீட்டில் வழக்கம் போல வேலையை தொடங்கினர்.
அப்பொழுது ஊருக்குள் தண்டோரா சத்தம் கேட்டது.என்ன சொல்ல போகிறார் என்று அங்கிருப்பவர்களுக்கு தெரிந்தாலும்,மக்களோ அவர் சொல்லப்போவதை வெளியே வந்து கேட்டனர்.
இதனால் சீமக்கரை மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்,
இன்று தைத்திங்கள் முதல் நாளாகிய பொங்கல் திருநாளை முன்னிட்டு,காலம் காலமாக முன்னோர்கள் கொண்டாடிச் சென்ற வழக்கம் போல,மாலை நான்கு மணிக்கு மேலே,அனைவரும் அவரவர் வீட்டில் செய்த பொங்கலோடு, படையலுக்கு கோயில் கிட்ட வந்து விடுமாறு பஞ்சாயத்து உத்தரவுங்கோ.....,என்று சொல்லிக்கொண்டே சென்றார்.
கரும்பு கட்டுகளை எடுத்து போக நேற்று போன ஆறு பேரும் கதிரின் வீட்டிற்கு வர,மேலிருந்து அவர்கள் வருவதை பார்த்து விட்டு கீழே இறங்கி வந்தான் கதிர்.
தம்பி....கரும்பை பிரித்து கொடுத்துட்டு, எவ்வளவு ஆகும்னு கணக்கு சொல்லுப்பா என்றார் ஒருவர்.
அண்ணே...முதல்ல கரும்ப கொண்டு போய் புள்ளைங்கள்ட கொடுங்கண்ணா. பொறவு கணக்கு பாக்கலாமென்க,இருக்கட்டும் தம்பி என்றார்.
பின்னர் அவர்கள் ஏற்கெனவே சொல்லி வைத்த போல,அவர்களுக்கான கரும்பு கட்டுகளை அனைவரும் பிரித்து எடுத்து விட்டு,கதிருக்கும் வேலுக்கும் உரிய பங்கை மீதம் வைத்து,எவ்வளவு என கணக்கு பண்ணி பணத்தை கொடுத்து கரும்பை எடுத்து சென்றனர்.
வண்டி ஓட்டிய பூசாரி மட்டும் பிரகாசத்தின் அருகில் சென்று,இராவுல மாடு கத்துச்சாப்பா?என்றார்.
ஆமாப்பா...உன் பெரியம்மாவும் நானும் வந்து பார்த்தோம் எப்படியும் ரெண்டு மணி இருக்கும் பிறகு சத்தம் இல்லை என்றவர்,ஏம்பா?.
அவரிடம் நேற்று இரவு வரும் வழியில் நடந்ததை சொல்லியவர்,நாளைக்கு மூக்கனாங்கயிரு மாத்தும் போது,நம்ப ஐய்யனார்கிட்ட வேண்டி சங்கை ரெண்டு கழுத்திலும் கட்டி விடலாம் பெரியப்பா,சரிப்பா செஞ்சிடலாம் என்றார் பிரகாசம்.
சீமக்கரை ஊர் மக்கள்...
அவரவர் வீட்டின் முன்பு இருக்கும் இடத்தில் கரும்பால் பந்தலிட்டு,வருடா வருடம் தரையில் குழி தோண்டி,அடுப்பு உண்டாக்கும் அதே இடத்தில் தோண்டினர்.ஒரு வாரத்திற்கு முன்பே செம்மண்ணால் மூன்று முட்டுகள் கொண்ட அடுப்புகளை செய்து காய வைத்திருந்தனர்.
அதை அடுப்புக்கு தோண்டிய குழியின் மூன்று புறமும் வைத்து விட்டு,முதல் நாள் வாங்கி வந்த மண் பானையில் , விபூதி பட்டை போட்டு,அதன் கழுத்தில் மஞ்சள்,இஞ்சி கொத்துக்களை முடிந்து, அடுப்பில் வைத்து,அதனுல் பாலை ஊற்றி,குழியில் விறகுகளை வைத்து நெருப்பை மூட்டினர்.
பால் சூடாகியதும்,தண்ணீரை ஊற்றி கொதி வந்தது.பின்,கழுவி வைத்த பச்சரிசி,பயத்தம் பருப்பை அதில் கொட்டி வெந்து பொங்கி வழிய,வீட்டில் இருந்தவர்களோ பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியாக கத்தினார்கள்.
இதில் சிறு பிள்ளைகளோ, எங்கள் வீட்டில் தான் முதலில் பொங்கியது என்று போட்டி ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.
தாமரை வீடு...
தங்கள் வீட்டு வாசலில் "மகளை விட்டே பொங்கல் செய்ய சொல்லி விட்டார் கவிதா".
தாமரையும் வெந்த பச்சரிசி குழைவில் இடித்த வெள்ளத்தை போட்டு நன்கு கிண்டி,இன்னொரு கடாயில் நெய் ஊற்றி,அதில் முந்திரி, திராட்சைகளை வறுத்து,அதை பொங்கலில் கொட்டி இறக்கி வைத்தாள்.
"கடந்த பதினைந்து வருடமாக, கவிதாவும்,அன்பழகனும் இந்த பூஜையில் கலந்து கொள்வதில்லை".
பொங்கலை மட்டும் தயார் செய்து மாமியார்,மாமனாரிடம் கொடுத்து, அவர்களோடு பிள்ளைகளை அனுப்பி வைத்து விடுவார்.மணி எத்தனைனு பாருப்பா என்று கலா அப்பாயி சொல்ல,மூன்று ஆகின்றது என்றான்.
இரண்டு பேத்திகளிடமும் தலைய சீவிகிட்டு கோயிலுக்கு போக தயாராகுங்கம்மா என்றார் .
சரி அப்பாயி என்றபடியே, "அக்கா, தங்கை இருவரும் அவரவர் அறையின் உள்ளே சென்றனர்".