Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
சீமக்கரை!
"கல்யாணம் பண்ணும் வயசு வந்துருச்சு இன்னும் பொருப்பு இல்ல ரெண்டு பயலுக்கும்", என்று திட்டிக் கொண்டே வேலுவின் அப்பா வரப்பில் நடந்து செல்ல,அவருக்கு எதிரில் அன்பழகன் வந்து கொண்டிருந்தார்.
என்னணா,நம்ம வயல்ல இன்னைக்கு அறுவடை போல என்று அன்பு கேட்க?,ஆமாடா தம்பி,அங்க கடலை பறிக்குறதுலாம் முடிச்சிட்டியா?
முடிஞ்சிட்டுணா.
"இன்னும் கம்பங்கொள்ளை தான் முடியலை.அறுத்துக்கிட்டு இருக்கு".
அதற்கு ஓஓஓஓ என்றவர்,உன் அண்ணிகாரி நம்ப பெரிய புள்ளைக்கு மாப்ளை வந்துருக்குனு சொன்னாள் என்க, "ஆமாணா".
"நானே நேர்ல வந்து பாக்கனும்னு இருந்தேன்.அதுக்குள்ள அண்ணி வீட்டுக்கு வந்துட்டாங்க என்றவர்,ரொம்ப நல்ல பையன் தான்ணா".
கோயம்புத்தூரில் வேலை பார்த்துட்டு இருக்கான்.வீட்டுக்கு மூத்த புள்ளைனு மருது குடும்பத்தை பற்றி சொல்ல, அனைத்தையும் கேட்டவர் பரவாயில்லை.வேதாக்கு தெரிஞ்ச குடும்பமா இருக்கு.இது போதும் நம்பி குடுக்கலாம்.
"என்ன நம்ப பங்காளி பயலுங்க தான் கூறு கெட்ட தனமா சாதி,கொலம், கோத்திரம்னு இழுப்பானுங்க"
ஏன் அன்பு,கவிதாவுக்கு அண்ணன் ஊட்டுல பொண்ணு குடுக்கனும் எண்ணம் இருக்கானு விசாரிச்சியா?
"இல்லைணா...நான் அப்படி ஒன்னும் கேட்கலையே?,ம்ம் நாளைக்கு ஒரு பேச்சு வரக்கூடாது டா".
அண்ணா இரண்டு குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தையில்லைனு உனக்கு தெரியாதா?நீ சொல்றது வாஸ்தவம்தான் தம்பி.ஆயிரம் தான் இருந்தாலும் முதல் உரிமை மாமா வீட்டுக்கு தான் அதை நீயும்,நானும் மறுக்க முடியாமா சொல்லு?என்க, முடியாது தான் ணா".
ஆனால்.."கவிதாவுக்கு இப்படி எண்ணம் இருக்குற போல தெரியலைணா?".
அதற்கு செல்வமோ,உன் அண்ணிகாரியும் சொன்னா டா, "தாமரைய பெரிய மருமவனுக்கு கட்டினா நல்லா இருக்கும்னு".
"என்னாஆஆஆ!!...கதிருக்காணா??என அன்பு கேட்க,ஆமாடா தம்பி.ஊட்டுக்கு மூத்தவன் கதிரு தானே".
ஆனால்,"யாருக்கு எங்க முடிச்சினு மேல இருக்கவன் போட்டுருக்கான்".அவன் போட்ட படியே தான் நடக்கும்.நீ எதுக்கும் ஒரு வார்த்தை கவிதாவை கேட்டுக்க?.
"இந்த பொம்பளைங்க எப்ப மாத்தி பேசுவாளுவோனு தெரியாதே".நீ சொல்லுறதும் சரி தான் ணா.பின்னர் மேலும் சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரவர் வேலையை பார்க்கச் சென்றனர்.
"வேலுவின் தந்தை செல்வம் சொன்னதைப் பற்றி அன்பும் யோசித்துக் கொண்டே வரப்பில் நடந்தார்".
"ஒருவேளை கவிதாவிற்கு அண்ணன் மகனுக்கு பொண்ணு கொடுக்கணும் என்று எண்ணம் இருந்திருக்குமா?
நாம் ஏன் இத பத்தி யோசிக்கவே இல்லை?நல்ல வேளை அண்ணன் இதை பற்றி பேசிச்சி.ஆனால், கவிதாவுக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தால் நம்ம கிட்ட சொல்லிருப்பாளே?.
"சரி...எதுக்கு இதை மனசுல வச்சுக்கனும்,நேரடியாக கவிதா கிட்டயே கேட்டு விடலாமென்ற முடிவோடு வீட்டை நோக்கிச் சென்றார்".
"போகி வேலைகள் ஒவ்வொரு வீட்டிலும் நடந்து கொண்டிருந்தது".சிலர் வீட்டை சுத்தம் பண்ணிக்கொண்டும்,சிலர் வீட்டுக்கு சுண்ணாம்பு அடித்துக் கொண்டும்,ஒரு சில வீடுகளில் வீட்டு பொருட்களை கழுவிக் கொண்டிருந்தனர்.இதையெல்லாம் பார்த்துக்கொண்டே அன்புவும் வந்தார்.
"பொங்கல் பண்டிகை எப்போதும் கிராமத்தில் விமர்சையாக கொண்டாடப்படுவதால் ஒவ்வொரு வீடும் வண்ணங்கள் பூசிக்கொண்டு பார்வைக்கு அவ்வளவு அழகாக காட்சியளிக்கும்".
"வேலைக்காக வெளி ஊருக்கு சென்றிருந்தவர்களெல்லாரும் பொங்கலுக்கு தான் லீவ் வாங்கிக்கொண்டு வருவார்கள்".
"தனது வீட்டுக்கு வந்தவர்,கவிதா என்று கூப்பிட,துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துக்கொண்டிருந்தவர்,இதோ வரேங்க என்றபடியே வர,தங்களது தோட்டத்தில் வீட்டுக்காக பறித்து எடுத்து வந்து காய்கறிகளை மனைவியிடம் கொடுத்தவர்,கவிதா உன்கிட்ட ஒன்னு கேட்கனும்".
"கணவரிடமிருந்து காய்கறி பையை வாங்கியவர்,சொல்லுங்கள் என்ன விஷயம்?,ஒன்று கேட்டால் தப்பா எடுத்துக்க மாட்டியே?
அட...எதுக்குங்க இப்படி?
"என்னன்னு சொல்லுங்க,நிறைய வேலை கடக்கு".
"அது வந்துமா...உன் அண்ணன் வீட்டுக்கு பொண்ணு கொடுக்கனும்னு எதாவது எண்ணம் இருக்கா?என்க,எனக்கு ஏதுங்க அண்ணன்?".
அக்காளுங்க தானே.அதும் ஒருத்தி உசுரோட இருக்காளானே தெரியலை?, இன்னெருத்தி தான் பார்வதி அக்கா.ம் னு நான் சுருண்டு படுத்தாலும் அம்மாவா ஓடி வருவாள்.
"எனக்கு நீங்க சொல்லுற போல யாரும் இல்லைங்க" என்று ஓரே வார்த்தையில் கணவர் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லி அடுத்த கேள்விக்கு இடமில்லாமல் வாயை அடைத்து விட்டார்".
மனைவியிடமிருந்து வந்த பதிலை தெரிந்து கொண்டவருக்கு மனது திருப்தியாக இருந்தது.
'நல்ல வேளை கவிதாவிற்கு இப்படி ஒரு எண்ணம் இல்லையே'னு உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவர்,எங்கே புள்ளைங்கள காணும்?என்க, அக்காளும்,தங்கையும் வீட்ல இருக்குற பாத்திரங்களை கழுவிட்டு இருக்காளுங்க.
"ஏன்டி, உனக்கு அறிவு இருக்கா? இந்த வருஷம் பொங்கலுக்கு தான் புள்ளை நம்ப கூட இருக்கு. இந்த நேரத்துல போய் இதப்போல வேலையெல்லாம் செய்ய சொல்லிருக்கியே என்ன பொம்பளை நீ?" என மனைவியை திட்ட, போதும் நிறுத்துங்க முதல்ல".
"மனைவியின் சத்தத்தில் அமைதியானவரை பார்த்து முறைத்தவர்,இதையெல்லாம் போய் உங்க மவளுங்க கிட்ட கேளுங்க என்று உள்ளே சென்று விட்டார்".
"கொஞ்சம் ஓவராதான் பேசிட்டோமோ?" என முணுமுணுத்துக்கொண்டே தோட்டத்திற்கு சென்றார்.
கிணற்றடியின் கீழே போட்டிருக்கும் சிமெண்ட் தரையில், ஆளுக்கு ஒரு மணையில் அமர்ந்து கொண்டு, அல்லியும் தாமரையும் பரணிலிருந்து இறக்கிய பாத்திரங்களையெல்லாம், ஒருத்தி சோப்பு போட்டு தேய்த்து கொடுக்க, இன்னொருத்தி கழுவி காய வைப்பதுமாக இருந்தார்கள்.
மரப்பொருட்களை எல்லாம் சிவா சுத்தம் பண்ணி கொண்டிருந்தான். கலா அப்பாயியும், தாத்தாவும் தேவையற்ற பேப்பர்களையும், புத்தகங்களையும் தனியாக பிரித்து எடுத்துக் கொண்டிருந்தனர்.
அங்க வந்த அன்பு, "ஏம்மா நானும் உங்க அம்மாவும் நைட்ல இந்த வேலையெல்லாம் பண்ணிப்போம் நீங்க ஏன் இப்படி சிரமப்படுறீங்க?"
"இதுல என்னப்பா இருக்கு?" என்றாள் தாமரை.
"பின்னர், அன்புவும் அவர்களோடு சேர்ந்து சுத்தம் பண்ண தொடங்கினார்".
அப்பொழுது,அக்கா இந்த வருஷம் பொங்கலுக்கு தான் இங்க எங்களோடு இருப்ப."அடுத்த வருஷம் மருது அண்ணா கூட கொண்டாடுவ என்றாள் அல்லி".
"அடியேய் சீரங்கத்து சிலுக்கி செங்காத்து முறுக்கி",அக்காவ கட்டிக்க போறவனை எப்படி கூப்பிடனும்னு கூட தெரிய துப்பு இல்லை,வாயப்பாரு வாடி வாசல் வரை என்றார் கலா அப்பாயி.
அதானே...என்னை எதாச்சும் சொல்லலை என்றால் உன் தலை தான் வெடிச்சிடுமே என்றவள்,ஏன் தாத்தா, இந்த உலகத்துல உனக்கு பொண்ணே கிடைக்கலையா?என்றாள்.
கதிர்-வேலு...
"மச்சான், அத்தை கிட்ட டீ வைக்கு சொல்லிருக்காராம்,அதையும், மோரையும் வாங்கிட்டு வந்துரு. நான் போய் வண்டியை எடுத்துட்டு வரேனென்று கதிர் சொல்ல, சரிடா என்று இருவரும் அவரவர் வீடு இருக்கும் தெருவிற்குள் பிரிந்து சென்றனர்.
"தனது அறைக்கு வந்த கதிருக்கு தாமரை மேல் கட்டுக்கடங்காத கோபம் வந்தது".
"ஏன்?மகாராணி கோலம் போட எழுந்து வர மாட்டாளா?".
" பெரிய இவ,அந்த அரைக்காபடிய கோலம் போட சொல்லிட்டு இவ வீட்டுக்குள்ளவே இருக்காப்போலனு திட்டிக்கொண்டே வண்டி சாவியை எடுத்தவன் கதவை திறந்து கீழே வர, அங்கு மாமியாருக்கும்,மாமனாருக்கும் டீ கொடுத்துக்கொண்டிருந்தார் ராதா".
" கீழே வந்தவன் ம்மா... டீ என்க, இதோப்பு என்றவாறு சமையல் அறைக்குள் சென்றவரிடம் கதிருக்கான டீயை கொடுத்தார் சீதா".
"அக்காவிடமிருந்து வாங்கி வந்தவர், இந்தாப்பு என நீட்ட,டீ டம்ளரை எடுத்து குடித்தவனிடம்,அப்பா வயலுக்கு போயாச்சப்பு,உன்னையும், வேலுவையும் வரச்சொன்னாரப்பு என்க, சரிமா என்றவன்,குடித்த டம்ளரை டேபிள் மேல் வைத்து விட்டு வெளியே இருக்கும் வண்டியை எடுத்துக்கொண்டு வர, வேலுவும் வீட்டிலிருந்து வந்தான்".
"பின்னர் இருவரும் வயலை நோக்கிச் சென்றனர்".
இந்த வருஷம் என்னடா பனி இப்படி பெய்யுது?என வேலு சொல்ல,"இதுலாம் ஒரு பனியாடா?என்றான் கதிர்".
"உனக்கு குளிராதுடா மாப்பென்று வேலு சொல்ல,என்னடா கிண்டலா?,அது இருக்கட்டும் உன் தங்கச்சி கிட்ட செருப்பை குடுத்துட்டியா?
இல்லைடா.இனி தான் குடுக்கனுமென்று வேலு சொல்லவும், முட்டாப்பயலே,முட்டாப்பயலே" கொஞ்சமாச்சும் உனக்கு அறிவு இருக்காடா?என்று வாய்க்கு வந்தபடி கதிர் திட்ட,ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத வேலுவோ ,வாய மூடுடா தடிமாடென்று கத்தினான்.
பண்ணாடைப்பயலே....செருப்பை என்ன வீட்டுக்குள்ளவா போட்டு கிட்டு திரியப்போகுது?
"என்னமோ கருவ காட்டுல வேலை பாக்குற போல இந்தப்பேச்சி உனக்கு?, எங்களுக்கும் அந்த அக்கரை சக்கரைலாம் இருக்குடா".தங்கச்சி தான் காலையில வாங்கிக்குறேன்ணானு சொல்லுச்சி போதுமாடா?.ஆமா ராசா... என்ன உனக்கு என் தங்கச்சி மேல இம்புட்டு அக்கரை?என்க,உன் தங்கச்சியாச்சே மச்சான்".
பின்ன...அவள் மேல அக்கரை இல்லாமல் எப்படிடா இருக்கும் என்று கதிர் திருப்பி கேட்க,ஆஹான்..."அப்போ தேவி கூட தான் டா எனக்கு தங்கச்சி முறை என்க,எட்டி மிதிச்சேன் குருத்தெலும்பு நசுங்கிடும் டா. வெளங்காத பயலே,காலையிலே தேவி, காவினு ச்சை என்று வண்டியை வேகமாக ஓட்டிச்சென்றான் கதிர்". அடேய் பொறுமையா போடானு வேலுவும் சத்தம் போட்டான்.
"பின்னர் ஒரு வழியாக இருவரும் வயலுக்கு வந்தவர்கள்,வேலுவின் தந்தையிடம் சென்று,எடுத்து வந்த டீ, மோர் இருக்கும் பையை கொடுத்து விட்டு,உளுந்து விதைக்க போய்ட்டு வரோம் என்று சொல்ல,ம்ம்...சீக்கிரம் போங்கடா சூரியன் உச்சிக்கு வந்துரும் போல".
"ஏம்பா...இவ்வளவு கருக்கலா இருக்கு?,அதுக்குள்ள சூரியன் உச்சிக்கு வரப்போறனு உங்கிட்ட சொல்லிச்சானு வேலு கேட்க,மகனை ஒரு பார்வை பார்த்தவர்,சரி..ரெண்டு பேரும் அறுவடை வேலைய பாருங்க".
"நான் மச்சான் கூட சேர்ந்து உளுந்து விதைச்சிட்டு வரேன் என்க",இதோ கிளம்பிட்டோம் மாமா என்று கதிர் முன்னே நடக்க,என்னா நக்கலு எங்கப்பனுக்கு"என்று முணுமுணுத்துக்கொண்டே வேலுவும் அவன் பின்னே நடந்து சென்றான்.
"போகும் இருவரையும் பார்த்து தலையில் தட்டிக்கொண்டவர், சோம்பேறி புடிச்ச கழுதைங்கனு சொல்லிக்கொண்டே அறுவடை வயலில் இறங்கியவர்,வேலை செய்பவர்களிடம் சென்றவர் யப்பா,டீயும் மோரும் வந்துருக்கு,வாங்கப்பா".யாருக்கு என்ன வேண்டும்னு குடிச்சிட்டு வேலைய பாருங்க".