Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
கதிர் வீடு!
அப்பாயிஈஈஈ... எதுக்கு அடிக்குற? பின்ன அடிக்காம கொஞ்சுவாங்களாடா? நீ எதுக்கு அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காங்க என்றதும் பேயறைஞ்ச போல இருக்கயென்று வளவனை பார்த்தார்.
இல்லையே,நான் சாதாரணமாக தானே இருக்கேன். அடேய்... ரீல் அறுந்து போயிடுச்சிடா விளக்கெண்ணெய் என்று வேலு சொல்ல, "ஏன் மாமா ஏன்?"
"அதே தான்டா நாங்களும் கேட்குறோம் ஏன் உனக்கு இந்த அதிர்வு?".
இருவரையும் ஒரு பார்வை பார்த்தவன், எனக்கு அத்த மவளை புடிச்சிருக்கு, கட்டிக்கலானு இருந்தேன் என்க,ஏதேஏஏஏஏஏ என்று வேலுவும், அப்பாயியும் அதிர்ச்சியாக,அப்பொழுது அவர்களுக்கு பின் புறமாக ஏதோ கீழே விழும் சத்தம் கேட்கவும் மூவரும் திரும்பி பார்க்க,அங்கே கதிர் அய்யனார் போல நின்று கொண்டிருக்க, அவனிடமிருந்து சில அடி தூரம் தள்ளி, தண்ணீர் சொம்பு நீரை சிந்திக்கொண்டு கீழே கிடந்தது.
ஆத்திஈஈஈஈ....இவனா என்று மூவரும் அதிர்ந்து பார்க்க,அவர்கள் அருகில் வந்தவன்,யாருக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காங்க அப்பாயி?
அது வந்துப்பா என்று பாட்டி இழுக்க... ம்ம் சொல்லு.கவிதா மவள் தாமரைக்குதான்.
அப்பாயி சொன்னதை கேட்டவனுக்கு கொலை வெறி வந்தது.அவனின் தாடை இறுகுவதிலே எவ்வளவு கோவமாக இருக்கிறான் என்பது புரிய,எட்டி கதிரின் கையை பிடிக்கவும் வேலுவை நண்பனை பார்த்தவன்,நீ ஏதோ சொன்னாயே என்க..
"அண்ணா...அது வந்துணா...என வளவன் பேச்சில் தடுமாற,ம்ம் மேல சொல்லு.ஒரு வழியாக தைரியத்தை வர வைத்துக்கொண்டவன் எனக்கு தாமரைய புடிச்சிருக்குணா,அந்த புள்ளைய கட்டிக்க ஆசப்படுறேன் என்கவும் பார்வையாலே தம்பியை சுட்டெரித்தான் கதிர்".
"என்னடா இது ஆளுக்காளு என் பொண்டாட்டிய பங்கு போட நிக்கிறானுங்க?என உள்ளுக்குள் கோவம் மூண்டதை வெளியே காட்டிக்க முடியாமல் தவித்தான்.நண்பனின் மனநிலையை கணித்த வேலு,அடேய் என்ன பேசுறனு புரிஞ்சி தான் பேசுறியா?.
"மாமா....ஏன் உன் தங்கச்சிய கட்டிக்க எனக்கு உரிமை இல்லையா?,கை நிறைய சம்பாரிக்கிறேன்,காலம் முழுவதும் அவளை கண்கலங்காமல் பாத்துக்க தெம்பு இருக்கு,இன்னும் என்ன வேண்டும்?.
"இதற்கு மேல் தம்பி பேசுவதை கேட்டால் இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதை உணர்ந்து அங்கிருந்து வேகமாக படியில் ஏறி மேலே சென்றான் கதிர்.
"மேலே போகும் பெரிய பேரனை பார்த்தவர்,பெரியவனுக்கு என்னடா சாமி பிரச்சினை?.யாருக்கு தெரியும் என்றவன்,நான் போய் பார்த்திட்டு வரேனென்று சொல்லி,மேலே வந்தவன் கதவை திறந்து உள்ளே பார்க்க,அறை இருந்த கோலமே கதிரின் கோவத்தை காட்டியது".
"உள்ளே வந்து கதவை தாழிட்டவன், கிழே கிடந்த சேரை நிமிர்த்தி வைத்து விட்டு,அங்கங்கே சிதறி கிடந்தவைகளை அதற்கான இடத்தில் வைத்தவன்,பாத்ரூம் வாசலில் நின்று கதவை தட்டலாமா?,வேண்டாமா? என்று யோசித்தான்.
அப்பொழுது கதவு திறக்கும் சத்தம் கேட்க சில அடி தள்ளி வந்து நின்றான்.வேலுவை நிமிர்ந்து பார்க்காமல் வெளியே வந்தவனின் தோள் பட்டையில் கை வைக்க,எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.
மாப்பு என்க,ம்ம்... கிளம்பு,காய்கறி லோடு ஏற்ற வண்டி வந்துடுச்சுனு ஹேங்கரில் தொங்கிய சட்டையை எடுத்து போட்டவனோ வா என்று படியில் இறங்கி சென்றான்".
வேலுவும் கதிரின் வண்டியில் உட்கார்ந்தவன் கதிரின் வேகத்தை பார்த்து தோள் பட்டையில் தட்ட,இயல்புக்கு வந்தவன் பின் வழக்கமான வேகத்தில் வண்டியை ஓட்டினான்.
"மனசுல இவ்வளவு ஆசைய வச்சி கிட்டு எதுக்கு மாப்பு இப்படி?என்று வேலு கேட்க,அப்படிலாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.ஓஓஓ.. அப்போ நம்ப வளவனுக்கே என் தங்கச்சிய கட்டி வச்சிர வேண்டியது தானென்னு வேலு சொல்லியது தான் தாமதம்,வாய்க்குள் வந்த அத்தனை வார்த்தைகளையும் கொண்டு திட்ட தொடங்கி விட்டான்".
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அடேய் போதும் மாப்பு,காதுல ரத்த ஆறே ஓடுதுடா என்க,அப்பொழுது தான் வாயை மூடினான்.இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமலே காய்கறி தோட்டத்திற்கு வந்து சேர்ந்தனர்.
"ஏற்கெனவே மூட்டையில் காயை நிரப்பி கொண்டிருந்ததால் எடை போட ஈசியாக இருந்தது.நண்பர்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் மேற்பார்வையிட, காய்கறிகள் எடை போட்டு தைத்து தூக்கி சென்றனர் கூலி ஆட்கள்.
எல்லா காய்கறிகளையும் எடை போட்டு ஏற்றி முடிக்கவே மாலை ஆனது.பின்னர் எவ்வளவு பணம் என்று இருவரும் கணக்கு பண்ணி எழுதி வாங்கிக் கொள்ள,வண்டி லோடு அங்கிருந்து கனியூத்தை நோக்கி சென்றது".
மாப்பு லோடு அனுப்பியாச்சி என்று அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லிடு டா,நான் போய் தோண்டிகா போட்ட வயலை பார்த்திட்டு வண்டி கிட்ட வந்துடுறேன்று அங்கிருந்து கதிர் சென்றான்.
தனது போனிலிருந்து கதிர் சொன்ன நம்பருக்கு கால் பண்ண,அட்டென் பண்ணிய கணீர் குரலில் வழக்கம் போல பேச்சு தடுமாறியது வேலுவிற்கு. என்னடா,லோடு அனுப்பியாச்சா?,கொஞ்ச நேரம் முன்னே தான்ணா".
"சரி டா நான் பாத்துக்குறேன்,அங்க வேலையெல்லாம் எப்படி போகுது? என அக்குரலுக்கு சொந்தக்காரனான ரிதுவர்ஷன் கேட்க,நல்லா போகுதுணா. நம்ப வயல்ல நாளைக்கு அறுவடைணா, கதிர் வீட்ல பாதி வயல்ல நடவு முடிஞ்சிட்டுணா,மீதம் அறுவடைக்கு உள்ள வயல்ல நாளைக்கு உளுந்து விதைக்குறாங்கணா".
"ம்ம் என்றவன் மேலும் சிறிது நேரம் பேசி விட்டு போனை கட் பண்ணினான் வர்ஷன்.இப்பொழுது தான் வேலுக்கும் இயல்பாக மூச்சு வந்தது. எப்பாஆஆஆஆ....என்னாஆஆஆ கம்பீரம் இந்த மனுஷனுக்கென்று சொல்லிக்கொண்டவன்,கதிர் போன திசையை நோக்கிப் போனான்".
"நாளைக்கு போகி பண்டிகை,அன்று அதிகாலையிலே உளுந்து விதைத்தால் பொங்கல் முடிந்து நெல்லை அறுத்துக்கொள்ள சரியாக இருக்குமென்று,அங்கங்கே பழுத்தும் பழுக்காமலும் இருக்கும் நெற்கதிர்களை பார்த்துக்கொண்டிருந்த கதிரோ தனது மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
வயலில் அதிகம் தண்ணி நிற்காமல் இருக்க தோண்டிகா போடப்பட்டு தயாராக இருப்பதை கண்டவன், பரவாயில்லை நல்லா தான் வேலை செய்திருக்காங்கனு மெச்சிக்கொண்டவன்,பின் ஒரு ரவுண்டு வயலை சுற்றி விட்டு,வண்டி நிறுத்திய இடத்தை நோக்கி செல்ல,வேலுவும் வந்து சேர்ந்தான்.
" வேலை ஒழுங்கா நடந்துருக்கா? நாளைக்கு விதைச்சிடலாம் தானே?ம்ம் நல்லா தான் செஞ்சிருக்காங்க. வடக்கால பக்கம் மூலையில் தான் தண்ணி கொஞ்சம் தேங்கி நிற்குதுடானு கதிர் சொல்லவும்,ம்ம் அது தண்ணி வடியும் பாதை,எதுக்கும் நாளைக்கு மடைய தெரந்து வச்சிட்டு பிறகு விதைச்சிடலாம் என்றான்".
பின்னர் இருவரும் பேசிக்கொண்டே வண்டியில் வந்தவர்கள்,வேலுவை அவன் வீட்டில் விட்டவன் தன் வீட்டை நோக்கி சென்றான்.
வேலு வீடு!
உள்ளே வந்த மகனை பார்த்தவர்,டீ வேண்டுமா என்க,போடுமா,இந்தா சித்தி உன்கிட்ட பேசனுமாம்.முதல்ல பேசிக்க என்ற வேலுவோ தனது போனிலிருந்து கவிதாவிற்கு கால் பண்ணியவன்,அவர் அட்டென் பண்ணியதும் காய்கறி லோடு ஏத்தும் வேலை வந்ததால் வீட்டுக்கு வர முடியலை சித்தி என்றவன்,இரு அம்மாகிட்ட தரேன்னு சொல்லி தன் போனை கொடுத்தான் வேலு".
"மகனிடமிருந்து போனை வாங்கியவர், சொல்லுத்தா என்க,கவிதாவும் விஷயத்தை சொல்ல,அதைக்கேட்ட வேலுவின் அம்மா இரு இரு நான் வீட்டுக்கு வரேனென்று போனை கட் பண்ணியவர்,தம்பி நான் சித்தி வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்.
"அப்பா வந்தால் சொல்லிடுப்பா என்றவர் மகனின் பதிலை கூட எதிர் பார்க்காமல் தனது தங்கை வீட்டை நோக்கி வேகமாக சென்றார்.சிறிது நிமிட நடையிலே தங்கை வீட்டை அடைந்தவர்,கவிதா,கவிதா..என கூப்பிட்டுக்கொண்டே வீட்டின் உள்ளே வந்தார்".
தாமரை வீடு!
"எங்கேடி ஒரு அரவத்தையும் வீட்ல காணுமென்று சொல்லிக்கொண்டே வீட்டின் உள்ளே வந்தார் வேலுவின் அம்மா பார்வதி.அவரை பார்த்த அன்பு, வாங்கண்ணி என்க,வரேங்க என்றவர் கலா அப்பாயின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு,அவரிடம் நலம் விசாரித்து விட்டு,ஏத்தா இங்க வா என்றார்".
"இருக்கா,குடிக்க எடுத்து வரேன் என்க, அதுலாம் ஒன்னும் வேண்டாம்,நீ வந்து இப்படி உக்காருத்தா என்றவரின் அருகே வந்து அமர்ந்த கவிதா,தாமரை உன் போன்ல மருது போட்டோ இருந்தா அம்மா கிட்ட காட்டு மா".
"சரிமா என்றவள் போன் கேலரியில் பவி,தாமரை,மருது,வேதா நால்வரும் சேர்ந்து எடுத்திருந்த போட்டோவை ஓப்பன் பண்ணியவள்,இந்தாங்கம்மா என பார்வதியிடம் நீட்டினாள்".
"மகளிடமிருந்து போனை வாங்கியவர் மருதுவை ஆராய்ச்சி பார்வையோடு பார்த்து விட்டு,பையன பார்க்க நல்லா லட்சணமாக தான் இருக்கு கவிதா,பேரு என்ன?".
"மருதையன் கா என்றவர் பின் அவனது குடும்பத்தை பற்றி தனது அக்காவிடம் சொல்லி முடித்தவர்,நீ என்னக்கா சொல்லுற?நல்ல படியாக தான் தெரியுதுத்தா.நேரம் கூடி வந்துச்சினா எல்லாம் நல்லதா நடக்கும் என்றவர், தாமரை உனக்கு புடிச்சிருக்காமா?.
"உங்க எல்லாருக்கும் புடிச்சிருந்தால் எனக்கும் சம்மதம்மா என்றவளை, கிள்ளி முத்தமிட்டவர் அந்த மாரியாத்தா புண்ணியத்தில் மாங்கல்யம் அமையட்டும் என்றவர்,மேலும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு,அவர்களிடம் சொல்லிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்".
"காலை கதிரவன் செங்கதிரை பாய்ச்சிக்கொண்டு கிழக்கே உதயமாக தயாரகிக்கொண்டிருந்தது.இரவு வெகு நேரம் சென்று தூங்கினாலும் இன்றைக்கு கோலம் போட வருபவள் முகத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்பதற்காக அலாரம் வைத்து எழுந்தவன்,சத்தமில்லாமல் கதிர் படியிலிறங்கி போனான்".
"இன்று போகிப்பண்டிகை என்பதால் இந்த இருள் விலகாத நேரத்திலும் தங்கள் வீட்டை சிலர் சுத்தம் செய்ய தொடங்கினர்.யாருக்கும் தன் முகம் தெரியாமல் இருக்க மங்கி குல்லாவை போட்டுக்கொண்டு,உடலை சால்வையால் சுற்றிக்கொண்டு ஆட்கள் நடமாட்டத்தை கவனித்துக்கொண்டே அத்தை வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான்".
"தங்களது வயலில் இன்று அறுவடை ஆரம்பிப்பதால் ஆட்களை அழைத்து செல்ல வேலுவும் வீட்டிலிருந்து வந்து கொண்டிருக்க கதிர் வீட்டிலிருந்து செல்வது தெரிந்தது.இந்த நேரத்தில் இவன் எங்கே போறானென்று யோசித்தவன்,சரி என்னதுனு நாமும் போய் பார்க்கலாம் என்று நினைத்து,வந்த வேலையை விட்டு கதிரை பின் தொடர்ந்தான்".
அப்பாயிஈஈஈ... எதுக்கு அடிக்குற? பின்ன அடிக்காம கொஞ்சுவாங்களாடா? நீ எதுக்கு அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காங்க என்றதும் பேயறைஞ்ச போல இருக்கயென்று வளவனை பார்த்தார்.
இல்லையே,நான் சாதாரணமாக தானே இருக்கேன். அடேய்... ரீல் அறுந்து போயிடுச்சிடா விளக்கெண்ணெய் என்று வேலு சொல்ல, "ஏன் மாமா ஏன்?"
"அதே தான்டா நாங்களும் கேட்குறோம் ஏன் உனக்கு இந்த அதிர்வு?".
இருவரையும் ஒரு பார்வை பார்த்தவன், எனக்கு அத்த மவளை புடிச்சிருக்கு, கட்டிக்கலானு இருந்தேன் என்க,ஏதேஏஏஏஏஏ என்று வேலுவும், அப்பாயியும் அதிர்ச்சியாக,அப்பொழுது அவர்களுக்கு பின் புறமாக ஏதோ கீழே விழும் சத்தம் கேட்கவும் மூவரும் திரும்பி பார்க்க,அங்கே கதிர் அய்யனார் போல நின்று கொண்டிருக்க, அவனிடமிருந்து சில அடி தூரம் தள்ளி, தண்ணீர் சொம்பு நீரை சிந்திக்கொண்டு கீழே கிடந்தது.
ஆத்திஈஈஈஈ....இவனா என்று மூவரும் அதிர்ந்து பார்க்க,அவர்கள் அருகில் வந்தவன்,யாருக்கு மாப்பிள்ளை பார்த்துருக்காங்க அப்பாயி?
அது வந்துப்பா என்று பாட்டி இழுக்க... ம்ம் சொல்லு.கவிதா மவள் தாமரைக்குதான்.
அப்பாயி சொன்னதை கேட்டவனுக்கு கொலை வெறி வந்தது.அவனின் தாடை இறுகுவதிலே எவ்வளவு கோவமாக இருக்கிறான் என்பது புரிய,எட்டி கதிரின் கையை பிடிக்கவும் வேலுவை நண்பனை பார்த்தவன்,நீ ஏதோ சொன்னாயே என்க..
"அண்ணா...அது வந்துணா...என வளவன் பேச்சில் தடுமாற,ம்ம் மேல சொல்லு.ஒரு வழியாக தைரியத்தை வர வைத்துக்கொண்டவன் எனக்கு தாமரைய புடிச்சிருக்குணா,அந்த புள்ளைய கட்டிக்க ஆசப்படுறேன் என்கவும் பார்வையாலே தம்பியை சுட்டெரித்தான் கதிர்".
"என்னடா இது ஆளுக்காளு என் பொண்டாட்டிய பங்கு போட நிக்கிறானுங்க?என உள்ளுக்குள் கோவம் மூண்டதை வெளியே காட்டிக்க முடியாமல் தவித்தான்.நண்பனின் மனநிலையை கணித்த வேலு,அடேய் என்ன பேசுறனு புரிஞ்சி தான் பேசுறியா?.
"மாமா....ஏன் உன் தங்கச்சிய கட்டிக்க எனக்கு உரிமை இல்லையா?,கை நிறைய சம்பாரிக்கிறேன்,காலம் முழுவதும் அவளை கண்கலங்காமல் பாத்துக்க தெம்பு இருக்கு,இன்னும் என்ன வேண்டும்?.
"இதற்கு மேல் தம்பி பேசுவதை கேட்டால் இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதை உணர்ந்து அங்கிருந்து வேகமாக படியில் ஏறி மேலே சென்றான் கதிர்.
"மேலே போகும் பெரிய பேரனை பார்த்தவர்,பெரியவனுக்கு என்னடா சாமி பிரச்சினை?.யாருக்கு தெரியும் என்றவன்,நான் போய் பார்த்திட்டு வரேனென்று சொல்லி,மேலே வந்தவன் கதவை திறந்து உள்ளே பார்க்க,அறை இருந்த கோலமே கதிரின் கோவத்தை காட்டியது".
"உள்ளே வந்து கதவை தாழிட்டவன், கிழே கிடந்த சேரை நிமிர்த்தி வைத்து விட்டு,அங்கங்கே சிதறி கிடந்தவைகளை அதற்கான இடத்தில் வைத்தவன்,பாத்ரூம் வாசலில் நின்று கதவை தட்டலாமா?,வேண்டாமா? என்று யோசித்தான்.
அப்பொழுது கதவு திறக்கும் சத்தம் கேட்க சில அடி தள்ளி வந்து நின்றான்.வேலுவை நிமிர்ந்து பார்க்காமல் வெளியே வந்தவனின் தோள் பட்டையில் கை வைக்க,எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.
மாப்பு என்க,ம்ம்... கிளம்பு,காய்கறி லோடு ஏற்ற வண்டி வந்துடுச்சுனு ஹேங்கரில் தொங்கிய சட்டையை எடுத்து போட்டவனோ வா என்று படியில் இறங்கி சென்றான்".
வேலுவும் கதிரின் வண்டியில் உட்கார்ந்தவன் கதிரின் வேகத்தை பார்த்து தோள் பட்டையில் தட்ட,இயல்புக்கு வந்தவன் பின் வழக்கமான வேகத்தில் வண்டியை ஓட்டினான்.
"மனசுல இவ்வளவு ஆசைய வச்சி கிட்டு எதுக்கு மாப்பு இப்படி?என்று வேலு கேட்க,அப்படிலாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.ஓஓஓ.. அப்போ நம்ப வளவனுக்கே என் தங்கச்சிய கட்டி வச்சிர வேண்டியது தானென்னு வேலு சொல்லியது தான் தாமதம்,வாய்க்குள் வந்த அத்தனை வார்த்தைகளையும் கொண்டு திட்ட தொடங்கி விட்டான்".
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அடேய் போதும் மாப்பு,காதுல ரத்த ஆறே ஓடுதுடா என்க,அப்பொழுது தான் வாயை மூடினான்.இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமலே காய்கறி தோட்டத்திற்கு வந்து சேர்ந்தனர்.
"ஏற்கெனவே மூட்டையில் காயை நிரப்பி கொண்டிருந்ததால் எடை போட ஈசியாக இருந்தது.நண்பர்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் மேற்பார்வையிட, காய்கறிகள் எடை போட்டு தைத்து தூக்கி சென்றனர் கூலி ஆட்கள்.
எல்லா காய்கறிகளையும் எடை போட்டு ஏற்றி முடிக்கவே மாலை ஆனது.பின்னர் எவ்வளவு பணம் என்று இருவரும் கணக்கு பண்ணி எழுதி வாங்கிக் கொள்ள,வண்டி லோடு அங்கிருந்து கனியூத்தை நோக்கி சென்றது".
மாப்பு லோடு அனுப்பியாச்சி என்று அண்ணனுக்கு போன் பண்ணி சொல்லிடு டா,நான் போய் தோண்டிகா போட்ட வயலை பார்த்திட்டு வண்டி கிட்ட வந்துடுறேன்று அங்கிருந்து கதிர் சென்றான்.
தனது போனிலிருந்து கதிர் சொன்ன நம்பருக்கு கால் பண்ண,அட்டென் பண்ணிய கணீர் குரலில் வழக்கம் போல பேச்சு தடுமாறியது வேலுவிற்கு. என்னடா,லோடு அனுப்பியாச்சா?,கொஞ்ச நேரம் முன்னே தான்ணா".
"சரி டா நான் பாத்துக்குறேன்,அங்க வேலையெல்லாம் எப்படி போகுது? என அக்குரலுக்கு சொந்தக்காரனான ரிதுவர்ஷன் கேட்க,நல்லா போகுதுணா. நம்ப வயல்ல நாளைக்கு அறுவடைணா, கதிர் வீட்ல பாதி வயல்ல நடவு முடிஞ்சிட்டுணா,மீதம் அறுவடைக்கு உள்ள வயல்ல நாளைக்கு உளுந்து விதைக்குறாங்கணா".
"ம்ம் என்றவன் மேலும் சிறிது நேரம் பேசி விட்டு போனை கட் பண்ணினான் வர்ஷன்.இப்பொழுது தான் வேலுக்கும் இயல்பாக மூச்சு வந்தது. எப்பாஆஆஆஆ....என்னாஆஆஆ கம்பீரம் இந்த மனுஷனுக்கென்று சொல்லிக்கொண்டவன்,கதிர் போன திசையை நோக்கிப் போனான்".
"நாளைக்கு போகி பண்டிகை,அன்று அதிகாலையிலே உளுந்து விதைத்தால் பொங்கல் முடிந்து நெல்லை அறுத்துக்கொள்ள சரியாக இருக்குமென்று,அங்கங்கே பழுத்தும் பழுக்காமலும் இருக்கும் நெற்கதிர்களை பார்த்துக்கொண்டிருந்த கதிரோ தனது மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
வயலில் அதிகம் தண்ணி நிற்காமல் இருக்க தோண்டிகா போடப்பட்டு தயாராக இருப்பதை கண்டவன், பரவாயில்லை நல்லா தான் வேலை செய்திருக்காங்கனு மெச்சிக்கொண்டவன்,பின் ஒரு ரவுண்டு வயலை சுற்றி விட்டு,வண்டி நிறுத்திய இடத்தை நோக்கி செல்ல,வேலுவும் வந்து சேர்ந்தான்.
" வேலை ஒழுங்கா நடந்துருக்கா? நாளைக்கு விதைச்சிடலாம் தானே?ம்ம் நல்லா தான் செஞ்சிருக்காங்க. வடக்கால பக்கம் மூலையில் தான் தண்ணி கொஞ்சம் தேங்கி நிற்குதுடானு கதிர் சொல்லவும்,ம்ம் அது தண்ணி வடியும் பாதை,எதுக்கும் நாளைக்கு மடைய தெரந்து வச்சிட்டு பிறகு விதைச்சிடலாம் என்றான்".
பின்னர் இருவரும் பேசிக்கொண்டே வண்டியில் வந்தவர்கள்,வேலுவை அவன் வீட்டில் விட்டவன் தன் வீட்டை நோக்கி சென்றான்.
வேலு வீடு!
உள்ளே வந்த மகனை பார்த்தவர்,டீ வேண்டுமா என்க,போடுமா,இந்தா சித்தி உன்கிட்ட பேசனுமாம்.முதல்ல பேசிக்க என்ற வேலுவோ தனது போனிலிருந்து கவிதாவிற்கு கால் பண்ணியவன்,அவர் அட்டென் பண்ணியதும் காய்கறி லோடு ஏத்தும் வேலை வந்ததால் வீட்டுக்கு வர முடியலை சித்தி என்றவன்,இரு அம்மாகிட்ட தரேன்னு சொல்லி தன் போனை கொடுத்தான் வேலு".
"மகனிடமிருந்து போனை வாங்கியவர், சொல்லுத்தா என்க,கவிதாவும் விஷயத்தை சொல்ல,அதைக்கேட்ட வேலுவின் அம்மா இரு இரு நான் வீட்டுக்கு வரேனென்று போனை கட் பண்ணியவர்,தம்பி நான் சித்தி வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்.
"அப்பா வந்தால் சொல்லிடுப்பா என்றவர் மகனின் பதிலை கூட எதிர் பார்க்காமல் தனது தங்கை வீட்டை நோக்கி வேகமாக சென்றார்.சிறிது நிமிட நடையிலே தங்கை வீட்டை அடைந்தவர்,கவிதா,கவிதா..என கூப்பிட்டுக்கொண்டே வீட்டின் உள்ளே வந்தார்".
தாமரை வீடு!
"எங்கேடி ஒரு அரவத்தையும் வீட்ல காணுமென்று சொல்லிக்கொண்டே வீட்டின் உள்ளே வந்தார் வேலுவின் அம்மா பார்வதி.அவரை பார்த்த அன்பு, வாங்கண்ணி என்க,வரேங்க என்றவர் கலா அப்பாயின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு,அவரிடம் நலம் விசாரித்து விட்டு,ஏத்தா இங்க வா என்றார்".
"இருக்கா,குடிக்க எடுத்து வரேன் என்க, அதுலாம் ஒன்னும் வேண்டாம்,நீ வந்து இப்படி உக்காருத்தா என்றவரின் அருகே வந்து அமர்ந்த கவிதா,தாமரை உன் போன்ல மருது போட்டோ இருந்தா அம்மா கிட்ட காட்டு மா".
"சரிமா என்றவள் போன் கேலரியில் பவி,தாமரை,மருது,வேதா நால்வரும் சேர்ந்து எடுத்திருந்த போட்டோவை ஓப்பன் பண்ணியவள்,இந்தாங்கம்மா என பார்வதியிடம் நீட்டினாள்".
"மகளிடமிருந்து போனை வாங்கியவர் மருதுவை ஆராய்ச்சி பார்வையோடு பார்த்து விட்டு,பையன பார்க்க நல்லா லட்சணமாக தான் இருக்கு கவிதா,பேரு என்ன?".
"மருதையன் கா என்றவர் பின் அவனது குடும்பத்தை பற்றி தனது அக்காவிடம் சொல்லி முடித்தவர்,நீ என்னக்கா சொல்லுற?நல்ல படியாக தான் தெரியுதுத்தா.நேரம் கூடி வந்துச்சினா எல்லாம் நல்லதா நடக்கும் என்றவர், தாமரை உனக்கு புடிச்சிருக்காமா?.
"உங்க எல்லாருக்கும் புடிச்சிருந்தால் எனக்கும் சம்மதம்மா என்றவளை, கிள்ளி முத்தமிட்டவர் அந்த மாரியாத்தா புண்ணியத்தில் மாங்கல்யம் அமையட்டும் என்றவர்,மேலும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு,அவர்களிடம் சொல்லிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்".
"காலை கதிரவன் செங்கதிரை பாய்ச்சிக்கொண்டு கிழக்கே உதயமாக தயாரகிக்கொண்டிருந்தது.இரவு வெகு நேரம் சென்று தூங்கினாலும் இன்றைக்கு கோலம் போட வருபவள் முகத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்பதற்காக அலாரம் வைத்து எழுந்தவன்,சத்தமில்லாமல் கதிர் படியிலிறங்கி போனான்".
"இன்று போகிப்பண்டிகை என்பதால் இந்த இருள் விலகாத நேரத்திலும் தங்கள் வீட்டை சிலர் சுத்தம் செய்ய தொடங்கினர்.யாருக்கும் தன் முகம் தெரியாமல் இருக்க மங்கி குல்லாவை போட்டுக்கொண்டு,உடலை சால்வையால் சுற்றிக்கொண்டு ஆட்கள் நடமாட்டத்தை கவனித்துக்கொண்டே அத்தை வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான்".
"தங்களது வயலில் இன்று அறுவடை ஆரம்பிப்பதால் ஆட்களை அழைத்து செல்ல வேலுவும் வீட்டிலிருந்து வந்து கொண்டிருக்க கதிர் வீட்டிலிருந்து செல்வது தெரிந்தது.இந்த நேரத்தில் இவன் எங்கே போறானென்று யோசித்தவன்,சரி என்னதுனு நாமும் போய் பார்க்கலாம் என்று நினைத்து,வந்த வேலையை விட்டு கதிரை பின் தொடர்ந்தான்".