Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
ஏரிக்கரை!
தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்.
என்ற பாடல் கேட்க,அய்யோஓஓஓஓ இவனா!என்று பதறி போய் கதிர் திரும்ப,அங்கே வேலு நின்று கொண்டிருந்தான்".
"இவன் நம்மை ஓட்டியே கொன்னுடுவானே,சரி...பேசி சமாளிப்போமென மனதிற்குள் சொல்லியவன்,ஆமாம்...நீ எப்போடா வந்த?
தண்ணில குதிச்சி விளையாண்டியே அப்பவே என்றவன்,இது என்னடா கோலம்?
குளிக்க வந்தேன் டா அதான் என்றவன் கையில் உள்ள பூவை மறைக்க, எல்லாம் பார்த்தாச்சி பார்த்தாச்சி...லுங்கிய கட்டி கிட்டு வாடா.
ஹி ஹி என்று சிரித்தவாறு டிரஸை போட்டுக்கொண்டு அவள் செருப்பை பார்க்க,எடுத்துக்க வேற வழியென்று வேலு சொல்ல,அதையும் ஒரு கையில் எடுத்துக்கொண்டவனை பார்த்தவன், ஏண்டா,எத்தனை முறை சொல்லியிருக்கேன் இப்படி ஆள் இல்லாத போது தண்ணில மூழ்கி இருக்காதடானு?என்றைக்காவது கேட்டுருக்கியா?
மச்சான் உன் தங்கச்சிக்கு உண்மையிலே நீட்டு முடியா?என்று கதிர் கேட்க,நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடா தடிமாடு கேட்குற?எவனோ ஒரு ரோசக்காரன் அவ்வளவு தான்னு சொன்னானே இப்போ என்னவாம்?,நீள முடியா? குண்டு கண்ணானு?கேள்வி வேண்டி கடக்கு...
டேய் சொல்லுடா உன் தங்கச்சிகாரிக்கு நீட்டு முடியா?.
ஆமாம் அதுக்கு என்ன.சும்மா தான் கேட்டேன் என்றவன்,செருப்பை விட்டுட்டு போய்ட்டாளேடா.தூக்கி தலையில வச்சிக்கடா சரியாகிடும் என்ற வேலுவை வெட்டவா குத்தவா என்று முறைத்து பார்த்தான்".
என்ன பார்த்து ஒன்னும் புண்ணியம் இல்லை மாப்பு,எதுவா இருந்தாலும் தெளிவா யோசித்து முடிவெடுக்குர என் மச்சானுக்கு,இப்போ மட்டும் ஏன் இந்த தடுமாற்றம்னு தான் புரியலை?
தெரியலைடா என்ற கதிரோ சரி வா வீட்டுக்கு கிளம்பலாமென்று வண்டி நிறுத்தியிருக்கும் மரத்தடியை நோக்கி சென்றான்.
"மாப்பு... மாப்பு"
காது கேட்குது சொல்லுடா.அதான் மானங்கெட்டு போய் காதல்ல விழுந்திட்டியே பின்ன எதுக்கு இந்த வெட்டி வீராப்பென வேலு கேட்க,காதல், கன்றாவிலாம் ஒன்னும் இல்லை.இப்போ என்ன உனக்கு தெரியனுமென்றான்.
"ஓஓஓ... அப்படியா மாப்பு சரி செருப்பை குடு என் தங்கச்சி கிட்ட நான் குடுத்துடுறேன் என வேலு சொல்ல,கதிருக்கோ ஒரு நொடி திக்கென்று இருந்தது.
மனம் வராமல்,இந்தாடா...அவளோட செருப்பை வச்சிக்கிட்டு நான் என்ன மச்சு வீடா கட்ட போறேனென்று கையிலிருந்ததை கீழே போட்டான்.
"கதிர் இதை தான் செய்வான் என்பது வேலுக்கு தெரிந்ததால் தங்கையின் செருப்பை எடுத்தவன்,இந்த சண்டியர் பயலை புரிஞ்சிக்கவே முடியலையே?எத்தனை நாளைக்கு உன் நாடகத்தை நடத்துறனு நானும் பாக்குறேன் மாப்பு என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்".
வண்டியில் ஏறி வீட்டை நோக்கி செல்ல,இருவரின் சிந்தனையும் வெவ்வேறாக இருந்ததால் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
"வேலுவோ கதிரை எதிர் பார்க்காமல்.... செல்லம்....வள்ளி செல்லம்....எங்கே இருக்க?என்றபடி உள்ளே வந்தவன் அங்கிருந்த நிலவனை கண்டு வாடா நல்லவனே...நல்லா இருக்கியாடா?
நல்லா இருக்கேன் மாமா...நீ எப்போ கோயில்ல இருந்து வந்த?முந்தா நாள் தான் வந்தேன் டா.அப்புறம் விளையாட்டு எப்படி போச்சுடா?, நிலவனும் அங்கு நடந்ததை வேலுவிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது வேலையை முடித்து வளவனும் வந்து சேர,அவனும் தம்பியிடம் பேசி விட்டு தனது அறைக்கு சென்றான்".
" ஏண்டா...நெசமாவே செயிச்சி தான் கப்பு வாங்குனீங்களாடா என்கவும்,யோவ் மாமா என்னைய்யா கிண்டலா,மனுசன் உசுர குடுத்து விளையாண்டுருக்கோம் தெரியுமா. அவன்,அவன் மாடு போல இருக்கானுங்க,அந்த பயலுங்களை தாண்டி பைனலுக்கு வர எவ்வளவு கஷ்டம் தெரியுமாயா?
"இன்னும் கொஞ்சம் இருந்தால் என் கால் எலும்பை உடைச்சிருப்பான் அந்த மதுரை கேப்டன் என ஆவேசமாக நிலவன் சொல்ல,என்னடா சொல்ற? ரொம்ப அடியா என வேலுவும் பதற, யாருக்கு அடி??என கேட்டுக்கொண்டே அங்கு வந்தார் பெருமாள்".
"யாருக்கும் இல்லை மாமா... நிலவன் கிட்ட மேட்ச் பற்றி பேசிட்டு இருந்தோம் என வேலு சமாளிக்க,ம்ம்.... பரிச்சை வர போகுது படிக்க சொல்லு என்றவர்,எப்போ வந்த?நல்லா இருக்கியா?காலையில தான் பா,ம்ம் என்றான்.
"தனது அறைக்கு வந்த கதிரோ,கட்டில் மேல் மல்லாந்து விழுந்து கண்ணை மூட,ஏரிக்கரையில் நடந்த நிகழ்வுகள் படமாக ஓடியது கண்களுக்குள்.தன் மேல் விழுந்த பஞ்சு பொதிகையானவளை நினைத்து தாமரை என்று சொல்லி நெஞ்சின் மேல் குத்தியவன்,நீ எப்படி டி இருப்ப?
" கருப்பா?,இல்லை வெளுப்பா?, இல்லை மாநிறமா?...ஒரு மண்ணும் தெரியலைடி.ஆனால்,வக்கனையா மேல விழுந்து இப்படி பைத்தியம் போல புலம்ப வைக்குறடி??....ஒரு பேச்சுக்கு சொன்னேன்,செயினை உன் தங்கச்சி கிட்ட குடுத்துருடானு,உடனே உன் நொண்ணன் பண்ணாட பயல் வாங்கிட்டு போய்ட்டான்".
"இவனெல்லாம் மச்சானா?, கொஞ்சமாவது மாப்ளை பற்றி கரிசனை இருக்கா உன் அண்ணனுக்கு?,என்னை பார்த்து நக்கலா பாக்கியராஜ் பாட்டு பாடுறான்.
நான் உன்னை பேர் சொல்லி கூப்பிடுவேனு நீ எதிர் பார்த்திருக்க மாட்டடி என்றவன்,இருந்தாலும் உனக்கு இவ்வளவு திமிரு இருக்க கூடாது. தண்ணில விழுந்தவளை காப்பாத்துனானே ஒருத்தன்,அவனுக்கு நன்றி சொன்னியாடி?
"இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் ஆட போடுவ?,எவ மேலயும் ஆசை வரலையே,இருட்டுல வந்து மோதி விட்டு என்னை அலைகழிக்க வைக்கிறது சரியாடி???சரி...போனது போகட்டும்,ஒரு முறையாவது திரும்பி பார்த்தியாடினு திட்டியவன்,இன்றைக்கு இது போதும். இல்லை,உன் நொண்ணன் கதவை ஒடைச்சிட்டு உள்ளே வந்துருவானென்று வேறு டிரஸ் மாற்றிக்கொண்டு கீழே வந்தான்".
என்னடா அடிபட்டுருக்குனு சொல்றானே?? என வேலு கேட்க, முட்டியில காயம் தான் என்ற கதிருக்கு, ஓஓ...ஊசி எதாவது போட்டாங்களா?
யோவ் மாமா...பொறுமையா கேளுயா, விஜயசாந்தி மேடம் உள்ளே தான் இருக்குறாங்களென்று நிலவன் பதற்றமாக சொல்ல,ஹாஹாஹா...என்று சிரித்தவன் இருடா ஒரு நாளைக்கு இதை காதுல வாங்கி,உன் முதுகுல சின்னத்தை டின்னு கட்டுதா இல்லையானு பாரு என்ற வேலுவிற்கு, மாமா...மைண்ட் வாய்ஸ்னு நினைச்சி கிட்டு சத்தமா பேசுறயா.
என்னடா கிண்டலா என்றவன்,நாளைக்கு நடக்கப்போகும் வேலையை பற்றி வேலு கேட்டுக் கொண்டிருந்தான்.வேலுக்கு பதில் சொன்னாலும் கதிரின் சிந்தனையெல்லாம் தாமரை படியில் ஏறி ஓடிய உருவமே நினைவில் வந்து இம்சைகள் செய்தது".
நண்பனுக்கு பேச்சில் கவனமில்லை என்பது வேலுவுக்கு புரிய,அவன் தொடையில் ஒரு அடி வைத்தான், அடியின் வலியில் ஏண்டா தடிமாடு,ம்ம்... இப்போ நான் என்ன சொன்னேன் சொல்லு?? என வேலு கேட்க,நீ எங்கேடா பேசுன?
நீலகிரி...
"மயிலா இப்படி ஒரு விஷயத்தை தன்னிடம் கேட்பாரென்று வேதா சிறிதும் நினைக்கவில்லை.அப்போ,மருதுக்கு முன்பிருந்தே தாமரை மேல விருப்பம் இருந்துருக்கு என்பதை புரிந்து கொண்டவர்,எதுக்கு இந்த விஷயத்தை நீட்டி முழக்கனும் என நினைத்தவர், எழுந்து போய் தனது போனை எடுத்து அண்ணனுக்கு கால் பண்ணினார்".
" கம்மங்கறுதை அறுத்துக்கொண்டிருந்த அன்பழகனுக்கு செல் போன் ரிங் டோன் சத்தம் கேட்க,அங்கிருந்து சென்று மரத்தின் நிழலில் இருந்த பையை திறந்து போனை எடுத்தவருக்கு,தங்கை கால் பண்ணுவது தெரிய,அட்டென் பண்ணியவர்,சொல்லுமா நல்லா இருக்கியா?.
"நான் நல்லா இருக்கேண்ணா. அங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?"
"இங்கையும் எல்லாரும் சுகமாக தான் இருக்காங்கம்மா" என்றவரிடம், "அண்ணா ஒரு விஷயம் பேசனும்" என்று வேதா தயங்க, "உன் அண்ணன்கிட்ட என்னத்தா தயக்கம் கேளுமா."
"தாமரை கல்யாணம் விஷயமா அண்ணா."
"ஏத்தா! உனக்கு நான் சொல்லி தான் தெரியனும்னு இல்லை. பெத்தது நானா இருந்தாலும் ஆளாக்குனது நீ தான்மா. தாமரை விஷயத்தில் நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான். உனக்கு பிறகு தான்டா எனக்கு உரிமை" என்று அன்பு சொல்ல, அண்ணனின் வார்தைகளை கேட்ட வேதாவிற்கு ஆனந்த கண்ணீர் வந்தது.
"இப்போ எங்கே இருக்கணா?"
"நம்ப கம்மங்காட்டுல தான்மா. இன்னும் செத்த நேரத்துல வீட்டுக்கு போய்டுவேன்" என்றார்.
அப்படியாணா, நம்ப மருதுக்கு தாமரைய பொண்ணு கேட்குறாங்கணானு விஷயத்தை சொல்ல, "நீ என்ன நினைக்கிற?என்றார்".
நல்ல பையன் தான்ணா. கண்ணு முன்னாடி வளர்ந்த பையன். நல்ல குடும்பம்.
சரிமா. வீட்டுக்கு போனதும் போன் பண்ணுறேன். நீ கவிதா கிட்ட பேசிக்கோ."
"சரிணா" என்று வேதாவும் அழைப்பை கட் பண்ணிய வேதாவோ, சுவற்றில் இருந்த புகைப்படத்தின் அருகில் சென்று பார்க்க, அதில் ஏழு வயது சிறுமியாக இருந்ததிலிருந்து இன்று இளம் பெண்ணாக இருக்கும் தாமரையின் புகைப்படங்கள் பெரியதாக பிரேம் பண்ணி தொங்கி கொண்டிருந்தது.
இதுவரை தாமரையின் திருமணம் என்ற ஒன்றை பற்றி வேதா யோசித்து பார்த்ததில்லை. இன்று மயிலா பேசி சென்ற பிறகுதான் அவள் இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்ட உண்மை வளர்த்த தாயிற்கு விளங்கியதும், அவர் கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது.
ஒரு நாள் கூட வேதாவை பிரிந்து இருந்ததில்லை தாமரை. வேதாவிற்கு மாதத்தில் ஓர் நாள் வழக்கமான மீட்டிங் இருக்கும்,எவ்வளவு நேரமானாலும் வீட்டிற்கு வந்து விடுவார்.
ஆனால், தாமரையோ திடிரென்று, "ஊருக்கு போய்விட்டு வரட்டுமா?" என்று கேட்டது அதிர்சியாக தான் இருந்தது. ஆனாலும் மனமுவந்தே தான் பிறந்த ஊருக்கு அண்ணன் மகளை அனுப்பி வைத்தார்.
தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்.
என்ற பாடல் கேட்க,அய்யோஓஓஓஓ இவனா!என்று பதறி போய் கதிர் திரும்ப,அங்கே வேலு நின்று கொண்டிருந்தான்".
"இவன் நம்மை ஓட்டியே கொன்னுடுவானே,சரி...பேசி சமாளிப்போமென மனதிற்குள் சொல்லியவன்,ஆமாம்...நீ எப்போடா வந்த?
தண்ணில குதிச்சி விளையாண்டியே அப்பவே என்றவன்,இது என்னடா கோலம்?
குளிக்க வந்தேன் டா அதான் என்றவன் கையில் உள்ள பூவை மறைக்க, எல்லாம் பார்த்தாச்சி பார்த்தாச்சி...லுங்கிய கட்டி கிட்டு வாடா.
ஹி ஹி என்று சிரித்தவாறு டிரஸை போட்டுக்கொண்டு அவள் செருப்பை பார்க்க,எடுத்துக்க வேற வழியென்று வேலு சொல்ல,அதையும் ஒரு கையில் எடுத்துக்கொண்டவனை பார்த்தவன், ஏண்டா,எத்தனை முறை சொல்லியிருக்கேன் இப்படி ஆள் இல்லாத போது தண்ணில மூழ்கி இருக்காதடானு?என்றைக்காவது கேட்டுருக்கியா?
மச்சான் உன் தங்கச்சிக்கு உண்மையிலே நீட்டு முடியா?என்று கதிர் கேட்க,நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடா தடிமாடு கேட்குற?எவனோ ஒரு ரோசக்காரன் அவ்வளவு தான்னு சொன்னானே இப்போ என்னவாம்?,நீள முடியா? குண்டு கண்ணானு?கேள்வி வேண்டி கடக்கு...
டேய் சொல்லுடா உன் தங்கச்சிகாரிக்கு நீட்டு முடியா?.
ஆமாம் அதுக்கு என்ன.சும்மா தான் கேட்டேன் என்றவன்,செருப்பை விட்டுட்டு போய்ட்டாளேடா.தூக்கி தலையில வச்சிக்கடா சரியாகிடும் என்ற வேலுவை வெட்டவா குத்தவா என்று முறைத்து பார்த்தான்".
என்ன பார்த்து ஒன்னும் புண்ணியம் இல்லை மாப்பு,எதுவா இருந்தாலும் தெளிவா யோசித்து முடிவெடுக்குர என் மச்சானுக்கு,இப்போ மட்டும் ஏன் இந்த தடுமாற்றம்னு தான் புரியலை?
தெரியலைடா என்ற கதிரோ சரி வா வீட்டுக்கு கிளம்பலாமென்று வண்டி நிறுத்தியிருக்கும் மரத்தடியை நோக்கி சென்றான்.
"மாப்பு... மாப்பு"
காது கேட்குது சொல்லுடா.அதான் மானங்கெட்டு போய் காதல்ல விழுந்திட்டியே பின்ன எதுக்கு இந்த வெட்டி வீராப்பென வேலு கேட்க,காதல், கன்றாவிலாம் ஒன்னும் இல்லை.இப்போ என்ன உனக்கு தெரியனுமென்றான்.
"ஓஓஓ... அப்படியா மாப்பு சரி செருப்பை குடு என் தங்கச்சி கிட்ட நான் குடுத்துடுறேன் என வேலு சொல்ல,கதிருக்கோ ஒரு நொடி திக்கென்று இருந்தது.
மனம் வராமல்,இந்தாடா...அவளோட செருப்பை வச்சிக்கிட்டு நான் என்ன மச்சு வீடா கட்ட போறேனென்று கையிலிருந்ததை கீழே போட்டான்.
"கதிர் இதை தான் செய்வான் என்பது வேலுக்கு தெரிந்ததால் தங்கையின் செருப்பை எடுத்தவன்,இந்த சண்டியர் பயலை புரிஞ்சிக்கவே முடியலையே?எத்தனை நாளைக்கு உன் நாடகத்தை நடத்துறனு நானும் பாக்குறேன் மாப்பு என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்".
வண்டியில் ஏறி வீட்டை நோக்கி செல்ல,இருவரின் சிந்தனையும் வெவ்வேறாக இருந்ததால் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
"வேலுவோ கதிரை எதிர் பார்க்காமல்.... செல்லம்....வள்ளி செல்லம்....எங்கே இருக்க?என்றபடி உள்ளே வந்தவன் அங்கிருந்த நிலவனை கண்டு வாடா நல்லவனே...நல்லா இருக்கியாடா?
நல்லா இருக்கேன் மாமா...நீ எப்போ கோயில்ல இருந்து வந்த?முந்தா நாள் தான் வந்தேன் டா.அப்புறம் விளையாட்டு எப்படி போச்சுடா?, நிலவனும் அங்கு நடந்ததை வேலுவிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது வேலையை முடித்து வளவனும் வந்து சேர,அவனும் தம்பியிடம் பேசி விட்டு தனது அறைக்கு சென்றான்".
" ஏண்டா...நெசமாவே செயிச்சி தான் கப்பு வாங்குனீங்களாடா என்கவும்,யோவ் மாமா என்னைய்யா கிண்டலா,மனுசன் உசுர குடுத்து விளையாண்டுருக்கோம் தெரியுமா. அவன்,அவன் மாடு போல இருக்கானுங்க,அந்த பயலுங்களை தாண்டி பைனலுக்கு வர எவ்வளவு கஷ்டம் தெரியுமாயா?
"இன்னும் கொஞ்சம் இருந்தால் என் கால் எலும்பை உடைச்சிருப்பான் அந்த மதுரை கேப்டன் என ஆவேசமாக நிலவன் சொல்ல,என்னடா சொல்ற? ரொம்ப அடியா என வேலுவும் பதற, யாருக்கு அடி??என கேட்டுக்கொண்டே அங்கு வந்தார் பெருமாள்".
"யாருக்கும் இல்லை மாமா... நிலவன் கிட்ட மேட்ச் பற்றி பேசிட்டு இருந்தோம் என வேலு சமாளிக்க,ம்ம்.... பரிச்சை வர போகுது படிக்க சொல்லு என்றவர்,எப்போ வந்த?நல்லா இருக்கியா?காலையில தான் பா,ம்ம் என்றான்.
"தனது அறைக்கு வந்த கதிரோ,கட்டில் மேல் மல்லாந்து விழுந்து கண்ணை மூட,ஏரிக்கரையில் நடந்த நிகழ்வுகள் படமாக ஓடியது கண்களுக்குள்.தன் மேல் விழுந்த பஞ்சு பொதிகையானவளை நினைத்து தாமரை என்று சொல்லி நெஞ்சின் மேல் குத்தியவன்,நீ எப்படி டி இருப்ப?
" கருப்பா?,இல்லை வெளுப்பா?, இல்லை மாநிறமா?...ஒரு மண்ணும் தெரியலைடி.ஆனால்,வக்கனையா மேல விழுந்து இப்படி பைத்தியம் போல புலம்ப வைக்குறடி??....ஒரு பேச்சுக்கு சொன்னேன்,செயினை உன் தங்கச்சி கிட்ட குடுத்துருடானு,உடனே உன் நொண்ணன் பண்ணாட பயல் வாங்கிட்டு போய்ட்டான்".
"இவனெல்லாம் மச்சானா?, கொஞ்சமாவது மாப்ளை பற்றி கரிசனை இருக்கா உன் அண்ணனுக்கு?,என்னை பார்த்து நக்கலா பாக்கியராஜ் பாட்டு பாடுறான்.
நான் உன்னை பேர் சொல்லி கூப்பிடுவேனு நீ எதிர் பார்த்திருக்க மாட்டடி என்றவன்,இருந்தாலும் உனக்கு இவ்வளவு திமிரு இருக்க கூடாது. தண்ணில விழுந்தவளை காப்பாத்துனானே ஒருத்தன்,அவனுக்கு நன்றி சொன்னியாடி?
"இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் ஆட போடுவ?,எவ மேலயும் ஆசை வரலையே,இருட்டுல வந்து மோதி விட்டு என்னை அலைகழிக்க வைக்கிறது சரியாடி???சரி...போனது போகட்டும்,ஒரு முறையாவது திரும்பி பார்த்தியாடினு திட்டியவன்,இன்றைக்கு இது போதும். இல்லை,உன் நொண்ணன் கதவை ஒடைச்சிட்டு உள்ளே வந்துருவானென்று வேறு டிரஸ் மாற்றிக்கொண்டு கீழே வந்தான்".
என்னடா அடிபட்டுருக்குனு சொல்றானே?? என வேலு கேட்க, முட்டியில காயம் தான் என்ற கதிருக்கு, ஓஓ...ஊசி எதாவது போட்டாங்களா?
யோவ் மாமா...பொறுமையா கேளுயா, விஜயசாந்தி மேடம் உள்ளே தான் இருக்குறாங்களென்று நிலவன் பதற்றமாக சொல்ல,ஹாஹாஹா...என்று சிரித்தவன் இருடா ஒரு நாளைக்கு இதை காதுல வாங்கி,உன் முதுகுல சின்னத்தை டின்னு கட்டுதா இல்லையானு பாரு என்ற வேலுவிற்கு, மாமா...மைண்ட் வாய்ஸ்னு நினைச்சி கிட்டு சத்தமா பேசுறயா.
என்னடா கிண்டலா என்றவன்,நாளைக்கு நடக்கப்போகும் வேலையை பற்றி வேலு கேட்டுக் கொண்டிருந்தான்.வேலுக்கு பதில் சொன்னாலும் கதிரின் சிந்தனையெல்லாம் தாமரை படியில் ஏறி ஓடிய உருவமே நினைவில் வந்து இம்சைகள் செய்தது".
நண்பனுக்கு பேச்சில் கவனமில்லை என்பது வேலுவுக்கு புரிய,அவன் தொடையில் ஒரு அடி வைத்தான், அடியின் வலியில் ஏண்டா தடிமாடு,ம்ம்... இப்போ நான் என்ன சொன்னேன் சொல்லு?? என வேலு கேட்க,நீ எங்கேடா பேசுன?
நீலகிரி...
"மயிலா இப்படி ஒரு விஷயத்தை தன்னிடம் கேட்பாரென்று வேதா சிறிதும் நினைக்கவில்லை.அப்போ,மருதுக்கு முன்பிருந்தே தாமரை மேல விருப்பம் இருந்துருக்கு என்பதை புரிந்து கொண்டவர்,எதுக்கு இந்த விஷயத்தை நீட்டி முழக்கனும் என நினைத்தவர், எழுந்து போய் தனது போனை எடுத்து அண்ணனுக்கு கால் பண்ணினார்".
" கம்மங்கறுதை அறுத்துக்கொண்டிருந்த அன்பழகனுக்கு செல் போன் ரிங் டோன் சத்தம் கேட்க,அங்கிருந்து சென்று மரத்தின் நிழலில் இருந்த பையை திறந்து போனை எடுத்தவருக்கு,தங்கை கால் பண்ணுவது தெரிய,அட்டென் பண்ணியவர்,சொல்லுமா நல்லா இருக்கியா?.
"நான் நல்லா இருக்கேண்ணா. அங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?"
"இங்கையும் எல்லாரும் சுகமாக தான் இருக்காங்கம்மா" என்றவரிடம், "அண்ணா ஒரு விஷயம் பேசனும்" என்று வேதா தயங்க, "உன் அண்ணன்கிட்ட என்னத்தா தயக்கம் கேளுமா."
"தாமரை கல்யாணம் விஷயமா அண்ணா."
"ஏத்தா! உனக்கு நான் சொல்லி தான் தெரியனும்னு இல்லை. பெத்தது நானா இருந்தாலும் ஆளாக்குனது நீ தான்மா. தாமரை விஷயத்தில் நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான். உனக்கு பிறகு தான்டா எனக்கு உரிமை" என்று அன்பு சொல்ல, அண்ணனின் வார்தைகளை கேட்ட வேதாவிற்கு ஆனந்த கண்ணீர் வந்தது.
"இப்போ எங்கே இருக்கணா?"
"நம்ப கம்மங்காட்டுல தான்மா. இன்னும் செத்த நேரத்துல வீட்டுக்கு போய்டுவேன்" என்றார்.
அப்படியாணா, நம்ப மருதுக்கு தாமரைய பொண்ணு கேட்குறாங்கணானு விஷயத்தை சொல்ல, "நீ என்ன நினைக்கிற?என்றார்".
நல்ல பையன் தான்ணா. கண்ணு முன்னாடி வளர்ந்த பையன். நல்ல குடும்பம்.
சரிமா. வீட்டுக்கு போனதும் போன் பண்ணுறேன். நீ கவிதா கிட்ட பேசிக்கோ."
"சரிணா" என்று வேதாவும் அழைப்பை கட் பண்ணிய வேதாவோ, சுவற்றில் இருந்த புகைப்படத்தின் அருகில் சென்று பார்க்க, அதில் ஏழு வயது சிறுமியாக இருந்ததிலிருந்து இன்று இளம் பெண்ணாக இருக்கும் தாமரையின் புகைப்படங்கள் பெரியதாக பிரேம் பண்ணி தொங்கி கொண்டிருந்தது.
இதுவரை தாமரையின் திருமணம் என்ற ஒன்றை பற்றி வேதா யோசித்து பார்த்ததில்லை. இன்று மயிலா பேசி சென்ற பிறகுதான் அவள் இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்ட உண்மை வளர்த்த தாயிற்கு விளங்கியதும், அவர் கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது.
ஒரு நாள் கூட வேதாவை பிரிந்து இருந்ததில்லை தாமரை. வேதாவிற்கு மாதத்தில் ஓர் நாள் வழக்கமான மீட்டிங் இருக்கும்,எவ்வளவு நேரமானாலும் வீட்டிற்கு வந்து விடுவார்.
ஆனால், தாமரையோ திடிரென்று, "ஊருக்கு போய்விட்டு வரட்டுமா?" என்று கேட்டது அதிர்சியாக தான் இருந்தது. ஆனாலும் மனமுவந்தே தான் பிறந்த ஊருக்கு அண்ணன் மகளை அனுப்பி வைத்தார்.