Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
கதிர் வீடு....
வயலுக்கு சென்றிருந்த பிரகாசமும், முத்துவும் வீட்டுக்குள் வர, அவர்களும் நிலவனிடம் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருக்க,அங்கு வந்த ராதா, சாப்டலாம் வாங்க என்றவர் சமைத்த உணவுகளை எடுத்து வந்து வைத்தார்.
போங்கப்பா போய் சாப்பிடுங்களென்று வள்ளி அப்பாயிடம் நீயும் வா என்று கதிர் கூப்பிட,எனக்கு உன் அம்மா கூழ் கிண்டியிருக்காள்.நான் கொஞ்ச நேரம் போன பிறகு குடிக்கிறேன் நீங்கலாம் சாப்டுங்கப்பா.
ஆண்கள் நால்வரும் சாப்பிட அமர,ராதா பரிமாற,சீதாவோ சமையல் கட்டில் சூடாக தோசை ஊத்திக்கொண்டிருக்க அதை செல்வி எடுத்து வந்து கொடுத்துக்கொண்டிருந்தாள்.
" பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்த கதிர், அப்பா வயலுக்கு மருந்து போட ஆள் வர சொல்லிருக்கேன்னு முத்துவிடம் சொல்ல,சரிப்பா நீ அங்கே பாரு.நான் கரும்பு தோட்டத்துக்கு போறேன்.
நேற்று வேலை சரியாவே நடக்கலை, பார் கொத்துனது எதுவும் சரியில்லை என்றவர்,செல்வி அம்மாகிட்ட டீ ஒன்னு சொல்லுமா என்று எழுந்து போய் கையை கழுவியவர்,அவரது அறைக்குள் சென்றார்.
சமையலறைக்குள் வந்தவள், அம்மா... அப்பாக்கு டீ வேண்டுமாம் என்க,இது தெரிஞ்ச விஷயம் தானே என்றவர்,கையில் டீ டம்ளரோடு கணவரிடம் சென்றார்.
அம்மா... எனக்கும் பசிக்குதுனு செல்வி சொல்ல,சாப்ட வேண்டியது தானே,உன் தட்டை யாராவது புடிங்கி வச்சிகிட்டாங்கலா என்றவாறு நிலவன் வந்தான்.
" அடேய் கொரங்கு சாப்பிட்ட கொழுப்பாடா என்க,செல்வி....வர வர உனக்கு ரொம்ப வாய் நீளுது என்றைக்கு வாங்கி கட்டிக்க போறனு தெரியலை என்றபடியே மகளுக்கு பிடித்த போல முறுவல் தோசையை சுட்டவர்,தட்டில் வைத்து அவளிடம் நீட்ட, ம்கும் என முறுக்கி காட்டி வெளியே சென்றாள்.
"என்னப்பா வலிக்குதானு சின்ன மகனிடம் கேட்க,ஆமாமா என்றவன், நான் ப்ரண்ட்ஸை பாக்க போகனும்மா.அடேய்...அப்பா, அண்ணன்லாம் இருக்காங்க.கொஞ்சம் பொறு பின்ன போகலாம் என்றார் சீதா.
"ம்ம்...சரிம்மா என்றவன் அங்கிருந்து போய் ஹாலில் இருந்த டீவியை ஆன் பண்ண,செல்வி பாட்டு சேனலை வைக்க சொல்ல,வள்ளி அப்பாயி நாடகம் வைக்க சொல்ல,நிலவனோ காமெடி சேனலை தேடி வைத்தான்.
"மோரோடு சேர்த்து கரைத்த கேழ்வரகு கூழில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், மாங்காய்களை சேர்த்து நன்கு கலந்து அதை சொம்பில் ஊற்றியவர், இன்னொரு தட்டில் வறுத்த கொத்தவரங்காய் வற்றல் மற்றும் மோர்மிளகாயையும் எடுத்துக்கொண்டு மாமியாரிடம் வந்து கொடுத்தார்.
"இன்னும் பெருமாள் வரலையாம்மா? என்க,இல்லத்தை என்றார் சீதா.சரிம்மா என்றவர் கூழை குடித்து முடித்தவரோ நானும் வயலுக்கு போறேன் மா என்றார்.
தனது அறைக்கு வந்த கதிர், வேலுவிற்கு கால் பண்ணினான். இரண்டு முறை அழைத்தும் அவன் எடுக்க வில்லை.எங்கே போனான் இவனென்று யோசனையோடே தனது வண்டியில் ஏறி ஏரிக்கரையை நோக்கி சென்றான்.
"போகும் வழியில் எங்கேயாவது அல்லி தென்படுகிறாளா என்று பார்த்துக்கொண்டே செல்ல,அல்லி அவன் கண்ணில் படவேயில்லை. அப்பொழுது அவன் மனசாட்சி கேள்வி கேட்டது,நீ இப்போ எதுக்கு அல்லியை தேடுறடா என்று?.
"அது வந்து...அது வந்து...என்ன சொல்லு என்க,வேலு அந்த செயினை அவங்க அக்கா கிட்ட குடுத்துட்டானானு தெரிஞ்சிக்க தான் என்றான் கதிர் தனது மனசாட்சிக்கு.அதற்கு அதுவோ,இதை நீ வேலு கிட்ட தான் கேட்கனும்?என்றது.
இப்படியே தனது மனசாட்சியிடம் தாமரை பற்றி பேசிக்கொண்டே வயல் மேட்டுக்கு வந்து சேர்ந்தவன், வழக்கமாக நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு, ரோட்டிலிருந்து கீழே செல்லும் வரப்பில் இறங்கி நடந்து சென்றான்..
வேலையாட்களோ மருந்துகளை ஒன்றாக கலந்து கொண்டிருந்தனர் வர்களிடம்.அவர்களிடம் சென்றவன், எந்த வயலுக்கு எவ்வளவு,யுரியா, னடி. ஏ. பி, பொட்டாஸ் போடனும் என்று அளந்து தனியாக எடுத்து வைத்து விட்டு,முதல் நாள் நட்ட நடவில் இறங்கி ஆட்களோடு மருந்து போட ஆரம்பித்தான்.
கதிரோடு சேர்ந்து ஐந்து பேர் வேலை செய்வதால் சுற்றி இருக்கும் நடவு வயல்களுக்கு விரைந்து மருந்துகளை போட்டு முடித்தனர்.மீதம் இருந்த மருந்து மூட்டைகளை மோட்டார் கொட்டகைக்குள் வைக்க சொன்னவன், அங்கிருந்து காய்கறி தோட்டத்திற்கு சென்றான்.
அங்கே வேலையாட்கள்,காய்கறிகளை பறித்து வந்து ஒரு பக்கம், தனித்தனியாக குமித்து கொண்டிருக்க, அதை இருவர் சாக்கில் எடை போட்டு எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்களருகில் சென்றவன் ஒரு பார்வை சுற்றி பார்த்து விட்டு,வேலையாட்களிடம் சிலதை சொல்லி விட்டு,அங்கிருந்து ஏரிக்கரையை நோக்கி சென்றான்.
"வயலுக்கு மருந்து போட்டதால் வேறு எந்த வேலையையும் அவனால் செய்ய முடியவில்லை.கையெல்லாம் மருந்து வாசனை அடிக்க,முதலில் குளிக்க வேண்டுமென்று மரத்தில் தொங்கி கொண்டிருந்த சட்டை பையில் இருந்து குளியல் சோப்பை எடுத்துக்கொண்டான்.
ஏரிக்கரை படிக்கட்டுக்கு வந்தவன்,வழக்கமாக சோப்பு வைக்கும் இடத்தில் அதை வைத்து விட்டு,அங்கிருந்து நீரில் பாய்ந்தவனோ அக்கரையை நோக்கி நீச்சலடித்தான்.
நீச்சல் அடித்து முடித்தவன் கரைக்கு வந்து சோப்பை போட்டு மருந்து வாடையை போக்கி கொண்டிருந்தான். பின் மீண்டும் தண்ணீரில் நனைந்தவன் மூச்சை பிடித்து நீருக்குள் முழ்கியிருந்தான்.சிறு வயதிலிருந்து வேலுவும் கதிரும் இந்த விளையாட்டை விளையாட மறப்பதில்லை.
முடிந்த அளவு வரைந்து முடித்தவள், இனி வீட்டிற்கு செல்லலாம் என எழுந்து கை கால்களை உதறி சோம்பலை போக்கிக்கொண்டிருக்க கோயில் வாசலில் சிவாவின் வண்டியும் வந்து நின்றது.
வண்டி சத்தம் கேட்டு வாசலை பார்த்தவள் அங்கு தனது தம்பி நிற்பதை கண்டு, சாமியை மீண்டும் வணங்கிவிட்டு,தனது பொருட்களை எடுத்தவள் அவனிடம் வர,கடலை காய வைக்குற ஆளுங்களுக்கு டீ போட்டு குடுத்துச்சி அம்மா.
உன்னையும் அப்படியே வீட்டுக்கு கூப்பிட்டு வர சொல்லுச்சிக்கா வந்து உட்காரு என்றான்.
தம்பி சொன்னதை கேட்டவள் நீ போய்டே இருடா நான் நடந்து வரேன்.காலையிலிருந்து உட்கார்ந்தே வரைந்தது கை காலெல்லாம் ஒரு மாதிரியா இருக்குனு தாமரை சொல்ல, அப்படியா,அங்க வர உனக்கு வழி தெரியுமாக்கா?
தெரியாதுடா நீ சொல்லு நான் வந்துடுறேன் என்க,ஏரிக்கரை வழியாக வந்து அங்கே வலது பக்கம் திரும்பினால் போர் கொட்டகை இருக்கும் பாரு.அந்த வரப்பு வழியா வந்தால் நாலாவது களத்து மேடு நம்முடையது தான்,இல்லைனா எனக்கு போன் பண்ணு நான் எதிரில் வரேன்.
நீ பார்த்து வாக்கா டீ ஆறி போவதற்குள் நான் போய் குடுக்குறேன்.இல்லை அந்த கலா தாம் தூமென்று குதித்து உசுர வாங்குமென்று தனது அப்பாயியை பற்றி அக்காவிடம் சொல்லி சிரித்தவன் அங்கிருந்து சென்றான்.
தம்பி சொன்னதை நினைத்து சிரித்துக்கொண்டே அவன் வண்டி சென்ற திசையில் நடந்தவள் இரு புறமும் தெரியும் இயற்கையை ரசித்துக்கொண்டே ஏரிக்கரையின் ஓரம் நடந்தவளின் கண்ணில் பட்டது அந்த காட்சி.
"ஏரிகரையில் இருக்குப் படிக்கட்டுவின் பக்கத்தில் ஆகாயத்தாமரையும், அல்லியும்,தாமரையும் பூத்திருக்க அதை தனது போனில் புகைப்படமாக எடுத்தவளுக்கு, தண்ணீரில் இறங்க ஆசை வந்தது.
சுற்றியும் யாராவது இருக்கிறார்களா என தனது கண்களை சுழற்றி பார்த்தவளுக்கு,அங்கிருந்த இயற்கையின் அழகை தவிர வேறு எதுவும் கண்ணில் படவில்லை.
சரியென அங்கு வந்தவள், கையிலிருந்த செல்போனை படிகட்டின் மேல் வைத்து விட்டு,செருப்பை கழட்டி அங்கேயே விட்டவள்,படியின் மேல் கால் வைத்து இறங்கியவளோ கீழ் படியில் இருக்கும் தண்ணீரின் மேல் தனது வலது கால் தூக்கி வைக்க போக,நீரில் மூழ்கியிருந்தவன் அந்த நேரத்தில் மேலே எழுந்திரிக்க திடிரென்று நீரிலிருந்து வந்த உருவத்தை என்னவோனு அதிர்ந்து படியில் கால் வைக்குறேன் என நீரிலே வைக்க அதன் மேலிருந்த பாசியோ அவளை வழுக்கி விடவும் தண்ணீரிலிருந்து எழுந்தவன் மேலே நேராக விழுந்தாள் தாமரை.
இதை அவனும் எதிர் பார்க்கவில்லை. மீண்டும் அதே மின்சாரம் தாக்கிய உணர்வு இருவருக்கும் வந்தது.ஆனால் இருக்கும் சூழல் தெரிந்து அதை பற்றி யோசிக்கவில்லை.
தன் மேல் விழுந்தவளை தாங்கியவன் மேலே எழும்போது மீண்டும் அவன் உடலின் அணுக்கள் ரசாயன மாற்றத்தை கொடுத்துக்கொண்டிருக்க, முத்தானையால் மூடியிருக்கும் அவள் முகத்தை விலக்கி பார்க்க போகும் போது,அவன் கையிலிருந்து துள்ளி குதித்தவள் தண்ணீரிலிருந்து படிக்கட்டில் ஏறப்போக,கதிரோ ஒரே எட்டில் அவளின் இடது கையை எட்டிப் பிடித்தான்.
"தற்பொழுது தாமரைக்கும் புரிந்து விட்டது, இவனின் பிடியில் தனக்குள் மீண்டும் அதே மாற்றங்கள் உருவாகுவதை வைத்து அன்று விழுந்தது இவன் மேல் தான் என்று.
ஆனாலும் பெண்மைக்கே உள்ள உணர்வு அவனை பார்க்க விடாமல் தடுக்க,திரும்பி பார்க்காமலே கொஞ்சம் வலுவாக அவனிடமிருந்து தனது கையை உதறி விடுவித்து கொண்டவள், படியின் மேலிருந்த போனை எடுத்துக்கொண்டு திரும்பி பார்காமல் ஓடினாள்.
தண்ணீரிலிருந்து மேலே வர நினைத்தவன்,குளிப்பதற்காக இடுப்பில் துண்டு மட்டும் கட்டியிருப்பதை உணர்ந்தவன்,தாமரை என்று சொல்லி தண்ணீரில் கையால் அடித்தவன், கரையின் மேலே ஈர புடவையில் நீர் சொட்ட சொட்ட,நீண்ட பின்னல் இருபுறமும் ஆட,எழிலோவியமாய் ஓடுபவளை மெய் மறந்து ரசித்தான்
இன்று எப்படியாவது அவள் முகத்தை பார்த்து விடனுமென்று சூலுறைத்தவன் வேக மாக படியில் ஏறி ஏய் தாமரை... நிள்ளுடி என்று வேகமாக கத்தினான்.
"ஈர உடையில் வேகமாக ஓட முடியாததால் மிதமான வேகத்திலே ஓடிக்கொண்டிருந்தவளின் காதில் அவனின் கணீர் குரல் கேட்டு அதிர்ந்தவள்,நம்ப பேர் இவனுக்கு எப்படி தெரியுமென யோசனையோடே ஓட்டத்தை விட்டு நடக்க,சில அடி தூரத்தில் தனது தம்பி வருவது தெரிந்தது.
சிவா வருவதை பார்த்த கதிர்,அவள் ஈர உடையோடு இருக்கும் கோலமும்,தான் படியில் இருப்பதையும் கண்டால் எதாவது நினைப்பானோ என்று நினைத்தவன் படியின் கீழே இறங்கிவிட்டான்.
என்னக்கா இவ்வளவு ஈரமாக இருக்க?? என்க,வறட்சியா இருக்கேனு முகத்தை வாஸ் பண்ணலானு தண்ணில இறங்கும் போது பாசி வழிக்கிட்டுடா என்றாள்.
அய்யோ!
எதாவது அடி பட்டிருச்சா??என பதற,இல்லைடா என்கவும் சரி வா வீட்டுக்கு போகலாம்,ம்ம் என்று தம்பியின் வண்டியின் பின்னால் அமர்ந்தவள் மறந்தும் பின் பக்கம் திரும்பி பார்க்க வில்லை.
படிக்கட்டில் ஏறியவனின் கண்ணில் அங்கங்கே அவள் கூந்தலில் இருந்து உதிர்ந்து கிடக்கும் மல்லிகை பூக்கள் தென்பட, அதையெல்லாம் கையிலெடுத்துக்கொண்டே மேலே வந்தவன்,ஒரு முறையாவது தன்னை திரும்பி பார்ப்பாளென ஆவலோடு அவள் சென்ற திசையிலே பார்த்திருக்க, அவன் கண்ணிலிருந்து மறையும் வரை, திரும்பி பார்க்காமலே அவன் எண்ணத்தில் இடியை போட்டுச் சென்றாள்.
வயலுக்கு சென்றிருந்த பிரகாசமும், முத்துவும் வீட்டுக்குள் வர, அவர்களும் நிலவனிடம் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருக்க,அங்கு வந்த ராதா, சாப்டலாம் வாங்க என்றவர் சமைத்த உணவுகளை எடுத்து வந்து வைத்தார்.
போங்கப்பா போய் சாப்பிடுங்களென்று வள்ளி அப்பாயிடம் நீயும் வா என்று கதிர் கூப்பிட,எனக்கு உன் அம்மா கூழ் கிண்டியிருக்காள்.நான் கொஞ்ச நேரம் போன பிறகு குடிக்கிறேன் நீங்கலாம் சாப்டுங்கப்பா.
ஆண்கள் நால்வரும் சாப்பிட அமர,ராதா பரிமாற,சீதாவோ சமையல் கட்டில் சூடாக தோசை ஊத்திக்கொண்டிருக்க அதை செல்வி எடுத்து வந்து கொடுத்துக்கொண்டிருந்தாள்.
" பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்த கதிர், அப்பா வயலுக்கு மருந்து போட ஆள் வர சொல்லிருக்கேன்னு முத்துவிடம் சொல்ல,சரிப்பா நீ அங்கே பாரு.நான் கரும்பு தோட்டத்துக்கு போறேன்.
நேற்று வேலை சரியாவே நடக்கலை, பார் கொத்துனது எதுவும் சரியில்லை என்றவர்,செல்வி அம்மாகிட்ட டீ ஒன்னு சொல்லுமா என்று எழுந்து போய் கையை கழுவியவர்,அவரது அறைக்குள் சென்றார்.
சமையலறைக்குள் வந்தவள், அம்மா... அப்பாக்கு டீ வேண்டுமாம் என்க,இது தெரிஞ்ச விஷயம் தானே என்றவர்,கையில் டீ டம்ளரோடு கணவரிடம் சென்றார்.
அம்மா... எனக்கும் பசிக்குதுனு செல்வி சொல்ல,சாப்ட வேண்டியது தானே,உன் தட்டை யாராவது புடிங்கி வச்சிகிட்டாங்கலா என்றவாறு நிலவன் வந்தான்.
" அடேய் கொரங்கு சாப்பிட்ட கொழுப்பாடா என்க,செல்வி....வர வர உனக்கு ரொம்ப வாய் நீளுது என்றைக்கு வாங்கி கட்டிக்க போறனு தெரியலை என்றபடியே மகளுக்கு பிடித்த போல முறுவல் தோசையை சுட்டவர்,தட்டில் வைத்து அவளிடம் நீட்ட, ம்கும் என முறுக்கி காட்டி வெளியே சென்றாள்.
"என்னப்பா வலிக்குதானு சின்ன மகனிடம் கேட்க,ஆமாமா என்றவன், நான் ப்ரண்ட்ஸை பாக்க போகனும்மா.அடேய்...அப்பா, அண்ணன்லாம் இருக்காங்க.கொஞ்சம் பொறு பின்ன போகலாம் என்றார் சீதா.
"ம்ம்...சரிம்மா என்றவன் அங்கிருந்து போய் ஹாலில் இருந்த டீவியை ஆன் பண்ண,செல்வி பாட்டு சேனலை வைக்க சொல்ல,வள்ளி அப்பாயி நாடகம் வைக்க சொல்ல,நிலவனோ காமெடி சேனலை தேடி வைத்தான்.
"மோரோடு சேர்த்து கரைத்த கேழ்வரகு கூழில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், மாங்காய்களை சேர்த்து நன்கு கலந்து அதை சொம்பில் ஊற்றியவர், இன்னொரு தட்டில் வறுத்த கொத்தவரங்காய் வற்றல் மற்றும் மோர்மிளகாயையும் எடுத்துக்கொண்டு மாமியாரிடம் வந்து கொடுத்தார்.
"இன்னும் பெருமாள் வரலையாம்மா? என்க,இல்லத்தை என்றார் சீதா.சரிம்மா என்றவர் கூழை குடித்து முடித்தவரோ நானும் வயலுக்கு போறேன் மா என்றார்.
தனது அறைக்கு வந்த கதிர், வேலுவிற்கு கால் பண்ணினான். இரண்டு முறை அழைத்தும் அவன் எடுக்க வில்லை.எங்கே போனான் இவனென்று யோசனையோடே தனது வண்டியில் ஏறி ஏரிக்கரையை நோக்கி சென்றான்.
"போகும் வழியில் எங்கேயாவது அல்லி தென்படுகிறாளா என்று பார்த்துக்கொண்டே செல்ல,அல்லி அவன் கண்ணில் படவேயில்லை. அப்பொழுது அவன் மனசாட்சி கேள்வி கேட்டது,நீ இப்போ எதுக்கு அல்லியை தேடுறடா என்று?.
"அது வந்து...அது வந்து...என்ன சொல்லு என்க,வேலு அந்த செயினை அவங்க அக்கா கிட்ட குடுத்துட்டானானு தெரிஞ்சிக்க தான் என்றான் கதிர் தனது மனசாட்சிக்கு.அதற்கு அதுவோ,இதை நீ வேலு கிட்ட தான் கேட்கனும்?என்றது.
இப்படியே தனது மனசாட்சியிடம் தாமரை பற்றி பேசிக்கொண்டே வயல் மேட்டுக்கு வந்து சேர்ந்தவன், வழக்கமாக நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு, ரோட்டிலிருந்து கீழே செல்லும் வரப்பில் இறங்கி நடந்து சென்றான்..
வேலையாட்களோ மருந்துகளை ஒன்றாக கலந்து கொண்டிருந்தனர் வர்களிடம்.அவர்களிடம் சென்றவன், எந்த வயலுக்கு எவ்வளவு,யுரியா, னடி. ஏ. பி, பொட்டாஸ் போடனும் என்று அளந்து தனியாக எடுத்து வைத்து விட்டு,முதல் நாள் நட்ட நடவில் இறங்கி ஆட்களோடு மருந்து போட ஆரம்பித்தான்.
கதிரோடு சேர்ந்து ஐந்து பேர் வேலை செய்வதால் சுற்றி இருக்கும் நடவு வயல்களுக்கு விரைந்து மருந்துகளை போட்டு முடித்தனர்.மீதம் இருந்த மருந்து மூட்டைகளை மோட்டார் கொட்டகைக்குள் வைக்க சொன்னவன், அங்கிருந்து காய்கறி தோட்டத்திற்கு சென்றான்.
அங்கே வேலையாட்கள்,காய்கறிகளை பறித்து வந்து ஒரு பக்கம், தனித்தனியாக குமித்து கொண்டிருக்க, அதை இருவர் சாக்கில் எடை போட்டு எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்களருகில் சென்றவன் ஒரு பார்வை சுற்றி பார்த்து விட்டு,வேலையாட்களிடம் சிலதை சொல்லி விட்டு,அங்கிருந்து ஏரிக்கரையை நோக்கி சென்றான்.
"வயலுக்கு மருந்து போட்டதால் வேறு எந்த வேலையையும் அவனால் செய்ய முடியவில்லை.கையெல்லாம் மருந்து வாசனை அடிக்க,முதலில் குளிக்க வேண்டுமென்று மரத்தில் தொங்கி கொண்டிருந்த சட்டை பையில் இருந்து குளியல் சோப்பை எடுத்துக்கொண்டான்.
ஏரிக்கரை படிக்கட்டுக்கு வந்தவன்,வழக்கமாக சோப்பு வைக்கும் இடத்தில் அதை வைத்து விட்டு,அங்கிருந்து நீரில் பாய்ந்தவனோ அக்கரையை நோக்கி நீச்சலடித்தான்.
நீச்சல் அடித்து முடித்தவன் கரைக்கு வந்து சோப்பை போட்டு மருந்து வாடையை போக்கி கொண்டிருந்தான். பின் மீண்டும் தண்ணீரில் நனைந்தவன் மூச்சை பிடித்து நீருக்குள் முழ்கியிருந்தான்.சிறு வயதிலிருந்து வேலுவும் கதிரும் இந்த விளையாட்டை விளையாட மறப்பதில்லை.
முடிந்த அளவு வரைந்து முடித்தவள், இனி வீட்டிற்கு செல்லலாம் என எழுந்து கை கால்களை உதறி சோம்பலை போக்கிக்கொண்டிருக்க கோயில் வாசலில் சிவாவின் வண்டியும் வந்து நின்றது.
வண்டி சத்தம் கேட்டு வாசலை பார்த்தவள் அங்கு தனது தம்பி நிற்பதை கண்டு, சாமியை மீண்டும் வணங்கிவிட்டு,தனது பொருட்களை எடுத்தவள் அவனிடம் வர,கடலை காய வைக்குற ஆளுங்களுக்கு டீ போட்டு குடுத்துச்சி அம்மா.
உன்னையும் அப்படியே வீட்டுக்கு கூப்பிட்டு வர சொல்லுச்சிக்கா வந்து உட்காரு என்றான்.
தம்பி சொன்னதை கேட்டவள் நீ போய்டே இருடா நான் நடந்து வரேன்.காலையிலிருந்து உட்கார்ந்தே வரைந்தது கை காலெல்லாம் ஒரு மாதிரியா இருக்குனு தாமரை சொல்ல, அப்படியா,அங்க வர உனக்கு வழி தெரியுமாக்கா?
தெரியாதுடா நீ சொல்லு நான் வந்துடுறேன் என்க,ஏரிக்கரை வழியாக வந்து அங்கே வலது பக்கம் திரும்பினால் போர் கொட்டகை இருக்கும் பாரு.அந்த வரப்பு வழியா வந்தால் நாலாவது களத்து மேடு நம்முடையது தான்,இல்லைனா எனக்கு போன் பண்ணு நான் எதிரில் வரேன்.
நீ பார்த்து வாக்கா டீ ஆறி போவதற்குள் நான் போய் குடுக்குறேன்.இல்லை அந்த கலா தாம் தூமென்று குதித்து உசுர வாங்குமென்று தனது அப்பாயியை பற்றி அக்காவிடம் சொல்லி சிரித்தவன் அங்கிருந்து சென்றான்.
தம்பி சொன்னதை நினைத்து சிரித்துக்கொண்டே அவன் வண்டி சென்ற திசையில் நடந்தவள் இரு புறமும் தெரியும் இயற்கையை ரசித்துக்கொண்டே ஏரிக்கரையின் ஓரம் நடந்தவளின் கண்ணில் பட்டது அந்த காட்சி.
"ஏரிகரையில் இருக்குப் படிக்கட்டுவின் பக்கத்தில் ஆகாயத்தாமரையும், அல்லியும்,தாமரையும் பூத்திருக்க அதை தனது போனில் புகைப்படமாக எடுத்தவளுக்கு, தண்ணீரில் இறங்க ஆசை வந்தது.
சுற்றியும் யாராவது இருக்கிறார்களா என தனது கண்களை சுழற்றி பார்த்தவளுக்கு,அங்கிருந்த இயற்கையின் அழகை தவிர வேறு எதுவும் கண்ணில் படவில்லை.
சரியென அங்கு வந்தவள், கையிலிருந்த செல்போனை படிகட்டின் மேல் வைத்து விட்டு,செருப்பை கழட்டி அங்கேயே விட்டவள்,படியின் மேல் கால் வைத்து இறங்கியவளோ கீழ் படியில் இருக்கும் தண்ணீரின் மேல் தனது வலது கால் தூக்கி வைக்க போக,நீரில் மூழ்கியிருந்தவன் அந்த நேரத்தில் மேலே எழுந்திரிக்க திடிரென்று நீரிலிருந்து வந்த உருவத்தை என்னவோனு அதிர்ந்து படியில் கால் வைக்குறேன் என நீரிலே வைக்க அதன் மேலிருந்த பாசியோ அவளை வழுக்கி விடவும் தண்ணீரிலிருந்து எழுந்தவன் மேலே நேராக விழுந்தாள் தாமரை.
இதை அவனும் எதிர் பார்க்கவில்லை. மீண்டும் அதே மின்சாரம் தாக்கிய உணர்வு இருவருக்கும் வந்தது.ஆனால் இருக்கும் சூழல் தெரிந்து அதை பற்றி யோசிக்கவில்லை.
தன் மேல் விழுந்தவளை தாங்கியவன் மேலே எழும்போது மீண்டும் அவன் உடலின் அணுக்கள் ரசாயன மாற்றத்தை கொடுத்துக்கொண்டிருக்க, முத்தானையால் மூடியிருக்கும் அவள் முகத்தை விலக்கி பார்க்க போகும் போது,அவன் கையிலிருந்து துள்ளி குதித்தவள் தண்ணீரிலிருந்து படிக்கட்டில் ஏறப்போக,கதிரோ ஒரே எட்டில் அவளின் இடது கையை எட்டிப் பிடித்தான்.
"தற்பொழுது தாமரைக்கும் புரிந்து விட்டது, இவனின் பிடியில் தனக்குள் மீண்டும் அதே மாற்றங்கள் உருவாகுவதை வைத்து அன்று விழுந்தது இவன் மேல் தான் என்று.
ஆனாலும் பெண்மைக்கே உள்ள உணர்வு அவனை பார்க்க விடாமல் தடுக்க,திரும்பி பார்க்காமலே கொஞ்சம் வலுவாக அவனிடமிருந்து தனது கையை உதறி விடுவித்து கொண்டவள், படியின் மேலிருந்த போனை எடுத்துக்கொண்டு திரும்பி பார்காமல் ஓடினாள்.
தண்ணீரிலிருந்து மேலே வர நினைத்தவன்,குளிப்பதற்காக இடுப்பில் துண்டு மட்டும் கட்டியிருப்பதை உணர்ந்தவன்,தாமரை என்று சொல்லி தண்ணீரில் கையால் அடித்தவன், கரையின் மேலே ஈர புடவையில் நீர் சொட்ட சொட்ட,நீண்ட பின்னல் இருபுறமும் ஆட,எழிலோவியமாய் ஓடுபவளை மெய் மறந்து ரசித்தான்
இன்று எப்படியாவது அவள் முகத்தை பார்த்து விடனுமென்று சூலுறைத்தவன் வேக மாக படியில் ஏறி ஏய் தாமரை... நிள்ளுடி என்று வேகமாக கத்தினான்.
"ஈர உடையில் வேகமாக ஓட முடியாததால் மிதமான வேகத்திலே ஓடிக்கொண்டிருந்தவளின் காதில் அவனின் கணீர் குரல் கேட்டு அதிர்ந்தவள்,நம்ப பேர் இவனுக்கு எப்படி தெரியுமென யோசனையோடே ஓட்டத்தை விட்டு நடக்க,சில அடி தூரத்தில் தனது தம்பி வருவது தெரிந்தது.
சிவா வருவதை பார்த்த கதிர்,அவள் ஈர உடையோடு இருக்கும் கோலமும்,தான் படியில் இருப்பதையும் கண்டால் எதாவது நினைப்பானோ என்று நினைத்தவன் படியின் கீழே இறங்கிவிட்டான்.
என்னக்கா இவ்வளவு ஈரமாக இருக்க?? என்க,வறட்சியா இருக்கேனு முகத்தை வாஸ் பண்ணலானு தண்ணில இறங்கும் போது பாசி வழிக்கிட்டுடா என்றாள்.
அய்யோ!
எதாவது அடி பட்டிருச்சா??என பதற,இல்லைடா என்கவும் சரி வா வீட்டுக்கு போகலாம்,ம்ம் என்று தம்பியின் வண்டியின் பின்னால் அமர்ந்தவள் மறந்தும் பின் பக்கம் திரும்பி பார்க்க வில்லை.
படிக்கட்டில் ஏறியவனின் கண்ணில் அங்கங்கே அவள் கூந்தலில் இருந்து உதிர்ந்து கிடக்கும் மல்லிகை பூக்கள் தென்பட, அதையெல்லாம் கையிலெடுத்துக்கொண்டே மேலே வந்தவன்,ஒரு முறையாவது தன்னை திரும்பி பார்ப்பாளென ஆவலோடு அவள் சென்ற திசையிலே பார்த்திருக்க, அவன் கண்ணிலிருந்து மறையும் வரை, திரும்பி பார்க்காமலே அவன் எண்ணத்தில் இடியை போட்டுச் சென்றாள்.