Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
தாமரை வீடு!
"சிக்கு புள்ளிகளை வைத்து கோலம் போட்டவள்,அதன் நடுவில் சாணி உருண்டையையும் வீட்டின் மேல் படர்திருக்கும் பரங்கிப்பூவையும் கிள்ளி சாணியின் நடுவில் சொருகி விட்டு, தோட்டத்து பக்கம் செல்ல,அவளோடு வந்த அல்லியும் அங்கிருந்த சாணி அள்ளும் கூடையை எடுத்துக்கொண்டு மாட்டு கொட்டகைக்குள் சென்ற அக்கா தங்கை இருவரும் சேர்ந்தே சுத்தம் செய்து முடித்தனர்.
பின்னர் இருவரும் கிணற்றிலிருந்து நீரை இறைத்து கை கால்களை கழுவி வர,மகள்கள் இருவருக்கும் சூடான டீயை கொடுத்தவர்,தனது பெரிய மகளிடம் இந்த வேலையெல்லாம் நான் செய்வேன் இல்லையா எதுக்கு உனக்கு இந்த வேலையென்று கவிதா கேட்க, எம்மா நானும் நீ பெத்த மவள் தானென்று அல்லி முறைத்தாள்.
அது தான் எனக்கு பல நாட்களாக சந்தேகமா இருக்குடி.உன் கூட பொறந்தவளுக்கு இருக்கும் பொறுப்பில் கொஞ்சமாவது உனக்கு இருக்காடி?என்றபடி சின்ன மகளை பார்த்தார்
இப்படி அசிங்கப்படுத்துறியேம்மா, இப்போ உனக்கு என்ன வேலை செய்யனும்,சரி சொல்லு,நீ,ம் என்பதுக்குள் எப்படி செஞ்சி முடிக்கிறேனு பாரென்க,போய் பசு மாட்டிலிருந்து பால் கறந்துட்டு வா.
அதைக்கேட்டவள்,அது உதைச்சி தள்ளி எனக்கு கை கால் உடையனும் இதானே உன் எண்ணம்,வேற சொல்லு மா.சரி போய் சாணியை மிதிச்சி வறட்டி தட்டி போடு என்க,அது ரொம்ப நாத்தம் அடிக்கும்,வேற வேற,அப்போ மாட்டுக்கு போய் பருத்தி கொட்டையை ஆட்டுக்கல்லில் அறைச்சி எடுத்துவா என்கவும் ஏம்மா ஏன் இப்படியென்றாள்.
தாமரை உனக்கு பக்கத்தில் கிடக்குற அந்த வெளக்கமாற்றை கொஞ்சம் எடுனு கவிதா சொல்ல,அல்லிஈஈஈஈ எஸ்கேப் என்று உள்ளே ஓடினாள்.
" அம்மா... விடுமா,சின்னவள் தானே. போகப்போக வேலை எல்லாம் கத்துப்பாள் என்று தங்கைக்கு சப்போர்டாக தாமரை சொல்ல,அட நீ வேற தாமரை.லீவு விட்டா போதும் அந்த மூன்றாவது தெருவுல இருக்கிறாளே இவ சினேகிதி,அவகூட காடு கழனினு சுத்தவே இவளுக்கு நேரம் சரியா இருக்கு.இவள வச்சிக்கிட்டு என்னத்தை மாறடிக்க போறேன்னு தெரியலை.
"சரிம்மா....நான் சாமிக்கு பிரசாதம் பண்ணட்டுமா?,தாராளமா பண்ணு.பொங்கல் செய்வதற்கு தேவையானது எல்லாம் நைட்டே எடுத்து வச்சுட்டேன்.
சரிமா என்று சமையலறைக்கு உள்ளே போன தாமரையோ சக்கரை பொங்கல் செய்ய தயாரானாள்.
நெய் மணக்க மணக்க சாமிக்கு பிரசாதத்தை தயார் செய்தவள்,தனது அம்மாவோடு பேசியபடி காலை சமையல் செய்யும் போது வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொரு ஆளாக தூங்கி எழுந்து வந்தனர்.
அவர்களுக்கு டீ யை கொடுத்தவர், னஏய் அல்லி போய் குளிச்சிட்டு வா கோயிலுக்கு போகணும் என்க, பாட்டியின் அருகில் படுத்திருந்த அல்லி எழுந்து குளிக்கப்போனாள்.
"தனதறைக்கு வந்த தாமரை,பெட்டியில் இருந்த டிரஸ்களை பார்க்க அதில் கடல் நீலத்தில்,கரு நீலக்கலர் பார்டர் வைத்த புடவையை எடுத்தவள் ரொம்ப வருஷம் கழித்து குல தெய்வ கோயிலுக்கு போகிறோம்.இந்த புடவையே கட்டிப்போம் என தானே பேசிக்கொண்டவள்,அந்த புடவையை கட்டிக்கொண்டு,தனது நீண்ட கூந்தலை சீவி அழகாக பின்னி முடித்து சற்று நேரத்துக்கு முன்பு கவிதா கொடுத்த மல்லிகை பூச்சரத்தை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு,புடவை கலரில் நெற்றியில் பொட்டை வைத்து கண்ணாடியில் பார்க்க அவளுக்கே அவள் அழகாக தெரிந்தாள்.
"பின்னர்,உடைக்கு மேட்சாக வளையலையும் அதே கலரில், தொங்கட்டானையும் போட்டவளுக்கு கழுத்து மட்டும் வெறுமையாக இருப்பதை பார்த்து,தனது செயினின் நினைவு வந்தது.
"சரி போனது போய்விட்டது என்ன செய்யனு சமாதான படுத்திக் கொண்டவள்,கழுத்தில் போடுவதற்காக மேக்கப் பாக்ஸில் தேட,அவளின் அறைக்கதவு தட்டப்பட்டது.
தேடிய வேலையை விட்டு கதவை திறக்க அங்கே கலா பாட்டி நின்றிருந்தார்.சொல்லு அப்பாயி என்க, பேத்தியை புடவையில் பார்த்து மலைத்து நின்றவர்,எம்புட்டு அழகா இருக்க ஆத்தானு அவளின் கன்னம் கிள்ளி முத்தமிட்டவர் இந்தாம்மாயென்று அவளிடம் ஒரு சுருக்கு பையை நீட்டினார்.
அதை யோசனையோடே வாங்கியவள், என்ன அப்பாயி?என்க,உனக்காக இந்த அப்பாயி சேர்த்து வச்சது கண்ணு.ஓ என்று சுறுக்கு பையை திறந்து பார்க்க, அதில் இரட்டை வட செயின் அந்த காலத்து கல் வைத்த தோடு ஜிமிக்கி, மற்றும்,இரண்டு வகையான மோதிரங்கள்,கழுத்தில் போடும் அட்டிகை,கையில் போடும் கெட்டி காப்புகள் இரண்டு இருந்தது.
ஏது அப்பாயி இதெல்லாம்?
எங்க அம்மாச்சி எங்க அம்மாக்கு கொடுத்தது,அவங்க எனக்கு கொடுத்தாங்க,அதை இப்போ உனக்கு தரேன் ஆத்தா என்றவரை கட்டிக்கொண்டவள்,இப்போலாம் இதைப்போல பொருட்கள் தான் ஃபேமஸா இருக்கு அப்பாயி.
அப்பொழுது அங்கு வந்த அல்லி,அக்கா என் டிரஸ் எப்படி இருக்கென்று கேட்க, கிளி பச்சை கலர் பாவாடை சட்டையும், அதற்கு ரோஜா கலர் தாவணியும் அணிந்திருந்த அல்லியை பார்த்தவள் அழகா இருக்கடி.
அட போக்கா...நீ தான் செம்மையா இருக்க என்றவள்,என்ன இரண்டு பேரும் ரகசியம் பேசுறீங்க என்கவும், அப்பாயி இதெல்லாம் குடுத்தாங்கடி. இந்தா உனக்கு என்ன வேண்டுமோ எடுத்துக்கோ என்றாள்.
ஏன்கா..ஏன்...இப்படி....இது,இந்த மேடத்தோட பாரம்பர்ய நகையாம்.இது மூத்த பெண் வாரிசுக்கு மட்டும் தான் சொந்தமாம்,அதனால் எனக்கு இல்லை என்க,அடியேய் கத்தாழ கள்ளி என்றவர், அவ கிடக்குறா ஆத்தா,நீ வச்சிக்கோ.
சரி அப்பாயி.உங்க கிட்டவே இருக்கட்டும் நான் கோயிலுக்கு போய்ட்டு வந்து வாங்கிக்குறேன் என்கவும்,சரித்தா என்றார்.
கவிதாவும் தயாராகி வர,மூவரும் தங்கள் தோட்டத்து கதவு வழியாகவே நடந்து ஏரிகரை கிட்ட வந்தவர்கள், அங்கிருந்து இடது பக்கம் திரும்பி கோயில் இருக்கும் திசையை நோக்கி சென்றனர்.
சிறிது நிமிடத்தில் கோயிலுக்கு வந்த மூவரும் ஆளுக்கொரு வேலை என்று கோயிலை சுத்தம் பண்ணி முடிக்கவும், பூசாரியும் அங்கு வந்தார்.
எடுத்து வந்த பொருட்களை அவரிடம் கொடுத்த கவிதாவோ மகளின் வேலையை பற்றி சொல்லியவர், அம்மனிடம் பூஜை பண்ண சொல்ல சரிம்மா என்ற பூசாரி,கருவறைக்கு சென்று தாமரை எடுத்து வந்த குடத்து நீரால் அம்மனை குளிப்பாட்டி, பச்சைக்கலர் பட்டு புடவையை அம்மனுக்கு கட்டி,அலங்கரிக்க மேலும் அரை மணி நேரமானது.
பின்னர் அலங்காரத்தை முடித்தவர் மணியடித்து தீபாரதனை காட்டி விட்டு இவர்களிடம் வந்து காட்ட,மூவரும் ஆரத்தியை எடுத்துக்கொள்ள, அவர்களுக்கு விபூதி குங்குமம் கொடுத்தார்.
சரி தாமரை நல்ல நேரம் போவதற்குள் நீ வரைய ஆரம்பிடா என்கவும் சரிம்மா என்றவள்,அங்கு இருக்கும் சூழலை ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு அம்மனிடம் இந்த வேலையை நல்ல படியாக முடிக்க அருள் குடுங்கம்மா என்று மனதுருக வேண்டியவளோ தான் எடுத்து வந்த நோட்டில் வரைய தொடங்கினாள். இங்க பாரு அல்லி,அக்கா கூடவே இருக்கனும் என்றவர்,தாமரை நான் வீட்டிற்கு கிளம்புறேன்.இங்க ஒன்னும் பயம் இல்லை,இருந்தாலும் பத்திரமா இருங்களென்றபடி கவிதாவும் வீட்டிற்கு போக,தாமரையும் வரைவதில் கவனமாக இருக்க,அல்லிக்கோ ஒரே இடத்தில் இருப்பது கடுப்பாக வந்தது.
என்ன பண்ணலாமென்று யோசித்தவள்,கோவிலை சுற்றி அடைத்திருக்கும் வேலி வழியாக தூரத்தில் பார்க்க அங்கே ஏரிக்கரை ரோட்டின் மேல் அவளது தாத்தாவும் அப்பாயியும் வயலுக்கு போவது தெரிந்தது.
தேனூர்:
தனது வண்டியில் சென்று கொண்டிருந்தவனின் சிந்தனைகளெல்லாம் அத்தை வீட்டு வாசலில் கோலமிட்டவளின் மேலேயிருந்தது.
ம்ம்....பரவாயில்லையே காலையிலே எழும் பழக்கம் இருக்கு,சரி நமக்கு வசதி தானென்று சொல்ல,என்ன வசதி?என்றது கதிரின் மனசாட்சி.
அதானே?,எதுக்கு வசதி என்றவன்,ஆள் ரொம்ப உயரமும் இல்லை,அப்படி ஒன்னும் குட்டச்சியாவும் இல்லை, அளவான உயரத்தில்தான் இருப்பாள் போல.ஆனால் அவ முகம் எப்படி இருக்கும்னு தெரியலையே டா கதிரு?.
"கொஞ்சம் முன்னவே வந்திருந்தால் பார்த்திருக்கலாம் போலயேனு புலம்பிக்கொண்டே வண்டி ஓட்டியவன், கவிதா,அன்பழகன் இருவர் முக ஜாடையில் இவ யாரப்போல இருப்பாள்?என வாய் விட்டு சொல்லிக்கொண்டே கண்ணாடியை பார்த்தவன்,அடேய் கதிரு,அந்த சண்டாளி உன்னை இப்படி புலம்ப விட்டுட்டாளேடா.
அவளுக்கு எங்கே என் ஞாபகம் இருக்க போகுது?,காலேஜ்லாம் படிச்சிருக்கா, எப்படியும் அங்க யாரையாவது விரும்பாமலா இருந்திருப்பாலென்று அவன் மனசாட்சி கேட்க, ச்சே ச்சே... அவ அப்படிலாம் பண்ணிருக்க மாட்டாள்.
கீழே விழுந்தவளை விடாமல் புடிச்சி வச்சிருந்தால் இவ்வளவு அக்கப்போறு இல்லாமல் இருந்திருக்கும்.கரண்ட் வந்ததில் அவள் முகமும் நமக்கு தெரிந்திருக்கும் என தன் மனசாட்சியோடு பேசிக்கொண்டே தேனூர் பேருந்து நிலையத்திற்குள் வந்து சேர்ந்தான்.
கிழக்கே சூரியன் உதயமாகி கொஞ்சம் கொஞ்சமாக விடியல் வர தொடங்கியது. பேருந்து நிலையத்திலிருக்கும் சிறு சிறு கடைகள் ஊது பத்தி மணத்தோடு வரவேற்றது.கையில் கட்டியிருந்த வாட்சை பார்க்க,மணி ஆறு ஆவதற்கு இன்னும் கால் மணி நேரம் இருப்பதாக காட்டியது.
மார்கழி மாத குளிர் உடலை வாட்டாமல் இருக்க,காதை சுற்றி மப்ளர் கட்டியிருந்தவன்,வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு தெரிந்தவரின் டீக்கடைக்கு செல்ல,வாப்பா கதிரு.
"வரேண்ணா என்றவனிடம்,எங்கே இவ்வளவு காலையிலே இந்த பக்கம்? என்று மாஸ்டர் கேட்க,சின்ன தம்பி விளையாட்டு போட்டிக்கு போயிட்டு இன்றைக்கு தான் வரான் ணா.நம்ப மதுரை வண்டி வந்துட்டா?
இன்னும் இல்ல கதிரு வரும் நேரம் தான் என்றவர்,டீயை அவனிடம் நீட்ட வாங்கி குடித்தவன்,அங்கிருந்த பேப்பரை எடுத்து படிக்க தொடங்கினான்.
கதிர் பேப்பரை படித்து முடிக்கவும், மதுரையிலிருந்து வருகின்ற வண்டி வரவும் சரியாக இருந்தது.தம்பி பஸ் வந்துடிச்சிப்பா என மாஸ்டர் சொல்ல, டீக்கு ஆன காசை கதிர் கொடுக்க,அட... போப்பா போ என்றார்.
இருக்கட்டும் என்றவன் காசை டேபிள் மேல் வைத்து விட்டு,பஸ்ஸை நோக்கி செல்ல,பஸ்ஸிலிருந்தவர்கள் கீழே இறங்கிககொண்டிருந்தனர்.
எங்கே இவனை காணுமென்று பின் பக்க கதவை பார்க்க நிலவன் கூட சென்ற மாணவர்கள் இறங்கினர், கடைசியாக நிலவனும்,பீ. இ. டி. சாரும் இறங்குவதை பார்த்தவன் வணக்கம் சார் என்க,குட்மார்னிங் கதிர்.
சின்ன சின்ன காயம் இருக்குப்பா பார்த்துக்கோ என்றவர் விளையாட்டை பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு மற்ற மாணவர்களோடு அங்கிருந்து சென்றார்.
எப்படி இருக்கடா?
நல்லா இருக்கேண்ணா என்றவனிடம் டீ குடிக்கிறியா என்க,வேண்டாம்ணா வீட்டுக்கு போகலாம்.தம்பியின் முகம் சோடையாக இருப்பதை கண்டு, காய்ச்சல் எதாவது இருக்கானு நிலவனின் நெற்றியில் தொட்டு பார்த்தவன் சரி வா என்று வண்டி நிறுத்திய இடத்திற்குப் போனான்.
"சிக்கு புள்ளிகளை வைத்து கோலம் போட்டவள்,அதன் நடுவில் சாணி உருண்டையையும் வீட்டின் மேல் படர்திருக்கும் பரங்கிப்பூவையும் கிள்ளி சாணியின் நடுவில் சொருகி விட்டு, தோட்டத்து பக்கம் செல்ல,அவளோடு வந்த அல்லியும் அங்கிருந்த சாணி அள்ளும் கூடையை எடுத்துக்கொண்டு மாட்டு கொட்டகைக்குள் சென்ற அக்கா தங்கை இருவரும் சேர்ந்தே சுத்தம் செய்து முடித்தனர்.
பின்னர் இருவரும் கிணற்றிலிருந்து நீரை இறைத்து கை கால்களை கழுவி வர,மகள்கள் இருவருக்கும் சூடான டீயை கொடுத்தவர்,தனது பெரிய மகளிடம் இந்த வேலையெல்லாம் நான் செய்வேன் இல்லையா எதுக்கு உனக்கு இந்த வேலையென்று கவிதா கேட்க, எம்மா நானும் நீ பெத்த மவள் தானென்று அல்லி முறைத்தாள்.
அது தான் எனக்கு பல நாட்களாக சந்தேகமா இருக்குடி.உன் கூட பொறந்தவளுக்கு இருக்கும் பொறுப்பில் கொஞ்சமாவது உனக்கு இருக்காடி?என்றபடி சின்ன மகளை பார்த்தார்
இப்படி அசிங்கப்படுத்துறியேம்மா, இப்போ உனக்கு என்ன வேலை செய்யனும்,சரி சொல்லு,நீ,ம் என்பதுக்குள் எப்படி செஞ்சி முடிக்கிறேனு பாரென்க,போய் பசு மாட்டிலிருந்து பால் கறந்துட்டு வா.
அதைக்கேட்டவள்,அது உதைச்சி தள்ளி எனக்கு கை கால் உடையனும் இதானே உன் எண்ணம்,வேற சொல்லு மா.சரி போய் சாணியை மிதிச்சி வறட்டி தட்டி போடு என்க,அது ரொம்ப நாத்தம் அடிக்கும்,வேற வேற,அப்போ மாட்டுக்கு போய் பருத்தி கொட்டையை ஆட்டுக்கல்லில் அறைச்சி எடுத்துவா என்கவும் ஏம்மா ஏன் இப்படியென்றாள்.
தாமரை உனக்கு பக்கத்தில் கிடக்குற அந்த வெளக்கமாற்றை கொஞ்சம் எடுனு கவிதா சொல்ல,அல்லிஈஈஈஈ எஸ்கேப் என்று உள்ளே ஓடினாள்.
" அம்மா... விடுமா,சின்னவள் தானே. போகப்போக வேலை எல்லாம் கத்துப்பாள் என்று தங்கைக்கு சப்போர்டாக தாமரை சொல்ல,அட நீ வேற தாமரை.லீவு விட்டா போதும் அந்த மூன்றாவது தெருவுல இருக்கிறாளே இவ சினேகிதி,அவகூட காடு கழனினு சுத்தவே இவளுக்கு நேரம் சரியா இருக்கு.இவள வச்சிக்கிட்டு என்னத்தை மாறடிக்க போறேன்னு தெரியலை.
"சரிம்மா....நான் சாமிக்கு பிரசாதம் பண்ணட்டுமா?,தாராளமா பண்ணு.பொங்கல் செய்வதற்கு தேவையானது எல்லாம் நைட்டே எடுத்து வச்சுட்டேன்.
சரிமா என்று சமையலறைக்கு உள்ளே போன தாமரையோ சக்கரை பொங்கல் செய்ய தயாரானாள்.
நெய் மணக்க மணக்க சாமிக்கு பிரசாதத்தை தயார் செய்தவள்,தனது அம்மாவோடு பேசியபடி காலை சமையல் செய்யும் போது வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொரு ஆளாக தூங்கி எழுந்து வந்தனர்.
அவர்களுக்கு டீ யை கொடுத்தவர், னஏய் அல்லி போய் குளிச்சிட்டு வா கோயிலுக்கு போகணும் என்க, பாட்டியின் அருகில் படுத்திருந்த அல்லி எழுந்து குளிக்கப்போனாள்.
"தனதறைக்கு வந்த தாமரை,பெட்டியில் இருந்த டிரஸ்களை பார்க்க அதில் கடல் நீலத்தில்,கரு நீலக்கலர் பார்டர் வைத்த புடவையை எடுத்தவள் ரொம்ப வருஷம் கழித்து குல தெய்வ கோயிலுக்கு போகிறோம்.இந்த புடவையே கட்டிப்போம் என தானே பேசிக்கொண்டவள்,அந்த புடவையை கட்டிக்கொண்டு,தனது நீண்ட கூந்தலை சீவி அழகாக பின்னி முடித்து சற்று நேரத்துக்கு முன்பு கவிதா கொடுத்த மல்லிகை பூச்சரத்தை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு,புடவை கலரில் நெற்றியில் பொட்டை வைத்து கண்ணாடியில் பார்க்க அவளுக்கே அவள் அழகாக தெரிந்தாள்.
"பின்னர்,உடைக்கு மேட்சாக வளையலையும் அதே கலரில், தொங்கட்டானையும் போட்டவளுக்கு கழுத்து மட்டும் வெறுமையாக இருப்பதை பார்த்து,தனது செயினின் நினைவு வந்தது.
"சரி போனது போய்விட்டது என்ன செய்யனு சமாதான படுத்திக் கொண்டவள்,கழுத்தில் போடுவதற்காக மேக்கப் பாக்ஸில் தேட,அவளின் அறைக்கதவு தட்டப்பட்டது.
தேடிய வேலையை விட்டு கதவை திறக்க அங்கே கலா பாட்டி நின்றிருந்தார்.சொல்லு அப்பாயி என்க, பேத்தியை புடவையில் பார்த்து மலைத்து நின்றவர்,எம்புட்டு அழகா இருக்க ஆத்தானு அவளின் கன்னம் கிள்ளி முத்தமிட்டவர் இந்தாம்மாயென்று அவளிடம் ஒரு சுருக்கு பையை நீட்டினார்.
அதை யோசனையோடே வாங்கியவள், என்ன அப்பாயி?என்க,உனக்காக இந்த அப்பாயி சேர்த்து வச்சது கண்ணு.ஓ என்று சுறுக்கு பையை திறந்து பார்க்க, அதில் இரட்டை வட செயின் அந்த காலத்து கல் வைத்த தோடு ஜிமிக்கி, மற்றும்,இரண்டு வகையான மோதிரங்கள்,கழுத்தில் போடும் அட்டிகை,கையில் போடும் கெட்டி காப்புகள் இரண்டு இருந்தது.
ஏது அப்பாயி இதெல்லாம்?
எங்க அம்மாச்சி எங்க அம்மாக்கு கொடுத்தது,அவங்க எனக்கு கொடுத்தாங்க,அதை இப்போ உனக்கு தரேன் ஆத்தா என்றவரை கட்டிக்கொண்டவள்,இப்போலாம் இதைப்போல பொருட்கள் தான் ஃபேமஸா இருக்கு அப்பாயி.
அப்பொழுது அங்கு வந்த அல்லி,அக்கா என் டிரஸ் எப்படி இருக்கென்று கேட்க, கிளி பச்சை கலர் பாவாடை சட்டையும், அதற்கு ரோஜா கலர் தாவணியும் அணிந்திருந்த அல்லியை பார்த்தவள் அழகா இருக்கடி.
அட போக்கா...நீ தான் செம்மையா இருக்க என்றவள்,என்ன இரண்டு பேரும் ரகசியம் பேசுறீங்க என்கவும், அப்பாயி இதெல்லாம் குடுத்தாங்கடி. இந்தா உனக்கு என்ன வேண்டுமோ எடுத்துக்கோ என்றாள்.
ஏன்கா..ஏன்...இப்படி....இது,இந்த மேடத்தோட பாரம்பர்ய நகையாம்.இது மூத்த பெண் வாரிசுக்கு மட்டும் தான் சொந்தமாம்,அதனால் எனக்கு இல்லை என்க,அடியேய் கத்தாழ கள்ளி என்றவர், அவ கிடக்குறா ஆத்தா,நீ வச்சிக்கோ.
சரி அப்பாயி.உங்க கிட்டவே இருக்கட்டும் நான் கோயிலுக்கு போய்ட்டு வந்து வாங்கிக்குறேன் என்கவும்,சரித்தா என்றார்.
கவிதாவும் தயாராகி வர,மூவரும் தங்கள் தோட்டத்து கதவு வழியாகவே நடந்து ஏரிகரை கிட்ட வந்தவர்கள், அங்கிருந்து இடது பக்கம் திரும்பி கோயில் இருக்கும் திசையை நோக்கி சென்றனர்.
சிறிது நிமிடத்தில் கோயிலுக்கு வந்த மூவரும் ஆளுக்கொரு வேலை என்று கோயிலை சுத்தம் பண்ணி முடிக்கவும், பூசாரியும் அங்கு வந்தார்.
எடுத்து வந்த பொருட்களை அவரிடம் கொடுத்த கவிதாவோ மகளின் வேலையை பற்றி சொல்லியவர், அம்மனிடம் பூஜை பண்ண சொல்ல சரிம்மா என்ற பூசாரி,கருவறைக்கு சென்று தாமரை எடுத்து வந்த குடத்து நீரால் அம்மனை குளிப்பாட்டி, பச்சைக்கலர் பட்டு புடவையை அம்மனுக்கு கட்டி,அலங்கரிக்க மேலும் அரை மணி நேரமானது.
பின்னர் அலங்காரத்தை முடித்தவர் மணியடித்து தீபாரதனை காட்டி விட்டு இவர்களிடம் வந்து காட்ட,மூவரும் ஆரத்தியை எடுத்துக்கொள்ள, அவர்களுக்கு விபூதி குங்குமம் கொடுத்தார்.
சரி தாமரை நல்ல நேரம் போவதற்குள் நீ வரைய ஆரம்பிடா என்கவும் சரிம்மா என்றவள்,அங்கு இருக்கும் சூழலை ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு அம்மனிடம் இந்த வேலையை நல்ல படியாக முடிக்க அருள் குடுங்கம்மா என்று மனதுருக வேண்டியவளோ தான் எடுத்து வந்த நோட்டில் வரைய தொடங்கினாள். இங்க பாரு அல்லி,அக்கா கூடவே இருக்கனும் என்றவர்,தாமரை நான் வீட்டிற்கு கிளம்புறேன்.இங்க ஒன்னும் பயம் இல்லை,இருந்தாலும் பத்திரமா இருங்களென்றபடி கவிதாவும் வீட்டிற்கு போக,தாமரையும் வரைவதில் கவனமாக இருக்க,அல்லிக்கோ ஒரே இடத்தில் இருப்பது கடுப்பாக வந்தது.
என்ன பண்ணலாமென்று யோசித்தவள்,கோவிலை சுற்றி அடைத்திருக்கும் வேலி வழியாக தூரத்தில் பார்க்க அங்கே ஏரிக்கரை ரோட்டின் மேல் அவளது தாத்தாவும் அப்பாயியும் வயலுக்கு போவது தெரிந்தது.
தேனூர்:
தனது வண்டியில் சென்று கொண்டிருந்தவனின் சிந்தனைகளெல்லாம் அத்தை வீட்டு வாசலில் கோலமிட்டவளின் மேலேயிருந்தது.
ம்ம்....பரவாயில்லையே காலையிலே எழும் பழக்கம் இருக்கு,சரி நமக்கு வசதி தானென்று சொல்ல,என்ன வசதி?என்றது கதிரின் மனசாட்சி.
அதானே?,எதுக்கு வசதி என்றவன்,ஆள் ரொம்ப உயரமும் இல்லை,அப்படி ஒன்னும் குட்டச்சியாவும் இல்லை, அளவான உயரத்தில்தான் இருப்பாள் போல.ஆனால் அவ முகம் எப்படி இருக்கும்னு தெரியலையே டா கதிரு?.
"கொஞ்சம் முன்னவே வந்திருந்தால் பார்த்திருக்கலாம் போலயேனு புலம்பிக்கொண்டே வண்டி ஓட்டியவன், கவிதா,அன்பழகன் இருவர் முக ஜாடையில் இவ யாரப்போல இருப்பாள்?என வாய் விட்டு சொல்லிக்கொண்டே கண்ணாடியை பார்த்தவன்,அடேய் கதிரு,அந்த சண்டாளி உன்னை இப்படி புலம்ப விட்டுட்டாளேடா.
அவளுக்கு எங்கே என் ஞாபகம் இருக்க போகுது?,காலேஜ்லாம் படிச்சிருக்கா, எப்படியும் அங்க யாரையாவது விரும்பாமலா இருந்திருப்பாலென்று அவன் மனசாட்சி கேட்க, ச்சே ச்சே... அவ அப்படிலாம் பண்ணிருக்க மாட்டாள்.
கீழே விழுந்தவளை விடாமல் புடிச்சி வச்சிருந்தால் இவ்வளவு அக்கப்போறு இல்லாமல் இருந்திருக்கும்.கரண்ட் வந்ததில் அவள் முகமும் நமக்கு தெரிந்திருக்கும் என தன் மனசாட்சியோடு பேசிக்கொண்டே தேனூர் பேருந்து நிலையத்திற்குள் வந்து சேர்ந்தான்.
கிழக்கே சூரியன் உதயமாகி கொஞ்சம் கொஞ்சமாக விடியல் வர தொடங்கியது. பேருந்து நிலையத்திலிருக்கும் சிறு சிறு கடைகள் ஊது பத்தி மணத்தோடு வரவேற்றது.கையில் கட்டியிருந்த வாட்சை பார்க்க,மணி ஆறு ஆவதற்கு இன்னும் கால் மணி நேரம் இருப்பதாக காட்டியது.
மார்கழி மாத குளிர் உடலை வாட்டாமல் இருக்க,காதை சுற்றி மப்ளர் கட்டியிருந்தவன்,வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு தெரிந்தவரின் டீக்கடைக்கு செல்ல,வாப்பா கதிரு.
"வரேண்ணா என்றவனிடம்,எங்கே இவ்வளவு காலையிலே இந்த பக்கம்? என்று மாஸ்டர் கேட்க,சின்ன தம்பி விளையாட்டு போட்டிக்கு போயிட்டு இன்றைக்கு தான் வரான் ணா.நம்ப மதுரை வண்டி வந்துட்டா?
இன்னும் இல்ல கதிரு வரும் நேரம் தான் என்றவர்,டீயை அவனிடம் நீட்ட வாங்கி குடித்தவன்,அங்கிருந்த பேப்பரை எடுத்து படிக்க தொடங்கினான்.
கதிர் பேப்பரை படித்து முடிக்கவும், மதுரையிலிருந்து வருகின்ற வண்டி வரவும் சரியாக இருந்தது.தம்பி பஸ் வந்துடிச்சிப்பா என மாஸ்டர் சொல்ல, டீக்கு ஆன காசை கதிர் கொடுக்க,அட... போப்பா போ என்றார்.
இருக்கட்டும் என்றவன் காசை டேபிள் மேல் வைத்து விட்டு,பஸ்ஸை நோக்கி செல்ல,பஸ்ஸிலிருந்தவர்கள் கீழே இறங்கிககொண்டிருந்தனர்.
எங்கே இவனை காணுமென்று பின் பக்க கதவை பார்க்க நிலவன் கூட சென்ற மாணவர்கள் இறங்கினர், கடைசியாக நிலவனும்,பீ. இ. டி. சாரும் இறங்குவதை பார்த்தவன் வணக்கம் சார் என்க,குட்மார்னிங் கதிர்.
சின்ன சின்ன காயம் இருக்குப்பா பார்த்துக்கோ என்றவர் விளையாட்டை பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு மற்ற மாணவர்களோடு அங்கிருந்து சென்றார்.
எப்படி இருக்கடா?
நல்லா இருக்கேண்ணா என்றவனிடம் டீ குடிக்கிறியா என்க,வேண்டாம்ணா வீட்டுக்கு போகலாம்.தம்பியின் முகம் சோடையாக இருப்பதை கண்டு, காய்ச்சல் எதாவது இருக்கானு நிலவனின் நெற்றியில் தொட்டு பார்த்தவன் சரி வா என்று வண்டி நிறுத்திய இடத்திற்குப் போனான்.