Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 346
- Thread Author
- #1
கதிர் வீடு:
முதல் நாளுக்கான நடவு வேலை நல்ல படியாக முடிய,வேலை செய்த பெண்மணிகளுக்கு ஒரு ஆளுக்கான சம்பளத்தை சேர்த்தே கொடுத்தனர்.
"தாத்தா... நாமலும் வீட்டுக்கு கிளம்பலாமா என்க,சரியப்பு என்றவர், வரப்பிலிருந்து எழுந்து தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அதை உதறி தோளில் போட்டு நடக்க,அவரின் பின்னால் கதிரும் நடந்து சென்றான்.
"சிறிது நிமிட நடை பயணத்தில் ரோட்டின் மேலே ஏறி நிழலில் நின்றிருக்கும் வண்டியை நோக்கி சென்றவன்,தனது பாக்கெட்டில் இருக்கும் சாவியை எடுத்து வண்டியை ஸ்டார்ட் பண்ணி உட்காரு தாத்தா என்க, பேரனுடைய வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு போலாம்பா என்றார்.
"இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வர,தூரத்தில் அல்லி வருவதை பார்த்தவன்,அய்யோ..இவள் கிட்ட எப்படி கேட்க?,தாத்தா வேற இருக்காரே?என யோசனையானவன்,சரி எப்படியாவது இன்றைக்குள்ளே தன்னவளை பற்றி விசாரிக்கணும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
அவளை பற்றி நினைத்ததும் அவன் உதட்டில் புன்னகை தானாக வந்து உட்கார்ந்து கொண்டது.யாரடி பெண்ணே நீ?என்று உள்ளுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டே வீட்டிற்கு வந்தவன்,தாத்தாவை இறக்கி விட்டு, வண்டி நிறுத்தும் கொட்டகைக்குள் சென்று தனது புல்லட்டை நிறுத்தியவன் வெளியே இருக்கும் படியில் ஏறி மேலே சென்றான்.
வீட்டின் உள்ளே வந்த பிரகாசம்,எம்மா செல்வி...என்று சத்தம் கொடுக்க,சொல்லுங்க மாமா என கேட்டுக்கொண்டே அங்கு வந்தார் சீதா.
பெரியப்பு மேலே போயிருக்கான்,டீ போட்டு குடுத்து அனுப்பு என்றவர் கிணற்றடியை நோக்கிகுளிக்க சென்றார்.
"மகனுக்கு பிடித்த போல இஞ்சி, ஏலக்காயை தட்டி போட்டு,டீ யை தயாரித்தவர்,டம்ளரில் ஊற்றிக்கொண்டு,அதனோடு வீட்டில் செய்த சிற்றூண்டியையும் பிளேட்டில் எடுத்து வைத்தவர்,செல்விஈஈஈ...ஏய் செல்வி என கூப்பிட, திண்ணையில் வெற்றிலை போட்டுக்கொண்டிருந்த வள்ளி அப்பாயியோ உம்மவ இங்கயெங்கே இருக்காளென்று சொன்னார்.
"எங்கேத்தை போனாளென்று? கேட்ட மருமகளுக்கு,ஆத்தாளும்,மவளும் தோட்டத்தில் மல்லிகை பூ பறிச்சி கிட்டு இருக்காங்க,இரு கூப்பிடுறேன் என்க, வேண்டாத்தை,நானே போறேன் என்று சொல்லி தோட்டத்து வாசலில் நின்று செல்வி இங்கே வா என்றார்.
"அம்மா,பந்தல் மேல இருக்கேன், கொஞ்சம் மேல பாரு என்க, அன்னார்ந்து பார்த்தவருக்கு அவள் மல்லிகை பந்தல் மேல் இருப்பது தெரிந்தது.என்ன சீதா என்று ராதா கேட்க,கதிருக்கு டீ கொடுத்துட்டு வரணும் டி.
"இரு நான் வரேன் என்று சொல்லியவர் அக்காவிடம் பூக்கூடையை கொடுத்து விட்டு,உள்ளே போய் கதிருக்கான டீயையும் சிற்றூண்டி தட்டையும் எடுத்துக்கொண்டு படியில் ஏறி மேலே சென்றவர்,அப்பு..அப்பு என கதிரோட அறைக்கதவை தட்ட,திறந்து தான் இருக்குமா என்கும் குரல் கேட்டது.
"கதவை திறந்து உள்ளே வந்தவர்,பால்கனியில் இருக்கும் ஈசி சேரில் சோர்வாக உட்கார்ந்திருப்பவனை கண்டு என்னப்பா சோடையா இருக்க?
ம்ம்..ரொம்ப தலை வலிக்குதுமா என்றவனிடம் இந்த டீ யை குடி, சரியாகும் என்றவர்,மகனின் முன்பு டீயை நீட்ட,வாங்கி குடித்தவன் டம்ளரை அவரிடம் நீட்டவும் அதை வாங்கியவர், தைலம் தேய்ச்சி விடட்டுமா அப்பு என்க..
இல்லம்மா...டீ குடிச்சதும் பரவாயில்லை என்றவனிடம் இதையும் சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுப்பா என்றவர்,அங்கிருந்த மர டீப்பாயின் மேல் சிற்றூண்டி தட்டை வைத்து விட்டு ராதாவும் வெளியே சென்றார்.
கண்ணை மூடி சிறிது நேரம் சேரில் சாய்ந்திருந்தவனுக்கு, தற்பொழுது வலி குறைந்திருப்பது தெரிய,அங்கிருந்த ராகி புட்டை சாப்பிட்டு முடித்து,எழுந்து போய் கதவை தாழிட்டு விட்டு,துண்டை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றான்.
"பின்னர் குளித்து வெளியே வந்தவனோ கபோர்டை திறக்க,டாலர் ஞாபகம் வரவும்,உள்ளே இருந்த டிராவை திறந்து அதனுள் இருக்கும் செயினை வெளியே எடுத்தவன்,தாத்தா இருந்ததால் உன்னை பற்றி கேட்க முடியாமல் வந்துட்டேன்டி,இதை காணாமல் என்ன நிலமையில் நீ இருக்கனு தெரியலையேடி என்றான்.
பின் செயினை எடுத்த இடத்திலே வைத்தவன்,டிரஸ்ஸை எடுத்துக்கொண்டு,கபோர்டை லாக் பண்ணி விட்டு,டிரஸ்ஸை மாற்றியவன், கண்ணாடியில் ஒரு முறை தன்னை பார்த்து விட்டு கீழே இறங்கி வந்தான்.
வராண்டாவில் ராதாவும்,செல்வியும் ஒரு பக்கம் பூ கட்டிக்கொண்டிருந்தனர். வள்ளியும்,பிரகாசமும் எதோ பேசிக்கொண்டிருந்தனர்.
என்ன வீடு இவ்வளவு அமைதியா இருக்கென்றவாறு அங்கிருந்த ஊஞ்சலில் உட்காரும் போது,செல்லமேஏஏஏஏஏ... உன் மாமன் வந்துட்டேன் என்ற சத்தம் வாசலில் கேட்க,அந்த குரலை கேட்ட கதிரோ நெற்றியில் தனது இடது உள்ளங்கையால் தட்டிக்கொண்டவன், ப்ச்...மறந்துட்டேனே என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்.
செல்ல குட்டி எங்கே இருக்க?,மூன்று நாளா இந்த மாமனை பார்காமல் என்ன பாடு பட்டியோ செல்லமே என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான் கதிரின் அத்தைமகனான வேலு.
உள்ளே வந்தவன் வள்ளிஈஈஈ செல்லம் என சொல்லிக்கொண்டே அப்பாயிடம் சென்று ,அவரின் கன்னத்தை ஒரு கையால் கிள்ளி,எப்படி செல்லம் இருக்கிற?என்க,அப்பாயியோ அவனை ஒரு பார்வை பார்த்தவர்,எதுவும் சொல்லவில்லை.ஏனென்றால் வேலு சபரிமலைக்கு போய் விட்டு இப்பொழுது தான் வந்திருக்கான்.
"இன்னும் அவன் காவி உடையில் இருப்பதால்,சாமி என்ற எண்ணத்தில் எதுவும் பேசவில்லை.என்ன செல்லம் இப்படி துரும்பா இளைச்சிட்ட,மாமன் மேல அம்புட்டு பாசமாடி உனக்கு என்க, அடேய் என்றார் பிரகாசம்.
என்ன செல்லம் சகலபாடி குரல் கேட்குது என்க,இடது பக்கம் பாருடா பிக்காலி பயலே என்கவும்,குரல் வந்த திசையில் பார்க,அங்கே பிரகாசம் தாத்தாவோ கால் மேல் கால் போட்டுக்கொண்டு சேரில் உட்கார்ந்திருந்தார்
" தாத்தாஆஆஆ...,நல்லா இருக்கியா என்றபடி அவரிடம் போக,நல்ல படியா கோயிலுக்கு போயிட்டு வந்தியா வேலு என்கவும்,ம்ம்.... கூட்டம் தான் எப்பாஆஆஆ...
எல்லாம் சிறப்பா முடிஞ்சிது தாத்தா என்றவாறு மீண்டும் பாட்டியிடம் வந்தவன்,தனது கையில் எடுத்து வந்த பேகை அவர் முன் நீட்டி,அம்மா குடுத்துச்சி செல்லம் என்க,போய் உன் அத்தைங்கள்ட குடுங்க சாமி.
" ஹாஹாஹா....செல்ல குட்டி.... இப்போ ஆசாமி தான்...உன் மரியாதை அப்படியே புல்லரிக்குது போ என்றவனை,கிட்ட வாடி வேலு என்றார் அப்பாயி.இதோ வந்துட்டேன் செல்லம் என்றவன், கீழே மண்டியிட்டு அமர,எட்டி அவன் காதை பிடித்து திருக தொடங்கினார் வள்ளி பாட்டி.
அய்யோ என்று கதறியவன், ஏன் செல்லம் இப்படி என்க,துப்பு கெட்ட பயலே,என் புருஷன் கூட இப்படி மூச்சுக்கு முன்னூறு செல்லம் சொன்னதில்லை,நான் பார்த்து பொறந்த பயல் எம்புட்டு ஏத்தம்டா உனக்கு?
" சரி... சரி.... விடு விடு.காது...வலிக்குது என்றவனுக்கு,இதுலாம் புதுசா கைப்பிள்ளை என்றாள் செல்வி. வேலுவின் மனசாட்சியோ,அடேய் இவளை பேச விட்டால் ரொம்ப டேமேஜ் பண்ணுவா,சீக்கிரம் அவ வாய அடைடா என்றது.
"செல்வி கண்ணுஊஊஊ....இங்கே பாரு உனக்கு என்ன வாங்கிட்டு வந்துருக்கேன் என்றவன்,அவளுக்கான பொருட்கள் இருக்கும் கவரை எடுத்து போய் அவள் முன்பு நீட்ட, அதை வாங்கியவள்,கவரை திறந்து பார்க்க, உள்ளே வித விதமான கிளிப், ஹேர்பேண்ட்,மேலும் சில மேக்கப் பொருட்கள் இருந்தது.
அதையெல்லாம் பார்த்தவள் தேங்க்ஸ் மாமா என்க,இதுக்கு ஏண்டா மாமனுக்கு கிஸ்ஸூலாம் என்றான்.யோவ் மாமா, வாய மூடுயா என்று செல்வி முறைக்க.சும்மா லுலலாயிக்கு என்றவன்,ராதாத்தை இந்தாங்க என்க, அவனிடமிருந்து பேகை வாங்கியவர், பூஜையறையில் கொண்டு போய் வைத்து விட்டு வெளியே வந்தவர்,டீ எடுத்துட்டு வரட்டுமா வேலு என்க, இல்லத்தை,கொஞ்ச நேரம் முன்னே தான் படைச்சிட்டு சாப்பிட்டேன் என்றவன்,ஆமாம் எங்கே சீதாத்தைய காணலை?
அக்கா,நம்ப அய்யனார் கோயிலுக்கு விளக்கு போட போயிருக்கு என்றார்.
"இவ்வளவு நேரம் அங்கே நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கதிர்,அடேய் நான் ஒருத்தன் குத்துக்கல் போல இருக்கிறேன் என்க,எந்த பரதேசி பயலையும் என் கண்ணுக்கு தெரியாது.
"அய்யோஓஓஓ....மச்சான் ரொம்ப சூடா இருக்கான் போலயே என மனதிற்குள் சொல்லிக்கொண்ட கதிர்,அடேய் நிஜமாகவே வயல் வேலையில் மறந்துட்டேன் டா.சரி நீ வீட்டுக்கு வந்துட்டு போன் பண்ணுவ,நான் வரலாம்னு இருந்தேன் என்று சொல்ல, ஸ்சூஊஊ ஸ்சூஊஊ என்று மேலே காக்கா ஓட்டுவது போல் வேலு கையை அசைத்தான்.
"டேய் மச்சான் நிஜமாலே மறந்துட்டேன். உனக்கு தான் தெரியுமே வயலுக்கு போனால் வேற எந்த ஞாபகம் இருக்காது என்று சொல்ல,ம்கும்...ஆ... ஊ... என்றால் இதை சொல்லிடு என்றவன், நண்பனின் அருகில் அமர்ந்து கொண்டு எப்படிடா இருக்க? என்க,ம்ம்,நீ எப்படி இருக்க? என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
" வீட்டில் இருந்த நால்வரும் இருவரையும் பார்த்தனர்,அப்பொழுது கொஞ்ச நேரத்துக்கு முன்னே தான் எவனோ ரோசக்காரன்னு ஒருத்தன் இங்கே இருந்தானே தெரியுமா செல்வி? என்றார் வள்ளி பாட்டி.அதைக்கேட்ட நண்பர்கள் இருவரும்,அரசியல்ல இதுலாம் சாதாரணமப்பா என்றனர் கோரஸாக...
"வேலுவோ பிரகாசத்தின் அண்ணன் பேரன்.சிறு வயதில் இருந்தே கதிரும் வேலுவும் ஒன்றாக தான் சுற்றுவார்கள்.உறவை தாண்டி இருவருக்கும் ஆழமான நட்பு இருக்கிறது.அவனுக்கு தெரியாமல் இவன் எதுவும் செய்ய மாட்டான், இவனுக்கு தெரியாமல் அவனும் எதுவும் செய்ய மாட்டான்.
"உன் நண்பனை பற்றி கேட்டால் உன்னை பற்றி தெரியும் என்பதற்கு இலக்கணமே இவர்கள் இருவரும் தான்.சரிடா மச்சான் நடவு எப்படி போச்சு ?என்க,எல்லாம் நல்லா போச்சுடா மச்சான்.
"சரி வா வெளியில போயிட்டு வரலாம் என்று வேலு கூப்பிட,நண்பன் அழைக்கும் காரணம் தெரிய,ம்ம்...வா என்று இருவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது,என்ன யோசனையில் இருக்க?,என்ன குழப்பம்?
இது தான் நண்பன்.தான் சொல்லாமலே தன்னை பற்றி புரிந்து கொண்டானே என்று நண்பனை நினைத்து கதிருக்கு பெருமையாக இருந்தது.
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே, நல்லா தான் இருக்கிறேன் என்று கதிர் சொல்ல,அப்படியா? நம்பிட்டேன்டா என்றவன்,"மொச பிடிக்கும் நாய் மூஞ்ச வச்சே கண்டு பிடிக்கலானு" வள்ளி செல்லம் அடிக்கடி சொல்லும்டா.
"பின்னர் நண்பனிடம் மறைக்க மனமில்லாமல்,கும்மிருட்டிள் தன்னை மோதிவிட்டு டாலரை தொலைத்து சென்றவளையும்,தேவி பேசியதையும், அவர்கள் வீட்டில் இருந்து வந்தது,அதற்கு தான் பதில் சொல்லியது என நடந்த அத்தனையும் நண்பனிடம் கதிரும் சொல்லி முடித்தான் .
"எல்லாத்தையும் கேட்டவன்,ஏண்டா.... ஒரு மனுஷன் மூன்று நாள் ஊரில் இல்லை என்றதும் இவ்வளவு நடந்துருக்கா?.
நல்ல வேளைடா,நான் வருவதற்குள் உனக்கும் தேவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலையே என்ற வேலு, ஒரு நிமிடம் நண்பனை உற்று பார்த்தவன்,நம்ம சீமக்கரை சியான் காதல் கடலில் விழுந்துட்டான்னு சொல்லி சத்தமிட்டு சிரித்தான்.
நண்பன் சிரிப்பதை பார்த்து காண்டு ஏறியதும் என்னடா, நக்கலா இருக்கா?என்று கதிர் முறைக்க,ச்சே ச்சே.நான் அப்படி சொல்லுவேனா மாப்பு என்றவன்,உன் கிட்ட ஒரு கதை சொல்லனும் மாப்பு.
"இந்த ஊருக்குள்ள ஒரு சண்டியர் இருந்தான்டா.அந்த கிராதகனுக்கு காதல் என்றாலே புடிக்காதுடா,அப்படி யாராவது காதல் பண்ணினாலும், அதுலாம் வேலை வெட்டி இல்லாத பயலுங்க பண்ணுறதுடா மாப்பிள்ளைனு சொல்வான்.
முதல் நாளுக்கான நடவு வேலை நல்ல படியாக முடிய,வேலை செய்த பெண்மணிகளுக்கு ஒரு ஆளுக்கான சம்பளத்தை சேர்த்தே கொடுத்தனர்.
"தாத்தா... நாமலும் வீட்டுக்கு கிளம்பலாமா என்க,சரியப்பு என்றவர், வரப்பிலிருந்து எழுந்து தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அதை உதறி தோளில் போட்டு நடக்க,அவரின் பின்னால் கதிரும் நடந்து சென்றான்.
"சிறிது நிமிட நடை பயணத்தில் ரோட்டின் மேலே ஏறி நிழலில் நின்றிருக்கும் வண்டியை நோக்கி சென்றவன்,தனது பாக்கெட்டில் இருக்கும் சாவியை எடுத்து வண்டியை ஸ்டார்ட் பண்ணி உட்காரு தாத்தா என்க, பேரனுடைய வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு போலாம்பா என்றார்.
"இருவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வர,தூரத்தில் அல்லி வருவதை பார்த்தவன்,அய்யோ..இவள் கிட்ட எப்படி கேட்க?,தாத்தா வேற இருக்காரே?என யோசனையானவன்,சரி எப்படியாவது இன்றைக்குள்ளே தன்னவளை பற்றி விசாரிக்கணும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
அவளை பற்றி நினைத்ததும் அவன் உதட்டில் புன்னகை தானாக வந்து உட்கார்ந்து கொண்டது.யாரடி பெண்ணே நீ?என்று உள்ளுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டே வீட்டிற்கு வந்தவன்,தாத்தாவை இறக்கி விட்டு, வண்டி நிறுத்தும் கொட்டகைக்குள் சென்று தனது புல்லட்டை நிறுத்தியவன் வெளியே இருக்கும் படியில் ஏறி மேலே சென்றான்.
வீட்டின் உள்ளே வந்த பிரகாசம்,எம்மா செல்வி...என்று சத்தம் கொடுக்க,சொல்லுங்க மாமா என கேட்டுக்கொண்டே அங்கு வந்தார் சீதா.
பெரியப்பு மேலே போயிருக்கான்,டீ போட்டு குடுத்து அனுப்பு என்றவர் கிணற்றடியை நோக்கிகுளிக்க சென்றார்.
"மகனுக்கு பிடித்த போல இஞ்சி, ஏலக்காயை தட்டி போட்டு,டீ யை தயாரித்தவர்,டம்ளரில் ஊற்றிக்கொண்டு,அதனோடு வீட்டில் செய்த சிற்றூண்டியையும் பிளேட்டில் எடுத்து வைத்தவர்,செல்விஈஈஈ...ஏய் செல்வி என கூப்பிட, திண்ணையில் வெற்றிலை போட்டுக்கொண்டிருந்த வள்ளி அப்பாயியோ உம்மவ இங்கயெங்கே இருக்காளென்று சொன்னார்.
"எங்கேத்தை போனாளென்று? கேட்ட மருமகளுக்கு,ஆத்தாளும்,மவளும் தோட்டத்தில் மல்லிகை பூ பறிச்சி கிட்டு இருக்காங்க,இரு கூப்பிடுறேன் என்க, வேண்டாத்தை,நானே போறேன் என்று சொல்லி தோட்டத்து வாசலில் நின்று செல்வி இங்கே வா என்றார்.
"அம்மா,பந்தல் மேல இருக்கேன், கொஞ்சம் மேல பாரு என்க, அன்னார்ந்து பார்த்தவருக்கு அவள் மல்லிகை பந்தல் மேல் இருப்பது தெரிந்தது.என்ன சீதா என்று ராதா கேட்க,கதிருக்கு டீ கொடுத்துட்டு வரணும் டி.
"இரு நான் வரேன் என்று சொல்லியவர் அக்காவிடம் பூக்கூடையை கொடுத்து விட்டு,உள்ளே போய் கதிருக்கான டீயையும் சிற்றூண்டி தட்டையும் எடுத்துக்கொண்டு படியில் ஏறி மேலே சென்றவர்,அப்பு..அப்பு என கதிரோட அறைக்கதவை தட்ட,திறந்து தான் இருக்குமா என்கும் குரல் கேட்டது.
"கதவை திறந்து உள்ளே வந்தவர்,பால்கனியில் இருக்கும் ஈசி சேரில் சோர்வாக உட்கார்ந்திருப்பவனை கண்டு என்னப்பா சோடையா இருக்க?
ம்ம்..ரொம்ப தலை வலிக்குதுமா என்றவனிடம் இந்த டீ யை குடி, சரியாகும் என்றவர்,மகனின் முன்பு டீயை நீட்ட,வாங்கி குடித்தவன் டம்ளரை அவரிடம் நீட்டவும் அதை வாங்கியவர், தைலம் தேய்ச்சி விடட்டுமா அப்பு என்க..
இல்லம்மா...டீ குடிச்சதும் பரவாயில்லை என்றவனிடம் இதையும் சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுப்பா என்றவர்,அங்கிருந்த மர டீப்பாயின் மேல் சிற்றூண்டி தட்டை வைத்து விட்டு ராதாவும் வெளியே சென்றார்.
கண்ணை மூடி சிறிது நேரம் சேரில் சாய்ந்திருந்தவனுக்கு, தற்பொழுது வலி குறைந்திருப்பது தெரிய,அங்கிருந்த ராகி புட்டை சாப்பிட்டு முடித்து,எழுந்து போய் கதவை தாழிட்டு விட்டு,துண்டை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றான்.
"பின்னர் குளித்து வெளியே வந்தவனோ கபோர்டை திறக்க,டாலர் ஞாபகம் வரவும்,உள்ளே இருந்த டிராவை திறந்து அதனுள் இருக்கும் செயினை வெளியே எடுத்தவன்,தாத்தா இருந்ததால் உன்னை பற்றி கேட்க முடியாமல் வந்துட்டேன்டி,இதை காணாமல் என்ன நிலமையில் நீ இருக்கனு தெரியலையேடி என்றான்.
பின் செயினை எடுத்த இடத்திலே வைத்தவன்,டிரஸ்ஸை எடுத்துக்கொண்டு,கபோர்டை லாக் பண்ணி விட்டு,டிரஸ்ஸை மாற்றியவன், கண்ணாடியில் ஒரு முறை தன்னை பார்த்து விட்டு கீழே இறங்கி வந்தான்.
வராண்டாவில் ராதாவும்,செல்வியும் ஒரு பக்கம் பூ கட்டிக்கொண்டிருந்தனர். வள்ளியும்,பிரகாசமும் எதோ பேசிக்கொண்டிருந்தனர்.
என்ன வீடு இவ்வளவு அமைதியா இருக்கென்றவாறு அங்கிருந்த ஊஞ்சலில் உட்காரும் போது,செல்லமேஏஏஏஏஏ... உன் மாமன் வந்துட்டேன் என்ற சத்தம் வாசலில் கேட்க,அந்த குரலை கேட்ட கதிரோ நெற்றியில் தனது இடது உள்ளங்கையால் தட்டிக்கொண்டவன், ப்ச்...மறந்துட்டேனே என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான்.
செல்ல குட்டி எங்கே இருக்க?,மூன்று நாளா இந்த மாமனை பார்காமல் என்ன பாடு பட்டியோ செல்லமே என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தான் கதிரின் அத்தைமகனான வேலு.
உள்ளே வந்தவன் வள்ளிஈஈஈ செல்லம் என சொல்லிக்கொண்டே அப்பாயிடம் சென்று ,அவரின் கன்னத்தை ஒரு கையால் கிள்ளி,எப்படி செல்லம் இருக்கிற?என்க,அப்பாயியோ அவனை ஒரு பார்வை பார்த்தவர்,எதுவும் சொல்லவில்லை.ஏனென்றால் வேலு சபரிமலைக்கு போய் விட்டு இப்பொழுது தான் வந்திருக்கான்.
"இன்னும் அவன் காவி உடையில் இருப்பதால்,சாமி என்ற எண்ணத்தில் எதுவும் பேசவில்லை.என்ன செல்லம் இப்படி துரும்பா இளைச்சிட்ட,மாமன் மேல அம்புட்டு பாசமாடி உனக்கு என்க, அடேய் என்றார் பிரகாசம்.
என்ன செல்லம் சகலபாடி குரல் கேட்குது என்க,இடது பக்கம் பாருடா பிக்காலி பயலே என்கவும்,குரல் வந்த திசையில் பார்க,அங்கே பிரகாசம் தாத்தாவோ கால் மேல் கால் போட்டுக்கொண்டு சேரில் உட்கார்ந்திருந்தார்
" தாத்தாஆஆஆ...,நல்லா இருக்கியா என்றபடி அவரிடம் போக,நல்ல படியா கோயிலுக்கு போயிட்டு வந்தியா வேலு என்கவும்,ம்ம்.... கூட்டம் தான் எப்பாஆஆஆ...
எல்லாம் சிறப்பா முடிஞ்சிது தாத்தா என்றவாறு மீண்டும் பாட்டியிடம் வந்தவன்,தனது கையில் எடுத்து வந்த பேகை அவர் முன் நீட்டி,அம்மா குடுத்துச்சி செல்லம் என்க,போய் உன் அத்தைங்கள்ட குடுங்க சாமி.
" ஹாஹாஹா....செல்ல குட்டி.... இப்போ ஆசாமி தான்...உன் மரியாதை அப்படியே புல்லரிக்குது போ என்றவனை,கிட்ட வாடி வேலு என்றார் அப்பாயி.இதோ வந்துட்டேன் செல்லம் என்றவன், கீழே மண்டியிட்டு அமர,எட்டி அவன் காதை பிடித்து திருக தொடங்கினார் வள்ளி பாட்டி.
அய்யோ என்று கதறியவன், ஏன் செல்லம் இப்படி என்க,துப்பு கெட்ட பயலே,என் புருஷன் கூட இப்படி மூச்சுக்கு முன்னூறு செல்லம் சொன்னதில்லை,நான் பார்த்து பொறந்த பயல் எம்புட்டு ஏத்தம்டா உனக்கு?
" சரி... சரி.... விடு விடு.காது...வலிக்குது என்றவனுக்கு,இதுலாம் புதுசா கைப்பிள்ளை என்றாள் செல்வி. வேலுவின் மனசாட்சியோ,அடேய் இவளை பேச விட்டால் ரொம்ப டேமேஜ் பண்ணுவா,சீக்கிரம் அவ வாய அடைடா என்றது.
"செல்வி கண்ணுஊஊஊ....இங்கே பாரு உனக்கு என்ன வாங்கிட்டு வந்துருக்கேன் என்றவன்,அவளுக்கான பொருட்கள் இருக்கும் கவரை எடுத்து போய் அவள் முன்பு நீட்ட, அதை வாங்கியவள்,கவரை திறந்து பார்க்க, உள்ளே வித விதமான கிளிப், ஹேர்பேண்ட்,மேலும் சில மேக்கப் பொருட்கள் இருந்தது.
அதையெல்லாம் பார்த்தவள் தேங்க்ஸ் மாமா என்க,இதுக்கு ஏண்டா மாமனுக்கு கிஸ்ஸூலாம் என்றான்.யோவ் மாமா, வாய மூடுயா என்று செல்வி முறைக்க.சும்மா லுலலாயிக்கு என்றவன்,ராதாத்தை இந்தாங்க என்க, அவனிடமிருந்து பேகை வாங்கியவர், பூஜையறையில் கொண்டு போய் வைத்து விட்டு வெளியே வந்தவர்,டீ எடுத்துட்டு வரட்டுமா வேலு என்க, இல்லத்தை,கொஞ்ச நேரம் முன்னே தான் படைச்சிட்டு சாப்பிட்டேன் என்றவன்,ஆமாம் எங்கே சீதாத்தைய காணலை?
அக்கா,நம்ப அய்யனார் கோயிலுக்கு விளக்கு போட போயிருக்கு என்றார்.
"இவ்வளவு நேரம் அங்கே நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த கதிர்,அடேய் நான் ஒருத்தன் குத்துக்கல் போல இருக்கிறேன் என்க,எந்த பரதேசி பயலையும் என் கண்ணுக்கு தெரியாது.
"அய்யோஓஓஓ....மச்சான் ரொம்ப சூடா இருக்கான் போலயே என மனதிற்குள் சொல்லிக்கொண்ட கதிர்,அடேய் நிஜமாகவே வயல் வேலையில் மறந்துட்டேன் டா.சரி நீ வீட்டுக்கு வந்துட்டு போன் பண்ணுவ,நான் வரலாம்னு இருந்தேன் என்று சொல்ல, ஸ்சூஊஊ ஸ்சூஊஊ என்று மேலே காக்கா ஓட்டுவது போல் வேலு கையை அசைத்தான்.
"டேய் மச்சான் நிஜமாலே மறந்துட்டேன். உனக்கு தான் தெரியுமே வயலுக்கு போனால் வேற எந்த ஞாபகம் இருக்காது என்று சொல்ல,ம்கும்...ஆ... ஊ... என்றால் இதை சொல்லிடு என்றவன், நண்பனின் அருகில் அமர்ந்து கொண்டு எப்படிடா இருக்க? என்க,ம்ம்,நீ எப்படி இருக்க? என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
" வீட்டில் இருந்த நால்வரும் இருவரையும் பார்த்தனர்,அப்பொழுது கொஞ்ச நேரத்துக்கு முன்னே தான் எவனோ ரோசக்காரன்னு ஒருத்தன் இங்கே இருந்தானே தெரியுமா செல்வி? என்றார் வள்ளி பாட்டி.அதைக்கேட்ட நண்பர்கள் இருவரும்,அரசியல்ல இதுலாம் சாதாரணமப்பா என்றனர் கோரஸாக...
"வேலுவோ பிரகாசத்தின் அண்ணன் பேரன்.சிறு வயதில் இருந்தே கதிரும் வேலுவும் ஒன்றாக தான் சுற்றுவார்கள்.உறவை தாண்டி இருவருக்கும் ஆழமான நட்பு இருக்கிறது.அவனுக்கு தெரியாமல் இவன் எதுவும் செய்ய மாட்டான், இவனுக்கு தெரியாமல் அவனும் எதுவும் செய்ய மாட்டான்.
"உன் நண்பனை பற்றி கேட்டால் உன்னை பற்றி தெரியும் என்பதற்கு இலக்கணமே இவர்கள் இருவரும் தான்.சரிடா மச்சான் நடவு எப்படி போச்சு ?என்க,எல்லாம் நல்லா போச்சுடா மச்சான்.
"சரி வா வெளியில போயிட்டு வரலாம் என்று வேலு கூப்பிட,நண்பன் அழைக்கும் காரணம் தெரிய,ம்ம்...வா என்று இருவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது,என்ன யோசனையில் இருக்க?,என்ன குழப்பம்?
இது தான் நண்பன்.தான் சொல்லாமலே தன்னை பற்றி புரிந்து கொண்டானே என்று நண்பனை நினைத்து கதிருக்கு பெருமையாக இருந்தது.
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே, நல்லா தான் இருக்கிறேன் என்று கதிர் சொல்ல,அப்படியா? நம்பிட்டேன்டா என்றவன்,"மொச பிடிக்கும் நாய் மூஞ்ச வச்சே கண்டு பிடிக்கலானு" வள்ளி செல்லம் அடிக்கடி சொல்லும்டா.
"பின்னர் நண்பனிடம் மறைக்க மனமில்லாமல்,கும்மிருட்டிள் தன்னை மோதிவிட்டு டாலரை தொலைத்து சென்றவளையும்,தேவி பேசியதையும், அவர்கள் வீட்டில் இருந்து வந்தது,அதற்கு தான் பதில் சொல்லியது என நடந்த அத்தனையும் நண்பனிடம் கதிரும் சொல்லி முடித்தான் .
"எல்லாத்தையும் கேட்டவன்,ஏண்டா.... ஒரு மனுஷன் மூன்று நாள் ஊரில் இல்லை என்றதும் இவ்வளவு நடந்துருக்கா?.
நல்ல வேளைடா,நான் வருவதற்குள் உனக்கும் தேவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலையே என்ற வேலு, ஒரு நிமிடம் நண்பனை உற்று பார்த்தவன்,நம்ம சீமக்கரை சியான் காதல் கடலில் விழுந்துட்டான்னு சொல்லி சத்தமிட்டு சிரித்தான்.
நண்பன் சிரிப்பதை பார்த்து காண்டு ஏறியதும் என்னடா, நக்கலா இருக்கா?என்று கதிர் முறைக்க,ச்சே ச்சே.நான் அப்படி சொல்லுவேனா மாப்பு என்றவன்,உன் கிட்ட ஒரு கதை சொல்லனும் மாப்பு.
"இந்த ஊருக்குள்ள ஒரு சண்டியர் இருந்தான்டா.அந்த கிராதகனுக்கு காதல் என்றாலே புடிக்காதுடா,அப்படி யாராவது காதல் பண்ணினாலும், அதுலாம் வேலை வெட்டி இல்லாத பயலுங்க பண்ணுறதுடா மாப்பிள்ளைனு சொல்வான்.