• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Feb 3, 2025
Messages
4
புஷ் என்ற சத்தம் சூடான தோசைக்கல்லில் குளிர் நீர் பட்டதன் விளைவாக உண்டானது.

அது கல்லின் சூட்டைத் தணிக்க உதவும்.

ஆனால் அந்த நீரை ஊற்றிய குடும்பத் தலைவியின் சூட்டை, அந்த வீட்டில் இருந்த யாருக்கும் தணிக்கும் வழி தெரியவில்லை.

"எல்லாம் ஏந்தலையெழுத்து. இந்த வீட்டுல எனக்குன்னு பாக்க யாருமே இல்ல. பதினஞ்சி வர்ஷமாச்சி இந்தாளுக்கு வாக்கப்பட்டு வந்து. இன்னும் நாலு வர்ஷம் போச்சின்னா... எங்கப்பே ஆத்தா வீட்டுல இருந்தத விட, இந்த மனுஷங்கூட வாழ்ந்த காலம் தா ஜாஸ்தி. ஆனாலும் என்ன இந்த மனுசெ மனுசியா மதிக்கிறது இல்ல. அத்தன வர்ஷம் குடும்பம் நடந்துன ஆளுக்குக் கல்யாண நாள் நியாபகம் இருக்காதாக்கும். அப்புட்டு மறதி இருக்குறவரு ஹஸ்பிட்டல்லுக்கு தா போகனும். வீட்டுக்குலாம் வரவே கூடாது. ச்ச..." எனப் புலம்பியபடி இரவு உணவாகத் தோசைகளை வார்த்தெடுத்துக் கொண்டிருந்தாள் மதி.

அவள் புலம்பியது சரி என்பதுபோல் இன்று இளமதி-அருள்வேலன் இருவரின் பதினைந்தாவது திருமண நாள்‌.

காலையில் ஆசையாக, அதிக நெய் விட்டு வறுத்த முந்திரி மணத்துடன் கேசரி செய்து வைத்துவிட்டு கணவனை எழுப்ப, அவனோ 'ஏ இவ்ளோ சீக்கிரமா எழுப்புற. போடி அங்கிட்டு.' என்றபடி திரும்பிப் படுத்துக் கொண்டான்.

சரி நேற்று வேலை முடித்துத் தாமதமாகத்தானே வீடு வந்தான். களைப்பாக இருக்கும். எழட்டும், என்று விட்டுச் செல்ல, எழுந்தவன் குளித்து, உடை மாற்றிப் பணிக்குச் செல்லத் தோதான உடையில் தயாராகி நின்றான்.

அவனுக்கு மத்திய உணவை டப்பாவில் அடைத்தவள், "இன்னைக்கி என்ன நாளுன்னு நியாபகம் இருக்கா‌?." என டப்பாவை நீட்டிபடி கேட்க.

"என்ன நாளு? " என்றவனிடம் விளக்கமாகப் பேசும் முன் அவனின் அலைபேசியில் ஏகப்பட்ட அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.

"சரி பாத்துக்க. கூப்பிடுறேன்." என்றவன் ஹெல்மெட்டை கையில் எடுத்துக் கொண்டு, மனைவி நீட்டிய லன்ச்சை தூக்கிக் கொண்டு நடந்தான்.

சரி இடைப்பட்ட நேரத்தில் ஃபோன் செய்வான் என்று பார்த்தால், அழைக்கவே இல்லை.

"மத்த நாளுலயெல்லாம், 'என்ன பண்ற? எது சமச்ச? என்ன சாப்பாடு குடுத்து விட்ட?'ன்னு ஒத்த வார்த்தையாது கூப்பிட்டு கேப்பாரு. ஆனா இன்னைக்கி‌... வேணும்னே பண்ணுறாரு..." எனக் கணவனைத் திட்டிக் கொண்டிருந்தவளிடம்,

"ம்மா... எனக்கு இன்னொரு தோச."

"எனக்கு இன்னும் ரெண்டு வேணும்." என்றனர் அவளின் மகளும் மகனும்.

அவளின் புலம்பல், காதில் விழவில்லை என்பது போல் இருவரும் திருப்தியாக உண்டு முடிக்க, முணுமுணுத்தவாறே கணவனுக்கு ஊற்றிய தோசைகளை, 'ஹாட் பாக்ஸில்' அடுக்கி வைத்தாள். சாப்பிட்ட இடத்தைக் கூட்டி பெருக்கியவள், தன் செல்வங்கள் உறங்கப் பாயை தரையில் விரித்தாள்‌.

பதினைந்து நெடிய வருடங்கள். இதில் எத்தனைப் புடவை அந்த நாளில் அவளுக்கு எடுத்துக் கொடுத்தான் என்றால் மூன்று.‌ அந்த மூன்றும் திருமணமான புதிதில் வாங்கி வந்தது.

கோயிலுக்காவது அழைத்துச் சென்றிருக்கிறானா? என்றால் 'கோயிலா! அதுக்கெல்லாம் போன கூட்டமா இருக்கும். காத்திருந்து சாமிய கும்பிடுறத விட நம்ம வீட்டுல நமக்காக இருக்குற தெய்வத்த கும்பிட்டு, வீட்ட கோயிலா மாத்து.' என்பான்.

அவனைப் பொருத்தவரை கல்யாண நாள், பிறந்த நாள் போன்ற நாட்களைச் சிறப்பாகக் கொண்டாடுவது பிடிக்காது என்பதை விடப் பழகவில்லை என்றால் சரியாக இருக்கும்.

அவன் பழகும் நட்பு வட்டத்தில் இனிப்பு கொடுப்பதே பெரிய விடயம். இதில் வண்ண வண்ண பலூன்களைக் கட்டித் தொங்க விட்டு, புது உடை உடுத்தி, விருந்து ஏற்பாடு செய்து, நடு நாயகமாக நின்று கேக் வெட்டி, பரிசுப் பொருட்களை வாங்குவது, வாழ்த்து பெறுவது என்பது நேரம் மற்றும் பணத்தை விரையம் செய்வது என்பான்.

அது இவர்களைப் போன்ற நடுத்தரக் குடும்பத்திற்கு ஆடம்பர செலவு.

தற்பெருமைக்காகச் செய்யும் செயல் என்பவனிடம் போராடி அரைக்கிலோ கேக் வாங்கி வர வைத்துக் குழந்தைகள் பிறந்தநாளை கொண்டாட வைத்ததே பெரிய சாதனை.

இதில் சிறைபட்ட நாள் என்று அடிக்கடி சொல்லும் கல்யாணம் நாளைக் கொண்டாடுவான் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான்.

ஆனால் ஒவ்வொரு வருடமும் அந்த முட்டாள் தனத்தை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறாள்.

‘என்ன கிடைத்தது என்று இறுதியில் தெரிந்து கொள்வீர்கள்.’

முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, தரையில் அமர்ந்துகொண்டு கடிகாரத்தையும் வாயிலையும் பார்த்தபடி அவள் இருக்க,

"ம்மா... வந்து படும்மா." என்றாள் மகள்.

"ம்ச்..." என முகம் திரும்ப,

"ம்மா..." எனக் கொஞ்சினான் மகன்.

இருவருக்கும் நடுவே படுத்துக் கொண்டாலும் மனம் பொறுமியது.

'இன்னைக்கி நம்ம கல்யாண நாளாடின்னு கிண்டலாக் கூட ஒரு வார்த்தையாது சொல்லிருக்கலாம்.' என உள்ளம் கொதித்தது.

நேரம் பத்தைத் தொட்டது.

படப்படவென வீட்டின் கதவுகள் தட்டப்பட, பயந்து விட்டாள் மதி.

ஏற்கனவே திருமணநாளை மறந்து விட்டான். இதில் கதவு உடையுமளவு தட்டி, அக்கம் பக்கத்து வீட்டார் எட்டப் பார்க்கும் அளவிற்கு தட்டியது, ஆத்திரத்தை தர, வேகமாக எழுந்து சென்று திறந்தாள்.

"கதவத் திறக்க இவ்வளோ நேரமா?" என அவள் கோபமாகப் பேசும் முன் அவனே கோபமாகப் பேசியபடி கையில் இருந்ததை நீட்டினான் மனைவியிடம்.

அது ஹெல்மெட், அதற்குள் பால் பாக்கெட்டுகள் இரண்டு, காலையில் கட்டி அனுப்பி வைத்த டிப்பன் பாக்ஸ், மற்றும் ஒரு சீப்பு வாழைப் பழம் இருந்தது.

வேறு எதுவும் தனக்காக வாங்கி வந்திருக்கிறானா எனத் தேடிப் பார்த்து ஏமாந்த முகத்துடன் கதவை அடைத்து, தாழ்ப்பாள் போட்டு விட்டு உள்ளே வந்தாள்.

"என்னங்கடா! சாப்டிங்களா?" எனப் பிள்ளைகளிடம் கேட்க, அவள் ஹாட் பாக்ஸ், தண்ணீர் சொம்பு, தட்டு முதலானவற்றை எடுத்து வைத்து அதன் அருகில் முழங்கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்தாள்.

"ப்பா! உங்களுக்கு ஒரு சந்தோஷமான விசயம் சொல்லனும்." என்றான் மகன்.

"என்னடா சீமான்.?" என மகனைக் கொஞ்சியவனின் கரம்பற்றி அறைக்குள் இழுத்துச் சென்றாள் மகள்.

"மீனு குட்டி போட்டிருக்குப்பா!."

"ப்பா! இந்தத் தொட்டி முழுக்க மீனுப்பா! எண்ணவே முடியல." என்ற இருவரும் சில மணி நேரத்திற்கு முன் பிறந்த மீன் குஞ்சுகளைக் காட்ட, அதைப் பார்வையிட்டு விட்டு வந்தவன் மனைவியைப் பார்த்து 'ஹீம்...' எனப் பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு குளியலறைக்குள் சென்றான்.

“இப்ப எதுக்கு நீங்க, பெருமூச்சி விட்டிங்க?” வெளியே வந்தவனை மிரட்டினாள் மதி.

“மூச்சு விட்டாக் கூடத் தப்பா இந்த வீட்டுல?” என்றபடி அமர்ந்தான் சாப்பாட்டு தட்டிற்கு முன்.

“மூச்சு விடலாம். ஏ பெருமூச்சு விட்டிங்க?” என்றாள் அவனுக்குப் பரிமாறியபடி,

“ஏண்டா பாப்பு! அப்பா பெரு மூச்சி விடக்கூடாதா?” என மகளிடம் பஞ்சாயத்திற்கு சென்றான்.

“விடலாம் ப்பா. தப்பில்ல.”

இருவரும் சுவாரசியமான குப்புற படுத்துக் கொண்டு பெற்றவர்களின் சண்டையில் பங்கேற்றனர்.

“உங்காத்தா திட்டுறா பாப்பா. இத என்னென்று கேக்க மாட்டியா! டேய் உன்னையெல்லாம் ஆம்பளப்பையனா எதுக்கு பெத்து விட்டேன். அப்பாக்கு ஒரு ஆபத்துன்னா வந்து நிக்கத்தான. போய் அவள என்னென்று கேளு.” என இப்போது பிள்ளைகளை மதியுடன் சண்டை போடும்படி தூண்டி விட்டான்.

“ஏம்மா அப்பாவ மிரட்டுறீங்க?.” மகள் தான் தன் தந்தைக்காகப் பேச வந்தாள்.

“உங்கப்பா எதுக்கு என்னப் பாத்து பெருமூச்சு விட்டாரு. கேட்டுச் சொல்லு டா”

மகன், “எதுக்குப்பா விட்டிங்க?”

மகள், “ஏன்டா மூச்சு விட்டதெல்லாம் தப்பா.? நீ அம்மாக்காக அர்த்தமே இல்லாததுக்கு கேள்வி கேட்டு வந்திருக்க.”

மனைவி, “அவர் சொல்ற பதில வச்சி, நாங்கேட்டது அர்த்தமா அர்த்தமில்லயான்னு தெரியும். சொல்லுங்க ஏ பெருமூச்சி விட்டிங்க?”

“மீனுக்கெல்லாம் அக்கா தம்பி அண்ணெ தங்கச்சின்னு சொல்லிக்கிற மாறி நிறைய உடன் பிறப்புகள் இருக்கு. ஆனா பாரு உங்காத்தா ரெண்டுக்கு மேல குட்டிபோல. எனக்குச் சப்போர்ட் பண்ண நீ ஒருத்தி தா இருக்க. அப்பா நிலைம ரொம்ப பாவமா இருக்கு.” என வருத்தப்பட,

மகன், “ஆமாம்மா! எங்கூட படிக்கிற பசங்களுக்கெல்லாம் விளையாடத் தம்பி இருக்கும்மா. எனக்கு மட்டும் தாம்மா யாரும் இல்ல. எனக்கு ஒரு தம்பி வேணும்மா.” என்ற மகனின் தலையில் தட்டினாள் மதி.

“டேய் அவளே ஒரு ப்யூஸ் கட்ட புடுங்கின ட்யூப் லைட்டு. அவக்கிட்ட போய்க் கேக்குற. அப்பவே எம்மாமனுங்க சொன்னாங்க, ‘எம்பொண்ணையும் கட்டிக்கங்க மாப்ள. ஒன்னுக்கு ரெண்டா உதவியா இருக்கும்’ன்னு நாந்தா கேக்கல. ம்ச்… “

“என்ன சொன்னிங்க! உங்க மாமா, அவரு பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேட்டாரா?.”

“ஆமா.! இப்ப கேட்டாக் கூட, பொண்ணு தர எம்மானுங்க ரெடியா இருப்பானுங்க. அம்புட்டு மரியாத எம்மேல.“ என்றபோதும் மூவருமே விழுந்து விழுந்து சிரித்தனர்.

“என்ன பாப்பு நீயும் சிரிக்கிற.?”

“அப்பா தலை நரைச்சா கூட ஓகே. ஆனா தாடி மீசையும் நரச்சதுக்கு அப்றம் இன்னொரு கல்யாணம்… “ எனச் சொல்லிச் சிரிக்க,

“அதுவும் மாமெ பொண்ணுங்கள!.” என்றாள் மனைவி.

“ஹாங்!!. தேவையாப்பா இது?.”

“அந்தப் பிள்ளைங்க இப்பத்தா காலேஜ்ஜே படிக்கிதுங்க. இதுல இவர் போய்க் கேட்டா இந்தாங்க மாப்ள பொண்ணுன்னு தூக்கி குடுக்குறாங்க. ஹிம்…” எனக் கழுத்தை வளைத்தாள்.

“பாப்பா! உங்களுக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ இல்லன்னு தா அப்பா போராடிட்டு இருக்கேன். உங்காத்தாலோட ஆத்தா சதி பண்ணாம இருந்தா! இன்னேரம் உனக்கும் உந்தம்பிக்கும் கம்பெனி குடுக்க ஆள் வந்திருக்கும். "

"எது! எங்கம்மா சதி பண்ணாங்களா!."

"பாப்பா! பத்து வர்ஷத்துக்கு முன்னாடி உந்தம்பி பிறக்கும்போது உந்தாத்தா ஃபோன்ல கூப்பிட்டு சொன்னாரு. ஹாஸ்பிட்டல் வந்ததும் என்ன குழந்தன்னு கேட்டேன். அதுக்கு பதில் சொல்லாம, ஒரு பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு உங்கம்மாக்கு குடும்பக் கட்டுப்பாடு பண்ணச் சொல்லிடுச்சி உங்க ஆச்சி. அப்ப வில்லி யாரு?"

"வில்லியா!! உங்கப்பா தா கையெடுத்து கும்பிட்டு 'என்ன விட்டுடுங்டா சாமி. ஒத்த கல்யாணம் பண்ணி, ரெண்டு பிள்ள பெக்குறதுக்குள்ள ஏகப்பட்ட பஞ்சாயத்து. அதுனால ஃபேமிலி ப்ளானிங் பண்ணிடு. எந்தக் குழந்தையா இருந்தாலும் தயவு செய்து செஞ்சிடு.'ன்னு சொன்னதே உங்கப்பா தா. நீட்டுன பேப்பர்ல என்ன ஏதுன்னு கேக்காம உங்கப்பா கையெழுத்து போட்டிடுவாராக்கு." என அவளும் விடாது பேசினாள்.

பாவம் பஞ்சாயத்து தலைவியான பதிமூன்று வயது மகளுக்கு, என்ன தீர்ப்பு சொல்வது? என்று தெரியாது தலையைத் தலையை உலுக்கினாள்.

"பாப்பா! இவா அப்ப மயக்கத்துல இருந்தா. அவளுக்கு ஒன்னும் தெரியாது."

"ஆமா எனக்கு அப்ப ஒன்னும் தெரியாது. உங்களுக்கு இப்ப ஒன்னும் தெரியாது. இன்னைக்கி என்ன நாள்னு தெரியாமா?"

"செவ்வாய்க்கிழமை தான பாப்பா? இல்ல புதன் கிழமையா?" என்க பிள்ளைகள் சிரித்தனர். ஆனால் மனைவி முறைத்தாள்.

அவளைப் பார்த்தபடியே கின்னங்களை திறக்க, அதில் காலையில் வைத்த கேசரி சூடு செய்யப்பட்டு இருந்தது.

அதைப் பார்த்தவன்.

"ஓ!!! இன்னைக்கி கருப்பு தினமா?" என்க, பல்லைக் கடித்தபடி இருந்தாள் மதி.

மகள், "ப்பா! பாவம் ப்பா அம்மா. உங்களுக்காக ஆசையா சமச்சிருக்காங்க. கருப்பு தினம்னு கேலி பண்றிங்க."

"என்ன பாப்பா அப்படி சிறப்பா சமைச்சிட்டா. டிப்பன் பாக்ஸ்க்கு சாம்பார் சோறு, பீர்க்கங்காயி ஊறுகாயி."

"காலைல ஆறு மணிக்கு எழுந்து என்னால அவ்ளோ தான் செய்ய முடியும். " எனப் பலம்ப, பிள்ளைகள் இருவரும் சிரித்தனர்.

"நைட் மட்டும் என்ன விருந்தா ஆக்கி வச்சிருக்க. போடி…”

“அப்பக் கடைல இருந்து எதையாது வாங்கிட்டு வந்திருக்கலாம்ல.”
 
New member
Joined
Feb 3, 2025
Messages
4
“ஆமா இவளுக்கு வாங்கிட்டு வருவாங்க. டிவிலயே வெளில கடைல சாப்பிடாதிங்கன்னு பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கானுங்க. புரட்டா வேணுமாம் புரட்டா… இவா இப்படித்தான் கண்டபடி எதையாது பேசிட்டே இருப்பா. தூங்குங்கடா. காலைல ஸ்கூல் இருக்கு. வேண்டாம்ங்கிற பிள்ளைங்களுக்கு ஆசைய காட்டிட்டு இருக்கா பாரு." என்க, இருவரும் போர்வை மூடிக் கொண்டனர்.

அவன் உண்டு முடித்ததும், பாத்திரங்களைத் துழக்கி எடுத்துவிட்டு, உடை மாற்றி விட்டுப் படுக்கும்போது, நேரம் பதினென்றைத் தாண்டி இருந்தது.

மூவரும் வரிசையாக ஹாலில் படுத்திருக்க, கணவனுக்கு மட்டும் தனி அறை. அதில் ஒரு கட்டில் போடுமளவிற்கு மட்டுமே இடம் உண்டு.

படுத்ததும் உறங்காது சில நிமிடங்கள் ஃபோனை நோண்டிக் கொண்டிருப்பது அவளின் பழக்கம். விடி பல்பின் வெளிச்சத்தில் டிவி அணைக்கப்பட்டதால் கணவனின் குரல் தெளிவாகக் கேட்டது.

"மதி..." மெதுவாக,

"..."

"ஏய்... மதி... " என உள்ளிருந்த கணவனின் குரல் சற்று உயர்ந்தது.

"ம்... "

"மதி..." என்றவனின் அழைப்பு எதற்கானது என்று தெரியாத என்ன!.

"என்ன?"

"இங்க வா."

"எதுக்கு?"

"சொம்புல தண்ணி இல்ல டி."

"நா பிடிச்சி வச்சிட்டு தா படுத்தேன். "

"இப்ப தீந்திடுச்சி டி." என்க, கன்னக்கதுப்புகள் சிவக்க மெல்ல எழுந்து சென்றாள்.

ஜன்னல் திண்டில் இருந்த சொம்பை எடுக்க, கட்டிலில் இருந்தவனைத் தாண்டித் தான், அதாவது எக்கித் தான் எடுக்க வேண்டும்.‌

அருகில் அவள் நெருங்கியதும் வாகாக இடையைப் பற்றி இழுத்தவனின் மீது சரிய, செல்லக் கோபத்துடன் முகம் திருப்பினாள்.‌ அவளின் கன்னத்தைப் பற்றித் தன் முகம் காண வைத்தவன்,

"என்னடி திரும்புற!"

"ம்ச்..."

"என்னடி… என்ன." என்றபோது குரல் குலைந்திருந்தது.

"கல்யாண நாள மறந்திட்டிங்கள்ல?"

"ம்ச்... அதெல்லாம் ஒரு விசயமா?. நாம நினைச்சா ஒவ்வொரு நாளும் கல்யாணம் நாள் தான. மாமா உன்ன இன்னைக்கி சிறப்பா கவனிக்கிறேன்." என்றவன் பெண்ணவளின் கழுத்து வளைவில் முகம் புதைக்க, அவனுடன் சேர்ந்து அவன் வளர்க்கும் தாடி மீசையும் அவளை வதைக்கத் தொடங்கியது.

மோகத்துடனும் தாபத்துடனும் கணவன் செய்யும் சேட்டையில் உருகிப் போகும் தன் மனதை இழுத்துப் பிடித்தவள், அவனைத் தடுத்து,

"எனக்குக் கல்யாணம் நாள் பெரிய விசயம் தான். நா என்னென்னமோ நினைச்சேன். ஒரு கிஃப்ட்டு வாங்கிட்டு வந்திருக்கலாம்ல."

"நானே உனக்கு கிஃப்ட் தான். நீயே எனக்கு கிஃப்ட். இதுல தனியா எதுக்கு வாங்கனும்." என்றவனை முறைத்தவள்,

"இப்படி பூமரா பேசிப் பேசியே ஏமாத்துங்க."

"மாமா உன்ன ஏமாத்துவேனா?"

"க்கும்..." என்று இதழ் கோணி, விழி உருட்டினாள்.

"ஏய்... மதி... ம்ச்... பாருடி."

"என்ன.?"

"போய் மாமா கலட்டிப் போட்ட ஃபோண்ட் பாக்கெட்டுல என்ன இருக்குன்னு பாரேன். அப்பத்தா மாமா மனசு தங்கம்னு தெரியும்." என்றதும் வேகமாகச் சென்று, அழுக்கு கூடையில் அவனின் கால்சட்டையில் தேட, அதில் ஒரு லிட்டில் ஹாட் மிட்டாய் இருந்தது.

அதைப் பார்த்ததும் விழிகள் விரிய, எடுத்துக் கொண்டு வேகமாக வந்தவள், அவனின் மார்பில் வந்து விழுந்தாள்.

"அம்மா!!... புளி மூட்ட வந்து விழுந்திருச்சே!.” எனக் கேலி செய்தவன், வாகாய் அவளை அணைத்துக் கொண்டான்‌.

“இந்த மிட்டாய உம்பிள்ளைங்க கண்ணுல சிக்காம மாமெ பத்திரப்படுத்தி எடுத்திட்டு வந்திருக்கேன். யாருக்காக... உனக்காகத் தாண்டி ஏம்புஜ்ஜு." என்க, சிரித்தபடி அவனின் அணைப்பில் கிறங்கிக் கிடந்தாள்.

அந்த மிட்டாய் அவர்களுக்குச் சற்று ஸ்பெஷலானது.

இதய வடிவில் சற்று கடினமாக இருக்கும் அதன் கூட்டிற்கு நடுவே நீர்ம நிலையில் ஸ்ட்ராபெரி சுவையுடைய கூழ் இருக்கும்.

அதுபோல் தான் உன்னை நான் என் இதயக்கூட்டிற்கு வைத்திருக்கிறேன் என்றான் முதல் முறை அதை வாங்கித் தந்தபோது.

இந்த மிட்டாய் தான் அவளுக்கு அவன் தந்த முதல் பரிசு‌.

நிச்சயதார்த்தத்தின்போது அதைத் தான் அவளுக்கு ஊட்டி விட்டான்.

ஒரு ரூபாய் கொடுத்தால் கடையில் அவளே வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அந்த நாளில் அவன் வாங்கி வந்து இருவரும் சுவைப்பது தனி சுகம்.

மார்பில் கன்னம் பதிய படுத்திருந்தவளின் உச்சந்தலையில் முத்தமிட்டு, பெண்ணவளை ரசிக்க, விழி உயர்த்தி அவனைப் பார்த்தவள்,

"இன்னைக்கு உங்க பொண்ணு ஒரு கேள்வி கேட்டா?"

"என்னென்னு.?"

"நீங்க அப்பாவ லவ் பண்றிங்களான்னு?" என்றதும் அவளின் தலை உயர்த்தி பிடித்தவன்,

"ஏய்! என்னடி பேச்சி இது. அவ வயசுக்கு தக்கன மாறிப் பேசச்சா இது. கண்டத போட்டு அவாக்கிட்ட காட்டாத. டிவி சிரியல்ல நிப்பாட்டு‌."

"ஆமா! நாந்தா சொல்லிக் குடுக்குறேன். போங்கப்பா!. அவளோட ஸ்கூல்ல, பிள்ளைங்க நிறைய பேசுதுங்க. நாம புதுசா சொல்லித் தர வேண்டியதில்லை. எது சரி, எது தப்புன்னு சொல்லிக் குடுத்தா மட்டும் போதும்."

"பிள்ளைங்கள நல்லா கவனிச்சுக்க மதி. இது அவங்களுக்கு பருவ வயசு." எனப் பல அறிவுரைகள் வாரி வழங்கியவன், முடிவில்...

"என்ன பதில் சொன்ன நீ?" என்றான் ஆவலாக.

இருவருக்கும் பெரியவர்கள் பார்த்துச் செய்து வைத்த திருமணம் தான். முதல் சில ஆண்டுகள்‌ பல இன்னல்களைச் சந்தித்தனர். சண்டையிட்டு தாய் வீட்டில், கோபித்துக் கொண்டு கூடப் பல மாதங்கள் அமர்ந்திருக்கிறாள்.

சமாதானம் செய்து, அழைத்து வந்தான்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட போதே இருவருக்கும் இடையே புரிதலுடன் ஒரு காதல் அழகாய் மலர்ந்திருந்தது. அது சண்டையிட்டு பிரிந்திருந்த காலத்திலும் மறையாது இருவரையும் அழகாய் பிணைத்து வைத்தது.

அந்தக் காதலை இருவரும் உணர்ந்திருந்தாலும் இதுவரை அவர்கள் அதைப் பரிமாறிக் கொண்டது இல்லை.

அதனால் தான், தான் கேட்க நினைத்ததை தன் மகள் கேட்டிருக்கிறாள் என்று பதிலை அறியும் ஆவல் மேலோங்கியிருந்தது.

மார்பில் கிடந்தவளின் கன்னம்பற்றி உயர்த்தியவன், பதில் சொல் என்க,

அவனைப் பார்த்து விஷமமாகச் சிரித்தபடி எழுந்து சென்றாள்.

"ஏய் எங்கடி போற.?" என்றவனுக்கு அவள் பதில் தேவையே. அதைக் கொடுக்காது எழுந்து சென்றால் எப்படி?.

"அப்பக் கதவ பூட்ட வேண்டாமா." என்றாள் விசமச் சிரிப்புடன்.

"பூட்டு பூட்டு. பூட்டிட்டு பக்கத்துல வந்து பதில் சொல்லு." என்றவன் கூடலுக்கு தயாராகிப்‌ போனான்.

உடல் தேவைக்காகக் கூடி கழித்த காலம் இளமைக் காலமென்றால், அந்தக் காலம் கடந்த வந்தபின் அமையும் ஒவ்வொரு இரவும் அவர்கள் கொள்ளும் தாம்பத்தியம் காதலுக்கானது.

வியர்வை ஊற்றில் பூரண திருப்தியுடன் மனைவி இதழ் பதித்து மார்பில் தரும் முத்தம் அவனுக்கும், உன்னுடன் கலந்த பின், என்னைப் புதிதாய் உணர்கிறேன் என்ற ரீதியில் நெற்றியில் இதழ் பதித்து கணவன் தரும் முத்தமும் சிறந்த பரிசு.

இன்று அவர்களின் திருமண நாள் என்பதால், அது அவர்களின் கல்யாணப் பரிசு.


அனிதா குமார்...

நன்றி….
 
Joined
Feb 6, 2025
Messages
20
“ஆமா இவளுக்கு வாங்கிட்டு வருவாங்க. டிவிலயே வெளில கடைல சாப்பிடாதிங்கன்னு பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கானுங்க. புரட்டா வேணுமாம் புரட்டா… இவா இப்படித்தான் கண்டபடி எதையாது பேசிட்டே இருப்பா. தூங்குங்கடா. காலைல ஸ்கூல் இருக்கு. வேண்டாம்ங்கிற பிள்ளைங்களுக்கு ஆசைய காட்டிட்டு இருக்கா பாரு." என்க, இருவரும் போர்வை மூடிக் கொண்டனர்.

அவன் உண்டு முடித்ததும், பாத்திரங்களைத் துழக்கி எடுத்துவிட்டு, உடை மாற்றி விட்டுப் படுக்கும்போது, நேரம் பதினென்றைத் தாண்டி இருந்தது.

மூவரும் வரிசையாக ஹாலில் படுத்திருக்க, கணவனுக்கு மட்டும் தனி அறை. அதில் ஒரு கட்டில் போடுமளவிற்கு மட்டுமே இடம் உண்டு.

படுத்ததும் உறங்காது சில நிமிடங்கள் ஃபோனை நோண்டிக் கொண்டிருப்பது அவளின் பழக்கம். விடி பல்பின் வெளிச்சத்தில் டிவி அணைக்கப்பட்டதால் கணவனின் குரல் தெளிவாகக் கேட்டது.

"மதி..." மெதுவாக,

"..."

"ஏய்... மதி... " என உள்ளிருந்த கணவனின் குரல் சற்று உயர்ந்தது.

"ம்... "

"மதி..." என்றவனின் அழைப்பு எதற்கானது என்று தெரியாத என்ன!.

"என்ன?"

"இங்க வா."

"எதுக்கு?"

"சொம்புல தண்ணி இல்ல டி."

"நா பிடிச்சி வச்சிட்டு தா படுத்தேன். "

"இப்ப தீந்திடுச்சி டி." என்க, கன்னக்கதுப்புகள் சிவக்க மெல்ல எழுந்து சென்றாள்.

ஜன்னல் திண்டில் இருந்த சொம்பை எடுக்க, கட்டிலில் இருந்தவனைத் தாண்டித் தான், அதாவது எக்கித் தான் எடுக்க வேண்டும்.‌

அருகில் அவள் நெருங்கியதும் வாகாக இடையைப் பற்றி இழுத்தவனின் மீது சரிய, செல்லக் கோபத்துடன் முகம் திருப்பினாள்.‌ அவளின் கன்னத்தைப் பற்றித் தன் முகம் காண வைத்தவன்,

"என்னடி திரும்புற!"

"ம்ச்..."

"என்னடி… என்ன." என்றபோது குரல் குலைந்திருந்தது.

"கல்யாண நாள மறந்திட்டிங்கள்ல?"

"ம்ச்... அதெல்லாம் ஒரு விசயமா?. நாம நினைச்சா ஒவ்வொரு நாளும் கல்யாணம் நாள் தான. மாமா உன்ன இன்னைக்கி சிறப்பா கவனிக்கிறேன்." என்றவன் பெண்ணவளின் கழுத்து வளைவில் முகம் புதைக்க, அவனுடன் சேர்ந்து அவன் வளர்க்கும் தாடி மீசையும் அவளை வதைக்கத் தொடங்கியது.

மோகத்துடனும் தாபத்துடனும் கணவன் செய்யும் சேட்டையில் உருகிப் போகும் தன் மனதை இழுத்துப் பிடித்தவள், அவனைத் தடுத்து,

"எனக்குக் கல்யாணம் நாள் பெரிய விசயம் தான். நா என்னென்னமோ நினைச்சேன். ஒரு கிஃப்ட்டு வாங்கிட்டு வந்திருக்கலாம்ல."

"நானே உனக்கு கிஃப்ட் தான். நீயே எனக்கு கிஃப்ட். இதுல தனியா எதுக்கு வாங்கனும்." என்றவனை முறைத்தவள்,

"இப்படி பூமரா பேசிப் பேசியே ஏமாத்துங்க."

"மாமா உன்ன ஏமாத்துவேனா?"

"க்கும்..." என்று இதழ் கோணி, விழி உருட்டினாள்.

"ஏய்... மதி... ம்ச்... பாருடி."

"என்ன.?"

"போய் மாமா கலட்டிப் போட்ட ஃபோண்ட் பாக்கெட்டுல என்ன இருக்குன்னு பாரேன். அப்பத்தா மாமா மனசு தங்கம்னு தெரியும்." என்றதும் வேகமாகச் சென்று, அழுக்கு கூடையில் அவனின் கால்சட்டையில் தேட, அதில் ஒரு லிட்டில் ஹாட் மிட்டாய் இருந்தது.

அதைப் பார்த்ததும் விழிகள் விரிய, எடுத்துக் கொண்டு வேகமாக வந்தவள், அவனின் மார்பில் வந்து விழுந்தாள்.

"அம்மா!!... புளி மூட்ட வந்து விழுந்திருச்சே!.” எனக் கேலி செய்தவன், வாகாய் அவளை அணைத்துக் கொண்டான்‌.

“இந்த மிட்டாய உம்பிள்ளைங்க கண்ணுல சிக்காம மாமெ பத்திரப்படுத்தி எடுத்திட்டு வந்திருக்கேன். யாருக்காக... உனக்காகத் தாண்டி ஏம்புஜ்ஜு." என்க, சிரித்தபடி அவனின் அணைப்பில் கிறங்கிக் கிடந்தாள்.

அந்த மிட்டாய் அவர்களுக்குச் சற்று ஸ்பெஷலானது.

இதய வடிவில் சற்று கடினமாக இருக்கும் அதன் கூட்டிற்கு நடுவே நீர்ம நிலையில் ஸ்ட்ராபெரி சுவையுடைய கூழ் இருக்கும்.

அதுபோல் தான் உன்னை நான் என் இதயக்கூட்டிற்கு வைத்திருக்கிறேன் என்றான் முதல் முறை அதை வாங்கித் தந்தபோது.

இந்த மிட்டாய் தான் அவளுக்கு அவன் தந்த முதல் பரிசு‌.

நிச்சயதார்த்தத்தின்போது அதைத் தான் அவளுக்கு ஊட்டி விட்டான்.

ஒரு ரூபாய் கொடுத்தால் கடையில் அவளே வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அந்த நாளில் அவன் வாங்கி வந்து இருவரும் சுவைப்பது தனி சுகம்.

மார்பில் கன்னம் பதிய படுத்திருந்தவளின் உச்சந்தலையில் முத்தமிட்டு, பெண்ணவளை ரசிக்க, விழி உயர்த்தி அவனைப் பார்த்தவள்,

"இன்னைக்கு உங்க பொண்ணு ஒரு கேள்வி கேட்டா?"

"என்னென்னு.?"

"நீங்க அப்பாவ லவ் பண்றிங்களான்னு?" என்றதும் அவளின் தலை உயர்த்தி பிடித்தவன்,

"ஏய்! என்னடி பேச்சி இது. அவ வயசுக்கு தக்கன மாறிப் பேசச்சா இது. கண்டத போட்டு அவாக்கிட்ட காட்டாத. டிவி சிரியல்ல நிப்பாட்டு‌."

"ஆமா! நாந்தா சொல்லிக் குடுக்குறேன். போங்கப்பா!. அவளோட ஸ்கூல்ல, பிள்ளைங்க நிறைய பேசுதுங்க. நாம புதுசா சொல்லித் தர வேண்டியதில்லை. எது சரி, எது தப்புன்னு சொல்லிக் குடுத்தா மட்டும் போதும்."

"பிள்ளைங்கள நல்லா கவனிச்சுக்க மதி. இது அவங்களுக்கு பருவ வயசு." எனப் பல அறிவுரைகள் வாரி வழங்கியவன், முடிவில்...

"என்ன பதில் சொன்ன நீ?" என்றான் ஆவலாக.

இருவருக்கும் பெரியவர்கள் பார்த்துச் செய்து வைத்த திருமணம் தான். முதல் சில ஆண்டுகள்‌ பல இன்னல்களைச் சந்தித்தனர். சண்டையிட்டு தாய் வீட்டில், கோபித்துக் கொண்டு கூடப் பல மாதங்கள் அமர்ந்திருக்கிறாள்.

சமாதானம் செய்து, அழைத்து வந்தான்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட போதே இருவருக்கும் இடையே புரிதலுடன் ஒரு காதல் அழகாய் மலர்ந்திருந்தது. அது சண்டையிட்டு பிரிந்திருந்த காலத்திலும் மறையாது இருவரையும் அழகாய் பிணைத்து வைத்தது.

அந்தக் காதலை இருவரும் உணர்ந்திருந்தாலும் இதுவரை அவர்கள் அதைப் பரிமாறிக் கொண்டது இல்லை.

அதனால் தான், தான் கேட்க நினைத்ததை தன் மகள் கேட்டிருக்கிறாள் என்று பதிலை அறியும் ஆவல் மேலோங்கியிருந்தது.

மார்பில் கிடந்தவளின் கன்னம்பற்றி உயர்த்தியவன், பதில் சொல் என்க,

அவனைப் பார்த்து விஷமமாகச் சிரித்தபடி எழுந்து சென்றாள்.

"ஏய் எங்கடி போற.?" என்றவனுக்கு அவள் பதில் தேவையே. அதைக் கொடுக்காது எழுந்து சென்றால் எப்படி?.

"அப்பக் கதவ பூட்ட வேண்டாமா." என்றாள் விசமச் சிரிப்புடன்.

"பூட்டு பூட்டு. பூட்டிட்டு பக்கத்துல வந்து பதில் சொல்லு." என்றவன் கூடலுக்கு தயாராகிப்‌ போனான்.

உடல் தேவைக்காகக் கூடி கழித்த காலம் இளமைக் காலமென்றால், அந்தக் காலம் கடந்த வந்தபின் அமையும் ஒவ்வொரு இரவும் அவர்கள் கொள்ளும் தாம்பத்தியம் காதலுக்கானது.

வியர்வை ஊற்றில் பூரண திருப்தியுடன் மனைவி இதழ் பதித்து மார்பில் தரும் முத்தம் அவனுக்கும், உன்னுடன் கலந்த பின், என்னைப் புதிதாய் உணர்கிறேன் என்ற ரீதியில் நெற்றியில் இதழ் பதித்து கணவன் தரும் முத்தமும் சிறந்த பரிசு.

இன்று அவர்களின் திருமண நாள் என்பதால், அது அவர்களின் கல்யாணப் பரிசு.


அனிதா குமார்...

நன்றி….
அருமையான சிறுகதை.அழகான ஆழமான அர்த்தங்கள். வாழ்த்துகள் மா 🦚🦚
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
ஷார்ட் அன்ட் ஸ்வீட் லவ் ஸ்டோரி. யதார்த்தமான காதல் கதை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் அனிதா💐💐💐
 
New member
Joined
Feb 3, 2025
Messages
4
ஷார்ட் அன்ட் ஸ்வீட் லவ் ஸ்டோரி. யதார்த்தமான காதல் கதை.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் அனிதா💐💐💐
Thank you sis 😊 🙏 🙏 🙏
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top