- Thread Author
- #1
புஷ் என்ற சத்தம் சூடான தோசைக்கல்லில் குளிர் நீர் பட்டதன் விளைவாக உண்டானது.
அது கல்லின் சூட்டைத் தணிக்க உதவும்.
ஆனால் அந்த நீரை ஊற்றிய குடும்பத் தலைவியின் சூட்டை, அந்த வீட்டில் இருந்த யாருக்கும் தணிக்கும் வழி தெரியவில்லை.
"எல்லாம் ஏந்தலையெழுத்து. இந்த வீட்டுல எனக்குன்னு பாக்க யாருமே இல்ல. பதினஞ்சி வர்ஷமாச்சி இந்தாளுக்கு வாக்கப்பட்டு வந்து. இன்னும் நாலு வர்ஷம் போச்சின்னா... எங்கப்பே ஆத்தா வீட்டுல இருந்தத விட, இந்த மனுஷங்கூட வாழ்ந்த காலம் தா ஜாஸ்தி. ஆனாலும் என்ன இந்த மனுசெ மனுசியா மதிக்கிறது இல்ல. அத்தன வர்ஷம் குடும்பம் நடந்துன ஆளுக்குக் கல்யாண நாள் நியாபகம் இருக்காதாக்கும். அப்புட்டு மறதி இருக்குறவரு ஹஸ்பிட்டல்லுக்கு தா போகனும். வீட்டுக்குலாம் வரவே கூடாது. ச்ச..." எனப் புலம்பியபடி இரவு உணவாகத் தோசைகளை வார்த்தெடுத்துக் கொண்டிருந்தாள் மதி.
அவள் புலம்பியது சரி என்பதுபோல் இன்று இளமதி-அருள்வேலன் இருவரின் பதினைந்தாவது திருமண நாள்.
காலையில் ஆசையாக, அதிக நெய் விட்டு வறுத்த முந்திரி மணத்துடன் கேசரி செய்து வைத்துவிட்டு கணவனை எழுப்ப, அவனோ 'ஏ இவ்ளோ சீக்கிரமா எழுப்புற. போடி அங்கிட்டு.' என்றபடி திரும்பிப் படுத்துக் கொண்டான்.
சரி நேற்று வேலை முடித்துத் தாமதமாகத்தானே வீடு வந்தான். களைப்பாக இருக்கும். எழட்டும், என்று விட்டுச் செல்ல, எழுந்தவன் குளித்து, உடை மாற்றிப் பணிக்குச் செல்லத் தோதான உடையில் தயாராகி நின்றான்.
அவனுக்கு மத்திய உணவை டப்பாவில் அடைத்தவள், "இன்னைக்கி என்ன நாளுன்னு நியாபகம் இருக்கா?." என டப்பாவை நீட்டிபடி கேட்க.
"என்ன நாளு? " என்றவனிடம் விளக்கமாகப் பேசும் முன் அவனின் அலைபேசியில் ஏகப்பட்ட அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.
"சரி பாத்துக்க. கூப்பிடுறேன்." என்றவன் ஹெல்மெட்டை கையில் எடுத்துக் கொண்டு, மனைவி நீட்டிய லன்ச்சை தூக்கிக் கொண்டு நடந்தான்.
சரி இடைப்பட்ட நேரத்தில் ஃபோன் செய்வான் என்று பார்த்தால், அழைக்கவே இல்லை.
"மத்த நாளுலயெல்லாம், 'என்ன பண்ற? எது சமச்ச? என்ன சாப்பாடு குடுத்து விட்ட?'ன்னு ஒத்த வார்த்தையாது கூப்பிட்டு கேப்பாரு. ஆனா இன்னைக்கி... வேணும்னே பண்ணுறாரு..." எனக் கணவனைத் திட்டிக் கொண்டிருந்தவளிடம்,
"ம்மா... எனக்கு இன்னொரு தோச."
"எனக்கு இன்னும் ரெண்டு வேணும்." என்றனர் அவளின் மகளும் மகனும்.
அவளின் புலம்பல், காதில் விழவில்லை என்பது போல் இருவரும் திருப்தியாக உண்டு முடிக்க, முணுமுணுத்தவாறே கணவனுக்கு ஊற்றிய தோசைகளை, 'ஹாட் பாக்ஸில்' அடுக்கி வைத்தாள். சாப்பிட்ட இடத்தைக் கூட்டி பெருக்கியவள், தன் செல்வங்கள் உறங்கப் பாயை தரையில் விரித்தாள்.
பதினைந்து நெடிய வருடங்கள். இதில் எத்தனைப் புடவை அந்த நாளில் அவளுக்கு எடுத்துக் கொடுத்தான் என்றால் மூன்று. அந்த மூன்றும் திருமணமான புதிதில் வாங்கி வந்தது.
கோயிலுக்காவது அழைத்துச் சென்றிருக்கிறானா? என்றால் 'கோயிலா! அதுக்கெல்லாம் போன கூட்டமா இருக்கும். காத்திருந்து சாமிய கும்பிடுறத விட நம்ம வீட்டுல நமக்காக இருக்குற தெய்வத்த கும்பிட்டு, வீட்ட கோயிலா மாத்து.' என்பான்.
அவனைப் பொருத்தவரை கல்யாண நாள், பிறந்த நாள் போன்ற நாட்களைச் சிறப்பாகக் கொண்டாடுவது பிடிக்காது என்பதை விடப் பழகவில்லை என்றால் சரியாக இருக்கும்.
அவன் பழகும் நட்பு வட்டத்தில் இனிப்பு கொடுப்பதே பெரிய விடயம். இதில் வண்ண வண்ண பலூன்களைக் கட்டித் தொங்க விட்டு, புது உடை உடுத்தி, விருந்து ஏற்பாடு செய்து, நடு நாயகமாக நின்று கேக் வெட்டி, பரிசுப் பொருட்களை வாங்குவது, வாழ்த்து பெறுவது என்பது நேரம் மற்றும் பணத்தை விரையம் செய்வது என்பான்.
அது இவர்களைப் போன்ற நடுத்தரக் குடும்பத்திற்கு ஆடம்பர செலவு.
தற்பெருமைக்காகச் செய்யும் செயல் என்பவனிடம் போராடி அரைக்கிலோ கேக் வாங்கி வர வைத்துக் குழந்தைகள் பிறந்தநாளை கொண்டாட வைத்ததே பெரிய சாதனை.
இதில் சிறைபட்ட நாள் என்று அடிக்கடி சொல்லும் கல்யாணம் நாளைக் கொண்டாடுவான் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான்.
ஆனால் ஒவ்வொரு வருடமும் அந்த முட்டாள் தனத்தை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறாள்.
‘என்ன கிடைத்தது என்று இறுதியில் தெரிந்து கொள்வீர்கள்.’
முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, தரையில் அமர்ந்துகொண்டு கடிகாரத்தையும் வாயிலையும் பார்த்தபடி அவள் இருக்க,
"ம்மா... வந்து படும்மா." என்றாள் மகள்.
"ம்ச்..." என முகம் திரும்ப,
"ம்மா..." எனக் கொஞ்சினான் மகன்.
இருவருக்கும் நடுவே படுத்துக் கொண்டாலும் மனம் பொறுமியது.
'இன்னைக்கி நம்ம கல்யாண நாளாடின்னு கிண்டலாக் கூட ஒரு வார்த்தையாது சொல்லிருக்கலாம்.' என உள்ளம் கொதித்தது.
நேரம் பத்தைத் தொட்டது.
படப்படவென வீட்டின் கதவுகள் தட்டப்பட, பயந்து விட்டாள் மதி.
ஏற்கனவே திருமணநாளை மறந்து விட்டான். இதில் கதவு உடையுமளவு தட்டி, அக்கம் பக்கத்து வீட்டார் எட்டப் பார்க்கும் அளவிற்கு தட்டியது, ஆத்திரத்தை தர, வேகமாக எழுந்து சென்று திறந்தாள்.
"கதவத் திறக்க இவ்வளோ நேரமா?" என அவள் கோபமாகப் பேசும் முன் அவனே கோபமாகப் பேசியபடி கையில் இருந்ததை நீட்டினான் மனைவியிடம்.
அது ஹெல்மெட், அதற்குள் பால் பாக்கெட்டுகள் இரண்டு, காலையில் கட்டி அனுப்பி வைத்த டிப்பன் பாக்ஸ், மற்றும் ஒரு சீப்பு வாழைப் பழம் இருந்தது.
வேறு எதுவும் தனக்காக வாங்கி வந்திருக்கிறானா எனத் தேடிப் பார்த்து ஏமாந்த முகத்துடன் கதவை அடைத்து, தாழ்ப்பாள் போட்டு விட்டு உள்ளே வந்தாள்.
"என்னங்கடா! சாப்டிங்களா?" எனப் பிள்ளைகளிடம் கேட்க, அவள் ஹாட் பாக்ஸ், தண்ணீர் சொம்பு, தட்டு முதலானவற்றை எடுத்து வைத்து அதன் அருகில் முழங்கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்தாள்.
"ப்பா! உங்களுக்கு ஒரு சந்தோஷமான விசயம் சொல்லனும்." என்றான் மகன்.
"என்னடா சீமான்.?" என மகனைக் கொஞ்சியவனின் கரம்பற்றி அறைக்குள் இழுத்துச் சென்றாள் மகள்.
"மீனு குட்டி போட்டிருக்குப்பா!."
"ப்பா! இந்தத் தொட்டி முழுக்க மீனுப்பா! எண்ணவே முடியல." என்ற இருவரும் சில மணி நேரத்திற்கு முன் பிறந்த மீன் குஞ்சுகளைக் காட்ட, அதைப் பார்வையிட்டு விட்டு வந்தவன் மனைவியைப் பார்த்து 'ஹீம்...' எனப் பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு குளியலறைக்குள் சென்றான்.
“இப்ப எதுக்கு நீங்க, பெருமூச்சி விட்டிங்க?” வெளியே வந்தவனை மிரட்டினாள் மதி.
“மூச்சு விட்டாக் கூடத் தப்பா இந்த வீட்டுல?” என்றபடி அமர்ந்தான் சாப்பாட்டு தட்டிற்கு முன்.
“மூச்சு விடலாம். ஏ பெருமூச்சு விட்டிங்க?” என்றாள் அவனுக்குப் பரிமாறியபடி,
“ஏண்டா பாப்பு! அப்பா பெரு மூச்சி விடக்கூடாதா?” என மகளிடம் பஞ்சாயத்திற்கு சென்றான்.
“விடலாம் ப்பா. தப்பில்ல.”
இருவரும் சுவாரசியமான குப்புற படுத்துக் கொண்டு பெற்றவர்களின் சண்டையில் பங்கேற்றனர்.
“உங்காத்தா திட்டுறா பாப்பா. இத என்னென்று கேக்க மாட்டியா! டேய் உன்னையெல்லாம் ஆம்பளப்பையனா எதுக்கு பெத்து விட்டேன். அப்பாக்கு ஒரு ஆபத்துன்னா வந்து நிக்கத்தான. போய் அவள என்னென்று கேளு.” என இப்போது பிள்ளைகளை மதியுடன் சண்டை போடும்படி தூண்டி விட்டான்.
“ஏம்மா அப்பாவ மிரட்டுறீங்க?.” மகள் தான் தன் தந்தைக்காகப் பேச வந்தாள்.
“உங்கப்பா எதுக்கு என்னப் பாத்து பெருமூச்சு விட்டாரு. கேட்டுச் சொல்லு டா”
மகன், “எதுக்குப்பா விட்டிங்க?”
மகள், “ஏன்டா மூச்சு விட்டதெல்லாம் தப்பா.? நீ அம்மாக்காக அர்த்தமே இல்லாததுக்கு கேள்வி கேட்டு வந்திருக்க.”
மனைவி, “அவர் சொல்ற பதில வச்சி, நாங்கேட்டது அர்த்தமா அர்த்தமில்லயான்னு தெரியும். சொல்லுங்க ஏ பெருமூச்சி விட்டிங்க?”
“மீனுக்கெல்லாம் அக்கா தம்பி அண்ணெ தங்கச்சின்னு சொல்லிக்கிற மாறி நிறைய உடன் பிறப்புகள் இருக்கு. ஆனா பாரு உங்காத்தா ரெண்டுக்கு மேல குட்டிபோல. எனக்குச் சப்போர்ட் பண்ண நீ ஒருத்தி தா இருக்க. அப்பா நிலைம ரொம்ப பாவமா இருக்கு.” என வருத்தப்பட,
மகன், “ஆமாம்மா! எங்கூட படிக்கிற பசங்களுக்கெல்லாம் விளையாடத் தம்பி இருக்கும்மா. எனக்கு மட்டும் தாம்மா யாரும் இல்ல. எனக்கு ஒரு தம்பி வேணும்மா.” என்ற மகனின் தலையில் தட்டினாள் மதி.
“டேய் அவளே ஒரு ப்யூஸ் கட்ட புடுங்கின ட்யூப் லைட்டு. அவக்கிட்ட போய்க் கேக்குற. அப்பவே எம்மாமனுங்க சொன்னாங்க, ‘எம்பொண்ணையும் கட்டிக்கங்க மாப்ள. ஒன்னுக்கு ரெண்டா உதவியா இருக்கும்’ன்னு நாந்தா கேக்கல. ம்ச்… “
“என்ன சொன்னிங்க! உங்க மாமா, அவரு பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேட்டாரா?.”
“ஆமா.! இப்ப கேட்டாக் கூட, பொண்ணு தர எம்மானுங்க ரெடியா இருப்பானுங்க. அம்புட்டு மரியாத எம்மேல.“ என்றபோதும் மூவருமே விழுந்து விழுந்து சிரித்தனர்.
“என்ன பாப்பு நீயும் சிரிக்கிற.?”
“அப்பா தலை நரைச்சா கூட ஓகே. ஆனா தாடி மீசையும் நரச்சதுக்கு அப்றம் இன்னொரு கல்யாணம்… “ எனச் சொல்லிச் சிரிக்க,
“அதுவும் மாமெ பொண்ணுங்கள!.” என்றாள் மனைவி.
“ஹாங்!!. தேவையாப்பா இது?.”
“அந்தப் பிள்ளைங்க இப்பத்தா காலேஜ்ஜே படிக்கிதுங்க. இதுல இவர் போய்க் கேட்டா இந்தாங்க மாப்ள பொண்ணுன்னு தூக்கி குடுக்குறாங்க. ஹிம்…” எனக் கழுத்தை வளைத்தாள்.
“பாப்பா! உங்களுக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ இல்லன்னு தா அப்பா போராடிட்டு இருக்கேன். உங்காத்தாலோட ஆத்தா சதி பண்ணாம இருந்தா! இன்னேரம் உனக்கும் உந்தம்பிக்கும் கம்பெனி குடுக்க ஆள் வந்திருக்கும். "
"எது! எங்கம்மா சதி பண்ணாங்களா!."
"பாப்பா! பத்து வர்ஷத்துக்கு முன்னாடி உந்தம்பி பிறக்கும்போது உந்தாத்தா ஃபோன்ல கூப்பிட்டு சொன்னாரு. ஹாஸ்பிட்டல் வந்ததும் என்ன குழந்தன்னு கேட்டேன். அதுக்கு பதில் சொல்லாம, ஒரு பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு உங்கம்மாக்கு குடும்பக் கட்டுப்பாடு பண்ணச் சொல்லிடுச்சி உங்க ஆச்சி. அப்ப வில்லி யாரு?"
"வில்லியா!! உங்கப்பா தா கையெடுத்து கும்பிட்டு 'என்ன விட்டுடுங்டா சாமி. ஒத்த கல்யாணம் பண்ணி, ரெண்டு பிள்ள பெக்குறதுக்குள்ள ஏகப்பட்ட பஞ்சாயத்து. அதுனால ஃபேமிலி ப்ளானிங் பண்ணிடு. எந்தக் குழந்தையா இருந்தாலும் தயவு செய்து செஞ்சிடு.'ன்னு சொன்னதே உங்கப்பா தா. நீட்டுன பேப்பர்ல என்ன ஏதுன்னு கேக்காம உங்கப்பா கையெழுத்து போட்டிடுவாராக்கு." என அவளும் விடாது பேசினாள்.
பாவம் பஞ்சாயத்து தலைவியான பதிமூன்று வயது மகளுக்கு, என்ன தீர்ப்பு சொல்வது? என்று தெரியாது தலையைத் தலையை உலுக்கினாள்.
"பாப்பா! இவா அப்ப மயக்கத்துல இருந்தா. அவளுக்கு ஒன்னும் தெரியாது."
"ஆமா எனக்கு அப்ப ஒன்னும் தெரியாது. உங்களுக்கு இப்ப ஒன்னும் தெரியாது. இன்னைக்கி என்ன நாள்னு தெரியாமா?"
"செவ்வாய்க்கிழமை தான பாப்பா? இல்ல புதன் கிழமையா?" என்க பிள்ளைகள் சிரித்தனர். ஆனால் மனைவி முறைத்தாள்.
அவளைப் பார்த்தபடியே கின்னங்களை திறக்க, அதில் காலையில் வைத்த கேசரி சூடு செய்யப்பட்டு இருந்தது.
அதைப் பார்த்தவன்.
"ஓ!!! இன்னைக்கி கருப்பு தினமா?" என்க, பல்லைக் கடித்தபடி இருந்தாள் மதி.
மகள், "ப்பா! பாவம் ப்பா அம்மா. உங்களுக்காக ஆசையா சமச்சிருக்காங்க. கருப்பு தினம்னு கேலி பண்றிங்க."
"என்ன பாப்பா அப்படி சிறப்பா சமைச்சிட்டா. டிப்பன் பாக்ஸ்க்கு சாம்பார் சோறு, பீர்க்கங்காயி ஊறுகாயி."
"காலைல ஆறு மணிக்கு எழுந்து என்னால அவ்ளோ தான் செய்ய முடியும். " எனப் பலம்ப, பிள்ளைகள் இருவரும் சிரித்தனர்.
"நைட் மட்டும் என்ன விருந்தா ஆக்கி வச்சிருக்க. போடி…”
“அப்பக் கடைல இருந்து எதையாது வாங்கிட்டு வந்திருக்கலாம்ல.”
அது கல்லின் சூட்டைத் தணிக்க உதவும்.
ஆனால் அந்த நீரை ஊற்றிய குடும்பத் தலைவியின் சூட்டை, அந்த வீட்டில் இருந்த யாருக்கும் தணிக்கும் வழி தெரியவில்லை.
"எல்லாம் ஏந்தலையெழுத்து. இந்த வீட்டுல எனக்குன்னு பாக்க யாருமே இல்ல. பதினஞ்சி வர்ஷமாச்சி இந்தாளுக்கு வாக்கப்பட்டு வந்து. இன்னும் நாலு வர்ஷம் போச்சின்னா... எங்கப்பே ஆத்தா வீட்டுல இருந்தத விட, இந்த மனுஷங்கூட வாழ்ந்த காலம் தா ஜாஸ்தி. ஆனாலும் என்ன இந்த மனுசெ மனுசியா மதிக்கிறது இல்ல. அத்தன வர்ஷம் குடும்பம் நடந்துன ஆளுக்குக் கல்யாண நாள் நியாபகம் இருக்காதாக்கும். அப்புட்டு மறதி இருக்குறவரு ஹஸ்பிட்டல்லுக்கு தா போகனும். வீட்டுக்குலாம் வரவே கூடாது. ச்ச..." எனப் புலம்பியபடி இரவு உணவாகத் தோசைகளை வார்த்தெடுத்துக் கொண்டிருந்தாள் மதி.
அவள் புலம்பியது சரி என்பதுபோல் இன்று இளமதி-அருள்வேலன் இருவரின் பதினைந்தாவது திருமண நாள்.
காலையில் ஆசையாக, அதிக நெய் விட்டு வறுத்த முந்திரி மணத்துடன் கேசரி செய்து வைத்துவிட்டு கணவனை எழுப்ப, அவனோ 'ஏ இவ்ளோ சீக்கிரமா எழுப்புற. போடி அங்கிட்டு.' என்றபடி திரும்பிப் படுத்துக் கொண்டான்.
சரி நேற்று வேலை முடித்துத் தாமதமாகத்தானே வீடு வந்தான். களைப்பாக இருக்கும். எழட்டும், என்று விட்டுச் செல்ல, எழுந்தவன் குளித்து, உடை மாற்றிப் பணிக்குச் செல்லத் தோதான உடையில் தயாராகி நின்றான்.
அவனுக்கு மத்திய உணவை டப்பாவில் அடைத்தவள், "இன்னைக்கி என்ன நாளுன்னு நியாபகம் இருக்கா?." என டப்பாவை நீட்டிபடி கேட்க.
"என்ன நாளு? " என்றவனிடம் விளக்கமாகப் பேசும் முன் அவனின் அலைபேசியில் ஏகப்பட்ட அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.
"சரி பாத்துக்க. கூப்பிடுறேன்." என்றவன் ஹெல்மெட்டை கையில் எடுத்துக் கொண்டு, மனைவி நீட்டிய லன்ச்சை தூக்கிக் கொண்டு நடந்தான்.
சரி இடைப்பட்ட நேரத்தில் ஃபோன் செய்வான் என்று பார்த்தால், அழைக்கவே இல்லை.
"மத்த நாளுலயெல்லாம், 'என்ன பண்ற? எது சமச்ச? என்ன சாப்பாடு குடுத்து விட்ட?'ன்னு ஒத்த வார்த்தையாது கூப்பிட்டு கேப்பாரு. ஆனா இன்னைக்கி... வேணும்னே பண்ணுறாரு..." எனக் கணவனைத் திட்டிக் கொண்டிருந்தவளிடம்,
"ம்மா... எனக்கு இன்னொரு தோச."
"எனக்கு இன்னும் ரெண்டு வேணும்." என்றனர் அவளின் மகளும் மகனும்.
அவளின் புலம்பல், காதில் விழவில்லை என்பது போல் இருவரும் திருப்தியாக உண்டு முடிக்க, முணுமுணுத்தவாறே கணவனுக்கு ஊற்றிய தோசைகளை, 'ஹாட் பாக்ஸில்' அடுக்கி வைத்தாள். சாப்பிட்ட இடத்தைக் கூட்டி பெருக்கியவள், தன் செல்வங்கள் உறங்கப் பாயை தரையில் விரித்தாள்.
பதினைந்து நெடிய வருடங்கள். இதில் எத்தனைப் புடவை அந்த நாளில் அவளுக்கு எடுத்துக் கொடுத்தான் என்றால் மூன்று. அந்த மூன்றும் திருமணமான புதிதில் வாங்கி வந்தது.
கோயிலுக்காவது அழைத்துச் சென்றிருக்கிறானா? என்றால் 'கோயிலா! அதுக்கெல்லாம் போன கூட்டமா இருக்கும். காத்திருந்து சாமிய கும்பிடுறத விட நம்ம வீட்டுல நமக்காக இருக்குற தெய்வத்த கும்பிட்டு, வீட்ட கோயிலா மாத்து.' என்பான்.
அவனைப் பொருத்தவரை கல்யாண நாள், பிறந்த நாள் போன்ற நாட்களைச் சிறப்பாகக் கொண்டாடுவது பிடிக்காது என்பதை விடப் பழகவில்லை என்றால் சரியாக இருக்கும்.
அவன் பழகும் நட்பு வட்டத்தில் இனிப்பு கொடுப்பதே பெரிய விடயம். இதில் வண்ண வண்ண பலூன்களைக் கட்டித் தொங்க விட்டு, புது உடை உடுத்தி, விருந்து ஏற்பாடு செய்து, நடு நாயகமாக நின்று கேக் வெட்டி, பரிசுப் பொருட்களை வாங்குவது, வாழ்த்து பெறுவது என்பது நேரம் மற்றும் பணத்தை விரையம் செய்வது என்பான்.
அது இவர்களைப் போன்ற நடுத்தரக் குடும்பத்திற்கு ஆடம்பர செலவு.
தற்பெருமைக்காகச் செய்யும் செயல் என்பவனிடம் போராடி அரைக்கிலோ கேக் வாங்கி வர வைத்துக் குழந்தைகள் பிறந்தநாளை கொண்டாட வைத்ததே பெரிய சாதனை.
இதில் சிறைபட்ட நாள் என்று அடிக்கடி சொல்லும் கல்யாணம் நாளைக் கொண்டாடுவான் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான்.
ஆனால் ஒவ்வொரு வருடமும் அந்த முட்டாள் தனத்தை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறாள்.
‘என்ன கிடைத்தது என்று இறுதியில் தெரிந்து கொள்வீர்கள்.’
முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, தரையில் அமர்ந்துகொண்டு கடிகாரத்தையும் வாயிலையும் பார்த்தபடி அவள் இருக்க,
"ம்மா... வந்து படும்மா." என்றாள் மகள்.
"ம்ச்..." என முகம் திரும்ப,
"ம்மா..." எனக் கொஞ்சினான் மகன்.
இருவருக்கும் நடுவே படுத்துக் கொண்டாலும் மனம் பொறுமியது.
'இன்னைக்கி நம்ம கல்யாண நாளாடின்னு கிண்டலாக் கூட ஒரு வார்த்தையாது சொல்லிருக்கலாம்.' என உள்ளம் கொதித்தது.
நேரம் பத்தைத் தொட்டது.
படப்படவென வீட்டின் கதவுகள் தட்டப்பட, பயந்து விட்டாள் மதி.
ஏற்கனவே திருமணநாளை மறந்து விட்டான். இதில் கதவு உடையுமளவு தட்டி, அக்கம் பக்கத்து வீட்டார் எட்டப் பார்க்கும் அளவிற்கு தட்டியது, ஆத்திரத்தை தர, வேகமாக எழுந்து சென்று திறந்தாள்.
"கதவத் திறக்க இவ்வளோ நேரமா?" என அவள் கோபமாகப் பேசும் முன் அவனே கோபமாகப் பேசியபடி கையில் இருந்ததை நீட்டினான் மனைவியிடம்.
அது ஹெல்மெட், அதற்குள் பால் பாக்கெட்டுகள் இரண்டு, காலையில் கட்டி அனுப்பி வைத்த டிப்பன் பாக்ஸ், மற்றும் ஒரு சீப்பு வாழைப் பழம் இருந்தது.
வேறு எதுவும் தனக்காக வாங்கி வந்திருக்கிறானா எனத் தேடிப் பார்த்து ஏமாந்த முகத்துடன் கதவை அடைத்து, தாழ்ப்பாள் போட்டு விட்டு உள்ளே வந்தாள்.
"என்னங்கடா! சாப்டிங்களா?" எனப் பிள்ளைகளிடம் கேட்க, அவள் ஹாட் பாக்ஸ், தண்ணீர் சொம்பு, தட்டு முதலானவற்றை எடுத்து வைத்து அதன் அருகில் முழங்கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்தாள்.
"ப்பா! உங்களுக்கு ஒரு சந்தோஷமான விசயம் சொல்லனும்." என்றான் மகன்.
"என்னடா சீமான்.?" என மகனைக் கொஞ்சியவனின் கரம்பற்றி அறைக்குள் இழுத்துச் சென்றாள் மகள்.
"மீனு குட்டி போட்டிருக்குப்பா!."
"ப்பா! இந்தத் தொட்டி முழுக்க மீனுப்பா! எண்ணவே முடியல." என்ற இருவரும் சில மணி நேரத்திற்கு முன் பிறந்த மீன் குஞ்சுகளைக் காட்ட, அதைப் பார்வையிட்டு விட்டு வந்தவன் மனைவியைப் பார்த்து 'ஹீம்...' எனப் பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு குளியலறைக்குள் சென்றான்.
“இப்ப எதுக்கு நீங்க, பெருமூச்சி விட்டிங்க?” வெளியே வந்தவனை மிரட்டினாள் மதி.
“மூச்சு விட்டாக் கூடத் தப்பா இந்த வீட்டுல?” என்றபடி அமர்ந்தான் சாப்பாட்டு தட்டிற்கு முன்.
“மூச்சு விடலாம். ஏ பெருமூச்சு விட்டிங்க?” என்றாள் அவனுக்குப் பரிமாறியபடி,
“ஏண்டா பாப்பு! அப்பா பெரு மூச்சி விடக்கூடாதா?” என மகளிடம் பஞ்சாயத்திற்கு சென்றான்.
“விடலாம் ப்பா. தப்பில்ல.”
இருவரும் சுவாரசியமான குப்புற படுத்துக் கொண்டு பெற்றவர்களின் சண்டையில் பங்கேற்றனர்.
“உங்காத்தா திட்டுறா பாப்பா. இத என்னென்று கேக்க மாட்டியா! டேய் உன்னையெல்லாம் ஆம்பளப்பையனா எதுக்கு பெத்து விட்டேன். அப்பாக்கு ஒரு ஆபத்துன்னா வந்து நிக்கத்தான. போய் அவள என்னென்று கேளு.” என இப்போது பிள்ளைகளை மதியுடன் சண்டை போடும்படி தூண்டி விட்டான்.
“ஏம்மா அப்பாவ மிரட்டுறீங்க?.” மகள் தான் தன் தந்தைக்காகப் பேச வந்தாள்.
“உங்கப்பா எதுக்கு என்னப் பாத்து பெருமூச்சு விட்டாரு. கேட்டுச் சொல்லு டா”
மகன், “எதுக்குப்பா விட்டிங்க?”
மகள், “ஏன்டா மூச்சு விட்டதெல்லாம் தப்பா.? நீ அம்மாக்காக அர்த்தமே இல்லாததுக்கு கேள்வி கேட்டு வந்திருக்க.”
மனைவி, “அவர் சொல்ற பதில வச்சி, நாங்கேட்டது அர்த்தமா அர்த்தமில்லயான்னு தெரியும். சொல்லுங்க ஏ பெருமூச்சி விட்டிங்க?”
“மீனுக்கெல்லாம் அக்கா தம்பி அண்ணெ தங்கச்சின்னு சொல்லிக்கிற மாறி நிறைய உடன் பிறப்புகள் இருக்கு. ஆனா பாரு உங்காத்தா ரெண்டுக்கு மேல குட்டிபோல. எனக்குச் சப்போர்ட் பண்ண நீ ஒருத்தி தா இருக்க. அப்பா நிலைம ரொம்ப பாவமா இருக்கு.” என வருத்தப்பட,
மகன், “ஆமாம்மா! எங்கூட படிக்கிற பசங்களுக்கெல்லாம் விளையாடத் தம்பி இருக்கும்மா. எனக்கு மட்டும் தாம்மா யாரும் இல்ல. எனக்கு ஒரு தம்பி வேணும்மா.” என்ற மகனின் தலையில் தட்டினாள் மதி.
“டேய் அவளே ஒரு ப்யூஸ் கட்ட புடுங்கின ட்யூப் லைட்டு. அவக்கிட்ட போய்க் கேக்குற. அப்பவே எம்மாமனுங்க சொன்னாங்க, ‘எம்பொண்ணையும் கட்டிக்கங்க மாப்ள. ஒன்னுக்கு ரெண்டா உதவியா இருக்கும்’ன்னு நாந்தா கேக்கல. ம்ச்… “
“என்ன சொன்னிங்க! உங்க மாமா, அவரு பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிக் கேட்டாரா?.”
“ஆமா.! இப்ப கேட்டாக் கூட, பொண்ணு தர எம்மானுங்க ரெடியா இருப்பானுங்க. அம்புட்டு மரியாத எம்மேல.“ என்றபோதும் மூவருமே விழுந்து விழுந்து சிரித்தனர்.
“என்ன பாப்பு நீயும் சிரிக்கிற.?”
“அப்பா தலை நரைச்சா கூட ஓகே. ஆனா தாடி மீசையும் நரச்சதுக்கு அப்றம் இன்னொரு கல்யாணம்… “ எனச் சொல்லிச் சிரிக்க,
“அதுவும் மாமெ பொண்ணுங்கள!.” என்றாள் மனைவி.
“ஹாங்!!. தேவையாப்பா இது?.”
“அந்தப் பிள்ளைங்க இப்பத்தா காலேஜ்ஜே படிக்கிதுங்க. இதுல இவர் போய்க் கேட்டா இந்தாங்க மாப்ள பொண்ணுன்னு தூக்கி குடுக்குறாங்க. ஹிம்…” எனக் கழுத்தை வளைத்தாள்.
“பாப்பா! உங்களுக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ இல்லன்னு தா அப்பா போராடிட்டு இருக்கேன். உங்காத்தாலோட ஆத்தா சதி பண்ணாம இருந்தா! இன்னேரம் உனக்கும் உந்தம்பிக்கும் கம்பெனி குடுக்க ஆள் வந்திருக்கும். "
"எது! எங்கம்மா சதி பண்ணாங்களா!."
"பாப்பா! பத்து வர்ஷத்துக்கு முன்னாடி உந்தம்பி பிறக்கும்போது உந்தாத்தா ஃபோன்ல கூப்பிட்டு சொன்னாரு. ஹாஸ்பிட்டல் வந்ததும் என்ன குழந்தன்னு கேட்டேன். அதுக்கு பதில் சொல்லாம, ஒரு பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு உங்கம்மாக்கு குடும்பக் கட்டுப்பாடு பண்ணச் சொல்லிடுச்சி உங்க ஆச்சி. அப்ப வில்லி யாரு?"
"வில்லியா!! உங்கப்பா தா கையெடுத்து கும்பிட்டு 'என்ன விட்டுடுங்டா சாமி. ஒத்த கல்யாணம் பண்ணி, ரெண்டு பிள்ள பெக்குறதுக்குள்ள ஏகப்பட்ட பஞ்சாயத்து. அதுனால ஃபேமிலி ப்ளானிங் பண்ணிடு. எந்தக் குழந்தையா இருந்தாலும் தயவு செய்து செஞ்சிடு.'ன்னு சொன்னதே உங்கப்பா தா. நீட்டுன பேப்பர்ல என்ன ஏதுன்னு கேக்காம உங்கப்பா கையெழுத்து போட்டிடுவாராக்கு." என அவளும் விடாது பேசினாள்.
பாவம் பஞ்சாயத்து தலைவியான பதிமூன்று வயது மகளுக்கு, என்ன தீர்ப்பு சொல்வது? என்று தெரியாது தலையைத் தலையை உலுக்கினாள்.
"பாப்பா! இவா அப்ப மயக்கத்துல இருந்தா. அவளுக்கு ஒன்னும் தெரியாது."
"ஆமா எனக்கு அப்ப ஒன்னும் தெரியாது. உங்களுக்கு இப்ப ஒன்னும் தெரியாது. இன்னைக்கி என்ன நாள்னு தெரியாமா?"
"செவ்வாய்க்கிழமை தான பாப்பா? இல்ல புதன் கிழமையா?" என்க பிள்ளைகள் சிரித்தனர். ஆனால் மனைவி முறைத்தாள்.
அவளைப் பார்த்தபடியே கின்னங்களை திறக்க, அதில் காலையில் வைத்த கேசரி சூடு செய்யப்பட்டு இருந்தது.
அதைப் பார்த்தவன்.
"ஓ!!! இன்னைக்கி கருப்பு தினமா?" என்க, பல்லைக் கடித்தபடி இருந்தாள் மதி.
மகள், "ப்பா! பாவம் ப்பா அம்மா. உங்களுக்காக ஆசையா சமச்சிருக்காங்க. கருப்பு தினம்னு கேலி பண்றிங்க."
"என்ன பாப்பா அப்படி சிறப்பா சமைச்சிட்டா. டிப்பன் பாக்ஸ்க்கு சாம்பார் சோறு, பீர்க்கங்காயி ஊறுகாயி."
"காலைல ஆறு மணிக்கு எழுந்து என்னால அவ்ளோ தான் செய்ய முடியும். " எனப் பலம்ப, பிள்ளைகள் இருவரும் சிரித்தனர்.
"நைட் மட்டும் என்ன விருந்தா ஆக்கி வச்சிருக்க. போடி…”
“அப்பக் கடைல இருந்து எதையாது வாங்கிட்டு வந்திருக்கலாம்ல.”