• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
நீலகிரி...

மருது சவுதிக்கு போய் விட்டதை பற்றி பவியிடம் அவளின் தாத்தா சொல்ல, ஹா ஹா ஹா, அந்த கோழைப்பயல் எங்கே வேண்டுமானாலும் போகட்டும், என்றைக்கா இருந்தாலும்,நாய் போல நம்மை தேடி வருவான் தாத்தா.


தேவையில்லாமல் அவனை நினைத்து நான் ஏன் கவலையாகனுமென்றவள், தனது வேலையை பார்க்க சென்றாள்.

போகும் பேத்தியை பார்த்த முதியவர்கள் இருவரும், கடவுளே இவளுக்கு நல்ல புத்தியை கொடுத்து, குடும்பமாக வாழ வைப்பா என்று வேண்டிக்கொண்டனர்.

சீமக்கரை-தேவி வீடு:

அப்பா மதிச்சி உங்களை கல்யாணத்திற்கு கூப்பிட்டுருக்காங்க, போய்ட்டு வாங்களென்றாள் தேவி.

அம்மாடி எந்த முகத்தை வைத்து நான் அங்கு போகனு கண்ணன் கேட்க, மாமா வீட்டில் எல்லாரும் மேன்மை குணம் கொண்டவர்கள்பா.உங்களை காயப்படுத்துவது போல பண்ணமாட்டார்களென்று கதிரின் கல்யாணத்திற்கு தனது அப்பாவை அனுப்பி வைத்தாள்.

உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்வோடு கல்யாண பந்தலுக்கு வந்த கண்ணனை, வழக்கம் போல அன்பாய் பேசி, கவனிக்க, தான் செய்த தவறுக்கு அங்கையே கண்ணன் மன்னிப்பு கேட்டு விட்டு வீட்டிற்கு கிளம்பினார்.

வசந்தியும், தேவும் வீட்டை விட்டு சென்றதிலேயே தேவிக்கும், அவள் அப்பாவிற்கும் பேரதிர்ச்சி தான்.

அதற்கு பிறகு வந்த நாட்களில் இருவரிடமும் நல்ல மாற்றம் வந்தது.

வசந்தி எதிர்பார்த்த போலவே தேவியும் மாறத்தொடங்கினாள்....

கல்யாண பந்தல்:

அப்பொழுது,அங்கு வந்த பெருமாள் ஊர்ல இருக்கிற எல்லா பஞ்சாயத்தையு தீர்க்க முடிஞ்சது. ஆனால் உங்க ரெண்டு பேர் பஞ்சாயத்தை ,இத்தனை வருஷம் ஆகியும் என்னால சத்தியமா தீர்க்க முடியலடா.

உலகத்தில் இருக்கிற எல்லா பொண்டாட்டிங்களும் இப்படித்தானென்று வெற்றிவேல் சொல்லவும்,ஓ அப்படியா சங்கதி என்றபடி திலகாவும் அங்கு வந்து நிற்க, ஒரு பேச்சுக்கு சொன்னேன் மா..

இவர்கள் எல்லாரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த நவீனும் என்ன நடக்குது திலோ என்றவாறு அங்கு வந்தான்.

ம்ம் இந்த ஐயாவுக்கு உலகத்தில் இருக்கிற எல்லா பொண்டாட்டியால தான் பிரச்சனை வருகிறதாம்.
தெரிஞ்சி நான், தெரியாமல் இன்னும் எத்தனை பொண்டாட்டினு கேளு கண்ணானு திலகா சொல்ல, அடியே நான் ஏகப்பத்மினி விரதன் டி என்றார் வெற்றிவேல்.

என்னா சொன்னீங்கனு கணவரை திலகா முறைத்து பார்த்தார்.

பாத்தியா அவரு வாயாலே உண்மை வந்துடுச்சு.என் காலேஜ் ப்ரபோசர் பத்மினி மேடத்தை சைட் அடிக்கிறாருனு நான் அப்பவே சொன்னேன்.

எங்கையாவது என் பேச்சை நீ கேட்டியா?

என்ன கண்ணா சொல்லுற என்று திலகா அதிர,மனசை தேத்திக்கோ என்று பீடிகை போட்டவன்,இன்னொரு விஷயம் உனக்கு தெரியாது சொல்றேன் கேட்டுக்க, அந்த பத்மினி மேடமிருக்கும் தொகுதியில தான், இவருக்கு ஓட்டு நிறைய வந்திருக்கு.

நீ மனசு கஷ்டப்படக்கூடாது என்பதற்காக தான், இத்தனை வருஷம் உன்கிட்ட இந்த விஷயத்தை நான் சொல்லலைனு வருத்தப்படுவது போல் நவீன் பண்ண,ஓஓஓஓ அப்படியா சங்கதி என்றவாறு கணவரை முறைத்து பார்த்தார்.

அடப்பாவி,எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுக்காமல் விடமாட்ட போல என்றவர், ஏய் திலகா அப்படிலாம் எதுவும் இல்லைடி, என்னை நம்புவென்று மனைவியை வெற்றிவேல் சமாதானப் படுத்திக்கொண்டிருக்க, மாப்பிள்ளை நீங்க நல்லா வருவீங்க என்றனர் லாரன்ஸும், பெருமாளும்.

கல்யாணமென்றால் கலாட்டா இருக்கனும் மாமா என்றவனோ அங்கிருந்து சென்று நண்பர்களுடன் இணைந்து கொண்டான்.

டேய் எனக்கு ஒரு யோசனைடானு பக்கத்திலிருக்கும் பெருமாளிடம் லாரன்ஸ் சொல்ல, சொல்லுடா என்றார்.

கதிருக்கு நல்லபடியாக கல்யாணம் முடிஞ்சிட்டு, அடுத்து இவனுங்க ரெண்டு பேருக்கும்தானென்று வேலுவையும், ஜானையும் காட்டியவர், வேலுக்கு செல்வினு முன்னவே முடிவானது தான். இவனுக்கு அல்லிய பார்க்கலானு தோனுதுடா.

ம்ம் நல்ல யோசனை தான்.மீண்டும் ஒரு முத்து, வேதா இந்த வீட்டில் உருவாகக்கூடாதுடானு பெருமாள் சொல்ல,நீ சொல்றது சரிதான், வாயேன் கையோடே இதைப்பற்றி மச்சான்கிட்டயும், தங்கச்சிகிட்டயும் பேசிடலாமென்றார் லாரன்ஸ்.

சரி வா என்றவாறு பெருமாளும் லாரன்ஸும், சற்று தள்ளி செல்வத்திடம் பேசிக்கொண்டிருந்த அன்புவிடம் வந்தனர்.

இருவரையும் பார்த்த அன்புவிடம், ஒரு விஷயமா பேசனுமென்று லாரன்ஸ் சொல்ல,சொல்லுடா என்றார்.

ஜானுக்கு அல்லிய பொண்ணு கேட்குறேனென்கவும்,ஓஓ என்றபடி திரும்பி பார்க்க, அங்கே பார்வதி பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.

அண்ணி என்று பார்வதியை கூப்பிட, அன்புவின் குரலைக் கேட்டு அங்கு வந்தவரோ சொல்லுங்க கொழுந்தனாரே என்க,உங்க தங்கச்சிய கொஞ்சம் கூப்பிட்டு வாங்கண்ணி.

அதேபோல் சிறிது நிமிடத்தில் பார்வதியோடு அங்கு வந்த கவிதா, என்னங்கனு கணவரிடம் கேட்க,உன் அண்ணன் மகன் ஜானுக்கு அல்லிய பொண்ணு கேக்குறாங்களென்க,ஒரு நொடி திகைத்தவர், ரெண்டு பேருக்கும் புடிச்சிருந்தா தாராளமா பண்ணி வைக்கலாங்களென்றார்.

நல்லதுமா என்ற லாரன்ஸ்,எதுக்கும் அல்லிய முதல்ல கேட்டுக்கலாமா என்க, போய் அல்லியை கூப்பிட்டுவா கவிதானு அன்பு சொல்லவும், ஸ்டேஜில் தாமரைக்கு பக்கத்தில் நின்றிருந்தவளை கூப்பிட்டு வந்தார்.

அம்மாடி மாமன் வீட்ல ஜானுக்கு உன்னை பொண்ணு கேட்குறாங்க, நீ என்ன சொல்லுறனு அல்லியிடம் செல்வம் கேட்க,இதை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது, அவள் முகத்தில் தெரிந்த அதிர்விலே மற்றவர்களுக்கு புரிந்தது.

எதா இருந்தாலும் சொல்லு சின்ன குட்டி, யாரும் உன்னை தப்பா நினைக்கலைனு பார்வதி சொல்ல, உங்க எல்லாருக்கும் சம்மதமென்றால், மாமாவை நான் கட்டிக்கிறேன்.

ஆனால் என்னோட படிப்பென்று அல்லி இழுக்க,நீ ஆசைப்பட்டதை படிடா. கல்யாணம் இப்போயில்லைனு லாரன்ஸ் சொல்ல, சரிங்க மாமா என்றவள், முதல்ல மாமாக்கு இதில் விருப்பமானு கேளுங்க?.

வெளிநாட்டுல படிச்சவரு, அவங்க விருப்பமும் தெரியனுமே என்கவும், அல்லி சொல்றது வாஸ்தவமென்று செல்வமும் சொன்னார்.

அதையும் கையோடு கேட்கலாமென்ற பெருமாள்,ஜானு, எலே ஜானுனு சத்தமாக கூப்பிட, அங்கு வந்தவனோ என்ன இங்கு ஒரு வட்டமாநாடு நடக்குதென்றான்.

கண்ணா, உனக்கு பொண்ணு பார்த்திருக்கோமென்று பார்வதி சொல்ல,என்னாஆஆ என்று அதிர்ந்தவன், பின்னர் தனது தந்தையின் முகத்தை பார்க்க,ஒருவித ஆர்வத்தோடு லாரன்ஸ் இருப்பது தெரிந்தது.

சரியத்தை, எந்த கழுதையை காட்டியாவது கட்டுடானு சொல்லு, உடனே நான் தாலி கட்டுறேனென்று ஜான் சொல்ல,யோவ் வளர்ந்த மாடு, யாரை பார்த்து கழுதைனு சொல்லுறீங்க.

வளரத்தெரியாம பனைமரத்தில் பாதியளவு வளர்ந்திட்டு, கழுதை கிழுதையென்று சொல்லுறீங்களே என்றபடி அல்லி சண்டைக்கு வர, பார்வதியிடம் திரும்பியவன் அத்தை உன் மகள் எதுக்கு, இப்படி எண்ணெயில் போட்ட கடுகு போல பொரியுறாள்?.

அதற்கு பெருமாளோ, அல்லி தான் பொண்ணு என்கவும்,எதேஏஏஏஏ இவளானு அதிர்ந்தான்.

அவன் அதிர்வை கண்டவள், ஏன் எனக்கு என்ன குறைச்சல்?, ஓஓஓஓ தொரை வெள்ளக்காரி கூட திரிஞ்சிக்கிட்டு இருந்தீங்களோனு சண்டைக்கு வர, இதையெல்லாம் பார்த்தவர்களுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சபாஷ் சரியான போட்டியென்று கைத்தட்டிய லாரன்ஸ்,அடேய் மகனே உனக்கேத்த ஆளு என் மருமவள் தானென்றவர்,அம்மாடி மருமவளே,பையன் கொஞ்சம் பாவம், விட்டு புடிமா.

சரிங்க மாமா நீங்க சொன்னதுக்காக அமைதியாக போறேனென்றவள், தனது முகத்தை வலது பக்க தோளில் இடித்துக் காட்டிவிட்டு, அங்கிருந்து சென்றாள்.

அடேய் ஜானு உன் பாடு திண்டாட்டம்தானென்று சொன்னவன், ஸ்டேஜில் நிற்ப்பவளை முதல் முறையாக ரசித்து பார்த்தான்.

வீட்டினர் அனைவருக்கும் இந்த விஷயத்தை சொல்ல,இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

வந்திருந்தவர்களை வேலு, நவீன்,ஜான், ஆதி, மற்றும் வர்ஷன், மித்ரன் இவர்கள் கவனித்துக்கொண்டனர்.

கதிர் வீடு

பின்னர் நல்ல நேரம் பார்த்து,வீட்டிற்கு மணமக்களை அழைத்து வந்து வழக்கமான சம்பிரதாயங்களை முடித்து விட்டு, இன்று இரவே இருவருக்கும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல, முதலிரவையும் ஏற்பாடு செய்து விட்டனர்.

மாலையும் போய் இரவும் வந்தது.தாமரையை அலங்கரித்து பெரியவர்களிடம் ஆசீர் வாதம் வாங்க வைத்து, மேலே இருக்கும் கதிரின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.

எல்லாம் கடந்து தான் ஆக வேண்டுமென்று மனதிற்குள் சொல்லியவள், கதவை தட்டி விட்டு, பின்னர் திறந்து உள்ளே வந்தவளை, அலங்கரித்த அறை வரவேற்றது.

பின்னர் கதவை தாழிட்டு திரும்ப, அங்கிருந்தவனின் மேல் இடித்து நின்றாள்.

அவள் கையை பிடித்து அழைத்து வந்து அங்கிருந்த கட்டில் மேல் உட்கார வைத்தவன், தாமரை உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என்று அவளை பார்த்ததிலிருந்து நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்தவன், எழுந்து போய் டிராவை திறந்து அதிலிருந்த கவரை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.

அவள் வாங்காமல் இருக்க, பாரு என்று கதிர் சொல்ல, வாங்கி உள்ளே திறந்து பார்க்க, அதில் சிங்கப்பூர் செல்வதற்கான விசாவும், பிளைட் டிக்கெட்டும் இருந்ததை கண்டு அதிர்ந்து போனாள்.கதிரிடமிருந்து இதை அவள் சிறிதும் எதிர் பார்க்கவில்லை.

நாளைக்கு வி. வி. மேடம் கூட நீயும் சிங்கப்பூருக்கு போகப்போறாய். உன் கனவு லட்சியமெல்லாம் அது தானே, தாராளமா உன் லட்சியத்தை நிறைவேற்றி விட்டு வா.

அது எத்தனை வருஷமானாலும் மாறாத காதலோடு உனக்காக இங்கு நான் காத்திருப்பேன் கண்மணி.

என்றைக்காவது என் மேல் காதல் வந்தால்,என்னை ❣️"ஏற்றுக்கொள்வாயா கண்மணி???" ❣️என்றவன், நடந்தது எல்லாவற்றுக்கும் சாரி என்று சொல்லி விட்டு, பால்கனிக்கு சென்றவனோ வானில் தெரியும் நிலவை பார்க்கும் போது,சில நாட்களுக்கு முன்னர் நண்பர்களோடு பேசியது நினைவிற்கு வந்தது.

தனது நண்பர்கள் இருவரையும் பார்த்த கதிர், நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன்டா என்றான்.

ம்ம் சொல்லு மாப்பு என்க, தாமரைய சிங்கப்பூருக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணனும்டா என்க, என்ன?

ஏன் மாப்பு கிறுக்கு எதாவது புடிச்சிட்டாடா?, ஒரு வழியாக எல்லா பிரச்சினையும் தீர்ந்து, இப்போதான்டா எல்லாரும் நிம்மதியா இருக்குங்க.

இன்னும் ரெண்டு வாரத்தில் கல்யாணத்தை வச்சிக்கிட்டு சிங்கப்பூருக்கு அனுப்புறேன், சீனாவுக்கு அனுப்புறேன்னு கடுப்பை கிளப்பிக்கிட்டு கிடக்குற.அடேய் மத்தவங்களுக்கு வேண்டுமானால் உன் மனசுல இருக்கும் வலி தெரியாம இருக்கலாம், எங்களுக்கு தெரியும்டா.

தாமரை போனதிலருந்து உன் தூக்கம் போச்சு, இயல்பு போச்சி, நீ நீயாகவே இல்லைடா.பல நாள் நீ நிலவை பார்த்துகிட்டு நிக்கிறதை நான் பார்த்துருக்கேன்.

அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். தங்கச்சி கூட வாழுற வழியப்பாரென்று கோவமாக பேச ஆரம்பித்த வேலு, கெஞ்சலோடு முடித்தான்.

மாப்பு, நீ சொல்றது எனக்கு புரியுது, வேதாம்மா தாமரையோட திறமையையும், அவ கனவை பற்றி செல்வி, வளவன் கிட்ட பேசுனதையெல்லாம் நானும் கேட்டேன் டா.

வேலையென்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால், தனக்கு நடந்த விஷயத்தை நினைத்து வேதாம்மா என்றைக்கோ உடைஞ்சி போயிருப்பாங்கள்.

அதே இடத்தில் தான் இப்போ உன் தங்கச்சி இருக்காள். எனக்கும் அவ கூட வாழனுமென்ற பல கனவு இருக்குடா.
இப்போதைக்கு வேதாம்மா உடல்நிலைக்காக தான் என்னை கல்யாணம் பண்ண உன் தங்கச்சி ஒத்துக்கொண்டது.இந்த சுழல்ல அவள் கூட எப்படி நான் வாழ்க்கைய ஆரம்பிக்க முடியும்டா?.

எனக்கு இருக்கும் காதல், அன்பு, ஆசை, பாசமெல்லாம் அவளுக்கும் இயற்கையா என் மேல வரனும்.அதுக்கு இந்த இடைவெளி வேணும்டா.

என் பொண்டாட்டியாக தானே போகப்போறாள்,தாராளமாக போகட்டும் டா,அவள் ஆசப்பட்டதாவது அவளுக்கு நடக்கட்டுமென மனதில் உள்ளதை நண்பர்களிடம் சொல்லிவிட்டு கண் கலங்க,ஜானும், வேலுவும் கதிரை அணைத்துக்கொண்டனர்.

அன்று நடந்ததை நினைத்தவன், பின்னர் உள்ளே வந்து பார்க்க, கை, கால்களை குறுக்கிக்கொண்டபடி தாமரை தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது.

அவள் அழுதிருக்கின்றாள் என்பதை,கண்களின் ஓரம் காய்ந்திருந்த
கண்ணீர் தடம் சொல்லியது.

கையை நீட்டி அவள் முகத்தை தொடப்போனவன், ஒரு நொடி தயங்கி பின் மெதுவாய் அவள் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு, அங்கிருந்த போர்வையை எடுத்து,அவளின் மேல் போர்த்தி விட்டு, வெறும் தரையில் படுத்துவிட்டான்.

வழக்கம் போல காலையில் எழுந்தவள், தரையில் படுத்திருப்பவனை பார்த்து அதிர்ந்து,பின்னர் தன் மேலிருந்த போர்வையை அவனுக்கு போர்த்தி விட்டு, ரெஸ்ட் ரூமிற்குள் சென்றவள்,குளித்து முடித்து வேறு உடை மாற்றிக்கொண்டு கீழே வர, ராதா அங்கிருந்தவர்களுக்கு டீ கொடுத்துக்கொண்டிருந்தார்.

காலடி சத்தம் கேட்டு படியில் பார்க்க, தாமரை வருவது தெரிந்தது.அவள் முகத்தை பார்த்தே எதுவும் நடக்கவில்லைனு புரிய,அவர்கள் வாழ்க்கை எப்போ வேண்டுமானாலும் தொடங்கட்டுமென்று நினைத்துக்கொண்டனர்.

அம்மாடி உனக்கு என்ன வேண்டும் என்க, நான் இஞ்சி டீ குடிப்பேங்கத்தை. நான் போட்டுக்குறேனென்று கிச்சனிற்குள் செல்ல, அவளிடம் இஞ்சி டீயை சீதா நீட்டினார்.

வாங்கி குடித்தவள் அவர்களோடு சேர்ந்து காலை உணவை செய்து முடிக்க, அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது, தாமரை சிங்கப்பூர் போகப்போவதை பற்றி கதிர் சொல்ல, சில நொடி அங்கே மௌனம் நிலவியது.

பின்னர் அனைவரும் சந்தோஷமாக ஆசீர்வதித்து, தாமரையோடு மதுரை ஏர்போட்டிற்கு சென்றனர்.

இவர்களுக்காக வினிதாவும் அங்கே காத்திருக்க, அவரிடம் வந்த கதிர், அம்மா, உங்க மருமகள் இனி உங்களோட பொறுப்பென்று தாமரையின் கையை பிடித்து வி. வி.யின் கையில் வைத்தான்.

அவன் அம்மா என்று அழைத்ததிலே,வினிதாவின் உள்ளுக்குள் ஏதோ ஓர் உணர்வு ஆக்கிரமித்தது.

பின்னர் இவர்கள் செல்வதற்கான விமானத்தின் அறிவிப்பு வந்ததும், எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு வினிதாவோடு சென்றாள்.

அவர்கள் ஏறிய விமானம் சிறிது நிமிடம் சென்ற பின்னர்,சிங்கப்பூரை நோக்கி வானில் பறந்து சென்றது.

நிச்சயமாக ஒரு நாள் தன்னை தேடி,தனது கண்மணி வருவாள் என்ற நம்பிக்கையோடு,கதிர் சீமக்கரையை நோக்கிச்சென்றான்.

நாமும் கண்மணி வருவாளென்ற நம்பிக்கையில்,இவர்களிடமிருந்து விடை பெறுவோம்.

சுபம்

❤சீமா❤
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top