New member
- Joined
- Jan 20, 2025
- Messages
- 2
- Thread Author
- #1
இப்படிக்கு தாம்பத்தியம்...
-நிலா கிருஷி
"அம்மா...!என் ஹோம்வொர்க் நோட் எங்கே...?",படுக்கையறையில் இருந்து நான்காவது படிக்கும் தன் மகன் வருண் எழுப்பிய கேள்விக்கு,
"அங்கே ஹால் சோபாவில இருக்கும் பாரு...!",சமையல் வேலையை கவனித்தபடியே பதில் கூறினாள் ராதிகா.
காலை வேளை..பரபரப்பிற்கா பஞ்சம்...?ஒவ்வொரு குடும்பத் தலைவிகளும் பத்து கை கொண்ட துர்க்கைகளாக மாறி சக்கரமாய் சுழலும் நேரம் அது...! "கிருஷ்ண குடில்" பெயர்ப்பலகை தங்கியிருந்த அந்த வீட்டிலும் குடும்பத்தலைவியான ராதிகா பம்பரமாய் தான் சுழன்று கொண்டிருந்தாள்.
"அம்மா...தலை பின்னி விடு...!",ஒன்றாம் வகுப்பு படிக்கும் அந்த வீட்டின் கடை குட்டியான வர்ஷி சீப்பும் கையுமாக வந்து அவள் முன் நின்றது.
அடுப்பின் ஒரு பக்கம் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரையும்..மறுபக்கம் வெந்து கொண்டிருந்த பொறியலையும் ஒரு கிளறு கிளறி விட்டவள்..அவசர அவசரமாகத் தன் மகளுக்கு தலை வாரி விட ஆரம்பித்தாள்.
"வர்ஷி குட்டி...!கம்ப்யூட்டர்க்கு ஸ்பெல்லிங் சொல்லு...?",தலை வாரும் நேரத்தில் நேற்று படித்த பாடத்தையும் மேம்போக்காக நினைவுபடுத்தி அந்தக் குட்டிக்கு சொல்லிக் கொடுத்தவள்..
"ராதிகா ம்மா...கீரை வந்திருக்கு..வேணுமா...?",வாசலில் ஒலித்த கீரை விற்கும் பெண்மணிக்கு,"நாளைக்கு வாங்கிக்கிறேன்...!",என்று பதில் கூறி அனுப்பியவள் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள்.
இரண்டு குழந்தைகளுக்குமான டிபன் பாக்ஸ்..ஸ்னேக்ஸ்..வாட்டர் பாட்டில்..என அனைத்தையும் அவள் தயார் செய்து முடிக்க.."ராதிகா...!எனக்கு லன்ச் பேக் பண்ணிட்டியா...?",அலுவலகத்திற்கு கிளம்பியபடி வந்து நின்றான் அவளது கணவன் கவின்.
"ஒரு டென் மினிட்ஸ்...குழந்தைகளை ஸ்கூல் பஸ்ல ஏத்தி விட்டுட்டு வந்துடறேன் கவின்...வெயிட் பண்ணுங்க...!",உரைத்தபடியே இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியேறியவளை,
"இப்போ நான் கிளம்பினால்தான் டிராபிக்ல மாட்டாம..ஆபிஸ்க்கு ரீச்சாக முடியும்...!வீட்டுல சும்மாதானே இருக்கிற..காலையில கொஞ்சம் சீக்கிரமா எழுந்து சமையல் வேலையை ஆரம்பிக்கலாம்ல...?",சுள்ளென்று எரிந்து விழுந்தவனின் குரல் தடுத்தது.
காலை 4.30 மணிக்கு எழுந்து..எழுந்ததில் இருந்து ஓயாமல் வேலை செய்து கொண்டிருப்பவளின் மனதில் நேற்றைய இரவு நடந்த நிகழ்வு ஊர்வலம் போனது.
வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு 'ஹப்பாடா...' என்று அவள் மெத்தையில் விழும் போது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது.உடல் ஓய்வுக்கு கெஞ்ச..தூக்கத்தில் இமைகளை மூடியவளின் இடையை இரு வலிய கரங்கள் அணைத்துத் தன்னை நோக்கித் திருப்பின.
'ஹைய்யோ..தூக்கம் வேற வருதே...',மனம் ஒரு நொடி தயங்கி சலித்தாலும்..தன் கணவனின் முகத்தில் தெரிந்த வேட்கையும் தாபமும் அவள் வாயைக் கட்டிப் போட்டது.ஆவலுடன் தன்னை அணைத்து முன்னேறியவனின் செயல்களுக்குத் தடை போடாமல் அமைதியாய் ஒத்துழைத்தாள்.
கணவனது தேவைகளைத் தீர்த்து அவள் கண்ணயர ஆரம்பித்த போது..வர்ஷி குட்டி எழுந்து கொண்டு அழுதது.
"ம்மா...!பால் வேணும்...!",தூக்கத்தில் சிணுங்கிய குழந்தைக்கு பால் ஆற்றிக் கொடுத்து குடிக்க வைத்து தூங்க வைத்தாள்.தீயாய் எரிந்த கண்களுடன் அவள் படுக்கையில் விழுந்த போது மணி ஒன்று.
சரியாக 4.30 மணிக்கு அலாரம் அடிக்க..'விழிக்கவே மாட்டேன்..' என்று அடம் பிடித்த இமைகளை வெகு சிரமப்பட்டு பிரித்து எடுத்தவளை அதன் பிறகு வேலைகள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டன.
எட்டு மணி அலுவலகத்திற்கு ஏழு மணிக்கு எழுந்த கணவனுக்குப் பிடித்த மாதிரி டிகாஷன் தூக்கலாக காபி கலந்து கொடுத்தாள்.அவன் அதைக் குடிக்கிறேன் பேர்வழி என்று அரைமணி நேரமாக அதையும் மொபைலையும் கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.இதற்கிடையில் பள்ளிக்கு கிளம்பும் குழந்தைகளின் அலும்பல் வேறு...!
ஒருவழியாக காபியை குடித்து முடித்தவன் எழுந்து சோம்பல் முறித்தபடி குளியலறைக்குள் புகுந்தான்.அங்காவது அந்த மொபைலை வைத்து விட்டு சென்றானா...அதுவும் இல்லை...!மொபைலும் கையுமாக குளியலறைக்குள் நுழைந்தவன் காலைக் கடன்களை முடித்து..குளித்து விட்டுக் கிளம்பி வரும் போது மணி எட்டு.
அவன் அவளைப் பார்த்து திட்டுகிறான்...'நேரமே எழுந்து சமையலை ஆரம்பிக்க வேண்டியதுதானே...?' என்று.
அந்த நினைவு மனதில் எழ..ஒரு பெருமூச்சுடன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.எதிர் வீட்டின் முன் தன் குழந்தையுடன் நின்றிருந்த சுவாதியிடம் வந்தவள்,
"சுவாதி...!இன்னைக்கு ஒருநாள் மட்டும் என் பசங்களையும் ஸ்கூல் பஸ்ல ஏத்தி விட்டறயா...?", தயக்கத்துடன் வினவினாள்.
"நான் பார்த்துக்கிறேன் ராதி...நீ போ...!",அந்தப் பெண் சுவாதி புன்னகையுடன் கூற நிம்மதியுடன் வீட்டிற்குள் நுழைந்தவள்..
கணவனுக்குப் பிடித்த விதத்தில் அவனுக்குத் தனியாக சமைத்திருந்த உணவை லன்ச் பாக்சில் பேக் செய்து..ஷூ மாட்டிக் கொண்டிருந்த கணவனிடம் சென்று நீட்டினாள்.
அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமலேயே அதை வாங்கிக் கொண்டவன்,"அந்த அக்கவுண்ட் ஓபன் பண்ணற விஷயமா இன்னைக்கு பேங்குக்கு போயிட்டு வந்திடு...!மறந்திடாதே...!,”என்றபடியே நிமிர்ந்தவன் அவளது வாடிய முகத்தைக் கண்டு,"ஏன் டி ஒரு மாதிரி இருக்க...?",என்று வினவினான்.
"ஒண்ணுமில்ல...!",மறுப்பாய் தலையசைத்தவளின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டியவன்,”ஓகே..பாய்..நான் கிளம்பறேன்...!",தன் லேப்டாப் பையை எடுத்துக் கொண்டு அவன் வெளியேறி விட்டான்.
வாசல் வரை சென்று கணவனை வழியனுப்பி வைத்து விட்டு உள்ளே நுழைந்தவளுக்கு கண்ணை கட்டிக் கொண்டு வந்தது.யானை வந்து புட்பால் விளையாடி விட்டுச் சென்ற நந்தவனம் போல் வீடு காட்சியளிக்க..ஒரு பெருமூச்சுடன் வந்து சோபாவில் அமர்ந்தாள்.
ஹால் என்றும் பாராமல் அங்கங்கு சுருட்டிக் கிடந்த அழுக்குத் துணிகளும்..ஈர டவலும்...சிதறியிருந்த குழந்தைகளின் புத்தகங்களும் அவளை அதற்கு மேல் உட்கார விடவில்லை.காலையில் அவசர அவசரமாக வாய்க்குள் ஊற்றிக் கொண்ட காபி மட்டும்தான்...வயிறு எனக்கு ஏதாவது கொடேன் என்று சத்தமிட...சமையலறைக்குள் நுழைந்தவள் ஒரு தட்டில் இட்லி வைத்து சாம்பார் ஊற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.
கணவன் வங்கிக்கு போகச் சொன்னது நினைவுக்கு வர..வேகமாக சாப்பிட்டு எழுந்தவள்..வீட்டை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள்.ஹாலை ஓரளவிற்கு ஒழுங்குபடுத்தி விட்டு சமையலறைக்குள் நுழைந்தால்..அங்கு அதற்கு மேல் இருந்தது.
"உஃப்" உதட்டைக் குவித்து ஒரு பெருமூச்சை விட்டவள் கட கடவென்று சமையலறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.ஒரு வழியாக அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு சோபாவில் வந்து சாய்ந்தவளை அயர்வு வந்து ஆட்கொண்டது.ஏனோ காலையிலிருந்தே தலை விண் விண்ணென்று தெறிக்க..இப்பொழுது உடல் சூடாகி காய்ச்சல் வரும் போல் இருந்தது.நேற்று இரவு சரியாகாத் தூங்காததும் சேர்ந்து கொள்ள அவளையும் அறியாமல் சோபாவிலேயே படுத்து உறங்கி விட்டாள்.
அப்பொழுதாவது நிம்மதியாக உறக்கம் வந்ததா...?கணவன் வங்கிக்கு செல்ல சொன்னதே மூளையில் மீண்டும் மீண்டும் ஓட..எழ முயன்றவளால் முடியவில்லை.மனதை மீறிய உடல் அசதி அவளை ஆழ்ந்த உறக்கத்திற்கு இட்டுச் சென்றது.
"ட்ரிங்...ட்ரிங்...!!!"
மொபைல் அலறும் ஒலி.வெகு சிரமப்பட்டு கண் விழித்தவளின் உடல் தீயாய் கொதித்தது.கை கால்கள் ஒருபுறம் வலியெடுக்க..ஒருவாறாக மொபைலை எடுத்து ஆன் செய்தவள் காதில் வைத்தாள்.
"ஹ..ஹலோ...",வெகு பலவீனமாகத்தான் வந்தது வார்த்தைகள்.
"ராதிகா...!தூங்கிட்டு இருக்கிறாயா...?சரி..பேங்குக்கு போய்ட்டு வந்துட்டியா...பேங்க்ல என்ன சொன்னாங்க...?",மறு முனையில் கணவன் வினவ..அவளுக்கு முழுத் தூக்கமும் ஓடி விட்டது.
"இல்லைங்க...!",மென்று விழுங்க..அவ்வளவுதான் அவன் சரமாரியாக திட்ட ஆரம்பித்து விட்டான்.
"அது எவ்வளவு முக்கியமான வேலை தெரியுமா...?இல்லைன்னு இவ்வளவு அசால்ட்டா சொல்ற...வீட்டுல சும்மாதானே இருக்கிற...பேங்குக்கு போய்ட்டு வந்துட்டு படுத்துத் தூங்க வேண்டியதுதானே...!",
"ஸாரிங்க...இதோ இப்போ கிளம்பி போயிட்டு வந்திடறேன்...",
"மணி மூணாகுது...!அது ஒன்னும் உன் அப்பா வைச்சு நடத்தற பேங்க் இல்லை...நீ எந்நேரம் போனாலும் சர்வீஸ் பண்றதுக்கு...!",வார்த்தைகளை கடித்துத் துப்பியவன் போனை பட்டென்று வைத்து விட்டான்.
இவளுக்குத்தான் மனதே கேட்கவில்லை.'இப்படித் தூங்கி விட்டோமே...' மனம் வேதனைப்பட..காய்ச்சல் கொண்ட உடல் மீண்டும் ஓய்வுக்குக் கெஞ்சியது.இனி தூங்க முடியாது..குழந்தைகள் வந்து விடுவார்கள்..எண்ணியவள் எழுந்து பெயருக்கு எதையோ சாப்பிட்டு விட்டு ஒரு காய்ச்சல் மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டாள்.
வர்ஷி குட்டிக்குப் பிடித்தது போல் பான் கேக் செய்தவள்..வருண் அன்று காலையில் கேட்டு விட்டுப் போன பிரென்ச் ஃப்ரைஸை தயாரித்தாள்.மாலை சிற்றுண்டியை முடிக்கவும்..குழந்தைகள் பள்ளிப் பேருந்து வரவும் சரியாக இருந்தது.
உள்ளே நுழையும் போதே,"அம்மா...பிரென்ச் ஃப்ரைஸ் செய்தீங்களா...?",என்ற கேள்வியுடன்தான் வந்தான் வருண்.
அவள் மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள்.அவளுக்குத் தெரியும்...அவன் நினைவு முழுக்க இதில்தான் இருக்கும் என்று...!எனவேதான்,காய்ச்சலையும் பொருட்படுத்தாது எழுந்து சமைத்தாள்.
"நீ சொல்லி அம்மா செய்யாமல் இருப்பேனா...?அப்புறம்..வர்ஷி குட்டிக்கு பனானா பான் கேக்..!",குழந்தையாக மாறி குழந்தைகளைக் கொஞ்சியவளை அதன் பிறகு அடுத்தடுத்த வேலைகள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டன.
பாடம் சொல்லிக் கொடுப்பதிலும்..இரவு உணவு தயாரிப்பதிலும் நேரம் விரைய..கவினும் அலுவலகத்தில் இருந்து வந்து விட்டான்.வரும் போதே 'உர்'ரென்றுதான் வந்தான்.வங்கி வேலை முடியாததால் வந்த கோபம் அது.
ஒரு சின்னக் குளியலைப் போட்டு விட்டு வந்தவன்..வர்ஷி குட்டியை எடுத்து வைத்து கொஞ்ச ஆரம்பித்து விட்டான்.இந்த தந்தைமார்களுக்கு பெண் பிள்ளைகளின் மேல் அப்படி என்னதான் பரிவோ..தெரிவதில்லை...!சிறிது நேரம் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டவன் பிறகு மொபைலை எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
பல குடும்பங்களின் அழகிய நேரங்களை சத்தமில்லாமல் அமைதியாய் களவாடிக் கொண்டிருப்பது இந்த அலைபேசிதான்.
குழந்தைகளை உறங்க வைத்து விட்டு படுக்க வந்தவள் ஒரு காய்ச்சல் மாத்திரையை எடுத்து சாப்பிட...அவன் அப்பொழுதுதான் அவளைக் கவனித்தான்.
"எதுக்கு டேப்லெட் போடற...?",
"காய்ச்சல்...!",
"ஓ...",என்றவன் ஒன்றும் பேசாமல் படுத்து உறங்கி விட்டான்.'அதனாலதான் பேங்குக்கு போகல...' கூற வந்தவளின் வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள்ளேயே கரைந்து போனது.
**********************
நாட்கள் எந்தவொரு மாற்றமும் இன்றி விரையும் போதுதான்..அந்த மிகப் பெரிய மாற்றம் வந்து சேர்ந்தது.
உலகெங்கும் பரவிய உயிர்க்கொல்லி நோயினால்..நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.பள்ளி..கல்லூரி..அலுவலகம்..கோவில் என்று அனைத்தும் பாரபட்சமின்றி மூடப்பட்டது.மக்கள் மிக மிக அவசரத் தேவைகளுக்கு அன்றி மற்ற எதற்காகவும் வெளியே வர முடியாத நிலை.
இன்னும் சொல்லப் போனால் பல குடும்பங்கள் தங்களது தேடலைக் கண்டறிந்த நேரம் அது என்றுதான் சொல்ல வேண்டும்.
"அம்மா...!இன்னைக்கு ஈவ்னிங் வெஜ் கட்லெட் ப்ரிப்பேர் பண்ணி வைங்க...!",வீட்டில் இருப்பதால் மதியம் போடும் குட்டித் தூக்கத்திற்கு முன் வருண் இட்ட கட்டளை இது.வர்ஷி குட்டியைத் தூங்க வைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தவளை கவின் அழைத்தான்.
"ராது...!நானும் நீயும் சேர்ந்து ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு...!இன்னைக்கு ஒரு மூவி பார்க்கலாம்..வா...!",சோபாவில் வசதியாக அமர்ந்தபடியே தொலைக்காட்சியை உயிர்பித்தவன் மனைவியை அழைத்தான்.
-நிலா கிருஷி
"அம்மா...!என் ஹோம்வொர்க் நோட் எங்கே...?",படுக்கையறையில் இருந்து நான்காவது படிக்கும் தன் மகன் வருண் எழுப்பிய கேள்விக்கு,
"அங்கே ஹால் சோபாவில இருக்கும் பாரு...!",சமையல் வேலையை கவனித்தபடியே பதில் கூறினாள் ராதிகா.
காலை வேளை..பரபரப்பிற்கா பஞ்சம்...?ஒவ்வொரு குடும்பத் தலைவிகளும் பத்து கை கொண்ட துர்க்கைகளாக மாறி சக்கரமாய் சுழலும் நேரம் அது...! "கிருஷ்ண குடில்" பெயர்ப்பலகை தங்கியிருந்த அந்த வீட்டிலும் குடும்பத்தலைவியான ராதிகா பம்பரமாய் தான் சுழன்று கொண்டிருந்தாள்.
"அம்மா...தலை பின்னி விடு...!",ஒன்றாம் வகுப்பு படிக்கும் அந்த வீட்டின் கடை குட்டியான வர்ஷி சீப்பும் கையுமாக வந்து அவள் முன் நின்றது.
அடுப்பின் ஒரு பக்கம் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரையும்..மறுபக்கம் வெந்து கொண்டிருந்த பொறியலையும் ஒரு கிளறு கிளறி விட்டவள்..அவசர அவசரமாகத் தன் மகளுக்கு தலை வாரி விட ஆரம்பித்தாள்.
"வர்ஷி குட்டி...!கம்ப்யூட்டர்க்கு ஸ்பெல்லிங் சொல்லு...?",தலை வாரும் நேரத்தில் நேற்று படித்த பாடத்தையும் மேம்போக்காக நினைவுபடுத்தி அந்தக் குட்டிக்கு சொல்லிக் கொடுத்தவள்..
"ராதிகா ம்மா...கீரை வந்திருக்கு..வேணுமா...?",வாசலில் ஒலித்த கீரை விற்கும் பெண்மணிக்கு,"நாளைக்கு வாங்கிக்கிறேன்...!",என்று பதில் கூறி அனுப்பியவள் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள்.
இரண்டு குழந்தைகளுக்குமான டிபன் பாக்ஸ்..ஸ்னேக்ஸ்..வாட்டர் பாட்டில்..என அனைத்தையும் அவள் தயார் செய்து முடிக்க.."ராதிகா...!எனக்கு லன்ச் பேக் பண்ணிட்டியா...?",அலுவலகத்திற்கு கிளம்பியபடி வந்து நின்றான் அவளது கணவன் கவின்.
"ஒரு டென் மினிட்ஸ்...குழந்தைகளை ஸ்கூல் பஸ்ல ஏத்தி விட்டுட்டு வந்துடறேன் கவின்...வெயிட் பண்ணுங்க...!",உரைத்தபடியே இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியேறியவளை,
"இப்போ நான் கிளம்பினால்தான் டிராபிக்ல மாட்டாம..ஆபிஸ்க்கு ரீச்சாக முடியும்...!வீட்டுல சும்மாதானே இருக்கிற..காலையில கொஞ்சம் சீக்கிரமா எழுந்து சமையல் வேலையை ஆரம்பிக்கலாம்ல...?",சுள்ளென்று எரிந்து விழுந்தவனின் குரல் தடுத்தது.
காலை 4.30 மணிக்கு எழுந்து..எழுந்ததில் இருந்து ஓயாமல் வேலை செய்து கொண்டிருப்பவளின் மனதில் நேற்றைய இரவு நடந்த நிகழ்வு ஊர்வலம் போனது.
வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு 'ஹப்பாடா...' என்று அவள் மெத்தையில் விழும் போது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது.உடல் ஓய்வுக்கு கெஞ்ச..தூக்கத்தில் இமைகளை மூடியவளின் இடையை இரு வலிய கரங்கள் அணைத்துத் தன்னை நோக்கித் திருப்பின.
'ஹைய்யோ..தூக்கம் வேற வருதே...',மனம் ஒரு நொடி தயங்கி சலித்தாலும்..தன் கணவனின் முகத்தில் தெரிந்த வேட்கையும் தாபமும் அவள் வாயைக் கட்டிப் போட்டது.ஆவலுடன் தன்னை அணைத்து முன்னேறியவனின் செயல்களுக்குத் தடை போடாமல் அமைதியாய் ஒத்துழைத்தாள்.
கணவனது தேவைகளைத் தீர்த்து அவள் கண்ணயர ஆரம்பித்த போது..வர்ஷி குட்டி எழுந்து கொண்டு அழுதது.
"ம்மா...!பால் வேணும்...!",தூக்கத்தில் சிணுங்கிய குழந்தைக்கு பால் ஆற்றிக் கொடுத்து குடிக்க வைத்து தூங்க வைத்தாள்.தீயாய் எரிந்த கண்களுடன் அவள் படுக்கையில் விழுந்த போது மணி ஒன்று.
சரியாக 4.30 மணிக்கு அலாரம் அடிக்க..'விழிக்கவே மாட்டேன்..' என்று அடம் பிடித்த இமைகளை வெகு சிரமப்பட்டு பிரித்து எடுத்தவளை அதன் பிறகு வேலைகள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டன.
எட்டு மணி அலுவலகத்திற்கு ஏழு மணிக்கு எழுந்த கணவனுக்குப் பிடித்த மாதிரி டிகாஷன் தூக்கலாக காபி கலந்து கொடுத்தாள்.அவன் அதைக் குடிக்கிறேன் பேர்வழி என்று அரைமணி நேரமாக அதையும் மொபைலையும் கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.இதற்கிடையில் பள்ளிக்கு கிளம்பும் குழந்தைகளின் அலும்பல் வேறு...!
ஒருவழியாக காபியை குடித்து முடித்தவன் எழுந்து சோம்பல் முறித்தபடி குளியலறைக்குள் புகுந்தான்.அங்காவது அந்த மொபைலை வைத்து விட்டு சென்றானா...அதுவும் இல்லை...!மொபைலும் கையுமாக குளியலறைக்குள் நுழைந்தவன் காலைக் கடன்களை முடித்து..குளித்து விட்டுக் கிளம்பி வரும் போது மணி எட்டு.
அவன் அவளைப் பார்த்து திட்டுகிறான்...'நேரமே எழுந்து சமையலை ஆரம்பிக்க வேண்டியதுதானே...?' என்று.
அந்த நினைவு மனதில் எழ..ஒரு பெருமூச்சுடன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.எதிர் வீட்டின் முன் தன் குழந்தையுடன் நின்றிருந்த சுவாதியிடம் வந்தவள்,
"சுவாதி...!இன்னைக்கு ஒருநாள் மட்டும் என் பசங்களையும் ஸ்கூல் பஸ்ல ஏத்தி விட்டறயா...?", தயக்கத்துடன் வினவினாள்.
"நான் பார்த்துக்கிறேன் ராதி...நீ போ...!",அந்தப் பெண் சுவாதி புன்னகையுடன் கூற நிம்மதியுடன் வீட்டிற்குள் நுழைந்தவள்..
கணவனுக்குப் பிடித்த விதத்தில் அவனுக்குத் தனியாக சமைத்திருந்த உணவை லன்ச் பாக்சில் பேக் செய்து..ஷூ மாட்டிக் கொண்டிருந்த கணவனிடம் சென்று நீட்டினாள்.
அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமலேயே அதை வாங்கிக் கொண்டவன்,"அந்த அக்கவுண்ட் ஓபன் பண்ணற விஷயமா இன்னைக்கு பேங்குக்கு போயிட்டு வந்திடு...!மறந்திடாதே...!,”என்றபடியே நிமிர்ந்தவன் அவளது வாடிய முகத்தைக் கண்டு,"ஏன் டி ஒரு மாதிரி இருக்க...?",என்று வினவினான்.
"ஒண்ணுமில்ல...!",மறுப்பாய் தலையசைத்தவளின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டியவன்,”ஓகே..பாய்..நான் கிளம்பறேன்...!",தன் லேப்டாப் பையை எடுத்துக் கொண்டு அவன் வெளியேறி விட்டான்.
வாசல் வரை சென்று கணவனை வழியனுப்பி வைத்து விட்டு உள்ளே நுழைந்தவளுக்கு கண்ணை கட்டிக் கொண்டு வந்தது.யானை வந்து புட்பால் விளையாடி விட்டுச் சென்ற நந்தவனம் போல் வீடு காட்சியளிக்க..ஒரு பெருமூச்சுடன் வந்து சோபாவில் அமர்ந்தாள்.
ஹால் என்றும் பாராமல் அங்கங்கு சுருட்டிக் கிடந்த அழுக்குத் துணிகளும்..ஈர டவலும்...சிதறியிருந்த குழந்தைகளின் புத்தகங்களும் அவளை அதற்கு மேல் உட்கார விடவில்லை.காலையில் அவசர அவசரமாக வாய்க்குள் ஊற்றிக் கொண்ட காபி மட்டும்தான்...வயிறு எனக்கு ஏதாவது கொடேன் என்று சத்தமிட...சமையலறைக்குள் நுழைந்தவள் ஒரு தட்டில் இட்லி வைத்து சாம்பார் ஊற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.
கணவன் வங்கிக்கு போகச் சொன்னது நினைவுக்கு வர..வேகமாக சாப்பிட்டு எழுந்தவள்..வீட்டை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள்.ஹாலை ஓரளவிற்கு ஒழுங்குபடுத்தி விட்டு சமையலறைக்குள் நுழைந்தால்..அங்கு அதற்கு மேல் இருந்தது.
"உஃப்" உதட்டைக் குவித்து ஒரு பெருமூச்சை விட்டவள் கட கடவென்று சமையலறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.ஒரு வழியாக அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு சோபாவில் வந்து சாய்ந்தவளை அயர்வு வந்து ஆட்கொண்டது.ஏனோ காலையிலிருந்தே தலை விண் விண்ணென்று தெறிக்க..இப்பொழுது உடல் சூடாகி காய்ச்சல் வரும் போல் இருந்தது.நேற்று இரவு சரியாகாத் தூங்காததும் சேர்ந்து கொள்ள அவளையும் அறியாமல் சோபாவிலேயே படுத்து உறங்கி விட்டாள்.
அப்பொழுதாவது நிம்மதியாக உறக்கம் வந்ததா...?கணவன் வங்கிக்கு செல்ல சொன்னதே மூளையில் மீண்டும் மீண்டும் ஓட..எழ முயன்றவளால் முடியவில்லை.மனதை மீறிய உடல் அசதி அவளை ஆழ்ந்த உறக்கத்திற்கு இட்டுச் சென்றது.
"ட்ரிங்...ட்ரிங்...!!!"
மொபைல் அலறும் ஒலி.வெகு சிரமப்பட்டு கண் விழித்தவளின் உடல் தீயாய் கொதித்தது.கை கால்கள் ஒருபுறம் வலியெடுக்க..ஒருவாறாக மொபைலை எடுத்து ஆன் செய்தவள் காதில் வைத்தாள்.
"ஹ..ஹலோ...",வெகு பலவீனமாகத்தான் வந்தது வார்த்தைகள்.
"ராதிகா...!தூங்கிட்டு இருக்கிறாயா...?சரி..பேங்குக்கு போய்ட்டு வந்துட்டியா...பேங்க்ல என்ன சொன்னாங்க...?",மறு முனையில் கணவன் வினவ..அவளுக்கு முழுத் தூக்கமும் ஓடி விட்டது.
"இல்லைங்க...!",மென்று விழுங்க..அவ்வளவுதான் அவன் சரமாரியாக திட்ட ஆரம்பித்து விட்டான்.
"அது எவ்வளவு முக்கியமான வேலை தெரியுமா...?இல்லைன்னு இவ்வளவு அசால்ட்டா சொல்ற...வீட்டுல சும்மாதானே இருக்கிற...பேங்குக்கு போய்ட்டு வந்துட்டு படுத்துத் தூங்க வேண்டியதுதானே...!",
"ஸாரிங்க...இதோ இப்போ கிளம்பி போயிட்டு வந்திடறேன்...",
"மணி மூணாகுது...!அது ஒன்னும் உன் அப்பா வைச்சு நடத்தற பேங்க் இல்லை...நீ எந்நேரம் போனாலும் சர்வீஸ் பண்றதுக்கு...!",வார்த்தைகளை கடித்துத் துப்பியவன் போனை பட்டென்று வைத்து விட்டான்.
இவளுக்குத்தான் மனதே கேட்கவில்லை.'இப்படித் தூங்கி விட்டோமே...' மனம் வேதனைப்பட..காய்ச்சல் கொண்ட உடல் மீண்டும் ஓய்வுக்குக் கெஞ்சியது.இனி தூங்க முடியாது..குழந்தைகள் வந்து விடுவார்கள்..எண்ணியவள் எழுந்து பெயருக்கு எதையோ சாப்பிட்டு விட்டு ஒரு காய்ச்சல் மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டாள்.
வர்ஷி குட்டிக்குப் பிடித்தது போல் பான் கேக் செய்தவள்..வருண் அன்று காலையில் கேட்டு விட்டுப் போன பிரென்ச் ஃப்ரைஸை தயாரித்தாள்.மாலை சிற்றுண்டியை முடிக்கவும்..குழந்தைகள் பள்ளிப் பேருந்து வரவும் சரியாக இருந்தது.
உள்ளே நுழையும் போதே,"அம்மா...பிரென்ச் ஃப்ரைஸ் செய்தீங்களா...?",என்ற கேள்வியுடன்தான் வந்தான் வருண்.
அவள் மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள்.அவளுக்குத் தெரியும்...அவன் நினைவு முழுக்க இதில்தான் இருக்கும் என்று...!எனவேதான்,காய்ச்சலையும் பொருட்படுத்தாது எழுந்து சமைத்தாள்.
"நீ சொல்லி அம்மா செய்யாமல் இருப்பேனா...?அப்புறம்..வர்ஷி குட்டிக்கு பனானா பான் கேக்..!",குழந்தையாக மாறி குழந்தைகளைக் கொஞ்சியவளை அதன் பிறகு அடுத்தடுத்த வேலைகள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டன.
பாடம் சொல்லிக் கொடுப்பதிலும்..இரவு உணவு தயாரிப்பதிலும் நேரம் விரைய..கவினும் அலுவலகத்தில் இருந்து வந்து விட்டான்.வரும் போதே 'உர்'ரென்றுதான் வந்தான்.வங்கி வேலை முடியாததால் வந்த கோபம் அது.
ஒரு சின்னக் குளியலைப் போட்டு விட்டு வந்தவன்..வர்ஷி குட்டியை எடுத்து வைத்து கொஞ்ச ஆரம்பித்து விட்டான்.இந்த தந்தைமார்களுக்கு பெண் பிள்ளைகளின் மேல் அப்படி என்னதான் பரிவோ..தெரிவதில்லை...!சிறிது நேரம் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டவன் பிறகு மொபைலை எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
பல குடும்பங்களின் அழகிய நேரங்களை சத்தமில்லாமல் அமைதியாய் களவாடிக் கொண்டிருப்பது இந்த அலைபேசிதான்.
குழந்தைகளை உறங்க வைத்து விட்டு படுக்க வந்தவள் ஒரு காய்ச்சல் மாத்திரையை எடுத்து சாப்பிட...அவன் அப்பொழுதுதான் அவளைக் கவனித்தான்.
"எதுக்கு டேப்லெட் போடற...?",
"காய்ச்சல்...!",
"ஓ...",என்றவன் ஒன்றும் பேசாமல் படுத்து உறங்கி விட்டான்.'அதனாலதான் பேங்குக்கு போகல...' கூற வந்தவளின் வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள்ளேயே கரைந்து போனது.
**********************
நாட்கள் எந்தவொரு மாற்றமும் இன்றி விரையும் போதுதான்..அந்த மிகப் பெரிய மாற்றம் வந்து சேர்ந்தது.
உலகெங்கும் பரவிய உயிர்க்கொல்லி நோயினால்..நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.பள்ளி..கல்லூரி..அலுவலகம்..கோவில் என்று அனைத்தும் பாரபட்சமின்றி மூடப்பட்டது.மக்கள் மிக மிக அவசரத் தேவைகளுக்கு அன்றி மற்ற எதற்காகவும் வெளியே வர முடியாத நிலை.
இன்னும் சொல்லப் போனால் பல குடும்பங்கள் தங்களது தேடலைக் கண்டறிந்த நேரம் அது என்றுதான் சொல்ல வேண்டும்.
"அம்மா...!இன்னைக்கு ஈவ்னிங் வெஜ் கட்லெட் ப்ரிப்பேர் பண்ணி வைங்க...!",வீட்டில் இருப்பதால் மதியம் போடும் குட்டித் தூக்கத்திற்கு முன் வருண் இட்ட கட்டளை இது.வர்ஷி குட்டியைத் தூங்க வைத்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தவளை கவின் அழைத்தான்.
"ராது...!நானும் நீயும் சேர்ந்து ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு...!இன்னைக்கு ஒரு மூவி பார்க்கலாம்..வா...!",சோபாவில் வசதியாக அமர்ந்தபடியே தொலைக்காட்சியை உயிர்பித்தவன் மனைவியை அழைத்தான்.