New member
- Joined
- May 20, 2025
- Messages
- 5
- Thread Author
- #1
"விளையாடுறீங்களா கார்த்தி?" எனக் கேட்டாள் வள்ளி.
"நோ வள்ளி! ஐம் சீரியஸ்" என்றான் கார்த்திகேயன்.
அவனை ஏற இறங்கப் பார்த்தவளாய், "இது சரி பட்டு வராது கார்த்தி" என்றவள் உடனே எழுந்து அங்கிருந்து நகர முற்படவும்,
காதலின் அர்த்தத்தையும்
அதன் அடியாழ இன்பத்தையும்
என்னவனான
உன்னிடம் மட்டுமே
உணரக் காத்திருக்கிறேன் நான்!
உணர்த்த
என்று வருவாயோ நீ?
இக்கவிதையை உரைத்திருந்தான் கார்த்திகேயன்.
அவள் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள்.
மறுநொடி அவன் புறம் திரும்பியவளாய், "இந்தக் கவிதை எப்படி உங்களுக்குத் தெரியும்?" என அதிர்ச்சியுடன் கேட்டாள்.
"உன்னோட கிறுக்கல்கள் இன்ஸ்டா பேஜ்ல நானும் ஃபாலோவரா இருக்கேன் வள்ளி. உன்னைக் கட்டிக்கப் போறவருக்காக நீ உருகி உருகி எழுதியிருக்கக் கவிதை எல்லாம் படிச்ச பிறகு உன் மேல எப்படிக் காதல் வராமப் போகும்" மென்னகையுடன் கூறியவனாய் கண் சிமிட்டினான்.
"இப்படித் தன்னை உருகி உருகி காதலிக்கிற ஒரு பொண்ணு வேணும்னு தான் எல்லா ஆண்களும் ஆசைப்படுவாங்க வள்ளி. உன்னோட காதலை எனக்குத் தருவியா வள்ளி?" கண்களில் ஆசையும் காதலும் பொங்கக் கேட்டிருந்தான் கார்த்திகேயன்.
இமை சிமிட்ட மறந்தவளாய் அவனைப் பார்த்திருந்தாள் வள்ளி.
"அது என்னோட இன்ஸ்டா பேஜ்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?" குழப்பத்துடன் அவள் கேட்க,
"அதெல்லாம் சஸ்பென்ஸ்! என்னைக் கட்டிக்கிறேன்னு சொல்லு, பதில் சொல்றேன்" என்று சிரித்தான்.
"அப்படி ஒன்னும் எனக்குத் தெரிஞ்சிக்கத் தேவையில்ல. நான்லாம் உங்களுக்குச் செட் ஆக மாட்டேன் கார்த்தி. இது என் மேல வந்த காதல் இல்லை. என்னோட கவிதை மேல வந்த காதல்" என்றவள் அங்கிருந்து நகர்ந்து செல்ல,
"ஹே வள்ளி நில்லு!" என்றவனாய் அவளுடன் நடந்தவன்,
"ஒத்துக்கிறேன். மொதல்ல கவிதை மேல தான் காதல் வந்துச்சு. ஆனா போகப் போக அந்தக் கவிதையை எழுதுன உன் மேல அந்தக் காதல் திரும்பிடுச்சி. உன்னை எல்லாம் பார்த்ததும் பிடிக்காம போகலாம் வள்ளி. ஆனா உன்கிட்ட பேசிப் பழகினப் பிறகு யாருக்கும் பிடிக்காம போகாது. யூ ஆர் சச் எ ஸ்வீட் பர்சன். கூடவே இவ்வளோ டேலண்ட் இருக்கும் போது இந்தப் பொக்கிஷத்தை விட்டுட யாருக்குத் தான் மனசு வரும் சொல்லு" என்றான்.
அவனின் வார்த்தை ஒவ்வொன்றும் அவளுள் பனிமழையைத் தூவிய போதும், 'நான் ஓகே சொல்லனும்னே இப்படிலாம் ஐஸ் வைக்கிறாரா?' என்று மனத்தோடு நினைத்தவளாய் நின்று அவனைப் பார்த்தாள் வள்ளி.
கார்த்திகேயன் கலகலப்பாகப் பேசும் சுபாவம் கொண்டவன். பார்த்த நொடியில் படபடவெனப் பேசி எவரையும் தோழமையாக்குபவன். அவனுக்கு நிறையப் பெண் தோழமைகள் உள்ளனர், அதிலும் பெரும்பாலும் வேற்று மொழி பேசுபவர்களாய் இருக்கிறார்கள் என்றெல்லாம் தெரியும் இவளுக்கு. அதனாலேயே இவனிடம் கேள்விக்குப் பதிலாகச் சில வார்த்தைகள் மட்டுமே பேசி ஒதுக்கத்துடனே பழகியிருக்கிறாள் இது வரை. அப்படிப்பட்டவனுக்கு எப்படித் தன்னைப் பிடித்திருக்கிறது என்று தான் புரியவில்லை இவளுக்கு.
"இவ்வளோ அழகா இருக்க உங்களைக் கட்டிக்கத் தான் பல பொண்ணுங்க லைன் கட்டி நிப்பாங்களே கார்த்தி! ஏன் என்னைக் கட்டிக்கனும்னு நினைக்கிறீங்க?" என நேரடியாகவே அவனிடம் கேட்டிருந்தாள்.
"உன் வாயால நான் அழகுனு சொல்றதைக் கேட்க சந்தோஷமா இருக்கு வள்ளி" என்று சிரித்தவனாய்,
"நீ சொல்ற அளவுக்குலாம் பொண்ணுங்க யாரும் லைன் கட்டி நிக்கலை. என் கூடப் பழகுற எல்லாரும் என்னை ஃப்ரண்ட்டா நினைச்சு தான் பழகுறாங்க வள்ளி. நானும் அப்படித் தான் பழகுறேன். உன்னை மட்டும் தான் கட்டிக்கனும்னு தோணுச்சு வள்ளி" என்றான்.
"கல்யாணம் செஞ்சி வாழுறதுக்குப் பிடித்தமும் காதலும் மட்டும் போதாது கார்த்தி" என்றவள் கூறவும்,
"நீயும் சில பொண்ணுங்க மாதிரி காரு, சொந்த வீடு, சொத்து வச்சிருக்கிறது தான் ஒரு பையனுக்குக் கல்யாணத்துக்கான தகுதினு நினைக்கிறியா வள்ளி?" கேலியைக் கைவிட்டு சற்றுக் கோபமான தொனியில் கேட்டிருந்தான்.
"தானே சம்பாதிச்சு தன்னோட அப்பா அம்மாவைக் காப்பாத்தனும்னு வைராக்கியத்தோட வளர்ந்த பொண்ணு அப்படி நினைப்பாளா கார்த்தி" என்று அவன் கேள்வியை அவனிடமே திருப்பினாள் வள்ளி.
அவளின் பதிலில் மெச்சும் பார்வைப் பார்த்தவனாய், "வேற என்ன தகுதி என்கிட்ட இல்லைனு நினைக்குற வள்ளி?" எனக் கேட்டான்.
"உங்க ஸ்டேடஸூக்கும் எங்க ஸ்டேடஸூக்கும் செட் ஆகாது கார்த்தி. அப்புறம் உங்களோட இந்த அழகும் நிறமும், கல்யாணம் முடிஞ்ச பிறகு என்னை எப்பவுமே தாழ்வாவே உணர வைக்கும். அது என் கான்பிடன்ஸ்ஸை குறைச்சிரும். பின்னாடி அதுவே நமக்குள்ள பெரும் பிரச்சினையா வரலாம். அதனால என்னோட ஸ்டேடஸ்க்கும் அழகுக்கும் கலருக்கும் ஏத்த மாதிரி பையனை கட்டிக்கிறது தான் எனக்குச் சரி வரும் கார்த்தி" தெளிவாக உரைத்தவளாய் அங்கிருந்து அவள் நகர்ந்து விட, சற்றும் எதிர்பாராத இவளின் இந்தப் பதிலில் அப்படியே நின்று விட்டான் கார்த்திகேயன்.
வள்ளி அவளது இருச்சக்கர வாகனத்தை எடுக்கும் நேரம் அவளருகே சென்றவன், "இப்படி ஒரு பதிலை சுத்தமா எதிர்பாக்கலை வள்ளி. ஆனாலும் நீ சொன்னது எதுவுமே நமக்குள்ள பிரச்சனையா வராதுனு சொல்ல மாட்டேன். வந்தாலும் அதைச் சரி செய்ய நான் உறுதுணையா இருப்பேன்னு சொல்றேன். என்னிக்கும் என்னால உன்னோட கான்பிடன்ஸ் குறையாம பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு வள்ளி. அதனால என்னை வேண்டவே வேண்டாம்னு ஒதுக்காம கொஞ்சம் யோசிச்சு கன்சிடர் செய்யலாமே. உங்கப்பா அம்மா பேச்சை மீறி நீ எந்த முடிவும் எடுக்க மாட்டனு தெரியும் வள்ளி. அவங்ககிட்ட பேசு. இதை அரேஞ்ச் மேரேஜாவே கூட நாம செய்யலாம். உன்னை நான் காதலிக்கச் சொல்லலை. கல்யாணம் செய்யத் தான் கேட்கிறேன். கல்யாணம் செஞ்சிட்டு நாம காதலிக்கலாம்" இதழ் விரிந்த புன்னகையுடன் கூறியிருந்தான்.
இவளின் மனமோ வேண்டும் வேண்டாமென இருத்தலைக் கொள்ளியாய் குழப்பி விட, "கொஞ்சம் டைம் வேணும் கார்த்தி. யோசிச்சு சொல்றேன்" என்று அவள் உரைத்ததும், "ஹப்பாடா! ஐம் வெய்ட்டிங்" என்று சிரிப்புடன் பெருமூச்சு விட்டவனோ,
'உன்னை யோசிக்க வைக்கவே தொண்டை தண்ணி வத்த பேச வேண்டியது இருக்கே! இதுல உன்னை ஒத்துக்க வைக்க நான் இன்னும் என்னலாம் செய்யனுமோ' என்று மனத்தோடு நினைத்துக் கொண்டான்.
சின்னத் தலையசைப்புடன் தனது இருச்சக்கர வாகனத்தில் சென்றவளின் மனத்தை ஒருவித சிலிர்ப்பும் குழப்பமும் ஒருசேர சூழ்ந்திருந்தது.
இங்கே இவனின் மனமோ மகிழ்வில் துள்ளிக் குதிக்கத் தனது புல்லட் வாகனத்தை ஓட்டியவன் வீட்டை அடைந்ததும், விசில் அடித்தவனாய் அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் மூன்றாம் மாடியில் இருக்கும் தனது இல்லத்திற்குப் படிக்கட்டு வழியாய் தாவித் தாவி சென்றிருந்தான்.
முகத்தில் முழு மகிழ்வு பொங்க விசில் அடித்தவாறு வீட்டிற்குள் வந்த மகனைப் பார்த்த அவனின் தந்தை தாமோதரன், மனைவி பார்வதியைப் பார்த்து, 'என்னவாம்?' என்று ஜாடைக் காட்டிப் கேட்டார்.
உதட்டைப் பிதுக்கி தெரியவில்லை என்று சைகைச் செய்தவராய், "என்னடா மவனே, யார்கிட்டயாவது பிரபோஸ் செஞ்சிட்டு வந்திருக்கியா? செம்ம குஷியா இருக்கியே" என்று கேட்டார்.
"ம்மாஅஅஅ எப்படிமா?" இன்ப அதிர்வுடன் தாயைப் பார்த்து அவன் கேட்க,
"டேய் அப்ப நிஜமாவே பிரபோஸ் செஞ்சிட்டு தான் வந்திருக்கியாடா?" அதிர்ந்த பார்வையுடன் கேட்டிருந்தார் பார்வதி.
அப்பொழுது தான் வேலையில் இருந்து வந்தவராய் தனது காலணியைக் கழட்டி வைத்து விட்டு முன்னறையில் அயர்வாய் அமர்ந்திருந்த தாமோதரன், "எத்தனையாவது லவ்டா இது?" என்று கேட்டார்.
"ப்பாஅஅஅ இப்படிலாம் என்னை அசிங்கப்படுத்தாதீங்க. நான் என்னமோ பொண்ணுங்களை எல்லாம் லவ் செஞ்சி கழட்டி விட்ட மாதிரியே கேட்குறீங்களே? எனக்கு எந்தப் பொண்ணையாவது பிடிச்சிருந்தா, லவ் செய்யலாம்னு மனசுக்குள்ள தோணுச்சுனா பிரபோஸ் செஞ்சிடுவேன்ப்பா. அதுக்கு மேல அவங்களுக்குப் பிடிச்சி வந்தா மேரேஜ் இல்லனா பிரேக் அப்பு அவ்ளோ தான்" என்றவன் கூறவும்,
"அதான் கேட்கிறேன். இது வரைக்கும் எத்தனை பேருக்கு அப்படிப் பிரபோஸ் செஞ்சிருப்ப?" எனக் கேட்டார்.
"அதை ஏன்ப்பா கேட்குறீங்க? மனசெல்லாம் புண்ணா இருக்கு! இது வரைக்கும் அஞ்சு பேரைப் பிரபோஸ் செஞ்சிருக்கேன். அது என்னமோ எனக்குப் பிடிச்சிருக்கப் பொண்ணுங்களுக்குலாம் என்னைப் பிடிக்க மாட்டேங்குது! நான் காதலிக்கவா கேட்குறேன், கல்யாணம் செய்யத் தானே கேட்குறேன்" என்று பெருமூச்சு விட்டான் கார்த்திகேயன்.
பின்னாளில் இவ்விடயமே இவனின் இல்வாழ்வில் பெரும் பிரச்சினையாய் உருவெடுக்கப் போகிறது என்று அறியாதவனாய் விளையாட்டாய்ப் பேசியிருந்தான் கார்த்திகேயன்.
அதே நேரம் அங்கே தனது வீட்டிற்குச் சென்ற வள்ளி, தந்தையை ஓய்வெடுக்க வீட்டிற்கு அனுப்பி விட்டுக் கடையினில் அமர்ந்தாள்.
அச்சமயம் அங்கு வந்த அவளின் தாய், "உனக்குப் பூக்கட்டி வச்சிக்கப் பிடிக்குமேனு உதிரி மல்லிகை வாங்கினேன்மா. இந்தா உட்காருற நேரத்துல கட்டிக்கிட்டு இரு" என்று அவளிடம் உதிரி மல்லிகைப்பூக்களைக் கொடுத்தார்.
மல்லிகைப்பூக்களைக் கைகள் தொடுத்துக் கொண்டிருக்க, மனமோ கார்த்திகேயன் கூறியவற்றிலேயே உழன்றிருந்தது.
மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகை சூடிக் கொண்டேன்
சூப்பர் சிங்கர் பிரியங்காவின் குரலில் அவளது கைப்பேசியின் அழைப்பொலியாய் இப்பாடல் ஒலிக்கவும்,
அப்பாடல் தனது சூழலுக்கு ஏற்ப பொருந்துவதை எண்ணி மனத்தோடு சிரித்துக் கொண்டவளாய், 'என்னோட மன்னவனாய் கார்த்திகேயனை ஏத்துக்கலாமா முருகா? அவர் எனக்குச் செட் ஆவாரானு பயமா இருக்கு முருகா' என்று மனத்தோடு முருகரிடம் உரையாடினாள் வள்ளி.
'யாமிருக்கப் பயமேன்' என்று அந்தக் கடையில் மாட்டியிருந்த காலேண்டரில் இருந்து அருளினார் முருகப்பெருமான்.
"நோ வள்ளி! ஐம் சீரியஸ்" என்றான் கார்த்திகேயன்.
அவனை ஏற இறங்கப் பார்த்தவளாய், "இது சரி பட்டு வராது கார்த்தி" என்றவள் உடனே எழுந்து அங்கிருந்து நகர முற்படவும்,
காதலின் அர்த்தத்தையும்
அதன் அடியாழ இன்பத்தையும்
என்னவனான
உன்னிடம் மட்டுமே
உணரக் காத்திருக்கிறேன் நான்!
உணர்த்த
என்று வருவாயோ நீ?
இக்கவிதையை உரைத்திருந்தான் கார்த்திகேயன்.
அவள் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள்.
மறுநொடி அவன் புறம் திரும்பியவளாய், "இந்தக் கவிதை எப்படி உங்களுக்குத் தெரியும்?" என அதிர்ச்சியுடன் கேட்டாள்.
"உன்னோட கிறுக்கல்கள் இன்ஸ்டா பேஜ்ல நானும் ஃபாலோவரா இருக்கேன் வள்ளி. உன்னைக் கட்டிக்கப் போறவருக்காக நீ உருகி உருகி எழுதியிருக்கக் கவிதை எல்லாம் படிச்ச பிறகு உன் மேல எப்படிக் காதல் வராமப் போகும்" மென்னகையுடன் கூறியவனாய் கண் சிமிட்டினான்.
"இப்படித் தன்னை உருகி உருகி காதலிக்கிற ஒரு பொண்ணு வேணும்னு தான் எல்லா ஆண்களும் ஆசைப்படுவாங்க வள்ளி. உன்னோட காதலை எனக்குத் தருவியா வள்ளி?" கண்களில் ஆசையும் காதலும் பொங்கக் கேட்டிருந்தான் கார்த்திகேயன்.
இமை சிமிட்ட மறந்தவளாய் அவனைப் பார்த்திருந்தாள் வள்ளி.
"அது என்னோட இன்ஸ்டா பேஜ்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?" குழப்பத்துடன் அவள் கேட்க,
"அதெல்லாம் சஸ்பென்ஸ்! என்னைக் கட்டிக்கிறேன்னு சொல்லு, பதில் சொல்றேன்" என்று சிரித்தான்.
"அப்படி ஒன்னும் எனக்குத் தெரிஞ்சிக்கத் தேவையில்ல. நான்லாம் உங்களுக்குச் செட் ஆக மாட்டேன் கார்த்தி. இது என் மேல வந்த காதல் இல்லை. என்னோட கவிதை மேல வந்த காதல்" என்றவள் அங்கிருந்து நகர்ந்து செல்ல,
"ஹே வள்ளி நில்லு!" என்றவனாய் அவளுடன் நடந்தவன்,
"ஒத்துக்கிறேன். மொதல்ல கவிதை மேல தான் காதல் வந்துச்சு. ஆனா போகப் போக அந்தக் கவிதையை எழுதுன உன் மேல அந்தக் காதல் திரும்பிடுச்சி. உன்னை எல்லாம் பார்த்ததும் பிடிக்காம போகலாம் வள்ளி. ஆனா உன்கிட்ட பேசிப் பழகினப் பிறகு யாருக்கும் பிடிக்காம போகாது. யூ ஆர் சச் எ ஸ்வீட் பர்சன். கூடவே இவ்வளோ டேலண்ட் இருக்கும் போது இந்தப் பொக்கிஷத்தை விட்டுட யாருக்குத் தான் மனசு வரும் சொல்லு" என்றான்.
அவனின் வார்த்தை ஒவ்வொன்றும் அவளுள் பனிமழையைத் தூவிய போதும், 'நான் ஓகே சொல்லனும்னே இப்படிலாம் ஐஸ் வைக்கிறாரா?' என்று மனத்தோடு நினைத்தவளாய் நின்று அவனைப் பார்த்தாள் வள்ளி.
கார்த்திகேயன் கலகலப்பாகப் பேசும் சுபாவம் கொண்டவன். பார்த்த நொடியில் படபடவெனப் பேசி எவரையும் தோழமையாக்குபவன். அவனுக்கு நிறையப் பெண் தோழமைகள் உள்ளனர், அதிலும் பெரும்பாலும் வேற்று மொழி பேசுபவர்களாய் இருக்கிறார்கள் என்றெல்லாம் தெரியும் இவளுக்கு. அதனாலேயே இவனிடம் கேள்விக்குப் பதிலாகச் சில வார்த்தைகள் மட்டுமே பேசி ஒதுக்கத்துடனே பழகியிருக்கிறாள் இது வரை. அப்படிப்பட்டவனுக்கு எப்படித் தன்னைப் பிடித்திருக்கிறது என்று தான் புரியவில்லை இவளுக்கு.
"இவ்வளோ அழகா இருக்க உங்களைக் கட்டிக்கத் தான் பல பொண்ணுங்க லைன் கட்டி நிப்பாங்களே கார்த்தி! ஏன் என்னைக் கட்டிக்கனும்னு நினைக்கிறீங்க?" என நேரடியாகவே அவனிடம் கேட்டிருந்தாள்.
"உன் வாயால நான் அழகுனு சொல்றதைக் கேட்க சந்தோஷமா இருக்கு வள்ளி" என்று சிரித்தவனாய்,
"நீ சொல்ற அளவுக்குலாம் பொண்ணுங்க யாரும் லைன் கட்டி நிக்கலை. என் கூடப் பழகுற எல்லாரும் என்னை ஃப்ரண்ட்டா நினைச்சு தான் பழகுறாங்க வள்ளி. நானும் அப்படித் தான் பழகுறேன். உன்னை மட்டும் தான் கட்டிக்கனும்னு தோணுச்சு வள்ளி" என்றான்.
"கல்யாணம் செஞ்சி வாழுறதுக்குப் பிடித்தமும் காதலும் மட்டும் போதாது கார்த்தி" என்றவள் கூறவும்,
"நீயும் சில பொண்ணுங்க மாதிரி காரு, சொந்த வீடு, சொத்து வச்சிருக்கிறது தான் ஒரு பையனுக்குக் கல்யாணத்துக்கான தகுதினு நினைக்கிறியா வள்ளி?" கேலியைக் கைவிட்டு சற்றுக் கோபமான தொனியில் கேட்டிருந்தான்.
"தானே சம்பாதிச்சு தன்னோட அப்பா அம்மாவைக் காப்பாத்தனும்னு வைராக்கியத்தோட வளர்ந்த பொண்ணு அப்படி நினைப்பாளா கார்த்தி" என்று அவன் கேள்வியை அவனிடமே திருப்பினாள் வள்ளி.
அவளின் பதிலில் மெச்சும் பார்வைப் பார்த்தவனாய், "வேற என்ன தகுதி என்கிட்ட இல்லைனு நினைக்குற வள்ளி?" எனக் கேட்டான்.
"உங்க ஸ்டேடஸூக்கும் எங்க ஸ்டேடஸூக்கும் செட் ஆகாது கார்த்தி. அப்புறம் உங்களோட இந்த அழகும் நிறமும், கல்யாணம் முடிஞ்ச பிறகு என்னை எப்பவுமே தாழ்வாவே உணர வைக்கும். அது என் கான்பிடன்ஸ்ஸை குறைச்சிரும். பின்னாடி அதுவே நமக்குள்ள பெரும் பிரச்சினையா வரலாம். அதனால என்னோட ஸ்டேடஸ்க்கும் அழகுக்கும் கலருக்கும் ஏத்த மாதிரி பையனை கட்டிக்கிறது தான் எனக்குச் சரி வரும் கார்த்தி" தெளிவாக உரைத்தவளாய் அங்கிருந்து அவள் நகர்ந்து விட, சற்றும் எதிர்பாராத இவளின் இந்தப் பதிலில் அப்படியே நின்று விட்டான் கார்த்திகேயன்.
வள்ளி அவளது இருச்சக்கர வாகனத்தை எடுக்கும் நேரம் அவளருகே சென்றவன், "இப்படி ஒரு பதிலை சுத்தமா எதிர்பாக்கலை வள்ளி. ஆனாலும் நீ சொன்னது எதுவுமே நமக்குள்ள பிரச்சனையா வராதுனு சொல்ல மாட்டேன். வந்தாலும் அதைச் சரி செய்ய நான் உறுதுணையா இருப்பேன்னு சொல்றேன். என்னிக்கும் என்னால உன்னோட கான்பிடன்ஸ் குறையாம பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு வள்ளி. அதனால என்னை வேண்டவே வேண்டாம்னு ஒதுக்காம கொஞ்சம் யோசிச்சு கன்சிடர் செய்யலாமே. உங்கப்பா அம்மா பேச்சை மீறி நீ எந்த முடிவும் எடுக்க மாட்டனு தெரியும் வள்ளி. அவங்ககிட்ட பேசு. இதை அரேஞ்ச் மேரேஜாவே கூட நாம செய்யலாம். உன்னை நான் காதலிக்கச் சொல்லலை. கல்யாணம் செய்யத் தான் கேட்கிறேன். கல்யாணம் செஞ்சிட்டு நாம காதலிக்கலாம்" இதழ் விரிந்த புன்னகையுடன் கூறியிருந்தான்.
இவளின் மனமோ வேண்டும் வேண்டாமென இருத்தலைக் கொள்ளியாய் குழப்பி விட, "கொஞ்சம் டைம் வேணும் கார்த்தி. யோசிச்சு சொல்றேன்" என்று அவள் உரைத்ததும், "ஹப்பாடா! ஐம் வெய்ட்டிங்" என்று சிரிப்புடன் பெருமூச்சு விட்டவனோ,
'உன்னை யோசிக்க வைக்கவே தொண்டை தண்ணி வத்த பேச வேண்டியது இருக்கே! இதுல உன்னை ஒத்துக்க வைக்க நான் இன்னும் என்னலாம் செய்யனுமோ' என்று மனத்தோடு நினைத்துக் கொண்டான்.
சின்னத் தலையசைப்புடன் தனது இருச்சக்கர வாகனத்தில் சென்றவளின் மனத்தை ஒருவித சிலிர்ப்பும் குழப்பமும் ஒருசேர சூழ்ந்திருந்தது.
இங்கே இவனின் மனமோ மகிழ்வில் துள்ளிக் குதிக்கத் தனது புல்லட் வாகனத்தை ஓட்டியவன் வீட்டை அடைந்ததும், விசில் அடித்தவனாய் அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் மூன்றாம் மாடியில் இருக்கும் தனது இல்லத்திற்குப் படிக்கட்டு வழியாய் தாவித் தாவி சென்றிருந்தான்.
முகத்தில் முழு மகிழ்வு பொங்க விசில் அடித்தவாறு வீட்டிற்குள் வந்த மகனைப் பார்த்த அவனின் தந்தை தாமோதரன், மனைவி பார்வதியைப் பார்த்து, 'என்னவாம்?' என்று ஜாடைக் காட்டிப் கேட்டார்.
உதட்டைப் பிதுக்கி தெரியவில்லை என்று சைகைச் செய்தவராய், "என்னடா மவனே, யார்கிட்டயாவது பிரபோஸ் செஞ்சிட்டு வந்திருக்கியா? செம்ம குஷியா இருக்கியே" என்று கேட்டார்.
"ம்மாஅஅஅ எப்படிமா?" இன்ப அதிர்வுடன் தாயைப் பார்த்து அவன் கேட்க,
"டேய் அப்ப நிஜமாவே பிரபோஸ் செஞ்சிட்டு தான் வந்திருக்கியாடா?" அதிர்ந்த பார்வையுடன் கேட்டிருந்தார் பார்வதி.
அப்பொழுது தான் வேலையில் இருந்து வந்தவராய் தனது காலணியைக் கழட்டி வைத்து விட்டு முன்னறையில் அயர்வாய் அமர்ந்திருந்த தாமோதரன், "எத்தனையாவது லவ்டா இது?" என்று கேட்டார்.
"ப்பாஅஅஅ இப்படிலாம் என்னை அசிங்கப்படுத்தாதீங்க. நான் என்னமோ பொண்ணுங்களை எல்லாம் லவ் செஞ்சி கழட்டி விட்ட மாதிரியே கேட்குறீங்களே? எனக்கு எந்தப் பொண்ணையாவது பிடிச்சிருந்தா, லவ் செய்யலாம்னு மனசுக்குள்ள தோணுச்சுனா பிரபோஸ் செஞ்சிடுவேன்ப்பா. அதுக்கு மேல அவங்களுக்குப் பிடிச்சி வந்தா மேரேஜ் இல்லனா பிரேக் அப்பு அவ்ளோ தான்" என்றவன் கூறவும்,
"அதான் கேட்கிறேன். இது வரைக்கும் எத்தனை பேருக்கு அப்படிப் பிரபோஸ் செஞ்சிருப்ப?" எனக் கேட்டார்.
"அதை ஏன்ப்பா கேட்குறீங்க? மனசெல்லாம் புண்ணா இருக்கு! இது வரைக்கும் அஞ்சு பேரைப் பிரபோஸ் செஞ்சிருக்கேன். அது என்னமோ எனக்குப் பிடிச்சிருக்கப் பொண்ணுங்களுக்குலாம் என்னைப் பிடிக்க மாட்டேங்குது! நான் காதலிக்கவா கேட்குறேன், கல்யாணம் செய்யத் தானே கேட்குறேன்" என்று பெருமூச்சு விட்டான் கார்த்திகேயன்.
பின்னாளில் இவ்விடயமே இவனின் இல்வாழ்வில் பெரும் பிரச்சினையாய் உருவெடுக்கப் போகிறது என்று அறியாதவனாய் விளையாட்டாய்ப் பேசியிருந்தான் கார்த்திகேயன்.
அதே நேரம் அங்கே தனது வீட்டிற்குச் சென்ற வள்ளி, தந்தையை ஓய்வெடுக்க வீட்டிற்கு அனுப்பி விட்டுக் கடையினில் அமர்ந்தாள்.
அச்சமயம் அங்கு வந்த அவளின் தாய், "உனக்குப் பூக்கட்டி வச்சிக்கப் பிடிக்குமேனு உதிரி மல்லிகை வாங்கினேன்மா. இந்தா உட்காருற நேரத்துல கட்டிக்கிட்டு இரு" என்று அவளிடம் உதிரி மல்லிகைப்பூக்களைக் கொடுத்தார்.
மல்லிகைப்பூக்களைக் கைகள் தொடுத்துக் கொண்டிருக்க, மனமோ கார்த்திகேயன் கூறியவற்றிலேயே உழன்றிருந்தது.
மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகை சூடிக் கொண்டேன்
சூப்பர் சிங்கர் பிரியங்காவின் குரலில் அவளது கைப்பேசியின் அழைப்பொலியாய் இப்பாடல் ஒலிக்கவும்,
அப்பாடல் தனது சூழலுக்கு ஏற்ப பொருந்துவதை எண்ணி மனத்தோடு சிரித்துக் கொண்டவளாய், 'என்னோட மன்னவனாய் கார்த்திகேயனை ஏத்துக்கலாமா முருகா? அவர் எனக்குச் செட் ஆவாரானு பயமா இருக்கு முருகா' என்று மனத்தோடு முருகரிடம் உரையாடினாள் வள்ளி.
'யாமிருக்கப் பயமேன்' என்று அந்தக் கடையில் மாட்டியிருந்த காலேண்டரில் இருந்து அருளினார் முருகப்பெருமான்.