Member
- Joined
- May 20, 2025
- Messages
- 67
- Thread Author
- #1
வள்ளி தனது தந்தையின் வீட்டிற்கு வந்து இரண்டு நாள்கள் கடந்திருந்தன.
அங்கே விருந்தினர் அறையில் தங்கியிருந்தவள் கணவனை நினைத்தவாறு படுத்திருந்தாள்.
ஒரே ஊரில் சில தெருக்கள் தள்ளியிருக்கும் வீட்டில் தன்னைத் தனித்து இருக்க விட்டு அவன் தங்கியிருப்பது அவளின் மனத்தை வெகுவாய் வருத்தியது. இந்த ஊருக்கு வந்து அவனில்லாது அவள் தனித்து உறங்கும் மூன்றாம் நாள் இது.
அன்று அவளை இங்கே விட்டு விட்டு முத்துப்பேச்சுவின் வீட்டிற்குச் சென்ற கார்த்திகேயனின் கண்கள் கலங்கிப் போயின. சென்னையில் தாய் தந்தையிடம் அவளை விட்டு விட்டு பெங்களூருக்குச் சென்ற போது கூட இப்படி அவனின் மனம் கவலைக் கொள்ளவில்லை. அப்பொழுது அவளின் மீதான கோபம் அதிகமாக இருந்ததால் இதனை உணரவில்லையா என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது, 'விட்டுட்டு போய்டுவியா' அவள் தன்னைப் பார்த்த பார்வை அவனை வதைத்தது.
'எல்லாம் உன் நல்லதுக்குத் தான் வள்ளி' மனத்தோடு கூறிக் கொண்டவன், வள்ளியின் பெட்டியையும் கணினிப்பையையும் முத்துப்பேச்சு வீட்டு வேலையாள் மூலம் கொடுத்து அனுப்பினான்.
'இதைக் கொடுக்கக் கூட வர முடியாதா அவருக்கு. அவரைக் கல்யாணம் செஞ்சது தப்புனு நான் சொன்னதை அவர் மறக்கலையா இன்னும்! என் மேல இருக்கும் கோபம் போகலையா அவருக்கு. என்னை மன்னிக்கவே மாட்டாரா?' என்று நினைத்தவாறு வள்ளி கண்ணீர் சிந்திய நேரம் அவளது கைப்பேசியில் புலனச் செய்தி வந்ததற்கான ஓசை வரவும் எடுத்துப் பார்த்தாள்.
"நான் உன்கிட்ட சொன்ன மாதிரியே உன்னை உன்னோட அப்பா அம்மாகிட்ட சேர்த்துட்டேன். என்கிட்ட வரனும்னு உனக்கு எப்ப தோணினாலும் வரலாம். உனக்காக நான் காத்திருப்பேன்" என்று கார்த்திகேயன் அனுப்பியிருந்த செய்தியை கண்ணீர் கண்களுடன் பார்த்தவளுக்கு உடனே அவனிடம் செல்ல வேண்டுமென மனம் பரபரத்தது.
கார்த்திகேயனுக்கு இதனைத் தட்டச்சு செய்யும் போதே மனம் வெகுவாய் வலித்தது. தன்னிடம் வராமல் போய்விடுவாளோ என்று லேசாய் மனம் நடுக்கம் கொண்டது. ஆனால் இனி ஒரு தடவை தன்னிடம் வந்த பிறகு தவறான முடிவை எடுத்து விட்டதாய் அவள் நினைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இதைச் செய்திருந்தான்.
அவனது புலனச் செய்தியை கண்ணீருடன் பார்த்தவாறு அமர்ந்திருந்தவள், 'அவரை இங்கே வந்து என் கூடத் தங்கச் சொல்லலாமா?' என்று யோசித்தவள் உடனே, 'இல்ல வேண்டாம் அப்பா அம்மாவோ இல்ல உதயாவோ அவரை ஏதாவது அவமரியாதையா பேசிட்டா சங்கடமா போய்டும். நானே ரெண்டு மூனு நாள் இருந்துட்டு போய்டுறேன்' என்று மனத்தைத் தேற்றியவளாய் தங்கிக் கொண்டாள்.
அவளின் தாயும் தந்தையும் அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டனர். உதயன் இயல்பாய் வரவேற்றுப் பேசியிருந்தான் அவளிடம்.
"ஏன்ப்பா சென்னையை விட்டுட்டு வந்துட்டீங்க?" என்று வள்ளி கேட்டதற்கு,
"எனக்குக் கடைசிக் காலத்துல நம்ம ஊருல இந்த வீட்டுல வந்து இருக்கனும்னு தான்மா ஆசை. எங்க ஒரே பொண்ணு நீயும் எங்களை விட்டு போய்ட்ட பிறகு யாருக்காக நாங்க சம்பாதிக்கனும்னு ஒரு விரக்தி. இங்கே வந்தாலாவது மனசுக்கு நிம்மதியா இருக்கும்னு தோணுச்சு. உதயாகிட்ட கேட்டேன். 'வாங்க மாமா, எனக்கும் ஒத்தாசையா இருக்கும்னு' சொன்னான். அதான் வந்துட்டோம்" என்றவர் பெருமூச்சுடன்,
"என்ன, நீ உதயாவைக் கட்டியிருந்தா இந்த வீட்டோட முழு அதிகாரமும் நம்மக்கிட்ட வந்திருக்கும். அக்காக்கும் எனக்கும் அப்பா இந்த வீட்டை பங்கு போட்டு உயில் எழுதி வச்சனால எங்களுக்குப் பிறகு இந்த வீடு உனக்கும் உதயாக்கும் தான் சொந்தமாகும். நீங்க இரண்டு பேரும் கல்யாணம் செஞ்சிருந்தா, நான் என் கடைசிக் காலத்தை இந்த வீட்டுல நிம்மதியா கழிச்சிருப்பேன்! இப்ப உதயாவை கட்டிக்கிறவ வந்து எங்களை எப்டி நடத்துவாளோ என்ன செய்வாளோனு யோசனையாவே இருக்கு" என்றார்.
வள்ளிக்கு தந்தையின் மன உணர்வுகள் புரிந்தாலும், அவளின் படிப்புக்கும் வேலைக்கும் உதயன் சுத்தமாகப் பொருந்தாத போதும், சொத்துக்காக உதயனைத் தனக்குக் கட்டி வைக்க நினைத்த தந்தையின் எண்ணத்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் மீதெழுந்த கோபமும் நம்பிக்கையின்மையும் தான் அவளை உடனே கார்த்திகேயனை மணம் புரிய வைத்திருந்தது.
இன்னுமே தந்தை இவ்வாறு பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவரின் பேச்சுக்கு எவ்வித கருத்தும் உரைக்காது அமைதியாகவே இருந்தாள்.
"கார்த்தி ஏன்மா உன்னை விட்டுட்டு போய்ட்டாரு? அவரும் இங்கேயே தங்கி இருக்கலாமே! அவருக்கும் உனக்கும் இடையில எதுவும் பிரச்சினையாமா?" என்று செல்வகுமார் கேட்டதும் பதறியவளாய், "அய்யோ அப்படிலாம் இல்லப்பா. அவருக்கு வேற முக்கியமான ஆபிஸ் வேலை இருக்குனு அவரோட ஆபிஸ் ஃப்ரண்ட் வீட்டுல தான் தங்கியிருக்காருப்பா" என்று கூறி சமாளித்து வைத்தாள்.
வள்ளியின் அன்னை முத்துலட்சுமி முதலில் பேசாது முறுக்கிக் கொண்டாலும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மகளிடம் இயல்பாய் பேசிக் கொண்டார்.
"அங்கே எல்லாரும் உன்கிட்ட நல்லா பழகுறாங்களா வள்ளி? உன்னை நல்லா பார்த்துக்கிறாங்க தானே" என்று அவளின் புகுந்த வீட்டினரைப் பற்றிக் கேட்டவரின் குரலில் மகள் நன்றாக வாழ வேண்டுமே என்ற பரிதவிப்பு இருந்தது.
அன்னையின் இந்த அக்கறையான பேச்சில், தன்னுடைய தாய் தனக்கு முழுவதுமாகத் திரும்பிக் கிடைத்த திருப்தி உண்டாக, "நீ இப்படிக் கேட்டது எவ்ளோ சந்தோஷமா இருக்குத் தெரியுமா? எங்கே என்னை முழுசா வெறுத்துட்டியோனு நினைச்சு எவ்ளோ வருத்தப்பட்டேன் தெரியுமாமா?" கண்ணீருடன் தாயின் கரங்களைப் பற்றியவாறு அவள் உரைக்கவும்,
"பெத்த வயிறும் மனசும் என்னிக்கும் கல்லாகிடாது வள்ளி" என்று மகளின் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்.
உதயன் ஏற்கனவே வீட்டு வேலையைச் செய்ய ஆள்களை வைத்திருந்தான். வீட்டின் சமையலை மல்லிகா என்ற பெண் கவனித்துக் கொண்டிருந்தாள். காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்கு வருபவள் இரவு வரை இருந்து அனைவரும் உண்டு முடித்த பின்பே செல்வாள்.
முத்துலட்சுமி மல்லிகாவிடம் மகளுக்குப் பிடித்த உணவுகளைப் பட்டியலிட்டுச் சமைக்கக் கூறினார்.
கிராமத்தில் வளர்ந்த பெண் போலல்லாது பட்டணத்தில் வளர்ந்த பெண் போன்ற உடுப்பும் நாசுக்கும் அழகும் கொண்ட மல்லிகாவைக் கண்டதும், 'என்னை இந்த வீட்டு சமையல்காரினு சொன்னா கூட நம்புவாங்க போல இந்தப் பொண்ணைச் சொன்னா நம்ப முடியலையே' என்று எண்ணிக் கொண்டவளாய்,
"நீங்க படிச்சிருக்கீங்களா மல்லிகா?" எனக் கேட்டாள் வள்ளி.
"இல்ல வள்ளி. பத்தாவது படிக்கும் போதே கட்டிக் கொடுத்துட்டாங்க. என் புருஷன் வெளிநாடுல மேஸ்திரி வேலை செய்றாரு. என் மவன் இப்ப எட்டாவது படிச்சிட்டு இருக்கான்" என்றார்.
"என்னது கல்யாணம் முடிஞ்சி அவ்ளோ பெரிய பையன் இருக்கானா? உங்களைப் பார்த்தா அப்படித் தெரியவே இல்லைக்கா" ஆச்சரியப் பாவனையில் வள்ளி கூறவும்,
"நம்மளை நாமளே பேணிப் பார்த்துக்கிட்டா எந்த வயசுலயும் இளமையா இருக்கலாம் வள்ளி. எனக்கு ஒன்னும் ஐம்பது வயசு இல்லயே. முப்பது வயசு தானே ஆகுது" என்று கூறிச் சிரித்தாள் மல்லிகா.
மல்லிகாவுக்கும் வள்ளிக்கும் இடையே நல்ல தோழமை உருவாகியிருந்தது.
வள்ளிக்குப் பிடித்தவற்றைச் சமைத்துக் கொடுத்து அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டார் மல்லிகா.
ஞாயிறன்று வள்ளி உதயா மற்றும் தனது பெற்றோருடன் குலத்தெய்வக் கோவிலுக்குச் சென்று வந்தாள். கார்த்திகேயனை அழைக்க மனம் துடித்த போதும், அவன் அந்தக் குறுஞ்செய்திக்குப் பிறகு இது வரை தன்னை அழைத்துப் பேசாததினால், அவனது மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாது அமைதிக் காத்தாள்.
இங்கே பெற்றோருடன் நேரத்தைச் செலவிட்டப்போதும், மனமெங்கிலும் அவனே வாசம் செய்திருந்தான்.
'இன்னிக்கு என்ன செஞ்சிருப்பாரோ? என்ன சாப்பிட்டிருப்பாரோ? எங்கே போயிருப்பாரோ? என் நினைப்பே இல்லயா அவருக்கு' என்று அவனைப் பற்றி நினைத்தவாறே தான் இவர்களுடன் இருந்தாள்.
அன்றிரவே கணவனிடம் செல்ல துடித்த மகளை மேலும் இரண்டு நாள்கள் இருந்து விட்டுச் செல்லுமாறு செல்வகுமார் பாசமாய்க் கேட்கவும், வேறு வழியில்லாமல் சம்மதித்தாள் வள்ளி.
திங்கட்கிழமை அவளுக்கு வீட்டிலிருந்தே பார்க்க வேண்டிய அலுவலக வேலைகள் வரிசைக்கட்டி நிற்க அதனுடனேயே மல்லுக்கட்டி இருந்தாள்.
வேலை எல்லாம் முடித்து இரவுணவை உண்டு விட்டுப் படுக்கையில் படுத்தவளுக்கு மூன்று நாள்களாகியும் கணவன் தன்னிடம் ஏதும் பேசாது இருப்பது நெஞ்சை வருத்தியது.
'என் ஞாபகமே இல்லயா அவருக்கு. எப்படி என்கிட்ட பேசாம இருக்காரு? என்னால முடியலையே' தலையணையை நனைத்தது அவளது கண்ணீர்.
'நீயே போன் செஞ்சி பேச வேண்டியது தானே. அவர் பண்ண வேண்டாம்னு சொன்னாரா என்ன?' அவளின் மனசாட்சி கேள்வி கேட்க,
'என்னை விட்டுட்டு போன பிறகு அந்த மெசேஜ் அனுப்பினதோட சரி. இது வரைக்கும் அவரா வந்து ஒரு போன் பண்ணலை அப்புறம் நான் ஏன் பண்ணனும்' என்று கோபத்துடன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்,
மனத்தை மடைமாற்ற நெடுநாள்களுக்குப் பிறகு இன்ஸ்டா பக்கத்தைத் திறந்தாள்.
அதில் கார்த்திகேயன் தனது பக்கத்தில் பதிவிட்டிருந்ததைப் பார்த்து அவளின் கண்கள் வியப்பில் விரிந்தன.
வார்த்தை தந்த
வலியில் தான்
விலகி இருந்தேன்
வெறுத்து அல்ல!
விரும்பி தான்
வாழ்க்கைத் துணையாக
உன் வலக்கரம் பிடித்தேன்
விட்டுச் செல்ல அல்ல!
விரும்பிய ஒன்றை உன்
விரலுக்குள் சேர்த்துவிட்டேன்
விடை தெரியாத வினாவாய்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக
வரமாக வந்த வள்ளியே
வருவேன் என்றும்
வழித்துணையாக
வாழ்நாள் முழுவதும்
இவன் என்றும்
வள்ளி மணவாளன்.
'வள்ளி மணவாளன்' அவளின் உதடுகள் பரவசத்துடன் உச்சரிக்க, மனத்திலிருந்த அத்தனை கவலைகளும் பறந்தோட, தித்திப்பாய் உணர்ந்தாள்.
'இவருக்குக் கவிதை எல்லாம் எழுத தெரியுமா? எப்ப எழுதியிருக்காரு இந்தக் கவிதையை?' என்று மனத்திலே நினைத்தவாறு பார்த்தாள்.
சனிக்கிழமை இவளை இங்கே விட்டுச் சென்ற அன்று தனது மனத்தை உணர்த்தவென எழுதியிருக்கிறான் என்று தேதியைப் பார்த்ததும் புரிந்து கொண்டாள்.
விரும்பிய ஒன்றை உன்
விரலுக்குள் சேர்த்துவிட்டேன்
'என் உணர்வுக்கும் பேச்சுக்கும் எந்தளவுக்கு மதிப்புக் கொடுத்திருக்காரு' நினைக்கும் போதே நெஞ்சம் பூரித்துப் போக,
விடை தெரியாத வினாவாய்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக
அதை மீண்டும் வாசித்தவளாய், 'நாளைக்கே இங்கிருந்து கிளம்பிடனும்' என்று முடிவெடுத்துக் கொண்டாள்.
அங்கே விருந்தினர் அறையில் தங்கியிருந்தவள் கணவனை நினைத்தவாறு படுத்திருந்தாள்.
ஒரே ஊரில் சில தெருக்கள் தள்ளியிருக்கும் வீட்டில் தன்னைத் தனித்து இருக்க விட்டு அவன் தங்கியிருப்பது அவளின் மனத்தை வெகுவாய் வருத்தியது. இந்த ஊருக்கு வந்து அவனில்லாது அவள் தனித்து உறங்கும் மூன்றாம் நாள் இது.
அன்று அவளை இங்கே விட்டு விட்டு முத்துப்பேச்சுவின் வீட்டிற்குச் சென்ற கார்த்திகேயனின் கண்கள் கலங்கிப் போயின. சென்னையில் தாய் தந்தையிடம் அவளை விட்டு விட்டு பெங்களூருக்குச் சென்ற போது கூட இப்படி அவனின் மனம் கவலைக் கொள்ளவில்லை. அப்பொழுது அவளின் மீதான கோபம் அதிகமாக இருந்ததால் இதனை உணரவில்லையா என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது, 'விட்டுட்டு போய்டுவியா' அவள் தன்னைப் பார்த்த பார்வை அவனை வதைத்தது.
'எல்லாம் உன் நல்லதுக்குத் தான் வள்ளி' மனத்தோடு கூறிக் கொண்டவன், வள்ளியின் பெட்டியையும் கணினிப்பையையும் முத்துப்பேச்சு வீட்டு வேலையாள் மூலம் கொடுத்து அனுப்பினான்.
'இதைக் கொடுக்கக் கூட வர முடியாதா அவருக்கு. அவரைக் கல்யாணம் செஞ்சது தப்புனு நான் சொன்னதை அவர் மறக்கலையா இன்னும்! என் மேல இருக்கும் கோபம் போகலையா அவருக்கு. என்னை மன்னிக்கவே மாட்டாரா?' என்று நினைத்தவாறு வள்ளி கண்ணீர் சிந்திய நேரம் அவளது கைப்பேசியில் புலனச் செய்தி வந்ததற்கான ஓசை வரவும் எடுத்துப் பார்த்தாள்.
"நான் உன்கிட்ட சொன்ன மாதிரியே உன்னை உன்னோட அப்பா அம்மாகிட்ட சேர்த்துட்டேன். என்கிட்ட வரனும்னு உனக்கு எப்ப தோணினாலும் வரலாம். உனக்காக நான் காத்திருப்பேன்" என்று கார்த்திகேயன் அனுப்பியிருந்த செய்தியை கண்ணீர் கண்களுடன் பார்த்தவளுக்கு உடனே அவனிடம் செல்ல வேண்டுமென மனம் பரபரத்தது.
கார்த்திகேயனுக்கு இதனைத் தட்டச்சு செய்யும் போதே மனம் வெகுவாய் வலித்தது. தன்னிடம் வராமல் போய்விடுவாளோ என்று லேசாய் மனம் நடுக்கம் கொண்டது. ஆனால் இனி ஒரு தடவை தன்னிடம் வந்த பிறகு தவறான முடிவை எடுத்து விட்டதாய் அவள் நினைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் இதைச் செய்திருந்தான்.
அவனது புலனச் செய்தியை கண்ணீருடன் பார்த்தவாறு அமர்ந்திருந்தவள், 'அவரை இங்கே வந்து என் கூடத் தங்கச் சொல்லலாமா?' என்று யோசித்தவள் உடனே, 'இல்ல வேண்டாம் அப்பா அம்மாவோ இல்ல உதயாவோ அவரை ஏதாவது அவமரியாதையா பேசிட்டா சங்கடமா போய்டும். நானே ரெண்டு மூனு நாள் இருந்துட்டு போய்டுறேன்' என்று மனத்தைத் தேற்றியவளாய் தங்கிக் கொண்டாள்.
அவளின் தாயும் தந்தையும் அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டனர். உதயன் இயல்பாய் வரவேற்றுப் பேசியிருந்தான் அவளிடம்.
"ஏன்ப்பா சென்னையை விட்டுட்டு வந்துட்டீங்க?" என்று வள்ளி கேட்டதற்கு,
"எனக்குக் கடைசிக் காலத்துல நம்ம ஊருல இந்த வீட்டுல வந்து இருக்கனும்னு தான்மா ஆசை. எங்க ஒரே பொண்ணு நீயும் எங்களை விட்டு போய்ட்ட பிறகு யாருக்காக நாங்க சம்பாதிக்கனும்னு ஒரு விரக்தி. இங்கே வந்தாலாவது மனசுக்கு நிம்மதியா இருக்கும்னு தோணுச்சு. உதயாகிட்ட கேட்டேன். 'வாங்க மாமா, எனக்கும் ஒத்தாசையா இருக்கும்னு' சொன்னான். அதான் வந்துட்டோம்" என்றவர் பெருமூச்சுடன்,
"என்ன, நீ உதயாவைக் கட்டியிருந்தா இந்த வீட்டோட முழு அதிகாரமும் நம்மக்கிட்ட வந்திருக்கும். அக்காக்கும் எனக்கும் அப்பா இந்த வீட்டை பங்கு போட்டு உயில் எழுதி வச்சனால எங்களுக்குப் பிறகு இந்த வீடு உனக்கும் உதயாக்கும் தான் சொந்தமாகும். நீங்க இரண்டு பேரும் கல்யாணம் செஞ்சிருந்தா, நான் என் கடைசிக் காலத்தை இந்த வீட்டுல நிம்மதியா கழிச்சிருப்பேன்! இப்ப உதயாவை கட்டிக்கிறவ வந்து எங்களை எப்டி நடத்துவாளோ என்ன செய்வாளோனு யோசனையாவே இருக்கு" என்றார்.
வள்ளிக்கு தந்தையின் மன உணர்வுகள் புரிந்தாலும், அவளின் படிப்புக்கும் வேலைக்கும் உதயன் சுத்தமாகப் பொருந்தாத போதும், சொத்துக்காக உதயனைத் தனக்குக் கட்டி வைக்க நினைத்த தந்தையின் எண்ணத்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் மீதெழுந்த கோபமும் நம்பிக்கையின்மையும் தான் அவளை உடனே கார்த்திகேயனை மணம் புரிய வைத்திருந்தது.
இன்னுமே தந்தை இவ்வாறு பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவரின் பேச்சுக்கு எவ்வித கருத்தும் உரைக்காது அமைதியாகவே இருந்தாள்.
"கார்த்தி ஏன்மா உன்னை விட்டுட்டு போய்ட்டாரு? அவரும் இங்கேயே தங்கி இருக்கலாமே! அவருக்கும் உனக்கும் இடையில எதுவும் பிரச்சினையாமா?" என்று செல்வகுமார் கேட்டதும் பதறியவளாய், "அய்யோ அப்படிலாம் இல்லப்பா. அவருக்கு வேற முக்கியமான ஆபிஸ் வேலை இருக்குனு அவரோட ஆபிஸ் ஃப்ரண்ட் வீட்டுல தான் தங்கியிருக்காருப்பா" என்று கூறி சமாளித்து வைத்தாள்.
வள்ளியின் அன்னை முத்துலட்சுமி முதலில் பேசாது முறுக்கிக் கொண்டாலும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மகளிடம் இயல்பாய் பேசிக் கொண்டார்.
"அங்கே எல்லாரும் உன்கிட்ட நல்லா பழகுறாங்களா வள்ளி? உன்னை நல்லா பார்த்துக்கிறாங்க தானே" என்று அவளின் புகுந்த வீட்டினரைப் பற்றிக் கேட்டவரின் குரலில் மகள் நன்றாக வாழ வேண்டுமே என்ற பரிதவிப்பு இருந்தது.
அன்னையின் இந்த அக்கறையான பேச்சில், தன்னுடைய தாய் தனக்கு முழுவதுமாகத் திரும்பிக் கிடைத்த திருப்தி உண்டாக, "நீ இப்படிக் கேட்டது எவ்ளோ சந்தோஷமா இருக்குத் தெரியுமா? எங்கே என்னை முழுசா வெறுத்துட்டியோனு நினைச்சு எவ்ளோ வருத்தப்பட்டேன் தெரியுமாமா?" கண்ணீருடன் தாயின் கரங்களைப் பற்றியவாறு அவள் உரைக்கவும்,
"பெத்த வயிறும் மனசும் என்னிக்கும் கல்லாகிடாது வள்ளி" என்று மகளின் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்.
உதயன் ஏற்கனவே வீட்டு வேலையைச் செய்ய ஆள்களை வைத்திருந்தான். வீட்டின் சமையலை மல்லிகா என்ற பெண் கவனித்துக் கொண்டிருந்தாள். காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்கு வருபவள் இரவு வரை இருந்து அனைவரும் உண்டு முடித்த பின்பே செல்வாள்.
முத்துலட்சுமி மல்லிகாவிடம் மகளுக்குப் பிடித்த உணவுகளைப் பட்டியலிட்டுச் சமைக்கக் கூறினார்.
கிராமத்தில் வளர்ந்த பெண் போலல்லாது பட்டணத்தில் வளர்ந்த பெண் போன்ற உடுப்பும் நாசுக்கும் அழகும் கொண்ட மல்லிகாவைக் கண்டதும், 'என்னை இந்த வீட்டு சமையல்காரினு சொன்னா கூட நம்புவாங்க போல இந்தப் பொண்ணைச் சொன்னா நம்ப முடியலையே' என்று எண்ணிக் கொண்டவளாய்,
"நீங்க படிச்சிருக்கீங்களா மல்லிகா?" எனக் கேட்டாள் வள்ளி.
"இல்ல வள்ளி. பத்தாவது படிக்கும் போதே கட்டிக் கொடுத்துட்டாங்க. என் புருஷன் வெளிநாடுல மேஸ்திரி வேலை செய்றாரு. என் மவன் இப்ப எட்டாவது படிச்சிட்டு இருக்கான்" என்றார்.
"என்னது கல்யாணம் முடிஞ்சி அவ்ளோ பெரிய பையன் இருக்கானா? உங்களைப் பார்த்தா அப்படித் தெரியவே இல்லைக்கா" ஆச்சரியப் பாவனையில் வள்ளி கூறவும்,
"நம்மளை நாமளே பேணிப் பார்த்துக்கிட்டா எந்த வயசுலயும் இளமையா இருக்கலாம் வள்ளி. எனக்கு ஒன்னும் ஐம்பது வயசு இல்லயே. முப்பது வயசு தானே ஆகுது" என்று கூறிச் சிரித்தாள் மல்லிகா.
மல்லிகாவுக்கும் வள்ளிக்கும் இடையே நல்ல தோழமை உருவாகியிருந்தது.
வள்ளிக்குப் பிடித்தவற்றைச் சமைத்துக் கொடுத்து அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டார் மல்லிகா.
ஞாயிறன்று வள்ளி உதயா மற்றும் தனது பெற்றோருடன் குலத்தெய்வக் கோவிலுக்குச் சென்று வந்தாள். கார்த்திகேயனை அழைக்க மனம் துடித்த போதும், அவன் அந்தக் குறுஞ்செய்திக்குப் பிறகு இது வரை தன்னை அழைத்துப் பேசாததினால், அவனது மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாது அமைதிக் காத்தாள்.
இங்கே பெற்றோருடன் நேரத்தைச் செலவிட்டப்போதும், மனமெங்கிலும் அவனே வாசம் செய்திருந்தான்.
'இன்னிக்கு என்ன செஞ்சிருப்பாரோ? என்ன சாப்பிட்டிருப்பாரோ? எங்கே போயிருப்பாரோ? என் நினைப்பே இல்லயா அவருக்கு' என்று அவனைப் பற்றி நினைத்தவாறே தான் இவர்களுடன் இருந்தாள்.
அன்றிரவே கணவனிடம் செல்ல துடித்த மகளை மேலும் இரண்டு நாள்கள் இருந்து விட்டுச் செல்லுமாறு செல்வகுமார் பாசமாய்க் கேட்கவும், வேறு வழியில்லாமல் சம்மதித்தாள் வள்ளி.
திங்கட்கிழமை அவளுக்கு வீட்டிலிருந்தே பார்க்க வேண்டிய அலுவலக வேலைகள் வரிசைக்கட்டி நிற்க அதனுடனேயே மல்லுக்கட்டி இருந்தாள்.
வேலை எல்லாம் முடித்து இரவுணவை உண்டு விட்டுப் படுக்கையில் படுத்தவளுக்கு மூன்று நாள்களாகியும் கணவன் தன்னிடம் ஏதும் பேசாது இருப்பது நெஞ்சை வருத்தியது.
'என் ஞாபகமே இல்லயா அவருக்கு. எப்படி என்கிட்ட பேசாம இருக்காரு? என்னால முடியலையே' தலையணையை நனைத்தது அவளது கண்ணீர்.
'நீயே போன் செஞ்சி பேச வேண்டியது தானே. அவர் பண்ண வேண்டாம்னு சொன்னாரா என்ன?' அவளின் மனசாட்சி கேள்வி கேட்க,
'என்னை விட்டுட்டு போன பிறகு அந்த மெசேஜ் அனுப்பினதோட சரி. இது வரைக்கும் அவரா வந்து ஒரு போன் பண்ணலை அப்புறம் நான் ஏன் பண்ணனும்' என்று கோபத்துடன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்,
மனத்தை மடைமாற்ற நெடுநாள்களுக்குப் பிறகு இன்ஸ்டா பக்கத்தைத் திறந்தாள்.
அதில் கார்த்திகேயன் தனது பக்கத்தில் பதிவிட்டிருந்ததைப் பார்த்து அவளின் கண்கள் வியப்பில் விரிந்தன.
வார்த்தை தந்த
வலியில் தான்
விலகி இருந்தேன்
வெறுத்து அல்ல!
விரும்பி தான்
வாழ்க்கைத் துணையாக
உன் வலக்கரம் பிடித்தேன்
விட்டுச் செல்ல அல்ல!
விரும்பிய ஒன்றை உன்
விரலுக்குள் சேர்த்துவிட்டேன்
விடை தெரியாத வினாவாய்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக
வரமாக வந்த வள்ளியே
வருவேன் என்றும்
வழித்துணையாக
வாழ்நாள் முழுவதும்
இவன் என்றும்
வள்ளி மணவாளன்.
'வள்ளி மணவாளன்' அவளின் உதடுகள் பரவசத்துடன் உச்சரிக்க, மனத்திலிருந்த அத்தனை கவலைகளும் பறந்தோட, தித்திப்பாய் உணர்ந்தாள்.
'இவருக்குக் கவிதை எல்லாம் எழுத தெரியுமா? எப்ப எழுதியிருக்காரு இந்தக் கவிதையை?' என்று மனத்திலே நினைத்தவாறு பார்த்தாள்.
சனிக்கிழமை இவளை இங்கே விட்டுச் சென்ற அன்று தனது மனத்தை உணர்த்தவென எழுதியிருக்கிறான் என்று தேதியைப் பார்த்ததும் புரிந்து கொண்டாள்.
விரும்பிய ஒன்றை உன்
விரலுக்குள் சேர்த்துவிட்டேன்
'என் உணர்வுக்கும் பேச்சுக்கும் எந்தளவுக்கு மதிப்புக் கொடுத்திருக்காரு' நினைக்கும் போதே நெஞ்சம் பூரித்துப் போக,
விடை தெரியாத வினாவாய்
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக
அதை மீண்டும் வாசித்தவளாய், 'நாளைக்கே இங்கிருந்து கிளம்பிடனும்' என்று முடிவெடுத்துக் கொண்டாள்.