Member
- Joined
- May 20, 2025
- Messages
- 67
- Thread Author
- #1
"உங்கப்பா அம்மாவை கண்டுபிடிச்சி உன் கூடச் சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. அதுக்குப் பிறகு என் கூட இருக்கிறதும் இல்லாம போறதும் உன் முடிவு தான் வள்ளி"
அன்று சண்டையிட்டப் போது கார்த்திகேயன் உரைத்தது இவளின் காதில் ரீங்காரமிட, தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் நிற்க வைத்திருக்கும் கணவரைக் கலக்கத்துடன் பார்த்திருந்தாள் வள்ளி.
அவளின் தாயும் தந்தையும் தூத்துக்குடியில் இருப்பதாகத் தான் அவர்களின் கடையை வாடகைக்கு எடுத்திருப்பவர் உரைத்திருந்தார்.
அதனால் கார்த்திகேயன் தன்னைத் தனது பெற்றோரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காகவே அழைத்து வந்திருக்கிறோனோ என்று எண்ணி பதட்டம் கொண்டது அவளுள்ளம்.
தூரமாய் யாரோ ஒருவருக்குக் கைக்காட்டிய கார்த்திகேயன், அவர் தன்னருகில் வருவதற்குள், "நான் பெங்களூர்ல இருந்தப்ப இவர் கூடத் தான் ரூம் ஷேரிங்ல தங்கியிருந்தேன் வள்ளி. பேசும் போது தான் இவருக்கும் தூத்துக்குடித் தான் சொந்த ஊருனு தெரிஞ்சிது. இப்ப அவர் வீட்டுக்குத் தான் போகப் போறோம்" என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்து நின்ற நண்பரிடம் வள்ளியை அறிமுகம் செய்து வைத்த கார்த்திகேயன், "இவர் பேரு முத்துப்பேச்சு" என்று வள்ளிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
முத்துப்பேச்சுக் கொண்டு வந்த மகிழுந்தில் பயணித்து ஊரை நெருங்கும் போதே, 'இவர் என்ன? அப்பாவோட ஊருக்குள்ள போறாரு?' எண்ணியவாறு பதைபதைப்புடன் பார்த்திருந்தாள் வள்ளி.
அவரது இல்லத்தை அடைந்திருந்த போது, 'அய்யய்யோ அப்பாவோட பாரம்பரிய வீடு இங்கே பக்கத்துல சில தெரு தள்ளித் தானே இருக்கு! அப்ப நிஜமாவே என்னை இங்கே விட்டுட்டுப் போகத் தான் கூட்டிட்டு வந்திருக்காரா?' மனத்தோடு எண்ணியவளின் உள்ளங்கை பயத்திலும் பதட்டத்திலும் சில்லிட்டுப் போயின.
மகிழுந்தில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றவுடன், "இவங்க என் மனைவி காமாட்சி. இவ என் பொண்ணு எழிலரசி" முத்துப்பேச்சு தனது மனைவியையும் நான்கு வயது மகளையும் அறிமுகம் செய்து வைத்து விட்டு இவர்கள் தங்குவதற்கான அறையைக் காண்பித்தார்.
பெங்களூரில் முத்துப்பேச்சிடம் பேசும் போது வள்ளியின் சொந்த ஊர் தான் அவருக்கும் என்று அறிந்த கார்த்திகேயன், வள்ளியின் தந்தைப் பெயரையும் உதயனின் பெயரையும் அவனது வியாபாரத்தையும் வைத்து விசாரித்தப் போது தான் வள்ளியின் தந்தையும் தாயும் இங்கே இருப்பதை அறிந்து கொண்டான்.
கார்த்திகேயன் முத்துப்பேச்சுவிடம் ஏதோ பேசியவாறு நின்றிருக்க, அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்த வள்ளியின் மனசாட்சியோ, 'அப்படி விட்டுட்டு போறவன் தான் பஸ்ல உன்னைக் கைக்குள்ளயே வச்சி தூங்க வச்சானா? பாதுகாப்பா பார்த்துக்கிட்டானா? அவ்ளோ பாசம் காட்டுறவனால எப்டி உன்னை விட்டுட்டு போக முடியும். அவனோட உசுரே நீதான்' என்று தேற்றிய நொடி,
உசுரே நீதானே நீதானே
நிழலா உன் கூட நானே
அறைக்குள் நுழைந்த கார்த்திகேயனின் அலைபேசி ஒலித்தது.
'இவர் எப்ப இந்த ரிங்டோனை மாத்தினாரு? எனக்காக மாத்திருப்பாரோ?' என்று யோசித்தவாறு கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளைப் பார்த்து,
"குளிச்சிட்டு வா வள்ளி! ஒரு முக்கியமான இடத்துக்குப் போறோம் இன்னிக்கு" என்றவன் கைப்பேசியில் பேசியவாறே அறையை விட்டு வெளியே வந்தான்.
'ஹ்ம்ம் அப்பா அம்மாவைப் பார்க்க மட்டும் வேணா கூட்டிட்டுப் போவாரா இருக்கும். என்னை அப்படி ஒன்னும் விட்டுட்டுலாம் வந்துட மாட்டாரு' என்று மனத்தைத் தேற்றியவளாய் என்ன உடை உடுக்கலாம் என்று பெட்டியைப் பார்த்தவாறு நின்றிருந்த போது உள்ளே வந்த கார்த்திகேயன், "நீ இன்னும் குளிக்கப் போகலையா?" எனக் கேட்டான்.
"என்ன டிரெஸ் போடுறதுனு பார்த்துட்டு இருக்கேன்" என்றவள் உரைத்ததைக் கேட்டு பெட்டியைப் பார்த்தவன், தான் அவளுக்கு முன்பு வாங்கிக் கொடுத்திருந்த காட்டன் புடவையை எடுத்துக் கொடுத்து அதை உடுத்தக் கூறினான்.
அவன் தன்னிடம் இயல்பாய் பேசியதில் கண்கள் மின்ன சரியென்றவளாய் மகிழ்வுடன் கிளம்ப ஆயத்தமானாள் வள்ளி.
நைட்டியை அணிந்தவளாய் குளியலறையில் இருந்து வெளியே வந்த வள்ளி, அறையில் கார்த்திகேயன் இல்லாது இருப்பதைப் பார்த்து விட்டு கதவைப் பூட்டிவிட்டு புடவை உடுத்தத் தொடங்கினாள்.
கார்த்திகேயன் கதவைத் தட்டவும், முந்தானையைப் பின் செய்து கீழே மடிப்பு வைத்துக் கொண்டிருந்தவள் கைகளில் அதனை அள்ளிக் கொண்டு நடந்தவளாய் சென்று கதவைத் திறந்தாள்.
அறைக்குள் நுழைந்தவன் அவள் குனிந்து மடிப்பை இழுத்து விடச் சிரமப்படுவதைப் பார்த்து, அவள் அருகில் சென்று அவளின் கால் கீழே முட்டியிட்டு, "இரு நான் சரி செய்றேன்" என்றவனாய் அழகாய் நேர்த்தியாய் இழுத்து விட்டான்.
கணவனின் இந்தச் செயலில் அவளின் உள்ளம் நெகிழ்ந்து போக, "இப்ப எப்படி இருக்கு?" மண்டியிட்டவாறே நிமிர்ந்து அவள் முகம் பார்த்துக் கேட்ட கணவனின் முன் நெற்றியில் தன்னை மீறி முத்தமிட்டாள் வள்ளி.
சட்டென அவன் கண்களில் நீர் பொங்கி வர, அவளிடம் அதைக் காட்ட விரும்பாதவனாய் விறுவிறுவெனக் குளியலறைக்குள் புகுந்து கொண்டான் கார்த்திகேயன்.
'இவக்கிட்ட மட்டும் நான் ஏன் இப்படி உடஞ்சி போறேன்' என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவனாய் குளியலறையில் இருந்தவாறு கட்டுக்குள் வர இவன் முயன்று கொண்டிருக்க,
இவளோ, தான் முத்தமிட்டதும் அவன் இவ்வாறு சென்றதில், தான் முத்தம் கொடுத்தது பிடிக்காமல் தான் இப்படிச் சென்று விட்டான் என்று எண்ணி வருந்தினாள்.
'நான் ஹனிமூன்ல அவரைத் தொட வேண்டாம்னு சொன்ன கோபம் இன்னும் போகலையா அவருக்கு? அதுக்குப் பிறகு அவர் என் பக்கமே வரவே இல்லையே' சட்டென அவளின் உற்சாகம் அனைத்தும் வடிந்து போன உணர்வில் பாரமான மனத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
குளித்து முடித்து வெளியே வந்த பிறகும் அவளிடம் ஏதும் பேசவில்லை அவன். அவளோ தனது உடையையும் அலங்காரத்தையும் பார்த்து அவன் ஏதேனும் சொல்வான் என்று ஆவலுடன் அவன் முகத்தைப் பார்த்தவாறே கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
அவளின் எதிர்பார்ப்பு புரிந்தும் அவனோ சிரத்தையுடன் தான் கிளம்புவதில் முனைப்பாய் இருப்பது போல் காண்பித்துக் கொண்டான். அதில் மேலும் மனம் சுணங்கிப் போனது அவளுக்கு.
அடுத்தச் சில மணி நேரத்தில் இருவரும் தயாராகி வெளியே வர, முத்துப்பேச்சுவின் மனைவி காமாட்சி இருவருக்கும் காலை உணவினைப் பரிமாறினார். முத்துப்பேச்சு வெளி வேலையாகச் சென்றிருந்தார்.
"அக்கா உங்களுக்கு இந்த ஊரு தானா?" எனக் கேட்டான் கார்த்திகேயன்.
"இல்லங்க தம்பி. திருநெல்வேலி தான் நான் பொறந்த ஊரு. வாக்கப்பட்ட பொறவு இங்கே வந்தாச்சு" என்றவர் சொன்னதைக் கேட்டவன்,
"என் பொண்டாட்டிக்கு இது தான் பொறந்த ஊரு" என்றான்.
சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள் வள்ளி.
'அப்ப தெரிஞ்சி தான் கூட்டிட்டு வந்திருக்காரா?' எண்ணியவாறே உண்டு கொண்டிருந்தாள்.
"அப்படியா! அப்பனா நீங்க எங்களுக்குச் சொக்காரவியலா வருவியளோ? இங்கன எந்த ஊரு வள்ளி?" என்று ஆவலுடன் அவர் கேட்க,
வள்ளி அந்த ஊர் பெயரைச் சொன்னதும் ஆச்சரியப்பட்டுப் போனவராய், "இந்த ஊர் தானா உனக்கு? இங்கன எந்த வீட்டு ஆளுங்க பிள்ளை நீயி?" எனக் கேட்டார்.
"திரவியம் குடும்பம். அவங்க பையன் தான் என் அப்பா. அவங்க பொண்ணோட பையன் உதயா தான் இப்ப எங்க பாரம்பரிய வீட்டுல இருக்கான்" என்றவள் சொன்னதும் அவரின் முகத்தில் அதிருப்தியான முகப்பாவனைக் கண்டு இவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆயினும் தனது பாவனையை உடனே மாற்றிக் கொண்டவராய் காமாட்சி அவர்களிடம் ஏதோ கேட்க வந்து உடனே நிறுத்திக் கொள்ள,
"என்னக்கா ஏதோ கேட்க வந்துட்டு நிறுத்திட்டீங்க? என்ன கேட்கனும்னு நினைச்சீங்க?" என்று கேட்டான் கார்த்திகேயன்.
"கேட்குறேன்னு தப்பா நினைக்காதீய! அந்த வீடு இரண்டு தெரு தள்ளி தானே இருக்கு! அப்புறம் எதுக்கு இங்கன வந்து தங்கியிருக்கீய?" எனக் கேட்டார்.
"நாங்க லவ் மேரேஜ் செஞ்சிக்கிட்டோம்னு எங்களை வீட்டை விட்டு ஒதுக்கி வச்சிட்டாங்க அக்கா" என்று கார்த்திகேயன் உரைத்ததைக் கேட்டு ஜீரணிக்க முடியாதவராய்,
"இதென்ன அநியாயமா இருக்கு! ஊருக்குத் தெரியுற மாதிரி காதலிச்சவனைக் கட்டிக்கிறது தப்பு ஆனா ஊருக்குத் தெரியாம ஒரு பொண்ணுக் கூட வாழுறது தப்பில்லையோ?" உணர்ச்சி மிகுதியில் பட்டென உரைத்து விட்டவர் பின் நாக்கைக் கடித்துக் கொண்டார்.
கார்த்திகேயனும் வள்ளியும் கேள்வியாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவருக்குமே அவர் யாரைப் பற்றிப் பேசுகிறார் என்று புரியவில்லை.
"யாரை சொல்றீங்க அக்கா? யாரு ஊருக்குத் தெரியாம பொண்ணோட வாழுறாங்க?" எனக் கேட்டான் கார்த்திகேயன்.
"இல்ல தம்பி. அது வேணாம் விடுங்க. அப்புறம் உங்க சொக்காரவியல நான் தப்பா சொன்னேன்னு பழியாகிடும். நீங்க இங்கன இருக்க வரைக்கும் உங்களை நல்லா கவனிச்சிட வேண்டியது எங்க பொறுப்பு தானே. மனஸ்தாபம் ஆகிடக் கூடாது பாருங்க" என்று கூறி விட்டு சமையலறைக்குள் சென்று விட்டார்.
இருவரும் உண்டு முடித்த சமயம் முத்துப்பேச்சு வரவும், அவனது ஈருருளியைக் கேட்டு வாங்கிக் கொண்டான் கார்த்திகேயன்.
அவனது ஈருருளியில் இருவரும் பயணித்த போது, எங்கோ கோவிலுக்குத் தான் அழைத்துச் செல்லப் போகிறான் என்று நினைத்திருந்தாள் வள்ளி.
அன்று சண்டையிட்டப் போது கார்த்திகேயன் உரைத்தது இவளின் காதில் ரீங்காரமிட, தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் நிற்க வைத்திருக்கும் கணவரைக் கலக்கத்துடன் பார்த்திருந்தாள் வள்ளி.
அவளின் தாயும் தந்தையும் தூத்துக்குடியில் இருப்பதாகத் தான் அவர்களின் கடையை வாடகைக்கு எடுத்திருப்பவர் உரைத்திருந்தார்.
அதனால் கார்த்திகேயன் தன்னைத் தனது பெற்றோரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காகவே அழைத்து வந்திருக்கிறோனோ என்று எண்ணி பதட்டம் கொண்டது அவளுள்ளம்.
தூரமாய் யாரோ ஒருவருக்குக் கைக்காட்டிய கார்த்திகேயன், அவர் தன்னருகில் வருவதற்குள், "நான் பெங்களூர்ல இருந்தப்ப இவர் கூடத் தான் ரூம் ஷேரிங்ல தங்கியிருந்தேன் வள்ளி. பேசும் போது தான் இவருக்கும் தூத்துக்குடித் தான் சொந்த ஊருனு தெரிஞ்சிது. இப்ப அவர் வீட்டுக்குத் தான் போகப் போறோம்" என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்து நின்ற நண்பரிடம் வள்ளியை அறிமுகம் செய்து வைத்த கார்த்திகேயன், "இவர் பேரு முத்துப்பேச்சு" என்று வள்ளிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
முத்துப்பேச்சுக் கொண்டு வந்த மகிழுந்தில் பயணித்து ஊரை நெருங்கும் போதே, 'இவர் என்ன? அப்பாவோட ஊருக்குள்ள போறாரு?' எண்ணியவாறு பதைபதைப்புடன் பார்த்திருந்தாள் வள்ளி.
அவரது இல்லத்தை அடைந்திருந்த போது, 'அய்யய்யோ அப்பாவோட பாரம்பரிய வீடு இங்கே பக்கத்துல சில தெரு தள்ளித் தானே இருக்கு! அப்ப நிஜமாவே என்னை இங்கே விட்டுட்டுப் போகத் தான் கூட்டிட்டு வந்திருக்காரா?' மனத்தோடு எண்ணியவளின் உள்ளங்கை பயத்திலும் பதட்டத்திலும் சில்லிட்டுப் போயின.
மகிழுந்தில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றவுடன், "இவங்க என் மனைவி காமாட்சி. இவ என் பொண்ணு எழிலரசி" முத்துப்பேச்சு தனது மனைவியையும் நான்கு வயது மகளையும் அறிமுகம் செய்து வைத்து விட்டு இவர்கள் தங்குவதற்கான அறையைக் காண்பித்தார்.
பெங்களூரில் முத்துப்பேச்சிடம் பேசும் போது வள்ளியின் சொந்த ஊர் தான் அவருக்கும் என்று அறிந்த கார்த்திகேயன், வள்ளியின் தந்தைப் பெயரையும் உதயனின் பெயரையும் அவனது வியாபாரத்தையும் வைத்து விசாரித்தப் போது தான் வள்ளியின் தந்தையும் தாயும் இங்கே இருப்பதை அறிந்து கொண்டான்.
கார்த்திகேயன் முத்துப்பேச்சுவிடம் ஏதோ பேசியவாறு நின்றிருக்க, அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்த வள்ளியின் மனசாட்சியோ, 'அப்படி விட்டுட்டு போறவன் தான் பஸ்ல உன்னைக் கைக்குள்ளயே வச்சி தூங்க வச்சானா? பாதுகாப்பா பார்த்துக்கிட்டானா? அவ்ளோ பாசம் காட்டுறவனால எப்டி உன்னை விட்டுட்டு போக முடியும். அவனோட உசுரே நீதான்' என்று தேற்றிய நொடி,
உசுரே நீதானே நீதானே
நிழலா உன் கூட நானே
அறைக்குள் நுழைந்த கார்த்திகேயனின் அலைபேசி ஒலித்தது.
'இவர் எப்ப இந்த ரிங்டோனை மாத்தினாரு? எனக்காக மாத்திருப்பாரோ?' என்று யோசித்தவாறு கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளைப் பார்த்து,
"குளிச்சிட்டு வா வள்ளி! ஒரு முக்கியமான இடத்துக்குப் போறோம் இன்னிக்கு" என்றவன் கைப்பேசியில் பேசியவாறே அறையை விட்டு வெளியே வந்தான்.
'ஹ்ம்ம் அப்பா அம்மாவைப் பார்க்க மட்டும் வேணா கூட்டிட்டுப் போவாரா இருக்கும். என்னை அப்படி ஒன்னும் விட்டுட்டுலாம் வந்துட மாட்டாரு' என்று மனத்தைத் தேற்றியவளாய் என்ன உடை உடுக்கலாம் என்று பெட்டியைப் பார்த்தவாறு நின்றிருந்த போது உள்ளே வந்த கார்த்திகேயன், "நீ இன்னும் குளிக்கப் போகலையா?" எனக் கேட்டான்.
"என்ன டிரெஸ் போடுறதுனு பார்த்துட்டு இருக்கேன்" என்றவள் உரைத்ததைக் கேட்டு பெட்டியைப் பார்த்தவன், தான் அவளுக்கு முன்பு வாங்கிக் கொடுத்திருந்த காட்டன் புடவையை எடுத்துக் கொடுத்து அதை உடுத்தக் கூறினான்.
அவன் தன்னிடம் இயல்பாய் பேசியதில் கண்கள் மின்ன சரியென்றவளாய் மகிழ்வுடன் கிளம்ப ஆயத்தமானாள் வள்ளி.
நைட்டியை அணிந்தவளாய் குளியலறையில் இருந்து வெளியே வந்த வள்ளி, அறையில் கார்த்திகேயன் இல்லாது இருப்பதைப் பார்த்து விட்டு கதவைப் பூட்டிவிட்டு புடவை உடுத்தத் தொடங்கினாள்.
கார்த்திகேயன் கதவைத் தட்டவும், முந்தானையைப் பின் செய்து கீழே மடிப்பு வைத்துக் கொண்டிருந்தவள் கைகளில் அதனை அள்ளிக் கொண்டு நடந்தவளாய் சென்று கதவைத் திறந்தாள்.
அறைக்குள் நுழைந்தவன் அவள் குனிந்து மடிப்பை இழுத்து விடச் சிரமப்படுவதைப் பார்த்து, அவள் அருகில் சென்று அவளின் கால் கீழே முட்டியிட்டு, "இரு நான் சரி செய்றேன்" என்றவனாய் அழகாய் நேர்த்தியாய் இழுத்து விட்டான்.
கணவனின் இந்தச் செயலில் அவளின் உள்ளம் நெகிழ்ந்து போக, "இப்ப எப்படி இருக்கு?" மண்டியிட்டவாறே நிமிர்ந்து அவள் முகம் பார்த்துக் கேட்ட கணவனின் முன் நெற்றியில் தன்னை மீறி முத்தமிட்டாள் வள்ளி.
சட்டென அவன் கண்களில் நீர் பொங்கி வர, அவளிடம் அதைக் காட்ட விரும்பாதவனாய் விறுவிறுவெனக் குளியலறைக்குள் புகுந்து கொண்டான் கார்த்திகேயன்.
'இவக்கிட்ட மட்டும் நான் ஏன் இப்படி உடஞ்சி போறேன்' என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டவனாய் குளியலறையில் இருந்தவாறு கட்டுக்குள் வர இவன் முயன்று கொண்டிருக்க,
இவளோ, தான் முத்தமிட்டதும் அவன் இவ்வாறு சென்றதில், தான் முத்தம் கொடுத்தது பிடிக்காமல் தான் இப்படிச் சென்று விட்டான் என்று எண்ணி வருந்தினாள்.
'நான் ஹனிமூன்ல அவரைத் தொட வேண்டாம்னு சொன்ன கோபம் இன்னும் போகலையா அவருக்கு? அதுக்குப் பிறகு அவர் என் பக்கமே வரவே இல்லையே' சட்டென அவளின் உற்சாகம் அனைத்தும் வடிந்து போன உணர்வில் பாரமான மனத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
குளித்து முடித்து வெளியே வந்த பிறகும் அவளிடம் ஏதும் பேசவில்லை அவன். அவளோ தனது உடையையும் அலங்காரத்தையும் பார்த்து அவன் ஏதேனும் சொல்வான் என்று ஆவலுடன் அவன் முகத்தைப் பார்த்தவாறே கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
அவளின் எதிர்பார்ப்பு புரிந்தும் அவனோ சிரத்தையுடன் தான் கிளம்புவதில் முனைப்பாய் இருப்பது போல் காண்பித்துக் கொண்டான். அதில் மேலும் மனம் சுணங்கிப் போனது அவளுக்கு.
அடுத்தச் சில மணி நேரத்தில் இருவரும் தயாராகி வெளியே வர, முத்துப்பேச்சுவின் மனைவி காமாட்சி இருவருக்கும் காலை உணவினைப் பரிமாறினார். முத்துப்பேச்சு வெளி வேலையாகச் சென்றிருந்தார்.
"அக்கா உங்களுக்கு இந்த ஊரு தானா?" எனக் கேட்டான் கார்த்திகேயன்.
"இல்லங்க தம்பி. திருநெல்வேலி தான் நான் பொறந்த ஊரு. வாக்கப்பட்ட பொறவு இங்கே வந்தாச்சு" என்றவர் சொன்னதைக் கேட்டவன்,
"என் பொண்டாட்டிக்கு இது தான் பொறந்த ஊரு" என்றான்.
சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள் வள்ளி.
'அப்ப தெரிஞ்சி தான் கூட்டிட்டு வந்திருக்காரா?' எண்ணியவாறே உண்டு கொண்டிருந்தாள்.
"அப்படியா! அப்பனா நீங்க எங்களுக்குச் சொக்காரவியலா வருவியளோ? இங்கன எந்த ஊரு வள்ளி?" என்று ஆவலுடன் அவர் கேட்க,
வள்ளி அந்த ஊர் பெயரைச் சொன்னதும் ஆச்சரியப்பட்டுப் போனவராய், "இந்த ஊர் தானா உனக்கு? இங்கன எந்த வீட்டு ஆளுங்க பிள்ளை நீயி?" எனக் கேட்டார்.
"திரவியம் குடும்பம். அவங்க பையன் தான் என் அப்பா. அவங்க பொண்ணோட பையன் உதயா தான் இப்ப எங்க பாரம்பரிய வீட்டுல இருக்கான்" என்றவள் சொன்னதும் அவரின் முகத்தில் அதிருப்தியான முகப்பாவனைக் கண்டு இவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆயினும் தனது பாவனையை உடனே மாற்றிக் கொண்டவராய் காமாட்சி அவர்களிடம் ஏதோ கேட்க வந்து உடனே நிறுத்திக் கொள்ள,
"என்னக்கா ஏதோ கேட்க வந்துட்டு நிறுத்திட்டீங்க? என்ன கேட்கனும்னு நினைச்சீங்க?" என்று கேட்டான் கார்த்திகேயன்.
"கேட்குறேன்னு தப்பா நினைக்காதீய! அந்த வீடு இரண்டு தெரு தள்ளி தானே இருக்கு! அப்புறம் எதுக்கு இங்கன வந்து தங்கியிருக்கீய?" எனக் கேட்டார்.
"நாங்க லவ் மேரேஜ் செஞ்சிக்கிட்டோம்னு எங்களை வீட்டை விட்டு ஒதுக்கி வச்சிட்டாங்க அக்கா" என்று கார்த்திகேயன் உரைத்ததைக் கேட்டு ஜீரணிக்க முடியாதவராய்,
"இதென்ன அநியாயமா இருக்கு! ஊருக்குத் தெரியுற மாதிரி காதலிச்சவனைக் கட்டிக்கிறது தப்பு ஆனா ஊருக்குத் தெரியாம ஒரு பொண்ணுக் கூட வாழுறது தப்பில்லையோ?" உணர்ச்சி மிகுதியில் பட்டென உரைத்து விட்டவர் பின் நாக்கைக் கடித்துக் கொண்டார்.
கார்த்திகேயனும் வள்ளியும் கேள்வியாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவருக்குமே அவர் யாரைப் பற்றிப் பேசுகிறார் என்று புரியவில்லை.
"யாரை சொல்றீங்க அக்கா? யாரு ஊருக்குத் தெரியாம பொண்ணோட வாழுறாங்க?" எனக் கேட்டான் கார்த்திகேயன்.
"இல்ல தம்பி. அது வேணாம் விடுங்க. அப்புறம் உங்க சொக்காரவியல நான் தப்பா சொன்னேன்னு பழியாகிடும். நீங்க இங்கன இருக்க வரைக்கும் உங்களை நல்லா கவனிச்சிட வேண்டியது எங்க பொறுப்பு தானே. மனஸ்தாபம் ஆகிடக் கூடாது பாருங்க" என்று கூறி விட்டு சமையலறைக்குள் சென்று விட்டார்.
இருவரும் உண்டு முடித்த சமயம் முத்துப்பேச்சு வரவும், அவனது ஈருருளியைக் கேட்டு வாங்கிக் கொண்டான் கார்த்திகேயன்.
அவனது ஈருருளியில் இருவரும் பயணித்த போது, எங்கோ கோவிலுக்குத் தான் அழைத்துச் செல்லப் போகிறான் என்று நினைத்திருந்தாள் வள்ளி.