Member
- Joined
- May 20, 2025
- Messages
- 67
- Thread Author
- #1
ஒரு மாதத்திற்குப் பிறகு...
இருவரும் கட்டிலில் ஈர் ஓரங்களில் படுத்திருந்தனர்.
காலைச் சூரியனின் ஒளி ஜன்னலின் வழியாக முகத்தில் விழவும் கண் விழித்த வள்ளி, திரும்பி கார்த்திகேயனைப் பார்த்து பெருமூச்சு விட்டவளாய் கழிவறைக்குச் சென்று விட்டு வந்தவள் சமையலறைக்குச் சென்றாள்.
பார்வதி அடுப்பில் பாலை வைத்துவிட்டு காய்கறிகளை நறுக்கத் துவங்கவும் இவள் வந்துவிட, "அரிசி கழுவி வச்சிடுறியா மா?" என்றார் பார்வதி.
"சரிங்க அத்தை" என்றவள் வேலையில் இறங்கினாள்.
இந்த வீட்டிற்கு வந்த பிறகு முதல் வாரம் புதுமணத் தம்பதியரெனத் தேனிலவுக்குச் சென்று வந்த பிறகு மறுவாரத்தில் இருந்தே இந்த வீட்டின் மருமகளாய் அவளே தன்னைச் சமையலில் ஈடுபடுத்திக் கொண்டாள் வள்ளி. அதன் மூலம் தனது மாமியாருடன் நல்ல நட்பினை வளர்த்திருந்தாள் வள்ளி.
"நேத்து எதுவும் பேசினானாமா உன்கிட்ட?" எனக் கேட்டார் பார்வதி.
இல்லையென அவள் தலையசைக்கவும், "இரண்டு பேரும் இப்படி இருந்தா என்னமா அர்த்தம்? யாராவது இறங்கி வந்து பேசினா தானே பிரச்சினை சரி ஆகும்" ஆதங்கமாய் உரைத்தவர்,
"யாரோட குடும்பத்துக்குள்ளயும் யாரும் கருத்துச் சொல்ல முடியாது வள்ளி. ஆனா மனசு கேட்க மாட்டேங்குதே" என்று புலம்பியவராய் தேநீர் தயாரித்து அவளிடம் கொடுத்தார்.
கார்த்திகேயனும் வள்ளியும் அன்று சண்டையிட்டப் பிறகு, இன்று வரை தேவைக்கு மட்டுமே ஓரிரு வார்த்தைகள் இருவரும் பேசிக் கொள்கின்றனர். அந்த ஆதங்கத்தில் தான் பார்வதி இவ்வாறு புலம்பியிருந்தார்.
வள்ளியின் பெற்றோரைக் கண்டுபிடிக்க, வள்ளியிடமிருந்து உதயாவின் எண்ணை கேட்டு வாங்கிப் பேசினான் கார்த்திகேயன். வள்ளியின் பெற்றோர் அங்கே வரவில்லை என்று உரைத்து விட்டான் உதயா. வள்ளியின் பெற்றோர்களது அலைபேசி எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்க, வள்ளியின் சொந்தக்காரர்களின் தொடர்பு எண்கள் எதுவுமே வள்ளியிடம் இல்லாது இருக்க, கார்த்திகேயன் தனது அலுவலக நண்பருக்குத் தெரிந்த காவல்துறையினர் மூலம் அவர்கள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்தான்.
அடுத்த இரு நாள்களிலேயே வள்ளியின் தாய் தந்தையரின் அலைபேசி எண்கள் கடைசியாகத் தூத்துக்குடியில் பயன்படுத்தப் பட்டிருப்பதாகக் கண்டுபிடித்திருந்தனர். அவர்கள் நிச்சயமாக ஏதேனும் உறவினர்கள் இல்லத்திற்குத் தான் சென்றிருக்கிறார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகு தான் கார்த்திகேயனின் வீட்டில் அனைவருக்கும் ஆசுவாசமானது.
அடுத்தச் சில நாட்களில், வள்ளியின் தந்தை நடத்திக் கொண்டிருந்த கடையையும் அவர்களின் வீட்டையும் யாருக்கோ வாடகைக்கு விட்டிருப்பதைப் பார்த்த கார்த்திகேயன், அவர்களிடம் சென்று விசாரித்தான்.
வாடகைக்கு வந்திருப்பவர்கள் தூத்துக்குடியில் இருந்து தான் வந்திருக்கிறார்கள் என்றும், இந்த ஊருக்குப் புதியவர்கள் என்றும் சொன்னவர்கள், ஓனரின் அலைபேசி எண்ணை எவரிடமும் பகிரக் கூடாதெனக் கூறிவிட்டார் என்றும் கூறியிருந்தனர்.
வள்ளிக்குத் தன்னால் தனது பெற்றோர் இந்த ஊரை விட்டே சென்று விட்ட குற்றயுணர்வு அப்படியே இருக்க, கார்த்திகேயனுக்கோ தனது மனைவியே தன்னையும் தனது காதலையும் புரிந்து கொள்ளாது பேசியது மனத்தை விட்டு அகலாது இருந்தது. இருவரும் இரு வேறு மனநிலையில் தள்ளியே இருக்க, அருகில் இருந்தும் தூரமாய் வாழும் இந்நிலையை வெறுத்த கார்த்திகேயன் அவளிடம் இருந்து ஒதுங்கி இருக்க, அவனது பிராஜக்ட்டில் பெங்களூர் கிளைண்ட் இடத்திற்குத் தானே செல்வதாகக் கேட்டு வாங்கிக் கொண்டு வள்ளியை தனித்து விட்டுச் சென்றிருந்தான்.
அங்குச் சென்ற பிறகும் வள்ளிக்கென தனியாக குறுஞ்செய்தியோ அழைப்போ செய்யாமல் தான் இருந்தான். அவனின் இந்தப் புறக்கணிப்பில் வெகுவாக காயப்பட்டுப் போனாள் வள்ளி. தனது தாயிடம் அன்றாடம் வள்ளியைப் பற்றிக் கேட்டுக் கொள்வான். வள்ளியும் பார்வதியிடம் அவனைப் பற்றிக் கேட்டுக் கொள்வாள்.
மகனும் மருமகளும் இப்படித் தனித்து வாழும் வாழ்வைக் கண்டு கலங்கிய பார்வதியும் தாமோதரனும் இருவரிடமும் பேசிப் பார்த்து ஓய்ந்து போயினர்.
இப்படியே இருவரும் பிரிந்தே வாழ்ந்து ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் முந்தைய நாள் இரவு தான் பெங்களூரில் இருந்து வந்திருந்தான் கார்த்திகேயன்.
சிறிது நேரத்தில் கண் விழித்த கார்த்திகேயன், அருகில் வள்ளி இல்லாததைப் பார்த்து விட்டு தனது கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தான்.
அவனின் விரல்கள் தானாக இன்ஸ்டாவிற்குச் சென்று ஒரு வாரத்திற்கு முன்பு வள்ளி பதிவிட்டிருந்த அந்தக் கவிதைக்குச் சென்றிருந்தன.
இருவரும் கட்டிலில் ஈர் ஓரங்களில் படுத்திருந்தனர்.
காலைச் சூரியனின் ஒளி ஜன்னலின் வழியாக முகத்தில் விழவும் கண் விழித்த வள்ளி, திரும்பி கார்த்திகேயனைப் பார்த்து பெருமூச்சு விட்டவளாய் கழிவறைக்குச் சென்று விட்டு வந்தவள் சமையலறைக்குச் சென்றாள்.
பார்வதி அடுப்பில் பாலை வைத்துவிட்டு காய்கறிகளை நறுக்கத் துவங்கவும் இவள் வந்துவிட, "அரிசி கழுவி வச்சிடுறியா மா?" என்றார் பார்வதி.
"சரிங்க அத்தை" என்றவள் வேலையில் இறங்கினாள்.
இந்த வீட்டிற்கு வந்த பிறகு முதல் வாரம் புதுமணத் தம்பதியரெனத் தேனிலவுக்குச் சென்று வந்த பிறகு மறுவாரத்தில் இருந்தே இந்த வீட்டின் மருமகளாய் அவளே தன்னைச் சமையலில் ஈடுபடுத்திக் கொண்டாள் வள்ளி. அதன் மூலம் தனது மாமியாருடன் நல்ல நட்பினை வளர்த்திருந்தாள் வள்ளி.
"நேத்து எதுவும் பேசினானாமா உன்கிட்ட?" எனக் கேட்டார் பார்வதி.
இல்லையென அவள் தலையசைக்கவும், "இரண்டு பேரும் இப்படி இருந்தா என்னமா அர்த்தம்? யாராவது இறங்கி வந்து பேசினா தானே பிரச்சினை சரி ஆகும்" ஆதங்கமாய் உரைத்தவர்,
"யாரோட குடும்பத்துக்குள்ளயும் யாரும் கருத்துச் சொல்ல முடியாது வள்ளி. ஆனா மனசு கேட்க மாட்டேங்குதே" என்று புலம்பியவராய் தேநீர் தயாரித்து அவளிடம் கொடுத்தார்.
கார்த்திகேயனும் வள்ளியும் அன்று சண்டையிட்டப் பிறகு, இன்று வரை தேவைக்கு மட்டுமே ஓரிரு வார்த்தைகள் இருவரும் பேசிக் கொள்கின்றனர். அந்த ஆதங்கத்தில் தான் பார்வதி இவ்வாறு புலம்பியிருந்தார்.
வள்ளியின் பெற்றோரைக் கண்டுபிடிக்க, வள்ளியிடமிருந்து உதயாவின் எண்ணை கேட்டு வாங்கிப் பேசினான் கார்த்திகேயன். வள்ளியின் பெற்றோர் அங்கே வரவில்லை என்று உரைத்து விட்டான் உதயா. வள்ளியின் பெற்றோர்களது அலைபேசி எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்க, வள்ளியின் சொந்தக்காரர்களின் தொடர்பு எண்கள் எதுவுமே வள்ளியிடம் இல்லாது இருக்க, கார்த்திகேயன் தனது அலுவலக நண்பருக்குத் தெரிந்த காவல்துறையினர் மூலம் அவர்கள் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்தான்.
அடுத்த இரு நாள்களிலேயே வள்ளியின் தாய் தந்தையரின் அலைபேசி எண்கள் கடைசியாகத் தூத்துக்குடியில் பயன்படுத்தப் பட்டிருப்பதாகக் கண்டுபிடித்திருந்தனர். அவர்கள் நிச்சயமாக ஏதேனும் உறவினர்கள் இல்லத்திற்குத் தான் சென்றிருக்கிறார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகு தான் கார்த்திகேயனின் வீட்டில் அனைவருக்கும் ஆசுவாசமானது.
அடுத்தச் சில நாட்களில், வள்ளியின் தந்தை நடத்திக் கொண்டிருந்த கடையையும் அவர்களின் வீட்டையும் யாருக்கோ வாடகைக்கு விட்டிருப்பதைப் பார்த்த கார்த்திகேயன், அவர்களிடம் சென்று விசாரித்தான்.
வாடகைக்கு வந்திருப்பவர்கள் தூத்துக்குடியில் இருந்து தான் வந்திருக்கிறார்கள் என்றும், இந்த ஊருக்குப் புதியவர்கள் என்றும் சொன்னவர்கள், ஓனரின் அலைபேசி எண்ணை எவரிடமும் பகிரக் கூடாதெனக் கூறிவிட்டார் என்றும் கூறியிருந்தனர்.
வள்ளிக்குத் தன்னால் தனது பெற்றோர் இந்த ஊரை விட்டே சென்று விட்ட குற்றயுணர்வு அப்படியே இருக்க, கார்த்திகேயனுக்கோ தனது மனைவியே தன்னையும் தனது காதலையும் புரிந்து கொள்ளாது பேசியது மனத்தை விட்டு அகலாது இருந்தது. இருவரும் இரு வேறு மனநிலையில் தள்ளியே இருக்க, அருகில் இருந்தும் தூரமாய் வாழும் இந்நிலையை வெறுத்த கார்த்திகேயன் அவளிடம் இருந்து ஒதுங்கி இருக்க, அவனது பிராஜக்ட்டில் பெங்களூர் கிளைண்ட் இடத்திற்குத் தானே செல்வதாகக் கேட்டு வாங்கிக் கொண்டு வள்ளியை தனித்து விட்டுச் சென்றிருந்தான்.
அங்குச் சென்ற பிறகும் வள்ளிக்கென தனியாக குறுஞ்செய்தியோ அழைப்போ செய்யாமல் தான் இருந்தான். அவனின் இந்தப் புறக்கணிப்பில் வெகுவாக காயப்பட்டுப் போனாள் வள்ளி. தனது தாயிடம் அன்றாடம் வள்ளியைப் பற்றிக் கேட்டுக் கொள்வான். வள்ளியும் பார்வதியிடம் அவனைப் பற்றிக் கேட்டுக் கொள்வாள்.
மகனும் மருமகளும் இப்படித் தனித்து வாழும் வாழ்வைக் கண்டு கலங்கிய பார்வதியும் தாமோதரனும் இருவரிடமும் பேசிப் பார்த்து ஓய்ந்து போயினர்.
இப்படியே இருவரும் பிரிந்தே வாழ்ந்து ஒரு மாதம் கடந்திருந்த நிலையில் முந்தைய நாள் இரவு தான் பெங்களூரில் இருந்து வந்திருந்தான் கார்த்திகேயன்.
சிறிது நேரத்தில் கண் விழித்த கார்த்திகேயன், அருகில் வள்ளி இல்லாததைப் பார்த்து விட்டு தனது கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தான்.
அவனின் விரல்கள் தானாக இன்ஸ்டாவிற்குச் சென்று ஒரு வாரத்திற்கு முன்பு வள்ளி பதிவிட்டிருந்த அந்தக் கவிதைக்குச் சென்றிருந்தன.
Last edited: