• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 20, 2025
Messages
42
அடுத்த நாள் காலை,



சூர்யா: அபி குட்டி எழுந்திரிங்க.



அபி: அப்பா இன்னிக்கு லீவு போடலாமா.



சூர்யா : ஏண்டா கை வலிக்குதா.



அபி : இல்லப்பா நேத்து ஜாலியா இருந்ததுல இன்னைக்கும் அதே போல ஜாலியா எங்கையாவது போகலாமா.



சூர்யா : அபி குட்டி இன்னைக்கு ஒரு நாளைக்கு போங்க சனி, ஞாயிறு லீவு தான நாளைக்கு நாம நல்லா என்ஜாய் பண்ணலாம் சரியா.



அபி: சரிப்பா அப்போ வா போய் கிளம்பலாம்.



சூர்யா: குட் பாய் வாங்க போய் குளிக்கலாம் .



அப்புறம் சூர்யா, அபி இரண்டு பேருமே ஸ்கூல் காலேஜ்க்கு கிளம்புனாங்க. சாப்பிட்டு மதிய சாப்பாடு எடுத்துட்டு கீழே போனாங்க.



லட்சுமி: ஸ்கூலுக்கு கிளம்பியாச்சா.



அபி: ஆமா லட்சு நாளைக்கு எனக்கு ஸ்கூல் லீவு தான நாம நாலு பேரும் எங்காவது வெளியே போகலாம்.



லட்சுமி: நீ போடா செல்லம் நாங்க எதுக்கு.



அபி: நோ நீங்களும் வந்தே ஆகணும்.



சூர்யா: ஆமா அம்மா நாளைக்கு நாலு பேருமே வெளியே போகலாம் நீங்களும் வீட்டிலேயே தான இருக்கீங்க.



லட்சுமி :சரி பா.



அபி : லட்சு நான் சொன்னா கேட்க மாட்டியா நீ. அப்பா சொன்ன உடனே சரின்னு சொல்ற ( கைய கட்டிக்கிட்டு உதட்டை சுழிச்சு சொன்னான்).



லட்சுமி: என் அழகு குட்டி ( அவன் கன்னத்தை கிள்ளி கிஸ் பண்ணாங்க ) உனக்காக தாண் டா வர்றேன்னு சொன்னேன்.



அபி : அப்போ சரி.



சூர்யா: டைம் ஆகிருச்சு கிளம்புறோம் மா.



லட்சுமி: சரி பார்த்து போங்க.



அபி :பாய் லட்சு.



ஸ்கூல்,



சூர்யா: அபிய தூக்கிட்டு கிளாஸ்க்கு போனான்.



ஷாலினி : அபி ( அவனை தூக்கி கிட்டா ) வலிக்குதா.



அபி: இல்ல மிஸ்.



ஷாலினி : ஓகே டா செல்லம்.



அப்போ நவீன் வந்தான்.



நவீன்: அபி இந்தா உன்னுடைய க்ரையான்ஸ் ( அபி கையில் கொடுத்தான் ) சாரி உன்னை தள்ளி விட்டதுக்கு.



அபி: இட்ஸ் ஓகே.



நவீன் சாரி அங்கிள் நான் தெரியாம அபிமன்யு வ கீழ தள்ளி விட்டுட்டேன்.( சூர்யா கிட்ட கேட்டான் ).



சூர்யா :(நவீன் சைஸ்க்கு உட்கார்ந்தான்) இருக்கட்டும் செல்லம் நான் ஒன்னும் நினைச்சுக்கல சரியா நீ போ.



நவீன்: ம்ம்ம்ம்ம் (அவன் போயிட்டான் ).



சூர்யா: (எழுந்தான்) சாரி ஷாலு அன்னைக்கு நானும் உன்னை நிறைய திட்டிட்டேன்.



ஷாலினி: அதான் கால் பண்ணி சாரி கேட்டீங்களே அப்புறம் என்ன விடுங்க.



சூர்யா :சரி அபிய பாத்துக்கோ நான் கிளம்புறேன்.



ஷாலினி: ஓகே சீனியர்.



சூர்யா :அவன் கிளம்பிட்டான்.



அப்புறம் ஷாலினி, அபி கிளாசுக்கு போயிட்டாங்க. அபிக்கு அடிபட்டு இருந்ததுனால ஷாலினி தான் மதியம் சாப்பாடு ஊட்டி விட்டா.



ஈவினிங் சூர்யா வந்து அபிய வீட்டுக்கு அழைச்சிட்டு போயிட்டான்.



அடுத்த நாள் காலை,



அபி :காலைல எழுந்ததும் கதிரேசன் வீட்டுக்கு கீழ போனான்.



கதிரேசன்: பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்தாரு.



அபி :தாத்தா, தாத்தா.



கதிரேசன்: என்ன டா.



அபி: என்ன இவ்வளவு நேரம் பேப்பர் படிச்சுக்கிட்டே இருந்தா எப்ப தான் கிளம்புறது.



கதிரேசன்: எங்க டா.



அபி: லட்சு கிட்ட வெளியே போறேன்னு சொன்னனே ஏன் உன்கிட்ட சொல்லலையா.



கண்ணன் : இல்லையே.



அபி: லட்சு, லட்சு (கத்தி கூப்பிட்டான்).



லட்சுமி : ஏண்டா கத்துற.



அபி : நீ தாத்தா கிட்ட வெளிய போறோம்ன்னு சொல்லலையா அவர் கிளம்பாம இருக்காரு.



லட்சுமி: அதெல்லாம் சொல்லிட்டேன். அவர் தான் உன் கூட சும்மா விளையாடுறாரு.



அபி :தாத்தா( இடுப்புல கைய வச்சுக்கிட்டு நின்னான்).



கதிரேசன் :நீ போய் கிளம்பி ரெடியாகி வா உனக்கு முன்னாடி நான் கிளம்பி ரெடியாக இருப்பேன்.



அபி: சீக்கிரம் கிளம்பு இல்லனா அவ்வளவு தான் (விரலை நீட்டி மிரட்டிட்டு போனான் ).



கதிரேசன்: ஜான் சைஸ் இருந்துகிட்டு என்னை மிரட்டிட்டு போறான் பாரு டி .



லட்சுமி: போய் கிளம்புங்க.



அப்பறம் நாலு பேரும் கிளம்பி ஒரு கேப் புக் பண்ணி முதல்ல தியேட்டர் போனாங்க.



அங்க ஷாலினி அவ பிரண்ட்ஸ் கூட நின்னுகிட்டு இருந்தா.



லட்சுமி: ஏங்க அங்க பாருங்க ஷாலினி நிக்குறா.



சூர்யா :(m.v) இவங்களுக்கு எப்படி ஷாலினிய தெரியும்.



அபி : எங்க மிஸ்ஸ உனக்கு எப்படி தெரியும்.



தொடரும்....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top