• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 20, 2025
Messages
42
சூர்யாவுக்கு கால் பண்ணி ஷாலினியை ஆக்சிடென்ட் பண்றது சரத் தான். ஷாலினிய கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று சொல்லிட்டு போன பிறகு இரண்டு மாசத்திலேயே வேற பொண்ணை பார்த்து அவ கூட கல்யாணம் பண்ணி வச்சாங்க .

சரத் ஷாலினிய சந்தேகப்பட்ட மாதிரி அந்தப் பொன்னையும் சந்தேகப்பட்டு பேசுவான். ஆனா அவளும் இவனை சும்மா விட மாட்டான் எதிர்த்து பேசுவாள் இதனால அடிக்கடி இரண்டு பேருக்கும் சண்டை நடந்துக்கிட்டே இருக்கும்.

சூர்யா, ஷாலினி வந்த அதே ஷாப்பிங் மாலுக்கு சரத்து வந்திருந்தான். இவங்க சந்தோசமாக இருக்கிறத பார்த்தவன் அவங்களை பழி வாங்கணும்ன்னு இப்படி எல்லாம் பண்ணிட்டான்.

சூர்யா : ஷாலினி கிட்ட ஓடி அவ தலையை அவன் மடியில எடுத்து வச்சுக்கிட்டான்.

ஷாலினி: தலையில நிறைய ரத்தம் போய்கிட்டு இருந்தது.

அவங்கள சுத்தி கூட்டம் கூடிடுச்சு ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணி வர சொல்லிட்டாங்க.

சூர்யா: (அவன் கர்ஷிப் வச்சு அவ தலையில் கட்டி விட்டான் ரத்தம் வராத படி) ஷாலு ஷாலு கண்ணை திற மா (கன்னத்துல தட்டுனான் ).

ஷாலினி : லைட்டா கண்ணை திறந்தா.

சூர்யா : உனக்கு ஒன்னும் ஆகாது ஆகவும் விட மாட்டேன் டி.

ஷாலினி :சீனியர் தலை ரொம்ப வலிக்குது.

சூர்யா : கொஞ்ச நேரம் தான் இதோ ஆம்புலன்ஸ் வந்துடும்.

ஷாலினி :(சூர்யா கைய பிடிச்சா )சூர்யா இதுக்கு பிறகு இதை சொல்ல முடியுமான்னு தெரியல அதான் இப்பவே சொல்லிடுறேன் ஐ லவ் யூ சோ மச் ( அப்படியே மயங்கிட்டா ).

சூர்யா :ஷாலு, ஷாலு ப்ளீஸ் கண்ணை திற டி.

அதுக்குள்ள ஆம்புலன்ஸ் வந்து அவளை ஹாஸ்பிடல் அழச்சிட்டு போனாங்க.

சூர்யா: அவ கைய பிடிச்சிட்டு விடவே இல்ல.

ஷாலினிய ஆப்ரேஷன் தியேட்டர் அழச்சிட்டு போனதும் சூர்யா வெளில உள்ள சேர்ல உட்க்கார்ந்து அழுதுட்டு இருந்தான்.

வீட்டுக்கு கால் பண்ணி சொன்னதும் ஷாலினி அப்பா, அம்மா, வினய்,அபி, கதிரேசன்,லட்சுமி எல்லாருமே வந்துட்டாங்க.

சூர்யா : அழுதுட்டே இருந்தான்.

யார் சமாதானம் பண்ணியும் சமாதானமும் ஆகவே இல்லை.

டாக்டர் வந்து ஆப்ரேசன் பண்ணியாச்சு ஆனா அவங்க கண் விழிச்சா தான் எதுவா இருந்தாலும் சொல்ல முடியும்னு சொல்லிட்டாங்க.

எல்லாரும் ஷாலினிக்காக ப்ரே பண்ணிட்டு இருந்தாங்க.

கொஞ்ச நேரம் கழித்து டாக்டர் உள்ள போய் செக் பண்ணிட்டு வந்தாங்க.

சூர்யா: (எழுந்து அவ கிட்ட போனான் ) டாக்டர் ஷாலினி எப்படி இருக்கா கண் திறந்துட்டாளா.

டாக்டர் : இன்னும் இல்லப்பா கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கலாம்.

சூர்யா: நான் போய் ஒன் டைம் அவளை பார்த்துட்டு வந்துடுறேன் டாக்டர்.

டாக்டர் :நோ அப்படியெல்லாம் போகக்கூடாது.

சூர்யா: ப்ளீஸ் டாக்டர் ப்ளீஸ் ஒரே ஒரு முறை மட்டும் பார்த்துட்டு வந்துடறேன்.

டாக்டர் :சரி அப்ப டிஸ்டர்ப் பண்ணாம பார்த்துட்டு வந்துடுங்க.

சூர்யா : தேங்க்ஸ் டாக்டர் ( உள்ள போனான் ).

ஷாலினி : தலைல கட்டு போட்டு இருந்தாங்க, கைல ட்ரிப்ஸ் ஏறி கிட்டு இருந்தது.

சூர்யா: பொறுமையா அவ கையை பிடிச்சான்.

இன்னைக்கு உனக்கு நெறைய சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு இருந்தேன் டி என்னோட லவ்வ சொல்லணும் அதை கேட்டதும் உன் முகத்துல வர சந்தோஷத்தை பார்க்கனும்.

இந்த இரு வருஷம் உன்னை காக்க வச்சதுக்காக மன்னிப்பு கேட்கணும் இப்படி எவ்வளவோ இருக்கு.

ஷாலினி : அவள்ட எந்த வித அசைவுமே இல்லை.

சூர்யா : ப்ளீஸ் டி நீயும் சுஜி மாதிரி என்ன விட்டு போயிடாத.

ஷாலினி : அவ கண்ணுல இருந்து கண்ணீர் வந்துச்சு.

சூர்யா :(அவ கண்ணீரை துடைச்சு விட்டான் )சீக்கிரம் எங்கள் ட வந்திடு டி ( சொல்லிட்டு போக போனான் ).

ஷாலினி : அவன் கையை புடிச்சிருந்தா.

சூர்யா : ஷாலு ( அவ கிட்ட போனான் ).

ஷாலினி :( பொறுமையா பேசினா) அவ்வளவு சீக்கிரம் உங்கள விட்டு போக மாட்டேன்.

சூர்யா : ( அவன் நெத்தியில கிஸ் பண்ணினான் ) இரு டாக்டரை அழச்சிட்டு வந்துடறேன்.

ஷாலினி : ம்ம்ம்ம்ம்ம்.

அப்புறம் டாக்டர் வந்து செக் பண்ணி பாத்துட்டு எந்த பிரச்சனை இல்லைன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.

அன்னைக்கு நைட்டு சூர்யா அப்பா அம்மா, மீனா, ராகவ், அபர்ணா எல்லாரும் வந்துட்டாங்க.

சூர்யா : ராகவ் அழச்சிட்டு போய் சரத் அப்பா, அம்மா, அவன் பொண்டாட்டி முன்னாடியே செம்மையா அடிச்சான்.
(சரத் நம்பர் வச்சு அவன் தான் இந்த ஆக்சிடன்ட் பண்றதுன்னு சூர்யா கண்டு புடிச்சிட்டான்).

சரத் : முகத்துல இரத்தத்தோட கீழ கிடந்தான்.

சூர்யா : இன்னொரு தடவை ஷாலினிய எதாவது பண்ணனும்னு நினைச்ச உன் உடம்புல உயிர் இருக்காது ஜாக்கிரதை ( சொல்லிவிட்டு ராகவ்வ அழச்சிட்டு ஹாஸ்பிடல் போய்ட்டான் ).

ஒருவாரம் ஷாலினி ஹாஸ்பிடல ல தான் இருந்தா எல்லாரும் அவளை பத்திரமா பார்த்துக்கிட்டாங்க.சூர்யா அம்மா சென்னைலையே இருந்தாங்க அவன் அப்பா மட்டும் ஊருல வேலை இருக்கிறதால அங்க போய்ட்டாங்க.

ஒரு வாரத்துக்கு அப்பறம் ஷாலினியை வீட்டுக்கு அழச்சிட்டு வந்தாங்க.

ஷாலினி : காரை விட்டு கீழே இறங்கும் போது லைட்டா தலை சுத்திச்சி( சூர்யா கையை இறுக்கி பிடிச்சுகிட்டா ).

சூர்யா : என்ன மா ஆச்சு.

ஷாலினி: லைட்டா தல சுத்துதுங்க.

சூர்யா: அவளை அப்படியே கைல தூக்கிட்டான்.

ஷாலினி : ஹையோ என்னங்க பண்ணுறிங்க.

சூர்யா : தலை சுத்துதுல அதான்.

ஷாலினி : எல்லாரும் பாக்குறாங்க சீனியர்.

சூர்யா : பார்த்தா பார்க்கட்டும் என் பொண்டாட்டி தான.

ஷாலினி : விடுங்க நடந்து வரேன்.

சூர்யா : நோ ( அவளை தூக்கிட்டு போனான் ).

ஷாலினி அம்மா, சூர்யா அம்மா : சேர்ந்து இரண்டு பேருக்கும் ஆரத்தி எடுத்தாங்க.

சூர்யா : அவளை அப்படியே ஷோபால உட்க்கார வச்சான்.

அபி :( அவ பக்கத்துலயே வந்து உட்கார்ந்தான் ) அம்மா ரொம்ப வலிக்குதா.

ஷாலினி: இல்ல செல்லம்.

அபி : நீ இல்லாம ரொம்ப போர் அடிச்சது மா. உன் அளவுக்கு பாட்டிக்கு சமைக்கவே தெரியல.

சூர்யா அம்மா : ம்ம்ம்ம்ம்ம்ம் சொல்லுவ டா ( அவன் கன்னத்திலேயே இடிச்சாங்க).

அபி : பளிப்பு காட்டினான்.

இப்படியே எல்லாரும் ஜாலியா இருந்தாங்க ஷாலினிக்கு கொஞ்சம் சரியானதும் சூர்யா அம்மா ஊருக்கு போய்ட்டாங்க.

நாட்கள் ரொம்ப வேகமா போச்சு ஷாலினி இப்ப சரி ஆயிட்டா, அவளை சூர்யா வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லிட்டான்.

இதற்கு இடையில சூர்யாவோட தங்கச்சி மீனாவிற்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. சூர்யா, ஷாலினி, அபி மூணு பேரும் மதுரைக்கு சென்று அவர்களை பார்த்துட்டு வந்தாங்க.

அபி : அம்மா.

சூர்யா: அவ கிச்சன்ல இருக்கா என்கிட்ட சொல்லு.

அபி :அம்மா கிட்ட தான் கேட்பேன் அம்மா இங்க வா.

ஷாலினி: என்ன டா( அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்தா).

அபி : மீனா அத்தைக்கு இப்போ பாப்பா பிறந்த மாதிரி உனக்கு எப்ப பாப்பா பிறக்கும்.

ஷாலினி : என்ன பாப்பாவா.

அபி: ஆமா மா எனக்கும் தங்கச்சி பாப்பா வேணும்.

சூர்யா :அதுக்கு ரொம்ப நாள் ஆகும் செல்லம்.

அபி: அப்படியா... சரி நான் லட்சு வீட்டுக்கு போறேன்( ஓடிட்டான் ).

சூர்யா: சரி வா நாமளும் பாப்பாவுக்கு ரெடி பண்ணலாம்.

ஷாலினி : என்ன.

சூர்யா: அபி தங்கச்சி பாப்பா கேக்குறான்ல அதுக்காக தான்.

ஷாலினி : இல்லங்க வேண்டாம் நான் ஏற்கனவே சொன்னது தான் நமக்கு அபி மட்டும் போதும்.

சூர்யா: ஏன் உனக்குன்னு ஒரு குழந்தை வந்துட்டா நீ அபிய சரியா பாத்துக்க மாட்டியா.

ஷாலினி : அப்படி இல்லைங்க அவன் தான் என்னுடைய முதல் குழந்தை.

சூர்யா :எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு நீ ஏன் பயப்படுற. மீனாவுக்கு பிறந்த குழந்தையை பார்க்கும் போது உனக்கு மிகவும் ஆசையாக இருந்தது இல்லை.

ஷாலினி : அ அது ( கொஞ்சம் தடுமாறுனா ).

சூர்யா: எனக்கு தெரியும் ஷாலு ஒரு பொண்ணா உனக்கும் நிறைய ஆசை இருக்கும்ல.

ஷாலினி : தலை குனிஞ்சு நின்னா.

சூர்யா :எனக்கும் ஆசையா இருக்கு ஒரு பெண் குழந்தை வேணும்னு அபி வேற தங்கச்சி பாப்பா வேணும்னு கேக்குறான்.

ஷாலினி: கன்னம் சிவக்க நின்னா.

சூர்யா :மௌனம் சம்மதம்னு நினைக்கிறேன் (அவளை தூக்கினான்).

ஷாலினி: அச்சோ என்னங்க இப்ப வேணாம் நைட் பார்த்துக்கலாம் அபி வந்துடுவான்.

சூர்யா: லட்சுமி அம்மாவுக்கு கால் பண்ணி சொல்லிட்டேன் அவன் இப்ப வரமாட்டான்.

ஷாலினி :எப்போ கால் பண்றீங்க.

சூர்யா :என் பொண்டாட்டி வெக்கப்படும் போது.

ஷாலினி: போங்க( அவன் மார்பில் முகத்தை புதைத்தா).

சூர்யா :அவளை ரூமுக்குள்ள தூக்கிட்டு போனான்.

அவங்க வாழ்க்கை நல்ல படியா தொடங்கிட்டாங்க.

தொடரும்....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top