• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Mar 20, 2025
Messages
42
அபி :ஷாலினி மிஸ்ஸ உங்களுக்கு எப்படி தெரியும்.

லட்சுமி: அவ தான் உன் மிஸ்ஸா.

அபி: ஆமா இருங்க நான் போய் கூட்டிட்டு வரேன் (அவள்ட ஓடிட்டான் ).

ஷாலினி: அவ பிரண்ட்ஸ் கூட பேசிட்டு இருந்தா.

அபி:( அவ சுடிய புடிச்சு இழுத்தான்) மிஸ்.

ஷாலினி: ஏய் அபி குட்டி (தூக்கிகிட்டா) நீ இங்க என்ன பண்ற.

அபி : தியேட்டருக்கு எதுக்கு மிஸ் வருவாங்க படம் பாக்க தான்.

ஷாலினி ஃபிரண்ட்ஸ் எல்லாம் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

ஃபிரண்ட்1: யாரடி இந்த பையன்.

ஷாலினி :என்னோட ஸ்டூடண்ட்.

பிராண்ட் 2: அதான் உன்னை விட ஸ்மார்ட்டா இருக்கான்.

அபி :மிஸ் உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப அழகா இருக்காங்க.

ஃப்ரெண்ட் 3:தேங்க்ஸ் டா செல்லம் (அவன் கன்னத்தை கிள்ளி கிஸ் பண்ணா ).

ஷாலினி: அப்போ நான் அழகா இல்லையா டா.

அபி :மிஸ் நீங்க கொழு கொழுன்னு அமுல் பேபி மாதிரி ரொம்ப அழகா இருக்கீங்க.

ஷாலினி :அவனா கிஸ் பண்ணினா.

சூர்யா :அபி அவள அழச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு இங்க என்ன பண்ற.

ஷாலினி பிரண்ட்ஸ் எல்லாம் சூர்யாவை பார்த்து ஷாக் ஆயிட்டாங்க.

ஃப்ரெண்ட்1,2,3: சீனியர்.

சூர்யா: (அப்ப தான் எல்லாரையும் பார்த்தான்) ஆஹா வானர கூட்டம் எல்லாம் ஒன்னு கூடிடுச்சா.

ஷாலினி : சீனியர் யாரைப் பார்த்து வானரக் கூட்டம் அப்படின்னு சொல்றீங்க.

அபி :உங்க எல்லாரையும் தான் மிஸ்.

சூர்யா: போட்டுக்கோ செல்லம்( இரண்டு பேரும் ஹை ஃபை பண்ணிக்கிட்டாங்க).

ஃப்ரெண்ட் 2:அண்ணா எங்களை எல்லாம் மறந்துட்டீங்களா ( இவ மட்டும் தான் சூர்யாவும் அண்ணான்னு சொல்லுவா மத்த எல்லாரும் சீனியர் சொல்லுவாங்க ).

சூர்யா: அச்சோ மதி மா ஏண்டா இப்படி சொல்ற.

பிரண்ட் 2:(மதிமதி)லாஸ்ட் டா நீங்க காலேஜ் விட்டு போகும் போது பார்த்தது அப்பறம் பார்க்கவே முடியல.

பிரண்ட் 1(அபிநயா ): சீனியர் தான் மதுரைக்கு போயிட்டாரு அப்புறம் எப்படி பார்க்கிறது.

சூர்யா: சரியா சொன்ன அபிநயா.

ஃப்ரெண்ட்3: (ஜெனி )பரவாயில்லை சீனியர் எங்க பெயர் எல்லாம் நியாபகம் இருக்கே.

சூர்யா :உங்களை எப்படி மறப்பேன் ஜெனி நாலு பேரும் சேர்ந்தா காலேஜ் இரண்டாகிடுமே.

மதி: அண்ணா ரொம்ப நாள் கழிச்சு பேசுகிறோம் இப்போ எங்களை கலாய்க்கிறத விடலையா.

சூர்யா: சரி டா எல்லாரும் எப்படி இருக்கீங்க.

மதி :நல்லா இருக்கோம் அண்ணா.

அபிநயா ஜெனி: நல்லா இருக்கோம் சீனியர்.

ஷாலினி: நானும் நல்லா இருக்கேன்.

சூர்யா: உன்னை தான் டெய்லி பார்க்கிறேனே.

ஷாலினி: ரொம்ப தான்.

மதி : படம் பார்க்க வந்தீங்களா அண்ணா.

சூர்யா: அச்சோ உங்களைப் பார்த்ததும் அவங்களை மறந்துட்டேன் பாரு. ஷாலு உனக்கு அவங்கள தெரியுமா.

ஷாலினி : ஐ ஐ ஐ அத்தை,மாமா (அவங்க ஓடிட்டா ).

சூர்யா: இங்கேயே இருங்க வந்திடுவா ( அவ பிரண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு கதிரேசன் லட்சுமி கிட்ட போனான் ).

ஷாலினி: அத்தை மாமா எப்படி இருக்கீங்க.

லட்சுமி: நல்லா இருக்கோம் நீ எப்படி இருக்க.

ஷாலினி: நல்லா இருக்கேன் அத்தை.

கதிரேசன்: என்ன வீட்டு பக்கமே வர மாட்ற.

ஷாலினி: வேலை அதிகம் மாமா அதான்.

அபி : லட்சு உனக்கு எங்க மிஸ்ஸ முன்னாடியே தெரியுமா.

லட்சுமி : ஆமா டா இவ அப்பா எனக்கு தம்பி முறை வேணும்.

அபி : ஓஹோ.

ஷாலினி : உனக்கு எப்படி அபி இவங்கள தெரியும்.

அபி : நாங்க அவங்க வீட்டுல தான் குடியிருக்கோம்.

ஷாலினி : மாடில உள்ள வீடா.

சூர்யா : ஆமா.

லட்சுமி : நீ எங்க டி இங்க வந்த.

ஷாலினி : பிரண்ட்ஸ் கூட படம் பார்க்க தான்.

சூர்யா :படம் போடப் போறான் வாங்க உள்ள போகலாம்.

ஷாலினி அவ ப்ரெண்ட்ஸ் கூட இவங்க தனியாவும் உட்கார்ந்து படம் பார்த்தாங்க.

இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு எல்லாரும் படம் முடிந்து வெளியே வந்தாங்க.

கதிரேசன்: ஷாலினி அடுத்து எங்க போக போற.

ஷாலினி: வீட்டுக்கு தான் போகணும் மாமா. அப்பா திட்டுவாங்க.

அபி: அப்போ மிஸ் எங்க கூட வாங்க.

ஷாலினி: வேண்டாம் அபி நீங்க போங்க.

லட்சுமி: உன் அப்பா கிட்ட நான் சொல்லிக்கிறேன் நீ எங்க கூடவா.

ஷாலினி: சரி அத்தை.

சூர்யா: ரெஸ்டாரண்ட் போய் சாப்பிட்டு அப்பறமா தீம் பார்க் போகலாம்.

ஷாலினி, அபி : ஐஐ, ஜாலி ஜாலி.

லட்சுமி : இதுல எது குழந்தைன்னே தெரியல.

ஷாலினி : வாங்க சீக்கிரம் போகலாம்.

அப்பறம் எல்லாரும் ஷாலினி பிரண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு ரெஸ்டாரண்ட் போய் அவங்களுக்கு பிடிச்சதை ஆர்டர் பண்ணி சாப்பிட்டாங்க.

ஷாலினி : லாஸ்டா ஐஸ் கிரீம் ஆர்டர் பண்ணி இருந்தா.

அபி : அப்பா எனக்கும் வேணும்.

ஷாலினி : வா நான் உனக்கு ஊட்டி விடுறேன்.

அபி : ஓகே.

ஷாலினி : அவளும் சாப்பிட்டு அபிக்கும் ஊட்டி விட்டா.

தீம் பார்க்,

முதல்ல டிக்கெட் வாங்கிட்டு பெரிய ராட்டினத்தில் போனாங்க.அந்த பெரிய பாக்ஸ்ல ஒன் சைட் கதிரேசன், லட்சுமி,இன்னொரு சைட் சூர்யா, ஷாலினி இரண்டு பேருக்கும் நடுவில் அபிமன்யு உட்கார்ந்து இருந்தான்.

ராட்டினம் மேல போக போக ஷாலினியும், அபியும் கத்தினாங்க.

ஷாலினிக்கு லைட்டா பயம் இருக்கவும் அபியை பிடிக்கிறதா நினைச்சு சூர்யாவ பிடிச்சிகிட்டா.

சூர்யாவும் அவ பயத்துல தான் பிடிச்சிருக்கான்னு நினைச்சு எதுவும் சொல்லாம இருந்தான்.

ஷாலினி : ( ராட்டினம் சுத்தி நிக்கும் போது தான் பார்த்தா அவன் கைய பிடிச்சிருக்கிறத )சாரி சீனியர்.

சூர்யா : பரவாயில்லை மா.

அப்பறம் ரோலர் கோஸ்டர், வாட்டர் ரெய்டு இப்படி நிறைய ரெய்டுக்கு போய் நல்லா என்ஜாய் பண்ணினாங்க.

மறுநாள் சண்டே ஷாலினிய அவ அப்பா அம்மாவோட வீட்டுக்கு வர சொல்லிட்டு கதிரேசன், லட்சுமி, சூர்யா, அபி அவங்க வீட்டுக்கு கிளம்பிட்டாங்க.

தொடரும்....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top