New member
- Joined
- Feb 8, 2025
- Messages
- 9
- Thread Author
- #1
அந்தி மாலை நேரம் அந்த காவல் நிலையத்தின் உள்ளிருந்து வெளியே வந்த காவலனிடம் "அப்புறம் எப்போ கல்யாணம் ராம்?.. வயசு 32 ஆச்சு... பேசாம எவளையாவது கூட்டிட்டு வா.... இங்கேயே கல்யாணம் பண்ணி வச்சுடுறேன்... உன் அழகுக்கும் பாடி கட்டிங்க்கும் பொண்ணுங்க லைன் ல நிப்பாங்க..." என கேலி என நினைத்து, அவன் நிலை அறிந்தும் அவன் மனதை நோகடித்து கிண்டல் செய்து விட்டு சென்றார் இன்ஸ்பெக்டர் அருண் ராஜ்...
அவர் மட்டுமா அவரை போல அனுதினமும் பலரின் பலவிதமான கேலி வார்த்தைகளில் ஒவ்வொரு முறையும் உடைந்து சிதறுபவன், எப்போதும் போல அவருக்கு வரவழைக்கப்பட்ட ஒரு சிறிய சிரிப்பை பரிசளித்து விட்டு கடமை முடிந்து வெளியே வந்தான் ராம் எனும் பரசுராமன்....
சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்தவனின் மனம் அவரின் வார்த்தைகளில் கொதித்துக் கொண்டிருக்க
அதே சமயம் அவனின் எதிரே இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு காதலர்கள் இடம் பொருள் ஏவல் அறியாமல் கண்களால் காதலில் கரைந்து கொண்டிருந்தனர்...
எதிர்பாராமல் அவர்களை கண்டவன் மனமோ, பல வித உள்ளுணர்வுகளை கட்டுபடுத்த முயன்று உள்ளூர எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது....
அவனும் உயிரும் உணர்வுகளும் கொண்ட சராசரி ஆண் மகன் தானே?
அவனுக்கும் வயதுக்கேற்ற ஆசைகளும் கனவுகளும் உண்டு..
நல்ல உயரமும் திடமான உடற்கட்டும், எப்போவாவது புன்னகைக்கும் அழகிய இதழ்களும் அவனை ஆணழகனாய் காட்ட, பல பெண்கள் அவனை விரும்பினாலும்
அனைத்தையும் விடுத்து அதை தன் குடும்பத்திற்காக கட்டுப்படுத்திக் கொண்டு வாழும் இனியவன்........
சாதாரண விவசாயியின் மகனாய் பிறந்து சில நாட்களில் தாயை இழந்த அவனுக்கு இரு அக்காக்களும் அன்னையாய் மாறி போயினர்...
அவர்களின் அன்பிலும் தந்தையின் உழைப்பிலும் கஷ்டத்திலும் படித்து, முடிந்த வரை முயன்று காவல் பணியில் சேர்ந்து அவர்களின் வளர்ப்பிற்கு மரியாதையும் பெருமையும் சேர்த்து விட்டான் ராமன்...
தமக்கை இருவரில் ஒருவருக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து முடித்து விட்டு,
அடுத்தவளுக்கு வாரன் பார்க்க துவங்க,
34 வயதை எட்டிய போதும் அவருக்கு வரன் அமையாமல் போகவே,
தாயாய் தன்னை காத்த அக்காவுக்காக தன் உணர்வுகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்பவன்....
வீட்டில் இருந்து 50கிமீ தொலைவில் சென்னையில் கிடைத்த காவல் பணியையும் ஏற்று,
தன் தமக்கை, தந்தைக்கும் தனிமை கொடுக்க கூடாது எனவும் திடமாய் எண்ணிக் கொண்டு கடமை முடிந்த அடுத்த நிமிடம் பேருந்தில் ஏறி மூன்று மணி நேர பயணத்தில் தன் வீட்டை அடைந்து விடுவான்... அதுவே அன்றாட நடைமுறையை மாறியும் போனது.....
மது,மாது,சூது என எதிலும் சிக்காமல் உறுதியாய் இருந்து, காதல் கூட தன் வருங்கால மனைவிக்கு மட்டும் தான் என உணர்வுகளை கட்டுபடுத்திக் கொண்டு நவீன ராமனாய் வாழும் ராமன் அவன்.....
அவ்வாறிருக்க அவனின் வாழ்வில் எதிர்பாரா விதமாக, அவன் உணர்வுகளை மீட்டு காதலால் சிறையெடுக்க வந்தாள் நம் சீதா பாரதி.....
அவனின் பேருந்து பயணத்தில் கிடைத்த ஒரு நல்ல தோழி...
25 வயது நிரம்பிய மாநிற அழகுடைய பெண்.. அவள் விழிகள் காண்போரை திரும்பி பார்க்க வைக்கும் பழுப்பு நிற காந்த விழிகள்...
ஒருநாள் தன் மார்கெட்டிங் வேலை விஷயமாக ராம் செல்லும் பேருந்தில் ஏறியவள், நம் காவலனை நம்பி அவனருகே அமர்ந்து " சார் உருத்திரமேரூர் வந்தா கொஞ்சம் சொல்லுங்க.. நான் இந்த ஊருக்கு புதுசு...." என உதவி கேட்க,
சரியென தலையசைத்த ராமன் அவள் அருகாமையில் சற்று உறைந்து தான் போனான் எனினும் கண்ணியத்தை கைவிடாமல் அவளின் நிழலை கூட தீண்டாமல் அமர்ந்திருந்தான்......
சரியாக இரண்டு மணி நேரம் கடக்க, அவன் அவளிடம் அவ்விடத்தை கூறி இறங்க கூற,
அவனுக்கு நன்றி கூறிய சீதா, " சார் இஃப் யூ டோண்ட் மைன் உங்க நம்பர் கொஞ்சம் தரிங்களா? ஒரு பாதுகாப்புக்காகவும் உதவி தேவைப்பட்டால் உங்களை அழைக்கவும் தான்" என கேட்க,
தயங்காமல் தன் அலைபேசி எண்ணை கொடுத்தவன் அவள் சென்று இறங்கும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்....
மற்ற பெண்களிடம் இல்லாத ஓர் புதுவித உணர்வை அவளிடம் உணர்ந்தவன் கண்ணசைத்து அவளுக்கு வழியனுப்பி வைத்து விட்டு அவளை பற்றி சிந்திக்க துவங்கினான்....
இடையில் ஏறி இடையில் இறங்கிய அவளை வீட்டிற்கு சென்ற அடுத்த நொடி மறந்து விட்டு தன் வேலைகளை தொடர,
அடுத்த இரண்டு நாட்களில் அவனுக்கு புது எண்ணிலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது...
அதில் " மிக்க நன்றி காவலரே.. உங்க நம்பர் இருப்பது எனக்கு ஒருவித தைரியத்தை கொடுத்தது" என அனுப்பி கீழே சீதா பாரதி என அனுப்பி இருந்தாள்....
வழக்கம் போல் அதை அலட்சியம் செய்து விட்டு " சரி மா.." என பதில் அனுப்பி விட்டு தன் வேலையை தொடர்ந்தான் அக்காவலன்....
அடுத்த நாள் அவளின் எண்ணிலிருந்து காலை வணக்கம் செய்தி வர, பல வேளைகளில் அதை கவனிக்காமல் இருந்தான்... கவனித்தால் எங்கு தன் மனம் மாறி விடுமோ எனும் பயமும் ஓர் காரணம். எனில் அவனும் அல்லவா அவளை பற்றி சிந்திக்க துவங்கி இருந்தான்??..
தன்னை மறக்க விடாமல் அவளும் இரவு வணக்கம் வரை அனுப்பி விட்டு அவளின் பட செய்தியில் ஒரு நட்பு கவிதை எழுதி வைத்திருக்க,
அதை படித்து பார்த்த காவலன் மனமோ இன்பமாய் அதிர்ந்தது... எனில் அவள் அவனின் புகைப்படத்தை தத்ரூபமாக வரைந்து கீழே,
"முதல் சந்திப்பில்
காதல் மட்டுமல்ல
நட்பும் கூட மலர்ந்தது
காவலன் அவனின் கண்ணியத்தில்"
என எழுதி இருக்க,
அதில் இன்பமாய் அதிர்ந்தவன் "நன்றி மா" என அனுப்பி இருந்தான்....
அடுத்த நாள் காலையிலும் அவளின் காலை வணக்கம் செய்தி இருக்க, நட்பாய் அவளிடம் பதில் வணக்கம் கூறி அனுப்பி
விட்டு தன் வேலைகளை தொடர்ந்தான்...
இவ்வாறாக துவங்கிய இவர்களின் நட்பு ஒரு வருடமாய் அலைபேசியில் மட்டுமே தொடர,
நாளடைவில் இரவு வணக்கம் பரிமாற்றங்கள் மாறி, அடுத்த கட்டமாக தங்கள் குடும்பம், நட்பு, உணர்வுகள் என அன்றைய நடவடிக்கைகள் வரை அனைத்தையும் பகிர்ந்து கொள்ள துவங்கினர்...
அவனின் நிலை உணர்ந்த அவளுக்கு அவன் மீது தோன்றிய ஈர்ப்பு காதலாய் மாற இரவெனவும் பாராமல் அதை அவனிடம் தயங்காமல் கூறவும் செய்தாள்...
அவனுக்கும் அவளிடம் புதிதாய் பேச துவங்கிய நாளில் இருந்தே புதுவித ஈர்ப்பு ஏற்பட,
தன் குடும்பத்திற்காக அவளிடம் அதை மறைத்து " சாரி சீதா.. உன் அம்மாக்கு நீ முக்கியம்.. என் அக்கா வாழ்க்கை சரியாகாம என்னால உன்னை காதலிக்கவும் முடியாது.. கல்யாணம் பண்ணி வாழவும் முடியாது.. உனக்கு தவறான ஒரு நம்பிக்கையை கொடுக்க எனக்கு இஷ்டமில்ல சீதா.... சோ இனி பேச வேண்டாம்" என பதில் அளித்து விட்டு அவளின் அலைபேசி எண்ணை பிளாக் செய்து விட்டு கட்டிலில் விழுந்தான்....
ராம் கண்களை மூட தவறாமல் வந்து சென்றது சீதாவுடனான நினைவுகள்..
"ஒரே முறை தன்னை பார்த்து பேசி பழகி தன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, என்னை நானாகவே ஏற்றுக் கொண்ட முதல் சிநேகிதி அவள்... அவள் மேல் தனக்கும் தானே ஈர்ப்பு தோன்றியது... அதை வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையில் அவளை நிந்தித்து விட்டோமே" என்ற கவலையில் வீழ்ந்தவன் வெளியே சிரித்தாலும் அவள் நினைவில் அனுதினமும் மருகி கொண்டிருந்தான்....
விரும்பும் ஒன்றை இழப்பது தன் வாழ்வில் புதிதல்ல எனினும் அவளோடு குறுஞ்செய்தியில் வாழ்ந்த நாட்கள் மனதின் ரணத்தை மயிலிறகால் வருடிக் கொடுத்தன அல்லவா??
அவளின் குறுஞ்செய்தி தான் காலை எழ வைப்பதும், இரவு உறங்க வைப்பதும் என்றானது.. அலைபேசியை கையில் எடுக்காதவன் கடமை முடிந்த அடுத்த நொடி அவளின் செய்தியை தேடி பார்ப்பான்...
அவன் தேடலை பொய்யாக்காமல் தன் மனதில் தோன்றிய அனைத்தையும் உளறி கொட்டி வைத்திருப்பாள் பாரதி...
அனைத்தையும் சிந்தித்தவன் கண்கள் நீர்க்குளமாய் மாறியது...
அவளைப் பற்றி வெளியே கூறவும் முடியாமல் அவள் தான் வேண்டும் என அவளிடமே கூட கூற முடியாமல் தவிக்கும் தவிப்பு உயிரை கொல்லும் வலியை கொடுக்க,
தன் மனதையும் காதல் உணர்வுகளையும் கொன்று தன் குடும்பத்துக்காக அதிலிருந்து மீள முடியாமல் தவித்து,
வெளியே எப்போதும் போல நேரத்தையும் நாட்களையும் யுகமாய் கடத்திக் கொண்டிருந்தான் ராம்..
இவனே இவ்வாறு எனில் அங்கு அவளின் நிலையோ அந்தோ பரிதாபம்... வீட்டிற்கு ஒரே பெண்.. தந்தையில்லா அவளுக்கு தாய் தான் அனைத்தும்.. தன் தாய்மாமனை கட்டி வைக்க துணிந்த அவள் தாயிடம் ராமனை காதலிப்பதை கூறி கெஞ்சி அழுது பிடிவாதத்தால் அவனுக்காக காத்திருந்தாள் சீதா....
மாதங்கள் ஆறு கடந்த நிலையில் இருவரும் பேசாமல் பார்க்காமலேயே ஒருவரின் நினைவில் ஒருவர் வாழ துவங்கி விட,
அவனின் உணர்வுகளை தன் உணர்வுகளாக பாவித்து,
அவனை முழுதாய் உணர்ந்த பெண்ணவள் தன் தாயிடம் கூறி விட்டு ராமனை காண தேனியில் இருந்து சென்னைக்கு சென்றாள்...
இது தான் அவர்களின் இரண்டாவது சந்திப்பே....
எனில் அவன் கடமைக்கு ஏற்றார்போல் அவனை அவன் போக்கில் விட்டு, குடும்பத்துக்கும் அவனுக்குமான நேரத்தை அவனுக்கு கொடுத்து,
தனக்கான அவனின் இரண்டு மணி நேர பயண நேரத்தில் மட்டும் அவனோடு பேசி தனக்கான நேரத்தை எடுத்துக் கொள்வாள் சீதா...
அதிலும் பல நாட்கள் அவன் பயணம் உறக்கமும் கூட்ட நெரிசலுமாக மாறி விடின் அந்நேரத்தையும் அவனுக்காக கொடுத்து அவன் நினைவிலேயே மனதில் உள்ளதை அனுப்பி விட்டு அவன் பதிலுக்காக காத்திருப்பாள்..... அவனை அவனாய் ஏற்றுக் கொண்டு அவன் மீது காதல் வசப்பட்டவள் சீதா பாரதி.....
இராமனும் அவ்வாறே அவளின் வேலை நேரம் தன்னுடைய பயண நேரமாக இருப்பினும் அவளை தொந்தரவு செய்ய எண்ணாமல் தன் மனதின் உணர்வினை அலைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டு அவளின் பதிலுக்காக காத்திருப்பான்...
இருவருக்கும் ஒருவரை ஒருவர் காணும் ஆவல் எழுந்தாலும் வீடியோ காலில் கூட அழைத்து பேச தயங்கி தன் மன உணர்வுகளை குறுஞ்செய்தி மூலமாக மட்டுமே பரிமாறிக் கொள்வர்......
அவ்வாறான அவர்களின் காதல் பார்க்காமல் பேசாமல் கூட இருவரின் மனதிலும் ஆழமாய் வளர்ந்து கொண்டிருக்க,
அன்றென ஒருநாள் சென்னையில் அதே பேருந்து நிலையத்தில் அவனை காண காத்திருந்தாள் சீதா...
அவர் மட்டுமா அவரை போல அனுதினமும் பலரின் பலவிதமான கேலி வார்த்தைகளில் ஒவ்வொரு முறையும் உடைந்து சிதறுபவன், எப்போதும் போல அவருக்கு வரவழைக்கப்பட்ட ஒரு சிறிய சிரிப்பை பரிசளித்து விட்டு கடமை முடிந்து வெளியே வந்தான் ராம் எனும் பரசுராமன்....
சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்தவனின் மனம் அவரின் வார்த்தைகளில் கொதித்துக் கொண்டிருக்க
அதே சமயம் அவனின் எதிரே இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு காதலர்கள் இடம் பொருள் ஏவல் அறியாமல் கண்களால் காதலில் கரைந்து கொண்டிருந்தனர்...
எதிர்பாராமல் அவர்களை கண்டவன் மனமோ, பல வித உள்ளுணர்வுகளை கட்டுபடுத்த முயன்று உள்ளூர எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது....
அவனும் உயிரும் உணர்வுகளும் கொண்ட சராசரி ஆண் மகன் தானே?
அவனுக்கும் வயதுக்கேற்ற ஆசைகளும் கனவுகளும் உண்டு..
நல்ல உயரமும் திடமான உடற்கட்டும், எப்போவாவது புன்னகைக்கும் அழகிய இதழ்களும் அவனை ஆணழகனாய் காட்ட, பல பெண்கள் அவனை விரும்பினாலும்
அனைத்தையும் விடுத்து அதை தன் குடும்பத்திற்காக கட்டுப்படுத்திக் கொண்டு வாழும் இனியவன்........
சாதாரண விவசாயியின் மகனாய் பிறந்து சில நாட்களில் தாயை இழந்த அவனுக்கு இரு அக்காக்களும் அன்னையாய் மாறி போயினர்...
அவர்களின் அன்பிலும் தந்தையின் உழைப்பிலும் கஷ்டத்திலும் படித்து, முடிந்த வரை முயன்று காவல் பணியில் சேர்ந்து அவர்களின் வளர்ப்பிற்கு மரியாதையும் பெருமையும் சேர்த்து விட்டான் ராமன்...
தமக்கை இருவரில் ஒருவருக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து முடித்து விட்டு,
அடுத்தவளுக்கு வாரன் பார்க்க துவங்க,
34 வயதை எட்டிய போதும் அவருக்கு வரன் அமையாமல் போகவே,
தாயாய் தன்னை காத்த அக்காவுக்காக தன் உணர்வுகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்பவன்....
வீட்டில் இருந்து 50கிமீ தொலைவில் சென்னையில் கிடைத்த காவல் பணியையும் ஏற்று,
தன் தமக்கை, தந்தைக்கும் தனிமை கொடுக்க கூடாது எனவும் திடமாய் எண்ணிக் கொண்டு கடமை முடிந்த அடுத்த நிமிடம் பேருந்தில் ஏறி மூன்று மணி நேர பயணத்தில் தன் வீட்டை அடைந்து விடுவான்... அதுவே அன்றாட நடைமுறையை மாறியும் போனது.....
மது,மாது,சூது என எதிலும் சிக்காமல் உறுதியாய் இருந்து, காதல் கூட தன் வருங்கால மனைவிக்கு மட்டும் தான் என உணர்வுகளை கட்டுபடுத்திக் கொண்டு நவீன ராமனாய் வாழும் ராமன் அவன்.....
அவ்வாறிருக்க அவனின் வாழ்வில் எதிர்பாரா விதமாக, அவன் உணர்வுகளை மீட்டு காதலால் சிறையெடுக்க வந்தாள் நம் சீதா பாரதி.....
அவனின் பேருந்து பயணத்தில் கிடைத்த ஒரு நல்ல தோழி...
25 வயது நிரம்பிய மாநிற அழகுடைய பெண்.. அவள் விழிகள் காண்போரை திரும்பி பார்க்க வைக்கும் பழுப்பு நிற காந்த விழிகள்...
ஒருநாள் தன் மார்கெட்டிங் வேலை விஷயமாக ராம் செல்லும் பேருந்தில் ஏறியவள், நம் காவலனை நம்பி அவனருகே அமர்ந்து " சார் உருத்திரமேரூர் வந்தா கொஞ்சம் சொல்லுங்க.. நான் இந்த ஊருக்கு புதுசு...." என உதவி கேட்க,
சரியென தலையசைத்த ராமன் அவள் அருகாமையில் சற்று உறைந்து தான் போனான் எனினும் கண்ணியத்தை கைவிடாமல் அவளின் நிழலை கூட தீண்டாமல் அமர்ந்திருந்தான்......
சரியாக இரண்டு மணி நேரம் கடக்க, அவன் அவளிடம் அவ்விடத்தை கூறி இறங்க கூற,
அவனுக்கு நன்றி கூறிய சீதா, " சார் இஃப் யூ டோண்ட் மைன் உங்க நம்பர் கொஞ்சம் தரிங்களா? ஒரு பாதுகாப்புக்காகவும் உதவி தேவைப்பட்டால் உங்களை அழைக்கவும் தான்" என கேட்க,
தயங்காமல் தன் அலைபேசி எண்ணை கொடுத்தவன் அவள் சென்று இறங்கும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்....
மற்ற பெண்களிடம் இல்லாத ஓர் புதுவித உணர்வை அவளிடம் உணர்ந்தவன் கண்ணசைத்து அவளுக்கு வழியனுப்பி வைத்து விட்டு அவளை பற்றி சிந்திக்க துவங்கினான்....
இடையில் ஏறி இடையில் இறங்கிய அவளை வீட்டிற்கு சென்ற அடுத்த நொடி மறந்து விட்டு தன் வேலைகளை தொடர,
அடுத்த இரண்டு நாட்களில் அவனுக்கு புது எண்ணிலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது...
அதில் " மிக்க நன்றி காவலரே.. உங்க நம்பர் இருப்பது எனக்கு ஒருவித தைரியத்தை கொடுத்தது" என அனுப்பி கீழே சீதா பாரதி என அனுப்பி இருந்தாள்....
வழக்கம் போல் அதை அலட்சியம் செய்து விட்டு " சரி மா.." என பதில் அனுப்பி விட்டு தன் வேலையை தொடர்ந்தான் அக்காவலன்....
அடுத்த நாள் அவளின் எண்ணிலிருந்து காலை வணக்கம் செய்தி வர, பல வேளைகளில் அதை கவனிக்காமல் இருந்தான்... கவனித்தால் எங்கு தன் மனம் மாறி விடுமோ எனும் பயமும் ஓர் காரணம். எனில் அவனும் அல்லவா அவளை பற்றி சிந்திக்க துவங்கி இருந்தான்??..
தன்னை மறக்க விடாமல் அவளும் இரவு வணக்கம் வரை அனுப்பி விட்டு அவளின் பட செய்தியில் ஒரு நட்பு கவிதை எழுதி வைத்திருக்க,
அதை படித்து பார்த்த காவலன் மனமோ இன்பமாய் அதிர்ந்தது... எனில் அவள் அவனின் புகைப்படத்தை தத்ரூபமாக வரைந்து கீழே,
"முதல் சந்திப்பில்
காதல் மட்டுமல்ல
நட்பும் கூட மலர்ந்தது
காவலன் அவனின் கண்ணியத்தில்"
என எழுதி இருக்க,
அதில் இன்பமாய் அதிர்ந்தவன் "நன்றி மா" என அனுப்பி இருந்தான்....
அடுத்த நாள் காலையிலும் அவளின் காலை வணக்கம் செய்தி இருக்க, நட்பாய் அவளிடம் பதில் வணக்கம் கூறி அனுப்பி
விட்டு தன் வேலைகளை தொடர்ந்தான்...
இவ்வாறாக துவங்கிய இவர்களின் நட்பு ஒரு வருடமாய் அலைபேசியில் மட்டுமே தொடர,
நாளடைவில் இரவு வணக்கம் பரிமாற்றங்கள் மாறி, அடுத்த கட்டமாக தங்கள் குடும்பம், நட்பு, உணர்வுகள் என அன்றைய நடவடிக்கைகள் வரை அனைத்தையும் பகிர்ந்து கொள்ள துவங்கினர்...
அவனின் நிலை உணர்ந்த அவளுக்கு அவன் மீது தோன்றிய ஈர்ப்பு காதலாய் மாற இரவெனவும் பாராமல் அதை அவனிடம் தயங்காமல் கூறவும் செய்தாள்...
அவனுக்கும் அவளிடம் புதிதாய் பேச துவங்கிய நாளில் இருந்தே புதுவித ஈர்ப்பு ஏற்பட,
தன் குடும்பத்திற்காக அவளிடம் அதை மறைத்து " சாரி சீதா.. உன் அம்மாக்கு நீ முக்கியம்.. என் அக்கா வாழ்க்கை சரியாகாம என்னால உன்னை காதலிக்கவும் முடியாது.. கல்யாணம் பண்ணி வாழவும் முடியாது.. உனக்கு தவறான ஒரு நம்பிக்கையை கொடுக்க எனக்கு இஷ்டமில்ல சீதா.... சோ இனி பேச வேண்டாம்" என பதில் அளித்து விட்டு அவளின் அலைபேசி எண்ணை பிளாக் செய்து விட்டு கட்டிலில் விழுந்தான்....
ராம் கண்களை மூட தவறாமல் வந்து சென்றது சீதாவுடனான நினைவுகள்..
"ஒரே முறை தன்னை பார்த்து பேசி பழகி தன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, என்னை நானாகவே ஏற்றுக் கொண்ட முதல் சிநேகிதி அவள்... அவள் மேல் தனக்கும் தானே ஈர்ப்பு தோன்றியது... அதை வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையில் அவளை நிந்தித்து விட்டோமே" என்ற கவலையில் வீழ்ந்தவன் வெளியே சிரித்தாலும் அவள் நினைவில் அனுதினமும் மருகி கொண்டிருந்தான்....
விரும்பும் ஒன்றை இழப்பது தன் வாழ்வில் புதிதல்ல எனினும் அவளோடு குறுஞ்செய்தியில் வாழ்ந்த நாட்கள் மனதின் ரணத்தை மயிலிறகால் வருடிக் கொடுத்தன அல்லவா??
அவளின் குறுஞ்செய்தி தான் காலை எழ வைப்பதும், இரவு உறங்க வைப்பதும் என்றானது.. அலைபேசியை கையில் எடுக்காதவன் கடமை முடிந்த அடுத்த நொடி அவளின் செய்தியை தேடி பார்ப்பான்...
அவன் தேடலை பொய்யாக்காமல் தன் மனதில் தோன்றிய அனைத்தையும் உளறி கொட்டி வைத்திருப்பாள் பாரதி...
அனைத்தையும் சிந்தித்தவன் கண்கள் நீர்க்குளமாய் மாறியது...
அவளைப் பற்றி வெளியே கூறவும் முடியாமல் அவள் தான் வேண்டும் என அவளிடமே கூட கூற முடியாமல் தவிக்கும் தவிப்பு உயிரை கொல்லும் வலியை கொடுக்க,
தன் மனதையும் காதல் உணர்வுகளையும் கொன்று தன் குடும்பத்துக்காக அதிலிருந்து மீள முடியாமல் தவித்து,
வெளியே எப்போதும் போல நேரத்தையும் நாட்களையும் யுகமாய் கடத்திக் கொண்டிருந்தான் ராம்..
இவனே இவ்வாறு எனில் அங்கு அவளின் நிலையோ அந்தோ பரிதாபம்... வீட்டிற்கு ஒரே பெண்.. தந்தையில்லா அவளுக்கு தாய் தான் அனைத்தும்.. தன் தாய்மாமனை கட்டி வைக்க துணிந்த அவள் தாயிடம் ராமனை காதலிப்பதை கூறி கெஞ்சி அழுது பிடிவாதத்தால் அவனுக்காக காத்திருந்தாள் சீதா....
மாதங்கள் ஆறு கடந்த நிலையில் இருவரும் பேசாமல் பார்க்காமலேயே ஒருவரின் நினைவில் ஒருவர் வாழ துவங்கி விட,
அவனின் உணர்வுகளை தன் உணர்வுகளாக பாவித்து,
அவனை முழுதாய் உணர்ந்த பெண்ணவள் தன் தாயிடம் கூறி விட்டு ராமனை காண தேனியில் இருந்து சென்னைக்கு சென்றாள்...
இது தான் அவர்களின் இரண்டாவது சந்திப்பே....
எனில் அவன் கடமைக்கு ஏற்றார்போல் அவனை அவன் போக்கில் விட்டு, குடும்பத்துக்கும் அவனுக்குமான நேரத்தை அவனுக்கு கொடுத்து,
தனக்கான அவனின் இரண்டு மணி நேர பயண நேரத்தில் மட்டும் அவனோடு பேசி தனக்கான நேரத்தை எடுத்துக் கொள்வாள் சீதா...
அதிலும் பல நாட்கள் அவன் பயணம் உறக்கமும் கூட்ட நெரிசலுமாக மாறி விடின் அந்நேரத்தையும் அவனுக்காக கொடுத்து அவன் நினைவிலேயே மனதில் உள்ளதை அனுப்பி விட்டு அவன் பதிலுக்காக காத்திருப்பாள்..... அவனை அவனாய் ஏற்றுக் கொண்டு அவன் மீது காதல் வசப்பட்டவள் சீதா பாரதி.....
இராமனும் அவ்வாறே அவளின் வேலை நேரம் தன்னுடைய பயண நேரமாக இருப்பினும் அவளை தொந்தரவு செய்ய எண்ணாமல் தன் மனதின் உணர்வினை அலைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டு அவளின் பதிலுக்காக காத்திருப்பான்...
இருவருக்கும் ஒருவரை ஒருவர் காணும் ஆவல் எழுந்தாலும் வீடியோ காலில் கூட அழைத்து பேச தயங்கி தன் மன உணர்வுகளை குறுஞ்செய்தி மூலமாக மட்டுமே பரிமாறிக் கொள்வர்......
அவ்வாறான அவர்களின் காதல் பார்க்காமல் பேசாமல் கூட இருவரின் மனதிலும் ஆழமாய் வளர்ந்து கொண்டிருக்க,
அன்றென ஒருநாள் சென்னையில் அதே பேருந்து நிலையத்தில் அவனை காண காத்திருந்தாள் சீதா...