• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 8, 2025
Messages
9
அந்தி மாலை நேரம் அந்த காவல் நிலையத்தின் உள்ளிருந்து வெளியே வந்த காவலனிடம் "அப்புறம் எப்போ கல்யாணம் ராம்?.. வயசு 32 ஆச்சு... பேசாம எவளையாவது கூட்டிட்டு வா.... இங்கேயே கல்யாணம் பண்ணி வச்சுடுறேன்... உன் அழகுக்கும் பாடி கட்டிங்க்கும் பொண்ணுங்க லைன் ல நிப்பாங்க..." என கேலி என நினைத்து, அவன் நிலை அறிந்தும் அவன் மனதை நோகடித்து கிண்டல் செய்து விட்டு சென்றார் இன்ஸ்பெக்டர் அருண் ராஜ்...

அவர் மட்டுமா அவரை போல அனுதினமும் பலரின் பலவிதமான கேலி வார்த்தைகளில் ஒவ்வொரு முறையும் உடைந்து சிதறுபவன், எப்போதும் போல அவருக்கு வரவழைக்கப்பட்ட ஒரு சிறிய சிரிப்பை பரிசளித்து விட்டு கடமை முடிந்து வெளியே வந்தான் ராம் எனும் பரசுராமன்....

சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்தவனின் மனம் அவரின் வார்த்தைகளில் கொதித்துக் கொண்டிருக்க

அதே சமயம் அவனின் எதிரே இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு காதலர்கள் இடம் பொருள் ஏவல் அறியாமல் கண்களால் காதலில் கரைந்து கொண்டிருந்தனர்...

எதிர்பாராமல் அவர்களை கண்டவன் மனமோ, பல வித உள்ளுணர்வுகளை கட்டுபடுத்த முயன்று உள்ளூர எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது....

அவனும் உயிரும் உணர்வுகளும் கொண்ட சராசரி ஆண் மகன் தானே?
அவனுக்கும் வயதுக்கேற்ற ஆசைகளும் கனவுகளும் உண்டு..


நல்ல உயரமும் திடமான உடற்கட்டும், எப்போவாவது புன்னகைக்கும் அழகிய இதழ்களும் அவனை ஆணழகனாய் காட்ட, பல பெண்கள் அவனை விரும்பினாலும்
அனைத்தையும் விடுத்து அதை தன் குடும்பத்திற்காக கட்டுப்படுத்திக் கொண்டு வாழும் இனியவன்........


சாதாரண விவசாயியின் மகனாய் பிறந்து சில நாட்களில் தாயை இழந்த அவனுக்கு இரு அக்காக்களும் அன்னையாய் மாறி போயினர்...

அவர்களின் அன்பிலும் தந்தையின் உழைப்பிலும் கஷ்டத்திலும் படித்து, முடிந்த வரை முயன்று காவல் பணியில் சேர்ந்து அவர்களின் வளர்ப்பிற்கு மரியாதையும் பெருமையும் சேர்த்து விட்டான் ராமன்...

தமக்கை இருவரில் ஒருவருக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து முடித்து விட்டு,

அடுத்தவளுக்கு வாரன் பார்க்க துவங்க,
34 வயதை எட்டிய போதும் அவருக்கு வரன் அமையாமல் போகவே,

தாயாய் தன்னை காத்த அக்காவுக்காக தன் உணர்வுகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்பவன்....

வீட்டில் இருந்து 50கிமீ தொலைவில் சென்னையில் கிடைத்த காவல் பணியையும் ஏற்று,

தன் தமக்கை, தந்தைக்கும் தனிமை கொடுக்க கூடாது எனவும் திடமாய் எண்ணிக் கொண்டு கடமை முடிந்த அடுத்த நிமிடம் பேருந்தில் ஏறி மூன்று மணி நேர பயணத்தில் தன் வீட்டை அடைந்து விடுவான்... அதுவே அன்றாட நடைமுறையை மாறியும் போனது.....

மது,மாது,சூது என எதிலும் சிக்காமல் உறுதியாய் இருந்து, காதல் கூட தன் வருங்கால மனைவிக்கு மட்டும் தான் என உணர்வுகளை கட்டுபடுத்திக் கொண்டு நவீன ராமனாய் வாழும் ராமன் அவன்.....

அவ்வாறிருக்க அவனின் வாழ்வில் எதிர்பாரா விதமாக, அவன் உணர்வுகளை மீட்டு காதலால் சிறையெடுக்க வந்தாள் நம் சீதா பாரதி.....

அவனின் பேருந்து பயணத்தில் கிடைத்த ஒரு நல்ல தோழி...

25 வயது நிரம்பிய மாநிற அழகுடைய பெண்.. அவள் விழிகள் காண்போரை திரும்பி பார்க்க வைக்கும் பழுப்பு நிற காந்த விழிகள்...

ஒருநாள் தன் மார்கெட்டிங் வேலை விஷயமாக ராம் செல்லும் பேருந்தில் ஏறியவள், நம் காவலனை நம்பி அவனருகே அமர்ந்து " சார் உருத்திரமேரூர் வந்தா கொஞ்சம் சொல்லுங்க.. நான் இந்த ஊருக்கு புதுசு...." என உதவி கேட்க,

சரியென தலையசைத்த ராமன் அவள் அருகாமையில் சற்று உறைந்து தான் போனான் எனினும் கண்ணியத்தை கைவிடாமல் அவளின் நிழலை கூட தீண்டாமல் அமர்ந்திருந்தான்......


சரியாக இரண்டு மணி நேரம் கடக்க, அவன் அவளிடம் அவ்விடத்தை கூறி இறங்க கூற,

அவனுக்கு நன்றி கூறிய சீதா, " சார் இஃப் யூ டோண்ட் மைன் உங்க நம்பர் கொஞ்சம் தரிங்களா? ஒரு பாதுகாப்புக்காகவும் உதவி தேவைப்பட்டால் உங்களை அழைக்கவும் தான்" என கேட்க,

தயங்காமல் தன் அலைபேசி எண்ணை கொடுத்தவன் அவள் சென்று இறங்கும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்....

மற்ற பெண்களிடம் இல்லாத ஓர் புதுவித உணர்வை அவளிடம் உணர்ந்தவன் கண்ணசைத்து அவளுக்கு வழியனுப்பி வைத்து விட்டு அவளை பற்றி சிந்திக்க துவங்கினான்....

இடையில் ஏறி இடையில் இறங்கிய அவளை வீட்டிற்கு சென்ற அடுத்த நொடி மறந்து விட்டு தன் வேலைகளை தொடர,

அடுத்த இரண்டு நாட்களில் அவனுக்கு புது எண்ணிலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது...

அதில் " மிக்க நன்றி காவலரே.. உங்க நம்பர் இருப்பது எனக்கு ஒருவித தைரியத்தை கொடுத்தது" என அனுப்பி கீழே சீதா பாரதி என அனுப்பி இருந்தாள்....

வழக்கம் போல் அதை அலட்சியம் செய்து விட்டு " சரி மா.." என பதில் அனுப்பி விட்டு தன் வேலையை தொடர்ந்தான் அக்காவலன்....

அடுத்த நாள் அவளின் எண்ணிலிருந்து காலை வணக்கம் செய்தி வர, பல வேளைகளில் அதை கவனிக்காமல் இருந்தான்... கவனித்தால் எங்கு தன் மனம் மாறி விடுமோ எனும் பயமும் ஓர் காரணம். எனில் அவனும் அல்லவா அவளை பற்றி சிந்திக்க துவங்கி இருந்தான்??..

தன்னை மறக்க விடாமல் அவளும் இரவு வணக்கம் வரை அனுப்பி விட்டு அவளின் பட செய்தியில் ஒரு நட்பு கவிதை எழுதி வைத்திருக்க,

அதை படித்து பார்த்த காவலன் மனமோ இன்பமாய் அதிர்ந்தது... எனில் அவள் அவனின் புகைப்படத்தை தத்ரூபமாக வரைந்து கீழே,

"முதல் சந்திப்பில்
காதல் மட்டுமல்ல
நட்பும் கூட மலர்ந்தது
காவலன் அவனின் கண்ணியத்தில்"
என எழுதி இருக்க,

அதில் இன்பமாய் அதிர்ந்தவன் "நன்றி மா" என அனுப்பி இருந்தான்....

அடுத்த நாள் காலையிலும் அவளின் காலை வணக்கம் செய்தி இருக்க, நட்பாய் அவளிடம் பதில் வணக்கம் கூறி அனுப்பி
விட்டு தன் வேலைகளை தொடர்ந்தான்...

இவ்வாறாக துவங்கிய இவர்களின் நட்பு ஒரு வருடமாய் அலைபேசியில் மட்டுமே தொடர,

நாளடைவில் இரவு வணக்கம் பரிமாற்றங்கள் மாறி, அடுத்த கட்டமாக தங்கள் குடும்பம், நட்பு, உணர்வுகள் என அன்றைய நடவடிக்கைகள் வரை அனைத்தையும் பகிர்ந்து கொள்ள துவங்கினர்...

அவனின் நிலை உணர்ந்த அவளுக்கு அவன் மீது தோன்றிய ஈர்ப்பு காதலாய் மாற இரவெனவும் பாராமல் அதை அவனிடம் தயங்காமல் கூறவும் செய்தாள்...

அவனுக்கும் அவளிடம் புதிதாய் பேச துவங்கிய நாளில் இருந்தே புதுவித ஈர்ப்பு ஏற்பட,

தன் குடும்பத்திற்காக அவளிடம் அதை மறைத்து " சாரி சீதா.. உன் அம்மாக்கு நீ முக்கியம்.. என் அக்கா வாழ்க்கை சரியாகாம என்னால உன்னை காதலிக்கவும் முடியாது.. கல்யாணம் பண்ணி வாழவும் முடியாது.. உனக்கு தவறான ஒரு நம்பிக்கையை கொடுக்க எனக்கு இஷ்டமில்ல சீதா.... சோ இனி பேச வேண்டாம்" என பதில் அளித்து விட்டு அவளின் அலைபேசி எண்ணை பிளாக் செய்து விட்டு கட்டிலில் விழுந்தான்....

ராம் கண்களை மூட தவறாமல் வந்து சென்றது சீதாவுடனான நினைவுகள்..

"ஒரே முறை தன்னை பார்த்து பேசி பழகி தன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, என்னை நானாகவே ஏற்றுக் கொண்ட முதல் சிநேகிதி அவள்... அவள் மேல் தனக்கும் தானே ஈர்ப்பு தோன்றியது... அதை வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையில் அவளை நிந்தித்து விட்டோமே" என்ற கவலையில் வீழ்ந்தவன் வெளியே சிரித்தாலும் அவள் நினைவில் அனுதினமும் மருகி கொண்டிருந்தான்....

விரும்பும் ஒன்றை இழப்பது தன் வாழ்வில் புதிதல்ல எனினும் அவளோடு குறுஞ்செய்தியில் வாழ்ந்த நாட்கள் மனதின் ரணத்தை மயிலிறகால் வருடிக் கொடுத்தன அல்லவா??

அவளின் குறுஞ்செய்தி தான் காலை எழ வைப்பதும், இரவு உறங்க வைப்பதும் என்றானது.. அலைபேசியை கையில் எடுக்காதவன் கடமை முடிந்த அடுத்த நொடி அவளின் செய்தியை தேடி பார்ப்பான்...

அவன் தேடலை பொய்யாக்காமல் தன் மனதில் தோன்றிய அனைத்தையும் உளறி கொட்டி வைத்திருப்பாள் பாரதி...

அனைத்தையும் சிந்தித்தவன் கண்கள் நீர்க்குளமாய் மாறியது...

அவளைப் பற்றி வெளியே கூறவும் முடியாமல் அவள் தான் வேண்டும் என அவளிடமே கூட கூற முடியாமல் தவிக்கும் தவிப்பு உயிரை கொல்லும் வலியை கொடுக்க,

தன் மனதையும் காதல் உணர்வுகளையும் கொன்று தன் குடும்பத்துக்காக அதிலிருந்து மீள முடியாமல் தவித்து,
வெளியே எப்போதும் போல நேரத்தையும் நாட்களையும் யுகமாய் கடத்திக் கொண்டிருந்தான் ராம்..

இவனே இவ்வாறு எனில் அங்கு அவளின் நிலையோ அந்தோ பரிதாபம்... வீட்டிற்கு ஒரே பெண்.. தந்தையில்லா அவளுக்கு தாய் தான் அனைத்தும்.. தன் தாய்மாமனை கட்டி வைக்க துணிந்த அவள் தாயிடம் ராமனை காதலிப்பதை கூறி கெஞ்சி அழுது பிடிவாதத்தால் அவனுக்காக காத்திருந்தாள் சீதா....

மாதங்கள் ஆறு கடந்த நிலையில் இருவரும் பேசாமல் பார்க்காமலேயே ஒருவரின் நினைவில் ஒருவர் வாழ துவங்கி விட,

அவனின் உணர்வுகளை தன் உணர்வுகளாக பாவித்து,

அவனை முழுதாய் உணர்ந்த பெண்ணவள் தன் தாயிடம் கூறி விட்டு ராமனை காண தேனியில் இருந்து சென்னைக்கு சென்றாள்...

இது தான் அவர்களின் இரண்டாவது சந்திப்பே....

எனில் அவன் கடமைக்கு ஏற்றார்போல் அவனை அவன் போக்கில் விட்டு, குடும்பத்துக்கும் அவனுக்குமான நேரத்தை அவனுக்கு கொடுத்து,

தனக்கான அவனின் இரண்டு மணி நேர பயண நேரத்தில் மட்டும் அவனோடு பேசி தனக்கான நேரத்தை எடுத்துக் கொள்வாள் சீதா...

அதிலும் பல நாட்கள் அவன் பயணம் உறக்கமும் கூட்ட நெரிசலுமாக மாறி விடின் அந்நேரத்தையும் அவனுக்காக கொடுத்து அவன் நினைவிலேயே மனதில் உள்ளதை அனுப்பி விட்டு அவன் பதிலுக்காக காத்திருப்பாள்..... அவனை அவனாய் ஏற்றுக் கொண்டு அவன் மீது காதல் வசப்பட்டவள் சீதா பாரதி.....

இராமனும் அவ்வாறே அவளின் வேலை நேரம் தன்னுடைய பயண நேரமாக இருப்பினும் அவளை தொந்தரவு செய்ய எண்ணாமல் தன் மனதின் உணர்வினை அலைபேசியில் குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டு அவளின் பதிலுக்காக காத்திருப்பான்...

இருவருக்கும் ஒருவரை ஒருவர் காணும் ஆவல் எழுந்தாலும் வீடியோ காலில் கூட அழைத்து பேச தயங்கி தன் மன உணர்வுகளை குறுஞ்செய்தி மூலமாக மட்டுமே பரிமாறிக் கொள்வர்......

அவ்வாறான அவர்களின் காதல் பார்க்காமல் பேசாமல் கூட இருவரின் மனதிலும் ஆழமாய் வளர்ந்து கொண்டிருக்க,

அன்றென ஒருநாள் சென்னையில் அதே பேருந்து நிலையத்தில் அவனை காண காத்திருந்தாள் சீதா...
 

Attachments

  • InShot_20250210_211913385.jpg
    InShot_20250210_211913385.jpg
    830.4 KB · Views: 36
Joined
Feb 8, 2025
Messages
9
அவளை அங்கு பார்ப்போம் என எதிர்பாரா ராம் அவளை கண்டதும் எங்கு தன் உணர்வுகள் கட்டவிழ்ந்து விடுமோ என அஞ்சி அவளறியாமல் அவளை கடந்து சென்றான்....

எனில் அவளோ தன் காதல் காவலனின் கள்ளத்தனத்தை அறிந்து அவனை கண்டும் காணாமல் அவனறியாமல் அவனை பின்தொடர்ந்தாள்.....

காவலனும் கள்வன் தானே?? அவளின் இயல்பினை அறிந்தவன் அமைதியாய் அவள் அருகாமையை அனுபவித்து கொண்டே அவள் செயல்களை கவனிக்க துவங்க,

இறுதியாய் அவன் வீட்டை நெருங்கியவளை தடுத்து நிறுத்திய ராமன், " பாரதி ஸ்டாப்.. இப்போ எதுக்கு என் வீட்டுக்கு வரிங்க??" என அவளை கோபமாய் கேட்க,

அவளோ அவனை முறைத்து தள்ளி விட்டு அவன் வீட்டின் முன்னே சென்று கதவை தட்டி கொண்டு நின்றாள்....

அவன் அக்கா பிரியா அவளை உள்ளே அழைக்க,

கண்களை மூடி திறந்து வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றாள் சீதா...

அதை கண்ட ராமிர்க்கோ இதயம் தாறுமாறாக துடிக்க துவங்கியது...

என்ன நடக்குமோ எனும் பயத்தில் தயக்கத்தை விடுத்து தைரியத்தை வரவழைத்து கொண்டு அவள் பின்னே சென்று நின்றவன் அதிர்ந்து நின்றான்..

எனில் பிரியா கைகளை பற்றிய சீதா,
" அக்கா.. என் பெயர் சீதா பாரதி... சாரி... நான் உங்க தம்பியை காதலிக்கிறேன்... அவர் தான் என் மனசு முழுக்க நிறைஞ்சு இருக்கார்... அவர் இல்லாத ஒரு என் வாழ்க்கை முழுமையடையாது.... சோ உங்க அனுமதியோடு இங்க உங்க எல்லோரோடவும் சேர்ந்த வாழ ஆசைப்படுறேன்...

அப்புறம் அக்கா நாங்க ஒரு வருஷமா பழகுறோம்.. கடைசியாக நாங்க பேசி ஆறு மாசம் ஆச்சு... இப்போ நான் வந்தது கூட அவருக்கு தெரியாது.. எங்களோட பயத்தால நான் இவரை இழக்க விரும்பல அக்கா.. இவருக்காக நான் எத்தனை வருஷம் வேணாலும் காத்திருக்கேன்..." என கூறி அமைதியாய் அவனின் தந்தையை பார்த்தாள்...

அமைதியான அவரும் " சரிமா ஆனா இவன் தான் வேணும்னு நீ உறுதியா இருக்க காரணம் என்ன?? இவன் வேலையா?? இல்ல அழகா இருக்கான்னா? " என வெளிப்படையாய் கேட்க,

ராமை ஓர் அழுத்தப் பார்வை பார்த்து திரும்பிய சீதா, " நானும் என் அம்மாவும் ஆண் துணை இல்லாம வளர்ந்தவங்க அப்பா... பல ஆண்களோட தப்பான பார்வையில் பல நாட்கள் அழுது தவிச்சுருக்கோம்..

அப்படி இருக்க எதிர்பாரா விதமா இவர் கூட நான் போன பேருந்து பயணம் தான் எனக்குள்ள முதல் சலனத்தை கொடுத்தது... இவர் ஒரு முறை கூட என்னை இடிக்கவோ இல்ல என் தோளில் சாய்ந்து கூட தூங்கவோ இல்ல... அவர் கண்ணிலும் அத்தனை கண்ணியத்தை பார்த்தேன்...

அன்னிக்கே அவங்க அக்கா இவங்க கூட கோவிலுக்கு வரும் போது அவங்களை அன்பா பாதுகாப்பா பார்த்துகிட்ட விதம் எனக்குள்ள ஓர் ஈர்ப்பை கொடுத்தது...

அப்போ இருந்து அவர் கூட நானா தான் பேசி பழக ஆரம்பிச்சேன்... இப்போ அவர் மேல உள்ள ஈர்ப்பு ஆழமான காதலா மாறிடுச்சு அப்பா.. அவர் இல்லாம என்னால வாழவே முடியாது.. இதை சொன்னதில் இருந்து அவர் என் நம்பரை பிளாக் பண்ணிட்டார்" என அத்தனையும் கூறி முடித்து கண்கள் கலங்கி கண்ணீர் வெளிவராமல் உள்ளிழுத்துக் கொண்டாள்....

அவள் வார்த்தையில் நெகிழ்ந்த ராமனின் தந்தை சந்திரனும்," சரிம்மா உன் காதலுக்கு நாங்க சரின்னு சொன்னாலும் இங்க நீ எல்லா வேலையும் செய்யனும்... இது கிராமம்... பல விதமான மனிதர்களையும் அவங்க ஏச்சு பேச்சுக்களையும் நீ சமாளிச்சு வாழனும்.. எல்லாத்தையும் தாங்கி உன்னால இங்க வாழ முடியுமா??? " என கேட்க,

நொடி கூட தாமதிக்காதவள் அவர் காலில் விழுந்து " சரிங்க அப்பா.. எனக்கு முழு சம்மதம்.." என கூறி கண்ணீரை சிந்த,

அவளின் துணிவையும் தன் மீது அவள் கொண்ட காதலையும் கண்ட ராமனோ கண்கள் கலங்க இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றான்...

அவனை அடித்து சுயம் வர செய்த பிரியா, " எனக்காக நீ காத்திருக்க வேண்டாம் டா.. உன் வாழ்க்கையை நீ வாழு.." என கூறியவள் சீதாவை அணைத்துக் கொள்ள,

அவளிடம் சென்ற சீதா, " இல்ல அக்கா உங்க கல்யாணம் முடியும் வரை நான் இவர் கிட்ட பேசவோ பழகவோ மாட்டேன்... அவர் விருப்பம் போல எவ்வளவு நாள் ஆனாலும் உங்க கல்யாணம் முடிஞ்சு தான் எங்க கல்யாணம். " என தெளிவாய் கூறி விட்டு இருவரின் காலிலும் விழுந்து வணங்கி,

இருவரின் சம்மதமும் கிடைத்த மகிழ்வில் ராமின் முகம் பாராமல் சென்றாள்...

அவளின் பாராமுகம் ராமனுக்கு தவிப்பை கொடுக்க, " அப்பா, அக்கா, சாரி.. நானும் தான் அவளை விரும்பினேன்... " என கூறியவன் தன் மன பாரத்தை இறக்கி வைத்து அங்கேயே சிலையாய் நிற்க,

அவனவளோ அவன் வார்த்தைகளை காதில் வாங்கிக் கொண்டு இரட்டிப்பு மகிழ்வில் கலங்கிய விழிகளோடு சென்றாள்....

"சரிப்பா... உன் விருப்பம் போல உன்னை உயிரா நேசிக்கிற சீதா தான் நம்ம வீட்டு மருமகள்.. போ போய் அவளை பத்திரமா அனுப்பி வச்சுட்டு வா" என கூறி அவன் தோளில் தட்டி அனுப்பி வைத்தார் சந்திரன்....

அவனோ தன் மனமும் சுபாவமும் அறிந்து தன் வீட்டில் தனக்காக பேசிய தன் பாரதியை தேடி ஓடினான்...

அவன் வருவதை அறிந்தவள் திரும்பியும் பாராமல் வேக எட்டுகளில் நடந்து நின்றிருந்த பேருந்தை அடைந்து,

கண்களில் கண்ணீர் வழிய அவனை திரும்பியும் பார்க்காமல் தன் வீட்டை நோக்கி பயணமானாள்...

அங்கேயே மடங்கி சரிந்து அமர்ந்து மனம் ரணமாக வலிக்க அவள் பார்வைக்காக ஏங்கி தவித்தான் ராம்...

அடுத்து வந்த நாட்களில் எல்லாம் ராம் சீதாவுக்கு ஒருநாளைக்கு ஆயிரம் முறை "சாரி... ஐ லவ் யூ" என அனுப்பி வைக்க, அந்தோ பாவம் அவனை போலவே அவள் அவன் என்னை பிளாக் செய்து விட்டாள்....

அப்போதும் சலிக்காமல் தன் மன உணர்வுகளை அவளுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தான் ராம்..

பிரியாவிடம் அளித்த வாக்கின் படி அவனிடம் பேசாமல் பழகாமல் அவன் நினைவிலேயே வாழ்ந்து கொண்டிருந்தாள் சீதா....

வருடம் ஒன்றை கடக்க சீதா வேலை முடிந்து வீட்டிற்கு வர அங்கு ராமும், சந்திரனும் அமர்ந்திருக்க,

அவளோ சந்திரனை மட்டும் வரவேற்று அவரோடு பேச துவங்கினாள்....

பிரியாவின் திருமண அழைப்பிதழை கொடுத்த சந்திரன்,
கூடவே ராம் சீதா இருவரின் திருமண பேச்சையும் பேச துவங்கி விட,

ராமின் கண்கள் அவளை ஏக்கமாய் தழுவ, அவளோ அப்படி ஒருவன் இருப்பதாகவே எண்ணவில்லை....

சீதாவின் தாய் அரைமனதோடு சம்மதிக்க, அவர் மனமறிந்து அவர் அருகே சென்ற ராம், " அம்மா... நானும் அவளை உயிருக்கு உயிரா நேசிக்கிறேன்.. உங்க சம்மதத்தோடு தான் எங்க கல்யாணம் நடக்கும்... சோ என்னை நம்பி என் பாரதியை என் வாழ்க்கை துணையாக அனுப்பி வைங்க பிளீஸ்.. என்னை முழுசா உணர்ந்து என் சரிபாதியாக வாழும் என் தேவதை அவ.. கண்டிப்பா அவளை ரொம்ப நல்லா பார்த்துப்பேன் ." என கூறியவன் சீதாவின் தாய் தமிழ்செல்வி காலில் விழ,

அவன் வார்த்தைகளில் மனம் குளிர்ந்த அவரும் இருவரின் காதலுக்கும் பச்சை கொடி காட்டிட,
அப்போதும் சீதா அவன் முகம் பார்க்கவே இல்லை....

அதில் ராம் முகம் வாடி விட, சந்திரன் அவனை தேற்றிக் கொண்டே சென்றார்....

நாட்கள் கடக்க இருவரின் திருமண நாளும் வர, மணமேடையில் கம்பீரமாய் அமர்ந்து ராம் அவளுக்காக காத்திருக்க,

மின்னும் தங்க சிலையாய் மிதமான ஒப்பனையில் எழிலோவியமாய் வந்து அவனருகே அமர்ந்தாள் சீதா...

அவள் கைகளை பற்றிய ராம், " பாரதி ஒரு நிமிஷம் என்னை பாரு" என அவள் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவன், " சாரி டி.. ஐ லவ் யூ சோ மச்.. பிளீஸ் இப்போவாவது என் கிட்ட பேசு டி" என கெஞ்ச,

அவளோ அவனை முறைத்து " அப்போ தாலி கட்டுங்க காவலரே.. அப்போ தான் முழுசா என் காதல் கணவனா உங்க கிட்ட உரிமையோடு பேசி சண்டை போட முடியும்" என கூற,

இன்ப அதிர்ச்சியில் உறைந்தவன், அவளை கட்டி அணைக்க தோன்றிய கைகளை கட்டுப்படுத்திக் கொண்டு,

கண்கள் முழுக்க காதலோடு ஒவ்வொரு சடங்கிலும் ஆயிரம் முறை காதலை கூறி, அவள் சங்கு கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டி காதலால் அவளை தன்னவளாக்கினான் ராம்...

ஊர் மெச்ச நடந்தேறிய திருமண நிகழ்வில், இன்ஸ்பெக்டர் அருண் தன் தவறை உணர்ந்து அவனிடம் மன்னிப்பு கூறி,

" தாமதமா கிடைச்சாலும் பொக்கிஷமாக உனக்கு கிடைச்சிருக்கு ஒரு சந்தோஷமான எதிர்காலம்.. வாழ்த்துக்கள் ராம்" என கூறி விடைபெற,


ராமின் குடும்பம் மட்டுமல்லாமல் அங்கு வந்த அனைவரும் ராம் சீதா காதலை எண்ணி வியந்து, அவர்களை மனப்பூர்வமாக ஆசிர்வதித்து தம்பதிகளை வாழ்த்தி விடைபெற்றனர்.......

நாமும் இருவரின் காதலும் வாழ்வும் வளர்பிறையாய் வளர வாழ்த்தி விடைபெறுவோம்....

******* சுபம் ******
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
ஒரு ஆணின் கண்ணியம் ஒரு பெண்ணை கவர்வது எவ்வளவு அழகான சூழல். கதை நல்லாயிருக்கு லதா.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் 💐 💐 ❤️
 
Joined
Feb 8, 2025
Messages
9
ஒரு ஆணின் கண்ணியம் ஒரு பெண்ணை கவர்வது எவ்வளவு அழகான சூழல். கதை நல்லாயிருக்கு லதா.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் 💐 💐 ❤️
மிக்க நன்றி மேம் 🙏🙏🙏
 
Joined
Mar 17, 2025
Messages
30
சூப்பர் சூப்பர் தங்கச்சி.

பாரதியின் குணம் சூப்பர்.

ராமரின் குடும்ப பொறுப்பை பாராட்ட வேண்டும் ✍️✍️✍️💐💐💐👌👌👌
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top