New member
- Joined
- Dec 23, 2024
- Messages
- 9
- Thread Author
- #1
என் ஆருயிர் நீ தானடி
அந்த காலைப் பொழுதை அழகாக்கி கொண்டிருந்தால் அவள். காலை துயிலை அவளுக்காகவே விட்டுக் கொடுத்துவிட்டு உடற்பயிற்சி செய்கிறேன் என்று மொட்டை மாடியை தஞ்சம் அடைந்து விடுவான் ஆனந்த்.
காலையிலேயே முதல் தரிசனம் அவளுடையது தான். அவளுக்கு தெரியாமல் அவளை புகைப்படம் எடுத்து தன் அலைப்பேசியில் சேமித்து வைத்திருக்கிறான். அலாரம் வைத்து எழுந்து கொள்பவன். அலைபேசியில் இருக்கும் அவளுடைய முகத்தில் தான் கண் விழிப்பான். பிறகு அவசரமாக தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உடற்பயிற்சி செய்கிறேன் என்று மொட்டை மாடியில் வந்து நின்று கொண்டு அவள் முழு தரிசனத்தையும் அவதானிப்பான்.
அல்லி சொருகிய நைட்டியோடு வெளியில் வருவாள் சினேகா. லட்சத்தில் ஒருத்தி, அவ்வளவு அழகு. நைட்டியிலும் கலைந்த கூந்தலிலும் ஒரு பெண்ணால் அழகாக இருக்க முடியும் என்றால் அது அவளாகத்தான் இருப்பாள்.
காதலிக்கும் ஒவ்வொரு ஆண்மகன்களுக்கும் அவளுடைய காதலிதான் தேவதை. அவள் தான் உலகத்திலேயே மிக அழகு என்று தோன்றும். அது போல தான் அவனுக்கும் தோன்றியதோ என்னவோ???.
பொறுமையாக தண்ணீரை வாசலில் தெளித்து பெரிய மாகோலமாக போடுவாள். அதற்கு பத்து நிமிடமேணும் பிடிக்கும். மொத்தத்தில் பதினைந்து நிமிடத்தை அவளைப் பார்பதற்காகவே செலவழிப்பான் ஆனந்த். போட்டு முடித்த பிறகு புறங்கையால் தலைமுடியை ஒதுக்கியபடியே அவள் போட்ட கோலத்தை அவளே ரசிப்பாள்.. அது திருப்தியாக இருந்தால் ஒரு புன்னகை சிந்துவாள்.. பிறகு துள்ளி குதித்து வீட்டின் உள்ளே செல்வாள். இது தினமும் நடக்கும் செயல்தான் என்றாலும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அவனுக்கு மட்டும் தோன்றும்.
அதன் பிறகு அவளை பார்ப்பது அரிதாகிவிடும். சரியாக ஏழு மணிக்கு தந்தையுடன் பின்னால் அமர்ந்தபடி கல்லூரிக்கு செல்வாள். மாலையில் அவள் எப்படி வருகிறாள் என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. அவனும் தன் வேலை வெட்டியை எல்லாம் விட்டுவிட்டு அவளுக்காக காத்துக் கொண்டு அதை அறிய முற்பட்டுக் கொண்டிருக்கிறான்.
ஆனந்தின் குடும்பம் பத்து வருடங்களுக்கு முன்னால் தான் அந்த வீட்டை வாங்கிக் கொண்டு அங்கு குடியேறினார்கள். அப்பொழுது அழகாக இருக்கும் சிறு பெண் என்று மட்டுமே தோன்றியது.
ஒருநாள் சைக்கிளில் இருந்து இறங்கும்போது “அண்ணா”, என்று குரல் கேட்டது. திரும்பி பார்த்தான். அந்த பெண் தான் பாவாடை சட்டையில் நின்று இருந்தாள். மிஞ்சி போனால் பனிரெண்டு வயது இருக்கும். அதுதான் முதல் முறை அவளை அவன் மிக அருகே பார்த்தது. அதுவும் நீண்ட மாதங்கள் கழித்து.
“இந்த ஃப்ர்ஸ் உங்கள்தான்னு பாருங்க”, என்று அவள் நீட்டிக் கொண்டிருந்த ஃப்ர்ஸ் அவனுடையதுதான். அவசரமாக தன் பாக்கெட்டை தொட்டு பார்த்தவன். அவளிடம் இருந்து வெடுக்கென்று பிடுங்கினான். அதில் அவள் கையில் வேகமாக பட்டுவிட்டது போல. முகத்தை சுருக்கினால் சிறியவள்.
திறந்து பார்த்தான் பணம் எல்லாம் அப்படியே தான் இருந்தது. அது அவளை மனசோர்வு அடைய வைத்திருந்தது.
“நீங்க ஓட்டிட்டு வரும்போது உங்க பேக்கெட்ல இருந்து விழுந்துச்சு. எடுத்துட்டு வந்து உடனே தான் கொடுக்கிறேன். நான் அதை திறந்து கூட பாக்கல அண்ணா”, தன்னிலை விளக்கம் கொடுத்தாள். அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அவன் வேண்டுமென்றே செய்யவில்லை அனிச்சை செயலாக செய்து விட்டான். ஆனால் நேர்மையான அந்த பெண்ணை அது பாதித்திருக்கிறது என்று புரிந்தது.
“சாரிமா நான் தப்பா பாக்கல. ஐ மீன் உன்ன தப்பா நினைச்சு பாக்கல. இதுல முக்கியமான ஐடி ஒன்னு வச்சிருந்தேன். அது மிஸாயிடுச்சான்னு பார்த்தேன். நல்ல வேலை அது இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் மா”, என்று கூறினான். அப்போதுதான் அந்த பெண்ணின் முகம் மலர்ந்தது. அவன் அவசரத்திற்கு ரேஷன் கார்டை தூக்கி காட்டி இருந்தான். அந்த சிறு பெண்ணும் அதை கவனிக்காமல் தலையாட்டி விட்டு சென்று விட்டாள்.
ஆனால் அவன் பார்த்தது பணத்தை தான். “வர வழியில ஈ.பி பில் கட்டிட்டு வா”, என்று அவன் தாய் கொடுத்த பணம் அதில் இருக்கிறதா என்று பார்த்தான் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஆனந்த்.
அதன் பிறகு அவனையும் அறியாமல் அந்த பெண்ணை அவன் அவதானிக்க ஆரம்பித்தான். ஆனால் அவள் கண்டு கொள்ளவில்லை. அப்பொழுதும் தந்தையுடன் தான் பள்ளிக்கு செல்வாள். இப்பொழுதும் தந்தையுடன் தான் கல்லூரிக்கு செல்கிறாள்.
“கங்காரு அதோட குட்டியை அடகாக்குற மாதிரி. இவரு அவர் பொண்ணை காக்குறாரு”, என்று மனதிற்குள் தன் வருங்கால மாமனாரை கிண்டல் அடிப்பான்.
ஆம் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அளவிற்கு அவன் அவளை விரும்ப ஆரம்பித்து விட்டான். சினேகாவுடைய தாய்க்கும், ஆனந்தின் தாய்க்கும் நல்ல புரிதலும் சினேகமும் இருந்தது. அது அவனுக்கும் வசதியாக போய்விட்டது. அவர்கள் வீட்டில் ஏதாவது செய்தால், அவர்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள். இவர்கள் வீட்டிலும் அதே நிலை தான். அவருடைய பெண்ணை அவன் சைட் அடிப்பது தெரிந்தால் அது நிலைக்குமா, நீடிக்குமா??, என்று தெரியாது. ஆனால் ஏனோ மனம் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தது..
அவள் வயதுக்கு வந்து விட்டதாக அவளுடைய தாயார் வந்து அவன் தாயை அழைக்கும் போது தான் சினேகா அவன் கருத்தை முதலில் கவர்ந்தது. அதற்காக பார்க்கும் பெண்களை எல்லாம் ரசிக்கும் அளவு மோசமானவன் இல்லை அவன்.
“அம்மா எதிர் வீட்டுக்கு போறீங்கலா??, நானும் வரேன்”, என்று பட்டுப்புடவை நகை சகிதமாக உடுத்தி வந்த தாயிடம் சென்று நின்றான்.
“டேய் நான் என்ன கல்யாணத்துக்கா போறேன்?, உன்னையும் சேர்த்து கூட்டிட்டு போறதுக்கு??, அந்த பொண்ணு வயசுக்கு வந்துருச்சுன்னு வீட்ல தண்ணி ஊத்துறாங்க. அதுக்கு உன்னையும் எப்படிடா கூட்டிட்டு போக முடியும்??, அமைதியா இங்க வீட்ல இரு “, என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.
ஆனால் ஏனோ அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. திருட்டுத்தனமாக சென்று ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு தான் வந்தான். அப்பொழுதெல்லாம் அந்த பெண்ணின் மீது அவனுக்கு காதல் வந்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஆர்வம் மட்டுமே இருந்தது.
அவன் பள்ளி முடித்து கல்லூரிக்கு சென்றான். அவள் இன்னும் பள்ளி படிப்பை முடிக்கவில்லை. கல்லூரி இரண்டாம் ஆண்டில் தான். அவள் மீது முதல் முறையாக அவனுக்கு ஈர்ப்பு வந்தது. பெரிய அளவிலான ஈர்ப்பு.
அன்று முதல் முறையாக அவளை பஸ்ஸில் பார்த்தான். மனம் துள்ளி குதித்தது. ஆனால் அவள் அசுசையாக முகத்தை வைத்துக் கொண்டு இப்படியும் அப்படியும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். முதல் முறையான பஸ் பிரயாணம் என்பது அவள் முகத்தைப் பார்க்கும்போதே தெரிந்தது. இவளுடைய தந்தைக்கு என்ன ஆனது??, எதற்காக இவள் பேருந்தில் செல்கிறாள்??, என்று சிந்தித்த மனதை அடக்கியவன்.
அதுவாடா இப்ப முக்கியம்??, இந்த சந்தர்ப்பத்தை விடாமல் அவளை நல்லா சைட் அடிடா, அவளிடம் பேச உனக்கு நல்ல வாய்ப்பு”, என்றது மனம்.
பக்கத்தில் இருக்கும் பெண் அவளிடம் பேசிக் கொண்டே இருக்க. அவள் மட்டும் நெளிந்து கொண்டே இருந்தாள். அவளை அவதானித்துக் கொண்டிருந்தவனுக்கு அது புரிந்தது. சற்று நேரத்தில் பேருந்தில் இருப்பவர்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்தாள். ஆனந்தை பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது. பேக்கை எடுத்து முன்னால் பிடித்தபடி அவசரமாக அவனை நோக்கி வந்தாள்..
“என்னடா, அவளும் உன்ன விரும்புறா போல?? “, மனம் இறக்கை இல்லாமல் பறந்தது. அருகில் வந்து நின்றவள்.
“அண்ணா உங்க பக்கத்துல நிக்கவா??, அங்க இருக்கவங்க ஏதோ பேடா பண்றா மாதிரி இருக்கு”, என்றாள்.
‘அண்ணா’ என்று சொன்னதும் அவன் இருதயமே ஒரு நொடி நின்று விட்டது. ஆனால் அவள் கூறிய விஷயம் முதலில் கருத்தாய் பட. நிமிர்ந்து அவள் நின்று இருந்த இடத்தை பார்த்தான். ஒருவன் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு செல்வது புரிந்தது. பற்களை நரநரத்தவன். மனதில் பட்டிமன்றம் நடத்தினான்.
“ஹீரோ போல ஓடிச் சென்று அவனை ஓங்கி அரையலாமா, அல்லது இந்த பெண்ணை பாதுகாத்து வீட்டில் கொண்டு சென்று பத்திரமாக விடலாமா??. மீண்டும் அந்த ஆளை பார்த்தான். இல்லை இவள் பயந்திருக்கிறாள் இவளை தனியாக விடுவது நல்லதில்லை. அவன் முகத்தை நன்றாக மனதில் பதித்து வைத்து ஆகிவிட்டது. அவனை வேறு எப்பொழுது வேண்டுமென்றாலும் கவனித்துக் கொள்ளலாம். இவளை பத்திரமாக வீட்டில் கொண்டு சென்று விடுவது தான் இப்பொழுது முக்கியம் என்று நினைத்து விட்டான்.
இயற்கையிலேயே பயந்த சுபாவம் உடையவளா? அல்லது அவளுடைய தந்தை பொத்தி பொத்தி வளர்த்து அவளை அப்படி ஆக்கிவிட்டாரா என்று தெரியவில்லை. அவளுக்கு ஒரு தம்பி மட்டுமே அவனும் வெளியில் வந்து விளையாடி அவன் பார்த்ததில்லை. ஆனால் இவன், வீட்டில் ஒரே பையன் செல்ல பதிகம். அவனுடைய தாய் சொல்லி சினேகாவின் தந்தை மிகவும் கண்டிப்பானவர், ஆனால் அன்பானவர் என்று தெரியும்.
“பயப்படாதே, தைரியமா இருக்கணும். அப்புறம் என்ன அண்ணன்னு கூப்பிடாத. உன்னை நானே பத்திரமா கொண்டு போய் வீட்ல விடுறேன்”, என்று கூறினான்.
“ஏன்ண்ணா? “, என்று அவள் மீண்டும் அண்ணா போட.
“அண்ணன்னு கூப்பிடாத. அவ்வளவுதான். எனக்கு அண்ணன்னு கூப்பிட்டா பிடிக்காது. ஆமா உங்க அப்பா வரலையா??, எப்பயும் அவர் கூட தானே போவ? “.
“அப்பா ஊருக்கு போய் இருக்காங்க. ஊர்ல கல்யாணம் நாளைக்கு வந்துருவாங்க”.
“ நாளைக்கு காலையில் எப்படி போவ? “.
“அம்மா பஸ்ல கொண்டு வந்து விடுறேன்னாங்க. ஆனா எனக்கு பஸ்ஸ பார்த்தாலே பயமா இருக்கு. அம்மா கிட்ட சொல்லி ஆட்டோவில் போயிடுவேன்”.
“ நாளைக்கு சந்திக்கலாம்னு நெனச்சேனே “, என்று மனதிற்குள் சலித்துக் கொண்டான்.
“நீ எத்தனாவது படிக்கிற? “, அவனுக்குத் தெரிந்திருந்த போதும் கேள்வி கேட்டான்.
“டென்த், வீடு வந்துருச்சுண்ணா”.
“அண்ணன்னு சொல்லாதன்னு சொன்னேன்”.
அவள் நல்ல பிள்ளையாக தலையாட்டினாள்.
அவளுடன் சேர்ந்து நடப்பது நன்றாக இருந்தது. நீண்ட நாள் கனவு போல இருந்தது. வாழ்க்கை முழுக்க இதே போல உன்னுடன் சேர்ந்து நடக்க வேண்டும் என்று மனது கவிதை படித்தது.
அவள் திடீரென்று நின்றாள். அவனை திரும்பி பார்த்தாள். “நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா நடந்தா, பாக்குறவங்க நம்மள தப்பா நினைப்பாங்க.
அந்த காலைப் பொழுதை அழகாக்கி கொண்டிருந்தால் அவள். காலை துயிலை அவளுக்காகவே விட்டுக் கொடுத்துவிட்டு உடற்பயிற்சி செய்கிறேன் என்று மொட்டை மாடியை தஞ்சம் அடைந்து விடுவான் ஆனந்த்.
காலையிலேயே முதல் தரிசனம் அவளுடையது தான். அவளுக்கு தெரியாமல் அவளை புகைப்படம் எடுத்து தன் அலைப்பேசியில் சேமித்து வைத்திருக்கிறான். அலாரம் வைத்து எழுந்து கொள்பவன். அலைபேசியில் இருக்கும் அவளுடைய முகத்தில் தான் கண் விழிப்பான். பிறகு அவசரமாக தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உடற்பயிற்சி செய்கிறேன் என்று மொட்டை மாடியில் வந்து நின்று கொண்டு அவள் முழு தரிசனத்தையும் அவதானிப்பான்.
அல்லி சொருகிய நைட்டியோடு வெளியில் வருவாள் சினேகா. லட்சத்தில் ஒருத்தி, அவ்வளவு அழகு. நைட்டியிலும் கலைந்த கூந்தலிலும் ஒரு பெண்ணால் அழகாக இருக்க முடியும் என்றால் அது அவளாகத்தான் இருப்பாள்.
காதலிக்கும் ஒவ்வொரு ஆண்மகன்களுக்கும் அவளுடைய காதலிதான் தேவதை. அவள் தான் உலகத்திலேயே மிக அழகு என்று தோன்றும். அது போல தான் அவனுக்கும் தோன்றியதோ என்னவோ???.
பொறுமையாக தண்ணீரை வாசலில் தெளித்து பெரிய மாகோலமாக போடுவாள். அதற்கு பத்து நிமிடமேணும் பிடிக்கும். மொத்தத்தில் பதினைந்து நிமிடத்தை அவளைப் பார்பதற்காகவே செலவழிப்பான் ஆனந்த். போட்டு முடித்த பிறகு புறங்கையால் தலைமுடியை ஒதுக்கியபடியே அவள் போட்ட கோலத்தை அவளே ரசிப்பாள்.. அது திருப்தியாக இருந்தால் ஒரு புன்னகை சிந்துவாள்.. பிறகு துள்ளி குதித்து வீட்டின் உள்ளே செல்வாள். இது தினமும் நடக்கும் செயல்தான் என்றாலும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அவனுக்கு மட்டும் தோன்றும்.
அதன் பிறகு அவளை பார்ப்பது அரிதாகிவிடும். சரியாக ஏழு மணிக்கு தந்தையுடன் பின்னால் அமர்ந்தபடி கல்லூரிக்கு செல்வாள். மாலையில் அவள் எப்படி வருகிறாள் என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. அவனும் தன் வேலை வெட்டியை எல்லாம் விட்டுவிட்டு அவளுக்காக காத்துக் கொண்டு அதை அறிய முற்பட்டுக் கொண்டிருக்கிறான்.
ஆனந்தின் குடும்பம் பத்து வருடங்களுக்கு முன்னால் தான் அந்த வீட்டை வாங்கிக் கொண்டு அங்கு குடியேறினார்கள். அப்பொழுது அழகாக இருக்கும் சிறு பெண் என்று மட்டுமே தோன்றியது.
ஒருநாள் சைக்கிளில் இருந்து இறங்கும்போது “அண்ணா”, என்று குரல் கேட்டது. திரும்பி பார்த்தான். அந்த பெண் தான் பாவாடை சட்டையில் நின்று இருந்தாள். மிஞ்சி போனால் பனிரெண்டு வயது இருக்கும். அதுதான் முதல் முறை அவளை அவன் மிக அருகே பார்த்தது. அதுவும் நீண்ட மாதங்கள் கழித்து.
“இந்த ஃப்ர்ஸ் உங்கள்தான்னு பாருங்க”, என்று அவள் நீட்டிக் கொண்டிருந்த ஃப்ர்ஸ் அவனுடையதுதான். அவசரமாக தன் பாக்கெட்டை தொட்டு பார்த்தவன். அவளிடம் இருந்து வெடுக்கென்று பிடுங்கினான். அதில் அவள் கையில் வேகமாக பட்டுவிட்டது போல. முகத்தை சுருக்கினால் சிறியவள்.
திறந்து பார்த்தான் பணம் எல்லாம் அப்படியே தான் இருந்தது. அது அவளை மனசோர்வு அடைய வைத்திருந்தது.
“நீங்க ஓட்டிட்டு வரும்போது உங்க பேக்கெட்ல இருந்து விழுந்துச்சு. எடுத்துட்டு வந்து உடனே தான் கொடுக்கிறேன். நான் அதை திறந்து கூட பாக்கல அண்ணா”, தன்னிலை விளக்கம் கொடுத்தாள். அவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அவன் வேண்டுமென்றே செய்யவில்லை அனிச்சை செயலாக செய்து விட்டான். ஆனால் நேர்மையான அந்த பெண்ணை அது பாதித்திருக்கிறது என்று புரிந்தது.
“சாரிமா நான் தப்பா பாக்கல. ஐ மீன் உன்ன தப்பா நினைச்சு பாக்கல. இதுல முக்கியமான ஐடி ஒன்னு வச்சிருந்தேன். அது மிஸாயிடுச்சான்னு பார்த்தேன். நல்ல வேலை அது இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் மா”, என்று கூறினான். அப்போதுதான் அந்த பெண்ணின் முகம் மலர்ந்தது. அவன் அவசரத்திற்கு ரேஷன் கார்டை தூக்கி காட்டி இருந்தான். அந்த சிறு பெண்ணும் அதை கவனிக்காமல் தலையாட்டி விட்டு சென்று விட்டாள்.
ஆனால் அவன் பார்த்தது பணத்தை தான். “வர வழியில ஈ.பி பில் கட்டிட்டு வா”, என்று அவன் தாய் கொடுத்த பணம் அதில் இருக்கிறதா என்று பார்த்தான் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஆனந்த்.
அதன் பிறகு அவனையும் அறியாமல் அந்த பெண்ணை அவன் அவதானிக்க ஆரம்பித்தான். ஆனால் அவள் கண்டு கொள்ளவில்லை. அப்பொழுதும் தந்தையுடன் தான் பள்ளிக்கு செல்வாள். இப்பொழுதும் தந்தையுடன் தான் கல்லூரிக்கு செல்கிறாள்.
“கங்காரு அதோட குட்டியை அடகாக்குற மாதிரி. இவரு அவர் பொண்ணை காக்குறாரு”, என்று மனதிற்குள் தன் வருங்கால மாமனாரை கிண்டல் அடிப்பான்.
ஆம் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அளவிற்கு அவன் அவளை விரும்ப ஆரம்பித்து விட்டான். சினேகாவுடைய தாய்க்கும், ஆனந்தின் தாய்க்கும் நல்ல புரிதலும் சினேகமும் இருந்தது. அது அவனுக்கும் வசதியாக போய்விட்டது. அவர்கள் வீட்டில் ஏதாவது செய்தால், அவர்கள் கொண்டு வந்து கொடுப்பார்கள். இவர்கள் வீட்டிலும் அதே நிலை தான். அவருடைய பெண்ணை அவன் சைட் அடிப்பது தெரிந்தால் அது நிலைக்குமா, நீடிக்குமா??, என்று தெரியாது. ஆனால் ஏனோ மனம் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தது..
அவள் வயதுக்கு வந்து விட்டதாக அவளுடைய தாயார் வந்து அவன் தாயை அழைக்கும் போது தான் சினேகா அவன் கருத்தை முதலில் கவர்ந்தது. அதற்காக பார்க்கும் பெண்களை எல்லாம் ரசிக்கும் அளவு மோசமானவன் இல்லை அவன்.
“அம்மா எதிர் வீட்டுக்கு போறீங்கலா??, நானும் வரேன்”, என்று பட்டுப்புடவை நகை சகிதமாக உடுத்தி வந்த தாயிடம் சென்று நின்றான்.
“டேய் நான் என்ன கல்யாணத்துக்கா போறேன்?, உன்னையும் சேர்த்து கூட்டிட்டு போறதுக்கு??, அந்த பொண்ணு வயசுக்கு வந்துருச்சுன்னு வீட்ல தண்ணி ஊத்துறாங்க. அதுக்கு உன்னையும் எப்படிடா கூட்டிட்டு போக முடியும்??, அமைதியா இங்க வீட்ல இரு “, என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.
ஆனால் ஏனோ அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. திருட்டுத்தனமாக சென்று ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு தான் வந்தான். அப்பொழுதெல்லாம் அந்த பெண்ணின் மீது அவனுக்கு காதல் வந்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஆர்வம் மட்டுமே இருந்தது.
அவன் பள்ளி முடித்து கல்லூரிக்கு சென்றான். அவள் இன்னும் பள்ளி படிப்பை முடிக்கவில்லை. கல்லூரி இரண்டாம் ஆண்டில் தான். அவள் மீது முதல் முறையாக அவனுக்கு ஈர்ப்பு வந்தது. பெரிய அளவிலான ஈர்ப்பு.
அன்று முதல் முறையாக அவளை பஸ்ஸில் பார்த்தான். மனம் துள்ளி குதித்தது. ஆனால் அவள் அசுசையாக முகத்தை வைத்துக் கொண்டு இப்படியும் அப்படியும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். முதல் முறையான பஸ் பிரயாணம் என்பது அவள் முகத்தைப் பார்க்கும்போதே தெரிந்தது. இவளுடைய தந்தைக்கு என்ன ஆனது??, எதற்காக இவள் பேருந்தில் செல்கிறாள்??, என்று சிந்தித்த மனதை அடக்கியவன்.
அதுவாடா இப்ப முக்கியம்??, இந்த சந்தர்ப்பத்தை விடாமல் அவளை நல்லா சைட் அடிடா, அவளிடம் பேச உனக்கு நல்ல வாய்ப்பு”, என்றது மனம்.
பக்கத்தில் இருக்கும் பெண் அவளிடம் பேசிக் கொண்டே இருக்க. அவள் மட்டும் நெளிந்து கொண்டே இருந்தாள். அவளை அவதானித்துக் கொண்டிருந்தவனுக்கு அது புரிந்தது. சற்று நேரத்தில் பேருந்தில் இருப்பவர்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்தாள். ஆனந்தை பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது. பேக்கை எடுத்து முன்னால் பிடித்தபடி அவசரமாக அவனை நோக்கி வந்தாள்..
“என்னடா, அவளும் உன்ன விரும்புறா போல?? “, மனம் இறக்கை இல்லாமல் பறந்தது. அருகில் வந்து நின்றவள்.
“அண்ணா உங்க பக்கத்துல நிக்கவா??, அங்க இருக்கவங்க ஏதோ பேடா பண்றா மாதிரி இருக்கு”, என்றாள்.
‘அண்ணா’ என்று சொன்னதும் அவன் இருதயமே ஒரு நொடி நின்று விட்டது. ஆனால் அவள் கூறிய விஷயம் முதலில் கருத்தாய் பட. நிமிர்ந்து அவள் நின்று இருந்த இடத்தை பார்த்தான். ஒருவன் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு செல்வது புரிந்தது. பற்களை நரநரத்தவன். மனதில் பட்டிமன்றம் நடத்தினான்.
“ஹீரோ போல ஓடிச் சென்று அவனை ஓங்கி அரையலாமா, அல்லது இந்த பெண்ணை பாதுகாத்து வீட்டில் கொண்டு சென்று பத்திரமாக விடலாமா??. மீண்டும் அந்த ஆளை பார்த்தான். இல்லை இவள் பயந்திருக்கிறாள் இவளை தனியாக விடுவது நல்லதில்லை. அவன் முகத்தை நன்றாக மனதில் பதித்து வைத்து ஆகிவிட்டது. அவனை வேறு எப்பொழுது வேண்டுமென்றாலும் கவனித்துக் கொள்ளலாம். இவளை பத்திரமாக வீட்டில் கொண்டு சென்று விடுவது தான் இப்பொழுது முக்கியம் என்று நினைத்து விட்டான்.
இயற்கையிலேயே பயந்த சுபாவம் உடையவளா? அல்லது அவளுடைய தந்தை பொத்தி பொத்தி வளர்த்து அவளை அப்படி ஆக்கிவிட்டாரா என்று தெரியவில்லை. அவளுக்கு ஒரு தம்பி மட்டுமே அவனும் வெளியில் வந்து விளையாடி அவன் பார்த்ததில்லை. ஆனால் இவன், வீட்டில் ஒரே பையன் செல்ல பதிகம். அவனுடைய தாய் சொல்லி சினேகாவின் தந்தை மிகவும் கண்டிப்பானவர், ஆனால் அன்பானவர் என்று தெரியும்.
“பயப்படாதே, தைரியமா இருக்கணும். அப்புறம் என்ன அண்ணன்னு கூப்பிடாத. உன்னை நானே பத்திரமா கொண்டு போய் வீட்ல விடுறேன்”, என்று கூறினான்.
“ஏன்ண்ணா? “, என்று அவள் மீண்டும் அண்ணா போட.
“அண்ணன்னு கூப்பிடாத. அவ்வளவுதான். எனக்கு அண்ணன்னு கூப்பிட்டா பிடிக்காது. ஆமா உங்க அப்பா வரலையா??, எப்பயும் அவர் கூட தானே போவ? “.
“அப்பா ஊருக்கு போய் இருக்காங்க. ஊர்ல கல்யாணம் நாளைக்கு வந்துருவாங்க”.
“ நாளைக்கு காலையில் எப்படி போவ? “.
“அம்மா பஸ்ல கொண்டு வந்து விடுறேன்னாங்க. ஆனா எனக்கு பஸ்ஸ பார்த்தாலே பயமா இருக்கு. அம்மா கிட்ட சொல்லி ஆட்டோவில் போயிடுவேன்”.
“ நாளைக்கு சந்திக்கலாம்னு நெனச்சேனே “, என்று மனதிற்குள் சலித்துக் கொண்டான்.
“நீ எத்தனாவது படிக்கிற? “, அவனுக்குத் தெரிந்திருந்த போதும் கேள்வி கேட்டான்.
“டென்த், வீடு வந்துருச்சுண்ணா”.
“அண்ணன்னு சொல்லாதன்னு சொன்னேன்”.
அவள் நல்ல பிள்ளையாக தலையாட்டினாள்.
அவளுடன் சேர்ந்து நடப்பது நன்றாக இருந்தது. நீண்ட நாள் கனவு போல இருந்தது. வாழ்க்கை முழுக்க இதே போல உன்னுடன் சேர்ந்து நடக்க வேண்டும் என்று மனது கவிதை படித்தது.
அவள் திடீரென்று நின்றாள். அவனை திரும்பி பார்த்தாள். “நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா நடந்தா, பாக்குறவங்க நம்மள தப்பா நினைப்பாங்க.