Member
- Joined
- Mar 16, 2025
- Messages
- 57
- Thread Author
- #1
அத்தியாயம் 12
“லீவெல்லாம் எப்படிப்பா தருவாங்க?. நான் வீட்டுக்கே வரக்கூடாதுனு பிளான் பண்ணிதான என்ன இந்த ஜெயில்ல கொண்டு வந்து சேத்தீங்க? “
“மாமா இறந்துட்டாருனு சொல்லி லீவ் கேளு. மேற்கொண்டு எதாவது கேள்வி கேட்டா எனக்கு கால் பண்ணி குடு நான் பேசிக்குறேன்”
“சரிப்பா “
“ம்ம்ம். முடிஞ்சவரைக்கும் சீக்கிரமா வரப்பாருடா “
அழைப்பைத் துண்டத்ததும் அவன் தூக்கம் முழுவதுமாகத் தொலைந்து போனது. யாமினி தன் வீட்டில்தான் இப்போது இருக்கிறாள் என்பதனைப் புரிந்துகொண்டான் ஆதி. நம்ம வீட்டில் இருக்கும்வரை யாமினிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அவள் அங்கு வர என்ன காரணம்? என்ற கேள்வி காற்றை போல அவனைச் சூழ்ந்து கொண்டது.
விடிந்ததும் விடுதி வார்டனை நோக்கி விரைந்தான். அப்பா சொல்லிக் கொடுத்தவாரே பேசினான். பெரிதாக ஒன்றும் நடிக்கவில்லை. ஏற்கனவே அவன் முகத்தில் இருந்த சோகமும் படபடப்பும் வார்டனை சம்மதிக்க வைத்தது. பேருந்தில் உருளும் சக்கரங்களோடு உருண்டது சிந்தனை.
மேடும் பள்ளமுமாய் ஒழுங்கற்று இருந்த அவன் தலைமுடி, “இன்னுமா இத கீழ போடாம யூஸ் பண்ற?” என்று அம்மா திட்டிய பிறகும் தள்ளாத டிசர்ட், சம்மந்தமே இல்லாத ஃபேன்ட் என வேர்த்து விறுவிறுத்து வெறும் ஆளாய் வந்து நின்ற ஆதியின் நிலையை சொல்லிப் புரியவைக்கத் தேவையில்லை.
ஹால் வெறிச்சோடிக் கிடந்தது. அம்மா எங்கே? என்று சமையலறைக்குள் நுழைந்தான். மகனைப் பார்த்ததும் தொத்திக்கொண்ட ஜோதியின் கைகளில் முத்தமிட்டுக் கண் களங்கினான் ஆதி.
“ஏண்டா பொட்ட புள்ள மாதிரி அழற? “
“பொட்ட புள்ளதா அழனும்னு எதாவது சட்டம் இருக்கா என்ன? வலிச்சா யார் வேணாலும் அழலாம் “
“யூடியூப் சேனல் ஆரமிச்சதுல இருந்து பெரிய ராசா கருத்தா பேசுறாரு “
“விளையாடாதமா. என்னமா பிரச்சின? யாமினிய எதுக்கு அவரு இங்க கூட்டிட்டு வந்திருக்காரு?”
“டேய் எனக்கும் என்னனு முழுசா தெரியாதுடா”
“ச்சே… சரி எங்க அவ”
“யாமினியும் சிபியும் உன் ரூம்ல தூங்குராங்க. அப்பா மேல மாடில தூங்குறாரு “
“ஜிம்முக்கு போகலையா அவரு? “
“ தெரியலடா “
“எவ்வளோ பெரிய விஷயம் நடந்துட்டு இருக்கு நீ என்னடானா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசிட்டு இருக்க “
“என்னைய என்னடா பண்ண சொல்ற? “
“நீ ஒன்னு பண்ண வேணாம் எனக்கொரு முத்தா மட்டும் கொடு “
ஆசையாசய் ஆதியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு தலையைத் தடவி கண்ணத்தைக் கிள்ளினாள் ஜோதி.
அம்மாவின் அன்பான சைகைகளை ரசித்து முடித்த பிறகு “ம்மா நான் யாமினிய போய் பாக்கவா? “ என்று கேட்டான்.
“போய் பாரு. ஆனா அவ கண்டிப்பா தூங்கிட்டுதான் இருப்பா “
“அது எப்படி இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்ற?
“பாவம்டா நேத்து நான் பாக்கும்போதே ரொம்ப டையடா தெரிஞ்சா “
“ம்ம்ம் அதான் அப்படி சொல்றியா? “
“ஆமா. சரி போய் சத்தம் போடாம பாரு.
அவ எழுந்தாலும் என்ன? ஏதுனு? எந்த கேள்வியும் கேக்காத அப்பா சொன்னாரு “
“என்கிட்ட சொல்ல சொன்னாரா? “
“இல்ல நேத்து என்கிட்டையே அவரு அப்படிதான்டா சொன்னாரு. அதான் நான் உனக்கு அட்வான்ஸா சொல்றேன் “
“ம்ம்ம் என் செல்லம்மா “
“ஆமா ஆமா போய் பாரு “
வீட்டு வாசற்படியில் கால் வைத்தவுடனே அம்மாவின் முகத்தைப் பிடித்துவிட்டு அடுத்த வேலையாக அவன் அறைக்குள்தான் எப்போதுமே அவன் கால்கள் பாயும். அன்று ஏனோ அவனால் அவ்வளவு எளிதாக அவன் அறைக்குள் போக முடியவில்லை. தயக்கத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் இடையில் சிக்கிக்கொண்டான். இருந்தாலும் அவன் இதயத் துடிப்பு அவனுக்கு வழி சொல்ல அதன்படி நடந்தான்.
கதவு திறக்கும் சத்தம் கூட கேட்கக் கூடாதென்று மெல்லத் திறந்தான் ஒவ்வொரு அடியும் பட்டும் படாமல் வைத்து உள்ளே சென்றான். லைட் வெளிச்சத்தால் தூக்கம் தொலைந்து எழுந்துவிடக் கூடாதென்று, காலை நேர வெளிர் மஞ்சள் நிற சூரிய ஒளிக்கதிர் ஜன்னல் வழியாக விழும் வெளிச்சத்திலேயே அவளைத் தேடினான்.
கடைசியில் அவளைக் கண்டுபிடித்துவிட்டான். புதுச் சட்டையை பெரிய விஷேச நாளில் போடலாமென்று பீரோவிலே மறந்துவிட்டு பத்தாமல் போன அதே காஃபி கலர் பிளைன் சட்டை. ஒவ்வொரு முறை பீரோ சுத்தம் செய்யும்போதும் “சிபி கொஞ்சம் வளந்துட்டா இது அவனுக்கு கரெக்டா இரும்டா பெரிய ராசா “ என்று அம்மாவின் பேசுபொருளாகும் அதே சட்டை.
அவளுக்காக இத்தனை வருடம் பீரோவிலே தவம் ஏதும் செய்திருக்குமோ? அந்த சட்டை!.
அந்த சட்டையை அவள் அணிந்து உறங்குவதைப் பார்த்த ஆதி ஒரு நொடி சொக்கித்தான் போனான். கடை கடையாய் ஏறி இறங்கி எடுத்த சட்டையை அணிந்திருந்தது அவனையே அணைத்திருந்தது போல பேருணர்வை அவனுக்குக் கொடுத்தது.
அவளது வாடலான முகம் ஏதோ ஒரு சோகத்தை ஜன்னல் வழி தெரியும் வேப்பம் பூவிடம் சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் என்ன என்பது பிடிபடவில்லை.
ஒருவேளை இப்படிக்கூட இருக்கும்… “அவனுக்காக காத்திருப்பது கசக்கிறது “ என்று அவள் சொல்லியிருப்பாள்.
“என்னைத் தாங்கியிருக்கும் இந்த இலைகளை விடவா? இல்லை என்னைவிடவா?“ என்று வேப்பம்பூ கேட்டிருக்கும். “உங்கள் இருவரையும் விட அதிகமாக இந்த கசப்பு என் தொண்டையை கவ்விப் பிடிக்கிறது” என்று அவள் சொல்லியிருப்பாள் பாவம். ஒத்த சிந்தனையுடவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் என்ன ஆச்சர்யம்?. எனக்கும் அப்படித்தான் இருந்தது என்று தனக்குள்ளே தானே பேசிக் கவிஞனான்.
பின் அம்மா வந்து “ஆதி” என்றதும் அவனான்.
“சத்தமா கூப்பிடாதமா நானே வர்றேன்”
“அங்க என்னடா பண்ற? தூங்கட்டும் விடுடா அப்புறம் பாத்துக்கலாம் “
“ஆஆஆ சரி “
“இந்த காஃபி குடி “
“லவ் யூ மா “
“போதும்டா டேய் “ என்று சொல்லியவரே ஜோதி மாடிப் படிக்கட்டில் ஏறினாள்.
“அப்பாவ எழுப்ப போறியா? “
“ஆமாடா ஆதி. அவருக்கு ஜிம்ல இருந்து கால் வந்துட்டே இருக்கு “
“அப்போ ஃபோன குடு நானே போறேன் “
“சரி இந்தா “
அப்பாவைப் பார்க்கும்போது ஏற்படும் குறுகுறுப்பு அன்று அவனுக்கு ஏனோ இல்லை. ஏதோ வெளியே தெரியா காரணத்தினால் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட இடைவெளியில் அடைந்திருந்த மௌனம் அன்று உடைந்தது.
மாடியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு குட்டி அறையில் கையைத் தலையணையாக்கி, காலை சுருக்கிப் பட்டத்து ராஜாவைப் போல படுத்திருக்கும் அப்பாவை எப்படி அழைத்து எழுப்புவது என்று தயங்கி நின்றான். ஆதியின் கையில் இருந்த அப்பாவின் அலைபேசியில் யாரே அழைக்க பாட்டு ஒலித்தது. அந்த சத்தத்தில் அப்பாவும் கண்விழித்தார்.
மல்லாக்கப் புறண்டு படுத்து பின் எழுந்து உட்கார்ந்தார். தன் கைகளால் முகத்தைத் துடைத்துக் கண்விழித்து “வந்துட்டியா? என்றார்.
“வந்து பத்து நிமிஷம் ஆச்சுப்பா. உங்களுக்கு ஜிம்ல இருந்து கால் வந்துட்டே இருக்கு பேசுங்க “
“சரி கொடு “
அறை மணி நேரத்திற்கு மேல் அழைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். மதியம் இரண்டு மணிக்கு மேல் ஜிம்மிற்கு வருவதாக சொல்லிவிட்டு வைத்தார்.
அப்படியே அவர் பார்வை ஆதியை நோக்கித் திரும்பியது.
“குளிக்கலையாடா நீ? “
“இல்லப்பா. நீங்க நேத்து நைட் அந்த நேரத்துக்கு கால் பண்ணி பேசி, வர சொன்னதும் என்னமோ ஏதோனு எப்படா விடியும்னு காத்திருந்து, விடிஞ்சதும் அப்படியே கிளம்பி வந்துட்டேன் “
“அதான் பாத்தாலே தெரியுதே “
“என்னாச்சுப்பா எதாவது பிரச்சனையா? “
“அதெல்லாம் ஒன்னும் இல்லடா. போ… போய் குளி. குளிச்சிட்டு சாப்பிடு ரெண்டு பேரும் வெளிய போலாம் “
“சரிப்பா “
அவன் நினைத்து பயந்த அளவிற்கு அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது போலவே அப்பாவின் நடவடிக்கை சாதாரணத்திற்கும் கீழ் மிக எளிமையாக இருந்தது. அதுவரை அவனுக்கிருந்த பயம் அவரைப் பார்த்து பேசியதில் இருந்து காணாமல் போனது.
அவர் சொன்னவாரே குளித்து முடித்து விட்டு சாப்பிட உட்கார்ந்தான். பக்கத்தில் சிபி “டேய் நீ இங்க என்னடா பண்ற? உன்னைய வித்துட்டதா அப்பா நேத்து சொன்னாரு. நீ என்னடானா மறுபடியும் வந்திருக்க? “ என்று தூக்க கலக்கத்தோடு கேட்க்க, சமையலறையில் இருந்து தோசைக் கரண்டியில் தோசையோடு அம்மா வெடித்துச் சிரித்தபடியே வந்தாள்.
எதுவும் புரியாமல் ஆதி முழிக்க, “இவனுக்கு தோச போடாதமா “ என்று சிபி முகத்தைச் சுழிக்க அம்மாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“ம்மா சின்ன ராசா என்னமா சொல்றாரு? “
“அது ஒன்னு இல்லடா. நேத்து யாமினிய உங்க அப்பா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாருல. யாரு இது? யாரு இது? ன்னு விடாம கேட்டுட்டே இருந்தான். இவன எப்படி சமாளிக்குறதுனு தெரியாம உங்க அப்பா, நீயும் ஆதியும் எப்போதும் எலியும் பூனையுமா அடிச்சுகிட்டு சண்ட போட்டுட்டே இருக்கனால ஆதிய வித்துட்டு இந்த அக்காவ வாங்கிட்டு வந்திருக்கேன். இனிமே இவதான் உனக்கு அக்கா. ஆதி இனி நம்ம வீட்டுக்கு வர மாட்டான் அப்படினு சொன்னாரு “
“ஏம்மா சமாளிக்க அவருக்கு வேற பொய்யே கெடைக்கலையாமா? “
“நீ வேற… அப்பா அப்படி சொன்னதும் தலைய நிமிந்து என்னவே பாத்து ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டான். நான் எதுவுமே சொல்லாம இருக்க அப்படியே போய் யாமினி கைய புடிச்சுகிட்டு பக்கத்துல உக்காந்துட்டான்டா உன் ஆச தம்பி “
ஆதியும் சிபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கேலி பாவனை செய்ய, பல நாள் கழித்து இப்படி அடி வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிப்பதாக அம்மா சொல்லிப் பூரித்தாள்.
தொடரும்...♡
“லீவெல்லாம் எப்படிப்பா தருவாங்க?. நான் வீட்டுக்கே வரக்கூடாதுனு பிளான் பண்ணிதான என்ன இந்த ஜெயில்ல கொண்டு வந்து சேத்தீங்க? “
“மாமா இறந்துட்டாருனு சொல்லி லீவ் கேளு. மேற்கொண்டு எதாவது கேள்வி கேட்டா எனக்கு கால் பண்ணி குடு நான் பேசிக்குறேன்”
“சரிப்பா “
“ம்ம்ம். முடிஞ்சவரைக்கும் சீக்கிரமா வரப்பாருடா “
அழைப்பைத் துண்டத்ததும் அவன் தூக்கம் முழுவதுமாகத் தொலைந்து போனது. யாமினி தன் வீட்டில்தான் இப்போது இருக்கிறாள் என்பதனைப் புரிந்துகொண்டான் ஆதி. நம்ம வீட்டில் இருக்கும்வரை யாமினிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அவள் அங்கு வர என்ன காரணம்? என்ற கேள்வி காற்றை போல அவனைச் சூழ்ந்து கொண்டது.
விடிந்ததும் விடுதி வார்டனை நோக்கி விரைந்தான். அப்பா சொல்லிக் கொடுத்தவாரே பேசினான். பெரிதாக ஒன்றும் நடிக்கவில்லை. ஏற்கனவே அவன் முகத்தில் இருந்த சோகமும் படபடப்பும் வார்டனை சம்மதிக்க வைத்தது. பேருந்தில் உருளும் சக்கரங்களோடு உருண்டது சிந்தனை.
மேடும் பள்ளமுமாய் ஒழுங்கற்று இருந்த அவன் தலைமுடி, “இன்னுமா இத கீழ போடாம யூஸ் பண்ற?” என்று அம்மா திட்டிய பிறகும் தள்ளாத டிசர்ட், சம்மந்தமே இல்லாத ஃபேன்ட் என வேர்த்து விறுவிறுத்து வெறும் ஆளாய் வந்து நின்ற ஆதியின் நிலையை சொல்லிப் புரியவைக்கத் தேவையில்லை.
ஹால் வெறிச்சோடிக் கிடந்தது. அம்மா எங்கே? என்று சமையலறைக்குள் நுழைந்தான். மகனைப் பார்த்ததும் தொத்திக்கொண்ட ஜோதியின் கைகளில் முத்தமிட்டுக் கண் களங்கினான் ஆதி.
“ஏண்டா பொட்ட புள்ள மாதிரி அழற? “
“பொட்ட புள்ளதா அழனும்னு எதாவது சட்டம் இருக்கா என்ன? வலிச்சா யார் வேணாலும் அழலாம் “
“யூடியூப் சேனல் ஆரமிச்சதுல இருந்து பெரிய ராசா கருத்தா பேசுறாரு “
“விளையாடாதமா. என்னமா பிரச்சின? யாமினிய எதுக்கு அவரு இங்க கூட்டிட்டு வந்திருக்காரு?”
“டேய் எனக்கும் என்னனு முழுசா தெரியாதுடா”
“ச்சே… சரி எங்க அவ”
“யாமினியும் சிபியும் உன் ரூம்ல தூங்குராங்க. அப்பா மேல மாடில தூங்குறாரு “
“ஜிம்முக்கு போகலையா அவரு? “
“ தெரியலடா “
“எவ்வளோ பெரிய விஷயம் நடந்துட்டு இருக்கு நீ என்னடானா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேசிட்டு இருக்க “
“என்னைய என்னடா பண்ண சொல்ற? “
“நீ ஒன்னு பண்ண வேணாம் எனக்கொரு முத்தா மட்டும் கொடு “
ஆசையாசய் ஆதியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு தலையைத் தடவி கண்ணத்தைக் கிள்ளினாள் ஜோதி.
அம்மாவின் அன்பான சைகைகளை ரசித்து முடித்த பிறகு “ம்மா நான் யாமினிய போய் பாக்கவா? “ என்று கேட்டான்.
“போய் பாரு. ஆனா அவ கண்டிப்பா தூங்கிட்டுதான் இருப்பா “
“அது எப்படி இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்ற?
“பாவம்டா நேத்து நான் பாக்கும்போதே ரொம்ப டையடா தெரிஞ்சா “
“ம்ம்ம் அதான் அப்படி சொல்றியா? “
“ஆமா. சரி போய் சத்தம் போடாம பாரு.
அவ எழுந்தாலும் என்ன? ஏதுனு? எந்த கேள்வியும் கேக்காத அப்பா சொன்னாரு “
“என்கிட்ட சொல்ல சொன்னாரா? “
“இல்ல நேத்து என்கிட்டையே அவரு அப்படிதான்டா சொன்னாரு. அதான் நான் உனக்கு அட்வான்ஸா சொல்றேன் “
“ம்ம்ம் என் செல்லம்மா “
“ஆமா ஆமா போய் பாரு “
வீட்டு வாசற்படியில் கால் வைத்தவுடனே அம்மாவின் முகத்தைப் பிடித்துவிட்டு அடுத்த வேலையாக அவன் அறைக்குள்தான் எப்போதுமே அவன் கால்கள் பாயும். அன்று ஏனோ அவனால் அவ்வளவு எளிதாக அவன் அறைக்குள் போக முடியவில்லை. தயக்கத்திற்கும் எதிர்பார்ப்பிற்கும் இடையில் சிக்கிக்கொண்டான். இருந்தாலும் அவன் இதயத் துடிப்பு அவனுக்கு வழி சொல்ல அதன்படி நடந்தான்.
கதவு திறக்கும் சத்தம் கூட கேட்கக் கூடாதென்று மெல்லத் திறந்தான் ஒவ்வொரு அடியும் பட்டும் படாமல் வைத்து உள்ளே சென்றான். லைட் வெளிச்சத்தால் தூக்கம் தொலைந்து எழுந்துவிடக் கூடாதென்று, காலை நேர வெளிர் மஞ்சள் நிற சூரிய ஒளிக்கதிர் ஜன்னல் வழியாக விழும் வெளிச்சத்திலேயே அவளைத் தேடினான்.
கடைசியில் அவளைக் கண்டுபிடித்துவிட்டான். புதுச் சட்டையை பெரிய விஷேச நாளில் போடலாமென்று பீரோவிலே மறந்துவிட்டு பத்தாமல் போன அதே காஃபி கலர் பிளைன் சட்டை. ஒவ்வொரு முறை பீரோ சுத்தம் செய்யும்போதும் “சிபி கொஞ்சம் வளந்துட்டா இது அவனுக்கு கரெக்டா இரும்டா பெரிய ராசா “ என்று அம்மாவின் பேசுபொருளாகும் அதே சட்டை.
அவளுக்காக இத்தனை வருடம் பீரோவிலே தவம் ஏதும் செய்திருக்குமோ? அந்த சட்டை!.
அந்த சட்டையை அவள் அணிந்து உறங்குவதைப் பார்த்த ஆதி ஒரு நொடி சொக்கித்தான் போனான். கடை கடையாய் ஏறி இறங்கி எடுத்த சட்டையை அணிந்திருந்தது அவனையே அணைத்திருந்தது போல பேருணர்வை அவனுக்குக் கொடுத்தது.
அவளது வாடலான முகம் ஏதோ ஒரு சோகத்தை ஜன்னல் வழி தெரியும் வேப்பம் பூவிடம் சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் என்ன என்பது பிடிபடவில்லை.
ஒருவேளை இப்படிக்கூட இருக்கும்… “அவனுக்காக காத்திருப்பது கசக்கிறது “ என்று அவள் சொல்லியிருப்பாள்.
“என்னைத் தாங்கியிருக்கும் இந்த இலைகளை விடவா? இல்லை என்னைவிடவா?“ என்று வேப்பம்பூ கேட்டிருக்கும். “உங்கள் இருவரையும் விட அதிகமாக இந்த கசப்பு என் தொண்டையை கவ்விப் பிடிக்கிறது” என்று அவள் சொல்லியிருப்பாள் பாவம். ஒத்த சிந்தனையுடவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் என்ன ஆச்சர்யம்?. எனக்கும் அப்படித்தான் இருந்தது என்று தனக்குள்ளே தானே பேசிக் கவிஞனான்.
பின் அம்மா வந்து “ஆதி” என்றதும் அவனான்.
“சத்தமா கூப்பிடாதமா நானே வர்றேன்”
“அங்க என்னடா பண்ற? தூங்கட்டும் விடுடா அப்புறம் பாத்துக்கலாம் “
“ஆஆஆ சரி “
“இந்த காஃபி குடி “
“லவ் யூ மா “
“போதும்டா டேய் “ என்று சொல்லியவரே ஜோதி மாடிப் படிக்கட்டில் ஏறினாள்.
“அப்பாவ எழுப்ப போறியா? “
“ஆமாடா ஆதி. அவருக்கு ஜிம்ல இருந்து கால் வந்துட்டே இருக்கு “
“அப்போ ஃபோன குடு நானே போறேன் “
“சரி இந்தா “
அப்பாவைப் பார்க்கும்போது ஏற்படும் குறுகுறுப்பு அன்று அவனுக்கு ஏனோ இல்லை. ஏதோ வெளியே தெரியா காரணத்தினால் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட இடைவெளியில் அடைந்திருந்த மௌனம் அன்று உடைந்தது.
மாடியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு குட்டி அறையில் கையைத் தலையணையாக்கி, காலை சுருக்கிப் பட்டத்து ராஜாவைப் போல படுத்திருக்கும் அப்பாவை எப்படி அழைத்து எழுப்புவது என்று தயங்கி நின்றான். ஆதியின் கையில் இருந்த அப்பாவின் அலைபேசியில் யாரே அழைக்க பாட்டு ஒலித்தது. அந்த சத்தத்தில் அப்பாவும் கண்விழித்தார்.
மல்லாக்கப் புறண்டு படுத்து பின் எழுந்து உட்கார்ந்தார். தன் கைகளால் முகத்தைத் துடைத்துக் கண்விழித்து “வந்துட்டியா? என்றார்.
“வந்து பத்து நிமிஷம் ஆச்சுப்பா. உங்களுக்கு ஜிம்ல இருந்து கால் வந்துட்டே இருக்கு பேசுங்க “
“சரி கொடு “
அறை மணி நேரத்திற்கு மேல் அழைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். மதியம் இரண்டு மணிக்கு மேல் ஜிம்மிற்கு வருவதாக சொல்லிவிட்டு வைத்தார்.
அப்படியே அவர் பார்வை ஆதியை நோக்கித் திரும்பியது.
“குளிக்கலையாடா நீ? “
“இல்லப்பா. நீங்க நேத்து நைட் அந்த நேரத்துக்கு கால் பண்ணி பேசி, வர சொன்னதும் என்னமோ ஏதோனு எப்படா விடியும்னு காத்திருந்து, விடிஞ்சதும் அப்படியே கிளம்பி வந்துட்டேன் “
“அதான் பாத்தாலே தெரியுதே “
“என்னாச்சுப்பா எதாவது பிரச்சனையா? “
“அதெல்லாம் ஒன்னும் இல்லடா. போ… போய் குளி. குளிச்சிட்டு சாப்பிடு ரெண்டு பேரும் வெளிய போலாம் “
“சரிப்பா “
அவன் நினைத்து பயந்த அளவிற்கு அப்படி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது போலவே அப்பாவின் நடவடிக்கை சாதாரணத்திற்கும் கீழ் மிக எளிமையாக இருந்தது. அதுவரை அவனுக்கிருந்த பயம் அவரைப் பார்த்து பேசியதில் இருந்து காணாமல் போனது.
அவர் சொன்னவாரே குளித்து முடித்து விட்டு சாப்பிட உட்கார்ந்தான். பக்கத்தில் சிபி “டேய் நீ இங்க என்னடா பண்ற? உன்னைய வித்துட்டதா அப்பா நேத்து சொன்னாரு. நீ என்னடானா மறுபடியும் வந்திருக்க? “ என்று தூக்க கலக்கத்தோடு கேட்க்க, சமையலறையில் இருந்து தோசைக் கரண்டியில் தோசையோடு அம்மா வெடித்துச் சிரித்தபடியே வந்தாள்.
எதுவும் புரியாமல் ஆதி முழிக்க, “இவனுக்கு தோச போடாதமா “ என்று சிபி முகத்தைச் சுழிக்க அம்மாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“ம்மா சின்ன ராசா என்னமா சொல்றாரு? “
“அது ஒன்னு இல்லடா. நேத்து யாமினிய உங்க அப்பா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாருல. யாரு இது? யாரு இது? ன்னு விடாம கேட்டுட்டே இருந்தான். இவன எப்படி சமாளிக்குறதுனு தெரியாம உங்க அப்பா, நீயும் ஆதியும் எப்போதும் எலியும் பூனையுமா அடிச்சுகிட்டு சண்ட போட்டுட்டே இருக்கனால ஆதிய வித்துட்டு இந்த அக்காவ வாங்கிட்டு வந்திருக்கேன். இனிமே இவதான் உனக்கு அக்கா. ஆதி இனி நம்ம வீட்டுக்கு வர மாட்டான் அப்படினு சொன்னாரு “
“ஏம்மா சமாளிக்க அவருக்கு வேற பொய்யே கெடைக்கலையாமா? “
“நீ வேற… அப்பா அப்படி சொன்னதும் தலைய நிமிந்து என்னவே பாத்து ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டான். நான் எதுவுமே சொல்லாம இருக்க அப்படியே போய் யாமினி கைய புடிச்சுகிட்டு பக்கத்துல உக்காந்துட்டான்டா உன் ஆச தம்பி “
ஆதியும் சிபியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கேலி பாவனை செய்ய, பல நாள் கழித்து இப்படி அடி வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிப்பதாக அம்மா சொல்லிப் பூரித்தாள்.
தொடரும்...♡