• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் - 5

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
916
5



“என் மகன் என்ன சொல்றான் ராஜி?” ஷோஃபாவில் சாய்ந்தமர்ந்து காப்பியை அருந்தியபடி கேட்டார் ராஜேஸ்வரி.

“எப்பவும் போலதான்கா வீட்டுக்கு வர்றான் போறான். எப்ப வர்றான், எப்பப் போறான்னே தெரியலை.”

“ஓ.. துக்கம் கொண்டாடுறார் போல. அவன் வர்ற நேரத்தைக் கணக்கிட்டு மெல்ல அவன் பொண்டாட்டியை விவாகரத்து செய்யச் சொல்லிப்பார்” என்றார்.

“ஐயையோ! என்னக்கா நீ? அவன் பக்கத்துலயே போக முடியாதுக்கா. இந்தக் கல்யாணத்துல நாம செய்த வேலையில் முகத்தைக் கூடப் பார்க்கமாட்டான். இதுல எங்கிருந்து பேசுறது?” என்றார் அலறலாக.

“பேசிதான் ஆகணும் ராஜி. இல்லைன்னா அந்த அன்பழகி திரும்பவும் அவன் வாழ்க்கையில் வந்திருவா. அது இந்த ஜென்மத்துல நடக்கவே கூடாது” என்றவர் கண்களில் அத்தனை ஆத்திரம்.

“அப்படின்னா வேற ஏடாகூடமான ஆள் யாருக்காவது அந்தப் பொண்ணைக் கட்டிக்கொடுக்கிற மாதிரி ப்ளான் செய்திருக்கலாம்ல அக்கா. நம்மதான் செய்தோம்னு தெரியாமலே செய்துட்டுப் போயிருக்கலாமே. இப்பப்பாரு நம்ம பையனைப் ப்ளாக்மெய்ல் செய்து அவன் மொத்தமா நம்மளை வெறுத்துட்டான்” என்றார் ராஜலட்சுமி.

“அதைப்பற்றிலாம் கவலையில்லை ராஜி. அம்மான்ற மூன்றெழுத்தை வச்சி சுலபமா அவனை மாற்றி, எதையாவது செய்து என் பக்கத்துல கொண்டு வர முடியும். என்னை மீறி அவன் எதையும் செய்ய முடியாது. அதுக்கு நான் விடவும் மாட்டேன். அந்த அன்பழகி கஷ்டப்படுறதை பக்கத்துல இருந்து பார்க்கணும்னு நீண்ட யோசனைக்குப் பிறகுதான் செந்தூக்கு முடிச்சேன். அவளுக்கு இன்னும் இருக்கு” என்றார் வன்மமாக.

“என்னவோ சொல்ற போ. இந்தச் சின்னவள் வேற அண்ணி அண்ணின்னு உருகுறா. நம்ம மேல உள்ள பயம் விட்டுருச்சோ தோணுதுக்கா” என்று அவள் பேசியதைக் கூறினார் ராஜலட்சுமி.

“சாது மிரண்டால் காடு கொள்ளாதாம் ராஜி. சாது எப்பவும் சாதுவாயிருக்கணும். அது மிரளாதபடி நாமதான் பார்த்துக்கணும்” என்றவர், “அப்புறம் அந்தப் பையனை யாராலும் கண்டுபிடிக்க முடியாதுல்ல?” என்றார்.

“அதுக்கு சான்சே இல்லைக்கா. உன் கொழுந்தன் பக்காவா செய்திருக்கார்” என,

“சரி நீ டைவர்ஸ் பற்றி அவன்கிட்ட பேசிப்பாரு. என்ன பேசினாலும் அக்காவுக்காகப் பொறுத்துக்கோ” என்றார் தங்கையிடம்.

“உனக்காக பேசுறேன்கா” என்ற ராஜலட்சுமிக்கு அக்காவின் மேல் கண்மண் தெரியாதளவு பாசம். அதை தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ராஜேஸ்வரி. ராஜலட்சுமியின் கணவர் சேகர் அப்படியிருப்பாரா?

இரவு வீடு வந்த செந்தூரனை நிறுத்தினார் ராஜலட்சுமி. சீக்கிரமே உணவருந்தி தன் அறைக்குச் சென்றுவிடும் பவானியும் அங்குதான் இருந்தாள்.

மாலை வந்ததிலிருந்து சித்தி சித்தப்பா இருவரும் குசுகுசுவென்று ஏதோ பேசிக் கொண்டிருப்பது கண்ணில்பட, அண்ணன் திருமணத்திற்கு முன் இப்படி அவர்கள் பேசியது புரிய, ஏதோ ஒன்று நடக்கப்போகிறதென்று உள் மனம் உணர்த்தியதில், சித்தியிடம் ஏதேதோ காரணம் சொல்லி ஹாலிலேயே அமர, அண்ணனை அவர் நிறுத்தவும் மனம் படபடக்க ஆரம்பித்தது.

“என்னன்னு சொல்லுங்க?” என்றான் மொட்டையாக.

“உன் கல்யாணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாசமாகுது செந்தூ. அந்தப் பொண்ணோட வாழ்ற ஐடியா இருக்குதா?” என ஆழம் பார்த்தார்.

“இதுக்குப் பதில் சொல்லியே ஆகணுமா?” என்றான் கிண்டலாக.

“சொன்னால்தான் அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்” என்றார் ராஜலட்சுமியும் விடாது.

“எதோ ஒரு முடிவோடதான் உங்கக்கா உங்களை அனுப்பியிருக்காங்க. சொல்லுங்க கேட்போம்?” என்றான் அலட்டலில்லாமல்.

“அதான் கேட்டேனே?” என்றார் அவரும்.

“அந்தப்பொண்ணு எப்படி வந்தாள்னு தெரிஞ்சும் அவளோட வாழ்றது சாத்தியமா? அதெ...”

“அப்ப விவாகரத்து செய்திரு” என்றார் பட்டென்று.

உள்ளுக்குள் அதிர்வு எழுந்தபோதும், “என்ன சொல்ல வர்றீங்க?” என்றான் நிதானமாக.

பவானியோ திகைத்துப்போய் அவர்களையே பார்த்திருந்தாள்.

“அவளை விவாகரத்து பண்ணிட்டு வேறொரு பெண்ணை கல்யாணம் செய்துக்கோ” என்றார் வேகமாக.

“ஏன் அடுத்த பொண்ணை உங்கக்கா பார்த்துட்டாங்களா?” என்றான் கேலியாக.

“இல்லடா. உனக்கே யாரையாவது பிடிச்சிருந்தாலும் சரிதான். அந்த அன்பழகி மட்டும் வேண்டாம்” என்றார் தாராள மனதாய்.

‘இவர்களே கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்து வைத்து, இவர்களே அவளை வேண்டாம் என்று சொல்ல என்ன காரணமாகயிருக்கும்? அந்தப் பொண்ணுக்குத் திடீர்னு ஏன் என்னைப் பிடிக்கலை?’ என்ற மனதிடம், ‘அவளெங்கே உன்னை வேண்டாமென்றாள். நீதானே அவளை விரட்டியடித்தாய்’ என்றது அறிவு.

இத்தனை நாட்கள் இல்லாத ஏதோ ஒரு நெருடல் மனதினுள். இத்தனை நாள்களும் தாய் மீதுள்ள கோவத்தில் நடந்த திருமணத்தை விபத்து போல் ஒதுக்கியிருந்தவனுக்கு, அத்தனை பிரச்சனைகளுக்குப் பின்னும் தன் கண்பார்த்து வாழக் கேட்டவளை குறை சொல்லத் தோன்றவில்லை. மனதினுள் இனம் புரியா இம்சை ஒன்று குடைய ஆரம்பித்தது செந்தூரனுக்கு.

அவன் அமைதியைக் கண்ட ராஜலட்சுமி, “என்ன செந்தூ? எதாவது பதில் சொல்லு?” என்றார்.

அங்கோ கோவத்தில் நின்றிருந்த பவானியின் பொறுமை பறக்க, அவளின் அண்ணனோ, “டைவர்ஸ்தான பண்ணிரலாம். அடுத்த பொண்ணும் நீங்களே பார்த்திருங்க” என்று அவர்களின் செயல்களை அறிந்துகொள்ள சம்மதித்து, சம்மதித்ததை மறந்தே போயிருந்தான்.

“அன்பு அண்ணி இடத்துல எவளையாவது கொண்டு வரணும்னு நினைச்சீங்க அப்புறம் இந்த வீட்டுல நடக்காததெல்லாம் நடக்கும். உங்களுக்கும் ஒரு தங்கை இருக்கேன்றது ஞாபகமிருக்கட்டும். அண்ணி மாதிரி ஒருத்தர் உங்களுக்குத் தேடினாலும் கிடைக்கமாட்டாங்க. அடுத்தவங்க சொல்லைக் கேட்டு ஆட்டம் போடாதீங்க. அப்புறம் பெயரளவிற்கே ஒட்டிட்டிருக்கிற அண்ணன் தங்கை உறவுதான் முதல்ல ரத்தாகும்” என்று கோவத்தைக் கொட்டிய பவானி தன் அறைக்குச் செல்ல,

“ஏய் என்ன வாய் நீளுது. கல்யாணம் முடிஞ்சதிலிருந்து உன் பேச்செல்லாம் ஒரு மார்க்கமா வருது? அப்புறம் என்னோட தண்டனை வேற மாதிரியிருக்கும். எதிர்த்தா பேசுற நீ” என்று கடுமையான வார்த்தை கொண்டு நேரடியாகவே மிரட்ட ஆரம்பித்தார் ராஜலட்சுமி.

அப்பொழுதாவது அண்ணன் தனக்காகப் பேசுவான் என்று பார்க்க, அவனோ அண்ணன், தங்கை உறவு ரத்தாகிரும் என்ற வார்த்தையிலேயே அவளை வெறித்தாற்போல் நின்றுவிட்டான்.

அண்ணனின் ஒட்டாத்தன்மை தெரிந்ததுதானே என்று அவனை அலட்சியம் செய்து, சித்தியை வழியிலிருந்து விலக்கிவிட்டு உள்ளே சென்று கதவடைத்துக் கொண்டாள்.

அதில் கோவம் வரப்பெற்ற ராஜலட்சுமி, “ஏய் பவா! வெளியில வாடி” என்று கதவைத் தட்ட, அதில் உணர்வு வந்தவன் என்னவென்று வர,

“அதான் நீங்க சொல்றதையெல்லாம் கேட்டு, பத்துக் கல்யாணம்னாலும் பண்றதுக்கு ரெடியா தாராள மனசுள்ளவர் இருக்காருல்ல அவர்கிட்டப் பேசிக்கோங்க. எனக்கு யாருமே வேண்டாம். என்னைத் தனியா விடுங்க” என உள்ளிருந்து கத்தினாள்.

அதிர்வென்றால் அப்படியொரு அதிர்வு இருவருக்கும். தங்கை வீட்டில் அவள் இருப்பதே தெரியாது. வாய் பேசி பார்த்ததேயில்லை செந்தூரன். வாய் பேச வீட்டில் அனுமதியில்லை என்பது அவன் அறியாததல்லவா!

தந்தை இறந்தபின் சித்தியின் ஆதிக்கத்தில் வீடு வரவும் தங்கையின் குரல் கேட்பதே அரிது. தாய் தகப்பனில்லாத தங்கையைப் பார்த்துக்கொள்ள தன்னால் முடியுமா? என்ற கேள்வியில் பிடிக்காத தாயின் தங்கையான ராஜலட்சுமி வரவை மறுக்க முடியவில்லை. தங்கைக்காகதான் அவர்களது குடும்பத்தை உள்ளே அனுமதித்தான்.

முதலில் தனக்கும் பிடித்திருந்த சித்தி உறவு, சித்தியினால் தாய் உறவு வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்து பிள்ளைகளை உரிமை கொண்டாட, சித்தி குடும்பத்தையே வெளியேற்றும் கோவம் எழுந்தது செந்தூரனுக்கு. அப்பொழுதும் சிறு பெண்ணான தங்கை கண்முன் தோன்ற, அவர்களிடம் தங்கையின் பொறுப்பை முழுதாகக் கொடுத்துவிட்டு விலகிக்கொண்டான். படித்து முடித்த பின் வேலையிலும் பிரச்சனை வர, தனக்கொரு உலகம் அமைத்து அதில் அவன் ராஜாவாகிவிட்டான்.

எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு, இன்றோ ஏதோ... இல்லையில்லை எல்லாமே தவறாகப்பட்டது.

‘சாது மிரள ஆரம்பித்துவிட்டதோ?’ என்ற பயம் ராஜலட்சுமிக்கு என்றால், ‘தங்கை தன்னைவிட்டுப் போய்விட்டாளோ’ என்ற பயம் செந்தூரனுக்கு.


“பவி” என்று பலமுறை அழைத்துப் பார்த்தும் பதிலில்லாமல் போக சோர்ந்து போனவன், மொட்டை மாடியில் தனக்காகத் தானே செலவு செய்து கட்டிய அந்த ஒற்றைப் படுக்கறையுடனான வீட்டினுள் நுழைந்து கட்டிலில் படுத்து விட்டத்தை வெறிக்க ஆரம்பித்தான். மனைவியின் விஷயம் ஓரம்போய், தங்கையின் நினைவே அவனை ஆக்கிரமித்தது. இதில் விவாகரத்து செய்வதாக கோவத்தில் விளையாட்டாகச் சொல்லிய வார்த்தைகளை மறந்திருந்தான். விளைவு!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
916
“ஹாய் அன்பு!”

“வாங்க ரஹ்மான் சார்” என்றாள் பதிலுக்கு.

“ஏரியா சைலண்டாயிருக்கு. எதுவும் அப்பாய்ன்ட்மெண்ட் இல்லையா?”

“எல்லாரும் தன்னைத்தானே சுய அலசல் செய்து தெளிவாகியிருப்பாங்களா இருக்கும் சார். அதான் இடமே அமைதியாயிருக்கு” என்றாள் மென்னகையுடன்.

“ம் இருக்கலாம் அன்பு. என்னாச்சி? ரொம்ப டல்லா தெரியுற. எதாவது ஹெல்த் இஷ்யூவா? இல்ல சைக்காலஜி டாக்டருக்கு சைக்கலாஜிகல் ப்ராப்ளமா?”

“அப்படில்லாம் எதுவும் இல்லை சார். காலையில் வந்த சூஸைட் அட்டெம்ட் கேஸ்னால கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிட்டேன். அதான் ஒன் ஹவர்கான கேஸை பிரமிளாவுக்கு மாத்தி விட்டுட்டேன். இப்ப நான் ஓகே சார்” என்றாள்.

“குட். அப்புறம்?” என்று நிறுத்த...

“சொல்லுங்க சார்.”

“அ..அது உன்னோட மேரேஜ் பற்றிக் கேள்விப்பட்டேன். தப்பா நினைக்கலைன்னா நான் பேசிப் பார்க்கட்டுமா?”

“என்ன சார் மிஸ்டர்.அன்பழகிக்கு ட்ரீட்மெண்டா? அதை நானே பண்ணினால்தான் சார் சரியாயிருக்கும்” என்றாள் அழகாகப் புன்னகைத்து.

“அன்பு தப்பா எடுத்துக்கலையே?” என்றார் தடுமாற்றத்துடன்.

“இல்லை சார். எங்கப்பா வயசு உங்களுக்கு. என்மேல உள்ள அக்கறையில்தான் கேட்குறீங்க தெரியும். அக்கறைக்கும், வினயத்துக்கும் வித்தியாசம் தெரியும் சார். நீங்க கவலைப்படாதீங்க. சின்ன இடைவெளி புரிதல் கொடுக்கும் சொல்வாங்க. புரிந்த பிறதே வாழ்ந்துக்குறோமே” என்றாள் மென்முறுவலுடன்.

“சீக்கிரமே உங்களை ஜோடியா பார்க்கணும்” என்று அவர் நகர, புன்னகை மாறாது அமர்ந்திருந்தவளுக்கு, ‘தன்னைப் புரிந்து கொள்வானா? இல்லை இதுவே வாழ்க்கையாகிவிடுமா?’ கேள்விகள் எழுந்ததும் புன்னகை மறைய, இரண்டு நாள் முன் நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.

இரண்டு படுக்கையறை கொண்ட அந்த ஒன்பது மாடிக் குடியிருப்பின் நான்காவது மாடியில், இரண்டாம் நம்பர் வீட்டில், ஒரு வயதான பெண்மணிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தாள் அன்பழகி. தனிமையின் கொடுமை தாளாது பதினைந்து நாட்கள் முன்பு தூக்க மாத்திரை அதிகம் போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததில், காப்பாற்றப்பட்டு தற்பொழுது அவரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் சிகிச்சை நடைபெறுகிறது.

ஒரே மகன் வெளிநாட்டுவாசியாகி விட சில மாதங்கள் முன் கணவர் இறந்துவிட்டார். அப்பெண்மணி மகனை தன்னுடனே இருக்கச் சொல்லியும், பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு வெளிநாடே சிறந்ததென்று வேலைக்கு ஒரு பெண்ணை நியமித்துச் சென்றுவிட்டான் மகன். வேலை செய்யும் பெண்ணும் தன் வேலை முடிந்ததும் கிளம்பிவிட, பேச்சுத்துணைக்குக் கூட ஆளில்லாமல் தவித்தவருக்கு, ஆளில்லா தனிமை மிரட்சியையும் பயத்தையுமே கொடுத்தது. இங்கு தான் செத்தால் கூட அழுகி நாறிப்போய் அனாதையாய்க் கிடப்போம் என்பது போல் விதவிதமான கற்பனைகள் அவரைக் கொடுமைப்படுத்த அது தாளாதுதான் அந்த முடிவு.

சரியான நேரத்தில் வேலை செய்யும் பெண் பார்த்து மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்திருக்க, தாயைக் காண வந்த மகனுக்கு வேறு வழியில்லாது, வீட்டோடு இருக்க தூரத்து உறவுப் பெண்மணி ஒருவரை அமர்த்தி மன அழுத்தத்திற்கான சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்து கிளம்பிவிட்டார். உடல் பலவீனத்தால் நடக்க முடியாதிருந்த பெரியவருக்கு, இதுவரை சிகிச்சையளிக்க வெளியில் சென்றிராத அன்பழகி இவருக்கு மட்டும் ஒத்துக்கொண்டு, வாரம் ஒருமுறை வந்து கொண்டிருக்கிறாள்.

இப்படித் தனிமைப்படுத்தி சாகடிப்பதற்கு, முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தால், பலபேரிடம் பழக பேசிச் சிரிக்க இருந்திருப்பார்கள் என்ற எண்ணம் அன்பழகிக்கு உண்டு.

இன்றும் அவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் அழைப்பு மணி சத்தம் கேட்டு பெரியம்மாவிற்குத் துணையிருக்கும் பெண்மணி சரசு கதவைத் திறக்க, “வணக்கம்மா! இங்க ஏசி சரிபண்ணக் கேட்டிருந்தாங்க” என்றான் அவன்.

“ஒரே நிமிடம்” என்றவர், “அக்கா ஏசி மெக்கானிக் வந்திருக்காங்க” என உள்நோக்கிக் குரல் கொடுத்தார்.

“வரச்சொல்லு சரசு” என்றதும் அறையினுள் வந்தவனைக் கண்ட அன்பழகி கண்கள் விரிய, அவன் தன்னைக் காணுமுன் முகத்தை மறைத்துக்கொண்டு அவனையே பார்த்திருந்தாள்.

“எத்தனை நாளா ரிப்பேர் மேடம்?”

“ஒரு வாரமா ஓடலைபா. நேத்து இரண்டு பேர் வந்து பார்த்துட்டு இதோ வர்றோம்னு சொன்னாங்க. பசங்களைப் பார்த்தா சரியா தெரியாததால வேண்டாம் சொல்லிட்டோம்.”

“ஒ... என்னை மட்டும் எப்படி விட்டீங்க?” என்று ஏசியினுள் உள்ள சல்லடையைக் கழட்டி தூசு தட்டச்சொல்லி சரசுவிடம் கொடுத்து தன் ஆராய்ச்சியைத் தொடர, “மூணு பொண்ணுங்க இருக்குறப்ப என்ன பயம்?” என்றார் அவரும்.

‘என்னது பொண்ணுங்களா?’ மனம் அதிர அப்படியே நின்றவன், ‘பாட்டிக்கு லொள்ளைப் பாரு’ என்றெண்ணியதில் புன்னகை வர, “நான் பயந்துட்டேன் மேடம். எதாவது தவறாகப்பட்டா இந்த சின்னப் பையனைக் கொஞ்சம் மன்னிச்சி விட்டுருங்க” என்று கெஞ்ச, அவன் நடிப்பினில் சிரிப்பு வந்தது அன்பழகிக்கு. அத்துடன் சிறிது கள்ளத்தனமும்.

“மேடம் பின்னாடி போய்ப் பார்க்கணும். வழி எங்கேயிருக்கு?” என்றான்.

“பால்கனி போய்ப் பார்க்கணும்பா. சரசு தம்பியைக் கூட்டிட்டு போ” என்றதும் பால்கனி செல்லத் திரும்பியவன் அங்கு அமர்ந்தவளின் விழிகளைக் கண்டான். கண்கள் மட்டுமே கண்டவனுக்கு முகக்கவசம் மற்ற இடங்களை மறைத்துவிட்டது. அக்கண்களைக் காண்கையில், ‘அவளாக இருக்குமோ?’ சில நொடித் தடுமாற்றம் எழ, ‘இல்லை.. இருக்காது’ தன்னைத்தானே சமாளித்தாலும், ‘அவளாயிருந்தா’ என யோசனையினூடே சென்றவன் எல்லாவற்றையும் பார்த்து வந்து, “ஏர் மட்டும் ஏற்றணும் மேடம். இரண்டாயிரத்து ஐநூறு ஆகும். சரின்னா சொல்லுங்க. இப்பவே ஏர் பிடிக்கிறேன்” என்றான்.

“நேத்து வந்தவங்க ஏர் லீக்காகுது. அதுக்குப் பார்த்துட்டுதான் ஏர் ஏத்தணும். பணமும் ஐந்தாயிரம் மேல கேட்டாங்க. நீ இப்படிச் சொல்லுற?” என்றார் குழப்பமாக.

“உங்க கணிப்பும் சரிதான். உங்களை ஏமாற்ற முயற்சி பண்ணிருக்காங்க மேடம். என் நம்பர் தர்றேன். கரண்ட் பொருள் எது பிரச்சனை ஆனாலும் கூப்பிடுங்க. தேறாதுன்னா செகண்ட் சேல் பண்ணித் தர்றேன்” என்றவன் அங்கிருந்தவளின் கண்பார்க்க விழைய, அவளோ தலைகவிழ்ந்து கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள். ‘அவள்தானா? அவளெனில் ஏன் என்னைப் பார்க்கவில்லை?’ திரும்பவும் மனம் கேள்வி கேட்டது.

பணத்தை அவனிடம் கொடுத்து, “ஏன்பா உனக்குக் கல்யாணமாகிருச்சா?” என்றார் அந்த வீட்டுப் பெண்மணி.

“அதை ஏன் மேடம் கேட்குறீங்க? ஒருமுறை தெரியாமல் பண்ணிட்டேன்” என்றதில் அன்பழகி சட்டென்று நிமிர்ந்து அவனைக்காண, அவளைப் பார்த்தபடி, “இப்ப அடுத்த பொண்ணு தெரிந்தே தேடிட்டிருக்கேன்” என்றவன் அவளின் அதிர்ந்த பார்வை கண்டு புன்னகையுடன் கிளம்பிவிட்டான்.

அவன் சொன்னது விளையாட்டுக்குதான் என புரிந்தாலும் மனதில் சிறு வலியை ஏற்படுத்தத்தான் செய்தது. ‘தொழில் செய்யுமிடத்தில் மட்டும் வாய்கிழிய பேசுவான் போல இந்த செந்தில். கல்யாணத்தோட உன் புன்னகை என்ன விலைன்னு கேட்க வச்சிட்டான்.’

தங்கள் பிரிவிற்குப் பின் ஒருமாதம் கழித்து அவனைப் புன்னகை முகமாகப் பார்த்ததை எண்ணியடியிருந்தாள் அன்பழகி.

“ஏய் பவிக்குட்டி! என்ன காலையிலயே வந்திருக்க? முகமெல்லாம் ஒரு மாதிரியிருக்கு? சாப்பிட்டியா? என்றாள் அன்பழகி.

“இல்லண்ணி. உங்களைப் பார்க்கணும்னு சீக்கிரமே காலேஜ் போயிட்டு அப்படியே யாருக்கும் தெரியாம இங்க வந்துட்டேன்” என்றாள் பயந்தாற்போல்

“தப்பில்லையாடா?” என அன்பாய் விசாரிக்க,

“காலேஜ் போக எனக்குப் பயமாயிருக்கு அண்ணி. சீனியர் அக்கா ஒருத்தவங்க என்னை விரோதி மாதிரி நினைச்சி ரொம்ப டார்ச்சர் பண்றாங்க” என்றுவிட்டு அழ ஆரம்பித்தாள்.

“பவிக்குட்டி என்ன பண்ற? அழக்கூடாது. என்ன காரணத்தால் அப்படிப் பண்றாங்க?” என்று பரிவாய் கேட்க,

“தெரியலை அண்ணி. செகண்ட் இயர் பாதிவரை அவங்களை யாருன்னே தெரியாது. அதுக்கப்புறம் ஏனென்ற காரணமே சொல்லாம ராக்கிங் பண்ணுவாங்க. இப்ப தேர்ட் இயர்ல இன்னும் அதிகமாகிருச்சி. அதிலும் சமீபமா அவங்க ஃப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து யாரோ ஒரு பையனோட சேர்த்து வைத்து அவன்கிட்டயிருந்து விலகியிரு. அவன் இல்லைனா வேற ஆம்பளையே இல்லையா. அப்படி இப்படின்னு அசிங்க அசிங்கமா பேசுறாங்க. என்னால அதை சகிச்சிக்கவே முடியலை. ஓவர் ப்ரெஷரா இருக்கு அண்ணி” என்றாள் அழுதபடி.

“ப்ச்.. அழாத சொல்றேன்ல” என அதட்டி, “விமன்ஸ் காலேஜ்ல பையனோட சேர்த்து வைத்துப் பேசுறாங்கன்னா, நீ யாரோடவாவது பேசுனியா?” என்றாள் யோசனையாக.

“அச்சோ அண்ணி! நான் என்ன செய்யுறேன்னு என்னை வாட்ச் பண்ணிட்டேயிருப்பாங்க. தெரியாம யார்கிட்டேயாவது பேசிட்டாலும் அவ்வளவுதான். அப்படித்தான் போன தீபாவளிக்கு பர்சேஸ் பண்ணக் குடும்பத்தோட திநகர் போயிருந்தோம். அப்ப யாரோ ஒருத்தர் எதையோ கேட்கையில் கூட்டத்துல மாட்டிக்கிட்டோம். நான் சாரி கேட்க, அவர் சாரி சொல்லின்னு இரண்டு இல்ல மூணு நிமிஷம் பேசியிருக்கலாம். ஆக்சுவலா அவங்க முகம்கூட நினைவில் கிடையாது. ஆனா, சித்தி ரொம்பவே அடிச்சிட்டாங்க. அதிலிருந்து வழி சொல்லக்கூட ஆண்கள்கிட்ட வாய் திறக்குறதில்லை” என்றாள் பாவமாக.

“அடிக்கலாம் செய்வாங்களா?” அன்பழகி அதிர்ச்சியாய்க் கேட்க,

“ம்.. எப்பவும் அடிதான் விழும். அன்னைக்குக் கொஞ்சம் அதிகமாகி சூடு வச்சிட்டாங்க” என்று உள்ளங்காலைக் காண்பித்தாள்.

“உங்கம்மா எதுவும் சொல்லலையா?” மனம் தாளாமல் கேட்டாள்.

“அந்தம்மா பெர்மிஷன் இல்லாம சின்ன துரும்பைக் கூட அசைக்க மாட்டாங்க சித்தி. அங்க ஆர்டர் போட்டா இங்க செயலாக்கம் நடக்கும். நிறைய முறை காரணமே தெரியாம திட்டு, அடின்னு வதை பட்டிருக்கேன். கேட்டா கண்டிச்சி வளர்க்குறதா சொல்லுவாங்க. இதே அவங்க பையன்களை செய்தா சும்மா விடுவானுங்களா?”

“அவங்களை மட்டும் சேஃபா ஊட்டி கான்வென்ட்ல சேர்த்துப் படிக்க வைக்குறாங்க. இங்கயிருந்தா என்னைக் கொடுமை செய்யுறதைப் பார்த்து அவனுங்க கேள்வி கேட்பாங்கள்ல? சின்ன வயசுல எனக்குப் பரிந்து அவங்க கேட்ட கேள்வியினாலதான் அவங்களுக்கு ஹாஸ்டல் வாசம். அதான் பேசுறதையே நிறுத்திட்டேன். இப்ப நீங்க வந்ததும்தான் இவ்வளவாவது பேசுறேன்” என்றவளுக்குக் கண்ணீர் கூட நின்றிருந்தது.

அவளின் துன்பத்தில் அன்பழகியின் கண்களில் கண்ணீர்க் கோடுகள். பவானி அறியாமல் அதைத் துடைத்தபடி, “உன் அண்ணா?” என்றவளுக்கு என்ன வரப்போகிறதோ என்ற பயத்துடன் அவன் தவறாகிவிடக்கூடாதே என்ற தவிப்பும் எழுந்தது.

“அண்ணனா? ஹ்ம்.. சித்திகிட்ட பொறுப்பை ஒப்படைச்சதோட கடமை முடிஞ்சதுன்னு நினைச்சிருக்கலாம். அண்ணன் இருக்கும்போது என்னை கடிந்து ஒரு வார்த்தை பேசமாட்டாங்க. அதனால, நான் நல்லாயிருக்கேன்னு நினைச்சிருக்கலாம். ஸ்கூல் காலேஜ்னு மணி லெவல் சப்போர்ட் மட்டும்தான் வரும். அடிபட்டு வந்தால் கூட என்னாச்சின்ற பதைப்பு, அக்கறைப் பேச்சு எதுவும் கிடையாது. அண்ணன் அன்புக்காக ஏங்கி இப்ப எதையும் கண்டுக்காத ரோபோ மாதிரி ஆகிட்டேன் அண்ணி. அண்ணன் நல்லவங்கதான். அவங்களுக்கு... அவங்க வியாபாரத் தொடர்புடையவங்களுக்கு மட்டும்” என்றாள்.

எல்லாம் சொன்னவள் ஏனோ விவாகரத்து செய்வதாகப் பேசியதை மட்டும் சொல்லவில்லை. அண்ணி உறவை வெட்டிவிட மனமில்லையோ!


வியாபாரியாய் அவன் எப்படியிருப்பான் என்பதைத்தான் நேரடியாகப் பார்த்திருக்கிறாளே! பவானியின் சொற்களைக் கேட்டதும், ‘செந்தூரன் ஒரு சுயநலவாதி’ என்றே மனதில் பதிந்தது.
 
Member
Joined
Sep 3, 2024
Messages
30
செந்தூரன் எப்ப பொதுநலவாதியா இருந்தான்? 🤔 இந்த அன்புக்கு சுயநலவாதின்னு இப்பத்தான் தெரியுதாக்கும்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
916
செந்தூரன் எப்ப பொதுநலவாதியா இருந்தான்? 🤔 இந்த அன்புக்கு சுயநலவாதின்னு இப்பத்தான் தெரியுதாக்கும்.
நானும் அதை தான் யோசிக்கிறேன். இவன் அவ்வளவு நல்லவன் இல்லையே.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
916
Konjam vai pesunathuku inda pavi pulla ya target panni amukuka plan ah
Ambu enna seiya pora
இப்ப வரை முழு ஆதரவு அன்பு தான். பார்க்கலாம்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top