- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
3
மனைவியின் அருகில் அமர்ந்தவன், அவள் கைதொட சட்டென்று கையை உதறியவள், பின் தன்னைத்தானே திட்டி, “சாரி என்னால இன்னும் நம்ம கல்யாணம் நடந்ததை நம்ப முடியல? அதான் பழக்கதோசத்துல.. சாரி” என்றாள் திரும்பவும்.
மனைவியின் வாயசைப்பையே பார்த்துக் கொண்டிருந்தவன், “பரவாயில்லமா? உன் மனசு புரியுது. நானும் பார்த்து நடந்துக்கறேன்” என்றான்.
கணவன் தன்னைத் தவறாக எண்ணக்கூடாது என்பதற்காக அவளாகவே பேச்சை ஆரம்பித்தாள். “நீங்க அன்னைக்கு கார்ல பேசியதை வச்சி எனக்கும், உங்களுக்கும் ஒத்துவராதுன்னு நினைச்சேன். உங்க மாடர்ன் லைஃப்கும், என்னோட வீட்டுக்கு கட்டுப்பட்ட டைப்புக்கும் செட்டாகாதுன்னு தோணிச்சி. இப்ப எல்லாமே மாறின மாதிரியிருக்கு” என்றாள்.
மனைவி சொல்வதைக் கேட்டவனுக்கு, சொல்ல வார்த்தைகள் இல்லை என்றே தோன்றியது. அது சந்தோசத்திலா அல்லது சங்கடத்திலா தெரியாது. “நான் உன் ஹஸ்பண்ட் தேவி. உன்னோட நல்லது, கெட்டது எல்லாம் என்னைச் சேர்ந்தது. எனக்கு உன்னை.. இந்த தேவதையை” என்று அவள் கன்னம் தடவி “ரொம்பப் பிடிச்சிருக்கு. நீ உன் இயல்பிலேயே இரு. யாருக்காகவும் மாற வேண்டாம்.”
“அப்ப அன்னைக்கு ஏன் அப்படித் திட்டினீங்க? என் கையை தொடக்கூடாது சொன்னதுக்கு?”
ஹ்ம்... என்று மூச்சை இழுத்துவிட்டவன், சில வினாடிகள் யோசித்து, “அது ஏதோ தெரியாம பண்ணியிருப்பேன்மா. அந்த டைம் என்ன பேசினேன்னு கூட நினைவில் இல்ல. ஆக்சிடெண்ட்கு முன்னாடி நடந்ததை மறந்திருமா? உன் கணவன் நல்லவன்னு நீ நம்பணும்டா” என்றான்.
‘அதை எப்படி மறக்க முடியும்’ என்று நினைத்தாலும், தற்சமயம் அதைக் கேட்டு திருமணமான அன்றே கணவனை நோகடிக்கக்கூடாது என நினைத்து, சம்மதமாய் தலையாட்டியவள் முகம் யோசனைக்குப் போனது.
“இப்ப என்னடா? எதையும் யோசிக்காத தலை வலிக்கப்போகுது” என்று அக்கறையாக சொன்னான்.
அவனின் கரிசனத்தில் மனம் மகிழ்ந்தாலும், அன்றைய நிகழ்வில் இவன் பங்குதானே அதிகம் என எண்ணி, “ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கறேன். அன்னைக்கு நீங்க ஏன் என்னையும் சேர்த்து காப்பாத்த முயற்சி கூட பண்ணாம, உங்க உயிரை மட்டும் காப்பாத்திக்க தலையை குனிஞ்சிக்கிட்டீங்க? இவ எக்கேடோ கெட்டுப் போகட்டும், தன்னோட உயிர் முக்கியம்னு தான அப்படிப் பண்ணுனீங்க?” என்றவள் குரலில் அவ்வளவு ஆதங்கம்.
சட்டென்று முகத்தில் கோபம் பரவி முகம் இறுக நின்றவன், பின் தன்னை நிதானப்படுத்தி மனைவியை சமாதானப்படுத்தும் நோக்குடன், “இப்படி கண்டதையும் போட்டு குழப்பிக்காத தேவி. அன்னைக்கு சூழ்நிலையில நான் உன்கிட்ட எப்படி நடந்துக்கிட்டேன்னு புரியல. இத்தோட எல்லாத்தையும் மறந்துவிடேன்மா. காட் ப்ராமிஸ் இனி எந்த ஒரு சந்தர்ப்பத்துலேயும் உன்னை விட்டுக்கொடுக்கவும் மாட்டேன். விட்டுப் பிரியவும் மாட்டேன். நீ தூங்கு தேவி” என்று மனைவியின் கையைப் பிடித்தவன் டக்கென்று அவளின் கையை கீழே வைத்து, “சாரிமா மறந்தாப்ல பிடிச்சிட்டேன்” என்றான்.
‘அவ்வளவு நல்லவனா நீ.’ மனதில் தோன்றியதை வெளியில் சொல்லாமல் சிரிக்க, “அவ்வளவெல்லாம் நல்லவனில்லை. கொஞ்சம் கெட்டவன்தான் போல. அதுவும் நீ சொல்லித்தான் எனக்கே தெரியுது” என்று வருத்தமான குரலில் சொன்னான்.
“ஆமா, உங்க குரல் ஏன் வித்தியாசமா இருக்கு?”
“அது ஒண்ணுமில்லமா. ஆக்ஸிடென்ட்ல ஒரு சின்ன அடி அவ்வளவுதான்.”
“என்னை மாதிரியாங்க?”
“உன்னளவு இல்லமா. எனக்குக் கம்மிதான். நான் மட்டும் கவனிச்சிருந்தா இது நடந்திருக்கவே செய்யாதே? என்னால தான் உனக்கு இந்தக் கஷ்டம் வலி, வேதனை எல்லாம்” என்றபடி கண்கள் கலங்கினான்.
கணவனின் குரலில் உள்ள கலக்கத்தை உணர்ந்தவள், அவனை குனியச்சொல்லி கண்ணீர் துடைத்து, “ரொம்ப கஷ்டமெல்லாம் இல்லங்க. ஆனா இருக்கு” என்று சிரித்து, “இந்த ஆக்ஸிடெண்ட் மூலமா உங்களோட நல்ல குணம் தெரிஞ்சிதே அதுவே சந்தோசம் தான். உங்க முகம் கூட எனக்கு முழுசா நினைவில்லை. ஒருமணி நேரம் பார்த்ததுல ஓராயிரம் வாக்குவாதம் நடந்திருச்சா? ஏனோ உங்க முகம் சரியா நியாபகம் வரலை. என்ன உங்களுக்கு சுமையா இருக்கப் போகிறோமேன்னு கில்டியா இருக்கு” என்றாள்.
“தேவி எதுக்கு இப்படிப் பேசுற? நீ எனக்கு சுமையா? இன்னொரு டைம் இந்த மாதிரி பேசாத? சுமைன்னு நினைச்சிருந்தா இந்த கல்யாணத்துக்கு அவசியமிருந்திருக்காதே. அப்புறம், என்னை பார்த்தவுடனே பிடிக்கல ஓகே. இனிமேல் பார்க்கப் பார்க்கப் பிடிக்கும் பாரேன்” என்றதும் வாய்விட்டு சிரித்து “நானும் அன்னைக்கு அப்படித்தான் நினைச்சேன்” என்றாள்.
“ஹேய் தேவி! ரொம்ப சிரிக்காதமா முகத்துல தையல் இருக்கு பாரு.. வலிக்கப்போகுது. கண்டதையும் போட்டு குழப்பிக்காம கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ? நைட் ஆபரேசன் இருக்கு.”
‘ம்...’ என சம்மதமாய் தலையாட்டியபடி படுத்துவிட்டாள். படுத்ததும் மனதினுள் என்னென்னவோ நினைவுகள் வந்து அலைக்கழித்தன. ஆனந்தாக அன்றைக்குப் பேசிய பேச்சிற்கும், கணவனாக இப்பொழுதைய நடவடிக்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. ‘ஒருவேளை அவனால்தான் எனக்கு இப்படியாகிருச்சின்னு குற்றவுணர்ச்சியில பிராயசித்தம் மாதிரி மேரேஜ் பண்ணிக்கிட்டானா? இல்லையே பேச்சிலயோ, செயல்லயோ நிஜ அன்புதான் தெரியுது.’
காரில் அவன் பேசிய பேச்சிக்கள் மனதில் ரீங்காரமிட்டன. ‘எப்படி என்னை பட்டிக்காடு ரேஞ்சில பார்த்தான். சின்னச்சின்ன சொற்களுக்கே சட்டென்று கோபம் வந்தது. போதும்டா சாமி இவள் சங்காத்தம் என்பது போல் அவன் பார்வை இருந்ததே. நினைத்திருந்தால், இந்த விபத்தையே காரணமா வச்சி என்னை விட்டு விலகியிருக்கலாமே. ஏன் விலகல? ஏன் மேரேஜ் பண்ணிக்கிட்டான்?’ மனம் கேள்வி மேல் கேள்வி கேட்து.
அவளின் யோசனையில் சுருங்கிய முகத்தைப் பார்த்தவன், “ப்ச்... தேவி ரிலாக்ஸா இரு சொன்னேன்ல. எதையும் யோசிக்காதே, உனக்கு நானிருக்கிறேன் ஓகே” என்று மெல்ல தலைவருட, கண்மூடியபடியே ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றாள் சுபா.
மனைவியின் உறக்கத்தை உறுதி செய்து, அருகிலமர்ந்தவன், ‘சாரிடா. முன்னாடி நடந்ததெல்லாம் கனவா நினைச்சி மறந்திரு. என் கண்ணைப்போல் உன்னைப் பார்த்துக்கறேன். சீக்கிரமே நீ குணமாகி வா. நமக்கான எதிர்காலம் காத்துக்கிட்டிருக்கு’ என மனம் அரற்ற, ‘என் தங்கையை நினைச்சாதான் கொஞ்சம் க~;டமாயிருக்கு. உனக்கு ஆக்ஸிடென்ட்னதும் ஏதேதோ நினைச்சி, குருட்டுதனமா பிடிவாதம் பிடிச்சிட்டிருக்கா’ என்றெண்ணியவனுக்கு தங்கையை நினைத்ததும் அவனது மனபாரம் அதிகமானது.
இரண்டு மணிநேரங்கள் கழித்து வந்த ராஜனும், சுந்தரியும் அறைக்குள் நுழைய, தூங்கிக் கொண்டிருந்த மகள் அருகிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த மருமகன் கண்ணில்பட, எப்பொழுதும் போல் மருமகனை பெருமையுடன் நோக்கினார் ராஜன்.
‘இவனில்லாமல் போயிருந்தால், தன் பெண்ணின் நிலை என்னவாகியிருக்கும்? எனக்கும், இவளுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிச் செல்ல எவ்வளவு நேரமாகியிருக்கும். அப்படி சொல்லியிருந்தாலும் யாரால் தடுத்திருக்க முடியும்.’
ஆனால், ‘உங்க பொண்ணுதான் என் ஒய்ஃப். என்றும் அது மாறாது’ என்று தெளிவாகச் சொல்லி கம்பீரமாக நின்றவனை அவருக்கு ரொம்பவே பிடித்தது. மனைவிக்கு சைகை காண்பித்து வெளியே அழைக்க வெளியே செல்ல அடியெடுத்து வைத்தவர்களின் அரவம் கேட்டு திரும்பிய ஜீவா...
“வாங்க மாமா, மண்டபத்துல எல்லா வேலையும் முடிஞ்சி, முழுசா செட்டில் பண்ணியாச்சா? நர்ஸ் வந்து ப்ரசர் செக் பண்ணிட்டு, ஆபரேசனுக்கு முன்னாடி என்னென்ன செய்யணும்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க மாமா.” பேசியபடியே மாமனும், மருமகனும் வெளியே வர சண்முகசுந்தரி உள்ளேயே அமர்ந்தார்.
வேகமாக வந்த ப்ரேம், “தேவி எப்படிப்பா இருக்கா?” என்று கேட்க, “ஏன்டா மூச்சி வாங்குது? காரைத்தான நிறுத்தப்போன மெல்ல வரலாம்ல?” என கேட்டார்.
“இல்லப்பா அது இவங்க ஹாஸ்பிடல் வந்து ரொம்ப நேரமாச்சிதா.. அதான் ஒரு டென்சன்ல...” ப்ரேம் இழுத்தான்.
“ஏன் மச்சான் என் ஒய்ஃபை நான் நல்லா பார்த்துக்க மாட்டேன்னு இவ்வளவு அவசரமா வந்தீங்களா என்ன?”
“அச்சோ! அப்படியெல்லாம் கனவுல கூட நினைக்க மாட்டேங்க. அதுவும் உங்களைப்போய் நான் உங்களுக்கு தொந்தரவா இருக்குமேன்னு... சாரி உளறுறேனா? என் தங்கையைப் பார்க்கணும்னு தான் சீக்கிரமா வந்தேன். வேற எதுவுமில்லை. உங்களை ஹர்ட் பண்ணிட்டேனா?” என்று சங்கடத்துடன் கேட்டான்.
“என்ன மச்சான் நீங்க.. இதுக்குப்போயி இவ்வளவு டென்சன் ஆகுறீங்க? உங்க பாசத்திற்கு அளவேயில்லன்னு தெரியும். போய்ப் பாருங்க தூங்கிட்டிருக்கா” என்றான் ஜீவானந்த்.
அறைக்குள் நுழைந்த ப்ரேம் தங்கையைப் பார்த்ததும் மனம் துடிக்க, ‘உன்னைத் தனியா அனுப்பியிருக்க கூடாதுடா’ என்று லட்சம் தடவையாவது நினைத்திருப்பான். எப்படி இருந்தவ? இப்பப் பார்க்க முடியாத தோற்றத்தில், மனதினுள் ரெத்தக் கண்ணீர் வடித்தான் அந்த உடன்பிறப்பு.
மகனின் முகத்தைப் பார்த்த தாய், தோளில் கைபோட்டு ஆறுதலாகத் தட்டிக்கொடுக்க, தாயின் கைபிடித்து அழுதவன், “அன்னைக்கு அனுப்பாம இருந்திருக்கலாம்மா. அவ வேண்டாம்னு சொல்லச் சொல்லக் கேட்காம அனுப்பினதுக்குத் தண்டனை தான்மா இது. ஆனா, வலி அனுபவிக்கிறது அவளாச்சே” என்று மனதிலுள்ளதை சொல்லி புலம்பினான்.
“ப்ரேம் சொன்னா கேளு. கண்ணைத் துடைச்சிக்கோ, பாப்பா எழுந்துட்டா நீ அழுறதைப் பார்த்து இன்னும் ஃபீல் பண்ணுவா. இனி அவளை மாப்பிள்ளை பார்த்துக்குவார்” என்றார் ஆறுதலாக.
“ம்... ஆமாம்மா. அவர் பார்த்துக்குவார். தேவியோட இந்த தோற்றத்திலும் அவருக்குப் பிடிச்சிருக்குன்னா, எனக்கு இன்னும் ஆச்சர்யமாகத்தான்மா இருக்கு. நல்ல டைப், நல்ல வளர்ப்பு. இதுக்குமேல என்ன சொல்ல. ஹி இஸ் க்ரேட்” என்றான்.
துயில் கலைந்த வேளையில் இருவரின் பேச்சும் தெளிவாகவே சுபாவின் காதில் விழுந்தது. ‘இந்த தோற்றத்திலேயே அவருக்குப் பிடிச்சிருக்குன்னா? அப்ப நான் எப்படியிருக்கேன்?’ முகத்தைத் முதல்முறையாக தொட்டுப் பார்த்தாள். ஆங்காங்கே தையல் போட்டு, பிளாஸ்டர்களும் போடப்பட்டு, கட்டு கட்டியிருந்தது. பொதுவாக முகத்தில் ஒரு சின்ன தளும்பு இருந்தாலே முகமே வித்தியாசமாகும் இல்லை விகாரமாக இருக்கும். தனக்கு முகம் முழுவதிலும் கட்டு போட்டிருக்க, நினைக்கவே பயமாக இருந்தது.
மனைவியின் அருகில் அமர்ந்தவன், அவள் கைதொட சட்டென்று கையை உதறியவள், பின் தன்னைத்தானே திட்டி, “சாரி என்னால இன்னும் நம்ம கல்யாணம் நடந்ததை நம்ப முடியல? அதான் பழக்கதோசத்துல.. சாரி” என்றாள் திரும்பவும்.
மனைவியின் வாயசைப்பையே பார்த்துக் கொண்டிருந்தவன், “பரவாயில்லமா? உன் மனசு புரியுது. நானும் பார்த்து நடந்துக்கறேன்” என்றான்.
கணவன் தன்னைத் தவறாக எண்ணக்கூடாது என்பதற்காக அவளாகவே பேச்சை ஆரம்பித்தாள். “நீங்க அன்னைக்கு கார்ல பேசியதை வச்சி எனக்கும், உங்களுக்கும் ஒத்துவராதுன்னு நினைச்சேன். உங்க மாடர்ன் லைஃப்கும், என்னோட வீட்டுக்கு கட்டுப்பட்ட டைப்புக்கும் செட்டாகாதுன்னு தோணிச்சி. இப்ப எல்லாமே மாறின மாதிரியிருக்கு” என்றாள்.
மனைவி சொல்வதைக் கேட்டவனுக்கு, சொல்ல வார்த்தைகள் இல்லை என்றே தோன்றியது. அது சந்தோசத்திலா அல்லது சங்கடத்திலா தெரியாது. “நான் உன் ஹஸ்பண்ட் தேவி. உன்னோட நல்லது, கெட்டது எல்லாம் என்னைச் சேர்ந்தது. எனக்கு உன்னை.. இந்த தேவதையை” என்று அவள் கன்னம் தடவி “ரொம்பப் பிடிச்சிருக்கு. நீ உன் இயல்பிலேயே இரு. யாருக்காகவும் மாற வேண்டாம்.”
“அப்ப அன்னைக்கு ஏன் அப்படித் திட்டினீங்க? என் கையை தொடக்கூடாது சொன்னதுக்கு?”
ஹ்ம்... என்று மூச்சை இழுத்துவிட்டவன், சில வினாடிகள் யோசித்து, “அது ஏதோ தெரியாம பண்ணியிருப்பேன்மா. அந்த டைம் என்ன பேசினேன்னு கூட நினைவில் இல்ல. ஆக்சிடெண்ட்கு முன்னாடி நடந்ததை மறந்திருமா? உன் கணவன் நல்லவன்னு நீ நம்பணும்டா” என்றான்.
‘அதை எப்படி மறக்க முடியும்’ என்று நினைத்தாலும், தற்சமயம் அதைக் கேட்டு திருமணமான அன்றே கணவனை நோகடிக்கக்கூடாது என நினைத்து, சம்மதமாய் தலையாட்டியவள் முகம் யோசனைக்குப் போனது.
“இப்ப என்னடா? எதையும் யோசிக்காத தலை வலிக்கப்போகுது” என்று அக்கறையாக சொன்னான்.
அவனின் கரிசனத்தில் மனம் மகிழ்ந்தாலும், அன்றைய நிகழ்வில் இவன் பங்குதானே அதிகம் என எண்ணி, “ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கறேன். அன்னைக்கு நீங்க ஏன் என்னையும் சேர்த்து காப்பாத்த முயற்சி கூட பண்ணாம, உங்க உயிரை மட்டும் காப்பாத்திக்க தலையை குனிஞ்சிக்கிட்டீங்க? இவ எக்கேடோ கெட்டுப் போகட்டும், தன்னோட உயிர் முக்கியம்னு தான அப்படிப் பண்ணுனீங்க?” என்றவள் குரலில் அவ்வளவு ஆதங்கம்.
சட்டென்று முகத்தில் கோபம் பரவி முகம் இறுக நின்றவன், பின் தன்னை நிதானப்படுத்தி மனைவியை சமாதானப்படுத்தும் நோக்குடன், “இப்படி கண்டதையும் போட்டு குழப்பிக்காத தேவி. அன்னைக்கு சூழ்நிலையில நான் உன்கிட்ட எப்படி நடந்துக்கிட்டேன்னு புரியல. இத்தோட எல்லாத்தையும் மறந்துவிடேன்மா. காட் ப்ராமிஸ் இனி எந்த ஒரு சந்தர்ப்பத்துலேயும் உன்னை விட்டுக்கொடுக்கவும் மாட்டேன். விட்டுப் பிரியவும் மாட்டேன். நீ தூங்கு தேவி” என்று மனைவியின் கையைப் பிடித்தவன் டக்கென்று அவளின் கையை கீழே வைத்து, “சாரிமா மறந்தாப்ல பிடிச்சிட்டேன்” என்றான்.
‘அவ்வளவு நல்லவனா நீ.’ மனதில் தோன்றியதை வெளியில் சொல்லாமல் சிரிக்க, “அவ்வளவெல்லாம் நல்லவனில்லை. கொஞ்சம் கெட்டவன்தான் போல. அதுவும் நீ சொல்லித்தான் எனக்கே தெரியுது” என்று வருத்தமான குரலில் சொன்னான்.
“ஆமா, உங்க குரல் ஏன் வித்தியாசமா இருக்கு?”
“அது ஒண்ணுமில்லமா. ஆக்ஸிடென்ட்ல ஒரு சின்ன அடி அவ்வளவுதான்.”
“என்னை மாதிரியாங்க?”
“உன்னளவு இல்லமா. எனக்குக் கம்மிதான். நான் மட்டும் கவனிச்சிருந்தா இது நடந்திருக்கவே செய்யாதே? என்னால தான் உனக்கு இந்தக் கஷ்டம் வலி, வேதனை எல்லாம்” என்றபடி கண்கள் கலங்கினான்.
கணவனின் குரலில் உள்ள கலக்கத்தை உணர்ந்தவள், அவனை குனியச்சொல்லி கண்ணீர் துடைத்து, “ரொம்ப கஷ்டமெல்லாம் இல்லங்க. ஆனா இருக்கு” என்று சிரித்து, “இந்த ஆக்ஸிடெண்ட் மூலமா உங்களோட நல்ல குணம் தெரிஞ்சிதே அதுவே சந்தோசம் தான். உங்க முகம் கூட எனக்கு முழுசா நினைவில்லை. ஒருமணி நேரம் பார்த்ததுல ஓராயிரம் வாக்குவாதம் நடந்திருச்சா? ஏனோ உங்க முகம் சரியா நியாபகம் வரலை. என்ன உங்களுக்கு சுமையா இருக்கப் போகிறோமேன்னு கில்டியா இருக்கு” என்றாள்.
“தேவி எதுக்கு இப்படிப் பேசுற? நீ எனக்கு சுமையா? இன்னொரு டைம் இந்த மாதிரி பேசாத? சுமைன்னு நினைச்சிருந்தா இந்த கல்யாணத்துக்கு அவசியமிருந்திருக்காதே. அப்புறம், என்னை பார்த்தவுடனே பிடிக்கல ஓகே. இனிமேல் பார்க்கப் பார்க்கப் பிடிக்கும் பாரேன்” என்றதும் வாய்விட்டு சிரித்து “நானும் அன்னைக்கு அப்படித்தான் நினைச்சேன்” என்றாள்.
“ஹேய் தேவி! ரொம்ப சிரிக்காதமா முகத்துல தையல் இருக்கு பாரு.. வலிக்கப்போகுது. கண்டதையும் போட்டு குழப்பிக்காம கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ? நைட் ஆபரேசன் இருக்கு.”
‘ம்...’ என சம்மதமாய் தலையாட்டியபடி படுத்துவிட்டாள். படுத்ததும் மனதினுள் என்னென்னவோ நினைவுகள் வந்து அலைக்கழித்தன. ஆனந்தாக அன்றைக்குப் பேசிய பேச்சிற்கும், கணவனாக இப்பொழுதைய நடவடிக்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. ‘ஒருவேளை அவனால்தான் எனக்கு இப்படியாகிருச்சின்னு குற்றவுணர்ச்சியில பிராயசித்தம் மாதிரி மேரேஜ் பண்ணிக்கிட்டானா? இல்லையே பேச்சிலயோ, செயல்லயோ நிஜ அன்புதான் தெரியுது.’
காரில் அவன் பேசிய பேச்சிக்கள் மனதில் ரீங்காரமிட்டன. ‘எப்படி என்னை பட்டிக்காடு ரேஞ்சில பார்த்தான். சின்னச்சின்ன சொற்களுக்கே சட்டென்று கோபம் வந்தது. போதும்டா சாமி இவள் சங்காத்தம் என்பது போல் அவன் பார்வை இருந்ததே. நினைத்திருந்தால், இந்த விபத்தையே காரணமா வச்சி என்னை விட்டு விலகியிருக்கலாமே. ஏன் விலகல? ஏன் மேரேஜ் பண்ணிக்கிட்டான்?’ மனம் கேள்வி மேல் கேள்வி கேட்து.
அவளின் யோசனையில் சுருங்கிய முகத்தைப் பார்த்தவன், “ப்ச்... தேவி ரிலாக்ஸா இரு சொன்னேன்ல. எதையும் யோசிக்காதே, உனக்கு நானிருக்கிறேன் ஓகே” என்று மெல்ல தலைவருட, கண்மூடியபடியே ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றாள் சுபா.
மனைவியின் உறக்கத்தை உறுதி செய்து, அருகிலமர்ந்தவன், ‘சாரிடா. முன்னாடி நடந்ததெல்லாம் கனவா நினைச்சி மறந்திரு. என் கண்ணைப்போல் உன்னைப் பார்த்துக்கறேன். சீக்கிரமே நீ குணமாகி வா. நமக்கான எதிர்காலம் காத்துக்கிட்டிருக்கு’ என மனம் அரற்ற, ‘என் தங்கையை நினைச்சாதான் கொஞ்சம் க~;டமாயிருக்கு. உனக்கு ஆக்ஸிடென்ட்னதும் ஏதேதோ நினைச்சி, குருட்டுதனமா பிடிவாதம் பிடிச்சிட்டிருக்கா’ என்றெண்ணியவனுக்கு தங்கையை நினைத்ததும் அவனது மனபாரம் அதிகமானது.
இரண்டு மணிநேரங்கள் கழித்து வந்த ராஜனும், சுந்தரியும் அறைக்குள் நுழைய, தூங்கிக் கொண்டிருந்த மகள் அருகிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த மருமகன் கண்ணில்பட, எப்பொழுதும் போல் மருமகனை பெருமையுடன் நோக்கினார் ராஜன்.
‘இவனில்லாமல் போயிருந்தால், தன் பெண்ணின் நிலை என்னவாகியிருக்கும்? எனக்கும், இவளுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிச் செல்ல எவ்வளவு நேரமாகியிருக்கும். அப்படி சொல்லியிருந்தாலும் யாரால் தடுத்திருக்க முடியும்.’
ஆனால், ‘உங்க பொண்ணுதான் என் ஒய்ஃப். என்றும் அது மாறாது’ என்று தெளிவாகச் சொல்லி கம்பீரமாக நின்றவனை அவருக்கு ரொம்பவே பிடித்தது. மனைவிக்கு சைகை காண்பித்து வெளியே அழைக்க வெளியே செல்ல அடியெடுத்து வைத்தவர்களின் அரவம் கேட்டு திரும்பிய ஜீவா...
“வாங்க மாமா, மண்டபத்துல எல்லா வேலையும் முடிஞ்சி, முழுசா செட்டில் பண்ணியாச்சா? நர்ஸ் வந்து ப்ரசர் செக் பண்ணிட்டு, ஆபரேசனுக்கு முன்னாடி என்னென்ன செய்யணும்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க மாமா.” பேசியபடியே மாமனும், மருமகனும் வெளியே வர சண்முகசுந்தரி உள்ளேயே அமர்ந்தார்.
வேகமாக வந்த ப்ரேம், “தேவி எப்படிப்பா இருக்கா?” என்று கேட்க, “ஏன்டா மூச்சி வாங்குது? காரைத்தான நிறுத்தப்போன மெல்ல வரலாம்ல?” என கேட்டார்.
“இல்லப்பா அது இவங்க ஹாஸ்பிடல் வந்து ரொம்ப நேரமாச்சிதா.. அதான் ஒரு டென்சன்ல...” ப்ரேம் இழுத்தான்.
“ஏன் மச்சான் என் ஒய்ஃபை நான் நல்லா பார்த்துக்க மாட்டேன்னு இவ்வளவு அவசரமா வந்தீங்களா என்ன?”
“அச்சோ! அப்படியெல்லாம் கனவுல கூட நினைக்க மாட்டேங்க. அதுவும் உங்களைப்போய் நான் உங்களுக்கு தொந்தரவா இருக்குமேன்னு... சாரி உளறுறேனா? என் தங்கையைப் பார்க்கணும்னு தான் சீக்கிரமா வந்தேன். வேற எதுவுமில்லை. உங்களை ஹர்ட் பண்ணிட்டேனா?” என்று சங்கடத்துடன் கேட்டான்.
“என்ன மச்சான் நீங்க.. இதுக்குப்போயி இவ்வளவு டென்சன் ஆகுறீங்க? உங்க பாசத்திற்கு அளவேயில்லன்னு தெரியும். போய்ப் பாருங்க தூங்கிட்டிருக்கா” என்றான் ஜீவானந்த்.
அறைக்குள் நுழைந்த ப்ரேம் தங்கையைப் பார்த்ததும் மனம் துடிக்க, ‘உன்னைத் தனியா அனுப்பியிருக்க கூடாதுடா’ என்று லட்சம் தடவையாவது நினைத்திருப்பான். எப்படி இருந்தவ? இப்பப் பார்க்க முடியாத தோற்றத்தில், மனதினுள் ரெத்தக் கண்ணீர் வடித்தான் அந்த உடன்பிறப்பு.
மகனின் முகத்தைப் பார்த்த தாய், தோளில் கைபோட்டு ஆறுதலாகத் தட்டிக்கொடுக்க, தாயின் கைபிடித்து அழுதவன், “அன்னைக்கு அனுப்பாம இருந்திருக்கலாம்மா. அவ வேண்டாம்னு சொல்லச் சொல்லக் கேட்காம அனுப்பினதுக்குத் தண்டனை தான்மா இது. ஆனா, வலி அனுபவிக்கிறது அவளாச்சே” என்று மனதிலுள்ளதை சொல்லி புலம்பினான்.
“ப்ரேம் சொன்னா கேளு. கண்ணைத் துடைச்சிக்கோ, பாப்பா எழுந்துட்டா நீ அழுறதைப் பார்த்து இன்னும் ஃபீல் பண்ணுவா. இனி அவளை மாப்பிள்ளை பார்த்துக்குவார்” என்றார் ஆறுதலாக.
“ம்... ஆமாம்மா. அவர் பார்த்துக்குவார். தேவியோட இந்த தோற்றத்திலும் அவருக்குப் பிடிச்சிருக்குன்னா, எனக்கு இன்னும் ஆச்சர்யமாகத்தான்மா இருக்கு. நல்ல டைப், நல்ல வளர்ப்பு. இதுக்குமேல என்ன சொல்ல. ஹி இஸ் க்ரேட்” என்றான்.
துயில் கலைந்த வேளையில் இருவரின் பேச்சும் தெளிவாகவே சுபாவின் காதில் விழுந்தது. ‘இந்த தோற்றத்திலேயே அவருக்குப் பிடிச்சிருக்குன்னா? அப்ப நான் எப்படியிருக்கேன்?’ முகத்தைத் முதல்முறையாக தொட்டுப் பார்த்தாள். ஆங்காங்கே தையல் போட்டு, பிளாஸ்டர்களும் போடப்பட்டு, கட்டு கட்டியிருந்தது. பொதுவாக முகத்தில் ஒரு சின்ன தளும்பு இருந்தாலே முகமே வித்தியாசமாகும் இல்லை விகாரமாக இருக்கும். தனக்கு முகம் முழுவதிலும் கட்டு போட்டிருக்க, நினைக்கவே பயமாக இருந்தது.