• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
3



மனைவியின் அருகில் அமர்ந்தவன், அவள் கைதொட சட்டென்று கையை உதறியவள், பின் தன்னைத்தானே திட்டி, “சாரி என்னால இன்னும் நம்ம கல்யாணம் நடந்ததை நம்ப முடியல? அதான் பழக்கதோசத்துல.. சாரி” என்றாள் திரும்பவும்.

மனைவியின் வாயசைப்பையே பார்த்துக் கொண்டிருந்தவன், “பரவாயில்லமா? உன் மனசு புரியுது. நானும் பார்த்து நடந்துக்கறேன்” என்றான்.

கணவன் தன்னைத் தவறாக எண்ணக்கூடாது என்பதற்காக அவளாகவே பேச்சை ஆரம்பித்தாள். “நீங்க அன்னைக்கு கார்ல பேசியதை வச்சி எனக்கும், உங்களுக்கும் ஒத்துவராதுன்னு நினைச்சேன். உங்க மாடர்ன் லைஃப்கும், என்னோட வீட்டுக்கு கட்டுப்பட்ட டைப்புக்கும் செட்டாகாதுன்னு தோணிச்சி. இப்ப எல்லாமே மாறின மாதிரியிருக்கு” என்றாள்.

மனைவி சொல்வதைக் கேட்டவனுக்கு, சொல்ல வார்த்தைகள் இல்லை என்றே தோன்றியது. அது சந்தோசத்திலா அல்லது சங்கடத்திலா தெரியாது. “நான் உன் ஹஸ்பண்ட் தேவி. உன்னோட நல்லது, கெட்டது எல்லாம் என்னைச் சேர்ந்தது. எனக்கு உன்னை.. இந்த தேவதையை” என்று அவள் கன்னம் தடவி “ரொம்பப் பிடிச்சிருக்கு. நீ உன் இயல்பிலேயே இரு. யாருக்காகவும் மாற வேண்டாம்.”

“அப்ப அன்னைக்கு ஏன் அப்படித் திட்டினீங்க? என் கையை தொடக்கூடாது சொன்னதுக்கு?”

ஹ்ம்... என்று மூச்சை இழுத்துவிட்டவன், சில வினாடிகள் யோசித்து, “அது ஏதோ தெரியாம பண்ணியிருப்பேன்மா. அந்த டைம் என்ன பேசினேன்னு கூட நினைவில் இல்ல. ஆக்சிடெண்ட்கு முன்னாடி நடந்ததை மறந்திருமா? உன் கணவன் நல்லவன்னு நீ நம்பணும்டா” என்றான்.

‘அதை எப்படி மறக்க முடியும்’ என்று நினைத்தாலும், தற்சமயம் அதைக் கேட்டு திருமணமான அன்றே கணவனை நோகடிக்கக்கூடாது என நினைத்து, சம்மதமாய் தலையாட்டியவள் முகம் யோசனைக்குப் போனது.

“இப்ப என்னடா? எதையும் யோசிக்காத தலை வலிக்கப்போகுது” என்று அக்கறையாக சொன்னான்.

அவனின் கரிசனத்தில் மனம் மகிழ்ந்தாலும், அன்றைய நிகழ்வில் இவன் பங்குதானே அதிகம் என எண்ணி, “ஒண்ணே ஒண்ணு கேட்டுக்கறேன். அன்னைக்கு நீங்க ஏன் என்னையும் சேர்த்து காப்பாத்த முயற்சி கூட பண்ணாம, உங்க உயிரை மட்டும் காப்பாத்திக்க தலையை குனிஞ்சிக்கிட்டீங்க? இவ எக்கேடோ கெட்டுப் போகட்டும், தன்னோட உயிர் முக்கியம்னு தான அப்படிப் பண்ணுனீங்க?” என்றவள் குரலில் அவ்வளவு ஆதங்கம்.

சட்டென்று முகத்தில் கோபம் பரவி முகம் இறுக நின்றவன், பின் தன்னை நிதானப்படுத்தி மனைவியை சமாதானப்படுத்தும் நோக்குடன், “இப்படி கண்டதையும் போட்டு குழப்பிக்காத தேவி. அன்னைக்கு சூழ்நிலையில நான் உன்கிட்ட எப்படி நடந்துக்கிட்டேன்னு புரியல. இத்தோட எல்லாத்தையும் மறந்துவிடேன்மா. காட் ப்ராமிஸ் இனி எந்த ஒரு சந்தர்ப்பத்துலேயும் உன்னை விட்டுக்கொடுக்கவும் மாட்டேன். விட்டுப் பிரியவும் மாட்டேன். நீ தூங்கு தேவி” என்று மனைவியின் கையைப் பிடித்தவன் டக்கென்று அவளின் கையை கீழே வைத்து, “சாரிமா மறந்தாப்ல பிடிச்சிட்டேன்” என்றான்.

‘அவ்வளவு நல்லவனா நீ.’ மனதில் தோன்றியதை வெளியில் சொல்லாமல் சிரிக்க, “அவ்வளவெல்லாம் நல்லவனில்லை. கொஞ்சம் கெட்டவன்தான் போல. அதுவும் நீ சொல்லித்தான் எனக்கே தெரியுது” என்று வருத்தமான குரலில் சொன்னான்.

“ஆமா, உங்க குரல் ஏன் வித்தியாசமா இருக்கு?”

“அது ஒண்ணுமில்லமா. ஆக்ஸிடென்ட்ல ஒரு சின்ன அடி அவ்வளவுதான்.”

“என்னை மாதிரியாங்க?”

“உன்னளவு இல்லமா. எனக்குக் கம்மிதான். நான் மட்டும் கவனிச்சிருந்தா இது நடந்திருக்கவே செய்யாதே? என்னால தான் உனக்கு இந்தக் கஷ்டம் வலி, வேதனை எல்லாம்” என்றபடி கண்கள் கலங்கினான்.

கணவனின் குரலில் உள்ள கலக்கத்தை உணர்ந்தவள், அவனை குனியச்சொல்லி கண்ணீர் துடைத்து, “ரொம்ப கஷ்டமெல்லாம் இல்லங்க. ஆனா இருக்கு” என்று சிரித்து, “இந்த ஆக்ஸிடெண்ட் மூலமா உங்களோட நல்ல குணம் தெரிஞ்சிதே அதுவே சந்தோசம் தான். உங்க முகம் கூட எனக்கு முழுசா நினைவில்லை. ஒருமணி நேரம் பார்த்ததுல ஓராயிரம் வாக்குவாதம் நடந்திருச்சா? ஏனோ உங்க முகம் சரியா நியாபகம் வரலை. என்ன உங்களுக்கு சுமையா இருக்கப் போகிறோமேன்னு கில்டியா இருக்கு” என்றாள்.

“தேவி எதுக்கு இப்படிப் பேசுற? நீ எனக்கு சுமையா? இன்னொரு டைம் இந்த மாதிரி பேசாத? சுமைன்னு நினைச்சிருந்தா இந்த கல்யாணத்துக்கு அவசியமிருந்திருக்காதே. அப்புறம், என்னை பார்த்தவுடனே பிடிக்கல ஓகே. இனிமேல் பார்க்கப் பார்க்கப் பிடிக்கும் பாரேன்” என்றதும் வாய்விட்டு சிரித்து “நானும் அன்னைக்கு அப்படித்தான் நினைச்சேன்” என்றாள்.

“ஹேய் தேவி! ரொம்ப சிரிக்காதமா முகத்துல தையல் இருக்கு பாரு.. வலிக்கப்போகுது. கண்டதையும் போட்டு குழப்பிக்காம கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ? நைட் ஆபரேசன் இருக்கு.”

‘ம்...’ என சம்மதமாய் தலையாட்டியபடி படுத்துவிட்டாள். படுத்ததும் மனதினுள் என்னென்னவோ நினைவுகள் வந்து அலைக்கழித்தன. ஆனந்தாக அன்றைக்குப் பேசிய பேச்சிற்கும், கணவனாக இப்பொழுதைய நடவடிக்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. ‘ஒருவேளை அவனால்தான் எனக்கு இப்படியாகிருச்சின்னு குற்றவுணர்ச்சியில பிராயசித்தம் மாதிரி மேரேஜ் பண்ணிக்கிட்டானா? இல்லையே பேச்சிலயோ, செயல்லயோ நிஜ அன்புதான் தெரியுது.’

காரில் அவன் பேசிய பேச்சிக்கள் மனதில் ரீங்காரமிட்டன. ‘எப்படி என்னை பட்டிக்காடு ரேஞ்சில பார்த்தான். சின்னச்சின்ன சொற்களுக்கே சட்டென்று கோபம் வந்தது. போதும்டா சாமி இவள் சங்காத்தம் என்பது போல் அவன் பார்வை இருந்ததே. நினைத்திருந்தால், இந்த விபத்தையே காரணமா வச்சி என்னை விட்டு விலகியிருக்கலாமே. ஏன் விலகல? ஏன் மேரேஜ் பண்ணிக்கிட்டான்?’ மனம் கேள்வி மேல் கேள்வி கேட்து.

அவளின் யோசனையில் சுருங்கிய முகத்தைப் பார்த்தவன், “ப்ச்... தேவி ரிலாக்ஸா இரு சொன்னேன்ல. எதையும் யோசிக்காதே, உனக்கு நானிருக்கிறேன் ஓகே” என்று மெல்ல தலைவருட, கண்மூடியபடியே ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றாள் சுபா.

மனைவியின் உறக்கத்தை உறுதி செய்து, அருகிலமர்ந்தவன், ‘சாரிடா. முன்னாடி நடந்ததெல்லாம் கனவா நினைச்சி மறந்திரு. என் கண்ணைப்போல் உன்னைப் பார்த்துக்கறேன். சீக்கிரமே நீ குணமாகி வா. நமக்கான எதிர்காலம் காத்துக்கிட்டிருக்கு’ என மனம் அரற்ற, ‘என் தங்கையை நினைச்சாதான் கொஞ்சம் க~;டமாயிருக்கு. உனக்கு ஆக்ஸிடென்ட்னதும் ஏதேதோ நினைச்சி, குருட்டுதனமா பிடிவாதம் பிடிச்சிட்டிருக்கா’ என்றெண்ணியவனுக்கு தங்கையை நினைத்ததும் அவனது மனபாரம் அதிகமானது.

இரண்டு மணிநேரங்கள் கழித்து வந்த ராஜனும், சுந்தரியும் அறைக்குள் நுழைய, தூங்கிக் கொண்டிருந்த மகள் அருகிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த மருமகன் கண்ணில்பட, எப்பொழுதும் போல் மருமகனை பெருமையுடன் நோக்கினார் ராஜன்.

‘இவனில்லாமல் போயிருந்தால், தன் பெண்ணின் நிலை என்னவாகியிருக்கும்? எனக்கும், இவளுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிச் செல்ல எவ்வளவு நேரமாகியிருக்கும். அப்படி சொல்லியிருந்தாலும் யாரால் தடுத்திருக்க முடியும்.’

ஆனால், ‘உங்க பொண்ணுதான் என் ஒய்ஃப். என்றும் அது மாறாது’ என்று தெளிவாகச் சொல்லி கம்பீரமாக நின்றவனை அவருக்கு ரொம்பவே பிடித்தது. மனைவிக்கு சைகை காண்பித்து வெளியே அழைக்க வெளியே செல்ல அடியெடுத்து வைத்தவர்களின் அரவம் கேட்டு திரும்பிய ஜீவா...

“வாங்க மாமா, மண்டபத்துல எல்லா வேலையும் முடிஞ்சி, முழுசா செட்டில் பண்ணியாச்சா? நர்ஸ் வந்து ப்ரசர் செக் பண்ணிட்டு, ஆபரேசனுக்கு முன்னாடி என்னென்ன செய்யணும்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க மாமா.” பேசியபடியே மாமனும், மருமகனும் வெளியே வர சண்முகசுந்தரி உள்ளேயே அமர்ந்தார்.

வேகமாக வந்த ப்ரேம், “தேவி எப்படிப்பா இருக்கா?” என்று கேட்க, “ஏன்டா மூச்சி வாங்குது? காரைத்தான நிறுத்தப்போன மெல்ல வரலாம்ல?” என கேட்டார்.

“இல்லப்பா அது இவங்க ஹாஸ்பிடல் வந்து ரொம்ப நேரமாச்சிதா.. அதான் ஒரு டென்சன்ல...” ப்ரேம் இழுத்தான்.

“ஏன் மச்சான் என் ஒய்ஃபை நான் நல்லா பார்த்துக்க மாட்டேன்னு இவ்வளவு அவசரமா வந்தீங்களா என்ன?”

“அச்சோ! அப்படியெல்லாம் கனவுல கூட நினைக்க மாட்டேங்க. அதுவும் உங்களைப்போய் நான் உங்களுக்கு தொந்தரவா இருக்குமேன்னு... சாரி உளறுறேனா? என் தங்கையைப் பார்க்கணும்னு தான் சீக்கிரமா வந்தேன். வேற எதுவுமில்லை. உங்களை ஹர்ட் பண்ணிட்டேனா?” என்று சங்கடத்துடன் கேட்டான்.

“என்ன மச்சான் நீங்க.. இதுக்குப்போயி இவ்வளவு டென்சன் ஆகுறீங்க? உங்க பாசத்திற்கு அளவேயில்லன்னு தெரியும். போய்ப் பாருங்க தூங்கிட்டிருக்கா” என்றான் ஜீவானந்த்.

அறைக்குள் நுழைந்த ப்ரேம் தங்கையைப் பார்த்ததும் மனம் துடிக்க, ‘உன்னைத் தனியா அனுப்பியிருக்க கூடாதுடா’ என்று லட்சம் தடவையாவது நினைத்திருப்பான். எப்படி இருந்தவ? இப்பப் பார்க்க முடியாத தோற்றத்தில், மனதினுள் ரெத்தக் கண்ணீர் வடித்தான் அந்த உடன்பிறப்பு.

மகனின் முகத்தைப் பார்த்த தாய், தோளில் கைபோட்டு ஆறுதலாகத் தட்டிக்கொடுக்க, தாயின் கைபிடித்து அழுதவன், “அன்னைக்கு அனுப்பாம இருந்திருக்கலாம்மா. அவ வேண்டாம்னு சொல்லச் சொல்லக் கேட்காம அனுப்பினதுக்குத் தண்டனை தான்மா இது. ஆனா, வலி அனுபவிக்கிறது அவளாச்சே” என்று மனதிலுள்ளதை சொல்லி புலம்பினான்.

“ப்ரேம் சொன்னா கேளு. கண்ணைத் துடைச்சிக்கோ, பாப்பா எழுந்துட்டா நீ அழுறதைப் பார்த்து இன்னும் ஃபீல் பண்ணுவா. இனி அவளை மாப்பிள்ளை பார்த்துக்குவார்” என்றார் ஆறுதலாக.

“ம்... ஆமாம்மா. அவர் பார்த்துக்குவார். தேவியோட இந்த தோற்றத்திலும் அவருக்குப் பிடிச்சிருக்குன்னா, எனக்கு இன்னும் ஆச்சர்யமாகத்தான்மா இருக்கு. நல்ல டைப், நல்ல வளர்ப்பு. இதுக்குமேல என்ன சொல்ல. ஹி இஸ் க்ரேட்” என்றான்.

துயில் கலைந்த வேளையில் இருவரின் பேச்சும் தெளிவாகவே சுபாவின் காதில் விழுந்தது. ‘இந்த தோற்றத்திலேயே அவருக்குப் பிடிச்சிருக்குன்னா? அப்ப நான் எப்படியிருக்கேன்?’ முகத்தைத் முதல்முறையாக தொட்டுப் பார்த்தாள். ஆங்காங்கே தையல் போட்டு, பிளாஸ்டர்களும் போடப்பட்டு, கட்டு கட்டியிருந்தது. பொதுவாக முகத்தில் ஒரு சின்ன தளும்பு இருந்தாலே முகமே வித்தியாசமாகும் இல்லை விகாரமாக இருக்கும். தனக்கு முகம் முழுவதிலும் கட்டு போட்டிருக்க, நினைக்கவே பயமாக இருந்தது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
சுபாவின் அசைவைப் பார்த்து தாயும், தமையனும் அருகில் செல்ல, அண்ணனை அழைத்து “என்னை இப்ப போட்டோ எடுண்ணா” என்றாள்.

என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தவன், “வேண்டாம்டா தேவி? உனக்கு சரியாகட்டும் நிறைய எடுக்கலாம்” என்றான்.

“இல்ல முடியாது. இப்ப எப்படி இருக்கிறேனோ அது அந்த உருவத்தை நான் பார்க்கணும். போட்டோ நீ எடுக்கலன்னா என்ன.. என் ஹஸ்பண்ட் வரட்டும் எடுத்துக்கறேன்” என்றாள் பிடிவாதமாக.

“இல்லமா நானே எடுக்கிறேன்” என்றவனிடம், “எடுக்கிற மாதிரி பாவ்லா காட்டக்கூடாது? நான் நினைக்கும் போதெல்லாம் பார்க்கணும்னு கேட்பேன். ஸோ, ஏமாத்தலாம்னு நினைக்காதண்ணா” என்றாள் தீவிரமாக.

“சரிமா. பத்து ஸ்டில்ஸ் எடுக்கிறேன் ஓகேவா” என்றவன் போட்டோ எடுத்து முடித்ததும் “சூப்பரா வந்திருக்கு தேவி” என்று அங்கிருந்த சேரில் அமர்ந்தவன், எடுத்த போட்டோவைப் பார்க்கப் பார்க்க கண்களில் கண்ணீர் வழிந்தது.

முந்தைய புகைப்படங்களில் தேவதையாய், பூக்களுடன் பூவாய், தன்னிடம் சண்டையிடும் போதும், தாயைக் கேலி பண்ணும் போதும், எப்பொழுதாவது தந்தையைக் கொஞ்சும் போதும், தன்னுடன் செல்ஃபி என்ற பெயரில் அவளடித்த லூட்டிகளும் பார்க்கப் பார்க்க கண்ணீர் நிற்காமல் வந்தது. இன்றைய போட்டோவில், ‘கடவுளே! இதை எப்படி அவகிட்ட காண்பிப்பேன்.’ அழித்துவிட எண்ணி டெலிட் பட்டனை அமுக்கப்போகும் நேரத்தில் ‘ஏமாத்தலாம்னு நினைக்காதண்ணா’ என்ற தங்கையின் வார்த்தை நினைவுவர, அந்த எண்ணத்தை விடுத்து செல்லை பாக்கெட்டில் போட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

“அம்மா! அண்ணா ஏன் வெளிய போறான்? என்னை நினைச்சிக் கவலைப்படுறானா? எனக்கு ஒண்ணுமில்லம்மா? உங்களுக்காக நீங்க சொன்னதுக்காக இந்த நிலையிலும், மேரேஜ் பண்ணிக்கிட்டேன்ல. உங்க மருமகன்தான் என்னை நல்லாவே பார்த்துக்கிறாங்களே. அப்புறம் என்ன? நீங்க எல்லாரும் நார்மலா இருங்கம்மா? அப்பத்தான் நானும் டென்சனில்லாமல் இருப்பேன்” என்று நீண்ட வசனம் பேசுவதற்குள், தொண்டை அடைப்பது போல் தோன்றி கழுத்தில் கைவைக்க, பதறியபடி வந்த சண்முகசுந்தரி, “உன்னை அதிகம் பேசக்கூடாது சொல்லியிருக்காங்கள்ல” என்று கழுத்தை தடவிக் கொடுத்தபடி அமர்ந்தார்.

திருமணம் முடிந்து முதலிரவு செல்ல வேண்டிய புதுப்பெண், அன்றைய இரவு தன்னுடைய கண் ஆபரேசனுக்காக தயாராகிக் கொண்டிருந்தாள். ஆம். விபத்தில் சுபா முதலில் இழந்தது கண்களைத்தான். ஆனந்த் தலைகுனிந்ததும் சுபா என்னவென்று ரோட்டைப் பார்க்க, லாரியிலிருந்த கம்பி நேராக சுபாவின் முகத்தைப் பதம் பார்த்து ஆங்காங்கே சிதைத்திருந்தது. அதற்குள் உசாராகி ப்ரேக்கை ஆனந்த் அழுத்தியதால், கழுத்தில் பதிந்த கம்பி ஆழம் இறங்காமல் மயிரிழையில் உயிர் தப்பியது அவளது அதிர்ஷ்டமே!

ஐ ஸ்பெசலிஸ்ட் மும்பைக்கு கான்பரன்ஸிற்காக சென்றிருக்க, ஸ்கைஃபில் அவரைத் தொடர்பு கொண்ட டாக்டர்கள், அவளைப் பற்றி தகவல்கள் தர, முதன்மை டாக்டர்.கேசவ் கண்களிலுள்ள காயங்கள் சற்று ஆறியதும் ஆபரேசன் செய்யலாம் என்றிருந்தார்.

இன்று தான் அந்த நாள். இது முடிந்த அடுத்த இரண்டு வாரத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரியன் அப்பாய்ண்ட்மென்ட் கொடுத்திருக்கிறார். இரண்டு ஆபரேசனைத் தாங்குமா அந்த உடம்பு என்று நினைத்து அனைவரும் வேதனைப் பட்டாலும், இது கண்டிப்பாக செய்ய வேண்டியதாயிற்றே.

திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பது போல். பெண்கள் கடவுளிடம் சரணாகதி ஆனார்கள்.

அன்றைய பரபரப்புகளிடையே இரவு கண் சிகிச்சை கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்கள் நடைபெற்றது. டாக்டர்கள் பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அனைத்து மக்களுக்குமே இருக்கும் தான். ஆனால், நினைப்பது நடப்பதென்பது கடவுள் கையிலல்லவா உள்ளது.

வெளியே வந்த டாக்டர்கள், “இரண்டு நாள் கட்டு இருக்கும். அப்புறமா ஒரு செக்கப் பண்ணிட்டுத்தான் எங்களால முழு அறிக்கையையும்.. ஐ மீன் உங்களுக்கு நம்பிக்கையையும் சேர்ந்து கொடுக்க முடியும். நீங்க பயப்பட அவசியமிருக்காதுன்னு நினைக்கிறேன். எதுவும் உடனே சரியாகிடும்னு நாம நினைக்கக்கூடாது. அதுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று அவர்களைக் கடந்து சென்றார்.

ஜீவா அவள் எப்படியிருந்தாலும் தன்னுடைய தேவதை அவளென்ற நிலையிலிருந்ததால், டாக்டர் சொன்ன விசயம் எதுவும் அவனை பாதிக்கவில்லை. மற்றவர்களுக்கும் அவனே ஆறுதல் சொன்னான்.

இரண்டு நாட்கள் கழித்து டாக்டர்.கேசவ் சுபாவின் கண்களை அவிழ்த்து பரிசோதனை செய்துவிட்டு, மருந்திட்டு கட்டி வெளியே வந்தவர், வெளியில் நின்றிருந்தவர்களை தன்னறைக்கு அழைத்துச் சென்று, அவர்களிடம் அவர் கொடுத்த ரிப்போர்ட் ஓரளவு மனம் குளிர வைத்தது.

விபத்தின் போது கம்பி சுபாவின் கண் விழித்திரையில் படாமல் அருகில் அடிபட்டதால் கண் மாற்று சிகிச்சை தேவையில்லை என்று சொல்லி முதலில் அனைவரையும் மனம் குளிர வைத்தார். பின், கம்பி குத்தியதால் ஏற்பட்ட காயங்கள் விழித்திரையைச் சுற்றியிருப்பதால், அடிக்கடி விழித்திரையைச் சுற்றிலும் சதை வளரும் அபாயம் இருப்பதாகவும், பார்வை சில நாட்கள்... நாள்கள் என்பதை விட சில மாதங்கள் தெரிய வாய்ப்பு கம்மிதான் என்றார்.

அனைவரும் பதறி, “டாக்டர் வேற எதுவும் ப்ராப்ளம் வராதே?” என கேள்வி கேட்க,

“நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். பத்து நாட்களுக்குள் புண்கள் குணமாகிவிடும். பார்வை வரும் வரை ட்ரீட்மெண்ட் தொடர்ந்து குடுக்கணும். அப்புறம் சர்ஜரி பண்ற இடம் இங்கேயில்ல?”

“Happy Cosmetic Clinic in Bangalore. Face and Neck Libosuction Surgery. Surgery time Sunday Morning 10 o’clock. So You don’t worry. Your wife operation will done successful. உங்களுக்காக ஸ்பெஷலா ரெக்வஸ்ட் பண்ணிருக்கேன். எப்பவுமே சண்டே சர்ஜரி ரொம்ப ரேர். ஏன் சண்டே உங்களுக்கு ரெகமண்ட் பண்ணினேன்னா, அன்னைக்கு உங்க ஒய்ஃப் மட்டும்தான் அங்க ஒரே பேஷன்டா இருப்பாங்க. எந்த தவறுகளும் நடக்காம இருக்கும். அப்புறம் மிஸ்டர்.ஜீவா. உங்க மேரேஜ் பற்றி கேள்விப்பட்டேன். உங்களை ரொம்பவே பாராட்டுறேன். உங்களுக்கும் பெங்களுர் தான் இருப்பிடம்ன்றதால மத்த பிரச்சனைகள் இருக்க சான்ஸ் கம்மி. ஆல் தி பெஸ்ட்” சொல்லி விடைபெற்றுச் சென்றார்.

நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு ஓட, பெங்களுரில் தான் வேலை பார்க்கும் சைன்ஸ் ரிசர்ஜ் சென்டருக்கு ஒரு மாதம் மெடிக்கல் லீவ் சொல்லியிருந்த ஜீவா, தங்கை தனியே இருப்பதால் தாயை முன்கூட்டியே அனுப்பி வைத்திருந்தான். பிள்ளைகளுக்காக வீட்டை பெங்களுருக்கு மாற்றியிருந்தார்கள். விவேகானந்துக்கு மெட்ரிக்பள்ளி சென்னையில் இருப்பதால், வாரத்துக்கு ஒருமுறை பெங்களுர் வந்து செல்வது அவரது வழக்கம். தற்பொழுது பள்ளிகளைப் பார்க்க நம்பிக்கையான ஆள் இருந்தாலும், சொந்த ஆள் இருப்பதுபோல் வருமா என்ன? அதனால் நேரம் கிடைக்கும் போது தந்தையை வரச்சொன்னான்.

மாமனாரையும், மச்சானையும் தொழிலை கவனிக்கச் சொல்லி அனுப்பிவிட்டு தான் மட்டுமே இருந்து மனைவியைப் பார்த்துக்கொண்டான். சாப்பாடு சுந்தரி கொண்டு வர நாட்களும் நகர்ந்தது. சுபாவிற்கு கண்களிலுள்ள கட்டு அவிழ்க்கப்பட்டு, முகத்திலுள்ள சின்னக் காயங்கள் வாடியிருந்தாலும், அநேகம் அப்படியே இருந்தது. பத்து நாட்களில் பெங்களுர் கிளம்பியிருந்தார்கள் ஜீவா அன்ட் சுபாவின் குடும்பத்தினர்.

அடுத்த ஐந்து நாட்களுக்குள் பெங்களுரில் சர்ஜரிக்கு அனைத்தும் ரெடியாகி, சர்ஜரியும் நல்லபடியாக நடந்து முடிந்திருந்தது.

பின், கட்டுகள் பிரிக்கப்பட்ட நாளில், மனைவியையே பார்த்திருந்த ஜீவா> கட்டுகளைப் பிரித்தபின் சந்தோஷமடைந்தாலும், ஒரு பக்கம் ஏமாற்றமாகவும் உணர்ந்தான். பளிங்கு போல் முகம் பளபளக்க முன்னிலிருந்த அழகிற்கு சிறிதும் குறைவில்லை என்பது போல் அழகு அதிகரிக்கவே செய்திருந்தது. ஆனால், அவன் பார்த்து ரசித்த, ‘கட்டுனா இவளைக் கட்டணும்டா. இவளைத்தான் கட்டணும்டா’ என்று மனதினுள் நினைத்த, அந்த பழைய முகம் நிறைய மாறியிருந்தது.

அவனைப் போல் மற்றவர்களும் அந்த வித்தியாசத்தை உணர்ந்து முதலில் அதிர்ந்தாலும், அவள் குணமாகி நல்லபடியாக பிழைத்ததே போதுமென்று விட்டுவிட்டார்கள். தன் மகளை மீட்டெடுத்த மாப்பிள்ளைக்கு மனதார நன்றி சொன்னார்கள் வரதராஜன் குடும்பத்தினர். ஆனந்த் மட்டும் இல்லையென்றால் தன் பெண்ணின் நிலை என்னாவதென்று நினைக்ககூட முடியவில்லை.

அவனால் தான் ஆக்ஸிடெண்ட் நடந்தது என்பது முழுதாகத் தெரியாவிட்டாலும், இதான் நடக்கணும்னு இருந்தா ஏதோ ஒரு வகையில் நடந்தே தீரும் என்பதை அறிந்திருந்ததால், மற்றவர்களும் அதைக் கண்டுகொள்ளவில்லை.

ஜீவா தன்னுடைய விடுமுறையை அதிகரித்திருந்தான். தேவையென்றால் மட்டும் இருந்த இடத்திலிருந்தே முடிந்தளவிற்கு அவசர வேலைகளை முடித்துக் கொடுத்தான்.
 
Joined
Jan 29, 2025
Messages
35
சுபாவின் அசைவைப் பார்த்து தாயும், தமையனும் அருகில் செல்ல, அண்ணனை அழைத்து “என்னை இப்ப போட்டோ எடுண்ணா” என்றாள்.

என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தவன், “வேண்டாம்டா தேவி? உனக்கு சரியாகட்டும் நிறைய எடுக்கலாம்” என்றான்.

“இல்ல முடியாது. இப்ப எப்படி இருக்கிறேனோ அது அந்த உருவத்தை நான் பார்க்கணும். போட்டோ நீ எடுக்கலன்னா என்ன.. என் ஹஸ்பண்ட் வரட்டும் எடுத்துக்கறேன்” என்றாள் பிடிவாதமாக.

“இல்லமா நானே எடுக்கிறேன்” என்றவனிடம், “எடுக்கிற மாதிரி பாவ்லா காட்டக்கூடாது? நான் நினைக்கும் போதெல்லாம் பார்க்கணும்னு கேட்பேன். ஸோ, ஏமாத்தலாம்னு நினைக்காதண்ணா” என்றாள் தீவிரமாக.

“சரிமா. பத்து ஸ்டில்ஸ் எடுக்கிறேன் ஓகேவா” என்றவன் போட்டோ எடுத்து முடித்ததும் “சூப்பரா வந்திருக்கு தேவி” என்று அங்கிருந்த சேரில் அமர்ந்தவன், எடுத்த போட்டோவைப் பார்க்கப் பார்க்க கண்களில் கண்ணீர் வழிந்தது.

முந்தைய புகைப்படங்களில் தேவதையாய், பூக்களுடன் பூவாய், தன்னிடம் சண்டையிடும் போதும், தாயைக் கேலி பண்ணும் போதும், எப்பொழுதாவது தந்தையைக் கொஞ்சும் போதும், தன்னுடன் செல்ஃபி என்ற பெயரில் அவளடித்த லூட்டிகளும் பார்க்கப் பார்க்க கண்ணீர் நிற்காமல் வந்தது. இன்றைய போட்டோவில், ‘கடவுளே! இதை எப்படி அவகிட்ட காண்பிப்பேன்.’ அழித்துவிட எண்ணி டெலிட் பட்டனை அமுக்கப்போகும் நேரத்தில் ‘ஏமாத்தலாம்னு நினைக்காதண்ணா’ என்ற தங்கையின் வார்த்தை நினைவுவர, அந்த எண்ணத்தை விடுத்து செல்லை பாக்கெட்டில் போட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.

“அம்மா! அண்ணா ஏன் வெளிய போறான்? என்னை நினைச்சிக் கவலைப்படுறானா? எனக்கு ஒண்ணுமில்லம்மா? உங்களுக்காக நீங்க சொன்னதுக்காக இந்த நிலையிலும், மேரேஜ் பண்ணிக்கிட்டேன்ல. உங்க மருமகன்தான் என்னை நல்லாவே பார்த்துக்கிறாங்களே. அப்புறம் என்ன? நீங்க எல்லாரும் நார்மலா இருங்கம்மா? அப்பத்தான் நானும் டென்சனில்லாமல் இருப்பேன்” என்று நீண்ட வசனம் பேசுவதற்குள், தொண்டை அடைப்பது போல் தோன்றி கழுத்தில் கைவைக்க, பதறியபடி வந்த சண்முகசுந்தரி, “உன்னை அதிகம் பேசக்கூடாது சொல்லியிருக்காங்கள்ல” என்று கழுத்தை தடவிக் கொடுத்தபடி அமர்ந்தார்.

திருமணம் முடிந்து முதலிரவு செல்ல வேண்டிய புதுப்பெண், அன்றைய இரவு தன்னுடைய கண் ஆபரேசனுக்காக தயாராகிக் கொண்டிருந்தாள். ஆம். விபத்தில் சுபா முதலில் இழந்தது கண்களைத்தான். ஆனந்த் தலைகுனிந்ததும் சுபா என்னவென்று ரோட்டைப் பார்க்க, லாரியிலிருந்த கம்பி நேராக சுபாவின் முகத்தைப் பதம் பார்த்து ஆங்காங்கே சிதைத்திருந்தது. அதற்குள் உசாராகி ப்ரேக்கை ஆனந்த் அழுத்தியதால், கழுத்தில் பதிந்த கம்பி ஆழம் இறங்காமல் மயிரிழையில் உயிர் தப்பியது அவளது அதிர்ஷ்டமே!

ஐ ஸ்பெசலிஸ்ட் மும்பைக்கு கான்பரன்ஸிற்காக சென்றிருக்க, ஸ்கைஃபில் அவரைத் தொடர்பு கொண்ட டாக்டர்கள், அவளைப் பற்றி தகவல்கள் தர, முதன்மை டாக்டர்.கேசவ் கண்களிலுள்ள காயங்கள் சற்று ஆறியதும் ஆபரேசன் செய்யலாம் என்றிருந்தார்.

இன்று தான் அந்த நாள். இது முடிந்த அடுத்த இரண்டு வாரத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரியன் அப்பாய்ண்ட்மென்ட் கொடுத்திருக்கிறார். இரண்டு ஆபரேசனைத் தாங்குமா அந்த உடம்பு என்று நினைத்து அனைவரும் வேதனைப் பட்டாலும், இது கண்டிப்பாக செய்ய வேண்டியதாயிற்றே.

திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பது போல். பெண்கள் கடவுளிடம் சரணாகதி ஆனார்கள்.

அன்றைய பரபரப்புகளிடையே இரவு கண் சிகிச்சை கிட்டத்தட்ட மூன்று மணிநேரங்கள் நடைபெற்றது. டாக்டர்கள் பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அனைத்து மக்களுக்குமே இருக்கும் தான். ஆனால், நினைப்பது நடப்பதென்பது கடவுள் கையிலல்லவா உள்ளது.

வெளியே வந்த டாக்டர்கள், “இரண்டு நாள் கட்டு இருக்கும். அப்புறமா ஒரு செக்கப் பண்ணிட்டுத்தான் எங்களால முழு அறிக்கையையும்.. ஐ மீன் உங்களுக்கு நம்பிக்கையையும் சேர்ந்து கொடுக்க முடியும். நீங்க பயப்பட அவசியமிருக்காதுன்னு நினைக்கிறேன். எதுவும் உடனே சரியாகிடும்னு நாம நினைக்கக்கூடாது. அதுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று அவர்களைக் கடந்து சென்றார்.

ஜீவா அவள் எப்படியிருந்தாலும் தன்னுடைய தேவதை அவளென்ற நிலையிலிருந்ததால், டாக்டர் சொன்ன விசயம் எதுவும் அவனை பாதிக்கவில்லை. மற்றவர்களுக்கும் அவனே ஆறுதல் சொன்னான்.

இரண்டு நாட்கள் கழித்து டாக்டர்.கேசவ் சுபாவின் கண்களை அவிழ்த்து பரிசோதனை செய்துவிட்டு, மருந்திட்டு கட்டி வெளியே வந்தவர், வெளியில் நின்றிருந்தவர்களை தன்னறைக்கு அழைத்துச் சென்று, அவர்களிடம் அவர் கொடுத்த ரிப்போர்ட் ஓரளவு மனம் குளிர வைத்தது.

விபத்தின் போது கம்பி சுபாவின் கண் விழித்திரையில் படாமல் அருகில் அடிபட்டதால் கண் மாற்று சிகிச்சை தேவையில்லை என்று சொல்லி முதலில் அனைவரையும் மனம் குளிர வைத்தார். பின், கம்பி குத்தியதால் ஏற்பட்ட காயங்கள் விழித்திரையைச் சுற்றியிருப்பதால், அடிக்கடி விழித்திரையைச் சுற்றிலும் சதை வளரும் அபாயம் இருப்பதாகவும், பார்வை சில நாட்கள்... நாள்கள் என்பதை விட சில மாதங்கள் தெரிய வாய்ப்பு கம்மிதான் என்றார்.

அனைவரும் பதறி, “டாக்டர் வேற எதுவும் ப்ராப்ளம் வராதே?” என கேள்வி கேட்க,

“நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். பத்து நாட்களுக்குள் புண்கள் குணமாகிவிடும். பார்வை வரும் வரை ட்ரீட்மெண்ட் தொடர்ந்து குடுக்கணும். அப்புறம் சர்ஜரி பண்ற இடம் இங்கேயில்ல?”

“Happy Cosmetic Clinic in Bangalore. Face and Neck Libosuction Surgery. Surgery time Sunday Morning 10 o’clock. So You don’t worry. Your wife operation will done successful. உங்களுக்காக ஸ்பெஷலா ரெக்வஸ்ட் பண்ணிருக்கேன். எப்பவுமே சண்டே சர்ஜரி ரொம்ப ரேர். ஏன் சண்டே உங்களுக்கு ரெகமண்ட் பண்ணினேன்னா, அன்னைக்கு உங்க ஒய்ஃப் மட்டும்தான் அங்க ஒரே பேஷன்டா இருப்பாங்க. எந்த தவறுகளும் நடக்காம இருக்கும். அப்புறம் மிஸ்டர்.ஜீவா. உங்க மேரேஜ் பற்றி கேள்விப்பட்டேன். உங்களை ரொம்பவே பாராட்டுறேன். உங்களுக்கும் பெங்களுர் தான் இருப்பிடம்ன்றதால மத்த பிரச்சனைகள் இருக்க சான்ஸ் கம்மி. ஆல் தி பெஸ்ட்” சொல்லி விடைபெற்றுச் சென்றார்.

நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு ஓட, பெங்களுரில் தான் வேலை பார்க்கும் சைன்ஸ் ரிசர்ஜ் சென்டருக்கு ஒரு மாதம் மெடிக்கல் லீவ் சொல்லியிருந்த ஜீவா, தங்கை தனியே இருப்பதால் தாயை முன்கூட்டியே அனுப்பி வைத்திருந்தான். பிள்ளைகளுக்காக வீட்டை பெங்களுருக்கு மாற்றியிருந்தார்கள். விவேகானந்துக்கு மெட்ரிக்பள்ளி சென்னையில் இருப்பதால், வாரத்துக்கு ஒருமுறை பெங்களுர் வந்து செல்வது அவரது வழக்கம். தற்பொழுது பள்ளிகளைப் பார்க்க நம்பிக்கையான ஆள் இருந்தாலும், சொந்த ஆள் இருப்பதுபோல் வருமா என்ன? அதனால் நேரம் கிடைக்கும் போது தந்தையை வரச்சொன்னான்.

மாமனாரையும், மச்சானையும் தொழிலை கவனிக்கச் சொல்லி அனுப்பிவிட்டு தான் மட்டுமே இருந்து மனைவியைப் பார்த்துக்கொண்டான். சாப்பாடு சுந்தரி கொண்டு வர நாட்களும் நகர்ந்தது. சுபாவிற்கு கண்களிலுள்ள கட்டு அவிழ்க்கப்பட்டு, முகத்திலுள்ள சின்னக் காயங்கள் வாடியிருந்தாலும், அநேகம் அப்படியே இருந்தது. பத்து நாட்களில் பெங்களுர் கிளம்பியிருந்தார்கள் ஜீவா அன்ட் சுபாவின் குடும்பத்தினர்.

அடுத்த ஐந்து நாட்களுக்குள் பெங்களுரில் சர்ஜரிக்கு அனைத்தும் ரெடியாகி, சர்ஜரியும் நல்லபடியாக நடந்து முடிந்திருந்தது.

பின், கட்டுகள் பிரிக்கப்பட்ட நாளில், மனைவியையே பார்த்திருந்த ஜீவா> கட்டுகளைப் பிரித்தபின் சந்தோஷமடைந்தாலும், ஒரு பக்கம் ஏமாற்றமாகவும் உணர்ந்தான். பளிங்கு போல் முகம் பளபளக்க முன்னிலிருந்த அழகிற்கு சிறிதும் குறைவில்லை என்பது போல் அழகு அதிகரிக்கவே செய்திருந்தது. ஆனால், அவன் பார்த்து ரசித்த, ‘கட்டுனா இவளைக் கட்டணும்டா. இவளைத்தான் கட்டணும்டா’ என்று மனதினுள் நினைத்த, அந்த பழைய முகம் நிறைய மாறியிருந்தது.

அவனைப் போல் மற்றவர்களும் அந்த வித்தியாசத்தை உணர்ந்து முதலில் அதிர்ந்தாலும், அவள் குணமாகி நல்லபடியாக பிழைத்ததே போதுமென்று விட்டுவிட்டார்கள். தன் மகளை மீட்டெடுத்த மாப்பிள்ளைக்கு மனதார நன்றி சொன்னார்கள் வரதராஜன் குடும்பத்தினர். ஆனந்த் மட்டும் இல்லையென்றால் தன் பெண்ணின் நிலை என்னாவதென்று நினைக்ககூட முடியவில்லை.

அவனால் தான் ஆக்ஸிடெண்ட் நடந்தது என்பது முழுதாகத் தெரியாவிட்டாலும், இதான் நடக்கணும்னு இருந்தா ஏதோ ஒரு வகையில் நடந்தே தீரும் என்பதை அறிந்திருந்ததால், மற்றவர்களும் அதைக் கண்டுகொள்ளவில்லை.


ஜீவா தன்னுடைய விடுமுறையை அதிகரித்திருந்தான். தேவையென்றால் மட்டும் இருந்த இடத்திலிருந்தே முடிந்தளவிற்கு அவசர வேலைகளை முடித்துக் கொடுத்தான்.
Nice sister.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top