- Joined
- Aug 31, 2024
- Messages
- 916
- Thread Author
- #1
24
மனம் மனைவியின் முதல் சந்திப்பிற்கு செல்ல, உதடுகளோ,
மூடுபனியும், முன்னூறு நிலவும்
ஒன்று சேர்ந்து - முக்கோடித் தேவர்கள்
ஆசீர்வதித்து வரம் தந்ததுபோல்
மலராய், மலர் தேடும்
வண்ணத்துப் பூச்சியாய்!
வண்ணத்துப் பூச்சியின் வண்ணமாய்!
வண்ணங்கள் ஒன்று சேர்த்து சமைத்த,
வானவில்லின் வடிவாய் வந்த
பூந்தளிரென கண்டேனே
என் தேவதையை!
என் கண்களுள் உனை நிரப்பி,
காதல் காவியம் படைக்க
மனம் விளைகிறது!
நான் கண்ட பெண்களிலே - எனை
எனக்கே அறிமுகம் செய்வித்தவள் நீயே!
உனைக் கண்ட அந்த நொடி,
என் மனம் உனைச்சேர்ந்து
உயிர் கலந்ததடி!
சற்று நிறுத்தியவன் சில நொடி மௌனத்தின் பின், “அப்பொழுதுதான் அது நடந்தது. அவள் வந்த காருக்கு முன்னாடி வந்த லாரியை ஒரு பெரியவர் க்ராஸ் செய்ய, அதற்குள் மினிலாரிக்காரன் சுதாரித்து சடன்ப்ரேக் போட, பின்னால வந்த அவளோட கார் இதை கவனிக்காமல் மோதிருச்சி. ஒரு செகண்ட் இந்த உலகமே இடிஞ்சி என் தலையில விழுந்த மாதிரி இருந்துச்சி. நான் வேகமா இறங்கி போய் பார்த்தா, என் தேவதையின் முகம் முழுக்க சேதாரம்.”
“நாங்க வந்த கார் அந்த காரை முந்தாம அது முன்னாடியே போயிருந்தாலோ, இல்ல அந்த காரை க்ராஸ் பண்ணினதும் நாங்க நிற்காம அதே ஸ்பீடுல போயிருந்தாலோ, இந்த ஆக்ஸிடெண்ட் நடந்திருக்காது. அதே டைம் எனக்கானவளையும் பார்த்திருக்க முடியாது. இருந்தாலும் அவள் சேஃபா இருந்திருப்பாள்னு தோணிச்சி. ப்ச்... விதி நான் அவளைப் பார்த்த மூணே நிமிஷத்துல எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சி. அப்ப தோணினது இது தான்.”
நான் கண்ட அந்த நொடி
உனை என் கண்களுள்
பூட்டி வைக்கும் முன்னே,
உடைந்து சிதறி,
உருவம் கலைந்து போனது
நீ மட்டுமல்ல,
என் மனமும்தான்!
இமைக்க மறந்த
இமைகளையும்,
சுவாசிக்க மறந்த
மூச்சுக் காற்றையும்,
துடிக்க மறந்த
இதயத்தையும்,
உணர்ந்தேனடி நானும்!
உயிர் இருந்தும்
உயிர் பிரியும் வலியால்,
உனை மீட்க வழியறியாமல்
பித்தாய் அலைந்தேனடி!
உன் சுவாசம்
உணர்ந்த பொழுதுதான்
என் சுவாசம் எனக்கே
தெரிந்ததை அறிவாயா!
சொல்லி முடித்தவனுக்கு அன்றைய நினைவின் வலிகள் முகத்தில் தெரிய, அவனையே பார்த்துக் கொண்டிருந்த சுபாவிற்கு அவளறியாமல் கண்களில் கண்ணீர் ஆனந்தமாக வழிய, தன்மேல் அவன் கொண்ட காதலை உணர்ந்த இந்த நொடி ‘ஜீவாவின் மனைவி நான்’ என்ற பெருமை உள்ளம் முழுவதும் நிறைந்தது.
தன்னை சமாளித்த ஜீவா, “விபத்துக்கு அப்புறம் மேரேஜ்கு சம்மதிக்கவே மாட்டேன்னுட்டாங்க. நான் போய் கேட்டு மறுத்திட்டா என்ன பண்றதுன்னு, பெரியவங்களை விட்டு பேசி சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள ஒரு வழியாகிட்டேன்னா பாருங்களேன். அப்புறம் தான் ஃபேஸ் அன்ட் நெக் சர்ஜரிலாம் பண்ணி ஃபேஸ் சரியாச்சி.”
“க்ரேட் சார். உங்க ஒய்ஃப் போட்டோ இருக்கா?”
“ம்... இருக்கு. ஆனா, விபத்துக்கு முன்னாடி நான் பார்த்த என் தேவி இவள்தான்” என செல்லில் இருந்த போட்டோ காண்பிக்க...
“சார் நிஜமாகவே தேவதைதான். சூப்பராயிருக்காங்க சார்.” அனைவரும் கோரஸாக சொல்ல, “இப்ப உள்ள போட்டோ காண்பிங்க சார்” என்று ராஜேஸ்வரி மிஸ் கேட்டார்.
“நாளை மறுநாள் என் ஒய்ஃப்கு வளைகாப்பு. அப்ப வாங்க போட்டோ என்ன நிஜத்தையே உங்க கண் முன்னால நிறுத்துறேன்” என்று யாருமறியாமல் தன்னையே பலவித உணர்வுகளுடன் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து கண்ணடித்தான் அவளின் கள்வன். அதில் முகம் சிவந்தவள் வெட்கத்தில் தலைகவிழ... அதை ரசித்தவன் அதன்பின், அவர்களிடம் பள்ளியைப் பற்றி பேச ஆரம்பித்ததும் சுபா தன் அண்ணனிடம் சென்றாள்.
நேருக்கு நேர் தங்கையைப் பார்த்தும் சற்றுத் தடுமாறிய ப்ரேம் பாசத்தை மறைக்க இயலாது, “தேவிமா!” என அருகில் வந்தவனை கைநீட்டி தடுத்து, “நீ என்கிட்ட பேசாதண்ணா. உன்னைத்தான நான் எல்லாமாகவும் நினைச்சிருந்தேன். எனக்கு ஒரு பிரச்சனைன்னா நீ என்னோட இருப்பன்னு நம்பினேன். ஆனா, நீ என்னை கை விட்டுட்டல்லணா. எல்லாரும் சேர்ந்து நான் ஒரு அனாதைன்ற ஃபீல் கொடுத்துட்டீங்கள்ல? என்னை, என்னோட உணர்வுகளுக்கு உங்ககிட்ட மதிப்பு இல்லதான. போ நீயும் வேண்டாம். உன்னோட அப்பா, அம்மாவும் வேண்டாம். நான் கடைசிவரை தனியாகவே இருந்துக்கறேன்” என்று அழுதாள்.
அனாதை என்ற சொல்லில் அடிவாங்கிய ப்ரேமின் கண்கள் கலங்க, “என்னடா அனாதைன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசுற? இதுக்கு நீ என்னைக் கொன்றிருக்கலாம் தேவிமா. நாங்க உன்னை விட்டுருவோம்னு நீ எப்படி நினைக்கலாம்? நாங்க உன்னைவிட்டு விலகியிருந்தாலும், நீ எங்க கண்காணிப்புலதான்டா இருந்த. அப்பா பேச்சை நாம என்னைக்காவது மீறியிருக்கிறோமா சொல்லு. அப்பா உன்னை வீட்டைவிட்டு வெறியேறச் சொன்னதும் தாண்டவ்கு நான்தான் மெசேஜ் அனுப்பி என்னோட ஸ்தானத்துலயிருந்து உன்னை பாதுகாக்கச் சொன்னேன். மாமாவுக்கு அட்டாக் வந்தததா தாண்டவ் சொன்னதும், உனக்கு முன்னாடியே ஜீவாவுக்கு இன்பார்ம் பண்ணினேன். நீ எங்களைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டதால ஃபேமிலியோட வந்தோம். நீ பார்க்காத நேரத்துல நாங்க உன்னைப் பார்த்துன்னு ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினோம். அந்த டீச்சர் பிரச்சனை வந்தப்பவும் நான், அப்பா, ஜீவா மூணுபேரும் சேர்ந்துதான் அதை சால்வ் பண்ணினோம். அப்பாவும் உன்னை எந்த நிமிஷமும் கைவிடல. எங்களை நம்பு தேவிமா.”
“ஜீவாவை நீ புரிஞ்சிக்கணும்னு தான் நாங்க நினைச்சோம். உன்னைப் புரிஞ்சிக்காம இல்லடா. உன்னை எங்க எல்லோருக்கும் புரிஞ்சிது. அதை வெளிக்காட்டினா உங்க ரெண்டு பேரோட பிரிவு நிரந்தரமாகிருமோன்ற பயம்தான் விலக வைத்தது. அதுக்குப் போயி “அனாதை”ன்னெல்லாம் பேசிட்டியே தேவிமா. நீ இந்தளவுக்கு ஃபீல் பண்ணியிருப்பேன்னு தெரியாதுடா, தெரிஞ்சிருந்தா எல்லாத்தையும் தூக்கிப்போட்டு உனக்கு துணையா வந்திருப்பேன்மா. ப்ளீஸ் புரிஞ்சிக்கோமா!” என்று கண்ணில் நீருடன் தங்கையின் கைபிடிக்க...
அதே நேரம் ராஜனும், சுந்தரியும் வந்து அதை உண்மையென்று சொல்லி மகளின் தலையை வருட அந்த இதத்தில் தாயைக் கட்டியணைத்து, “நீங்க கூட என்னை கண்டுக்காம இருந்துட்டீங்கள்லம்மா? மாமாக்கு அட்டாக் வந்தப்ப நான் உங்களை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா? அப்பதான் எனக்கு அந்த ஃபீல் வந்தது” என்று அனாதை என்ற வார்த்தையை தவிர்த்து தேம்பி அழுதாள்.
“பாப்பா அழக்கூடாது. அன்னைக்கு நீ கர்ப்பமாயிருக்கிற விஷயம் எங்களுக்கு முதல்ல தெரியாது. தெரிஞ்சப்ப முன்னாடியே சொல்லலையேன்ற வருத்தம். சாதனாவுக்கு அப்பான்றதால அவளுக்கு பாதிப்பு அதிகமா இருக்கும்னுதான் அவளை சமாதானப்படுத்தினேன். அதுவுமில்லாம யாருமில்லைன்ற எண்ணத்துல, உன் புருஷனோட போய் சேருவன்ற எண்ணத்துலயும் சும்மா இருந்திட்டோம்.”
மகளின் அழுகை நிற்காமலிருக்க, “பாப்பா மாசமாயிருக்கிற பொண்ணுங்க ரொம்ப நேரம் அழுதா குழந்தைக்கு ஆகாதுன்னு சொல்வாங்க. கண்ணைத் துடைச்சிக்கோ” என மகளின் கண்ணீர் துடைத்து விட்டு, “சரி இப்பவாவது உன் பிரச்சனை முடிஞ்சிதா?”
“இல்ல நான் கோபமா இருக்கேன்” என்று ப்ரேமிடம் திரும்பி “அண்ணா ஆக்ஸிடெண்ட் ஆனப்ப உள்ள போட்டோஸ் அப்புறம் மேரேஜப்ப எடுத்த போட்டோஸ் எனக்கு அனுப்பு” என்றாள்.
“ஏன் தேவிமா வேண்டாமே. இப்பத்தான் எல்லாம் சரியாகிடுச்சே.”
“உன்னால அனுப்ப முடியுமா? முடியாதா?”
ராஜன், ப்ரேமிடம் அனுப்ப சொல்லி தலையசைக்க, “சரி அனுப்புறேன்” என்றான்.
“இப்ப அனுப்பு.” அடுத்த ஆர்டர் போட...
“பங்ஷன் முடியட்டுமே தேவி” என்றான்.
“அதெல்லாம் பிரச்சனையில்ல. எனக்கு இப்ப வேணும் என்றதும் தன் கைபேசியிலிருந்த தங்கையின் போட்டோஸ் அனைத்தையும் அனுப்பினான்.
சுபாவிடம் வந்த சாதனா “அண்ணி எங்கண்ணனை மன்னிச்சாச்சா?” என சந்தோஷத்தில் மனம் துள்ள...
“உங்கண்ணன் என்ன தப்பு பண்ணினாங்க மன்னிக்கிறதுக்கு? நான் விலகியிருந்தது என்மேல உள்ள கோபத்துல.”
“அடப்பாவி அண்ணி. ப்ளேட்டையே மாத்திட்டீங்களே!”
“ப்ளேட்டெல்லாம் மாத்தல. அன்னைக்கு நடந்த சீனைத்தான் மாத்தினேன்.”
“பாவம் எங்கண்ணன்.”
“யாரு உங்கண்ணன் பாவமா? அங்க ஹால்ல போயி பாரு. கோபியர் புடைசூழ இருந்த கண்ணன் மாதிரி டீச்சர்ஸ் நடுவுல உட்கார்ந்து ப்ளாஷ்பேக் ஓட்டிட்டிருக்காங்க.”
“ஓஹ்ஹோ! அதான் ஜெலஸாகி வந்துட்டீங்களோ!”
“ஹா...ஹா எனக்கு ஜெலஸா.. நோ சாதுமா. எத்தனை ரசிகைகள் இருந்தாலும், அவங்க மனசுல உயிரா, உணர்வா இருக்கிற ஒரே பொண்ணு நான்தான்ற பெருமைதான்” என்று கண்ணடித்துக்கூற...
“அண்ணி நீங்களா நீங்களே தானா? ஹையோ... என்னால நம்பமுடியலையே?” ப்ரேமைப் பார்த்து “என்னங்க கொஞ்சம் கிள்ளுங்க” என்றவள் “ஒன் செகண்ட். ஸ்லோவா கிள்ளணும்.” கணவன் போட்ட அடியை வாங்கிக்கொண்டு “நிஜம்தான். மாமா, அத்தை குடை எடுத்துட்டு வந்திருக்கீங்களா?” என்றாள்.
“பரிந்தவர்கள் இல்லையென்று தலையாட்ட... “அப்ப நாம எப்படி வீட்டுக்குப் போறது. சே... இன்னைக்கு பார்த்து மறந்திட்டேனே” என்று அண்ணியின் கன்னத்தில் அன்பாய் முத்தமிட்டு தன் சந்தோஷத்தை வெளியிட்டாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் சுபா, மாமியாரிடம் வந்து “அத்தை நான் வீட்டுக்குப் போயி ரெஸ்ட் எடுக்கிறேன். நீங்க எல்லாம் முடிச்சிட்டு வாங்க” என்றாள்.
என்ன? ஏதென்று கேட்க வாய்திறந்த வந்தனாவிற்கு, சுபாவின் பார்வையிலிருந்த ஏதோ ஒன்று அவரைத் தடுக்க, “சரிமா” என்று தாண்டவை அழைத்து வீட்டில் விட்டுவரச் செய்தார்.
பஃபே முறையிலுள்ள உணவை உண்ண அழைத்து அனைவரையும் உபசரித்து, மனைவி சாப்பிட்டாளா என்று அவளைத்தேட... வீட்டிற்கு சென்றுவிட்டாளென்று தாய் சொன்னதும் குழம்பியவன், “எதாவது பிரச்சனையாமா? யாராவது அவளை எதாவது சொன்னாங்களா?”
“பிரச்சனையெல்லாம் இல்லடா நார்மலாதான் இருந்தா. கரெக்டா சொல்லணும்னா முகம் சந்தோஷத்துல இருந்தது. தேவி இன்னும் சாப்பிடல. ஹோட்டல் சாப்பாடு வேண்டாம் ஃபுட் பாய்சனாகிடப்போகுது வீட்ல தோசை மாவு இருக்கு தோசை ஊத்திக்கோங்க” என்று பையனை அனுப்ப... நேராக தந்தையிடம் வந்து விஷயம் சொல்லி, மாமனார் வீட்டிலுள்ளவர்களிடமும் விடைபெற்று, ஹரியிடம் “நாளை சந்திக்கிறேன்டா” என்று வேகமாக வீடு சென்றான்.
காரில் செல்லும் வழியெல்லாம் “என்னாச்சி அவளுக்கு? டீச்சர்ஸ் கூட பேசிட்டிருந்ததை தப்பா எடுத்து, நான்தான் ஆக்ஸிடண்ட் பண்ணியதுன்னு நினைச்சிட்டாளா? டேய் ஜீவா இன்னுமா உன் பிரச்சனை நீளுது. இதுக்கு என்டிங்கே கிடையாதா? கடவுளே!”
"அடடடடடடா... இவன் வேறு அடிக்கடி எனையழைத்து தொல்லை செய்கிறான். போடா டேய் உன் மனைவியைப் பார். நல்லதே நடக்கும்" என்று அடுத்து கேட்ட குரலுக்கு செவிசாய்க்கச் சென்றார்.
வீட்டிற்கு வந்தவன் மனைவியைத் தேட, “தேவி எங்கேயிருக்க?? அவனின் குரலுக்கு பதில் குரல் இல்லையென்றதும் எல்லா அறைகளிலும் தேடிப்பார்த்து கடைசியில் மொட்டைமாடி சென்றான்.
மனம் மனைவியின் முதல் சந்திப்பிற்கு செல்ல, உதடுகளோ,
மூடுபனியும், முன்னூறு நிலவும்
ஒன்று சேர்ந்து - முக்கோடித் தேவர்கள்
ஆசீர்வதித்து வரம் தந்ததுபோல்
மலராய், மலர் தேடும்
வண்ணத்துப் பூச்சியாய்!
வண்ணத்துப் பூச்சியின் வண்ணமாய்!
வண்ணங்கள் ஒன்று சேர்த்து சமைத்த,
வானவில்லின் வடிவாய் வந்த
பூந்தளிரென கண்டேனே
என் தேவதையை!
என் கண்களுள் உனை நிரப்பி,
காதல் காவியம் படைக்க
மனம் விளைகிறது!
நான் கண்ட பெண்களிலே - எனை
எனக்கே அறிமுகம் செய்வித்தவள் நீயே!
உனைக் கண்ட அந்த நொடி,
என் மனம் உனைச்சேர்ந்து
உயிர் கலந்ததடி!
சற்று நிறுத்தியவன் சில நொடி மௌனத்தின் பின், “அப்பொழுதுதான் அது நடந்தது. அவள் வந்த காருக்கு முன்னாடி வந்த லாரியை ஒரு பெரியவர் க்ராஸ் செய்ய, அதற்குள் மினிலாரிக்காரன் சுதாரித்து சடன்ப்ரேக் போட, பின்னால வந்த அவளோட கார் இதை கவனிக்காமல் மோதிருச்சி. ஒரு செகண்ட் இந்த உலகமே இடிஞ்சி என் தலையில விழுந்த மாதிரி இருந்துச்சி. நான் வேகமா இறங்கி போய் பார்த்தா, என் தேவதையின் முகம் முழுக்க சேதாரம்.”
“நாங்க வந்த கார் அந்த காரை முந்தாம அது முன்னாடியே போயிருந்தாலோ, இல்ல அந்த காரை க்ராஸ் பண்ணினதும் நாங்க நிற்காம அதே ஸ்பீடுல போயிருந்தாலோ, இந்த ஆக்ஸிடெண்ட் நடந்திருக்காது. அதே டைம் எனக்கானவளையும் பார்த்திருக்க முடியாது. இருந்தாலும் அவள் சேஃபா இருந்திருப்பாள்னு தோணிச்சி. ப்ச்... விதி நான் அவளைப் பார்த்த மூணே நிமிஷத்துல எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சி. அப்ப தோணினது இது தான்.”
நான் கண்ட அந்த நொடி
உனை என் கண்களுள்
பூட்டி வைக்கும் முன்னே,
உடைந்து சிதறி,
உருவம் கலைந்து போனது
நீ மட்டுமல்ல,
என் மனமும்தான்!
இமைக்க மறந்த
இமைகளையும்,
சுவாசிக்க மறந்த
மூச்சுக் காற்றையும்,
துடிக்க மறந்த
இதயத்தையும்,
உணர்ந்தேனடி நானும்!
உயிர் இருந்தும்
உயிர் பிரியும் வலியால்,
உனை மீட்க வழியறியாமல்
பித்தாய் அலைந்தேனடி!
உன் சுவாசம்
உணர்ந்த பொழுதுதான்
என் சுவாசம் எனக்கே
தெரிந்ததை அறிவாயா!
சொல்லி முடித்தவனுக்கு அன்றைய நினைவின் வலிகள் முகத்தில் தெரிய, அவனையே பார்த்துக் கொண்டிருந்த சுபாவிற்கு அவளறியாமல் கண்களில் கண்ணீர் ஆனந்தமாக வழிய, தன்மேல் அவன் கொண்ட காதலை உணர்ந்த இந்த நொடி ‘ஜீவாவின் மனைவி நான்’ என்ற பெருமை உள்ளம் முழுவதும் நிறைந்தது.
தன்னை சமாளித்த ஜீவா, “விபத்துக்கு அப்புறம் மேரேஜ்கு சம்மதிக்கவே மாட்டேன்னுட்டாங்க. நான் போய் கேட்டு மறுத்திட்டா என்ன பண்றதுன்னு, பெரியவங்களை விட்டு பேசி சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள ஒரு வழியாகிட்டேன்னா பாருங்களேன். அப்புறம் தான் ஃபேஸ் அன்ட் நெக் சர்ஜரிலாம் பண்ணி ஃபேஸ் சரியாச்சி.”
“க்ரேட் சார். உங்க ஒய்ஃப் போட்டோ இருக்கா?”
“ம்... இருக்கு. ஆனா, விபத்துக்கு முன்னாடி நான் பார்த்த என் தேவி இவள்தான்” என செல்லில் இருந்த போட்டோ காண்பிக்க...
“சார் நிஜமாகவே தேவதைதான். சூப்பராயிருக்காங்க சார்.” அனைவரும் கோரஸாக சொல்ல, “இப்ப உள்ள போட்டோ காண்பிங்க சார்” என்று ராஜேஸ்வரி மிஸ் கேட்டார்.
“நாளை மறுநாள் என் ஒய்ஃப்கு வளைகாப்பு. அப்ப வாங்க போட்டோ என்ன நிஜத்தையே உங்க கண் முன்னால நிறுத்துறேன்” என்று யாருமறியாமல் தன்னையே பலவித உணர்வுகளுடன் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து கண்ணடித்தான் அவளின் கள்வன். அதில் முகம் சிவந்தவள் வெட்கத்தில் தலைகவிழ... அதை ரசித்தவன் அதன்பின், அவர்களிடம் பள்ளியைப் பற்றி பேச ஆரம்பித்ததும் சுபா தன் அண்ணனிடம் சென்றாள்.
நேருக்கு நேர் தங்கையைப் பார்த்தும் சற்றுத் தடுமாறிய ப்ரேம் பாசத்தை மறைக்க இயலாது, “தேவிமா!” என அருகில் வந்தவனை கைநீட்டி தடுத்து, “நீ என்கிட்ட பேசாதண்ணா. உன்னைத்தான நான் எல்லாமாகவும் நினைச்சிருந்தேன். எனக்கு ஒரு பிரச்சனைன்னா நீ என்னோட இருப்பன்னு நம்பினேன். ஆனா, நீ என்னை கை விட்டுட்டல்லணா. எல்லாரும் சேர்ந்து நான் ஒரு அனாதைன்ற ஃபீல் கொடுத்துட்டீங்கள்ல? என்னை, என்னோட உணர்வுகளுக்கு உங்ககிட்ட மதிப்பு இல்லதான. போ நீயும் வேண்டாம். உன்னோட அப்பா, அம்மாவும் வேண்டாம். நான் கடைசிவரை தனியாகவே இருந்துக்கறேன்” என்று அழுதாள்.
அனாதை என்ற சொல்லில் அடிவாங்கிய ப்ரேமின் கண்கள் கலங்க, “என்னடா அனாதைன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசுற? இதுக்கு நீ என்னைக் கொன்றிருக்கலாம் தேவிமா. நாங்க உன்னை விட்டுருவோம்னு நீ எப்படி நினைக்கலாம்? நாங்க உன்னைவிட்டு விலகியிருந்தாலும், நீ எங்க கண்காணிப்புலதான்டா இருந்த. அப்பா பேச்சை நாம என்னைக்காவது மீறியிருக்கிறோமா சொல்லு. அப்பா உன்னை வீட்டைவிட்டு வெறியேறச் சொன்னதும் தாண்டவ்கு நான்தான் மெசேஜ் அனுப்பி என்னோட ஸ்தானத்துலயிருந்து உன்னை பாதுகாக்கச் சொன்னேன். மாமாவுக்கு அட்டாக் வந்தததா தாண்டவ் சொன்னதும், உனக்கு முன்னாடியே ஜீவாவுக்கு இன்பார்ம் பண்ணினேன். நீ எங்களைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டதால ஃபேமிலியோட வந்தோம். நீ பார்க்காத நேரத்துல நாங்க உன்னைப் பார்த்துன்னு ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினோம். அந்த டீச்சர் பிரச்சனை வந்தப்பவும் நான், அப்பா, ஜீவா மூணுபேரும் சேர்ந்துதான் அதை சால்வ் பண்ணினோம். அப்பாவும் உன்னை எந்த நிமிஷமும் கைவிடல. எங்களை நம்பு தேவிமா.”
“ஜீவாவை நீ புரிஞ்சிக்கணும்னு தான் நாங்க நினைச்சோம். உன்னைப் புரிஞ்சிக்காம இல்லடா. உன்னை எங்க எல்லோருக்கும் புரிஞ்சிது. அதை வெளிக்காட்டினா உங்க ரெண்டு பேரோட பிரிவு நிரந்தரமாகிருமோன்ற பயம்தான் விலக வைத்தது. அதுக்குப் போயி “அனாதை”ன்னெல்லாம் பேசிட்டியே தேவிமா. நீ இந்தளவுக்கு ஃபீல் பண்ணியிருப்பேன்னு தெரியாதுடா, தெரிஞ்சிருந்தா எல்லாத்தையும் தூக்கிப்போட்டு உனக்கு துணையா வந்திருப்பேன்மா. ப்ளீஸ் புரிஞ்சிக்கோமா!” என்று கண்ணில் நீருடன் தங்கையின் கைபிடிக்க...
அதே நேரம் ராஜனும், சுந்தரியும் வந்து அதை உண்மையென்று சொல்லி மகளின் தலையை வருட அந்த இதத்தில் தாயைக் கட்டியணைத்து, “நீங்க கூட என்னை கண்டுக்காம இருந்துட்டீங்கள்லம்மா? மாமாக்கு அட்டாக் வந்தப்ப நான் உங்களை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா? அப்பதான் எனக்கு அந்த ஃபீல் வந்தது” என்று அனாதை என்ற வார்த்தையை தவிர்த்து தேம்பி அழுதாள்.
“பாப்பா அழக்கூடாது. அன்னைக்கு நீ கர்ப்பமாயிருக்கிற விஷயம் எங்களுக்கு முதல்ல தெரியாது. தெரிஞ்சப்ப முன்னாடியே சொல்லலையேன்ற வருத்தம். சாதனாவுக்கு அப்பான்றதால அவளுக்கு பாதிப்பு அதிகமா இருக்கும்னுதான் அவளை சமாதானப்படுத்தினேன். அதுவுமில்லாம யாருமில்லைன்ற எண்ணத்துல, உன் புருஷனோட போய் சேருவன்ற எண்ணத்துலயும் சும்மா இருந்திட்டோம்.”
மகளின் அழுகை நிற்காமலிருக்க, “பாப்பா மாசமாயிருக்கிற பொண்ணுங்க ரொம்ப நேரம் அழுதா குழந்தைக்கு ஆகாதுன்னு சொல்வாங்க. கண்ணைத் துடைச்சிக்கோ” என மகளின் கண்ணீர் துடைத்து விட்டு, “சரி இப்பவாவது உன் பிரச்சனை முடிஞ்சிதா?”
“இல்ல நான் கோபமா இருக்கேன்” என்று ப்ரேமிடம் திரும்பி “அண்ணா ஆக்ஸிடெண்ட் ஆனப்ப உள்ள போட்டோஸ் அப்புறம் மேரேஜப்ப எடுத்த போட்டோஸ் எனக்கு அனுப்பு” என்றாள்.
“ஏன் தேவிமா வேண்டாமே. இப்பத்தான் எல்லாம் சரியாகிடுச்சே.”
“உன்னால அனுப்ப முடியுமா? முடியாதா?”
ராஜன், ப்ரேமிடம் அனுப்ப சொல்லி தலையசைக்க, “சரி அனுப்புறேன்” என்றான்.
“இப்ப அனுப்பு.” அடுத்த ஆர்டர் போட...
“பங்ஷன் முடியட்டுமே தேவி” என்றான்.
“அதெல்லாம் பிரச்சனையில்ல. எனக்கு இப்ப வேணும் என்றதும் தன் கைபேசியிலிருந்த தங்கையின் போட்டோஸ் அனைத்தையும் அனுப்பினான்.
சுபாவிடம் வந்த சாதனா “அண்ணி எங்கண்ணனை மன்னிச்சாச்சா?” என சந்தோஷத்தில் மனம் துள்ள...
“உங்கண்ணன் என்ன தப்பு பண்ணினாங்க மன்னிக்கிறதுக்கு? நான் விலகியிருந்தது என்மேல உள்ள கோபத்துல.”
“அடப்பாவி அண்ணி. ப்ளேட்டையே மாத்திட்டீங்களே!”
“ப்ளேட்டெல்லாம் மாத்தல. அன்னைக்கு நடந்த சீனைத்தான் மாத்தினேன்.”
“பாவம் எங்கண்ணன்.”
“யாரு உங்கண்ணன் பாவமா? அங்க ஹால்ல போயி பாரு. கோபியர் புடைசூழ இருந்த கண்ணன் மாதிரி டீச்சர்ஸ் நடுவுல உட்கார்ந்து ப்ளாஷ்பேக் ஓட்டிட்டிருக்காங்க.”
“ஓஹ்ஹோ! அதான் ஜெலஸாகி வந்துட்டீங்களோ!”
“ஹா...ஹா எனக்கு ஜெலஸா.. நோ சாதுமா. எத்தனை ரசிகைகள் இருந்தாலும், அவங்க மனசுல உயிரா, உணர்வா இருக்கிற ஒரே பொண்ணு நான்தான்ற பெருமைதான்” என்று கண்ணடித்துக்கூற...
“அண்ணி நீங்களா நீங்களே தானா? ஹையோ... என்னால நம்பமுடியலையே?” ப்ரேமைப் பார்த்து “என்னங்க கொஞ்சம் கிள்ளுங்க” என்றவள் “ஒன் செகண்ட். ஸ்லோவா கிள்ளணும்.” கணவன் போட்ட அடியை வாங்கிக்கொண்டு “நிஜம்தான். மாமா, அத்தை குடை எடுத்துட்டு வந்திருக்கீங்களா?” என்றாள்.
“பரிந்தவர்கள் இல்லையென்று தலையாட்ட... “அப்ப நாம எப்படி வீட்டுக்குப் போறது. சே... இன்னைக்கு பார்த்து மறந்திட்டேனே” என்று அண்ணியின் கன்னத்தில் அன்பாய் முத்தமிட்டு தன் சந்தோஷத்தை வெளியிட்டாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் சுபா, மாமியாரிடம் வந்து “அத்தை நான் வீட்டுக்குப் போயி ரெஸ்ட் எடுக்கிறேன். நீங்க எல்லாம் முடிச்சிட்டு வாங்க” என்றாள்.
என்ன? ஏதென்று கேட்க வாய்திறந்த வந்தனாவிற்கு, சுபாவின் பார்வையிலிருந்த ஏதோ ஒன்று அவரைத் தடுக்க, “சரிமா” என்று தாண்டவை அழைத்து வீட்டில் விட்டுவரச் செய்தார்.
பஃபே முறையிலுள்ள உணவை உண்ண அழைத்து அனைவரையும் உபசரித்து, மனைவி சாப்பிட்டாளா என்று அவளைத்தேட... வீட்டிற்கு சென்றுவிட்டாளென்று தாய் சொன்னதும் குழம்பியவன், “எதாவது பிரச்சனையாமா? யாராவது அவளை எதாவது சொன்னாங்களா?”
“பிரச்சனையெல்லாம் இல்லடா நார்மலாதான் இருந்தா. கரெக்டா சொல்லணும்னா முகம் சந்தோஷத்துல இருந்தது. தேவி இன்னும் சாப்பிடல. ஹோட்டல் சாப்பாடு வேண்டாம் ஃபுட் பாய்சனாகிடப்போகுது வீட்ல தோசை மாவு இருக்கு தோசை ஊத்திக்கோங்க” என்று பையனை அனுப்ப... நேராக தந்தையிடம் வந்து விஷயம் சொல்லி, மாமனார் வீட்டிலுள்ளவர்களிடமும் விடைபெற்று, ஹரியிடம் “நாளை சந்திக்கிறேன்டா” என்று வேகமாக வீடு சென்றான்.
காரில் செல்லும் வழியெல்லாம் “என்னாச்சி அவளுக்கு? டீச்சர்ஸ் கூட பேசிட்டிருந்ததை தப்பா எடுத்து, நான்தான் ஆக்ஸிடண்ட் பண்ணியதுன்னு நினைச்சிட்டாளா? டேய் ஜீவா இன்னுமா உன் பிரச்சனை நீளுது. இதுக்கு என்டிங்கே கிடையாதா? கடவுளே!”
"அடடடடடடா... இவன் வேறு அடிக்கடி எனையழைத்து தொல்லை செய்கிறான். போடா டேய் உன் மனைவியைப் பார். நல்லதே நடக்கும்" என்று அடுத்து கேட்ட குரலுக்கு செவிசாய்க்கச் சென்றார்.
வீட்டிற்கு வந்தவன் மனைவியைத் தேட, “தேவி எங்கேயிருக்க?? அவனின் குரலுக்கு பதில் குரல் இல்லையென்றதும் எல்லா அறைகளிலும் தேடிப்பார்த்து கடைசியில் மொட்டைமாடி சென்றான்.