• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
21

அபிநயாவின் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த பொழுது, கேசவன் மகளுக்கு அழைத்து, “தனாமா உனக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். பையன் வேற யாருமில்லை. என்னோட அக்கா தனலக்ஷ்மி பையன் சரவணன் தான். பையன் பார்க்க லட்சணமா இருக்கான். கைநிறைய சம்பாதிக்கிறான். வர்ற மாசி இருவது உங்கக் கல்யாணம். இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. நீ இங்க வரவேண்டாம்மா. நாங்க அங்க வர்றோம். அங்க வச்சிதான் கல்யாணம். எல்லாம் பேசி முடிச்சாச்சி. நீ வரவேண்டியது, தாலி கட்டிக்க வேண்டியது தான் பாக்கி” என்றார் உற்சாகமாக.

“அ...அ...அப்பா நா... நான் என்...” சொல்ல வந்த வார்த்தைகள் பாதியிலேயே நிற்க, துக்கம் தொண்டையடைக்க சரி செய்து, “அப்பா நான் என்ன சொல்றேன்னா இப்...ப இந்தக் கல்யாணம்...”

“எதுவும் சொல்ல வேண்டாம்மா. நான் பேசி முடிவு பண்ணியாச்சி. ஏமாத்தாம இரு போதும்” என்று போனை வைக்க “அ...அப்பா” என்றழைக்க எதிரில் கீங் சத்தம் வந்தது.

உடனே பதற்றத்தில் கை நடுங்க தங்கைக்கு முயற்சி செய்ய, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பின் கணவனுக்கு அழைக்க, அதுவும் அணைத்து வைக்கப்பட்டிருக்கவும் நேரம் பார்த்தாள். இரவு ஒன்பது மணியைக் காட்ட செய்வதறியாமல் அழுது கொண்டிருந்தவள், கண்ணீரைத் துடைத்து திரும்பவும் கணவனை அழைக்க, அதுவும் ஸ்விட்ஜ் ஆப் என்றே வந்தது. வேகமாகத் தோழியை அழைக்க, அவள் எடுத்த மறு வினாடி “வள்ளி வள்ளி” என்று கதறினாள்.

“என்னாச்சி ஆரு? ஏய் அழறியா என்ன? என்னடா ஆச்சி?” என புரியாது கேட்க,

“அப்பா” என்று ஆரம்பித்து நடந்ததைச் சொல்ல, “ஆரு அப்படிலாம் ஒண்ணும் ஆகாதுமா. ஆழாம இரு நான் காலையில சீக்கிரமே வர்றேன். வந்து பேசிக்கலாம்” என்று அழைப்பைத் துண்டித்து வைத்த வேதவல்லி, அப்பொழுது உள்ளே நுழைந்த கணவனிடம் சொல்ல, அவன் அதைக் கண்டு கொள்ளவில்லை. அது அவளுக்கு ஆச்சர்யத்துடன் அதிர்ச்சியைக் கொடுக்க,

“இன்ஸ் உங்ககிட்டத்தான சொல்றேன். பதில் பேசாம போனா என்ன அர்த்தம்?”

“என்ன அர்த்தம்னா? ஏற்கனவே தெரியும்னு அர்த்தம்டா வேதி.”

“தெரிஞ்சுமா அசால்ட்டா இருக்கீங்க? என்ன நடக்குதுன்னு தெரிஞ்சி தான் பேசுறீங்களா? கொஞ்சமாவது யோசிக்க மாட்டீங்களா? அவ என்ன கல்யாணம் ஆகாத பொண்ணா? சரண் அண்ணாவோட பொண்டாட்டிங்க அவ.”

“தெரியும்” என்றவன் ஒரு பைல் எடுத்து வந்து கொடுத்தான்.

“நான் உங்ககிட்ட என்ன கேட்டுட்டு இருக்கேன். நீங்க ஏதோ பைலைத் தூக்கிக் கொடுக்குறீங்க?”

ஆடை மாற்றி அவளருகில் வந்தமர்ந்து தோள் மீது கைபோட்டு, “வேதிமா! இந்த மாதிரி சமயத்துல டென்சன் கூடாதுடா. முதல்ல நீ நிதானமா பாரு புரியும்” என்றான்.

திறந்து பார்த்ததில் சரண்-ஆராதனா திருமணப் பதிவு பண்ணிய சான்றிதழ் இருக்க, “இதுக்கென்ன?” என்பது போல் பார்த்தாள்.

“பேப்பரைப் பாருமா” என்று சைகை செய்ய,

“இதை நான் அவங்க கல்யாணத்தோடயே பார்த்துட்டேன். சரவணன் அலைஸ் சரண் இருந்தது.”

“அப்ப உனக்கு எதுவும் தோணலையா வேதி?”

சட்டென்று முகம் பளிச்சிட அதை நன்றாகப் பார்த்தவளுக்கு சரணின் அப்பா, அம்மா பெயராக, வெற்றிவேல் தனலக்ஷ்மி இருக்க, “இது நிஜம் தானா? ஆரு கட்டிக்கணும்னு ஆசைப்பட்ட அத்தான் சரண் அண்ணாவா? ஐம் சோ ஹேப்பி இன்ஸ்” என்று கணவனைக் கட்டியணைத்து முத்தமிட்டாள்.

“ஹேய்! வேதிமா பார்த்துடா. எனக்கு மூச்சு முட்டுது”.

“பரவாயில்ல முட்டட்டும். ஆருவுக்குச் சொல்லலாமேங்க?”

“உன் பிரண்ட் கொஞ்சம் நிதானமா யோசிச்சிருந்தா, இதை எப்பவோ கண்டுபிடிச்சிருக்கலாம். இதான் நேரம் சரியில்லைன்னு சொல்றதோ என்னவோ?”

“ஆமாங்க. அவ செம ஷார்ப் மத்த விஷயங்கள்ல. ஆனா, அவளுக்குன்னு வந்தப்ப எப்படி விட்டாள்னு தெரியலையே. காலையில் போயி பார்த்துட்டு வரலாமா?”

“பார்த்துட்டு மட்டுமில்லை. அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிட்டே வரலாம்.”

“இன்ஸ் நிஜமா? ஷாக் மேல ஷாக் கொடுக்குறீங்க.”

“இன்னும் இருக்குடா வேதிமா. அதுக்காக நான் சிலது செய்வேன் நீ டென்சனாகக் கூடாது. ஆக்சுவலா உன்கிட்ட சொல்லாம செஞ்சிருப்பேன். நீ மாசமா இருக்கியா. அதான் டென்சனாகக் கூடாதுன்னு முன்னக்கூட்டியே சொல்றேன்” என்றான் மனைவிக்காக.

சரண் அழைப்பை எடுக்காததால், தகவல் தெரிந்து கொள்ளும் எண்ணத்துடன் ராஜாவைத் தேடி அவர்கள் வீட்டிற்கு வர, “என்ன ஆராதனா இங்க வந்திருக்க?” என்று கேட்ட ராணியிடம், “மேடம் நான் ராஜாவைப் பார்க்கணும்” என்றாள்.

‘எதுக்கு?’ என்று தோன்றினாலும் மகனை அழைத்து உள்ளே செல்லத் திரும்பிய ராணிக்கு மகனின் வார்த்தையில் குழப்பம் வர அப்படியே நின்றார்.

“அண்ணி! என்ன விஷயம்? இந்த நேரத்துல வந்திருக்கீங்க? எதாவது பிரச்சனையா?”

“ராஜா உங்க அண்ணனுக்கு வேற நம்பர் எதாவது இருந்தா போன் செய்.”

“இருங்க அண்ணி. போன் எடுத்துட்டு வர்றேன்” என்று எடுத்து வந்து கைபேசியில் அழைக்க, அவனுக்கும் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வந்தது.

இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ராணிக்கு குழப்பம் இன்னும் அதிகரிக்க அவர்களைக் கவனிக்கலானார்.

அதே நேரம் கணேஷ் வர சைகையில் அமைதியாக அமருமாறு சொன்னார் ராணி.

“என்ன ப்ராப்ளம் அண்ணி?”

அவளின் தந்தை பேசியதைச் சொல்லி, “அப்பா பிடிவாதமா இருக்காங்க. இதுவரை நான் எது சொன்னாலும் கேட்டு செய்றவங்க, ஏன்னு தெரியல பிடிவாதமா அடுத்த வாரம் கல்யாணம்னு சொல்றாங்க.”

“ஒரு வாரம் இருக்குல்ல. பார்த்துக்கலாம் அண்ணி. அண்ணன் சமாளிச்சிப்பாங்க” என்றான்.

“எப்படிச் சமாளிப்பாங்க? லவ் பண்றோம்னு கூட சொல்ல முடியாத நான், கல்யாணம் முடிஞ்சிருச்சின்னு சொன்னா எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலையே?” என்று அவளின் வருத்தத்தைச் சொல்ல, அதிர்ந்த மூன்று முகங்களை கவனிக்கவில்லை.

“எப்பக் கல்யாணம் முடிஞ்சது?” என்ற ராணியின் குரல் கேட்ட பின்தான் தான் என்ன உளறியிருக்கிறோம் என்ற எண்ணம் தோன்ற, இனி மறைக்க முடியாததால் நடந்ததை விபரமாகச் சொல்லி, “அவங்களைத் தப்பா நினைக்காதீங்க மேடம். நியா கல்யாணம் முடிஞ்சதும் சொல்லலாம்னு நினைச்சோம்.”

அவர்களுக்கு ஏமாற்றம் தான் என்றாலும், அவள் அருகில் வந்து, “நல்ல குடும்பத்துல தான்மா வந்து வாழ்க்கைப் பட்டுருக்க. பெரியவங்களல் இருந்து குழந்தைகள் வரை அப்படி ஒரு குணம். தேடினாலும் உங்கப்பாவுக்குச் சரண் மாதிரி ஒரு பையன் மருமகனா கிடைக்க மாட்டான். நான் அவங்க அப்பா கூடப்பிறந்த தங்கை கிடையாதுமா. அவங்க இல்லன்னா நான் என்ன ஆகிருப்பேன்னே தெரியாது. இப்ப குடும்பம், குழந்தைன்னு இருக்கேன்னா, வெற்றிவேல் அண்ணா தான் காரணம். தூத்துக்குடிக்கும் மதுரைக்கும் பாலம் அமைச்ச பிள்ளைங்க சரண், நியா ரெண்டு பேரும்.”

“நீங்க... அவங்க... சாரி. எனக்குக் குழப்பமா இருக்கு. நான் ரூம்கு போறேன்” என்று கிளம்பியவளுக்கு காரணமே தெரியாமல் வெற்றிவேல், தனலக்ஷ்மி தூத்துக்குடி, மதுரை, ஹாஸ்டல் என மாறி மாறி வந்து அலைக்கழிக்க அவளறிhமல் உறங்கினாள்.

காலை ஆறு மணிக்கெல்லாம் வேதவல்லி வர, நடந்ததை மறந்து அவளைக் கட்டியணைத்த ஆராதனா, பின், “ஓ... சாரி. ஜூனியர் இருக்காங்கல்ல?”

“ஏன் ஆரு நேத்து அப்படி அழுத? சரியா தூங்கல போல. கண்ணெல்லாம் ரெட்டா இருக்கு.”

“அதை விடு. எங்க உன்னோட இன்ஸ்?”

“கீழ நிற்கிறாங்க. முதல்ல இதைப் படி அப்புறம் கீழே போகலாம்” என்றாள்.

“என்ன வேதா எதாவது பொக்கிஷமா?”

“ஆமா பொக்கிஷம்தான், உன்னைப் பொருத்தவரை.”

திறந்து பார்த்த ஆராதனாவிற்கு, அது அவளின் திருமணப் பதிவு பத்திரம் என்பது தெரிய, “இதுல என்ன விஷயம்?” என்று கேள்வியாய் நோக்கியவளை, ‘படி’ என்பது போல் சைகை செய்தாள்.

உள்ளே பார்வையைப் பதித்தவள் கண்கள் மணமகன் இடத்தில் பதிய, கண்களை மூடிப் பின் திறந்து பார்த்தாள். “சரவணன் அலைஸ் சரண்” பெற்றோர் இடத்தில் “வெற்றிவேல்-தனலக்ஷ்மி” இருக்க, அவள் தலையில் கோடிப் பூக்களைக் கொட்டிய சந்தோஷம். அவள் முகம் பளிச்சிட, “நன்றி முருகா” என்றவள், “வள்ளீஈஈஈ எப்படிடி? எப்படி எனக்கு இது தெரியாம போச்சி. அப்ப சரண்தான் நான் தேடி வந்த சரவணன் அத்தானா? ஓ மை காட்! வள்ளி எனக்கு இப்பவே அவங்களைப் பார்க்கணும் போல இருக்கு. அவங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?” கால் தரையில் நிற்பேனா என்றது அவளுக்கு.

தோழியின் மகிழ்ச்சியில் தானும் மகிழ, “அது குறிப்பிட்டு சொல்லத் தெரியலை. தெரிஞ்சிருக்கவும் சான்ஸ் இருக்கு” என்றாள்.

“அப்ப ஏன் என்கிட்ட சொல்லலை?”

“தெரியாம இருக்கவும் சான்ஸ் இருக்குதானம்மா.”

“ம்ஹூம் அவங்க செம ஷார்ப். இவ்வளவு நாளா கண்டு பிடிக்காமலா இருப்பாங்க அதெல்லாம் தெரிஞ்சிருக்கும்.”

“ஏய்! அப்படின்னா இப்படின்ற. இப்படின்னா அப்படின்ற. நான் வரலை தாயே உன்னோட விளையாட்டுக்கு. எதுக்கும் யோசிச்சிக்கோ?”

“யோசிக்கலாம் டைம் இல்லை. ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்ணு நான் கிளம்பிடுறேன்.”

“ஆரு அதுக்காக அவங்க வீட்ல போயி விஷயத்தை உடைக்கப் போறியா?”

“ஹேய் வேதாமா! என் அத்தை வீட்டுக்குப் போறேன். விஷயத்தை உடைக்குறது உன் பாசமலர் என்னோட மச்சான் வேலை. பேசிட்டே இருக்காத வேதா என்னைக் கிளம்ப விடு” என்று உள்ளே ஓடினாள்.

“ம்... இவ்வளவு நேரம் வள்ளி. இப்ப வேதாவா? அதுக்குள்ள மலை இறங்கிட்டாளா இந்த மாரியாத்தா. அண்ணா! எப்படித்தான் புயலையும், தென்றலையும் சமாளிக்கப் போறீங்களோ?” என்ற எண்ணியவாறு சிரிப்புடன் தோழிக்காகக் காத்திருந்தாள்.

ஆராதனா தயாராகி வர, “ம்... பார்றா. அத்தை வீட்டுக்குப் போகணும்னதும் சாரில கலக்குறாங்க.”

“ஹேய் போடி. கண் வைக்காத” என்றாள் சிணுங்கலாக.

“ஆமா. இவ மேல கண்ணை வச்சிட்டு நாங்க தடவிட்டு அலையப் போறோம். போவியா.”

“இருடி. உன்னோட இன்ஸ்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்றேன்.”

“நல்லவேளையா போச்சி. உன்னை சைட்டடிச்சி என்னை ப்ரீயா விட்டாளேன்னு சந்தோஷப்படுவாங்க” என்று பேசியபடியே கீழே வர,

“அண்ணி நானும் வர்றேன்” என்று ராஜாவும் வர, அதே நேரம் முகிலனுக்கு அழைப்பு வர எடுத்துப் பேசியவன் முகம் பேயறைந்தது போல் மாறியது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“என்னங்க? என்னாச்சி?” என்ற மனைவிக்குப் பதிலளிக்காமல், “ஒரு பேட் நியூஸ் ஆரா. அந்த ட்ரக்ஸ் சேலர் சரவணன் தப்பிச்சிட்டானாம்” என்றான்.

“தப்பிச்சிட்டானா? எப்படி?”

“தெரியலை. இப்பத்தான் போன் வந்தது. இவனை மாதிரி ஆளுங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத நிறைய ஆதரவு இருக்கும். உள்ள இருந்துக்கிட்டே நிறைய வேலை பண்ணுவானுங்க. இப்ப அவனைப் பிடிச்சிக் கொடுத்த உங்களைப் பழிவாங்கத்தான் நினைப்பான்.”

“அண்ணா அவங்க போன் வேற நேத்துல இருந்து எடுக்கலை. இன்னைக்கு காலையிலயும் ட்ரை பண்ணேன் ஸ்விட்ஜ் ஆப் தான் வந்தது” என்றாள். ‘உங்களுக்கு எமன் நான்தான்.’ அவன் சொன்னது நினைவு வர முதன் முறையாக பயந்தாள். “எல்லாத்துக்கும் நான்தான் காரணம். எல்லாம் என்னால தான். என்னைப் பாதுகாக்கணும்னு நினைச்சதால தான் அவங்களுக்கும் ஆபத்து” என்று அழுது அரற்றியவளை சோதிக்கவென்று அந்த கைபேசி அழைப்பு வந்தது. போனில் வெறும் எண் மட்டும் வர சிறு யோசனையுடன் எடுத்தாள்.

“போனை எடுத்துட்டியா? நல்லவேளை உன்கிட்டச் சொல்லாம எங்க உன் புருஷன் உயிரை எடுத்திருவேனோன்னு நினைச்சேன். என்ன பேச்சே வரலை. பேசுவியே நெல்லைத் தமிழ்ல. இப்பப் பேசுடி. அப்பவே சொன்னேன்ல உனக்கு எமன் நான் தான்னு. வந்துட்டேன்டி. தப்பிச்சி வந்துட்டேன். பழிக்குப் பழி வாங்க” என்றான் காதை அடைக்கும் குரலில்.

அதுவரை சிலையாக நின்றிருந்தவள், “ஏய்! வே..வேண்டாம் அவங்கள ஒண்ணும் பண்ணிராத. உனக்கு எதிரி நான்தான? என்னை வந்து கொன்னுக்கோ. ப்ளீஸ் அவங்களை விட்டுரு” என்றாள் தொண்டை அடைக்க.

“விடவா? ஹா ஹா நல்ல காமெடி தான் போ. எனக்கு நீங்க ரெண்டு பேரும் வேணும். முதல்ல அவன். அப்புறம் நீ. இப்ப அவன் வீட்டுக்குத் தான் போயிட்டிருக்கேன். வரேன்டி என் மாமன் மகளே” என்றான்.

அவன் அழைப்பைத் துண்டித்ததும் அபிஷேக் அவனுக்குக் கைகொடுத்து, “குட் ஜாப். தேங்க்யூ” என்று பாராட்டி முகிலனுக்கும் தகவல் அனுப்பினான்.

அவன் அழைப்பைத் துண்டித்ததை உணராமல், “டேய்! வேண்டாம்டா அவங்களை விட்ரு” என்று நின்ற நிலையில் இருந்து கீழே முட்டி போட்டு முகம் மூடி அழுதவளுக்கு, வேதவல்லி ஆறுதல் சொல்ல, ராஜா ஒன்றும் புரியாமல் விழித்தான்.

“ராஜா கார் எடு. வேதி உன் ப்ரண்டை உள்ளே உட்கார வை” என்று முகிலன் சொன்னதும் கார் சரண் வீடு நோக்கி சீறிப்பாய, அழுது கொண்டிருந்த ஆராதனாவிற்கு ஆறுதல் சொல்ல முடியாமல் கணவனைப் பார்த்தாள், ‘இது அவசியம் தானா?’ என்று

“’கண்டிப்பா அவசியம்தான்’ என்று கண்மூடிச் சொல்ல, கணவனை முறைத்து தோழியிடம் திரும்பினாள்.

“வள்ளி எல்லாம் என்னாலதான். நான் இங்க வந்திருக்கவே கூடாது. என்னைப் பார்க்காம இருந்திருந்தா, அவங்க வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருந்திருப்பாங்கல்ல. இப்படிப் பிரிஞ்சி வாழாம குடும்பம், குழந்தைன்னு இருந்திருப்பாங்க. எல்லாத்தையும் நான் வந்து கெடுத்துட்டேன். நான் ரொம்ப சுயநலம் பிடிச்சவ வள்ளி” என்று விடாது அழுதாள்.

“ஆரு! அப்படி எதுவும் ஆகிராதுமா. இதோ பக்கத்துல வந்தாச்சி பாரு. இப்ப அண்ணாவைப் பார்த்திரலாம்.”

வீட்டிற்கு நுழைவதற்கு முன் அபிஷேக்கிற்கு தகவல் அனுப்ப, கார் நுழைவாயிலில் நின்ற நிமிடம், வேகமாக இறங்கிய ஆராதனா வீட்டிற்குள் நுழைந்த நேரம், சரணை அபிஷேக் ஹாலிற்கு வரவழைத்திருந்தான்.

வாசலில் ஓடி வந்து கொண்டிருந்த மனைவியைப் பார்த்த சரண், ‘என்னாச்சி? ஏன் அழுதுட்டு வர்றா?’ அவளை நோக்கி கேள்வியாய் கால்கள் நகர்ந்தது.

அவளோ, புயல் வேகமாய் வந்து, பூ மேகமாய் கணவனைக் கட்டியணைத்த நொடி, முகம் முழுவதும் முத்தமழை பொழிய, அதைப் பார்த்திருந்த அனைவரும் ஸ்தம்பித்து நின்றிருக்க, சம்பந்தப்பட்டவன் நிலையோ!?

“உங்களுக்கு ஒண்ணும் ஆகலையேங்க? நீங்க நல்லாயிருக்கீங்கல்ல? ஐம் சாரிங்க. சாரி. என்னாலதான் அவன் உங்களைக் கொல்ல வர்றான். வாங்க நாம வேற எங்கயாவது, அவன் கண்டுபிடிக்க முடியாத இடத்துக்குப் போயிரலாம். உங்களுக்கு எதாவது ஆச்சிதுன்னா நான் உயிரோடவே இருக்கமாட்டேன். ஐ லவ் யூ. ஐ லவ் யூ சோ மச் அத்தான்” என்றாள் கலங்கிய குரலில்.

அவள் என்ன சொல்கிறாள். என்ன சொல்ல வருகிறாள்? என்று புரியாவிட்டாலும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று பயந்திருக்கிறாள் என்று புரிந்தது. அபிஷேக்கையும், முகிலனையும் பார்த்தவனுக்கு இதெல்லாம் அவர்களின் நாடகம் என்பது புரிய அவர்களை கண்டனமாய் பார்த்தான்.

மனைவியின் உள்ளத்தில் இருந்து வந்த அந்த ஐ லவ் யூ அத்தான் மனம் முழுவதும் தித்திக்க, அவளை அணைத்திருந்த கையை எடுத்து, முகம் நிமிர்த்தி, “தனு ஒண்ணுமில்லடா. இங்க பாரு. நான் நல்லா இருக்கேன்” என்று அவளை விலக்கி நிறுத்த முயல, அவனை விலக விடாமல் திரும்பவும் அணைத்து, “ப்ளீஸ் என்னை விட்டுட்டுப் போயிராதீங்க அத்தான். நீங்க எனக்கு வேணும் அத்தான் எப்பவும்” என்றவளின் பதற்றம் குறையாமலேயே இருக்க,

‘சுத்தம். பயபுள்ள சுத்திலும் பார்த்தா தெரியும். எந்தளவு சேதாரம் வரப்போகுதோ கடவுளே!’ என்று பெருமூச்சு விட்டவன், “தனு! நான் உன் அத்தான் தான? உன்னை விட்டுட்டு எங்க போவேன். பாரு இப்பக் கூட நீ என் கைக்குள்ளதான் இருக்க. நீயே நினைச்சாலும் உன்னை விட்டுப் போக மாட்டேன்மா. செல்லம் கொஞ்சம் நிமிர்ந்து சுற்றிலும் பாருடா. எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க. எல்லாரோட கண்ணுலயும் கொலைவெறி தாண்டவமாடுது. இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே நின்னா வரப்போற சேதாரம் அளவு தெரியாம போகும்” என்றான்.

கணவனின் சொல்லில் கொஞ்சம் பதற்றம் குறைய, ‘சுற்றிலும் பார்க்கிறாங்க’ என்றதில், அவன் மேலுள்ள கையை பட்டென எடுத்து சட்டென விலகினாள். சுற்றிலும் பார்த்தவள் அதிர்ச்சியில் கண்கள் விரிய வாயடைத்துப் போனாள்.

அவளின் அப்பா, அம்மா, தாத்தா, தங்கை மட்டுமில்லாமல் சரணின் மொத்த குடும்ப உறுப்பினர்களும் அங்கே இருந்தனர். மனம் சுமந்து வந்த ‘அப்பா, அம்மா’ என்ற வார்த்தை தொண்டையிலேயே சிக்க, கணவனின் கையை இறுக்கிப் பிடித்தாள். அவன் முகம் பார்த்து, “ப்ளீஸ். எதாவது பண்ணுங்களேன்” என்ற கெஞ்சல் வேறு.

அவன் ஆதரவாய் தொடும் முன் அவள் கைபிடித்து இழுத்து அடித்திருந்தார் அவளின் தாய். “என்ன இது ஆரா? என்ன நடக்குதுன்னு கேட்கிறேன்? உன்னை பொறுப்பான பொண்ணுன்னுதான் வேலைக்கு அனுப்பினேன். இங்க என்ன கூத்தடிச்சிட்டிருக்க? வேகமா வர்ற. கட்டிப் பிடிக்கிற. வசனம் பேசுற. இதுக்குத்தான் சென்னை வரணும்னு துடிச்சியா? அதுவும் இடம், பொருள், ஏவல்னு இல்லாம. நடு ஹால்ல ஒரு வயசுப்பையனை கட்டிப்பிடிச்சிட்டு நிற்கிற? இப்படியா வளர்த்தேன் உன்னை? இதான் நீ கத்துக்கிட்ட இந்த ஊர் நாகரீகமா? எல்லாம் உங்கப்பாவைச் சொல்லணும். எங்க அக்கா, அக்கானு செல்லம் கொடுத்தாங்கல்ல. நீ இதுவும் பண்ணுவ. இதுக்கு மேலயும் பண்ணுவ. உனக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொன்னா, அவ சொல்லும் போது முடிக்கலாம்னு சொன்னாங்கல்ல, அந்த மனுஷனுக்கு இது தேவைதான்.”

திரும்பவும் இரண்டு அடி போட்டு, “சீ போடி” என்று அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து அழ ஆரம்பித்தார்.

தாயின் அருகில் வந்து முட்டிப்போட்டு அமர்ந்தவள், “அம்மா... அம்மா ப்ளீஸ்மா. நான் வேணும்னு பண்ணலம்மா. சூழ்நிலை அப்படி ஆகிருச்சிம்மா. உங்க பேச்சைக் கேட்காம வந்தது தப்புத்தான்மா. அம்மா அழாதீங்கம்மா. ப்ளீஸ்மா அழாதீங்க. நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்மா” என்றாள் உணர்ச்சிவசப்பட்டு.

“ஓ... அப்ப என்ன சொன்னாலும் கேட்ப. அப்படித்தான?” தலையசைத்து சம்மதித்தவளிடம், “பேச்சு மாற மாட்டியே?”

“ம்கூம்... மாட்டேன்மா.”

“அப்ப நாங்க சொல்ற பையனைக் கல்யாணம் பண்ணிக்க” என்றார் பட்டென்று.

“அம்மாஆஆஆ” என்று அலறியவள், “எ..என்ன சொல்றீங்க? அதெல்லாம் என்னால முடியாது.”

“ஏய்! இப்பத்தான சொன்ன. நான் சொல்றதைக் கேட்பேன்னு?”

“ஆமா. ஆனா, இதை என்னால செய்ய முடியாதும்மா?”

“நீ செஞ்சி தான் ஆகணும். நான் பார்க்கிற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுற” என்றார் அழுத்தமாக.

சரணுமே சற்று அரண்டு தான் போனான். ‘ஏதோ அவளை வெறுப்பேத்துறாங்க’ என நினைத்தவன், அவரின் தீவிர பாவனையில் அத்தையின் அருகில் வந்து, “இதைப்பற்றி அப்புறமா பேசிக்கலாம் அத்தை” என்றான்.

விஷயம் தெரிந்தவர்களும் பிரச்சனை வேறு பாதையில் போவதை நினைத்தாலும், அந்த இடத்தில் ஒன்றும் பேச முடியாமல் திகைத்து நின்றனர்.

“அதெல்லாம் முடியாதுப்பா. இவ எனக்கு இப்பவே பதில் சொல்லணும்” என்று உறுதியாக நின்றார்.

அவன் திரும்பி மாமாவைப் பார்க்க, மனைவியின் சொல்லை ஆமோதிப்பது போல் நின்ற தோற்றம், ‘ஏன் எதுவும் தடுக்காம நிற்கறாங்க?’ என்று குழம்பினான்.

“அம்மா ப்ளீஸ். செத்துப் போன்னு சொல்லுங்க நான் இப்பவே ரெடி. இது மட்டும் வேண்டாம்மா?”

மகளின் கேன்சல் எதையும் காதில் ஏற்காது, “செத்துப் போறதை விட கல்யாணம் அவ்வளவு மோசமா என்ன? நான் சொல்றதைச் செய்யுறேன்னு சொல்லியிருக்க. அதை மட்டும் செய்தால் போதும்.”

“ஹையோ! நானே நினைச்சாலும் முடியாதும்மா” என்று காத்த, சரண் மனைவியை ஆறுதலாகத் தொடவும் தாயிடம் இருந்து எழுந்தவள் அவனைக் குற்றப்பார்வை பார்த்தாள். ‘உன்னால் தான் எல்லாம்’ என்று சுட்டது அந்தப் பார்வை.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“ஏன்டி, நீயே நினைச்சாலும் முடியாது?” என்று சொன்னாலும் தாயின் மனதில் அதுவாகத் தான் இருக்கும் என்று தோன்றியது.

பின், இருவரும் தைரியத்தை வரவழைத்து, கைவிரல்களுள் விரல் கோர்த்து, “எங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சி. இப்ப இல்ல பதினாலு மாசத்துக்கு முன்னாடியே” என்றார்கள்.

அதைக்கேட்டு அதிர்ந்தது பல முகங்கள் எனில் திருப்திபட்டது சில முகங்கள்.

“என்னடா சொல்ற?” என்ற வெற்றிவேலிடம்,

“ஆமா அப்பா. நீங்க ஜாதகம் பார்த்து வந்த அதே தேதியில், வடபழனி முருகன் கோவில்ல வச்சி நடந்தது. குட்டிமா கல்யாணம் முடிஞ்சதும் சொல்லலாம்னு இருந்தோம்” என்று மனைவியின் கழுத்தில் கிடந்த தாலியை வெளியே எடுத்து விட, பார்த்தவர்களுக்கு உண்மையை அது சொல்லியது.

“அம்மாவோடதாடா? என கேட்டார் வெற்றிவேல்.”

“ஆமாப்பா” என்று அன்று நடந்ததை தன்னுடைய மனநிலையை சொல்லி முடித்தான். “என்னால தனுவை விட்டுக்கொடுக்க முடியலப்பா. அதான் எது வந்தாலும் சமாளிக்கலாம்னு கட்டிட்டேன். சாரிப்பா. உங்களுக்கு தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவீங்கன்னு தெரியும். இருந்தாலும் எனக்கு இவள் வேணும்னு பண்ணிட்டேன்ப்பா” என்றான்.

“விடுடா தம்பி. இதான் நடக்கணும்னு இருந்தா மாத்தவா முடியும். என்ன இருந்தாலும் தனத்தோட தம்பி பொண்ணைத்தான முடிச்சிருக்க. இது நடக்கலன்னாலும், உங்க ரெண்டு பேருக்கும் தான்னு நாங்க பேசி முடிச்சிட்டோம்” என்று சமாதானமானார்.

மற்றவர்களையும் சரண் சமாதானப்படுத்த, “நீ நல்லாயிருந்தா போதும்” என்று பெரியவர்களாக வாழ்த்தினார்கள்.

தாயிடம் வந்த ஆராதனா, “அம்மா சாரிம்மா” என்றாள்.

“விடுமா. மனசுக்கு சங்கடமாத்தான் இருக்கு. இனி பண்ண ஒண்ணும் இல்லை” என்றார்.

தகப்பனிடம் சென்றவள் மன்னிப்பு வேண்ட, “தெரியாம நடந்திருந்தாலும் முன்னாடியே சொல்லியிருக்கலாம் தனாமா. முதல் முதலா சரவணனை கடையில வச்சிப் பார்த்தப்பவே, வரச்சொன்ன மாப்பிள்ளையை வேண்டாம்னு சொல்லி, அக்கா பையனுக்கே முடிச்சிரலாம்னு முடிவு பண்ணிட்டேன். அவனும் உன்னைக் கட்டிக்கிறேன்னு சொன்னானே தவிர, உங்களுக்கு கல்யாணம் ஆனதை மறைச்சிட்டான். அப்பவே சொல்லியிருந்தா இந்த வலி இருந்திருக்காது” என்றார் வார்த்தைகளில் வலிகளை அடக்கி.

ஒரு வழியாக அனைவரும் சமாதானமாக நேரங்கள் கடந்தது.

அபிஷேக் அவர்களிடம் வந்து, “எங்க ப்ளான் இவ்வளவு சீக்கிரம் சக்சஸ் ஆகும்னு நினைக்கவே இல்ல. நீங்களா சொல்வீங்கன்னு எதிர் பார்த்தா பதினாலு மாசம், பதினாலு வருஷமாகிரும” என்றவன் ஆராதனாவிடம் திரும்பி, “அந்த சரவணன் ஜெயில்லயிருந்து தப்பிக்கவும் இல்லை. தப்பிக்கவும் மாட்டான். அவனுக்கு கடைசி வரை அங்கதான் இருப்பிடம். பயப்படாம உங்க வாழ்க்கையை வாழ ஆரம்பிங்க” என்றான்.

“அப்ப அந்த போன்?” என்று அவள் கேட்க,

“எல்லாம் என்னோட ஐடியாதான். சரணோட போன் நேத்துல இருந்து ஸ்விட்ஜ் ஆஃப் ஆனது கூட எங்க வேலைதான். அடுத்த வாரம் எங்க கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு சாயங்காலம் உங்களுக்கு ரிசப்ஷன். எங்க வீட்டுல என்ன நினைப்பாங்கன்னு பயப்பட வேண்டாம். இதுல பாதி ஐடியா அம்மா கொடுத்ததுதான்” என்றான் பெருமையாக.

அனைவரின் மனமும் சந்தோஷத்தில் மூழ்க, ஒருத்தர் மட்டும் யாரிடமும் பேசாமல் இருக்க, சிறிது நேரம் கழித்தே அதை உணர்ந்த சரண், மனைவியின் கைபிடித்து அழைத்து வந்து, “சாரி குட்டிமா” என்றான். எதுவும் பேசாமல் இருக்கவும், “சாரிடா. நான் தான் என் நிலைமையை சொன்னேன்ல. ப்ளீஸ் பேசுமா? ஏன்டா அமைதியா இருக்க?” என்று கெஞ்சிக் கொண்டிருக்க,

அபிநயாவின் அமைதி தொடரவும், ஆராதனாவின் கோவம் அதிகமாக, அபிநயாவின் தோள் பிடித்துத் திருப்பி, “ஏம்ல எம்புருஷனை கெஞ்ச விட்டுத் திரியறவ? விட்டேன்னு வையி மூஞ்சி முகறையெல்லாம் பேந்துரும் சொல்லிட்டேன். நானும் பாத்துட்டிருக்கேன் ஓவரா பண்ற? ஏய் நாத்தனாரே! ஒழுங்கா உங்கண்ணனை ஏத்துக்கோ. புரியுதாலே” என்றாள்.

“ஏய்! என்னடி பண்ற?” என்று சரண் அவளைத் தடுக்க,

“அட விடுங்க மச்சான். என்னோட நாத்தனார்கிட்ட நான் பேசுறேன். நடுவுல வராதீங்க. அப்புறம் நீங்க கன்னத்துல கைவைக்க வேண்டி வரும். எப்படி வசதி? என்று கண்ணடிக்க,

அபிநயா மெல்ல எழுந்தாள். “எங்க என் முகத்துல கை வையி பார்க்கலாம்? ப்ளேடுலாம் சூப்பரா போடுவியாமே கேள்விப்பட்டேன். எங்க எனக்குப் போடு பார்க்கலாம்” என்றாள்.

“ஹேய்! நிஜமாத்தான கேட்கிற? நிஜமாவே போட்டுருவேன். அப்புறம் பீல் பண்ணக்கூடாது.”

சுத்தி உள்ளவர்கள் சற்று திகிலோடும் சுவாரசியத்தோடும் பார்க்க,

அபிநயாவின் முகத்தைப் பக்கத்தில் இழுத்து, “இதோ போடுறேன்டி நாத்தனாரே” என்று இரு கன்னத்திலும் முத்தமிட்டாள்.

“அடிப்பாவி! எனக்கு இப்படி ஒருநாளும் முத்தம் கொடுத்ததில்லையே என்று சரண் வருத்தப்பட,

“டேய் சரண்! இவ்வளவு நேரம் நடுஹால்ல வாங்குனியே. அதுக்குப் பேரு என்னடா? என்று முகிலன் கேட்டான்.

“ஸ்... கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? என்னோட தண்டணையைப் பாரு அண்ணியாரே.” என்று ஆராதனாவைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு, “ஐ லவ் யூ அண்ணி” என்றாள் சந்தோசமாக.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top