- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
21
அபிநயாவின் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த பொழுது, கேசவன் மகளுக்கு அழைத்து, “தனாமா உனக்கு கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். பையன் வேற யாருமில்லை. என்னோட அக்கா தனலக்ஷ்மி பையன் சரவணன் தான். பையன் பார்க்க லட்சணமா இருக்கான். கைநிறைய சம்பாதிக்கிறான். வர்ற மாசி இருவது உங்கக் கல்யாணம். இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. நீ இங்க வரவேண்டாம்மா. நாங்க அங்க வர்றோம். அங்க வச்சிதான் கல்யாணம். எல்லாம் பேசி முடிச்சாச்சி. நீ வரவேண்டியது, தாலி கட்டிக்க வேண்டியது தான் பாக்கி” என்றார் உற்சாகமாக.
“அ...அ...அப்பா நா... நான் என்...” சொல்ல வந்த வார்த்தைகள் பாதியிலேயே நிற்க, துக்கம் தொண்டையடைக்க சரி செய்து, “அப்பா நான் என்ன சொல்றேன்னா இப்...ப இந்தக் கல்யாணம்...”
“எதுவும் சொல்ல வேண்டாம்மா. நான் பேசி முடிவு பண்ணியாச்சி. ஏமாத்தாம இரு போதும்” என்று போனை வைக்க “அ...அப்பா” என்றழைக்க எதிரில் கீங் சத்தம் வந்தது.
உடனே பதற்றத்தில் கை நடுங்க தங்கைக்கு முயற்சி செய்ய, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பின் கணவனுக்கு அழைக்க, அதுவும் அணைத்து வைக்கப்பட்டிருக்கவும் நேரம் பார்த்தாள். இரவு ஒன்பது மணியைக் காட்ட செய்வதறியாமல் அழுது கொண்டிருந்தவள், கண்ணீரைத் துடைத்து திரும்பவும் கணவனை அழைக்க, அதுவும் ஸ்விட்ஜ் ஆப் என்றே வந்தது. வேகமாகத் தோழியை அழைக்க, அவள் எடுத்த மறு வினாடி “வள்ளி வள்ளி” என்று கதறினாள்.
“என்னாச்சி ஆரு? ஏய் அழறியா என்ன? என்னடா ஆச்சி?” என புரியாது கேட்க,
“அப்பா” என்று ஆரம்பித்து நடந்ததைச் சொல்ல, “ஆரு அப்படிலாம் ஒண்ணும் ஆகாதுமா. ஆழாம இரு நான் காலையில சீக்கிரமே வர்றேன். வந்து பேசிக்கலாம்” என்று அழைப்பைத் துண்டித்து வைத்த வேதவல்லி, அப்பொழுது உள்ளே நுழைந்த கணவனிடம் சொல்ல, அவன் அதைக் கண்டு கொள்ளவில்லை. அது அவளுக்கு ஆச்சர்யத்துடன் அதிர்ச்சியைக் கொடுக்க,
“இன்ஸ் உங்ககிட்டத்தான சொல்றேன். பதில் பேசாம போனா என்ன அர்த்தம்?”
“என்ன அர்த்தம்னா? ஏற்கனவே தெரியும்னு அர்த்தம்டா வேதி.”
“தெரிஞ்சுமா அசால்ட்டா இருக்கீங்க? என்ன நடக்குதுன்னு தெரிஞ்சி தான் பேசுறீங்களா? கொஞ்சமாவது யோசிக்க மாட்டீங்களா? அவ என்ன கல்யாணம் ஆகாத பொண்ணா? சரண் அண்ணாவோட பொண்டாட்டிங்க அவ.”
“தெரியும்” என்றவன் ஒரு பைல் எடுத்து வந்து கொடுத்தான்.
“நான் உங்ககிட்ட என்ன கேட்டுட்டு இருக்கேன். நீங்க ஏதோ பைலைத் தூக்கிக் கொடுக்குறீங்க?”
ஆடை மாற்றி அவளருகில் வந்தமர்ந்து தோள் மீது கைபோட்டு, “வேதிமா! இந்த மாதிரி சமயத்துல டென்சன் கூடாதுடா. முதல்ல நீ நிதானமா பாரு புரியும்” என்றான்.
திறந்து பார்த்ததில் சரண்-ஆராதனா திருமணப் பதிவு பண்ணிய சான்றிதழ் இருக்க, “இதுக்கென்ன?” என்பது போல் பார்த்தாள்.
“பேப்பரைப் பாருமா” என்று சைகை செய்ய,
“இதை நான் அவங்க கல்யாணத்தோடயே பார்த்துட்டேன். சரவணன் அலைஸ் சரண் இருந்தது.”
“அப்ப உனக்கு எதுவும் தோணலையா வேதி?”
சட்டென்று முகம் பளிச்சிட அதை நன்றாகப் பார்த்தவளுக்கு சரணின் அப்பா, அம்மா பெயராக, வெற்றிவேல் தனலக்ஷ்மி இருக்க, “இது நிஜம் தானா? ஆரு கட்டிக்கணும்னு ஆசைப்பட்ட அத்தான் சரண் அண்ணாவா? ஐம் சோ ஹேப்பி இன்ஸ்” என்று கணவனைக் கட்டியணைத்து முத்தமிட்டாள்.
“ஹேய்! வேதிமா பார்த்துடா. எனக்கு மூச்சு முட்டுது”.
“பரவாயில்ல முட்டட்டும். ஆருவுக்குச் சொல்லலாமேங்க?”
“உன் பிரண்ட் கொஞ்சம் நிதானமா யோசிச்சிருந்தா, இதை எப்பவோ கண்டுபிடிச்சிருக்கலாம். இதான் நேரம் சரியில்லைன்னு சொல்றதோ என்னவோ?”
“ஆமாங்க. அவ செம ஷார்ப் மத்த விஷயங்கள்ல. ஆனா, அவளுக்குன்னு வந்தப்ப எப்படி விட்டாள்னு தெரியலையே. காலையில் போயி பார்த்துட்டு வரலாமா?”
“பார்த்துட்டு மட்டுமில்லை. அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சிட்டே வரலாம்.”
“இன்ஸ் நிஜமா? ஷாக் மேல ஷாக் கொடுக்குறீங்க.”
“இன்னும் இருக்குடா வேதிமா. அதுக்காக நான் சிலது செய்வேன் நீ டென்சனாகக் கூடாது. ஆக்சுவலா உன்கிட்ட சொல்லாம செஞ்சிருப்பேன். நீ மாசமா இருக்கியா. அதான் டென்சனாகக் கூடாதுன்னு முன்னக்கூட்டியே சொல்றேன்” என்றான் மனைவிக்காக.
சரண் அழைப்பை எடுக்காததால், தகவல் தெரிந்து கொள்ளும் எண்ணத்துடன் ராஜாவைத் தேடி அவர்கள் வீட்டிற்கு வர, “என்ன ஆராதனா இங்க வந்திருக்க?” என்று கேட்ட ராணியிடம், “மேடம் நான் ராஜாவைப் பார்க்கணும்” என்றாள்.
‘எதுக்கு?’ என்று தோன்றினாலும் மகனை அழைத்து உள்ளே செல்லத் திரும்பிய ராணிக்கு மகனின் வார்த்தையில் குழப்பம் வர அப்படியே நின்றார்.
“அண்ணி! என்ன விஷயம்? இந்த நேரத்துல வந்திருக்கீங்க? எதாவது பிரச்சனையா?”
“ராஜா உங்க அண்ணனுக்கு வேற நம்பர் எதாவது இருந்தா போன் செய்.”
“இருங்க அண்ணி. போன் எடுத்துட்டு வர்றேன்” என்று எடுத்து வந்து கைபேசியில் அழைக்க, அவனுக்கும் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வந்தது.
இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ராணிக்கு குழப்பம் இன்னும் அதிகரிக்க அவர்களைக் கவனிக்கலானார்.
அதே நேரம் கணேஷ் வர சைகையில் அமைதியாக அமருமாறு சொன்னார் ராணி.
“என்ன ப்ராப்ளம் அண்ணி?”
அவளின் தந்தை பேசியதைச் சொல்லி, “அப்பா பிடிவாதமா இருக்காங்க. இதுவரை நான் எது சொன்னாலும் கேட்டு செய்றவங்க, ஏன்னு தெரியல பிடிவாதமா அடுத்த வாரம் கல்யாணம்னு சொல்றாங்க.”
“ஒரு வாரம் இருக்குல்ல. பார்த்துக்கலாம் அண்ணி. அண்ணன் சமாளிச்சிப்பாங்க” என்றான்.
“எப்படிச் சமாளிப்பாங்க? லவ் பண்றோம்னு கூட சொல்ல முடியாத நான், கல்யாணம் முடிஞ்சிருச்சின்னு சொன்னா எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலையே?” என்று அவளின் வருத்தத்தைச் சொல்ல, அதிர்ந்த மூன்று முகங்களை கவனிக்கவில்லை.
“எப்பக் கல்யாணம் முடிஞ்சது?” என்ற ராணியின் குரல் கேட்ட பின்தான் தான் என்ன உளறியிருக்கிறோம் என்ற எண்ணம் தோன்ற, இனி மறைக்க முடியாததால் நடந்ததை விபரமாகச் சொல்லி, “அவங்களைத் தப்பா நினைக்காதீங்க மேடம். நியா கல்யாணம் முடிஞ்சதும் சொல்லலாம்னு நினைச்சோம்.”
அவர்களுக்கு ஏமாற்றம் தான் என்றாலும், அவள் அருகில் வந்து, “நல்ல குடும்பத்துல தான்மா வந்து வாழ்க்கைப் பட்டுருக்க. பெரியவங்களல் இருந்து குழந்தைகள் வரை அப்படி ஒரு குணம். தேடினாலும் உங்கப்பாவுக்குச் சரண் மாதிரி ஒரு பையன் மருமகனா கிடைக்க மாட்டான். நான் அவங்க அப்பா கூடப்பிறந்த தங்கை கிடையாதுமா. அவங்க இல்லன்னா நான் என்ன ஆகிருப்பேன்னே தெரியாது. இப்ப குடும்பம், குழந்தைன்னு இருக்கேன்னா, வெற்றிவேல் அண்ணா தான் காரணம். தூத்துக்குடிக்கும் மதுரைக்கும் பாலம் அமைச்ச பிள்ளைங்க சரண், நியா ரெண்டு பேரும்.”
“நீங்க... அவங்க... சாரி. எனக்குக் குழப்பமா இருக்கு. நான் ரூம்கு போறேன்” என்று கிளம்பியவளுக்கு காரணமே தெரியாமல் வெற்றிவேல், தனலக்ஷ்மி தூத்துக்குடி, மதுரை, ஹாஸ்டல் என மாறி மாறி வந்து அலைக்கழிக்க அவளறிhமல் உறங்கினாள்.
காலை ஆறு மணிக்கெல்லாம் வேதவல்லி வர, நடந்ததை மறந்து அவளைக் கட்டியணைத்த ஆராதனா, பின், “ஓ... சாரி. ஜூனியர் இருக்காங்கல்ல?”
“ஏன் ஆரு நேத்து அப்படி அழுத? சரியா தூங்கல போல. கண்ணெல்லாம் ரெட்டா இருக்கு.”
“அதை விடு. எங்க உன்னோட இன்ஸ்?”
“கீழ நிற்கிறாங்க. முதல்ல இதைப் படி அப்புறம் கீழே போகலாம்” என்றாள்.
“என்ன வேதா எதாவது பொக்கிஷமா?”
“ஆமா பொக்கிஷம்தான், உன்னைப் பொருத்தவரை.”
திறந்து பார்த்த ஆராதனாவிற்கு, அது அவளின் திருமணப் பதிவு பத்திரம் என்பது தெரிய, “இதுல என்ன விஷயம்?” என்று கேள்வியாய் நோக்கியவளை, ‘படி’ என்பது போல் சைகை செய்தாள்.
உள்ளே பார்வையைப் பதித்தவள் கண்கள் மணமகன் இடத்தில் பதிய, கண்களை மூடிப் பின் திறந்து பார்த்தாள். “சரவணன் அலைஸ் சரண்” பெற்றோர் இடத்தில் “வெற்றிவேல்-தனலக்ஷ்மி” இருக்க, அவள் தலையில் கோடிப் பூக்களைக் கொட்டிய சந்தோஷம். அவள் முகம் பளிச்சிட, “நன்றி முருகா” என்றவள், “வள்ளீஈஈஈ எப்படிடி? எப்படி எனக்கு இது தெரியாம போச்சி. அப்ப சரண்தான் நான் தேடி வந்த சரவணன் அத்தானா? ஓ மை காட்! வள்ளி எனக்கு இப்பவே அவங்களைப் பார்க்கணும் போல இருக்கு. அவங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?” கால் தரையில் நிற்பேனா என்றது அவளுக்கு.
தோழியின் மகிழ்ச்சியில் தானும் மகிழ, “அது குறிப்பிட்டு சொல்லத் தெரியலை. தெரிஞ்சிருக்கவும் சான்ஸ் இருக்கு” என்றாள்.
“அப்ப ஏன் என்கிட்ட சொல்லலை?”
“தெரியாம இருக்கவும் சான்ஸ் இருக்குதானம்மா.”
“ம்ஹூம் அவங்க செம ஷார்ப். இவ்வளவு நாளா கண்டு பிடிக்காமலா இருப்பாங்க அதெல்லாம் தெரிஞ்சிருக்கும்.”
“ஏய்! அப்படின்னா இப்படின்ற. இப்படின்னா அப்படின்ற. நான் வரலை தாயே உன்னோட விளையாட்டுக்கு. எதுக்கும் யோசிச்சிக்கோ?”
“யோசிக்கலாம் டைம் இல்லை. ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்ணு நான் கிளம்பிடுறேன்.”
“ஆரு அதுக்காக அவங்க வீட்ல போயி விஷயத்தை உடைக்கப் போறியா?”
“ஹேய் வேதாமா! என் அத்தை வீட்டுக்குப் போறேன். விஷயத்தை உடைக்குறது உன் பாசமலர் என்னோட மச்சான் வேலை. பேசிட்டே இருக்காத வேதா என்னைக் கிளம்ப விடு” என்று உள்ளே ஓடினாள்.
“ம்... இவ்வளவு நேரம் வள்ளி. இப்ப வேதாவா? அதுக்குள்ள மலை இறங்கிட்டாளா இந்த மாரியாத்தா. அண்ணா! எப்படித்தான் புயலையும், தென்றலையும் சமாளிக்கப் போறீங்களோ?” என்ற எண்ணியவாறு சிரிப்புடன் தோழிக்காகக் காத்திருந்தாள்.
ஆராதனா தயாராகி வர, “ம்... பார்றா. அத்தை வீட்டுக்குப் போகணும்னதும் சாரில கலக்குறாங்க.”
“ஹேய் போடி. கண் வைக்காத” என்றாள் சிணுங்கலாக.
“ஆமா. இவ மேல கண்ணை வச்சிட்டு நாங்க தடவிட்டு அலையப் போறோம். போவியா.”
“இருடி. உன்னோட இன்ஸ்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்றேன்.”
“நல்லவேளையா போச்சி. உன்னை சைட்டடிச்சி என்னை ப்ரீயா விட்டாளேன்னு சந்தோஷப்படுவாங்க” என்று பேசியபடியே கீழே வர,
“அண்ணி நானும் வர்றேன்” என்று ராஜாவும் வர, அதே நேரம் முகிலனுக்கு அழைப்பு வர எடுத்துப் பேசியவன் முகம் பேயறைந்தது போல் மாறியது.