- Joined
- Aug 31, 2024
- Messages
- 662
- Thread Author
- #1
12
கார் கண்ணாடியில் பார்த்தான். தலையெல்லாம் பூவாக இருக்க தாலிகட்டி முடித்து பொட்டு வைக்கும் போது, அவள் பார்த்த அதிர்ச்சிப் பார்வையும், பார்ப்பவர்களுக்கு முகத்தை மெல்ல வருடுவது போல் இருந்தாலும், அந்த சரவணன் மேல் தன் கை படாமல் அவள் கொடுத்த தண்டனையும், கையில் கட்டுப் போடும் போது முறைத்த பார்வையும் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது. “ஏஞ்சல் ரௌடி” என்று வாய்விட்டுச் சொல்லி தலையில் இருந்த பூவை தட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றான்.
“என்னண்ணா அவனைப் பிடிச்சாச்சா? எல்லா பிரச்சனையும் சால்வ் பண்ணியாச்சில்ல?” என்ற தங்கையின் கேள்விக்கு,
“எல்லாம் முடிஞ்சிதுமா. அவனை அரஸ்ட் பண்ணியாச்சி. இனி எந்த பிரச்சனையும் இல்லை. சரிமா டிபன் ரெடியாகிட்டா எடுத்து வை. நான் அரை மணி நேரத்துல கிளம்பணும். இம்பார்ட்டன்ட் மீட்டிங் ஒண்ணு இருக்கு” என்று மாடிக்குச் செல்லத் திரும்பியவன் சட்டையைப் பிடித்து இழுத்தாள். “என்ன?” என்று சரண் கேட்க,
“அண்ணா அது வந்து இந்தக் கல்யாணத்தை நிறுத்தவே முடியாதா?”
வந்த சிரிப்பை அடக்கி, “அது... அது கண்டிப்பா முடியாதுடா. அவரைப் பாரு உனக்குப் பிடிக்கும்” என்றான்.
“எனக்குப் பிடிக்கும்னு எப்படிச் சொல்ற?”
“அது அப்படித்தான். விளக்கம் கேட்காத.அப்பா எங்க?”
“அப்பாவை காலையிலேயே லேண்ட் விஷயமா பார்க்கணும்னு வந்தாங்க. அவங்களைக் கூப்பிட்டு வெளியே போயிருக்காங்க” என்றவள், “அண்ணா கார் ஓட்டும் போது பார்த்து ஓட்டு. லேட்டா கிளம்பி அவசரமா வண்டி ஓட்டிட்டுப் போகாத” எனவும்,
“எனக்கேவா” என்றான்.
“ஆமாண்ணா. அனுபவம் பேசுது. பார்த்துப் போயிட்டு வாண்ணா. நான் அப்பா கூட போறேன்” என்று அண்ணனை அனுப்பி வைத்தாள்.
விடுதியில் ஆராதனா நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார, ஆடை மாற்றி வந்த வேதவல்லி, “என்ன ஆரு கிளம்பலையா?” என கேட்க,
“எங்க?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.
“தினமும் எங்க இந்த டைம் கிளம்புவோமோ அங்க” என்று நக்கலாக சொல்லி, பின், “ட்ரெயினிங் லாஸ்ட் டைம் இது. லீவு போட முடியாது. லீவு போட்டு ட்ரெயினிங் சர்டிபிகேட்ல எதாவது கரும்புள்ளி வச்சிட்டாங்கன்னா?”
“சே... இது வேறயா. இருடி நானும் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்.”
அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததில் இருந்து, அனைவரும் தன்னையே வித்தியாசமாகப் பார்ப்பது போல் தோன்றியது. ஒரு சிலர் என்ன ஆராதனா சொல்லவே இல்ல என்று சென்றார்கள். என்ன என்று புரியாமல் விழித்தவள் கோப்பு ஒன்றை சரி செய்து வாங்க மேலாளர் அறைக்குச் செல்ல,
“என்ன ஆராதனா உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? எப்ப? எங்கிட்ட சொல்லவே இல்லை. என்னைக்கு நீங்க வேலைக்கு வர்றதுக்கு முந்தியா? இல்லையே அப்ப நாட் மேரீட்ல இருந்தது” எனக் கேட்டான்.
அவன் பேச்சில் அதிர்ந்தவள், “அப்படில்லாம் எதுவுமில்லை சார்.”
“ஓ... ஐம் சாரி. நெத்தில உள்ள பொட்டைப் பார்த்து தப்பா நினைச்சிட்டேன். இப்ப சிட்டியில வயசுப் பொண்ணுங்களுக்கு இதுவும் ஒரு பேஷனாகிப் போச்சி.” சொல்லிக் கொண்டே பைலை சரி செய்தான்.
வேகமாக தன் இருக்கையில் வந்து அமர்ந்தவள். “மை காட்! இதைக் கவனிக்காமலா வந்தேன். அதான் எல்லாரும் வி;த்தியாசமா என்னைப் பார்த்தாங்களா?” என்று தன் கையடக்கக் கண்ணாடியை எடுத்து முகம் பார்த்தாள்.
“சே... எப்படிக் கவனிக்காமல் விட்டேன். இந்த வேதா கூட சொல்லவேயில்லை. எப்படி வச்சிருக்கான் பாரு அழுத்தமா. விட்டா ஓடிருவேன்னு நினைச்சானோ என்னவோ. தேய்த்துக் கழுவினாலும் போகாது போலவே. அது ஏன்டா மச்சான், உன் மேல மட்டும் கோவமே வரமாட்டேன்னுது. நீ பண்ணின வேலைக்கு, அந்த இடத்தில் வேற யாராவதா இருந்திருந்தா, இந்நேரம் தாலியைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போயிருப்பா. இல்ல போலீஸ்ல பிடிச்சிக் குடுத்திருப்பா...”
“ம்க்கும் எங்க போலீஸ் போக? அதான் போலீஸ் படையையே காவலுக்கு வச்சி தாலி கட்டினவனாச்சே. ம்... புத்திசாலி தான். செல்வியா இருந்த என்னை, கண்மூடி முழிக்கிறதுக்குள்ள திருமதியா மாத்தின புண்ணியவானாச்சே. அடுத்து என்ன பண்றது? முதல்ல ஆபீஸ் வேலையைப் பார்க்கலாம். மற்றதை அப்புறம் பார்க்கலாம்” என்று வேலையில் இறங்கினாள்.
வேலை முடித்து வெளியே வர, சேகர் வர முடியாத சூழ்நிலையில் இருப்பதாகச் சொன்னதால், வேறு ஆட்டோவிற்காக பேருந்து நிலையத்தில் வந்து நின்றார்கள்.
“சேகர் அங்கிள் வந்திருந்தா பாதுகாப்பா இருந்திருக்கும். ம்... அவருக்கு என்ன அவசர வேலையோ.”
“ஆமாடி. நமக்கும் பாதுகாப்பா இருப்பார். அவங்களுக்கும் பாதுகாப்பா இருப்பார்” என்றாள் நக்கலாக.
“அந்த அவங்க எவங்க ஆரு?”
“ம்... புதுசா உனக்குக் கிடைச்ச அண்ணனைச் சொன்னேன்.”
“பார்றா! மரியாதையெல்லாம் தூள் பறக்குது.”
“ஆமா. பெரிய மரியாதையைக் கண்டுட்ட” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு கார் சர்ரென்று வந்து, அரை வட்டமடித்து நிற்க, காரிலிருந்து அழகுடன் பாங்காக இறங்கியவனைப் பார்த்து ஆராதனா ‘இவனா?” என்று அதிர்ந்தாள்.
வேதவல்லியோ அவனைப் பார்த்து ‘ஹாய்’ சொன்னாள்.
“ஹாய் தங்கையே” என்று சிரித்தான் சரண்.
அவனின் சிரிப்பை சில வினாடிகளேனும் ரசித்தவள். “நீங்க இங்க ஏன் வந்தீங்க?” என கேட்க,
“ஏன் நான் வந்ததுல உனக்கென்ன பிரச்சனை? நான் என் தங்கையைப் பார்க்க வந்தேன். அப்படித்தானம்மா?” என்று சிரிக்க,
“ஆமா அண்ணா. அவ மூலமா எனக்கு ஒரு அண்ணன் கிடைச்சதுல பொறாமை.”
“வள்ளீஈஈஈ...” என்று பல்லைக் கடித்தபடி அதட்டலிட, அவளருகில் வந்த சரண், அவளின் கையைப் பிடித்து உள்ளங்கையை பார்வையிட்டு, “இப்ப வலி எப்படியிருக்குமா? அவனுக்கு நீயே தான் தண்டனை கொடுக்கணுமா? ஏன் நான் இல்ல? இந்தக் கையோட எப்படி வேலை பார்த்த? இப்ப பார் கையெல்லாம்...” என்று குரல் கம்ம சொல்லிக் கொண்டிருந்தவனை, சில விநாடிகள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள், பின் சுதாரித்து கையைப் பின் இழுத்தாள்.
“எல்லாத்துக்கும் நீங்கதான காரணம். எல்லாம் உங்க ப்ளான்படி தான நடந்தது. ஏன் நீங்க நினைச்சிருந்தா நேத்தே பிடிச்சிருக்க முடியாதா?” என்றாள் கடுப்புடன்.
“சாரிமா. நான் சொன்னேன் போலீஸ்தான் ஒத்துக்கலை. அவன் மொத்த க்ரூப்பையும் பிடிக்கணும்னா, அவன் பிளான் வச்சே அவனைப் பிடிக்கணும்னு சொல்லிட்டாங்க. அதுல நான் சின்ன சின்ன சேஞ்சஸ் பண்ணினேன். அவ்வளவு தான்.”
“எவ்வளவு ஈசியா சொல்லிட்டீங்க, அவ்வளவுதான்னு. எனக்குன்னு பேரண்ட்ஸ், கூடப்பிறந்தவங்க இல்லன்னு நினைச்சீங்களா? இல்ல உங்களுக்குத் தான் யாரும் இல்லையா? என் கல்யாணம் எப்படில்லாம் நடக்கணும்னு கற்பனை செஞ்சிருந்தேன். எல்லாத்தையும் ஒரே நிமிஷத்துல காலி பண்ணிட்டீங்களே. நான் எங்க அப்பா, அம்மா முகத்துல எப்படி முழிப்பேன். எத்தனை நாள் என்னால இதை மறைக்க முடியும் சொல்லுங்க? உங்க வீட்ல போயி அப்பா எனக்கு கல்யாணமாகிருச்சி. இவதான் என் மனைவின்னு தைரியமா என்னைக் கூப்பிட்டுப் போய் நிறுத்த முடியுமா? சொல்லுங்க நிறுத்த முடியுமா?” என்றவள் குரல் உயர்ந்து வர,
மனைவியின் வார்த்தையில் இருந்த நியாயத்தில் அவளின் கோவங்கள் சரணைப் பாதிக்கவில்லை. ‘அந்த சமயத்தில் அவளைக் காப்பாத்தணும், வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு தோணிச்சி. ஆனா, இப்ப அவ கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லித்தானே ஆகணும்.’
ஆராதனாவை நேருக்கு நேராகப் பார்த்து, “நாளை மறுநாள் என் தங்கைக்கு நிச்சயதார்த்தம் இல்லாமல் இருந்திருந்தா, கூப்பிட்டுப் போயிருப்பேன். என் தங்கைக்கு அந்தக் குறை இல்லாமல் இருந்திருந்தா, இவன் இல்லன்னா இன்னொருவன்னு நினைச்சி கூப்பிட்டுப் போயிருப்பேன். உன் மனசு முழுவதும் நான் இருந்து, என்னோடவே வரணும்னு உனக்குத் தோணியிருந்தா, இப்பவும் சரி, நீ வர்றேன்னு சொல்லு நான் கூப்பிட்டுப் போறேன். எல்லார்கிட்டேயும் பேசி கன்வின்ஸ் பண்ண என்னால் முடியும். பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறவன் நானில்லை. வா போகலாம்” என்று மனைவியைக் கைபிடித்து இழுத்தான்.
அதுவரை அவன் பேச்சில் அசையாமல் நின்றிருந்தவள், அவன் இழுத்ததும் கையைத் தட்டிவிட்டு, “என்னால எங்கேயும் வர முடியாது. நான் வரமாட்டேன். ஐ... ஐ...”
“ஐ லவ் யூவா! சீக்கிரம் சொல்லுமா. எனக்கும் உன் வாயால அந்த வார்த்தையைக் கேட்கணும்னு ஆசையா இருக்கு” என்றதும், நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேதவல்லி சத்தமாகச் சிரித்துவிட்டாள்.
தோழியை முறைத்து கணவனிடம் திரும்பி, “ஐ ஹேட் யூ” என்று சொல்ல,
“தேங்க்யூ” என்றான் அவன்.
“தேங்க்யூவா?” என்று விழித்தவளிடம்,
“லவ் - ஹேட், ஆங்கிலத்தில பிரிச்சா நாலு லெட்டர்ல வருது. தமிழ்ல இரண்டு லெட்டர். பரவாயில்லை சீக்கிரம் மாறிரும்” என்று அவளருகில் கொஞ்சம் நெருக்கமாக வர,
“ஏ...ஏன் என் பக்கத்துல வர்றீங்க? தள்ளி நில்லுங்க.”
“சும்மா இருமா. நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன். அதுவும் நடுரோட்டுல மனைவிகிட்ட அநாகரிகமா நடக்கிற அளவுக்கு நான் முட்டாள் கிடையாது. உனக்கொரு விஷயம் தெரியுமா செல்லம். இந்த விருப்பு, வெறுப்பு ரெண்டுக்கும் உள்ள இடைவெளி கம்மிதானாமே. அது எப்ப வேணும்னாலும் மாறலாமாம். நீ இப்ப என்மேல கோபமா இருக்க. இதுவே இரண்டொரு நாள்ல விருப்பமா மாறலாம். சரி சரி முறைக்காத. இரண்டொரு மாசத்துல, அதுக்கும் முறைப்புதானா? இரண்டொரு வருஷத்துல, சரிதான் அதுவுமில்லையா? அச்சச்சோ! அப்புறம் இருபதாவது கல்யாண நாள் வந்திரும். ப்ளீஸ்! மனசை மாத்திக்கோ” என்று கெஞ்சலில் இறங்கியவன், “சரி எனக்கான ஸ்பெஷல் தண்டனை ரெடியாகிருச்சா?” என்றான்.
உள்ளூர சிரிப்பு வந்த போதும், ‘அன்னைக்கு பார்க்கில் பார்க்கும் போது, இந்தப் பூனையும் பால் குடிக்குமா ரேஞ்சில் பேசிட்டு, இன்னைக்குத் தாலி கட்டினதும், என்னமா கௌண்ட் கொடுக்குறடா மச்சான். இரு உன்னைச் சுத்தல்ல விடுறேன். ஸ்பெஷல் தண்டனையா வேணும்?’ என்று மனதினுள் நினைத்து,
“தண்டனையெல்லாம் கிடையாது. ஏன்னா நாங்க இன்னும் ஒரு வாரத்துல ட்ரெயினிங் முடிஞ்சி ஊருக்குப் போயிருவோம். அதுக்கப்புறம் இங்க வர்றதா ஐடியா இல்லை. எங்கப்பாவோட டிபார்ட்மென்ட் ஸ்டோர்ல உட்கார்ந்து, ஹாயா வேலை பார்க்கப் போறேன். அப்பா கல்யாணப் பேச்சை எடுக்குறதுக்கு முன்னாடி, நம்ம உறவுக்கு ஒரு என்டிங் கார்டு போடணும்” என்றாள்.
“என்டிங் கார்டுனா?” என்றவன் குரலில் வித்தியாசம் காட்ட,
“டைவர்ஸ்” என்று விளையாட்டுத்தனமாக சொல்ல, வார்த்தை முடியும் வேளையில், கன்னத்தில் கைவைத்து, ‘ஆ..’ என்றலறினாள்.
அவளை அடித்து, முகத்தை ஒற்றைக் கையால் பிடித்த காரில் சாய்த்தவன் “என்னடி பேச்சு பேசுற. வாயிருக்குன்னா என்ன வேணும்னா சொல்லுவியா? இன்னைக்கு காலையிலதான் கல்யாணம் நடந்திருக்கு… அதுக்குள்ள டைவர்ஸ் பற்றி பேசுற. நான் உனக்காகன்னு ஒவ்வொண்ணும் பார்த்துப் பார்த்துப் பண்றேன். ஏதோ பொம்மைக் கல்யாணம் மாதிரி பேசிட்டிருக்க. சாமி சந்நிதானத்துல மனப்பூர்வமா எங்கம்மா தாலியை உன் கழுத்துல கட்டியிருக்கேன். எங்கம்மா எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியாது. அது உன் கழுத்துல இருக்குதுன்னா, என் அன்பு மொத்தமும் இங்க இருக்குதுன்னு அர்த்தம்” என்று அவளைக் கைகாட்டினான்.