• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
628
ஓம் சரவண பவ

சொர்ணா சந்தனகுமார்

உன்னைத் தேடி தேடியே

1


சென்னை வடபழனி :

“அண்ணா... அண்ணா எழுந்திரு. என்று தட்டி எழுப்பிய தங்கையின் குரலில் எழுந்து அமர்ந்தவனிடம், காப்பியை நீட்டியபடி, "டைம் ஆகுது அண்ணா. எவ்வளவு நேரம் தூங்குவீங்க? ஒரு கம்பெனி மேனேஜரே இப்படித் தூங்கினா கம்பெனி என்ன ஆகிறது? ம்... கெட்டப் கெட்டப். அச்சோ! பார்த்துக்கிட்டே இருக்காதண்ணா. தினமும் உனக்கு இதே வேலையாகிப் போச்சி. முதல்ல சீக்கிரம் எழுந்து போயி ப்ரஸ் பண்ணிட்டு வாண்ணா. காஃபி ஆறிரப்போகுது. அப்புறம் நீ சூடா காஃபி குடிக்க முடியாது? கூலா ஜூஸ்தான் குடிக்க முடியும்.”

திரும்பவும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் முன் அண்ணனின் தோள் தொட்டு, “என்ன?” என்று சைகையால் கேட்டாள்.

நிதர்சனம் உறைக்க, கண்களில் நீர் துளிர்க்கவும், எதுவும் பேசாமல் சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து குளியலறை சென்றான்.

சென்ற அண்ணனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் மனதின் எண்ணங்களை அறிந்து சின்னப் பெருமூச்சுடன் தோளைக் குலுக்கியபடி அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.

குளியலறை சென்றவன் தங்கையின் நிலையை எண்ணி மனம் வருந்தினாலும் எப்பொழுதும் போல் அதை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு வெளியே வந்தவன் அதைத் தன் தாயிடமும் பகிர்ந்தான். தங்கை அறையை விட்டு வெளியே சென்றிருந்ததால் காப்பியைக் கையிலெடுத்து ஒரு மிடறு குடித்தவன், “என் காப்பியை விட குட்டிமா நல்லாவே போடுறா” என்று பின் குளியல் மற்றும் இதர வேலைகளை முடித்து கீழே வந்தவன் கண்ணில் தனக்கு முன்னாடியே அலுவலகம் செல்லக் கிளம்பியிருந்த அப்பா பட்டார்.

"குட் மார்னிங்பா."

"குட் மார்னிங்டா தம்பி. என்ன கிளம்பியாச்சா? உன் தங்கச்சி எதோ கோவமா இருக்கிற மாதிரித் தெரியுது. எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லு. இல்லைன்னா எதாவது பறந்து வந்திடப் போகுது” என்றார் கேலியாகவே.

“திடீர்னு ஏன்பா. இருங்க பார்த்திட்டு வர்றேன்” என்று சமையலறையில் மதிய உணவு எடுத்து வைத்துக் கொண்டிருந்த தங்கையின் அருகில் வந்து "குட் மார்னிங் செல்லம்" என்றான்.

திரும்பி அவனை முறைத்தவள், “இது நான் காஃபி கொடுக்க வந்தப்பவே சொல்லணும். அப்பல்லாம் என் வாயையே பார்த்துட்டு இருந்து, இப்ப வந்து என்ன பேச்சி வேண்டிக் கிடக்கு. போண்ணா நீ ரொம்பவும் இமேஜின் பண்ணுற. அப்படிப் பண்ணாதன்னு சொன்னா கேட்கிறியா? நீ ரொம்ப மோசம்ணா. நடக்கிறது தான் நடக்கும். நம்மளோட கற்பனைக்காக எல்லாம் எதுவும் இயற்கைக்கு மாறா மாறிடப்போறது இல்ல" என்று சின்ன வருத்தத்துடன் தன் இயலாமையும் சேர பொரிந்து தள்ளினாள்.

“சரிடா சரி. இனி உன் முன்னாடி அப்படிப் பண்ண மாட்டேன். ஓகேவா? என்று சரணடைந்தான்.

“என் பின்னாடியும் பண்ணக் கூடாது ஓகே. நிதர்சனத்தை ஏத்துக்கோண்ணா. இதையெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தவன் நீ. நீயே அதை மறக்கலாமா?" என்றவள் குரலில் அவ்வளவு வருத்தம்.

“சரி சரி சாரி. இனி அப்படிப் பண்ணினா என்னடான்னு சட்டையைப் பிடித்து கேளு” என்று தங்கையிடம் மன்னிப்பு கேட்டு தகப்பனிடம் வந்து அமர்ந்தான்.

“அப்படி என்னடா பண்ணிட்ட அவளை? இந்த குதி... குதிக்கிறா?” என கேட்டார்.

“இப்பத்தான்ப்பா ஒரு பஞ்சாயத்து முடிச்சேன். திரும்பவுமா போதும் விடுங்க உங்க பையன் பொழைச்சிப் போகட்டும்.”

‘நான் இப்ப என்ன கேட்டுட்டேன்னு, இவன் இத்தனை சீன் போடுறான்’ என யோசனையில் இருந்தார்.

"அப்பா... அண்ணா" என்று நான்கைந்து முறை அழைத்து அலுத்துப் போனவள், அவர்களின் முன் வந்து, "நான் எத்தனை முறை கூப்பிடுறது? காது கேட்கலையா?" முகம் சிவக்க காளியாக மாறிக் கொண்டிருந்தவளை,

"ஹையோ! இல்லமா. நிஜமா கவனிக்கலைமா. நாங்க சுவாரஸ்யமா பேசிட்டு இருந்தோமா, அதனால நீ கூப்பிட்டதைக் கவனிக்கலைடா." காதைப் பிடித்துக் கொண்டு அப்பாவும், அண்ணனும் சரண்டர் ஆகினர்.

அதைப் பார்த்த பின், “அப்படி வாங்க வழிக்கு” என்று மலை இறங்கினாள் அவள்.

“சரி வாங்க. சாப்பிட்டு, சாப்பாடு எடுத்திட்டுக் கிளம்புங்க. கமான் க்விக்.” இருவரையும் விரட்டிக் கொண்டிருந்தாள் அவர்களின் செல்லப் பெண் நியா!

கடவுள் முருகன் மேலுள்ள பற்றுதலால், கோவில் அருகே வீடு வேண்டும் என்று, வடபழனி முருகன் கோவிலிலிருந்து சற்று தள்ளி இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டார் வெற்றி.

நடுத்தர வர்க்கத்தினருக்கும் மேலான குடும்பம். இவர்கள் வந்த சமயம் இடங்களின் விலையேற்றம் அதிகம் இல்லாததால், பதினைந்து சென்ட்டில் நிலம் வாங்கி இருந்தார். அதில் ஐந்து சென்ட்டில் வீடு கட்டிக் கொண்டு, மீதி இடங்களில் பழ வகை மரங்கள், காய்கறி, செடிகள், ரோஜாச் செடிகள் என வீட்டிற்கு நிறைவாக அழகாக இருக்கும் செடிகள் என கண்ணிற்கு குளிர்ச்சியாக பச்சை வர்ண ஆடை அணிந்தது போலிருக்கும் அவர்களின் வீடு. காலையில் சென்னை நகருக்குள் குயில்களின் ஓசை கேட்குமா? இதோ அழகான வடிவமைப்புடன் பறவைகளின் கீதங்களும் கேட்கும் வீடு, சென்னை நகருக்குள் இருப்பது இப்போதைய காலத்தில் அதிசயமே!

அப்பா வெற்றி! ரியல் எஸ்டேட் பிசினஸ் மேன். சென்னை வந்த புதிதில் சற்று பின் தங்கியிருந்த நில விற்பனை, நாளுக்கு நாள் சூடுபிடித்தது. மொத்தமாக இரண்டு மூன்று ஏக்கர் என விரைவில் டெவலப் ஆகும் இடமாகப் பார்த்து நிலம் வாங்குவதில் கெட்டிக்காரர். வாங்கிய இடத்தை அநியாய விலைக்குத் தள்ளாமல், நடுத்தர வர்க்கத்தினரும் வாங்கும்படி ப்ளாட் போட்டு லாபம் பார்ப்பதில் வல்லவர். மனைவி இறந்த பின் தன் பிள்ளைகளையே ஆதாரமாகக் கொண்டு வாழும் மனிதர். மனைவியின் நினைவில் தொழில் முதல் வீடு வரை, "தனலக்ஷ்மி ரியல் எஸ்டேட்" "தனலக்ஷ்மி இல்லம்" என புதிதாக ஆரம்பிக்கும் அனைத்தும் மனைவியின் பெயரில் தான் இருக்கும்.

நியா! அவரின் செல்ல மகள். இருபத்து நான்கு வயது அழகுப் பெண். சாயலில் அம்மாவின் பாதியாக இருப்பதால் அப்பாவிற்கும், அண்ணனுக்கும் செல்லம். கலாட்டாவிற்குப் பெயர் நியா. வீட்டில் மட்டும் தான். வெளியே யாரிடமும் பேச மாட்டாள். ஆண்களின் கண் பார்வையைக் கண்டு கொள்ளாமல், எப்பொழுதும் தெளிவான மனதுடன் இருப்பவள்.

பேஷன் டிசைனரிங் படித்து சொந்தமாக, "தனலக்ஷ்மி பொட்டிக்" வைத்திருக்கிறாள். தங்களின் சொந்த இடத்தில் அப்பாவின் அலுவலகம் அருகே நியாவுடைய பொட்டிக்கும் சேர்ந்திருக்கும். ஆடைகள் வடிவமைத்து, அதற்கேற்ற நகைகள் செய்து தருவது அவளின் தொழில். ஆர்டர்களின் பெயரில் வெளியிலும் செய்து கொடுப்பாள். கொஞ்சம் நடுத்தரமான ஏசி ஷாப் இவளுக்கு கீழ் மூன்று பெண்களை வைத்து பொட்டிக் நடத்துகிறாள்.

மகன் சரண்! இன்னும் நான்கு நாட்களில் இருபத்து ஒன்பதாவது பிறந்தநாள் காணப் போகும் இளைஞன். பிஇ முடித்து தனியார் ஐடி கம்பெனியில் மேனேஜர் பதவியில் இருப்பவன். யாரையும் மனம் நோக பேச மாட்டான். அவனின் பார்வையில், பேச்சில், செயலில் ஒரு நேர்மை இருக்கும். பெண்களை எல்லாம் அக்கா, தங்கை என்ற ரீதியில் பேசுவதோடு சரி. இதுவரை எந்தப் பெண்ணிடமும் அசடு வழிய நின்றதில்லை. அவனின் கம்பீரமும், அழகும், நடவடிக்கையும் பிடித்து பெண்களாக அவனிடம் சென்றாலும், திரும்பி வரும் பொழுது பாசமலர் தங்கையாகவே வருவார்கள். எதிலும் ஒரு எல்லையுடன் பழகுபவன். பார்த்தவுடன் ஒருத்தரை கணித்து விடுவான்.

அனைவரையும் கணிப்பவன் ஒருவரிடம் மட்டும் தன் கணிப்பு தப்பாக போவதை அறியவில்லை.

அப்பாவின் சாயல். அவனின் குணம் அப்படியே அவனின் அன்னையைப் போல் இருக்கும். தெளிவான பேச்சி, விவேகமான செயல்கள் என, அதனாலேயே சின்ன வயதிலேயே மேனேஜராகவும் இருக்கிறான். சரணுக்கு தாய்மேல் வெறித்தனமான அன்பு என்று சொல்லலாம். இந்த வயது வரையிலும் தாயிடம் சொல்லாமல் எதையும் செய்ய மாட்டான். மனதளவில் அவன் தாய் உயிருடன் இருக்கிறார். தாயுடன் உறவாடுவான்.. உரையாடுவான். அவன் மனதிலுள்ள பாரங்களை இறக்கி வைக்கும் இடம் அம்மா.

இதனால், அவன் அசாதாரமான நபரும் கிடையாது. எல்லோருக்கும் ஆறறிவு என்றால் இவனுக்கு மட்டும் ஏழு அறிவா என சந்தேகப்படும் அளவு புத்திசாலி. தங்கை என்றால் உயிர். தாயின் மறுபதிப்பாக நினைப்பவன். அவளுடன் இருக்கும் பொழுது அவளின் குறை தெரியாமல் பார்த்துக் கொள்வான். அவளும் இதுவரை தன் குறைகளைப் பெரிதென்று எண்ணவில்லை. படிக்கும் பொழுது எழுந்த கேலி, கிண்டல் வார்த்தைகள் அனைத்தையும் சமாளித்து அது மற்றவரின் குணக்குறை என்று விட்டு விடுவாள்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
628
இருவரும் சாப்பிட்டு எழ சரண் தங்கையிடம் திரும்பி “என்னடா கிளம்பலாமா.? போகும் போது விட்டுட்டுப் போகவா” என்றான்.

“என்னோட ஸ்கூட்டியில் போயிருவேன்ணா. நீ கிளம்பு.”

“வேண்டாம்மா. இன்னைக்கு எனக்கு நிறைய வேலை இருக்காது. நானே விட்டு நானே கூப்பிட்டு வந்திருறேன்.”

"ஹையோ.. அண்ணா! உன்னோட ஆஃபீஸ் மாதிரி தொலைவில் இருக்கிற மாதிரி பிட்டு போடுற. வீட்டுல இருந்து அரை கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. இதுக்கு, விட ஒரு ஆள், கூப்பிட ஒரு ஆளா? அதெல்லாம் நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்ணா. எப்படியும் அப்பா பக்கத்துலதான இருப்பாங்க. அப்புறம் என்ன? என்னோட பொட்டிக்லயும் பெண்கள் தான் இருக்காங்க. நீ கிளம்புண்ணா. தினமும் உன்னோட இதே தொல்லையா போச்சி” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

"நான் தொல்லை பண்றேனா? அப்பா பாருங்கப்பா இவளை” என்று தந்தையிடம் பஞ்சாயத்துக்குச் செல்ல...

"ஆமா. எப்பப்பாரு சின்னப்பையன் மாதிரி, அப்பாகிட்ட பஞ்சாயத்துக்குப் போ. நான்தான் சொல்லிட்டேன்ல நீ கிளம்புண்ணா. டைம் வேஸ்ட் பண்ணாத. நான் அப்பா கிளம்பின உடனே... இல்ல வேண்டாம். கார் பின்னாடியே போயிருறேன் ஓகே.”

சரி என தலையாட்டியவன், "மறக்காம ஹெல்மெட் போட்டுக்கடா” என்றான் அக்கறையாக.

“சரிங்க ப்ரதர். ஹெல்மெட் போட்டுக்கறேன். துப்பட்டா பறக்காத அளவு நல்லா பின் பண்ணி போட்டுக்கறேன். ஸ்கூட்டியை இருபது கிலோமீட்டர் ஸ்பீடுக்கு மேல ஓட்ட மாட்டேன். நடு ரோட்டுல போகாம ஓரமா போறேன். இப்ப சம்மதமா கிளம்புண்ணா. அப்பா சொல்லுங்கப்பா அண்ணன் கிட்ட” என்றாள்.

“டேய்! நீ கிளம்பு. நான் பாப்பாவைப் பார்த்துக்கறேன்” என்று அப்பா சொன்னதும்தான் முழுமனதோடு கிளம்பினான். “நீயும் போயி கிளம்புமா” என்று மகளையும் அனுப்ப,

“சரிப்பா. டென் மினிட்ஸ்ல வந்திருறேன்” என்று சென்றாள்.

நேரத்தில் அலுவலகத்தில் நுழைந்த சரணுக்கு வணக்கம் வைத்தவர்களுக்குப் பதில் வணக்கம் வைத்தபடி தன் கேபினில் வந்தமர்ந்தான்.

அவன் வந்ததும், "குட் மார்னிங் சரண்" என்று உள்ளே வந்தாள் அவனின் பி ஏ வசந்தி.

"குட் மார்னிங் வசந்திக்கா."

"இந்த அக்காவை விட மாட்டியாடா. ஐடி கம்பெனியில வேலை பார்க்கிறவன் மாதிரியா இருக்கிற?"

வசந்தியை நேர்ப்பார்வை பார்த்து, “நீங்க என்னோட மூத்தவங்கதான?” என்றான்.

“ஆமா. அதுவும் டூ இயர்ஸ்.”

“அதான் அக்கா சொல்றேன். பழகிருச்சிக்கா மாத்த முடியல. குழந்தையிலிருந்து வந்த பழக்கம். அம்மா சொல்லிக் குடுத்து வளர்த்துட்டாங்க. விட முடியலை” என்றான்.

“சரி... சரி. நீ என்னை என்ன சொல்லி வேணும்னா கூப்பிட்டுக்கோ. மத்தவங்களை அப்படிக் கூப்பிடாமப் பெயர் சொல்லி வாங்க போங்க பேசு. எல்லாரும் நீ அந்தப்பக்கம் போனதும் பின்னாடி உன்னைக் கமண்ட் பண்றது எனக்குப் பிடிக்கலை சரண் புரிஞ்சிக்க."

சிரித்தபடியே, "ஐ வில் ட்ரை அக்கா. இப்ப வேலையைப் பார்க்கலாமே” என்றதும், "ம்... பார்க்கலாமே" என்று அன்றைய வேலைக்கான குறிப்புகள் கொடுத்துக் கொண்டிருந்தவனுக்குத் தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்றவும், வெளியே எட்டிப் பார்த்தான். கண்களில் யாரும் தென்படாததால் அதை விட்டுவிட்டு வேலையைத் தொடர்ந்தான்.

சரண் திரும்புவது தெரிந்ததும் மறைந்திருந்து, அவன் வேலையில் மூழ்கவும் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

"சக்தி! மேனேஜர் ரூம்கிட்ட நிற்கிறதை விட மாட்டியா? மனுசன் பார்த்தா கடுப்பாகிடுவான்.”

"ஹேய்! என்னோட ஆளைக் கொஞ்சம் சைட்டடிச்சிட்டு வர்றேன் ஷோபி. நீ போய் வேலையைப் பாரு” என்று தோழியை அடக்கினாள்.

“மண்ணாங்கட்டி. வாடி இங்க” என்று கைபிடித்து அவர்களின் இருப்பிடத்திற்கு இழுத்துச் சென்றாள் ஷோபிகா. "சக்தி நானும் ஆரம்பத்திலிருந்தே சொல்றேன்.. வீணா ஆசையை வளர்த்துட்டு பின்னாளில் கஷ்டப்படாத. இது உன்னோட ஃப்யூச்சரைப் பாதிக்கக்கூடாது. ஒரு ப்ரண்டா என்னோட யோசனையை சொல்றேன். அவருக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லடி புரிஞ்சிக்கோ. பொண்ணுங்களைப் பெயர் சொல்லிக் கூட கூப்பிடுறதில்லை. மூத்தவங்க இளையவங்கன்னு இல்லாம சிஸ்டர்னு ஒரே போடா போடுறான் மனுசன். யாரும் நெருங்க முடியாத கேரக்டர்டி. நானும் வேலையில் சேர்ந்த இந்த ஒன்றரை வருஷமா பார்க்கிறேன்.. ஒரு பெண்ணைக் கூட ப்ரண்ட்னு அறிமுகப் படுத்தியது இல்லை. எந்தப் பொண்ணு கிட்டேயும் வழிஞ்சதில்லை. அப்படிப்பட்டவர்கிட்ட போய்...”

‘அந்த கேரக்டர்தான்டி என்னை அவன்கிட்ட இழுக்குது’ என நினைத்தாள் சக்தி.

அதைக் கவனிக்காத அவளின் நட்பு, “போயி பேசினேன்னு வச்சிக்கோ, வாங்க சிஸ்டர்னு ஒரு அன்பான அழைப்பு வரும் போ. போயி நேரடியா பேசுறியா?” என்றாள்.

‘அது தெரிஞ்சதாலதானே அவன் முன்னாடி போறதே இல்லை.’ மனதினில் நினைத்தவள் அதை மறைத்து, "எனக்கென்னவோ எனக்கு அவங்க.. அவங்களுக்கு நான்தான்னு தோணுதுடி" என்றாள் சக்தி.

“போடி. நான் சொன்னதை நீ என்னைக்கு கேட்டிருக்க. இன்னைக்கு கேட்க.” திட்டத் தொடங்கிய தோழியிடம், "ஹேய் ஷோபி! அவரைக் கரக்ட் பண்றதுக்கு சூப்பரா ஒரு ஐடியா சொல்லுடி” என்றாள் மொத்தப் பற்களையும் காட்டி.

தலையில் அடித்தவாறு “உன்னைத் திருத்தவே முடியாதுடி. எக்கேடு கெட்டுப் போ” என்று கிளம்ப யத்தனித்தாள்.

“அப்படி உன்னைப் போக விட்டுருவேனா. சரி இப்ப வேலையைப் பார்க்கலாம். அப்புறமா எனக்கு கரக்ட் பண்ண ஐடியா கொடு போதும். இப்ப ஓடு... ஓடு வேலையைப் பாரு” என அவளை அனுப்பி தன் சீட்டில் அமர்ந்தவளுக்குத் தோழி சொல்வதில் முழுக்க முழுக்க உண்மை இருப்பது தெரியும். அதையும் மீறி சரணின் நினைவுகள் சக்தியைப் படுத்தியது. எங்கே தன்னையும் அவனின் உடன் பிறப்புகள் லிஸ்டில் சேர்த்து விடுவானோ என்று பயந்தே அவனைச் சந்திக்கும், அவனிடம் பேசும் சூழ்நிலையை தவிர்த்துக் கொண்டு வருகிறாள். வேலையில் சேர்ந்த புதிதில் அவனைப் பார்த்ததுமே சக்தியின் மனதில் ஏற்பட்ட சலனம். அதற்குக் ‘காதல்’ என்ற உருவம் கொடுத்து கடந்த ஆறு மாதமாக அடைகாத்து வருகிறாள்.

சக்தி வீட்டிற்கு ஒரே பெண். கொஞ்சம் செல்லம் இருந்தாலும் வீட்டில் கண்டிப்பும் உண்டு. வேலைக்கு வரவேண்டிய அவசியமில்லை என்றாலும், படித்த படிப்பிற்காக தன் திறமையை வீணாக்கக் கூடாது என்று வேலைக்கு வருகிறாள். நல்ல மனமும், குணமும் உள்ள பெண்தான்.

ஆனால், இந்தக் காதல் கைகூடுமா? இல்லை சொல்லாத காதல் வரிசையில் சேருமா?

தன்னை இப்படி ஒரு பெண் உயிராக நேசிக்கிறாள் என்ற நிஜம் கூட அறியாமல் தன் வேலையைப் பார்க்கும் சரண். அவளின் முகம் கூட நினைவிலிருக்குமோ என்னவோ? அவளின் நேசம் அவளுக்கும், அவள் தோழிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். ரகசியம் ரகசியமாகவே போய்விடுமா? சரண், சக்தியிடம் சரணாகதி ஆவானா?

வேலை நேரம் முடிந்து அனைவரும் கிளம்பிய பின் ஆற அமர வெளியே வந்த சரண், நேரே தன் தங்கையைத் தேடி பொட்டிக்கிற்குச் சென்றான்.

அவளிடம் வேலை பார்க்கும் மூன்று பெண்களுக்கும், எம்பிராய்டரி வேலைப்பாடுகளில் புதிதாக சின்னச் சின்ன மாற்றங்களையும், அதற்கேற்ற நூல்களையும் வரைந்து காண்பித்துக் கொண்டிருந்தாள். தங்கையின் வேலைத் திறனை மெச்சுதலாகப் பார்த்துக் கொண்டிருந்தான் பாசக்கார அண்ணன்.

தற்செயலாய் திரும்பிய நியா அண்ணன் நின்றிருப்பதைக் கவனித்ததும் முகத்தில் மகிழ்ச்சி பிரதிபலிக்க, “வாண்ணா டைம் ஆகிருச்சா?” என மணி பார்த்தவள், “ஓ.... ஏழு ஆகிருச்சா. நான் கவனிக்கலை. ஒரு பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணு அண்ணா. நான் இந்தப் பொண்ணுங்களை அனுப்பிட்டு வர்றேன்” என்று அண்ணனின் முகம் பார்த்துச் சென்றாள். பெண்களை காலையில் சீக்கிரம் வரச் சொல்லி அனுப்பிவிட்டு, “போகலாம் அண்ணா” என்று வந்தாள்.

“சரி வா. அப்பா இருக்காங்களா பார்க்கலாம். இருந்தா அப்படியே கூப்பிட்டுக் கிளம்பலாம்... வீட்டுக்கு போனதும் சமைக்கணும்ல?”

"ம். ஆமா அண்ணா."

"சமையலுக்கு ஆள் வைக்கலாம்னா கேட்கமாட்டேன்னுறியேடா..."

“போண்ணா அதான் வீட்டு வேலைக்கு, தோட்டத்துக்குன்னு ஆள் இருக்காங்க தான. நான் சமையல் மட்டும் பண்ணப்போறேன். இது ஒண்ணும் கஷ்டம் கிடையாது. நீதான் அப்பப்ப ஹெல்ப்ன்ற பேர்ல ஒன்னு செய்யுறியே. அப்புறம் இன்னொரு ஆள் எதுக்கு? நீ போதும்ணா. நாம சமையல்ல ஜமாய்க்கலாம்.” பேசிக்கொண்டே அப்பாவின் அலுவலகம் வந்து, “என்னப்பா வேலை முடிஞ்சிதா கிளம்பலாமா?” என்று அறைக்குள் சென்றார்கள்.

“இல்லடா. நீங்க கிளம்புங்க. ஐந்து மணிக்கே வர்றேன்னு சொன்ன ஒரு பார்ட்டி வரவே இல்லை. சரி கிளம்பலாம்னு பார்த்தா இப்ப ஐந்து நிமிஷம் முன்னாடி போன் பண்ணி, சார் இப்ப வந்துட்டு இருக்கோம்னு சொல்லிட்டாங்க. நான் பேசி அனுப்பிட்டு வர்றேன். நீங்க கிளம்புங்க” என்று அவர்களை வழியனுப்பி வந்து அமர்ந்தவர், அவரின் அறையிலுள்ள ஒரு டிராவைத் திறந்து புகைப்படம் ஒன்றை எடுத்துப் பார்த்தவர் மனதில், அலுப்பையும் மீறி ஒரு நிம்மதி பரவியது.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
628
"உன்னாலதான் தனம். உனக்காகத்தான் இன்னும் வாழுறேன். நம்ம பிள்ளைங்க எதிர்காலம் நல்லபடியா அமைந்ததும் வருவேன், உன்னைத் தேடி தேடியே! நம்ம பிள்ளைங்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணையை அனுப்பி வைமா. பாப்பாக்கு அவள் குறையை ஏத்துக்கிட்டு, தங்கமாத் தாங்குற பையனா பார்த்து முடிக்கணும். எல்லாத்துக்கும் நீ துணை இருக்கணும் தனம்” என்றவருக்கு கண்கலங்கியது. “இப்படி என்னைத் தனியா தவிக்க விட்டுட்டியேம்மா. உனக்குக் கொடுத்த வாக்கை இம்மி பிசகாமல் செஞ்சிட்டிருக்கேன். எவ்வளவு சோர்விலும், உன்னுடைய இந்த சிரிப்பைப் பார்த்தா போதும். என் மனம் லேசாகி, எல்லாம் மறந்து போகுது. நீ என்கிட்ட கேட்டியேமா? உன்னோட கடைசி நாள்ல தமிழ்ல சொல்லலாமேன்னு. நான் உன்னைக் காதலிக்கிறேன். அன்றும், இன்றும், என்றும், என்றென்றும், உன் நினைவுகளுடன். தினமும் ஆயிரம் முறை சொல்றேன் என் மனதிற்குள். ஆனா, கேட்க நீ இல்லையேடா.”

புகைப்படத்தை நெஞ்சில் வைத்து கலங்கிய கண்களைத் துடைத்து, எடுத்த இடத்தில் புகைப்படத்தை வைத்து, வரப் போகும் ஆள்களுக்காகக் காத்திருந்தார் வெற்றி.

காரையும், ஸ்கூட்டியையும் ஓரம் கட்டி விட்டு இருவரும் வீட்டிற்குள் வரும் முன்னே, அண்ணனின் முகம் திருப்பி “என்ன சமையல் பண்ணலாம் அண்ணா?” என்றாள்.

“ஏன்டா? வெளியிலேயே நின்னு கேட்கணுமா? முதல்ல வீட்டுக்குள்ள போயி டிஸ்கஸ் பண்ணலாம் வா.”

“இதுல டிஸ்கஸ் பண்ண என்ன இருக்குன்ற? கையைக் காலைக் கழுவிட்டு கிச்சனுக்குள் போயி உருட்டினா எதாவது ஐடியா கிடைக்கும்.”

“ஓகே... ஓகே. செய்யப் போற உப்புமாக்கு என்ன பெரிய அலட்டல்.”

“என்னாது உப்புமாவா? அதுவும் நைட்டுக்கா? ஏன்ணா உன் டேஸ்ட் இப்படிப் போகுது. இரு நானே எதாவது புதுசா டிஷ் கண்டுபிடிச்சி செஞ்சி தர்றேன் நீ சாப்பிட்டு என்னோட புகழைப் பாடு” என்றாள்.

“ஷப்பா! ஆளை விட்டுட்டாடா சாமி” என்று வேகமாக அறைக்குள் செல்லப் போனவனைக் கை தட்டி அழைத்து, அவன் திரும்பியதும், "ஹலோ ப்ரதர்! எஸ்கேப்பெல்லாம் ஆக முடியாது. போயி கை, கால் கழுவிட்டு கிச்சனுக்கு வர்ற வழியைப் பாருங்க."

"இன்னைக்கு சமையலுக்கு லீவ்னு நினைச்சேன்டா. சரி ஒரு பைவ் மினிட்ஸ் ஓகே.”

இருவரும் இரவு சமையலை முடித்து சாப்பிடும் மேஜைக்கு வர, வெற்றியும் வர சரியாக இருந்தது.

"அண்ணா!” நியா கூப்பிட்டதற்கு அவன் திரும்பாததால் மனதில் சுருக்கென்று வலித்தது அவளுக்கு. அது தந்த கோபத்தில் கரண்டியை வைத்து ஒரு அடி போட்டு, “டேய் அண்ணா! கூப்பிடுறேன்ல” என்றாள் கோவத்துடன்.

"ஏய்! ஏன் அடிக்கிற? ஸ்... ஆ... அப்பாவைப் பார்த்ததால உன்னைக் கவனிக்கல. அதுக்காக அடிக்கிறதா.? சரி ஏன் கூப்பிட்ட?"

“போ நீ என்கிட்ட கத்துனல்ல நான் சொல்ல மாட்டேன்.”

“ஓ... சாரிடா செல்லம். இப்ப சொல்லு நான் கேட்கிறேன்.”

“அதெல்லாம் சொல்ல முடியாது போ” என்று முகம் தூக்கினாள்.

“அதான் சாரி கேட்டுட்டேனே அப்படியே கொஞ்சம் சிரிச்சிக்கிட்டு பதில் சொல்லு?”

“ம்...ஓகே. அப்பா கரெக்டா நாம வேலையெல்லாம் முடிஞ்ச பிறகு என்ட்ரியாகுறாங்க பாரு. சீக்கிரம் வந்தா சமையல் வேலைக்கு இழுத்திருவோம் என்ற பயம்."

அவள் சொன்னதைக் கவனிக்காமல், சின்னதாகக் குளியல் போட்டு வந்த அப்பாவிடம் போட்டுக் கொடுத்தான் சரண்.

"என்னைப் பார்த்தா அப்படி சொன்ன பாப்பா? அப்பா அப்படிப் பண்ணுவேனா? நிஜமாகவே வேலை இருந்தது” என்று வருத்தமான பாவனையுடன் முகத்தை வைத்துச் சொன்னார்.

“அப்பா! என்கிட்டயேவா. இந்த நடிப்பெல்லாம் அண்ணன் கிட்ட வச்சிக்கோங்க. நாங்க அசர மாட்டோம். நிஜமாவே வருத்தப்படுற மாதிரி என்ன லுக்கு பாருண்ணா."

“போடா பாப்பா. எப்படி பிட்டு போட்டாலும் கண்டு பிடிச்சிருற. அப்படியே என்னை மாதிரி” என்றார் பெருமையாக.

“ஹா... ஹா.. அதனால தான்பா கண்டுபிடிச்சிட்டேன். பாம்பின் கால் பாம்பறியும் மாதிரி." மூவரும் உண்டு முடித்ததும், “அப்பா அண்ணனுக்கு பிறந்தநாள் வருது. அதுக்கு என்னென்ன ப்ரோக்ராம் போடலாம் சொல்லுங்க?” என்றாள்.

“காலையிலேயே நம்ம பக்கத்துல இருக்கிற வடபழனி முருகன் தரிசனம். அப்புறம் நம்ம வேலையைப் பொறுத்து பிக்ஸ் பண்ணிக்கலாம்டா.”

“அப்பா! தாத்தா, பாட்டி, அத்தைங்களையும் பார்த்துட்டு வரலாம்பா” என்ற நியாவின் ஆசைக்குச் சம்மதம் சொன்னார்கள்.

“காலையில வேலை இருக்கு. அதனால, சாயங்காலமா கிளம்பிப் போகலாம்பா.”

“சரிடா தம்பி. பாப்பா நீ என்ன சொல்ற?”

“அப்பா வேலை சீக்கிரம் முடிஞ்சதும் கிளம்பலாம்பா.”

“இன்னைக்கு நைட் எதாவது ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தான் சாப்பாடு” என்ற சரணின் கூற்றுக்கு, “அதெல்லாம் வேண்டாம். நாம வீட்டுல செஞ்சிக்கலாம். அண்ணா இந்த பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம்..."

"அது உன்னை யாராவது பொண்ணு பார்க்க வருவாங்கள்ல அப்ப குடுக்கலாம!" என்று சரண் நக்கலாக பதில் சொல்ல...

பெண் பார்ப்பது என்றதும் கோபமடைந்தவள், பக்கத்திலிருந்த பாத்திரத்தை தட்டி விட்டு, "வேணும்னா உன்னை மாப்பிள்ளை பார்க்க வரும் போது செஞ்சிக்கொடு. எனக்கு கல்யாணம் அது இதுன்னு பேசினா என்ன பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது" என்று கை கழுவி விட்டு தன் அறைக்குச் சென்றாள்.

"பாப்பா! ஏய்! நில்லுமா" என்று மகளைக் கூப்பிட்டுக் கொண்டே, “என்னடா தம்பி இப்படிப் பண்ணிட்ட? பேசும் போது வார்த்தையை பார்த்து உபயோகிக்கிறது இல்லையா?”

“சாரிப்பா. ஏதோ ஒரு ப்ளோல வந்திருச்சி. அதுக்காக இப்படிக் கோவப்படலாமா. இவளுக்குக் கல்யாணம் பண்ணாம இருக்க முடியுமா? இதெல்லாம் பெரிய குறையில்லன்னு சொன்னா கேட்க மாட்டேன்றா. எத்தனை நாள்பா அவளை நினைச்சி வருத்தப்படுறது?" என்றவனின் கண்கள் கலங்கியது தங்கையின் நிலையை நினைத்து.

வெற்றியோ, மகனின் கண்ணீரில் தானும் துடித்து, “என்னடா தம்பி. ஆம்பளப் புள்ள நீயே இப்படிக் கண் கலங்கலாமா? அவள் அப்படி இருக்கிறான்னு நாமும் அப்படியே விட்டுறப் போறோமா என்ன? உங்க அம்மா அவளுக்கு நல்ல வழி காட்டுவா. கண்டிப்பா மனசு மாறி என் பொண்ணும் கல்யாணம், குழந்தைன்னு சந்தோஷமா இருப்பா" என்றவரின் குரல் கலங்க மனம் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டது.

“சரி வா அவளை என்னென்னு பார்ப்போம்” என்று மகளின் அறைக்கு வெளியே நின்று, “பாப்பா! கதவைத் திறமா. இனி அண்ணன் இது மாதிரி கேட்க மாட்டான்” என்று கதவைத் தட்டினார்.

“குட்டிமா! ப்ளீஸ் வாம்மா. அண்ணனை மன்னிச்சிரு. நீ அழுதா என்னால தாங்க முடியாது. ப்ளீஸ் வாம்மா” என்றான்.

அவர்களை அரை மணி நேரம் தவிக்கவிட்டுக் கதறவிட்டு வெளியே வந்தவள், அண்ணனிடம் திரும்பி, “உன்னோட மன்னிப்புக்கு மன்னிப்பு கிடைச்சிருச்சி! போ. போயி நல்லா தூங்கு” என்று அண்ணனைத் தட்டிக் கொடுத்தவள், “என்னப்பா நீங்க? நானே எப்படா சாப்பிடுறதில் இருந்து தப்பிக்கிறதுன்னு, கோவத்தைக் காட்டி எழுந்து வந்தா, அப்படியே பயந்திடுறதா? போய்படுத்துத் தூங்குங்கப்பா. காலையில ஆஃபீஸ் போகணும்ல. குட் நைட்பா. குட் நைட்ணா" என்று சிரித்த முகமாகச் சொன்னாள்.

அவளிடம் பதிலுக்கு இரவு வணக்கம் சொல்லி வெளியே வந்தவர்களுக்குத் தெரியும், அவள் நடிக்கிறாள் என்று. மனதைத் தேற்றிக் கொண்டு தங்களின் அறைக்குச் சென்றார்கள்.

கதவைத் தாளிட்டு கட்டிலில் விழுந்த நியாவிற்கோ, மறந்தும் தூக்கம் வரவில்லை. துக்கம் இருக்கும் இடத்தில் தூக்கத்திற்கு என்ன வேலை? தன் நிலையை நினைத்து வருத்தப்பட்டவளுக்குத் தெரியும்தான், இது பெரிய குறையில்லை என்று. ஆனால், துணையாகக் கரம் பிடிக்க வருபவனுக்குத் தெரியுமா? சின்னதாக முகம் சுழித்தாலே, என்னவோ, ஏதோவென்றுப் பதறும் அப்பாவும் அண்ணாவும் கண்முன் வந்து போனது.

இதே அன்பு தன்னைக் கட்டிக்கப் போறவனிடம் கிடைக்குமா? அவன் எதாவது தெரியாமல் சொன்னால் கூட, தன்னால் தாங்க முடியாது. இதுதான் நிஜம். மற்றபடி திருமணத்தின் மேல் கோவமோ, வெறுப்போ கிடையாது.

அப்பாவும், அண்ணனும் தன்னைப் பற்றிய கவலையில் மூழ்கக்கூடாது என்றே, எப்பொழுதும் தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைப்பாள். தன் குறை பெரிதல்ல. இதைவிட குறையுடைய நிறைய பேரைச் சந்தித்திருக்கிறாள் தான். அதனாலேயே, அவளுக்கு தாழ்வு மனப்பான்மை கிடையாது. அப்பா, அண்ணன் தாண்டி மூன்றாவதாக வருபவன், தன்னைப் புரிந்து நடக்க வேண்டுமே என்ற கவலைதான் அவளை திருமணத்திற்குச் சம்மதம் தர இடம் கொடுக்கவில்லை.
 
Joined
Mar 17, 2025
Messages
26
ஓம் சரவண பவ

சொர்ணா சந்தனகுமார்

உன்னைத் தேடி தேடியே

1


சென்னை வடபழனி :

“அண்ணா... அண்ணா எழுந்திரு. என்று தட்டி எழுப்பிய தங்கையின் குரலில் எழுந்து அமர்ந்தவனிடம், காப்பியை நீட்டியபடி, "டைம் ஆகுது அண்ணா. எவ்வளவு நேரம் தூங்குவீங்க? ஒரு கம்பெனி மேனேஜரே இப்படித் தூங்கினா கம்பெனி என்ன ஆகிறது? ம்... கெட்டப் கெட்டப். அச்சோ! பார்த்துக்கிட்டே இருக்காதண்ணா. தினமும் உனக்கு இதே வேலையாகிப் போச்சி. முதல்ல சீக்கிரம் எழுந்து போயி ப்ரஸ் பண்ணிட்டு வாண்ணா. காஃபி ஆறிரப்போகுது. அப்புறம் நீ சூடா காஃபி குடிக்க முடியாது? கூலா ஜூஸ்தான் குடிக்க முடியும்.”

திரும்பவும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் முன் அண்ணனின் தோள் தொட்டு, “என்ன?” என்று சைகையால் கேட்டாள்.

நிதர்சனம் உறைக்க, கண்களில் நீர் துளிர்க்கவும், எதுவும் பேசாமல் சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து குளியலறை சென்றான்.

சென்ற அண்ணனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் மனதின் எண்ணங்களை அறிந்து சின்னப் பெருமூச்சுடன் தோளைக் குலுக்கியபடி அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.

குளியலறை சென்றவன் தங்கையின் நிலையை எண்ணி மனம் வருந்தினாலும் எப்பொழுதும் போல் அதை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு வெளியே வந்தவன் அதைத் தன் தாயிடமும் பகிர்ந்தான். தங்கை அறையை விட்டு வெளியே சென்றிருந்ததால் காப்பியைக் கையிலெடுத்து ஒரு மிடறு குடித்தவன், “என் காப்பியை விட குட்டிமா நல்லாவே போடுறா” என்று பின் குளியல் மற்றும் இதர வேலைகளை முடித்து கீழே வந்தவன் கண்ணில் தனக்கு முன்னாடியே அலுவலகம் செல்லக் கிளம்பியிருந்த அப்பா பட்டார்.

"குட் மார்னிங்பா."

"குட் மார்னிங்டா தம்பி. என்ன கிளம்பியாச்சா? உன் தங்கச்சி எதோ கோவமா இருக்கிற மாதிரித் தெரியுது. எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லு. இல்லைன்னா எதாவது பறந்து வந்திடப் போகுது” என்றார் கேலியாகவே.

“திடீர்னு ஏன்பா. இருங்க பார்த்திட்டு வர்றேன்” என்று சமையலறையில் மதிய உணவு எடுத்து வைத்துக் கொண்டிருந்த தங்கையின் அருகில் வந்து "குட் மார்னிங் செல்லம்" என்றான்.

திரும்பி அவனை முறைத்தவள், “இது நான் காஃபி கொடுக்க வந்தப்பவே சொல்லணும். அப்பல்லாம் என் வாயையே பார்த்துட்டு இருந்து, இப்ப வந்து என்ன பேச்சி வேண்டிக் கிடக்கு. போண்ணா நீ ரொம்பவும் இமேஜின் பண்ணுற. அப்படிப் பண்ணாதன்னு சொன்னா கேட்கிறியா? நீ ரொம்ப மோசம்ணா. நடக்கிறது தான் நடக்கும். நம்மளோட கற்பனைக்காக எல்லாம் எதுவும் இயற்கைக்கு மாறா மாறிடப்போறது இல்ல" என்று சின்ன வருத்தத்துடன் தன் இயலாமையும் சேர பொரிந்து தள்ளினாள்.

“சரிடா சரி. இனி உன் முன்னாடி அப்படிப் பண்ண மாட்டேன். ஓகேவா? என்று சரணடைந்தான்.

“என் பின்னாடியும் பண்ணக் கூடாது ஓகே. நிதர்சனத்தை ஏத்துக்கோண்ணா. இதையெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தவன் நீ. நீயே அதை மறக்கலாமா?" என்றவள் குரலில் அவ்வளவு வருத்தம்.

“சரி சரி சாரி. இனி அப்படிப் பண்ணினா என்னடான்னு சட்டையைப் பிடித்து கேளு” என்று தங்கையிடம் மன்னிப்பு கேட்டு தகப்பனிடம் வந்து அமர்ந்தான்.

“அப்படி என்னடா பண்ணிட்ட அவளை? இந்த குதி... குதிக்கிறா?” என கேட்டார்.

“இப்பத்தான்ப்பா ஒரு பஞ்சாயத்து முடிச்சேன். திரும்பவுமா போதும் விடுங்க உங்க பையன் பொழைச்சிப் போகட்டும்.”

‘நான் இப்ப என்ன கேட்டுட்டேன்னு, இவன் இத்தனை சீன் போடுறான்’ என யோசனையில் இருந்தார்.

"அப்பா... அண்ணா" என்று நான்கைந்து முறை அழைத்து அலுத்துப் போனவள், அவர்களின் முன் வந்து, "நான் எத்தனை முறை கூப்பிடுறது? காது கேட்கலையா?" முகம் சிவக்க காளியாக மாறிக் கொண்டிருந்தவளை,

"ஹையோ! இல்லமா. நிஜமா கவனிக்கலைமா. நாங்க சுவாரஸ்யமா பேசிட்டு இருந்தோமா, அதனால நீ கூப்பிட்டதைக் கவனிக்கலைடா." காதைப் பிடித்துக் கொண்டு அப்பாவும், அண்ணனும் சரண்டர் ஆகினர்.

அதைப் பார்த்த பின், “அப்படி வாங்க வழிக்கு” என்று மலை இறங்கினாள் அவள்.

“சரி வாங்க. சாப்பிட்டு, சாப்பாடு எடுத்திட்டுக் கிளம்புங்க. கமான் க்விக்.” இருவரையும் விரட்டிக் கொண்டிருந்தாள் அவர்களின் செல்லப் பெண் நியா!

கடவுள் முருகன் மேலுள்ள பற்றுதலால், கோவில் அருகே வீடு வேண்டும் என்று, வடபழனி முருகன் கோவிலிலிருந்து சற்று தள்ளி இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டார் வெற்றி.

நடுத்தர வர்க்கத்தினருக்கும் மேலான குடும்பம். இவர்கள் வந்த சமயம் இடங்களின் விலையேற்றம் அதிகம் இல்லாததால், பதினைந்து சென்ட்டில் நிலம் வாங்கி இருந்தார். அதில் ஐந்து சென்ட்டில் வீடு கட்டிக் கொண்டு, மீதி இடங்களில் பழ வகை மரங்கள், காய்கறி, செடிகள், ரோஜாச் செடிகள் என வீட்டிற்கு நிறைவாக அழகாக இருக்கும் செடிகள் என கண்ணிற்கு குளிர்ச்சியாக பச்சை வர்ண ஆடை அணிந்தது போலிருக்கும் அவர்களின் வீடு. காலையில் சென்னை நகருக்குள் குயில்களின் ஓசை கேட்குமா? இதோ அழகான வடிவமைப்புடன் பறவைகளின் கீதங்களும் கேட்கும் வீடு, சென்னை நகருக்குள் இருப்பது இப்போதைய காலத்தில் அதிசயமே!

அப்பா வெற்றி! ரியல் எஸ்டேட் பிசினஸ் மேன். சென்னை வந்த புதிதில் சற்று பின் தங்கியிருந்த நில விற்பனை, நாளுக்கு நாள் சூடுபிடித்தது. மொத்தமாக இரண்டு மூன்று ஏக்கர் என விரைவில் டெவலப் ஆகும் இடமாகப் பார்த்து நிலம் வாங்குவதில் கெட்டிக்காரர். வாங்கிய இடத்தை அநியாய விலைக்குத் தள்ளாமல், நடுத்தர வர்க்கத்தினரும் வாங்கும்படி ப்ளாட் போட்டு லாபம் பார்ப்பதில் வல்லவர். மனைவி இறந்த பின் தன் பிள்ளைகளையே ஆதாரமாகக் கொண்டு வாழும் மனிதர். மனைவியின் நினைவில் தொழில் முதல் வீடு வரை, "தனலக்ஷ்மி ரியல் எஸ்டேட்" "தனலக்ஷ்மி இல்லம்" என புதிதாக ஆரம்பிக்கும் அனைத்தும் மனைவியின் பெயரில் தான் இருக்கும்.

நியா! அவரின் செல்ல மகள். இருபத்து நான்கு வயது அழகுப் பெண். சாயலில் அம்மாவின் பாதியாக இருப்பதால் அப்பாவிற்கும், அண்ணனுக்கும் செல்லம். கலாட்டாவிற்குப் பெயர் நியா. வீட்டில் மட்டும் தான். வெளியே யாரிடமும் பேச மாட்டாள். ஆண்களின் கண் பார்வையைக் கண்டு கொள்ளாமல், எப்பொழுதும் தெளிவான மனதுடன் இருப்பவள்.

பேஷன் டிசைனரிங் படித்து சொந்தமாக, "தனலக்ஷ்மி பொட்டிக்" வைத்திருக்கிறாள். தங்களின் சொந்த இடத்தில் அப்பாவின் அலுவலகம் அருகே நியாவுடைய பொட்டிக்கும் சேர்ந்திருக்கும். ஆடைகள் வடிவமைத்து, அதற்கேற்ற நகைகள் செய்து தருவது அவளின் தொழில். ஆர்டர்களின் பெயரில் வெளியிலும் செய்து கொடுப்பாள். கொஞ்சம் நடுத்தரமான ஏசி ஷாப் இவளுக்கு கீழ் மூன்று பெண்களை வைத்து பொட்டிக் நடத்துகிறாள்.

மகன் சரண்! இன்னும் நான்கு நாட்களில் இருபத்து ஒன்பதாவது பிறந்தநாள் காணப் போகும் இளைஞன். பிஇ முடித்து தனியார் ஐடி கம்பெனியில் மேனேஜர் பதவியில் இருப்பவன். யாரையும் மனம் நோக பேச மாட்டான். அவனின் பார்வையில், பேச்சில், செயலில் ஒரு நேர்மை இருக்கும். பெண்களை எல்லாம் அக்கா, தங்கை என்ற ரீதியில் பேசுவதோடு சரி. இதுவரை எந்தப் பெண்ணிடமும் அசடு வழிய நின்றதில்லை. அவனின் கம்பீரமும், அழகும், நடவடிக்கையும் பிடித்து பெண்களாக அவனிடம் சென்றாலும், திரும்பி வரும் பொழுது பாசமலர் தங்கையாகவே வருவார்கள். எதிலும் ஒரு எல்லையுடன் பழகுபவன். பார்த்தவுடன் ஒருத்தரை கணித்து விடுவான்.

அனைவரையும் கணிப்பவன் ஒருவரிடம் மட்டும் தன் கணிப்பு தப்பாக போவதை அறியவில்லை.

அப்பாவின் சாயல். அவனின் குணம் அப்படியே அவனின் அன்னையைப் போல் இருக்கும். தெளிவான பேச்சி, விவேகமான செயல்கள் என, அதனாலேயே சின்ன வயதிலேயே மேனேஜராகவும் இருக்கிறான். சரணுக்கு தாய்மேல் வெறித்தனமான அன்பு என்று சொல்லலாம். இந்த வயது வரையிலும் தாயிடம் சொல்லாமல் எதையும் செய்ய மாட்டான். மனதளவில் அவன் தாய் உயிருடன் இருக்கிறார். தாயுடன் உறவாடுவான்.. உரையாடுவான். அவன் மனதிலுள்ள பாரங்களை இறக்கி வைக்கும் இடம் அம்மா.


இதனால், அவன் அசாதாரமான நபரும் கிடையாது. எல்லோருக்கும் ஆறறிவு என்றால் இவனுக்✍️✍️✍️✍️

அருமையான ஆரம்பம்.

அன்பான அப்பா
பாசமான அண்ணன்.

சொர்க்கத்தில் இருந்து அம்மாவின் ஆசிர்வாதம்.

சூப்பர் சூப்பர்
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top