Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 519
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
ஆர்கலியோ எழுந்து போக,தன்னவளின் வலது கையை எட்டி பிடித்தான்.
கைப்பிடியின் இறுக்கத்தில் ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்று வாய் திறந்து சொல்ல ருத்ரன் தனது பிடியை விட்டதும் அங்கிருந்து சென்றாள்.
சிறிது நிமிடங்கள் சென்று கதவை திறந்து வெளியே வந்த ஆர்கலி,அங்கே கட்டிலின் மேல் சாய்ந்து கண்மூடி உட்கார்ந்திருப்பவனின் அருகில் சென்றவள்,அவனின் தலை முடியை கோதி விட,கண் விழித்தவன் எதிரில் இருப்பவளின் இடுப்பை இறுக்கி கட்டியவன் பிளீஸ் டி என்னை விட்டு போய்விடாதே.
எது பண்ணுவதாக இருந்தாலும் கூடயே இருந்து பண்ணுடி.உன் கோபம் போகும் வரை எவ்வளவு வேண்டுமானாலும் அடிச்சிக்கோயென்று சொல்ல,சரி காட்டு என்றாள். அடிப்பாவி ஒரு பேச்சுக்கு அடி என்று சொன்னால் இவள் உண்மையிலேயே கேட்கிறாளே என்று திரு திருவென்று முழித்தான்.
அவன் பார்வையை கண்டவள் மகனே மாட்டுன டா இன்னைக்கு என்று தனக்குள் சொல்லியவள் ம்ம் சீக்கிரம் காட்டு எனக்கு நேரமில்லை என்றாள்.
என்ன என அதிர்ந்தவாறு கேட்க,அதான் என் கோபம் போகும் வரை அடிச்சுக்க சொன்னியே காட்டு என்று சொல்ல ஏதேஏ என்றவன் என்னடி விளையாடுறியா என்க,ஆர்கலியோ ஒரு அடி பின்னாடி தள்ளி போனவள் பின்னர் சராமரியாக ருத்ரனின் கன்னத்தில் மாறி மாறி விட்டாள்.
அவளின் கை வலிக்கும் வரை அவன் கன்னத்தில் அறைந்து முடித்தவள் பின்னர் அவனையே கட்டிக் கொண்டு கதறி அழுதாள்.
என்ன கொடுமை இதெல்லாம்?
அடி வாங்கியது நான்.ஆனால் அழுவது இவள்.யாத்தேஏஏ என்னா அடி சாமியென தனக்குள் புலம்பினான்.
சிறிது நிமிடம் தன்னவள் அழட்டுமென்று விட்டவன்,பிறகு தன்னிடமிருந்து அவளை பிரித்தெடுத்து சற்றும் தாமதிக்காமல் அவள் இதழில் புதைந்தான்.
நேரம் செல்ல செல்ல ருத்ரனின் கண்ணில் இருந்த நீர் துளிகள் ஆர்கலியின் கன்னத்தை நனைத்தது.
ம்ம் என்று தலையசைத்து விலகியவளை கையணைவில் கொண்டு வந்தவன் தனது மடியில் உட்கார வைத்து இறுக்கி பிடித்தவனை அன்னார்ந்து பார்க்க,ஏய் இப்படிலாம் பார்க்காதடி.
பிறகு நடப்பதற்கு நான் பொறுப்பில்லை என்றான்.
ம்கும்...
நீ அதற்கு சரிபட்டு வரமாட்டாயென்றாள்.
எதேஏ..ஏய் என்னடி கொழுப்பா?
அய்யா பவர் அதோ தூங்குறாங்களே தெரியலையா என குழந்தைகளை காட்டி கேட்க,அடச்சை விவஸ்தை கெட்ட மனுஷனென்று தலையில் அடிக்க,ஏய் போதும்டி.
எவ்வளவு தான் அடிப்ப?
நல்லா பாருடி கன்னம் எப்படி பன் போல வீங்கியிருக்கே?கொஞ்சம் கேப் விட்டு அடிச்சிருக்கலாமென்றான்.
ஹேய் உன் கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணுமென்றான்.
யோவ் இதுவரை நீ சொன்னது போதாது?
இன்னும் வேற சொல்லணுமா என்க,எஸ் மை டியர் சில்லி பொண்டாட்டி.கண்டிப்பாக உன் கிட்ட சொல்லணுமென்றவன்,அதற்கு முன்பு எனக்கு ஒரு விஷயம் சொல்லு.
உண்மையிலேயே நீ என்ன மன்னிச்சிட்டியாடி என்க,நான் எங்கே அப்படி சொன்னேன் என்றாள்.
மனைவியின் வார்த்தையை கேட்டவன் பின்ன இத்தனை அடி அடிச்சியேடி அப்போ சமாதானம் தானே என்க,நெவர்.
மிஸ்டர் ருத்ர வீர சிம்ஹன் கொஞ்சம் நீங்க சொன்னதை ரீவைண்ட் பண்ணி பாருங்களென்க,ஏகப்பட்டது சொன்னோமே. இதில் எதை என்றான்.
நம் குழந்தைகளை பற்றி சொன்னீங்களே என்று ஆர்கலி ஹிண்ட் கொடுக்க,ருத்ரனும் யோசனையானான்.
குழந்தைகளைப் பற்றி என்ன சொன்னேன் என்று தனது நெற்றியில் வீரல்களால் தட்டி யோசிக்க,நீ அம்மாவா இருக்கணும் நான் அப்பாவா இருக்கணும் இதையா என்று கேட்க,எஸ் நான் குழந்தைகளுக்கு அம்மாவாக மட்டும் தான் இருப்பேன்
எந்த சூழலிலும் உங்களுக்கு பொண்டாட்டியாக நான் இருக்க மாட்டேன் என்றாள்.
சரி சரி என்றவன் பின்னர் சுதாரித்து எதேஏஏ என்க.என்னவாம் ஷாக்கோ?
என் கூட இருந்தால் மட்டும் போதும்.வேற எதுவும் வேண்டாம் என்று நீங்க தானே சொன்னீங்க என்றாள்.
படுபாவி எல்லாத்தையும் நல்லா ஞாபகம் வச்சுக்கிட்டு சொல்கிறாளே என்ற பல்லை கடித்தவன் சரி உன் விருப்பம். நீங்க குழந்தைகளுக்கு அம்மாவா இருங்க தாயே என்று கை எடுத்து கும்பிட்டவன் அங்கிருந்து கதவை திறந்து வெளியே சென்றான்.
கட்டில் மேல உட்கார்ந்து அடுத்தது என்ன என்று யோசனையாக இருந்தவளை என்ன ஆர்கலி உன் புருஷனை மன்னித்து விட்டாச்சு போல என்று மனசாட்சி கேட்டது.
உனக்கு யார் சொன்னா அந்த மனுஷனை நான் மன்னித்து விட்டேன் என்று திருப்பி கேட்க, நீதான் அவன் கூட இருக்கின்றதற்கு சம்மதம் சொல்லிட்டியே டி என மனசாட்சி சொன்னது.
ஹலோ அதிக பிரசங்கி ஒரு வருஷம் அக்ரிமெண்ட் படி ஒன்றாக இருக்கணும்.அதை நினைத்து நான் சொன்னேன்.மற்றபடி ஒண்ணுமே இல்லை.
ஹா ஹா என்று சிரித்த மனசாட்சி அவன் இவ்வளவு தூரம் கதறி அழுதானே உனக்கு கொஞ்சம் கூட அவனை பற்றி பாவம் என்று தோன்றவில்லையா என்க,ஹம் கண்டிப்பா பாவம் தான்.
எனக்கு அப்பா அம்மா இல்லாமல் ஆசிரமத்துல வளர்ந்தேன்.ஆனா அவன் உண்மையிலே தாய் தகப்பன் இருந்து அவங்க அன்பை அனுபவிக்க முடியாமல் எங்கேயோ ஒரு இடத்துல வளர்ந்தாலும் நல்லா படிச்சு இன்னைக்கு சமூகத்தில் ஒரு ஆளா இருக்கிறான்.உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம்.
வெரி குட் ஆர்கலி.உன் மனசு இது தாண்டி..அவ்வளவு சீக்கிரம் உனக்கு மற்றவர்களை தண்டிக்க தெரியாது.
தவறு செய்யாத மனிதன் இந்த உலகத்தில் யாருமே கிடையாது.அதில் ருத்ரனும் விதிவிலக்கல்ல.நல்லா யோசித்துப் பாரேன். உனக்கும் அவனுக்கும் கணவன் மனைவியாக தாம்பத்திய உறவு நடக்கும் போது அவன் சுய நினைவில் இருந்தானா?என்று கேட்க இல்லை என்று சொன்னாள்.
வெரி குட்..
அவனுக்கு நினைவு இல்லாத போது நடந்தது.ஆனால் உனக்கு நல்ல நினைவு இருந்துச்சு தானே என்க ஆமாம் என்றாள்.
ம்ம்...
அப்போ நீ ஒரு மனைவியாக என்ன பண்ணியிருக்கணும் அவனுக்கு போதை தெளியும் வரைக்கும் அவன் கூட இருந்திருக்கணுமா? இல்லை இருந்திருக்க கூடாதா?என்று கேட்டது.
நான் என்ன செய்ய?
அப்பொழுது தான் நான் வேலையில் போய் சேர்ந்தேன். திடீர்னு எனக்கு லீவு கேட்டா கொடுக்க மாட்டாங்க.
சரி நேர்ல போய் சூழ்நிலையை சொல்லி லீவ் கேட்டுட்டு வரலாம்னு தான் அவன் எழுவதற்கு முன்னரே அன்று கிளம்பிப் போனேன் என்றாள்.
சரி கிளம்பி போனாய் அதுக்கப்புறம் ருத்ரன் கிட்ட நீ ஏன் இது போல விஷயத்தை சொல்லவில்லை என்று கேட்க,அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று தான் நான் நினைத்திருந்தேன் என்க..அதான்,உனக்கு ஒரு நியாயம் இருப்பது போல அவனுக்கும் ஒரு நியாயம் உண்டு.
தவறு ரெண்டு பேர் கிட்டயுமே இருக்கு.
நீ நினைத்திருந்தால் அன்று ருத்ரனோடு வீட்டிலே இருந்திருப்பாய்.
அப்போ புருஷனை விட வேலை தான் உனக்கு பெரிதாக போய்விட்டதா? என்று கேட்க,சத்தியமாக அப்படி இல்லை.நானும் என்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான்.வேற எந்த தவறாக எண்ணமும் இல்லை என்றாள்.
ஓகே உன்னுடைய எண்ணத்தை நான் பாராட்டுகிறேன்.சரி அதற்கு பிறகு நீ என்ன பண்ணுன?
அவங்க அம்மா உன் உறவு கண்டுபிடித்து வந்து பேசும் போது நீ எவ்வளவு போல்டா பேசினாய்.என் புருஷனை யாருக்கும் விட்டு தர மாட்டேன் என்று பிறகு அந்த பேச்சு எங்கே சென்றது.
சரி விடு உன்னை காயப்படுத்தணும் என்ற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட கிடையாது.நீ நல்லா இருக்கணும் என்பது தான் இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு இருக்கிறது.கணவன் மனைவிக்கு ஈகோ ஒரு காலமும் வரக்கூடாது.சொல்றேன்னு என்னை தப்பா எடுத்துக்காதே.
இதே நீ ஒரு அப்பா அம்மா கிட்ட வளர்ந்த பொண்ணா இருந்திருந்தால் நீ செய்வது தவறு என்று உன்னை அவர்கள் அடித்து திருத்தியிருப்பார்கள்.
அதற்காக இந்த உலகத்தில் அப்பா அம்மா இல்லாதவர்கள் எல்லாருமே தவறானவர்கள் என்று நான் சொல்லவில்லை.நீ வளர்ந்த சூழலை உன்னுடைய குழந்தைகளுக்கு ஒருபோதும் உருவாக்காதே.
குழந்தைகள் எதிர்காலத்தை நல்லா யோசிச்சு பாரு.அவர்களுக்கு இன்னும் எவ்வளவோ வாழ்க்கை இருக்கு.
நல்ல படிப்பு நல்ல சாப்பாடு நல்ல வாழ்க்கை இதெல்லாம் உன்னால கொடுக்க முடியும் இல்லன்னு நான் சொல்லலை.
ஆனா அப்பா அம்மாவோட அன்பு கொடுக்க முடியாது.அப்பாவோட இடத்தை அப்பாவால தான் பூர்த்தி செய்ய முடியும்.அதே போல் அம்மாவாகிய உன்னுடைய இடத்தை உன்னால் மட்டும் தான் பூர்த்தி செய்ய முடியும்.
காலம் ஒன்னும் முடிந்து போகவில்லை.இன்னும் நீ வாழ வேண்டிய வாழ்க்கை எவ்வளவோ இருக்கின்றது.
உனக்கு உண்மையிலேயே ருத்ரனை பிடிக்கவில்லை என்றால் இவ்வளவு தூரம் உனக்காக நான் பேசிட்டு இருக்க மாட்டேன்.
ஆனால் ருத்ரனை நீ மனதார காதலிக்கிறடி.அவன் இல்லாத ஒரு வாழ்க்கையை நிச்சயமாக உன்னால் நினைத்துப் பார்க்க முடியாது.
ருத்ரனுக்கு மட்டும் பொள்ளாச்சியில் பார்த்தவுடனே காதல் வரவில்லையே.
அன்று நடந்த ஒரு விஷயம் ருத்ரனுக்கு தெரியாது.ஆனா உனக்கும் எனக்கு தெரியும்.
ருத்ரன் இடிச்சிட்டு போன பிறகு நீ திரும்பி வந்து அவனை அந்த வழியில் தேடினாயே மறந்து விட்டாயா?என்று மனசாட்சி கேட்டது.
பிறகு ராம் வீட்டில் ருத்ரனை பார்த்த போது உன் மனசுக்குள்ள ஒரு குதூகலம் வந்ததே அது இல்லை என்று உன்னால் சொல்ல முடியுமா ஆர்கலி??
அந்த நாள் வரைக்கும் எத்தனையோ பேரை கடந்து தான் ஸ்கூலுக்கு போனாய்.ஆனால் நீ யாரையுமே திரும்பி பார்த்தது கிடையாது.
அந்த ஏழு நாள் நலுங்கிலும் ருத்ரனை இமைக்க மறந்து நீ பார்த்தது எனக்கு தெரியும் ஆர்கலி.
மனசாட்சி உண்மையை உடைத்து பேச பேச ஆர்கலிக்கு அழுகை தாங்கவில்லை.
அந்த நேரம் உள்ளே வந்த ருத்ரன் அழுது கொண்டிருப்பவளை பார்த்து என்னடி ஆச்சு என்று வந்து அவள் தோளை தொட,லாம்ப் போஸ்ட் என்றவாறு அவனின் இடுப்பை கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.
ஆர்கலியோ எழுந்து போக,தன்னவளின் வலது கையை எட்டி பிடித்தான்.
கைப்பிடியின் இறுக்கத்தில் ரெஸ்ட் ரூம் போக வேண்டும் என்று வாய் திறந்து சொல்ல ருத்ரன் தனது பிடியை விட்டதும் அங்கிருந்து சென்றாள்.
சிறிது நிமிடங்கள் சென்று கதவை திறந்து வெளியே வந்த ஆர்கலி,அங்கே கட்டிலின் மேல் சாய்ந்து கண்மூடி உட்கார்ந்திருப்பவனின் அருகில் சென்றவள்,அவனின் தலை முடியை கோதி விட,கண் விழித்தவன் எதிரில் இருப்பவளின் இடுப்பை இறுக்கி கட்டியவன் பிளீஸ் டி என்னை விட்டு போய்விடாதே.
எது பண்ணுவதாக இருந்தாலும் கூடயே இருந்து பண்ணுடி.உன் கோபம் போகும் வரை எவ்வளவு வேண்டுமானாலும் அடிச்சிக்கோயென்று சொல்ல,சரி காட்டு என்றாள். அடிப்பாவி ஒரு பேச்சுக்கு அடி என்று சொன்னால் இவள் உண்மையிலேயே கேட்கிறாளே என்று திரு திருவென்று முழித்தான்.
அவன் பார்வையை கண்டவள் மகனே மாட்டுன டா இன்னைக்கு என்று தனக்குள் சொல்லியவள் ம்ம் சீக்கிரம் காட்டு எனக்கு நேரமில்லை என்றாள்.
என்ன என அதிர்ந்தவாறு கேட்க,அதான் என் கோபம் போகும் வரை அடிச்சுக்க சொன்னியே காட்டு என்று சொல்ல ஏதேஏ என்றவன் என்னடி விளையாடுறியா என்க,ஆர்கலியோ ஒரு அடி பின்னாடி தள்ளி போனவள் பின்னர் சராமரியாக ருத்ரனின் கன்னத்தில் மாறி மாறி விட்டாள்.
அவளின் கை வலிக்கும் வரை அவன் கன்னத்தில் அறைந்து முடித்தவள் பின்னர் அவனையே கட்டிக் கொண்டு கதறி அழுதாள்.
என்ன கொடுமை இதெல்லாம்?
அடி வாங்கியது நான்.ஆனால் அழுவது இவள்.யாத்தேஏஏ என்னா அடி சாமியென தனக்குள் புலம்பினான்.
சிறிது நிமிடம் தன்னவள் அழட்டுமென்று விட்டவன்,பிறகு தன்னிடமிருந்து அவளை பிரித்தெடுத்து சற்றும் தாமதிக்காமல் அவள் இதழில் புதைந்தான்.
நேரம் செல்ல செல்ல ருத்ரனின் கண்ணில் இருந்த நீர் துளிகள் ஆர்கலியின் கன்னத்தை நனைத்தது.
ம்ம் என்று தலையசைத்து விலகியவளை கையணைவில் கொண்டு வந்தவன் தனது மடியில் உட்கார வைத்து இறுக்கி பிடித்தவனை அன்னார்ந்து பார்க்க,ஏய் இப்படிலாம் பார்க்காதடி.
பிறகு நடப்பதற்கு நான் பொறுப்பில்லை என்றான்.
ம்கும்...
நீ அதற்கு சரிபட்டு வரமாட்டாயென்றாள்.
எதேஏ..ஏய் என்னடி கொழுப்பா?
அய்யா பவர் அதோ தூங்குறாங்களே தெரியலையா என குழந்தைகளை காட்டி கேட்க,அடச்சை விவஸ்தை கெட்ட மனுஷனென்று தலையில் அடிக்க,ஏய் போதும்டி.
எவ்வளவு தான் அடிப்ப?
நல்லா பாருடி கன்னம் எப்படி பன் போல வீங்கியிருக்கே?கொஞ்சம் கேப் விட்டு அடிச்சிருக்கலாமென்றான்.
ஹேய் உன் கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணுமென்றான்.
யோவ் இதுவரை நீ சொன்னது போதாது?
இன்னும் வேற சொல்லணுமா என்க,எஸ் மை டியர் சில்லி பொண்டாட்டி.கண்டிப்பாக உன் கிட்ட சொல்லணுமென்றவன்,அதற்கு முன்பு எனக்கு ஒரு விஷயம் சொல்லு.
உண்மையிலேயே நீ என்ன மன்னிச்சிட்டியாடி என்க,நான் எங்கே அப்படி சொன்னேன் என்றாள்.
மனைவியின் வார்த்தையை கேட்டவன் பின்ன இத்தனை அடி அடிச்சியேடி அப்போ சமாதானம் தானே என்க,நெவர்.
மிஸ்டர் ருத்ர வீர சிம்ஹன் கொஞ்சம் நீங்க சொன்னதை ரீவைண்ட் பண்ணி பாருங்களென்க,ஏகப்பட்டது சொன்னோமே. இதில் எதை என்றான்.
நம் குழந்தைகளை பற்றி சொன்னீங்களே என்று ஆர்கலி ஹிண்ட் கொடுக்க,ருத்ரனும் யோசனையானான்.
குழந்தைகளைப் பற்றி என்ன சொன்னேன் என்று தனது நெற்றியில் வீரல்களால் தட்டி யோசிக்க,நீ அம்மாவா இருக்கணும் நான் அப்பாவா இருக்கணும் இதையா என்று கேட்க,எஸ் நான் குழந்தைகளுக்கு அம்மாவாக மட்டும் தான் இருப்பேன்
எந்த சூழலிலும் உங்களுக்கு பொண்டாட்டியாக நான் இருக்க மாட்டேன் என்றாள்.
சரி சரி என்றவன் பின்னர் சுதாரித்து எதேஏஏ என்க.என்னவாம் ஷாக்கோ?
என் கூட இருந்தால் மட்டும் போதும்.வேற எதுவும் வேண்டாம் என்று நீங்க தானே சொன்னீங்க என்றாள்.
படுபாவி எல்லாத்தையும் நல்லா ஞாபகம் வச்சுக்கிட்டு சொல்கிறாளே என்ற பல்லை கடித்தவன் சரி உன் விருப்பம். நீங்க குழந்தைகளுக்கு அம்மாவா இருங்க தாயே என்று கை எடுத்து கும்பிட்டவன் அங்கிருந்து கதவை திறந்து வெளியே சென்றான்.
கட்டில் மேல உட்கார்ந்து அடுத்தது என்ன என்று யோசனையாக இருந்தவளை என்ன ஆர்கலி உன் புருஷனை மன்னித்து விட்டாச்சு போல என்று மனசாட்சி கேட்டது.
உனக்கு யார் சொன்னா அந்த மனுஷனை நான் மன்னித்து விட்டேன் என்று திருப்பி கேட்க, நீதான் அவன் கூட இருக்கின்றதற்கு சம்மதம் சொல்லிட்டியே டி என மனசாட்சி சொன்னது.
ஹலோ அதிக பிரசங்கி ஒரு வருஷம் அக்ரிமெண்ட் படி ஒன்றாக இருக்கணும்.அதை நினைத்து நான் சொன்னேன்.மற்றபடி ஒண்ணுமே இல்லை.
ஹா ஹா என்று சிரித்த மனசாட்சி அவன் இவ்வளவு தூரம் கதறி அழுதானே உனக்கு கொஞ்சம் கூட அவனை பற்றி பாவம் என்று தோன்றவில்லையா என்க,ஹம் கண்டிப்பா பாவம் தான்.
எனக்கு அப்பா அம்மா இல்லாமல் ஆசிரமத்துல வளர்ந்தேன்.ஆனா அவன் உண்மையிலே தாய் தகப்பன் இருந்து அவங்க அன்பை அனுபவிக்க முடியாமல் எங்கேயோ ஒரு இடத்துல வளர்ந்தாலும் நல்லா படிச்சு இன்னைக்கு சமூகத்தில் ஒரு ஆளா இருக்கிறான்.உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம்.
வெரி குட் ஆர்கலி.உன் மனசு இது தாண்டி..அவ்வளவு சீக்கிரம் உனக்கு மற்றவர்களை தண்டிக்க தெரியாது.
தவறு செய்யாத மனிதன் இந்த உலகத்தில் யாருமே கிடையாது.அதில் ருத்ரனும் விதிவிலக்கல்ல.நல்லா யோசித்துப் பாரேன். உனக்கும் அவனுக்கும் கணவன் மனைவியாக தாம்பத்திய உறவு நடக்கும் போது அவன் சுய நினைவில் இருந்தானா?என்று கேட்க இல்லை என்று சொன்னாள்.
வெரி குட்..
அவனுக்கு நினைவு இல்லாத போது நடந்தது.ஆனால் உனக்கு நல்ல நினைவு இருந்துச்சு தானே என்க ஆமாம் என்றாள்.
ம்ம்...
அப்போ நீ ஒரு மனைவியாக என்ன பண்ணியிருக்கணும் அவனுக்கு போதை தெளியும் வரைக்கும் அவன் கூட இருந்திருக்கணுமா? இல்லை இருந்திருக்க கூடாதா?என்று கேட்டது.
நான் என்ன செய்ய?
அப்பொழுது தான் நான் வேலையில் போய் சேர்ந்தேன். திடீர்னு எனக்கு லீவு கேட்டா கொடுக்க மாட்டாங்க.
சரி நேர்ல போய் சூழ்நிலையை சொல்லி லீவ் கேட்டுட்டு வரலாம்னு தான் அவன் எழுவதற்கு முன்னரே அன்று கிளம்பிப் போனேன் என்றாள்.
சரி கிளம்பி போனாய் அதுக்கப்புறம் ருத்ரன் கிட்ட நீ ஏன் இது போல விஷயத்தை சொல்லவில்லை என்று கேட்க,அவருக்கு ஞாபகம் இருக்கும் என்று தான் நான் நினைத்திருந்தேன் என்க..அதான்,உனக்கு ஒரு நியாயம் இருப்பது போல அவனுக்கும் ஒரு நியாயம் உண்டு.
தவறு ரெண்டு பேர் கிட்டயுமே இருக்கு.
நீ நினைத்திருந்தால் அன்று ருத்ரனோடு வீட்டிலே இருந்திருப்பாய்.
அப்போ புருஷனை விட வேலை தான் உனக்கு பெரிதாக போய்விட்டதா? என்று கேட்க,சத்தியமாக அப்படி இல்லை.நானும் என்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான்.வேற எந்த தவறாக எண்ணமும் இல்லை என்றாள்.
ஓகே உன்னுடைய எண்ணத்தை நான் பாராட்டுகிறேன்.சரி அதற்கு பிறகு நீ என்ன பண்ணுன?
அவங்க அம்மா உன் உறவு கண்டுபிடித்து வந்து பேசும் போது நீ எவ்வளவு போல்டா பேசினாய்.என் புருஷனை யாருக்கும் விட்டு தர மாட்டேன் என்று பிறகு அந்த பேச்சு எங்கே சென்றது.
சரி விடு உன்னை காயப்படுத்தணும் என்ற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட கிடையாது.நீ நல்லா இருக்கணும் என்பது தான் இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு இருக்கிறது.கணவன் மனைவிக்கு ஈகோ ஒரு காலமும் வரக்கூடாது.சொல்றேன்னு என்னை தப்பா எடுத்துக்காதே.
இதே நீ ஒரு அப்பா அம்மா கிட்ட வளர்ந்த பொண்ணா இருந்திருந்தால் நீ செய்வது தவறு என்று உன்னை அவர்கள் அடித்து திருத்தியிருப்பார்கள்.
அதற்காக இந்த உலகத்தில் அப்பா அம்மா இல்லாதவர்கள் எல்லாருமே தவறானவர்கள் என்று நான் சொல்லவில்லை.நீ வளர்ந்த சூழலை உன்னுடைய குழந்தைகளுக்கு ஒருபோதும் உருவாக்காதே.
குழந்தைகள் எதிர்காலத்தை நல்லா யோசிச்சு பாரு.அவர்களுக்கு இன்னும் எவ்வளவோ வாழ்க்கை இருக்கு.
நல்ல படிப்பு நல்ல சாப்பாடு நல்ல வாழ்க்கை இதெல்லாம் உன்னால கொடுக்க முடியும் இல்லன்னு நான் சொல்லலை.
ஆனா அப்பா அம்மாவோட அன்பு கொடுக்க முடியாது.அப்பாவோட இடத்தை அப்பாவால தான் பூர்த்தி செய்ய முடியும்.அதே போல் அம்மாவாகிய உன்னுடைய இடத்தை உன்னால் மட்டும் தான் பூர்த்தி செய்ய முடியும்.
காலம் ஒன்னும் முடிந்து போகவில்லை.இன்னும் நீ வாழ வேண்டிய வாழ்க்கை எவ்வளவோ இருக்கின்றது.
உனக்கு உண்மையிலேயே ருத்ரனை பிடிக்கவில்லை என்றால் இவ்வளவு தூரம் உனக்காக நான் பேசிட்டு இருக்க மாட்டேன்.
ஆனால் ருத்ரனை நீ மனதார காதலிக்கிறடி.அவன் இல்லாத ஒரு வாழ்க்கையை நிச்சயமாக உன்னால் நினைத்துப் பார்க்க முடியாது.
ருத்ரனுக்கு மட்டும் பொள்ளாச்சியில் பார்த்தவுடனே காதல் வரவில்லையே.
அன்று நடந்த ஒரு விஷயம் ருத்ரனுக்கு தெரியாது.ஆனா உனக்கும் எனக்கு தெரியும்.
ருத்ரன் இடிச்சிட்டு போன பிறகு நீ திரும்பி வந்து அவனை அந்த வழியில் தேடினாயே மறந்து விட்டாயா?என்று மனசாட்சி கேட்டது.
பிறகு ராம் வீட்டில் ருத்ரனை பார்த்த போது உன் மனசுக்குள்ள ஒரு குதூகலம் வந்ததே அது இல்லை என்று உன்னால் சொல்ல முடியுமா ஆர்கலி??
அந்த நாள் வரைக்கும் எத்தனையோ பேரை கடந்து தான் ஸ்கூலுக்கு போனாய்.ஆனால் நீ யாரையுமே திரும்பி பார்த்தது கிடையாது.
அந்த ஏழு நாள் நலுங்கிலும் ருத்ரனை இமைக்க மறந்து நீ பார்த்தது எனக்கு தெரியும் ஆர்கலி.
மனசாட்சி உண்மையை உடைத்து பேச பேச ஆர்கலிக்கு அழுகை தாங்கவில்லை.
அந்த நேரம் உள்ளே வந்த ருத்ரன் அழுது கொண்டிருப்பவளை பார்த்து என்னடி ஆச்சு என்று வந்து அவள் தோளை தொட,லாம்ப் போஸ்ட் என்றவாறு அவனின் இடுப்பை கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.