Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 517
- Thread Author
- #1
சென்னை சிம்ஹன் பேலஸ்:
கண்ணையா கொஞ்சம் சீக்கிரம் வாங்க என்கும் தனாவின் குரலில் இருக்கும் சந்தோஷமே அந்த வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு என்ன விஷயமென எல்லாரையும் யோசிக்க வைத்தது.
சொல்லுங்க தம்பி என்றவாறு ஹாலிற்கு வர,அண்ணா ருத்ராக்கு என சொல்ல வந்தவர் இல்லை எனக்கு பேரப்பிள்ளைகள் பிறந்திருக்காங்கணா.அதுவும் ரெண்டு பேரு என்க அதைக் கேட்டவர் தம்பி ரொம்ப சந்தோஷம் என்றார்.
அண்ணா இதில் எல்லோருக்கும் ரெண்டு மாசம் போனஸ் இருக்கு கொடுத்துடுங்க. அப்புறம் காரில் ஸ்வீட்,டிரஸ் இருக்கு.அதையும் எல்லாருக்கும் மறக்காம குடுத்துடுங்க.
நான் இப்பவே என் பேரப்பிள்ளைகளை பார்ப்பதற்காக ஊருக்கு போகிறேன்.வீட்டை பார்த்துக்குங்கணா என்று தனா சொல்ல,நான் கொடுத்துடுறேன் தம்பி.அந்த செந்தூர் ஆண்டவன் புண்ணியத்துல எல்லாம் இனிமே நல்லதா நடக்கும் என்று சொன்னார் சமையல்காரர் கண்ணையன்.
அந்த நேரம் தனது டெக்ஸ்டைல்ஸில் இருந்து வீட்டிற்குள் வந்த விஷாலாதேவி கணவரின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்த்து என்ன விஷயம் தனா என்று பொறுமையாக கேட்டார்.
இத்தனை மாதங்களாக மனைவியின் முகத்தைப் பார்த்து முகம் கொடுத்து பேசாதவர்,தற்பொழுது அவரின் குரலில் திரும்பிப் பார்த்து,எனக்கு பேரப்பிள்ளைகள் பிறந்திருக்காங்க என்று சொல்ல,தனா நிஜமாவா என்று தேவி ஆச்சரியப்பட்டார்.
ஆமாம்!!
இதில் பொய் சொல்ல என்ன வேண்டி இருக்கு.என் பையனுக்கும் மருமகளுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது.
என் குடும்ப வரிசை பார்ப்பதற்காக இதோ நான் கிளம்பிட்டேன் என்று தனா சொல்ல, உங்களுக்கு மட்டும் தான் பேரப்பிள்ளைகளா?
அப்போ எனக்கு இல்லையா தனா என்று அழுகையோடு கேட்க,உனக்கு அந்த எண்ணம் எல்லாம் மனதில் இருக்கிறதா என்றார்.
வேண்டாம் தனா.
இதுவரைக்கும் மௌனமாக இருந்து என்னை கொன்றது போதும்.
இனியும் வார்த்தையாலே மேலும் என்னை குத்தி காயப்படுத்த வேண்டாம். தயவு செய்து என்னையும் அழைத்துட்டு போங்கள் என்று தேவி கையை கூப்பி கெஞ்ச,ஏம்மா நீ எவ்வளவு பெரிய கோடீஸ்வரி..
அது சாதாரணம் ஒரு டீச்சர் பொண்ணு வீடு.அங்க உன் ஸ்டேட்டஸ்க்கு ஏற்றவாறு ஏசி வசதிலாம் கிடையாது.
அது மட்டும் இல்லாமல் கிரானைட் கற்கள் பதித்த வீடு கிடையாது.நான் போகப் போகும் ஊர் ஒரு சின்ன குக்கிராமம்.அங்க உன்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதேயென்று மனைவியை வார்த்தையாலே அடித்து விளாசினார்.
கணவரின் வார்த்தைகளை கேட்ட தேவிக்கு அழுவதை தவிர வேறு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
பிளீஸ் தனா,தயவு செய்து என்னை கூப்பிட்டு போங்க என்று கெஞ்ச இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சமையல்காரர் கண்ணையா, தம்பி,போதும் தம்பி என்றார்.
சரிங்க அண்ணா.என்கூட வர சொல்லுங்க.ஆனா அங்க இருக்கிறவங்கள் யாருக்கும் இவளால எந்த ஒரு சின்ன மனக்காயம் கூட வரக்கூடாது.அப்படி மட்டும் ஏதாச்சும் நடந்தது,அந்த நிமிஷமே இவளை அங்கேயே தலை முழுகிட்டு வந்துவிடுவேன்.சீக்கிரம் ரெடியாகிட்டு வர சொல்லுங்கணா என்றார்.
இல்லை இப்படியே போகலாம் என்று தேவி சொல்ல ஒரு நொடி மனைவியை மேல் இருந்து கீழே வரை பார்த்தவர் போயிட்டு வேற புடவை மாத்திட்டு வா.
உன் முகத்தை கொஞ்சம் போய் கண்ணாடில பாரென்று கோபமாக சொன்னாலும் உள்ளுக்குள் சிறிது வேதனையாகத்தான் இருந்தது.
கடந்த ஒரு வாரமாக தேவியிடம் முன்பு இருந்த அந்த மிடுக்கு தற்பொழுது சிறிதுமில்லை. ஏனோ தானோ என டிரஸ் பண்ணிக் கொண்டு தான் டெக்ஸ்டைலுக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
கண்ணில் நீரோடு அமைதியாக தேவி ஹாலில் நிற்க,அம்மா தேவி போ மா.
தனது முகத்தை கழுவி தலையை மட்டும் சீவிக்கொண்டு வேகமாக கீழே இறங்கி வந்தார். பின்னர் இருவரும் கண்ணையாவிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்து காரில் ஏறி சதூர்வேதமங்கலத்தை நோக்கி பயணமாகினர்.
சதூர்வேதமங்கலம்:
எவ்வளவு நேரம் போனது என்பது, எனக்கு தெரியல.அப்போ கதவை திறந்து தேவதை போல ஒருத்தங்க வந்தாங்க.
வீரா வீரா என்று என்னை தட்டி எழுப்பி என் வாயில தண்ணி ஊத்துனாங்களென்று நினைக்கிறேன்.
எனக்கு நினைவு வந்து அம்மா என்று நான் போய் அவங்கள கட்டிக்கிட்டு அழுதேன். அவங்களும் பயப்படாத வீரா என்று சொல்லிட்டு என்னை வெளியே கூப்பிட்டு போய் குளிக்க வைத்து வேற டிரஸ் மாற்றி விட்டார்கள்.
அந்த நேரம் விஷாலாதேவியும் அவங்க வீட்டுக்காரரும் வீட்டுக்குள் வர என்னை பார்த்து விட்டு இவன் எப்படி வெளியில் வந்தான் வசந்தியென்று கோவமாக கேட்டாங்க. நான் பயந்து போய் அந்த வசந்தி என்பவங்க பின்னாடி ஒளிஞ்சிகிட்டேன்.
என்னாச்சு என்று விசாலாதேவி வீட்டுக்காரர் கேட்க இவன் என் புடவைங்களில் எல்லாம் பெயிண்ட் ஊத்திட்டானு தனாயென்று அந்த லேடி பொய் சொல்லும் போது,நீ இப்படி பண்ணினாயா இல்லையா என அவர் என் கிட்ட எதுவுமே கேட்கல.
வேகமாக வந்து அவங்க பின்னாடி ஒளிஞ்சிருந்த என் கையை பிடித்து இழுத்து நல்லா அடிச்சுட்டாரு.
அதில் அழுது அழுது எனக்கு ஃபீவர் ரொம்ப வந்துடுச்சு.மூணு நாள் நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன்.
வீட்டுக்கு வரும் போது தனா இவனுக்கு ரொம்ப முரட்டு குணமா இருக்கின்றது.
நம்மகிட்ட வளர்ந்தால் இவன் ஒழுங்கா வளர மாட்டேன்.பிசினஸால் நீயும் நானும் அதிகமா வெளியே தான் இருக்கிறோம். நம்மால் இவனை ஹேண்டில் பண்ண முடியாது.அதனால் இவனை கொண்டு போய் இலங்கையில் உங்க அப்பா அம்மா கிட்ட விட்டுவிடுங்க.
உங்க அப்பா ரொம்ப கண்டிப்பானவர். அவர் நல்லா வளர்ப்பாரு.அப்படி நல்ல விதமாக வளர்ந்தா நமக்கு தானே பெருமை என்று அவங்க சொல்லிக்கிட்டு இருந்தாங்கள்.
நீ சொல்றதும் சரிதான் தேவி என்று, என்னை கூப்பிட்டுக்கிட்டு மறுநாளே இலங்கைக்கு வந்து தாத்தா பாட்டி கிட்ட விட்டுட்டு போயிட்டாங்கள்.
அந்த வயசில் நான் என்ன தப்பு பண்ணேன் என்பது எனக்கு கொஞ்சம் கூட புரியவே இல்லை.
பெண்களை பார்த்தாலே பயம்..
ஒரு வாரத்திற்கு மேல தான் பாட்டி-அத்தை இருவரோடு பேச ஆரம்பித்தேன்.
ஒரு தாயோட அன்பு எப்படி இருக்கும் என்பது என்னுடைய பாட்டியிடயும்,அத்தை மேகலாவிடம் தான் நான் உணர்ந்தேன்.
பாட்டியும் தாத்தாவும் எனக்கு அப்பா அம்மாவாக மாறினாங்க.அந்த வயதிலே எனக்கு பெண்கள் மேல நல்ல அபிப்பிராயம் சுத்தமா வரலை.
நான் மதித்த பெண்கள் என்று பார்த்தால் என்னுடைய பாட்டி கிரிஜா என்னுடைய அத்தை மேகலா ஆதுவோட அம்மா.
ரஞ்சனோட அம்மா கிருபா ஆன்ட்டி. இவங்க நாலு பெண்கள் மட்டும் தான் என் வாழ்க்கையில் இன்று வரை பிடித்த பெண்கள்.
வருஷத்துக்கு ஒரு முறை என்னோட அப்பா அம்மா என்று சொல்லிக்கிட்டு இரண்டு பேரும் வந்து என் கூட தங்கி போவாங்கள்.
ஆனால் அவங்கள் வருகை எனக்கு சுத்தமாக விருப்பம் கிடையாது.
ஒரு புள்ளையை பெத்து அதை வளர்க கூட முடியலன்னா அவங்க என்ன தாய்? தகப்பன்?
என்னைக்கு நான் இலங்கைக்கு வந்தோனோ அன்றிலிருந்து இந்த நிமிஷம் வரைக்கும் அவங்களை அப்பா அம்மா என்று நான் கூப்பிட்டது கிடையாது.
ஸ்கூல்ல பேரன்ஸ் மீட்டிங் வைக்கும் போது எல்லாருக்கும் அவங்களுடைய அப்பா அம்மா வருவாங்க.
எனக்கு மட்டும் தாத்தா பாட்டி தான் வருவாங்க.பக்கத்து கிளாஸ் பசங்க கிண்டல் பண்ணுவாங்க ஹோய் இவன் அப்பா அம்மா இல்லாத பையன் போல,பாவம் அனாதை பையன் அப்படி இப்படி என்று.
நான் என்ன தாத்தா தப்பு செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் அப்பா அம்மா இல்லை என்று நான் ஒவ்வொரு வாட்டியும் அழுவேன்.
அங்கு ஒன்னாங்கிளாஸ் சேர்ந்த போது எனக்கு ஆதுவும் ரஞ்ஜனும் கிடைத்தாங்கள்.
அவங்க ரெண்டு பேருக்கும் மதிய சாப்பாடு ஆன்டிங்க இரண்டு பேரும் ஸ்கூலுக்கு எடுத்துட்டு வருவாங்க.
எனக்கு பாட்டி வருவாங்க இல்லன்னா மேகலா அத்தை வரும்.
வருஷம் போக போக என்னை பெற்றவர்கள் இருவரின் உறவு எனக்கு வேண்டாம் என்று சுத்தமா விட்டுட்டேன்.
என்னுடைய கவனத்தை எல்லாம் படிப்புல தான் காமிச்சேன்.நேரம் கிடைக்கும் போது தாத்தா பாட்டியிடம் தொழிலையும் கத்துக்கிட்டேன்.
எனக்கு உலகம் என்று பார்த்தால் நண்பர்கள் இருவரும்,அதன் பின்னர் எங்கள் ஃபேமிலி மட்டும்தான்.
இப்படியே என் வாழ்க்கை போச்சு.
12த் எக்ஸாம் எழுதிட்டு போகும் போது தான் ரஞ்ஜனை கடைசியாக பார்த்தது.அதற்குப் பிறகு அவன பத்தி எதுவுமே தெரியலை.
மேற்படிப்புக்காக நானும் ஆதுவும் கனடாக்கு போயிருந்த போது தான் ராம்,விக்டர்,பிலீப்,இவர்களும் நண்பர்கள் ஆனார்கள்.
படிப்பு முடிந்து நாங்க எல்லாம் அங்கே ஒரு கம்பெனியில் வேலை பார்த்தோம்.
பிறகு இலங்கைக்கு வந்து நானும் ஆதுவும் புது பிசினஸ் ஸ்டார்ட் பண்ணினோம்.
நல்லா போயிட்டு இருந்துச்சு.சில வருஷத்துக்கு அப்புறமா ஒரு நாள் ரஞ்ஜனை மீட் பண்ணினோம் என்றவன் சுருக்கமாக ராகினையையும்,ரஞ்சனின் வாழ்க்கையில் நடந்த பிரச்சனையையும் கண்ணீரோடு சொன்னான்.
கண்ணையா கொஞ்சம் சீக்கிரம் வாங்க என்கும் தனாவின் குரலில் இருக்கும் சந்தோஷமே அந்த வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு என்ன விஷயமென எல்லாரையும் யோசிக்க வைத்தது.
சொல்லுங்க தம்பி என்றவாறு ஹாலிற்கு வர,அண்ணா ருத்ராக்கு என சொல்ல வந்தவர் இல்லை எனக்கு பேரப்பிள்ளைகள் பிறந்திருக்காங்கணா.அதுவும் ரெண்டு பேரு என்க அதைக் கேட்டவர் தம்பி ரொம்ப சந்தோஷம் என்றார்.
அண்ணா இதில் எல்லோருக்கும் ரெண்டு மாசம் போனஸ் இருக்கு கொடுத்துடுங்க. அப்புறம் காரில் ஸ்வீட்,டிரஸ் இருக்கு.அதையும் எல்லாருக்கும் மறக்காம குடுத்துடுங்க.
நான் இப்பவே என் பேரப்பிள்ளைகளை பார்ப்பதற்காக ஊருக்கு போகிறேன்.வீட்டை பார்த்துக்குங்கணா என்று தனா சொல்ல,நான் கொடுத்துடுறேன் தம்பி.அந்த செந்தூர் ஆண்டவன் புண்ணியத்துல எல்லாம் இனிமே நல்லதா நடக்கும் என்று சொன்னார் சமையல்காரர் கண்ணையன்.
அந்த நேரம் தனது டெக்ஸ்டைல்ஸில் இருந்து வீட்டிற்குள் வந்த விஷாலாதேவி கணவரின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்த்து என்ன விஷயம் தனா என்று பொறுமையாக கேட்டார்.
இத்தனை மாதங்களாக மனைவியின் முகத்தைப் பார்த்து முகம் கொடுத்து பேசாதவர்,தற்பொழுது அவரின் குரலில் திரும்பிப் பார்த்து,எனக்கு பேரப்பிள்ளைகள் பிறந்திருக்காங்க என்று சொல்ல,தனா நிஜமாவா என்று தேவி ஆச்சரியப்பட்டார்.
ஆமாம்!!
இதில் பொய் சொல்ல என்ன வேண்டி இருக்கு.என் பையனுக்கும் மருமகளுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது.
என் குடும்ப வரிசை பார்ப்பதற்காக இதோ நான் கிளம்பிட்டேன் என்று தனா சொல்ல, உங்களுக்கு மட்டும் தான் பேரப்பிள்ளைகளா?
அப்போ எனக்கு இல்லையா தனா என்று அழுகையோடு கேட்க,உனக்கு அந்த எண்ணம் எல்லாம் மனதில் இருக்கிறதா என்றார்.
வேண்டாம் தனா.
இதுவரைக்கும் மௌனமாக இருந்து என்னை கொன்றது போதும்.
இனியும் வார்த்தையாலே மேலும் என்னை குத்தி காயப்படுத்த வேண்டாம். தயவு செய்து என்னையும் அழைத்துட்டு போங்கள் என்று தேவி கையை கூப்பி கெஞ்ச,ஏம்மா நீ எவ்வளவு பெரிய கோடீஸ்வரி..
அது சாதாரணம் ஒரு டீச்சர் பொண்ணு வீடு.அங்க உன் ஸ்டேட்டஸ்க்கு ஏற்றவாறு ஏசி வசதிலாம் கிடையாது.
அது மட்டும் இல்லாமல் கிரானைட் கற்கள் பதித்த வீடு கிடையாது.நான் போகப் போகும் ஊர் ஒரு சின்ன குக்கிராமம்.அங்க உன்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதேயென்று மனைவியை வார்த்தையாலே அடித்து விளாசினார்.
கணவரின் வார்த்தைகளை கேட்ட தேவிக்கு அழுவதை தவிர வேறு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
பிளீஸ் தனா,தயவு செய்து என்னை கூப்பிட்டு போங்க என்று கெஞ்ச இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சமையல்காரர் கண்ணையா, தம்பி,போதும் தம்பி என்றார்.
சரிங்க அண்ணா.என்கூட வர சொல்லுங்க.ஆனா அங்க இருக்கிறவங்கள் யாருக்கும் இவளால எந்த ஒரு சின்ன மனக்காயம் கூட வரக்கூடாது.அப்படி மட்டும் ஏதாச்சும் நடந்தது,அந்த நிமிஷமே இவளை அங்கேயே தலை முழுகிட்டு வந்துவிடுவேன்.சீக்கிரம் ரெடியாகிட்டு வர சொல்லுங்கணா என்றார்.
இல்லை இப்படியே போகலாம் என்று தேவி சொல்ல ஒரு நொடி மனைவியை மேல் இருந்து கீழே வரை பார்த்தவர் போயிட்டு வேற புடவை மாத்திட்டு வா.
உன் முகத்தை கொஞ்சம் போய் கண்ணாடில பாரென்று கோபமாக சொன்னாலும் உள்ளுக்குள் சிறிது வேதனையாகத்தான் இருந்தது.
கடந்த ஒரு வாரமாக தேவியிடம் முன்பு இருந்த அந்த மிடுக்கு தற்பொழுது சிறிதுமில்லை. ஏனோ தானோ என டிரஸ் பண்ணிக் கொண்டு தான் டெக்ஸ்டைலுக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
கண்ணில் நீரோடு அமைதியாக தேவி ஹாலில் நிற்க,அம்மா தேவி போ மா.
தனது முகத்தை கழுவி தலையை மட்டும் சீவிக்கொண்டு வேகமாக கீழே இறங்கி வந்தார். பின்னர் இருவரும் கண்ணையாவிடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்து காரில் ஏறி சதூர்வேதமங்கலத்தை நோக்கி பயணமாகினர்.
சதூர்வேதமங்கலம்:
எவ்வளவு நேரம் போனது என்பது, எனக்கு தெரியல.அப்போ கதவை திறந்து தேவதை போல ஒருத்தங்க வந்தாங்க.
வீரா வீரா என்று என்னை தட்டி எழுப்பி என் வாயில தண்ணி ஊத்துனாங்களென்று நினைக்கிறேன்.
எனக்கு நினைவு வந்து அம்மா என்று நான் போய் அவங்கள கட்டிக்கிட்டு அழுதேன். அவங்களும் பயப்படாத வீரா என்று சொல்லிட்டு என்னை வெளியே கூப்பிட்டு போய் குளிக்க வைத்து வேற டிரஸ் மாற்றி விட்டார்கள்.
அந்த நேரம் விஷாலாதேவியும் அவங்க வீட்டுக்காரரும் வீட்டுக்குள் வர என்னை பார்த்து விட்டு இவன் எப்படி வெளியில் வந்தான் வசந்தியென்று கோவமாக கேட்டாங்க. நான் பயந்து போய் அந்த வசந்தி என்பவங்க பின்னாடி ஒளிஞ்சிகிட்டேன்.
என்னாச்சு என்று விசாலாதேவி வீட்டுக்காரர் கேட்க இவன் என் புடவைங்களில் எல்லாம் பெயிண்ட் ஊத்திட்டானு தனாயென்று அந்த லேடி பொய் சொல்லும் போது,நீ இப்படி பண்ணினாயா இல்லையா என அவர் என் கிட்ட எதுவுமே கேட்கல.
வேகமாக வந்து அவங்க பின்னாடி ஒளிஞ்சிருந்த என் கையை பிடித்து இழுத்து நல்லா அடிச்சுட்டாரு.
அதில் அழுது அழுது எனக்கு ஃபீவர் ரொம்ப வந்துடுச்சு.மூணு நாள் நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன்.
வீட்டுக்கு வரும் போது தனா இவனுக்கு ரொம்ப முரட்டு குணமா இருக்கின்றது.
நம்மகிட்ட வளர்ந்தால் இவன் ஒழுங்கா வளர மாட்டேன்.பிசினஸால் நீயும் நானும் அதிகமா வெளியே தான் இருக்கிறோம். நம்மால் இவனை ஹேண்டில் பண்ண முடியாது.அதனால் இவனை கொண்டு போய் இலங்கையில் உங்க அப்பா அம்மா கிட்ட விட்டுவிடுங்க.
உங்க அப்பா ரொம்ப கண்டிப்பானவர். அவர் நல்லா வளர்ப்பாரு.அப்படி நல்ல விதமாக வளர்ந்தா நமக்கு தானே பெருமை என்று அவங்க சொல்லிக்கிட்டு இருந்தாங்கள்.
நீ சொல்றதும் சரிதான் தேவி என்று, என்னை கூப்பிட்டுக்கிட்டு மறுநாளே இலங்கைக்கு வந்து தாத்தா பாட்டி கிட்ட விட்டுட்டு போயிட்டாங்கள்.
அந்த வயசில் நான் என்ன தப்பு பண்ணேன் என்பது எனக்கு கொஞ்சம் கூட புரியவே இல்லை.
பெண்களை பார்த்தாலே பயம்..
ஒரு வாரத்திற்கு மேல தான் பாட்டி-அத்தை இருவரோடு பேச ஆரம்பித்தேன்.
ஒரு தாயோட அன்பு எப்படி இருக்கும் என்பது என்னுடைய பாட்டியிடயும்,அத்தை மேகலாவிடம் தான் நான் உணர்ந்தேன்.
பாட்டியும் தாத்தாவும் எனக்கு அப்பா அம்மாவாக மாறினாங்க.அந்த வயதிலே எனக்கு பெண்கள் மேல நல்ல அபிப்பிராயம் சுத்தமா வரலை.
நான் மதித்த பெண்கள் என்று பார்த்தால் என்னுடைய பாட்டி கிரிஜா என்னுடைய அத்தை மேகலா ஆதுவோட அம்மா.
ரஞ்சனோட அம்மா கிருபா ஆன்ட்டி. இவங்க நாலு பெண்கள் மட்டும் தான் என் வாழ்க்கையில் இன்று வரை பிடித்த பெண்கள்.
வருஷத்துக்கு ஒரு முறை என்னோட அப்பா அம்மா என்று சொல்லிக்கிட்டு இரண்டு பேரும் வந்து என் கூட தங்கி போவாங்கள்.
ஆனால் அவங்கள் வருகை எனக்கு சுத்தமாக விருப்பம் கிடையாது.
ஒரு புள்ளையை பெத்து அதை வளர்க கூட முடியலன்னா அவங்க என்ன தாய்? தகப்பன்?
என்னைக்கு நான் இலங்கைக்கு வந்தோனோ அன்றிலிருந்து இந்த நிமிஷம் வரைக்கும் அவங்களை அப்பா அம்மா என்று நான் கூப்பிட்டது கிடையாது.
ஸ்கூல்ல பேரன்ஸ் மீட்டிங் வைக்கும் போது எல்லாருக்கும் அவங்களுடைய அப்பா அம்மா வருவாங்க.
எனக்கு மட்டும் தாத்தா பாட்டி தான் வருவாங்க.பக்கத்து கிளாஸ் பசங்க கிண்டல் பண்ணுவாங்க ஹோய் இவன் அப்பா அம்மா இல்லாத பையன் போல,பாவம் அனாதை பையன் அப்படி இப்படி என்று.
நான் என்ன தாத்தா தப்பு செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் அப்பா அம்மா இல்லை என்று நான் ஒவ்வொரு வாட்டியும் அழுவேன்.
அங்கு ஒன்னாங்கிளாஸ் சேர்ந்த போது எனக்கு ஆதுவும் ரஞ்ஜனும் கிடைத்தாங்கள்.
அவங்க ரெண்டு பேருக்கும் மதிய சாப்பாடு ஆன்டிங்க இரண்டு பேரும் ஸ்கூலுக்கு எடுத்துட்டு வருவாங்க.
எனக்கு பாட்டி வருவாங்க இல்லன்னா மேகலா அத்தை வரும்.
வருஷம் போக போக என்னை பெற்றவர்கள் இருவரின் உறவு எனக்கு வேண்டாம் என்று சுத்தமா விட்டுட்டேன்.
என்னுடைய கவனத்தை எல்லாம் படிப்புல தான் காமிச்சேன்.நேரம் கிடைக்கும் போது தாத்தா பாட்டியிடம் தொழிலையும் கத்துக்கிட்டேன்.
எனக்கு உலகம் என்று பார்த்தால் நண்பர்கள் இருவரும்,அதன் பின்னர் எங்கள் ஃபேமிலி மட்டும்தான்.
இப்படியே என் வாழ்க்கை போச்சு.
12த் எக்ஸாம் எழுதிட்டு போகும் போது தான் ரஞ்ஜனை கடைசியாக பார்த்தது.அதற்குப் பிறகு அவன பத்தி எதுவுமே தெரியலை.
மேற்படிப்புக்காக நானும் ஆதுவும் கனடாக்கு போயிருந்த போது தான் ராம்,விக்டர்,பிலீப்,இவர்களும் நண்பர்கள் ஆனார்கள்.
படிப்பு முடிந்து நாங்க எல்லாம் அங்கே ஒரு கம்பெனியில் வேலை பார்த்தோம்.
பிறகு இலங்கைக்கு வந்து நானும் ஆதுவும் புது பிசினஸ் ஸ்டார்ட் பண்ணினோம்.
நல்லா போயிட்டு இருந்துச்சு.சில வருஷத்துக்கு அப்புறமா ஒரு நாள் ரஞ்ஜனை மீட் பண்ணினோம் என்றவன் சுருக்கமாக ராகினையையும்,ரஞ்சனின் வாழ்க்கையில் நடந்த பிரச்சனையையும் கண்ணீரோடு சொன்னான்.