Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 515
- Thread Author
- #1
சதூர்வேதமங்கலம்:
என்னன்னு தெரியல பாட்டி,ரெண்டு மூணு நாளாகவே எனக்கு மனசு ரொம்ப
படபடப்பாக இருந்துச்சு.ஆதிராவிற்கும் ரஞ்ஜனுக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் ஆனதை சொல்லியவன் நானும் அங்கிட்டு இருக்கிற வேலைகள் எல்லாத்தையும் முடிச்சிட்டு சீக்கிரம் இங்கு வரலாம்னு இருக்க,நாளும் தள்ளி போய்ட்டு இருந்தது.
நேற்றுலாம் என்னால அங்க இருக்கவே முடியலை.அதான் நான் உடனே கிளம்பி வந்துட்டேன்.
திருச்சிக்கு வந்த பிறகு தான் தாத்தாக்கு கால் பண்ணி இங்கு வந்திருப்பது பற்றி சொன்னேன்.பிறகு அங்கிருந்து வாடகை கார்ல வந்தேன்.
வீட்ல போய் பார்த்தால் வீடு பூட்டி இருந்துச்சு.எதிர் வீட்டில் இருக்கும் பெரியம்மா தான் சொன்னாங்க.இந்த ஹாஸ்பிட்டலில் இருக்கீங்கன்னு.
அந்த காரிலே நேராக இங்க வந்துட்டேன் பாட்டி என்றான்.
அப்பொழுது கதவை திறந்து வெளியே வந்த இரண்டு நர்ஸ்ங்கள் ஆளுக்கொரு குழந்தையோடு வர,என்னா டுவின்ஸாஆஆஆ என்று கண்கள் விரிய சந்தோஷத்தில் அதிர்ந்து போனான்.
கண்ணு குழந்தையை வாங்குப்பா என்க,ருத்ரனுக்கோ ஆனந்த கண்ணீரில் கண்கள் மறைத்தது.
சார் வாங்கி பாருங்களென்று சிரித்துக்கொண்டே நர்ஸ் சொல்ல,மாமா நீங்களும்,பாட்டியும் வாங்குங்களென்றான்.
அதைக்கேட்ட இருவருக்கும் கண்கள் கலங்கியது.
இங்க குடுங்கம்மாயென்று ஆளுக்கொரு குழந்தையை வாங்கி பார்க்க,இருவரும் கொழுக் மொழுக்கென்று,ரோஜா பூவின் நிறத்தில் இருக்க,நால்வரும் கொஞ்சி மகிழ்ந்தனர்.
பாட்டி இவங்களை தூக்க எனக்கு பயமா இருக்கேயென்று ருத்ரன் சொல்ல,ஆமா கண்ணு,புதுசுல அப்படி தான் இருக்கும்.
நீ உட்காரு உன் மடியில் நான் குழந்தைங்களை வைக்குறேனென்று பாட்டி சொல்ல,எதையும் யோசிக்காமல், பட்டென்று தரையில் உட்கார்ந்தான்.
அப்பொழுது,ஏன்மா என் தங்கச்சி எப்படி இருக்குமாயென்று சங்கர் அங்கிருந்த நர்ஸிடம் கேட்க,அவங்க நல்லா இருக்காங்கணா.இப்போதைக்கு மயக்கத்தில் இருக்காங்க.
இன்னும் கொஞ்ச நேரத்தில் வார்டுக்கு மாத்திடுவாங்க என்றவர்,குழந்தைகளை தரீங்களா,தாய்ப்பால் கொடுக்கணுமென்றார்.
செத்த இருமா என்ற பாட்டி,தன் கையில் இருந்த பேரனை ருத்ரன் மடியில் வைக்க, அவனுக்கோ.என் வாரிசுகள் என்கும் சந்தோஷத்தில் மீண்டும் கண்கள் கலங்கியது.
பின்னர் சங்கரை பார்க்க,கருப்பாயி புள்ளைய மாப்ளை கிட்ட குடு என்றார்.
இரண்டு குழைந்தைகளையும் பார்த்தவனுக்கு மேலும் சந்தோஷம் தாங்கவில்லை.
செல்லங்களாயென்று தனது நெஞ்சில் அணைக்க,குட்டிங்களோ அழ ஆரம்பித்தனர்.
பசி போலயென்று பாட்டி சொல்ல,சரி சரி நீங்க போய் சாப்பிட்டு வாங்களென்று சொல்லி இருவரின் உச்சந்தலையில் முத்தம் வைத்தவன்,தங்கச்சி தூக்கிட்டு போங்கம்மா என்று சொல்ல,நர்ஸ் இருவரும் ஆளுக்கொரு குழந்தையை தூங்கிக் கொண்டு உள்ளே சென்றனர்.
வாழ்த்துக்கள் மாப்பிள்ளை என்று சங்கர் கை கொடுக்க,ருத்ரனும் கையை பிடித்து குலுக்கி தேங்க்யூ மாமா என்றான்.
சரிப்பா புள்ளைங்க பிறந்ததை பற்றி வீட்டில் சொல்லிடு என்று பாட்டி சொல்ல, ஓஓஓ காட்...
நல்லவேளை எனக்கு ஞாபகப்படுத்துனீங்க பாட்டியென்றவன், பாக்கெட்டில் இருந்த தனது போனை எடுத்து,தனது தாத்தாவிற்கு கால் பண்ணினான்.
இரண்டே ரிங்கில் அட்டன் பண்ணியவர், என்ன நினைச்சிட்டு இருக்க வீரா?.உன் இஷ்டத்திற்கு எல்லாமே பண்ணுவதா?என்று சத்தம் போட,ருத்ரனோ சந்தோஷத்தோடு தாத்தா குழந்தை பிறந்துட்டாங்க.
உங்களுக்கு ரெண்டு பேர புள்ளைங்க என்று சொல்ல,சிம்ஹன் தாத்தாவே பேரன் சொன்னதை கேட்டு, சந்தோஷத்தில் வாயடைத்து போய் நின்றார்.
தாத்தா தாத்தா என்ற ருத்ரன் வேகமாக கத்த கண்ணா நிஜமாவா என்று அவர் கேட்க ஆமா தாத்தா ஒரு பேத்தி ஒரு பேரன்.
என் குட்டிங்க ரெண்டு பேரும் என்னை போலவே எவ்வளவு அழகாக இருக்கிறாங்கள் தெரியுமா என பெருமையாக சொன்னான்..
பின்னர் மற்றவர்களுக்கும் போன் பண்ணி விஷயத்தை சொல்லியவன், ஹாஸ்பிட்டலில் உள்ளவர்களுக்கு கொடுப்பதற்காக சாக்லேட்டையும் வாங்கிட்டு வந்து அனைவருக்கும் கொடுத்தனர்.
இவர்கள் வெளியே சென்று அரை மணி நேரத்தில் ,ஆர்கலியை முதல் தளத்தில் இருக்கும் ரூமிற்கு மாற்றியிருந்தனர்.
ஆர்கலிக்கு ஊசி போட்டிருப்பதால் அவள் நன்கு உறக்கத்தில் இருந்தாள்.
இரண்டு குழந்தைகளையும்,பாட்டியும், கருப்பாயியும் கொஞ்சியபடி பேசிக் கொண்டிருந்தனர்.
கதவை திறந்து உள்ளே வந்து பார்க்க, ஆர்கலி ஓய்ந்து போய் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது.
பின்னர் தெரிந்தவர்களெல்லாரும் வந்து பார்த்து செல்ல,ஆர்கலிக்கோ இன்னும் மயக்கம் மட்டும் தெளியவில்லை.நேரமும் கடந்து செல்ல,குட்டிங்கள் இருவரும் தூங்கி விட்டனர்.
பக்கத்தில் இருந்த தொட்டிலில் இருவரையும் படுக்க வைத்து விட்டு, பாட்டியும்,கருப்பாயியும் வெளியே இருக்கோம் பா என்று சொல்லி சென்றனர்.
அந்த அறைக்குள் தன் மனைவி, தங்களின் குழந்தைகள் மட்டும் இருக்க, இந்த உணர்வை எப்படி சொல்வதென்று ருத்ரனுக்கு தெரியவில்லை. மனம் மட்டும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.
தூங்கும் குழந்தைகளை இமைக்காமல் பார்த்து ரசித்தவன்,வரும் போன் காலிற்கு அட்டென் பண்ணி பதிலை சொல்லியவாறு இருந்தான்.
பின்னர் ஆர்கலி படுத்திருக்கும் பெட்டின் மேல் தலைசாய்த்து கண் மூடியவன், அப்படியே தூங்கி விட்டான்.
நேரமும் கடந்து சென்றது...
ஒருவாறு மயக்கம் தெளிந்து கண் விழித்த ஆர்கலிக்கு,வலது பக்கம் தெரியும் தலையை பார்த்தவளுக்கு, வந்திருப்பது யார் என்பது தெரிந்தது.
பொறுமையாக அவன் தலை முடியில் கையை வைக்க,பட்டென்று நிமிர்ந்தவன், தன்னவளுக்கு மயக்கம் தெளிந்ததை கண்டு,மை டியர் பார்பிடாலென்றவாறு, மனைவியின் உதட்டில் ஆழ முத்தமிட்டான்.
ஆர்கலியும் அவன் செயலை எதிர்க்கவில்லை.சில நொடிகள் சென்று அவளிடமிருந்து மனமேயின்றி பிரிந்தவன்,உனக்கு இப்போ எப்படி இருக்குடி?.
ஆர் யூ ஓகே தானே என்றான்.
ஆர்கலியோ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, மனைவியின் கையை பிடித்து தனது இதயம் பக்கம் வைத்தவன்,இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேனென்று சொல்ல வார்த்தையே இல்லைடா.
அதற்கு முழு காரணம் நீ தான்.ஐ லவ் யூ டி மை டியர் சில்லி பொண்டாட்டி என்க, இப்பொழுது ஆர்கலி அவனை முறைத்து பார்த்தாள்.
குழந்தைகள் என்று கேட்க,ரெண்டு லட்டூஸும் தூங்கிட்டு இருக்காங்க.செம்ம கீயூட் டி.
எனக்கு டபுள் ஹேப்பி..
அப்பொழுது கதவை திறந்து உள்ளே வந்த மூவரும்,எப்படி இருக்கம்மா என்று விசாரித்தனர்.
அம்மாடி ஆராமா புள்ளைங்க ரெண்டு பேரும் அப்படியே தம்பி போல நான் பிறந்திருக்காங்களென்று கருப்பாயி சொல்ல,அப்படிங்களா அண்ணி என்று ஆச்சர்யமாக கேட்டாள்.
ஆமா டா என்ற சங்கர்,மாப்ளை போல தான் ரெண்டு பேரும் இருக்காங்க என்றார்.
சரிங்க பாட்டி...
நீங்க ரெண்டு பேரும் இருங்க.நானும் மாமாவும் வீட்டுக்கு போய் சமைச்சி எடுத்து வரோமென்று சொல்லி அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்தனர்.
மாமா ஆராக்கு காரம் இல்லாம தான் கொடுக்கணும்.அதனால இட்லி ஊத்திடட்டுமா என்க,சரி,கொஞ்சோண்டு பருப்பை அள்ளி தனியா தங்கச்சிக்கு பண்ணிடு.
நான் சட்னிக்கு தயார் பண்ணுறேனென்றார்.
இருவரும் பேசிக்கொண்டே சமைத்து முடித்தவர்கள்,அது அதற்குரிய டப்பாவில் எடுத்து வைத்து விட்டு,எல்லாம் சரியா இருக்கா என்று மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு வண்டியில் ஏறி ஹாஸ்பிட்டலுக்கு வந்தனர்.
இவர்கள் வரும் போது குட்டீஸ் இருவரும் விழித்திருந்தனர்.
ஹேய் செல்ல குட்டிங்களா,தூங்கி எந்திரிச்சாச்சாயென்று ஆளுக்கொரு குழந்தையை தூக்கி கொஞ்சினார்கள்.
ஆச்சி,ஆராக்கு தனியா சாப்பாடு வச்சிருக்கேன் அதை குடுங்க.இதில் உங்களுக்கும் தம்பிக்கும் இருக்குயென்ற கருப்பாயி,தனது கையில் இருந்த ஆண் குழந்தையை பார்த்து,உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க?அத்தை செஞ்சி தரேனென்க,குழந்தை கண்ணை மூடி மூடி திறந்தது.
ஒரு இட்லி போதுமென்று ஆர்கலி சொல்ல,அட சாப்பிடு ஆராமா.என் ரெண்டு மருமக பிள்ளைய கவனிக்கணும்.அதுக்கு உனக்கு தெம்பு வேண்டுமாச்சே என்க,போதுங்கண்ணி என்றாள்.
சரி பசிக்கும் போது சாப்பிட்டுக்கோ என்கும் போது,டாக்டர் ரவுண்ஸிற்கு வருவதாக,நர்ஸ் ஒருவர் வந்து சொல்லிட்டு போனார்.
நேரமும் கடக்க பேஷண்ட் கூட இரண்டு அட்டெண்டர் தவிர,வேறு யாரும் இருக்க கூடாது என்பதால் நர்ஸ்ங்கள் ஒவ்வொரு ரூமிலும் சொல்லிச் சென்றனர்.
அதும் ஆண்களுக்கு இரவில் உள்ளே தங்க அனுமதிமில்லை.நாங்க வெளியே இருக்கோம்.எதாவது என்றால் கூப்பிடுங்க பாட்டியென்றவாறு ருத்ரனும், சங்கரும் எழுந்து வெளியே சென்றனர்.
கொஞ்ச நேரம் நான் அப்படியே நடந்துட்டு வரேனென்று சொல்லியவாறு அந்த மெயின் ரோட்டில் பலத்த யோசனையோடு நடந்தான்.
அடுத்து என்ன செய்யலாமென்று யோசிக்க,எப்படியும் இன்னும் ரெண்டு- மூன்று நாள் ஹாஸ்பிட்டலில் இருக்குற போல இருக்கும்.
அவளுக்கும் உடம்பு சரியான பிறகு தான் நாம ஊருக்கு போக முடியும் போல. அதுவரை அவசரத்திற்கு கார் வேண்டும்.
நாளைக்கு சென்னைக்கு போய் வாங்கிட்டு வந்திடலாமாயென்று யோசனையோடு நடந்தவன்,அங்கிருந்த டீ கடையை பார்த்து சென்றான்.
டீ குடித்தவன் அதற்குரிய காசை கொடுத்துவிட்டு திரும்பி நடந்து வர, ஹாஸ்பிட்டல் வராண்டாவில் லைட்களெல்லாம் அணைத்திருந்தது.
கிரில் கேட்டை திறந்து உள்ளே வந்தவன், சங்கர் அருகில் வந்து உட்கார்ந்தான். இருவரும் பேசிக்கொண்டே அங்கிருந்த தரையில் சாய்ந்து படுத்தவர்கள் சில நிமிடத்தில் தூங்கிவிட்டனர்.
விடியலும் தொடங்கியது..
ரோட்டில் போகும் வண்டி சத்தத்தில் கண் விழித்த சங்கர்,தனது அருகில் படுத்திருந்த ருத்ரனை பார்த்தவர், எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் இப்படி தரையில் படுத்து இருக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டார்.
பின்னர் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து மணியை பார்க்க,அதிகாலை 5.30 என்று காட்ட,எப்படியும் மனைவி விழித்திருப்பாள் என்று நினைத்து கருப்பாயி நம்பருக்கு போன் பண்ண, இரண்டே ரிங்கில் அட்டென்ட் பண்ணியவரும் சொல்லு மாமா என்றார்.
அந்த பிளாஸ்கை எடுத்துட்டு வா புள்ள.காபி வாங்கிட்டு வரேன் என்க, இதோ வரேன் மாமா என்றபடி போனை வைத்தார்.
சிறிது நிமிடத்தில் பிளாஸ்கோடு அங்கு வந்த கருப்பாயி,இந்தா மாமா என மெயின் கேட்டை திறந்து கொடுக்க, மருமக புள்ளைங்க ரெண்டு பேரும் என்ன புள்ள பண்றாங்க என்று கேட்டார்
ஏன் மாமா அந்த கதை கேக்குற.ராவெல்லாம் ரெண்டு பேரும் அடிச்ச கூத்து இருக்கே யாத்தே,தூங்கவே இல்லை.
ம்ம் என்று சிரித்தவர்,பிளாஸ்கை வாங்கியபடி அங்கிருந்து டீக்கடையை நோக்கி சென்றார்.
என்னன்னு தெரியல பாட்டி,ரெண்டு மூணு நாளாகவே எனக்கு மனசு ரொம்ப
படபடப்பாக இருந்துச்சு.ஆதிராவிற்கும் ரஞ்ஜனுக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் ஆனதை சொல்லியவன் நானும் அங்கிட்டு இருக்கிற வேலைகள் எல்லாத்தையும் முடிச்சிட்டு சீக்கிரம் இங்கு வரலாம்னு இருக்க,நாளும் தள்ளி போய்ட்டு இருந்தது.
நேற்றுலாம் என்னால அங்க இருக்கவே முடியலை.அதான் நான் உடனே கிளம்பி வந்துட்டேன்.
திருச்சிக்கு வந்த பிறகு தான் தாத்தாக்கு கால் பண்ணி இங்கு வந்திருப்பது பற்றி சொன்னேன்.பிறகு அங்கிருந்து வாடகை கார்ல வந்தேன்.
வீட்ல போய் பார்த்தால் வீடு பூட்டி இருந்துச்சு.எதிர் வீட்டில் இருக்கும் பெரியம்மா தான் சொன்னாங்க.இந்த ஹாஸ்பிட்டலில் இருக்கீங்கன்னு.
அந்த காரிலே நேராக இங்க வந்துட்டேன் பாட்டி என்றான்.
அப்பொழுது கதவை திறந்து வெளியே வந்த இரண்டு நர்ஸ்ங்கள் ஆளுக்கொரு குழந்தையோடு வர,என்னா டுவின்ஸாஆஆஆ என்று கண்கள் விரிய சந்தோஷத்தில் அதிர்ந்து போனான்.
கண்ணு குழந்தையை வாங்குப்பா என்க,ருத்ரனுக்கோ ஆனந்த கண்ணீரில் கண்கள் மறைத்தது.
சார் வாங்கி பாருங்களென்று சிரித்துக்கொண்டே நர்ஸ் சொல்ல,மாமா நீங்களும்,பாட்டியும் வாங்குங்களென்றான்.
அதைக்கேட்ட இருவருக்கும் கண்கள் கலங்கியது.
இங்க குடுங்கம்மாயென்று ஆளுக்கொரு குழந்தையை வாங்கி பார்க்க,இருவரும் கொழுக் மொழுக்கென்று,ரோஜா பூவின் நிறத்தில் இருக்க,நால்வரும் கொஞ்சி மகிழ்ந்தனர்.
பாட்டி இவங்களை தூக்க எனக்கு பயமா இருக்கேயென்று ருத்ரன் சொல்ல,ஆமா கண்ணு,புதுசுல அப்படி தான் இருக்கும்.
நீ உட்காரு உன் மடியில் நான் குழந்தைங்களை வைக்குறேனென்று பாட்டி சொல்ல,எதையும் யோசிக்காமல், பட்டென்று தரையில் உட்கார்ந்தான்.
அப்பொழுது,ஏன்மா என் தங்கச்சி எப்படி இருக்குமாயென்று சங்கர் அங்கிருந்த நர்ஸிடம் கேட்க,அவங்க நல்லா இருக்காங்கணா.இப்போதைக்கு மயக்கத்தில் இருக்காங்க.
இன்னும் கொஞ்ச நேரத்தில் வார்டுக்கு மாத்திடுவாங்க என்றவர்,குழந்தைகளை தரீங்களா,தாய்ப்பால் கொடுக்கணுமென்றார்.
செத்த இருமா என்ற பாட்டி,தன் கையில் இருந்த பேரனை ருத்ரன் மடியில் வைக்க, அவனுக்கோ.என் வாரிசுகள் என்கும் சந்தோஷத்தில் மீண்டும் கண்கள் கலங்கியது.
பின்னர் சங்கரை பார்க்க,கருப்பாயி புள்ளைய மாப்ளை கிட்ட குடு என்றார்.
இரண்டு குழைந்தைகளையும் பார்த்தவனுக்கு மேலும் சந்தோஷம் தாங்கவில்லை.
செல்லங்களாயென்று தனது நெஞ்சில் அணைக்க,குட்டிங்களோ அழ ஆரம்பித்தனர்.
பசி போலயென்று பாட்டி சொல்ல,சரி சரி நீங்க போய் சாப்பிட்டு வாங்களென்று சொல்லி இருவரின் உச்சந்தலையில் முத்தம் வைத்தவன்,தங்கச்சி தூக்கிட்டு போங்கம்மா என்று சொல்ல,நர்ஸ் இருவரும் ஆளுக்கொரு குழந்தையை தூங்கிக் கொண்டு உள்ளே சென்றனர்.
வாழ்த்துக்கள் மாப்பிள்ளை என்று சங்கர் கை கொடுக்க,ருத்ரனும் கையை பிடித்து குலுக்கி தேங்க்யூ மாமா என்றான்.
சரிப்பா புள்ளைங்க பிறந்ததை பற்றி வீட்டில் சொல்லிடு என்று பாட்டி சொல்ல, ஓஓஓ காட்...
நல்லவேளை எனக்கு ஞாபகப்படுத்துனீங்க பாட்டியென்றவன், பாக்கெட்டில் இருந்த தனது போனை எடுத்து,தனது தாத்தாவிற்கு கால் பண்ணினான்.
இரண்டே ரிங்கில் அட்டன் பண்ணியவர், என்ன நினைச்சிட்டு இருக்க வீரா?.உன் இஷ்டத்திற்கு எல்லாமே பண்ணுவதா?என்று சத்தம் போட,ருத்ரனோ சந்தோஷத்தோடு தாத்தா குழந்தை பிறந்துட்டாங்க.
உங்களுக்கு ரெண்டு பேர புள்ளைங்க என்று சொல்ல,சிம்ஹன் தாத்தாவே பேரன் சொன்னதை கேட்டு, சந்தோஷத்தில் வாயடைத்து போய் நின்றார்.
தாத்தா தாத்தா என்ற ருத்ரன் வேகமாக கத்த கண்ணா நிஜமாவா என்று அவர் கேட்க ஆமா தாத்தா ஒரு பேத்தி ஒரு பேரன்.
என் குட்டிங்க ரெண்டு பேரும் என்னை போலவே எவ்வளவு அழகாக இருக்கிறாங்கள் தெரியுமா என பெருமையாக சொன்னான்..
பின்னர் மற்றவர்களுக்கும் போன் பண்ணி விஷயத்தை சொல்லியவன், ஹாஸ்பிட்டலில் உள்ளவர்களுக்கு கொடுப்பதற்காக சாக்லேட்டையும் வாங்கிட்டு வந்து அனைவருக்கும் கொடுத்தனர்.
இவர்கள் வெளியே சென்று அரை மணி நேரத்தில் ,ஆர்கலியை முதல் தளத்தில் இருக்கும் ரூமிற்கு மாற்றியிருந்தனர்.
ஆர்கலிக்கு ஊசி போட்டிருப்பதால் அவள் நன்கு உறக்கத்தில் இருந்தாள்.
இரண்டு குழந்தைகளையும்,பாட்டியும், கருப்பாயியும் கொஞ்சியபடி பேசிக் கொண்டிருந்தனர்.
கதவை திறந்து உள்ளே வந்து பார்க்க, ஆர்கலி ஓய்ந்து போய் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது.
பின்னர் தெரிந்தவர்களெல்லாரும் வந்து பார்த்து செல்ல,ஆர்கலிக்கோ இன்னும் மயக்கம் மட்டும் தெளியவில்லை.நேரமும் கடந்து செல்ல,குட்டிங்கள் இருவரும் தூங்கி விட்டனர்.
பக்கத்தில் இருந்த தொட்டிலில் இருவரையும் படுக்க வைத்து விட்டு, பாட்டியும்,கருப்பாயியும் வெளியே இருக்கோம் பா என்று சொல்லி சென்றனர்.
அந்த அறைக்குள் தன் மனைவி, தங்களின் குழந்தைகள் மட்டும் இருக்க, இந்த உணர்வை எப்படி சொல்வதென்று ருத்ரனுக்கு தெரியவில்லை. மனம் மட்டும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.
தூங்கும் குழந்தைகளை இமைக்காமல் பார்த்து ரசித்தவன்,வரும் போன் காலிற்கு அட்டென் பண்ணி பதிலை சொல்லியவாறு இருந்தான்.
பின்னர் ஆர்கலி படுத்திருக்கும் பெட்டின் மேல் தலைசாய்த்து கண் மூடியவன், அப்படியே தூங்கி விட்டான்.
நேரமும் கடந்து சென்றது...
ஒருவாறு மயக்கம் தெளிந்து கண் விழித்த ஆர்கலிக்கு,வலது பக்கம் தெரியும் தலையை பார்த்தவளுக்கு, வந்திருப்பது யார் என்பது தெரிந்தது.
பொறுமையாக அவன் தலை முடியில் கையை வைக்க,பட்டென்று நிமிர்ந்தவன், தன்னவளுக்கு மயக்கம் தெளிந்ததை கண்டு,மை டியர் பார்பிடாலென்றவாறு, மனைவியின் உதட்டில் ஆழ முத்தமிட்டான்.
ஆர்கலியும் அவன் செயலை எதிர்க்கவில்லை.சில நொடிகள் சென்று அவளிடமிருந்து மனமேயின்றி பிரிந்தவன்,உனக்கு இப்போ எப்படி இருக்குடி?.
ஆர் யூ ஓகே தானே என்றான்.
ஆர்கலியோ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, மனைவியின் கையை பிடித்து தனது இதயம் பக்கம் வைத்தவன்,இன்னைக்கு நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேனென்று சொல்ல வார்த்தையே இல்லைடா.
அதற்கு முழு காரணம் நீ தான்.ஐ லவ் யூ டி மை டியர் சில்லி பொண்டாட்டி என்க, இப்பொழுது ஆர்கலி அவனை முறைத்து பார்த்தாள்.
குழந்தைகள் என்று கேட்க,ரெண்டு லட்டூஸும் தூங்கிட்டு இருக்காங்க.செம்ம கீயூட் டி.
எனக்கு டபுள் ஹேப்பி..
அப்பொழுது கதவை திறந்து உள்ளே வந்த மூவரும்,எப்படி இருக்கம்மா என்று விசாரித்தனர்.
அம்மாடி ஆராமா புள்ளைங்க ரெண்டு பேரும் அப்படியே தம்பி போல நான் பிறந்திருக்காங்களென்று கருப்பாயி சொல்ல,அப்படிங்களா அண்ணி என்று ஆச்சர்யமாக கேட்டாள்.
ஆமா டா என்ற சங்கர்,மாப்ளை போல தான் ரெண்டு பேரும் இருக்காங்க என்றார்.
சரிங்க பாட்டி...
நீங்க ரெண்டு பேரும் இருங்க.நானும் மாமாவும் வீட்டுக்கு போய் சமைச்சி எடுத்து வரோமென்று சொல்லி அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்தனர்.
மாமா ஆராக்கு காரம் இல்லாம தான் கொடுக்கணும்.அதனால இட்லி ஊத்திடட்டுமா என்க,சரி,கொஞ்சோண்டு பருப்பை அள்ளி தனியா தங்கச்சிக்கு பண்ணிடு.
நான் சட்னிக்கு தயார் பண்ணுறேனென்றார்.
இருவரும் பேசிக்கொண்டே சமைத்து முடித்தவர்கள்,அது அதற்குரிய டப்பாவில் எடுத்து வைத்து விட்டு,எல்லாம் சரியா இருக்கா என்று மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு வண்டியில் ஏறி ஹாஸ்பிட்டலுக்கு வந்தனர்.
இவர்கள் வரும் போது குட்டீஸ் இருவரும் விழித்திருந்தனர்.
ஹேய் செல்ல குட்டிங்களா,தூங்கி எந்திரிச்சாச்சாயென்று ஆளுக்கொரு குழந்தையை தூக்கி கொஞ்சினார்கள்.
ஆச்சி,ஆராக்கு தனியா சாப்பாடு வச்சிருக்கேன் அதை குடுங்க.இதில் உங்களுக்கும் தம்பிக்கும் இருக்குயென்ற கருப்பாயி,தனது கையில் இருந்த ஆண் குழந்தையை பார்த்து,உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க?அத்தை செஞ்சி தரேனென்க,குழந்தை கண்ணை மூடி மூடி திறந்தது.
ஒரு இட்லி போதுமென்று ஆர்கலி சொல்ல,அட சாப்பிடு ஆராமா.என் ரெண்டு மருமக பிள்ளைய கவனிக்கணும்.அதுக்கு உனக்கு தெம்பு வேண்டுமாச்சே என்க,போதுங்கண்ணி என்றாள்.
சரி பசிக்கும் போது சாப்பிட்டுக்கோ என்கும் போது,டாக்டர் ரவுண்ஸிற்கு வருவதாக,நர்ஸ் ஒருவர் வந்து சொல்லிட்டு போனார்.
நேரமும் கடக்க பேஷண்ட் கூட இரண்டு அட்டெண்டர் தவிர,வேறு யாரும் இருக்க கூடாது என்பதால் நர்ஸ்ங்கள் ஒவ்வொரு ரூமிலும் சொல்லிச் சென்றனர்.
அதும் ஆண்களுக்கு இரவில் உள்ளே தங்க அனுமதிமில்லை.நாங்க வெளியே இருக்கோம்.எதாவது என்றால் கூப்பிடுங்க பாட்டியென்றவாறு ருத்ரனும், சங்கரும் எழுந்து வெளியே சென்றனர்.
கொஞ்ச நேரம் நான் அப்படியே நடந்துட்டு வரேனென்று சொல்லியவாறு அந்த மெயின் ரோட்டில் பலத்த யோசனையோடு நடந்தான்.
அடுத்து என்ன செய்யலாமென்று யோசிக்க,எப்படியும் இன்னும் ரெண்டு- மூன்று நாள் ஹாஸ்பிட்டலில் இருக்குற போல இருக்கும்.
அவளுக்கும் உடம்பு சரியான பிறகு தான் நாம ஊருக்கு போக முடியும் போல. அதுவரை அவசரத்திற்கு கார் வேண்டும்.
நாளைக்கு சென்னைக்கு போய் வாங்கிட்டு வந்திடலாமாயென்று யோசனையோடு நடந்தவன்,அங்கிருந்த டீ கடையை பார்த்து சென்றான்.
டீ குடித்தவன் அதற்குரிய காசை கொடுத்துவிட்டு திரும்பி நடந்து வர, ஹாஸ்பிட்டல் வராண்டாவில் லைட்களெல்லாம் அணைத்திருந்தது.
கிரில் கேட்டை திறந்து உள்ளே வந்தவன், சங்கர் அருகில் வந்து உட்கார்ந்தான். இருவரும் பேசிக்கொண்டே அங்கிருந்த தரையில் சாய்ந்து படுத்தவர்கள் சில நிமிடத்தில் தூங்கிவிட்டனர்.
விடியலும் தொடங்கியது..
ரோட்டில் போகும் வண்டி சத்தத்தில் கண் விழித்த சங்கர்,தனது அருகில் படுத்திருந்த ருத்ரனை பார்த்தவர், எவ்வளவு பெரிய கோடீஸ்வரர் இப்படி தரையில் படுத்து இருக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டார்.
பின்னர் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து மணியை பார்க்க,அதிகாலை 5.30 என்று காட்ட,எப்படியும் மனைவி விழித்திருப்பாள் என்று நினைத்து கருப்பாயி நம்பருக்கு போன் பண்ண, இரண்டே ரிங்கில் அட்டென்ட் பண்ணியவரும் சொல்லு மாமா என்றார்.
அந்த பிளாஸ்கை எடுத்துட்டு வா புள்ள.காபி வாங்கிட்டு வரேன் என்க, இதோ வரேன் மாமா என்றபடி போனை வைத்தார்.
சிறிது நிமிடத்தில் பிளாஸ்கோடு அங்கு வந்த கருப்பாயி,இந்தா மாமா என மெயின் கேட்டை திறந்து கொடுக்க, மருமக புள்ளைங்க ரெண்டு பேரும் என்ன புள்ள பண்றாங்க என்று கேட்டார்
ஏன் மாமா அந்த கதை கேக்குற.ராவெல்லாம் ரெண்டு பேரும் அடிச்ச கூத்து இருக்கே யாத்தே,தூங்கவே இல்லை.
ம்ம் என்று சிரித்தவர்,பிளாஸ்கை வாங்கியபடி அங்கிருந்து டீக்கடையை நோக்கி சென்றார்.